திங்கள், 23 நவம்பர், 2009

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்

இயல், இசை, நாடகம், நாட்டியம், ஓவியம், சிற்பம் உள்ளிட்ட ஆய கலைகள் அறுபத்தி நான்கிலும் உலகிலேயே மிகவும் சிறந்து விளங்கியதும், இன்னும் சிறந்து விளங்குவதும் நம் பாரதநாடு. இதற்கு முக்கியக் காரணம் கலைஞர்கள் கலைக்காகத் தம் வாழ்வையே அர்ப்பணிக்கும் தியாக மனப்பான்மையே ஆகும். சிற்பக் கலைகள் மிளிரும் எண்ணிறந்த ஆலயங்கள் நமது நாட்டில் உருவாகக் காரணமும் அதுவே. கோவில் சிற்பங்களுக்கு நடன மாதரும், நடனம் பயின்ற ஆண்கள் பலரும் மாதிரிகளாக இருக்க, அவர்களது அபிநயத்துக்கேற்றவாறு கல்லினாலும், சுதையினாலும் சிலைகள் பலவற்றை வடித்தனர் கைதேர்ந்த சிற்பிகள் பலர். அவ்வாறு வடித்த சிற்பங்கள் நிறைந்த ஆலயங்கள் உலகப் புகழ் பெற்று விளங்குகின்றன.
நாட்டியக்கலை பயிலுகையில் அந்நாட்களில் அவர்களது குருவானவர் தம் சீடர்கள் தங்கள் வாழ்வை நாட்டியக் கலைக்கு அர்ப்பணிக்க வலியுறுத்தி வந்திருக்கின்றனர். இதனாலேயே நடனமாதர்கள் பலர் அன்று திருமணம் செய்துகொள்ளாது நாட்டியக் கலையினை வளர்க்கவும், தெய்வப்பணி புரியவுமென்றே தங்கள் வாழ்வை அர்ப்பணித்தனர். இவர்களில் பலர் இயற்கையின் தாக்கத்தால் காதல் வயப்பட்டதும் அவ்வாறு காதல் வயப்பட்டவர் தம் வாழ்வைக் கலைக்கு அர்ப்பணித்தமையால் மனதுக்கிசைந்த தன் காதலருடன் கூடி இல்வாழ்வை மேற்கொள்ள இயலாத நிலையால் வாடியதும் உண்டு. இத்தகைய பெண்கள் மேல் காதல் கொண்ட ஆண்கள் பலரும் தமது மனதுக்கிசைந்த காதலியுடன் கூடி வாழும் பாக்கியமின்றி வேறு பெண்களை மணமுடிக்க விருப்பமின்றியும் அவ்வாறு வேறு பெண்ணை மணமுடித்தும் அவளுடன் மனமொத்து வாழ முடியாமலும் வருந்தியதுண்டு.

கலை பலரது வாழ்க்கையின் திசையையே மாற்றியது.

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்

திரைப்படம்: மீண்ட சொர்க்கம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: டி. சலபதி ராவ்
பாடியோர்: ஏ.எம். ராஜா, பி. சுசீலா
ஆண்டு: 1960

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆஆ
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்

மாலையிலும் அதிகாலையிலும் ஆஆஆஆஆஆஆஆஆஆ
மலர் மேலும் சிலை மேனியிலும் ஆடிடும் அழகே
ஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆடிடும் அழகே அற்புத உலகில்
நீ இல்லையேல் நான் இல்லையே

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்

கோவில் கண்டேன் அங்கு தெய்வமில்லை ஆஆஆஆஆஆஆஆஆஆ
கோவில் கண்டேன் அங்கு தெய்வமில்லை
ஓடி வந்தேன் இங்கே நீ இருந்தாய்
பாவமும் ராகமும் தாளமும் நீயே
பாவமும் ராகமும் தாளமும் நீயே
நீ இல்லையேல் நான் இல்லையே ஆஆஆஆஆஆஆஆஆ

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே ஆ.ஆ.ஆ.ஆ.ஆ.ஆஆஆ
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக