திங்கள், 23 நவம்பர், 2009

நீயே கதி ஈஸ்வரி

தினை விதைத்தவன் தினை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
போன்ற பழமொழிகளைச் சொல்லி அதன் மூலம் நன்மையையே செய்யப் பணிக்கின்றனர் நம் முன்னோர்களும் ஆசிரியப் பெருமக்களும். ஆனால் உலகில் அனுதினமும் நல்ல மனம் கொண்டோர் வறுமையாலும், பலவித நோய்களாலும், இன்னும் இத்தகைய துன்பங்களை அனுபவித்து வாடுகையில், தினம் பொய்யைச் சொல்லித் தீமையையே எந்நாளும் செய்து வரும் பலருக்கு சுகபோக வாழ்வு அமைவது கண்டு சாமான்யர்கள் மனம் வாடுகையில் அவர்களுக்கு ஒரே ஆதரவு ஆண்டவனைத் தொழுவ்துவே ஆகும்.

நம் சக்திக்கு மீறித் துன்பம் நம்மைத் தாக்குகையில் அத்தகைய துன்பத்திலிருந்து காக்க இறையருள் தவிர வேறில்லை என்பது அனைவரும் ஒத்துக்கொள்ளக்கூடிய கருத்தே. அவ்வாறு இறையருள் இருந்தும் சமய சந்தர்ப்பங்களுக்கேற்றவாறு நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் ஆகியோரின் உதவியை நாடுவதும் அவசியமாகும்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

எனும் கருத்துக்கிணங்க ஒருவன் நல்ல நண்பர்களைப் பெற்றிருக்கையில் அவன் தானாக முன்வந்து பிறரது உதவியை நாணத்தினால் நாடாதிருப்பினும் அவனது நண்பர்கள் அவனது சார்பில் அத்தகைய உதவிகளைப் பெற்றுத் தந்து காத்தால் கண்கூடு.

நீயே கதி ஈஸ்வரி

பாடியவர்: பி. லீலா
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
திரைப்படம்: அன்னையின் ஆணை

நீயே கதி ஈஸ்வரி
நீயே கதி ஈஸ்வரி சிவகாமி தயாசாகரி - எனக்கு
நீயே கதி ஈஸ்வரி சிவகாமி தயாசாகரி - எனக்கு
நீயே கதி ஈஸ்வரி

மாயா உலகிலே ஓயாத துயராலே
மாயா உலகிலே ஓயாத துயராலே
மாயா உலகிலே ஓயாத துயராலே
வாடாமலே ஒரு வழிகாட்டவே எனக்கு
நீயே கதி ஈஸ்வரி
வாடாமலே ஒரு வழிகாட்டவே எனக்கு
நீயே கதி ஈஸ்வரி

ஆவியே அமுதே ஆகமப் பொருளே
ஆவியே அமுதே ஆகமப் பொருளே
அன்புடன் தாராயோ உன் திருவருளே
அன்புடன் தாராயோ உன் திருவருளே
ஆவதும் அழிவதும் யாவும் உன்னாலே
ஆவதும் அழிவதும் யாவும் உன்னாலே
அன்னையே பாராயோ என்னையும் கண்ணாலே
அன்னையே பாராயோ என்னையும் கண்ணாலே
தீயவர் வாழவும் நல்லவர் தாழவும்
தீயவர் வாழவும் நல்லவர் தாழவும்
செய்வதேனோ இது தர்மம் தானோ? அம்பா

நீயே கதி ஈஸ்வரி சிவகாமி தயாசாகரி - எனக்கு
நீயே கதி ஈஸ்வரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக