வியாழன், 31 டிசம்பர், 2009

அதிசய ராகம் ஆனந்த ராகம்

தமிழ்க் கவிஞர்களுள் சாமான்ய மக்கள் முதல் கல்வியிலும் தமிழ் இலக்கிய ஞானத்திலும் சிறந்து விளங்கும் அறிஞர் பெருமக்கள் வரை அனைவரது மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் கவியரசு கண்ணதாசன். கருத்தைக் கவரும் தமிழ்க் கவிதைகளை எத்தகைய சூழ்நிலைக்கும் ஏற்றவாறு எளிமையாகவும், இனிமையாகவும் திகழும் வித்த்தில் இயற்றும் திறனுடன் கவியரசர் இயல்பாகவே இசை ஞானம் கொண்டு விளங்கியதால் இவரது பாடல்களுக்கு இசையமைத்த இசை மேதைகளான திரையிசைத் திலகம் கே.வி. மஹாதேவன், மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், டி,கே. இராமமூர்த்தி, குன்னக்குடி வைத்தியநாதன் முதலானோர், இசையுடன் இசைந்த இவரது செந்தமிழ்க் கவிதைகளுடன் இணைந்து விளங்குமாறு பல பாடல்களையும், இராகமாலிகைகளையும் தமிழ்த்திரையில் சிறப்புடன் வழங்கியுள்ளனர்.

கவியரசரைத் தமிழ்த் திரையுலக வாசகர்களுக்கு நேரில் காட்சிதர வைத்த திரைப்டங்களுள், இரத்தத் திலகம், கருப்புப் பணம், அபூர்வ ராகங்கள் யான் கண்டு களித்தவை ஆகும். அபூர்வ ராகங்கள் திரைக்கதையில் இவருக்கு யாதொரு பங்கும் இல்லாவிடினும் அப்படத்தில் சூரி எனும் பெயர் கொண்ட மருத்துவராக நடிக்கும் நாகேஷ் அவர்களிடம் மருத்துவ சிகிச்சை பெறும் கவிஞர் கண்ணதாசனாகவே இடம்பெற்ற காட்சி தமிழ்த் திரை ரசிகர்களின் நெஞ்சை விட்டகலாததாகும்.

இக்காட்சியில் கவியரசருக்கு சிகிச்சையளிக்கும் நாகேஷ் தன் மேல் ஒரு கவிதை பாடும்படி இவரிடம் கேட்க இவர் இயற்றிய கவிதை:

அருமருந்துகள் போன்றவர்தமிழ் அரசராம் திருவள்ளுவர்
பெருமருந்துயர் பக்திஎன்பதைப் பெரியவர் பலர்பேசுவர்
சுரமருந்தென எதனையோதரும் சூரிஎன்ற மருத்துவர்
கரிமெலிந்தது போல்மெலிந்தவர் காலகாலங்கள் வாழ்கவே!

இதைக் கேட்கும் நாகேஷ் ஆஹா! அது தான் கண்ணதாசன் எனப் புகழ, "அது தான் உங்கள் மருத்துவத்துக்கு ஃபீஸ்" என்று கவியரசர் ஒரு நகைச்சுவை வெடியைப் போட, சிரிப்பொலியால் திரையரங்கமே அதிர்ந்ததுண்டு.


அதிசய ராகம் ஆனந்த ராகம்


http://tfmpage.com/forum/archives/23209.5180.07.11.34.html

திரைப்படம்: அபூர்வ ராகங்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்,
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டி: 1975

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
அதிசய ராகம்

வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்.... மோகம்.... மோ..கம்
வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திர லோகத்து சக்கரவாகம்

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் - அந்த
தேவதை கிடைத்தால் அது என் யோகம் - அது என் யோகம்

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
அவளொரு பைரவி அவளொரு பைரவி

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே

இவ்வுலகமும், இவ்வுலகை உள்ளடக்கிய எல்லையில்லாப் பிரபஞ்சமும் எண்ணிறந்த உயிர்களுக்கு வாழ்விடமாக என்றம் விளங்குகின்றன. நம் கண்ணுக்கும் பிற புலன்களுக்கும் புலப்படுவனவும் புலப்படாதனவுமான இவ்வுயிர்கள் அனைத்தும் என்றேனும் ஒரு நாளில் தோன்றி, பல விதமான இன்ப துன்பங்களுக்குள்ளாகி, என்றோ ஒரு நாள் உயிர் நீக்கும் உண்மை நிலையை மனதாலும் அறிவாலும் நாம் உணர்ந்தபோதிலும் நமக்கு மட்டும் என்றும் இன்ப வாழ்வே நிலைக்கே வேண்டும், துன்பங்களே நேரக்கூடாது, மரணமடையாமல் என்றென்றும் சிரஞ்சீவியாய் வாழ வேண்டும் எனும் நப்பாசை இல்லாதவர் உலகில் மிகவும் அரிதே.

நம்மில் மகா ஞானிகளாக விளங்கிடும் ஒரு சிலர், இவ்வுண்மையை ஏற்று, இவ்வுலக இன்ப துன்பங்களைத் துறந்து, தான் யார் என்பதை உணரவைக்க வல்லதான மெய்ஞான மார்க்கத்தில் தம் மனதையும் அறிவையும் செலுத்துவதையும் நாம் அறிவோம். இஞ்ஞான மார்க்கம் ஒரு சிலருக்கு மட்டும் உரியதா? நம்மில் பிறர் அனைவரும் இதற்குத் தகுதியற்றவரா? எனும் கேள்வி நம் மனதில் எழுமாகில், நாமும் அத்தகைய உயர்ந்த ஞான மார்க்கத்தில் நம் மனதையும் அறிவையும் செலுத்தத் தொடங்கியுள்ளோம் என்பதை அறிவோமாக.


நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே


திரைப்படம்: சின்ன ஜமீன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: இசை ஞானி இளையராஜா
பாடியவர்: இசை ஞானி இளையராஜா
ஆண்டு: 1993

நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே - என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே
நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே
நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே - என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே
என்னை இந்த பூமி கொண்டு வந்த சாமி
யாரைத் தான் கேட்டானோ? ஹோ
நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே

என்னெப் பெத்து ராசையான்னு பேரு வச்ச ஆத்தா தான்
பொன்னெப் பெத்த சந்தோசத்தில் போனாளம்மா காத்தா தான்
என்னெப் பெத்து ராசையான்னு பேரு வச்ச ஆத்தா தான்
பொன்னெப் பெத்த சந்தோசத்தில் போனாளம்மா காத்தா தான்
உரைச் சுத்தி நாள் முழுக்க ஓடும் ஆறு நானம்மா
சின்னப் பிள்ள நான் தானுன்னு சொல்லும் இந்த ஊரம்மா
சொல்லட்டுமே சொன்னா என்னம்மா? ஹோய்

நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே - என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே

ஓ...
எந்த நாளும் எண்ணெ கூட ஒட்டிடாது தண்ணீரு
என்னெ அந்த எண்ணெ போல எண்ணிக் கொள்ளும் இவ்வூரு
எந்த நாளும் எண்ணெ கூட ஒட்டிடாது தண்ணீரு
என்னெ அந்த எண்ணெ போல எண்ணிக் கொள்ளும் இவ்வூரு
இங்கிருக்கும் பேர்களெல்லாம் என் மனசெப் பாக்கலே
எங்கதையப் பாசமாக ஒன்னப் போலக் கேக்கல்லே
கேக்கா விட்டாக் குத்தம் என்னம்மா? ஹோய்

நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே
என்னை இந்த பூமி கொண்டு வந்த சாமி
யாரைத் தான் கேட்டானோ? ஹோ
நான் யாரு எனக்கேதும் தெரியல்லியே என்னைக்
கேட்டா நான் சொல்ல வழியில்லையே

ஆகிரா

வெள்ளி, 18 டிசம்பர், 2009

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

வேதங்கள், பகவத் கீதை, திருக்குறள் முதலான அறநெறியை உபதேசிக்கும் நூல்கள் அனைத்தும் அஹிம்சையையும், சாந்த குணத்தையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியும் நம் நாட்டில் அனேகர் அவ்வாறு நடக்காமல், மதத்தின் பெயராலும், இறை வழிபாட்டின் பெயராலும் யாகங்கள் உள்ளிட்ட விழாக்களிலும் இதர சந்தர்ப்பங்ககளிலும் பலி எனும் பெயரால் தொடர்ந்து உயிர்க் கொலை புரிந்து வந்ததால் நாளடைவில் ஹிந்து மதத்தைப் பின்பற்றுவோர் குறைந்து பெரும்பாலோர் புத்த மதத்தைத் தழுவிய காலம் இந்திய வரலாற்றில் மறக்க முடியாததாகும். இருப்பினும் புத்த மதம் புலால் உண்பதைத் தடை செய்யவில்லை என்பதால் நாளடைவில் நம் நாட்டில் அது வேரூன்றவில்லை. மாறாக சீனம், சிங்களம், பர்மா, மலேயா முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகி அங்கே வேரூன்றியது.

புத்தரின் பின்னர் அவதரித்த ஆதி சங்கரர், அஹிம்சையை வலியுறுத்தியதுடன், புலால் உண்ணாமையையும் வலியுறுத்தி, நலிவடைந்திருந்த ஹிந்து மதத்துக்குப் புத்துயிரூட்டினார்.

கொல்லான் புலால் மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

என்ற வள்ளுவர் வாக்கையே புறக்கணித்த நமது மக்கள் சமூகம் ஆதி சங்கரர் அறிவுரையை மட்டும் அவ்வளவு எளிதில் கேட்டு விடுமா என்ன? இன்று பலர், ஜாதி மதங்களின் பெயரால் நாட்டு மக்களிடையே பிளவு ஏற்படுத்தவும், உண்மை இல்லாத பலவித சாத்திரங்களையும், சடங்குகளையும் கூறி, தாம் சுயலாபம் அடையவும் முயன்று, ஊரையும் உலகையும் ஏமாற்றி, பல பாப காரியங்களைச் செய்து வருவது வருந்தற்குரியது.


ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ


படம்: தாய் மூகாம்பிகை
எழுதியவர்: கவிஞர் வாலி
இயற்றியவர்: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, சுரேந்தர், தீபன் சக்ரவர்த்தி
அஅண்டு: 1982

சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த ப்ரபவிதும்...
நசே தேவம் தேவோ ந கலு குசல ஸ்பந்தி துமபி ஆஆஆ
அத த்வாம் ஆராத்யாம் ஹரிஹர விரிஞ்சாதி பிர் அபி
பிரணந்தும் ஸ்தோதும் வா கதம் அக்ருத புண்யஹ ப்ரபவதீ
ஆ...ஆ.....

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே

ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங் கழலே மலை மாமகளே
தொழும் பூங் கழலே மலை மாமகளே

அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தேத் துவதும் மணி நேத்திரங்கள்
பணிந்தேத் துவதும் மணி நேத்திரங்கள்

சக்தி பீடமும் நீ ஆஆஆஆ ஆஆஆஆஆஆ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஆகிரா

வியாழன், 17 டிசம்பர், 2009

சிவபெருமான் கிருபை வேண்டும்

நாம் ஒவ்வொருவாரும் இவ்வுலகில் பிறந்த நாள் முதல் குழந்தைப் பருவத்தில் கழியும் சில காலம் நம் கண் முன்னே நிகழும் நிகழ்ச்சிகளோ, பிற புலன்களால் உணரும் விஷயங்களோ நாம் வளர்ச்சியடைந்த பின்னர் நம் நினைவுக்கு ஒரு போதும் வருவதில்லை. குழந்தைப் பருவத்தில் ஆணவ மலம் இருப்பதில்லை, உலகிலுள்ள அனைவருடனும், அனைதது ஜீவராசிகளுடனும், இயற்கையுடனும் மிகவும் இயைந்து வாழும் தன்மை அப்போது நிலவுகிறது. வளர்ச்சியடைந்த பின் ஒவ்வொருவருக்கும் ஆணவம் மேலிடுகிறது. இதனால் ஒவ்வொருவரும் தமது உடலைத் தானாக உணர்ந்து நான் எனும் உணர்வுடன் எனது எனும் உணர்வும் வளருகின்றது.


இத்தகைய மன மாற்றத்தினால் சுயநல உணர்வு மிகுந்து பிறரிடம் போதிய அன்பு செலுத்தத் தவறுவதுடன், உலகிலுள்ள பொருட்களில் சிறப்பு மிக்கவை யாவும் தன்னையே சேர வேண்டுமெனும் பேராசையையும் வளர்த்துக் கொள்கிறோம். இக்காரணத்தால் பலர் தரும நெறி தவறி முறையற்ற வழிகளில் பிறரை ஏமாற்றி வாழ்வும் தயங்குவதில்லை. இத்தகைய மன நிலையுடன் வாழ்பவர் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் திரும்பத் திரும்பப் பாபங்கள் பலவற்றைத் தொடர்ந்து செய்கின்றனர். ஆன்மிக ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் ஒருவரின் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கேற்ற பலன்கள் நிச்சயம் கிடைக்கும் என்பது இயற்கை நியதி. பாவ மன்னிப்பு என்பது இயற்கைக்கு முரணானது, உண்மையில் கிடைக்காது. காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது.


பாபம் செய்யச் செய்ய, கர்ம வினையால் ஒருவர் இறந்த பின்னர் திரும்பவும் பிறப்பெடுத்து முற்பிறவியில் தான் செய்த பாபங்களுக்கான தண்டனையை அனுபவிக்க நேரிடுகிறது. இதற்கு ஆதாரம் உள்ளதா என்று கேட்டால் மாயையால் நமது ஐம்புலன்களும் கட்டுண்ட நிலையில் நமது அறிவு குறைந்து விளங்குவதால் நமக்கு எடுத்துச் சொல்லி விளங்காது. நன்மை செய்தால் நன்மை விளையும் தீமை செய்தால் தீமை விளையும் எனும் சாதாரண உலக நீதியே இவ்விடத்திலும் செயல்படுகிறது என்பதை உணர்வால் அறிந்து அதற்கொப்ப நாம் மனமாறப் பிறருக்கு யாதொரு தீங்கும் இழைக்காது, நன்மைகளையே பெரும்பாலும் செய்து வருகையில் நமது கர்ம வினைகள் குறைந்து, பிறவா நிலை எய்தலாம் எனப் பல ஞானியர்கள் உணர்த்தியுள்ளனர். இத்தகைய நிலையை அடைய பக்தி மிகவும் இன்றியமையாதது.


அன்பும் சிவமும் இரண்டென்ப அறிவிலார்
அன்பே சிவமாவதாரும் அறிகிலார்


எனும் கருத்துக்கிணங்க நாம் முக்தியடைய மேலான வழி சிவபெருமானின் கருணையை நாடுவதேயாகும்.


சிவபெருமான் கிருபை வேண்டும்


திரைப்படம்: நவீன சாரங்கதாரா
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
அஅண்டு: 1936


சிவபெருமான் கிருபை வேண்டும்
சிவபெருமான் கிருபை வேண்டும்
சிவபெருமான் கிருபை வேண்டும் அவன்
திருவடி பெற வேண்டும் வேறென்ன வேண்டும்
சிவபெருமான் கிருபை வேண்டும் அவன்
திருவடி பெற வேண்டும் வேறென்ன வேண்டும்
சிவபெருமான் கிருபை வேண்டும் வேண்டும்..


அவலப் பிறப்பொழிய வேண்டும் ஆ...ஆ..
அவலப் பிறப்பொழிய வேண்டும் அதற்கு வித்தாம்
அவலப் பிறப்பொழிய வேண்டும் அதற்கு வித்தாம்
அவமாயை அகல வேண்டும்
அவமாயை அகல வேண்டும் வேறென்ன வேண்டும்?


சிவபெருமான் கிருபை வேண்டும் - அவன்
திருவடி பெற வேண்டும் வேறென்ன வேண்டும்?
சிவபெருமான் கிருபை வேண்டும்
வேண்டும் வேண்டும்...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...


தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சார்ந்த
தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சார்ந்த
தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சார்ந்த
தொல்லுலகில் நரரும் எல்லா உயிரும் சார்ந்த
சுக வாழ்வு வாழ வேண்டும்
சுக வாழ்வு வாழ வேண்டும் வேறென்ன வேண்டும்?


சிவபெருமான் கிருபை வேண்டும் - அவன்
திருவடி பெற வேண்டும் வேறென்ன வேண்டும்
சிவபெருமான் கிருபை வேண்டும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

புதன், 16 டிசம்பர், 2009

என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே

நமது உடலில் நாம் மிகவும் இன்றியமையாததாய்க் கருதும் உறுப்பு கண்ணேயாகும். இதனாலேயே நாம் மிகவும் உயர்வாக எண்ணும் எதனையும் நம் கண்ணுக்கு நிகராகப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் எனும் கருத்து நிலவுகிறது, நாம் பெற்ற பிள்ளையைக் "கண்ணே, கண்மணியே" எனக் கொஞ்சி மகிழ்வதும், கல்வியைக் கண்ணுக்கு நிகராகக் கொண்டு,

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்று ஔவையார் தனது கொன்றை வேந்தன் கவிதைத் தொகுப்பில் கூறியதும்,

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாதவர்

என்று வள்ளுவர் உரைத்த பொன்மொழியும் இக்காரணம் கொண்டே.

நம்மிடையே கண் பார்வையின்றித் தவிப்போர் பலரும் வாழ்கின்றனர். பார்வையின்மைக்கு முக்கியக் காரணங்களுள் ஒன்று கண்ணின் பாவையை மூடியிருக்கும் கருப்பு நிறத்திலான Cornia எனும் கருவிழி சேதமுற்றிருப்பதாகும். அதிர்ஷ்டவசமாக இக்காரணத்தால் பார்வை இழந்தவர்கள் வேறொருவரது கருவிழியை தானமாகப் பெற்றுக் கண்பார்வை பெற வாய்ப்பிருப்பதால், நம்மில் பலர் தமது கண்களை இத்தகையவர்களுக்கு தானமாகத் தரும் வழக்கம் ஏற்பட்டு நாளடைவில் மேலும் அதிகப் படியானோர் கண்தானம் செய்ய முனவரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கண்தானம் செய்த ஒருவரது கண்களிலிருந்து கருவிழிகளை மட்டும், அவர் இறந்த சிறிது நேரத்திற்குள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, அவற்றை முறைப்படி கருவிழிகள் பாதிக்கப்பட்டதால் பார்வையிழந்த ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி, கண் பார்வை கிடைக்கச் செய்கின்றனர்.

நாம் உயிருடனிருக்கையில் வேறு தான தருமங்கள் செய்கிறோமோ இல்லையோ, இறந்த பிறகாவது தானம் செய்வோமே. நமது கண்கள் நாம் இறந்த பின்னரும் தொடர்ந்து உலகத்தைப் பார்க்க வைக்க ஒரே வழி கண்தானமே.


என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே


திரைப் படம்: காசி
இயற்றியவர்: மு. மேத்தா
இசை: இளையராஜா
பாடியவர்: ஹரிஹரன்
ஆண்டு: 2001

என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே - என்
கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே - என்
கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கலகலகலவெனத் துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே - என்
நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்

உங்களைப் போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டுப் போதுமோ எடுத்துக் கூறவே இதயம் தாங்குமோ? நீ கூறு

என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே - என்
கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கலகலகலவெனத் துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே - என்
நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்

இறைவனிடம் வரங்கள் கேட்டேன் வரங்களை அவனே கொடுத்தான்
மனிதரில்............ இதை யாரும் அறிவாரோ?
நான் பாடும் பாடல் எல்லாம் நான் பட்ட பாடே அன்றோ?
பூமியில் இதை யாரும் உணர்வாரோ?
மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மரநிழல் நேசம்
எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே
ராகம் உண்டு தாளம் உண்டு என்னை நானே தட்டிக் கொள்வேன்
என் நெஞ்சில் உண்மை உண்டு வேறென்ன வேண்டும்?

என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே - என்
கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கலகலகலவெனத் துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே - என்
நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்

பொருளுக்காய்ப் பாட்டைச் சொன்னால் பொருளற்ற பாட்டேயாகும்
பாடினேன் அதை நாளும் நாளும்
பொருளிலாப் பாட்டானாலும் பொருளையே போட்டுச் செல்வார்
போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
மனமுள்ளோர் என்னைப் பார்ப்பார் மனதினால் அவரைப் பார்ப்பேன்
மறந்திடா ராகம் இது தானே
வாழ்க்கை எனும் மேடை தனில் நாடகங்ககள் ஓராயிரம்
பார்க்க வந்தேன் நானும் பார்வையின்றி

என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே - என்
கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கலகலகலவெனத் துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே - என்
நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்

உங்களைப் போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டுப் போதுமோ எடுத்துக் கூறவே இதயம் தாங்குமோ? நீ கூறு

என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே - என்
கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கலகலகலவெனத் துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே - என்
நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்

என்ன பார்வை உன்தன் பார்வை

வாழ்க்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம். அதனை எப்படி வாழ்வது என்பது நம் கையிலேயே உள்ளது. அளவோடு ஆசைப்பட்டு, உலகில் எங்கும் நிறைந்திருக்கும் இன்பங்களை முழுமையாக சுவைத்து, அனைவருடனும் அன்புடன் பழகி எந்நாளும் இன்புற்றிக்க வேண்டும். எப்பொழுதும் முகமும் அகமும் மலர்ந்து சிரித்து வாழ வேண்டும். பிறரையும் சிரிக்க வைத்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். வாழ்வில் துன்பங்கள் நம்மை மீறி வந்தெய்துகையில் அவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்டும் முயற்சியில் பெரும்பான்மையான நேரம் செலவாகிய பொழுதும், மீதமிருக்கு சொற்ப நேரத்தை மகிழ்ச்சியுடன் கழிக்க ஏற்றவாறு, தரமான பொழுது போக்கு அம்சங்களைக் கொண்டு தயாரிக்கப் படும் திரைப்படங்களைக் கண்டு களிக்க வேண்டும்.

தற்காலக் கல்வி முறை குழந்தைகளை இயந்திர கதியில் இயங்க வைப்பதால் அவர்களுக்கும் தக்க பொழுது போக்காக இத்தகைய திரைப்படங்களைப் பார்த்து மகிழும் வாய்ப்பை அளிக்க வேண்டும். திரைப்படங்களில் நகைச்சுவை மிகுந்து இருத்தல் சிறப்பு. திரைப்படங்களுள் பல முழு நீள நகைச்சுவைச் சித்திரங்களாக வெளிவந்துள்ளன. அவற்றுள் மிகவும் சிறந்த திரைப்படங்களுள் ஒன்று காதலிக்க நேரமில்லை. அக்காலத்தில் பெரும்பாலும் கருப்பு வெள்ளைப் படங்களே மிகுதியாகத் தயாரிக்கப் பட்ட நிலையில் இது ஒரு மூழு நீள ஈஸ்ட்மென் கலரில் வெளியானது. எத்துணை முறை பார்த்தாலும் திரும்பவும் பார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்ட வல்ல திரைப்ப்டம் இது. படம் முக்காலே மூணு வீசம் பொள்ளாச்சியிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைத்திருக்கும் ஆளியார் அணைக்கட்டுப் பகுதியிலேயே தாயாரிக்கப் பட்டது. சிறந்த கதையம்சத்துடன், தரமான காதல் காட்சிகளும் நகைச்சுவைக் காட்சிகளும் கொண்டு இனிமையான பாடல்களுடன் அமைந்தது இப்படம்.


என்ன பார்வை உன்தன் பார்வை


திரைப்படம்: காதலிக்க நேரமில்லை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: எல்.ஆர். ஈஸ்வரி, கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1964

என்ன பார்வை உன்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை
மெல்ல மெல்லப் பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா ஆ ஆ
என்ன பார்வை உன்தன் பார்வை
என்னை மறந்தேன் இந்த வேளை
வண்ண வண்ண சேலை தொட்டுக்
கண்ட சுகம் அம்மம்மா ஆ ஆ

தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு
பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா?
தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு
பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா?
சின்னச் சின்ன நெஞ்சில் உன்னை
எண்ண எண்ண அம்மம்மா ஹோய்

கன்னங்கள் என்னும் தங்கத் தட்டு
கை பட்டு சின்னங்கள் கொண்டதோ?
சொல்லச் சொல்ல உள்ளம் துள்ளும்
இன்பம் என்ன சொல்லம்மா ஹோய்

என்ன பார்வை உன்தன் பார்வை
என்னை மறந்தேன் இந்த வேளை
வண்ண வண்ண சேலை தொட்டுக்
கண்ட சுகம் அம்மம்மா ஆ ஆ

மை கொண்ட கண்கள் மெல்ல மூடும்
பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ?
மை கொண்ட கண்கள் மெல்ல மூடும்
பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ?
பிஞ்சுத் தென்றல் நெஞ்சைத் தொட்டுக்
கொஞ்சக் கொஞ்ச அம்மம்மா ஹோய்

ஆகட்டும் என்ற பின்னும் அச்சம்
ஏன் மிச்சம் கண்ணல்ல ஓடி வா
ஆகட்டும் என்ற பின்னும் அச்சம்
ஏன் மிச்சம் கண்ணல்ல ஓடி வா
அக்கம் பக்கம் யாரும் இல்லை
வெட்கம் என்ன சொல்லம்மா ஹோய்

என்ன பார்வை உன்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை
மெல்ல மெல்லப் பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா ஆ ஆ

சனி, 12 டிசம்பர், 2009

ஷெண்பகமே ஷெண்பகமே

பசுவின் பாலைக் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவருமே தினந்தோறும் அருந்துகிறோம், அது தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக மிகவும் ஊட்டச்சத்து மிக்க உணவாக விளங்குகிறது. பாலாக அருந்துவதுடன் தயிர், மோர், வெண்ணை, நெய், பாலாடைக் கட்டி (cheese), பனீர் (paneer), பால்கோவா, ரசகுல்லா முதலிய பலவிதமான சுவை மிகுந்த உணவுப் பொருட்களையும் பாலிலிருந்து தயார் செய்து அருந்தி மகிழ்கிறோம். பாலைத் திட நிலைக்கு மாற்றி அதனைப் பால் பவுடராக மாற்றிப் பல காலம் கெடாத வண்ணம் பாதுகாத்து, நீரில் கலந்து அருந்துகிறோம், குழந்தைகளுக்கான பல உணவுப் பொருட்களில் (baby food) பால் பவுடர் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இத்தனை அரிய குணமுள்ள மதிப்பு மிக்க உணவான பாலை நமக்குத் தரும் பசுவை கோமாதா எனக் கொண்டாடுகிறோம். பசுவின் பாலை ஆலயங்களில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப் பயன்படுத்துகிறோம். வருடந்தோறும் பொங்கலன்று பசு மாடுகளுக்கு அலங்காரம் செய்து பூஜித்து வழிபடுகின்றோம். ஆனால் நாம் உண்மையிலேயே பசுவை மதிக்கிறோமா என்று அறிவுபூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது, காரணம் பசுவின் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் பறித்து, அதன் கன்றை ஏமாற்றி அதன் பாலை நாம் களவாடுகிறோம். ஒவ்வொரு முறையும் அப்பசுவைக் கருத்தரிக்கச் செய்கையில் அதனை நாமெல்லோரும் அனுபவிப்பது போல ஒரு காளைமாட்டுடன் சேர்த்து இயற்கையாக அதற்குக் கிடைக்க வேண்டிய காதலின்பத்தை அளிக்க மறுதது, செயற்கையாக அதனைக் கருத்தரிக்கச் செய்கிறோம்.

ஒரு கறவை வற்றியதும் தக்க இடைவெளி விடாது மறு கறவைக்கு அதனைக் கருத்தரிக்கச் செய்கிறோம். இவ்வாறு அது அடுக்கடுக்காகக் கன்றுகள் ஈன்று, தன் ரத்தத்தையெல்லாம் பாலாக்கி நமக்களித்த பின்னர் இறுதியில் இனியும் அப்பசு கருத்தரிக்க லாயக்கற்றது எனும் நிலையை அடைகையில் அப்பசுவை "அடிமாடாக" விற்று விடுகிறோம். இத்தகைய அடி மாடுகள் பசி பட்டினியுடன், லாரிகளிலும் கால்நடையாகவும் கேரளம் போன்ற இடங்களுக்கு இட்டுச் செல்லப் பட்டு அங்கே கொல்லப்படுகின்றன. கொன்று கிடைக்கும் மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுடன் உள்நாட்டிலும் அதை உணவாக சமைக்கும் உணவு விடுதிகளுக்கு விற்கிறோம்.

பசுவிற்கு நாம் செய்யும் இத்தகைய கெடுதல்களால் மனிதராக இருக்கவே நாமெல்லோரும் லாயக்கற்றவர்களாகிறோம். குறைந்த பட்சம் கறவை வற்றிய பசுக்களைக் கொல்லாது அவற்றை உணவளித்துப் பராமரிக்க வேண்டும். நம்மால் முடியவில்லையெனில் இத்தகைய பணியைச் செய்யும் "கோசாலா" எனும் இடங்களைக் கண்டறிந்து அங்கே அவற்றைச் சேர்க்க வேண்டும். மனிதத்தன்மையை சிறிதேனும் காக்க இது வழிகோலும்.


ஷெண்பகமே ஷெண்பகமே

திரைப்படம்: எங்க ஊருப் பாட்டுக்காரன்
இயற்றியவர்: கங்கை அமரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ

பட்டுப் பட்டுப் பூச்சி போல எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க நான் வளர்த்த நந்தவனம்
கட்டி வைக்கும் என் மனசு வாசம் வரும் மல்லிகையும்
தொ்ட்டுத் தொட்டு நான் கறக்க துடிக்குதந்த ஷெண்பகம்

ஷெண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே
ஷெண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே

உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
உம் மேலே ஆசைப்பட்டு காத்துக் காத்து நின்னேனே
உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே
உம் மேலே ஆசைப்பட்டு காத்துக் காத்து நின்னேனே
உன் முகம் பாத்து நிம்மதியாச்சு என் மனம் தானா பாடி்டலாச்சு
என்னோட பாட்டுச் சத்தம் தேடும் உன்னைப் பின்னாலே
எப்போதும் உன்னைத் தொட்டுப் பாடப் போறேன் தன்னாலே

ஷெண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே
ஷெண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே

மூணாம் பிறையைப் போலக் காணும் நெத்திப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட
மூணாம் பிறையைப் போலக் காணும் நெத்திப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட
கருத்தது மேகம் தலைமுடி தானோ?
இழுத்தது என்ன பூவிழி தானோ?
எள்ளுப் பூ நாசிப் பத்திப் பேசிப் பேசித் தீராது
உன் பாட்டுக் காரன் பாட்டு ஒன்னை விட்டுப் போகாது

ஷெண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் எம் மனமே சேர்ந்திருந்தா சம்மதமே
ஷெண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே

சின்னக்கண்ணன் அழைக்கிறான்

கோகுலத்துக் கண்ணன் புல்லாங்குழலெடுத்து இசைமழை பொழிய, கோபியர்கள் யாவரும் தம்மை மறந்திடுவராம். இந்தக் கதை உண்மையோ என்னவோ தெரியாது, ஆனால் புல்லாங்குழல் இசையை யார் வாசிக்கக் கேட்டாலும் சாதாரணமாக இசையில் மயங்காதவர் மனங்களும் மயங்கும். அத்தகையதொரு இனிமை புல்லாங்குழலுக்குண்டு.

அது சரி, கண்ணன் தற்காலத்தில் நேரில் வருவதுண்டோ? உண்டு என்பது போல் அமைந்ததொரு கிராமத்துக் கதையில் கததாநாயகியின் மனதில் ஒரு இனிய கீதம் அடிக்கடி இசைக்க, அதில் மயக்கமுற்று ஒரு புதுவிதமான உணர்ச்சியில் தத்தளிக்கும் அவளது மனதின் ராகத்தைப் புல்லாங்கழலில் யாரோ வாசிக்க, ஒரு நாள் அவள் மெய்யாகவே தன் காதால் கேட்கிறாள். தன் இதயத்தின் ஆழத்தில் இருக்கும் ராகத்தை இசைப்பது யார் என ஆவலுடன் தேடி ஓடுகிறாள். அவளது மனம் கவர்ந்த ராகத்தைத் தனது புல்லாங்குழலில் இசைத்துக்கொண்டு ஒரு அழகிய வாலிபன் செல்லக் காண்கிறாள். அவள் அவ்விளைஞனைக் கண்டு பேசித் தன் காதலைக் கூறினாளா? அவன் உண்மையாகவே கண்ணன் தானா? அவளை அவன் மணந்தானா? மகிழ்வான வாழ்வு தந்தானா?

இக்கேள்விகளுக்கு விடை காணக் கவிக்குயில் திரைப்படம் பார்க்க வேண்டும்.


சின்னக்கண்ணன் அழைக்கிறான்


திரைப்படம்: கவிக்குயில்
இயற்றியவர்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
பாடியவர்: எம். பாலமுரளி கிருஷ்ணா
ஆண்டு: 1977

சின்னக்கண்ணன் அழைக்கிறான்
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்

கண்கள் சொல்கின்ற கவிதை - இளம்
வயதில் எத்தனை கோடி
கண்கள் சொல்கின்ற கவிதை - இளம்
வயதில் எத்தனை கோடி - என்றும்
காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை - அந்த
மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை

சின்னக்கண்ணன் அழைக்கிறான்
சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்

நெஞ்சில் உள்ளாடும் ராகம் - இது
தானா கண்மணி ராதா
நெஞ்சில் உள்ளாடும் ராகம் - இது
தானா கண்மணி ராதா - உன்
புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே - அந்த
மாயனின் லீலையில் மயங்குது உலகம்

சின்னக்கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை - அவள்
மனங் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி
சின்னக்கண்ணன் அழைக்கிறான்

ஆகிரா

புதன், 9 டிசம்பர், 2009

ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்

சாதாரண மனிதனின் தேவைகளுக்கும் அவனது வருவாய்க்கும் இடைவெளி என்றுமே மிக அதிகம். "அன்றாடங்காய்ச்சி" என்று அழைக்கப்படும் ஏழை வர்க்கத்துக்கு தினமும் வயிற்றுப் பசிக்கு சோறு கிடைத்தாலே போதும் எனும் எண்ணம் இருக்கும். நடுத்தர வர்க்கத்தாருக்கு, உணவு, உடை, இருப்பிடம் உட்படப் பல விதமான செலவினங்களையும் பூர்ததி செய்ய வேண்டியுள்ளது. மேல்மட்ட வர்க்கத்தாருக்கு இருக்கும் பணம் போதாது மேலும் மேலும் பணம் ஈட்ட வேண்டுமென்னும் தேவை. இவர்களுள் நடுத்தர வர்க்கத்தார், அதிலும் குறிப்பாக மாத சம்பளத்தை நம்பி வாழ்க்கை நடத்துவோரின் நிலைமை என்றுமே தருமசங்கடமானதாகும்.

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி என்று வரும், கடும்பத் தலைவரின் சம்பளம் வந்தவுடன் அதை வாங்க வேண்டும், இதை வாங்க வேண்டும் என்று குடும்பத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருப்பதும், முதல் தேதி வந்து சம்பளம் கிடைதத பின்னர் ஒரு சில தினங்களுக்குள்ளே சம்பளத் தொகை முழுவதும் உள்ள தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லாமல் தீர்ந்து போவதும், அடுத்த மாதம் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று மனதைத் தேற்றிக்கொண்டு வாழ்வதும் இவர்களுக்கு சகஜமாகி விட்டது.

இவர்களுள் சிலர் பல சமயங்களில் கல்வி, மருத்துவ சிகிச்சை முதலிய எதிர்பாராத செலவினங்களினால் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொள்வதும் சகஜமாகவே நிகழ்கின்றது.


ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்


திரைப்படம்: முதல் தேதி
இயற்றியவர்: கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்
இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியவர்: கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்
ஆண்டு: 1955

ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம் தேதி
ஒண்ணிலே இருந்து சம்பள தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் - இருபத்
தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம் - இருபத்
தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்
திண்டாட்டம் திண்டாட்டம் சம்பளத் தேதி
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்

பண்ணிய வேலைக்குப் பலன் தருவது ஒண்ணிலே
தேதி ஒண்ணிலே - மனுஷன்
படாத பாடு படுவது இருபத்தொண்ணிலே இருபத்தொண்ணிலே
முன்னே பட்ட கடனைத் தீர்ப்பான் ஒண்ணிலே - தேதி
ஒண்ணிலே பின்னும்
மூணாம் பேஸ்து விழுந்தது போலே
முகம் சோர்ந்திடும் இருபத்தொண்ணிலே

ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்

தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே
தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே
அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம்
அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம்
அகலமாக்கி ஆட்டிப் பார்ப்பார் இருபத்தொண்ணிலே - ஆமா
தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே

சினிமா ட்ராமா காட்சிகளுக்கு டிக்கட் கிடைக்காதொண்ணிலே
தியேட்டர் காலி ஆளிருக்காது தேதி இருபத்தொண்ணிலே
சிகரெட் பீடி வெற்றிலை பாக்கு விற்பனை அதிகம் ஒண்ணிலே
தெருவில் எறிந்த துண்டு பீடிக்கு கிராக்கி வந்திடும் இருபத்தொண்ணிலே

கொண்டவனும் கொண்டவளும் குழந்தை குட்டியோடு
கும்மாளம் கொட்டுவது ஒண்ணிலே - தேதி ஒண்ணிலே அவர்
கூச்சல் கிளப்பிகிட்டு குஸ்திகளும் போட்டுகிட்டு
கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே - கொஞ்சம்
கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே

தம்பிகளின் வாடகை சைக்கிளோட்டம் ஒண்ணிலே
தம்பிகளின் வாடகை சைக்கிளோட்டம் ஒண்ணிலே
தரையில் நடந்து வருவார் இருபத்தொண்ணிலே
நண்பர் நடமாட்டமெல்லாம் ஒண்ணிலே
எந்த நாயும் எட்டிப் பார்க்காது இருபத்தொண்ணிலே

கொண்டாட்டந்தான் தேதி ஒண்ணிலே - பின்பு
திண்டாட்டந்தான் இருபத்தொண்ணிலே
கொண்டாட்டந்தான் தேதி ஒண்ணிலே - பின்பு
திண்டாட்டந்தான் இருபத்தொண்ணிலே

கண்ணே கலைமானே கன்னி மயிலென

நமது நாடு வெள்ளையரிடமிருந்து சுதந்திரமடைந்து 62 ஆண்டுகளாகியும் மக்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததா எனில் இல்லை. ஒரு சாரார் சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பிற மக்களைச் சுரண்டிப் பண முதலைகளாக மிக ஆடம்பரமாக வாழ்கையில் மற்றொரு சாரார் அன்றாடம் உணவுக்கே வழியின்றித் தவிக்கின்றனர். கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு முதலான பாதகங்கள் பகிரங்கமாக அனைவரும் அறியும் வண்ணமாகவே தைரியமாக இத்தகையோரால் அனுதினமும் நடைபெறுவது சகஜமாகிவிட்டது.

பெண் விடுதலை பற்றி அந்நாளிலிருந்து இந்நாள் வரையிலும் சமுதாய அக்கரை கொண்ட பல தலைவர்கள் தொடர்ந்து
எடுத்துரைத்து, பெணகளுக்கு சமுதாயத்தில் சம உரிமை கொடுக்கவும், அவர்களை மரியாதையுடன் நடத்தவும் வேண்டி வருகின்ற போதிலும், நம் நாட்டில் பல பெண்களை ஏமாற்றி அவர்களது பெண்மையைச் சூரையாடுவதுடன் அவர்களை மாடுகளுக்கொப்பாகக் கருதி விலைமாதர்களாக விற்று விடும் கொடுமைகளும் பகிரங்கமாகப் பல நகரங்களில் தினமும் நடைபெறுவதை அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் அறிந்த போதிலும், இக்கொடுமைகளைத் தடுக்கவும் இதில் பாதிக்கப் பட்ட பெண்ணினத்தைக் காக்கவும் ஒருவரும் உரிய நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரியது.

இருப்பினும் நாட்டு மக்களிடையே பல நல்ல உள்ளங்கள் ஆங்காங்கே இத்தகைய கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலருக்கு மறுவாழ்வளித்துக் காத்து வருகின்றனர். ஒரு விபத்தினால் மன நிலை பாதிக்கப்பட்டு தன் சுய நினைவுகளை இழந்த நிலையி்ல் விலைமாதாக விற்கப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணைக் காப்பாற்றிய நமது இன்றைய பாடலின் நாயகன் அவளைப் போற்றிப் பாதுகாத்து, அவளுக்கு உரிய மருத்துவ சிகிச்சையளிக்கச் செய்து, அவள் சுயநினைவை அடைய வழி கோலுகிறான், அவள் மேல் காதலும் கொள்கிறான். சுயநினைவடைந்த பின்னர் அப்பெண் அவனை அடையாளம் கண்டு கொண்டாளா? அவனை ஏற்றுக் கொண்டாளா?

விடை சொல்கிறது மூன்றாம் பிறை.


கண்ணே கலைமானே கன்னி மயிலென


திரைப்படம்: மூன்றாம் பிறை
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1982

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண்பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை கோலம் விதி செய்தது

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உன்னை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதான் என்று என் சன்னதி

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக்
கண்டேன் உன்னை நானே
அந்தி பகல் உன்னை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ
ராரிராரோ உராரிரோ ராரிராரோ உராரிரோ

வா அருகில் வா தா உயிரைத் தா

திரைப்படங்களுக்குத் திகில் கதை எழுதித் தாயாரிப்பதில் ஆங்கிலப் படத் தயாரிப்பாளர்கள் மிகவும் முயற்சியெடுத்து அதற்காக விசேஷமான அரிதாரம், காட்சியமைப்புகள் எனப் பல விதத்திலும் மிகவும் பாடுபட்டு, நிறைய செலவு செய்து தயாரிப்பார்கள். நம் இந்தியத் தயாரிப்பாளர்கள் மிகவும் புத்திசாலிகள். இத்தகைய அனாவசிய செலவுகளைத் தவிர்த்து, மிகவும் எளிய முறையில் இத்தகைய திகில் கதைகளை எழுதிப் படமாக்கி விடுவார்கள். இதற்கு இவர்கள் கடைபிடிக்கும் தொழில் நுட்பம் ஒரு பெண்ணுக்கு வெள்ளைச் சேலையைக் கட்டி விட்டு இரவு நேரத்தில் நிழலும் ஒளியும் கலந்த சூழ்நிலையில் நடமாட வைத்து, காட்சிக்கேற்றாற்போல் இசையமைத்து அசத்திவிடுவதே.


வா அருகில் வா தா உயிரைத் தா

திரைப்படம்: அதே கண்கள்
இயற்றியவர்: தெரிந்தால் தெரிவியுங்கள்
இசை: வேதா
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1967

ஆ... ஆஆஆஆ ஆ... ஆஆஆஆ

வா அருகில் வா தா உயிரைத் தா
வா அருகில் வா தா உயிரைத் தா
ஆயிரம் காலங்கள் காத்திருந்தேனே நான்
வாசலைத் தேடி வா வா வா

பெண் பாவம் உன்னைத் தொடர்ந்து வரும் - ஒரு
நிழல் போலே அது நடந்து வரும்
கண்ணீரால் விதி எழுதி வைத்தும் - என்
கதை கேட்டால் கண்ணும் கனிந்துருகும்

வா அருகில் வா தா உயிரைத் தா
வா அருகில் வா

சிறைக் கதவை ஏன் திறக்கவில்லை? - நீ
விடுதலையே கொடுக்கவில்லை
நானிருப்பேன் உன்னை நினைத்திருப்பேன்
ஒரு குரல் கொடுத்தே நிதம் அணைத்திருப்பேன்

வா அருகில் வா தா உயிரைத் தா
வா அருகில் வா

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை

சிறிது காலத்துக்கு முன்னர் வரை நம் நாட்டில் பெண்கள் பெரும்பாலும் திருமணத்திற்குப் பின்னர் இல்லத்தரசிகளாகவே வாழ்ந்தனர். குடும்பத்துக்குத் தேவையான பொருளீட்டும் கடமை அவர்களது கணவன்மார்களையே சேர்ந்திருந்தது. இதற்கு முக்கியக் காரணம் கணவன் ஒருவனது வருமானத்திலேயே தங்கள் வாழ்க்கையை இனிமையாகக் கழித்து, தங்களது குழந்தைகளையும் ஆளாக்க முடிந்த நிலை நிலவியதேயாகும். பின்னர் உருவான அரசியல் சமுதாய சூழ்நிலைகளினால் விலைவாசி பரமபதப் பாம்பு போல் ஏறிய காரணத்தாலும், ஆடம்பரமாக வாழ வேண்டுமெனும் ஆசையினாலும் ஆண், பெண் இரு சாராரும் பணிக்குச் செல்வதும் திருமணமான பின்னரும் கணவன், மனைவி இருவரும் அலுவல் செய்து குடும்ப நிர்வாகத்துக்கான பொருளீட்டுவதும் வாடிக்கையாகி விட்டன. இருப்பினும் இக்காலத்திலும் பல பெண்கள் திருமணம் முடிந்த பின்னர் இல்லத்தரசிகளாக வாழ்க்கை நடத்துவதையே பெரிதும் விரும்பி ஏற்கின்றனர்.

இத்தகைய பெண்கள் தமக்குப் பிடித்த ஆண்களிடத்தில் காதல் கொண்டால் அவர்களது மனதில் எழும் எண்ணங்கள் பெரும்பாலும் தம் கணனுடன் சேர்ந்து இல்லற வாழ்வை இன்பமாகச் சுவைப்பதிலேயே இருப்பது வழக்கம். காதலித்தவனைக் கைப்பிடிக்க இயலாத சூழல் உருவானால் அத்தகைய பெண் வருத்தமுற்று வாடுவதும் பெரும்பாலும் தான் விரும்பிய ஆடவனுடன் சேர முடியவில்லையே எனும் ஏக்கத்தினாலேயே ஏற்படுகிறது.


நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை


படம்: தெய்வத்தின் தெய்வம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: பி.சுசீலா
ஆண்டு: 1962

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை உன்னைக்
கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை பெண்ணுறங்கவில்லை

உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்தது
உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது - இந்தக்
காவல் தாண்டி ஆவல் உன்னைத் தேடி ஓடுது தேடி ஓடுது

பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக் கொண்டேனே - உன்னைப்
புரிந்த போது சிறையில் வந்து மாட்டிக் கொண்டேனே
இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே
இன்று நாளை என்று நாளை என்று நாளை எண்ணுகின்றேனே - நான்
என்றும் உன்தன் எல்லையிலே வந்திடுவேனே வந்திடுவேனே

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை

திங்கள், 30 நவம்பர், 2009

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்

உடன்பிறந் தவர்களைப் போலே - இவ்
வுலகினில் மனிதரெல் லாரும்;
திடங்கொண் டவர்மெலிந் தோரை - இங்குத்
தின்று பிழைத்திட லாமோ?
............
அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்.
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.
.............
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.

ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே!இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.

எனும் மஹாகவி பாரதியாரின் பாடல் வரிகளில் கண்ட நெறியைப் பின்பற்றி நம்மிற்பலர் தாம் ஈட்டிய செல்வம் மற்றும் தமது நேரத்திலும் உழைப்பிலும் பெரும்பகுதியை சமுதாய நன்மைக்காகவே செலவிட்டு, சமூகத்தொண்டு செய்வது ஒன்றே தமது வாழ்க்கையின் நோக்கமெனக் கொண்டு வாழ்கின்றனர். இவர்களில் ஒரு சாரார் மனித உயிர்காக்கும் நல்ல நோக்கத்துடன் இரத்த தானம், கண் தானம், உடலுறுப்புகள் தானம் முதலான இயக்கங்களை ஏற்படுத்தித் தன்னுடன் பிற நல்லுள்ளம் கொண்ட அன்பர்கள் பலரையும் ஒன்று சேர்ததுப் பாடுபடுகின்றனர்.

இத்தகைய தொண்டு செய்வோரைத் தலைவணங்கிப் போற்றுவோம். அதே சமயம் இத்தகைய அன்பர்கள் தமது நலத்தைத் தியாகம் செய்து பாமர மக்கள் நல்வாழ்வுக்கெனத் தொகுத்து அளிக்கும் தானங்களைப் பெற வேண்டிய சூழ்நிலையிலுள்ள மனிதர்களுக்கு, அதற்கேற்ற மருத்துவச் சிகிச்சை கிடைக்கப் பெறுவது குதிரைக் கொம்பாகவே உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் நம் நாட்டை ஆள்வோர் மருத்துவக் கல்வியை வியாபாரமாக்கி, அரசு மருத்துவமனைகள் முறையாக இயங்க ஆவன செய்யாது, தமது சுயலாபத்தை மட்டுமே சிந்தித்து செயல்படும் போக்கேயாகு்ம்.

இத்தகைய போக்கு மாறி அரசுகள் உண்மையிலேயே மக்களுக்காக, மக்களைக் கொண்டு மக்களால் நடத்தப் படும் சூழ்நிலை உருவாவது மிகவும் அவசியம். அத்தகைய நல்லாட்சி நாட்டில் நிலவுகையில் மேற்குறிப்பிட்ட அன்பர்களின் தொண்டு மென்மேலும் சிறந்து மனிதகுலம் மிகவும் மேன்மையடையும் என்பதில் ஐயமில்லை.


எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்


திரைப்படம்: கருப்புப் பணம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர்
கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்
இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர்
கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்
நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த
நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்
நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த
நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்
கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்
பாலென அழுவோர்க்குப் பால் தருவோம் - பசுங்
கூழெனத் துடிப்போர்க்கு சோறிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும்
தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும்
தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை - நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்

ஞாயிறு, 29 நவம்பர், 2009

சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா

உலகில் உயிர் வாழ்க்கையையே வியாபாரமாக்கிய மனிதர்களின் கொடுஞ்செயலால் இன்று பொருளாதார ஏற்றத் தாழ்வு உலகெங்கிலும் பெருமளவில் நிலைபெற்றுள்ளது. மனிதரில் ஒரு சாரார் தேவைக்கு அதிகமான அளவில் சொத்து சேர்த்து ஆடம்பர வாழ்க்கை நடத்துவதும், மற்றொரு சாரார் தினமும் வயிற்றுப் பசிக்கு உணவிடவே, "திண்டாடித் திண்ணைக் காலைப் பிடிக்கும் நிலையில்" திணறுவதும் அன்றாடம் நிகழும் பரிதாபகரமான நிலை உலகில் நிலவுகிறது. இருப்பினும் செல்வச் செழிப்போடு வாழ்பவர் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனரா? வறுமையில் வாடுவோர் அனைவரும் மகிழ்ச்சி இன்றித் தவிக்கின்றனரா? எனில் இல்லையென்றே சொல்ல வேண்டும்.

பெரும் செல்வந்தர்களில் பலர் தம் மனதுக்குப் பிடிக்காத சூழ்நிலையில் தங்கள் துன்பங்களை வெளியிடவும் முடியாத சங்கடமான மனநிலையில் வாழவேண்டிய கட்டாயத்தில் தவிப்பதும், கையில் சல்லிக்காசும் இல்லாமல் தவிப்பவர் பலர் அன்றாடம் கிடைத்ததை உண்டு, கிடைத்த இடத்தில் படுத்து, நிம்மதியாகத் தூங்கி, வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிப்பதும் நம் கண்முன்னே நிகழ்வதைப் பார்க்கிறோம்.

எத்தனைக் கோடிப் பணமிருந்தாலும் நிம்மதியை விலைககு வாங்க முடியுமா?


சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா


திரைப்படம்: முத்து மண்டபம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962

சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா ஆஆஆஆஆஆ
சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ

பொன்னோடு பொருள் படைத்தேன் பூவைக்கு நான் பூ முடித்தேன்
பொன்னோடு பொருள் படைத்தேன் பூவைக்கு நான் பூ முடித்தேன்
மன்னாதி மன்னனைப் போல் மாளிகையில் வாழ்கிறேன்

சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ

பாய் விரித்துப் படுப்பவரும் வாய் திறந்து தூங்குகிறார்
பாய் விரித்துப் படுப்பவரும் வாய் திறந்து தூங்குகிறார்
பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சிலோர் அமைதியில்லை
பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சிலோர் அமைதியில்லை
கொஞ்சிவரும் கிளிகளெல்லாம் கொடும்பாம்பாய் மாறுதடா
கொஞ்சிவரும் கிளிகளெல்லாம் கொடும்பாம்பாய் மாறுதடா
கொத்தி விட்டு புத்தனைப் போல் சத்தியமாய் வாழுதடா

இல்லாத மனிதருக்கு இல்லையென்னும் தொல்லையடா
உள்ளவர்க்கு வாழ்க்கையிலே உள்ளதெல்லாம் தொல்லையடா ஆஆஆஆஆஆ

சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ

அன்னமில்லை என்றாலும் அமைதி கொண்ட மானிடனே
அன்னமில்லை என்றாலும் அமைதி கொண்ட மானிடனே
உன் வாழ்வை நினைக்கையிலே என் மனது தவிக்குதடா
உன் வாழ்வை நினைக்கையிலே என் மனது தவிக்குதடா
வண்ணமுத்து மண்டபமும் வைரநகைப் பஞ்சணையும்
வண்ணமுத்து மண்டபமும் வைரநகைப் பஞ்சணையும்
உன்னிடத்து நான் தருவேன் நிம்மதியை நீ தருவாய்

சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா
துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா
சொன்னாலும் வெட்கமடா ஆஆஆஆஆஆ

சனி, 28 நவம்பர், 2009

தென்றல் உறங்கிடக் கூடுமடி என்தன் சிந்தை உறங்காது

ஒரு பெண் குழந்தையாய் இருக்கையில் அனைவரோடும் மிகவும் பிரியத்துடன் நெருக்கமாகப் பழகுகிறாள். ஆண் பெண் வெறுபாடு பார்ப்பதில்லை. அதே பெண் பருவமடைந்து விட்டால் எங்கிருந்தோ நாணம் வந்து அவளுக்குள் குடி புகுந்து கொள்வதால் அவள் பிறருடன் பழகுவதில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆண்களுடன் பேசிப் பழக நாணுகிறாள். தன் கண்ணையும் கருத்தையும் கவர்ந்த ஒரு ஆடவன் மேல் காதல் ஏற்பட்டாலோ அவளது நாணம் பன்மடங்காகப் பெருகி, அவளது உள்ளத்தில் ஆசை அலைகள் கரைபுரண்டு எழுந்தாலும் அவற்றை வெளிக்காட்டிக்கொள்ள இயலாத சூழ்நிலையை ஏற்படுத்துவதால் தன் உள்ளத்தில் எழும் எண்ணங்களைப் பிறரிடம் மட்டுமின்றித் தன் காதலனிடமும் வெளிப்படுத்த வழியின்றித் தவிக்கிறாள்.

அவ்வாறு காதல் உணர்வுகளாலும் நாணத்தாலும் அலைமோதும் மனத்தினளாய் அவதியுறும் பெண்ணொருத்திக்கு அவளது காதலன் அவளது தவிப்பைப் போக்க சொல்லும் ஆலோசனைகள் என்ன?


தென்றல் உறங்கிடக் கூடுமடி என்தன் சிந்தை உறங்காது


திரைப்படம்: சங்கிலித் தேவன்
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியோர்: பி. லீலா, டி.எம் சௌந்தரராஜன்
ஆண்டு: 1960

தென்றல் உறங்கிடக் கூடுமடி என்தன் சிந்தை உறங்காது - புவி
எங்கும் உறங்கிடக் கூடுமடி என்தன் கண்கள் உறங்காது - புவி
எங்கும் உறங்கிடக் கூடுமடி என்தன் கண்கள் உறங்காது
தென்றல் உறங்கிடக் கூடுமடி என் சிந்தை உறங்காது

நீலக் கடலலை ஓடி வருவதில் நெஞ்சம் பறிகொடுப்பேன்
நீலக் கடலலை ஓடி வருவதில் நெஞ்சம் பறிகொடுப்பேன் - இன்று
கோடி அலைகள் என் நெஞ்சில் எழுவதை யாரிடம் போய் உரைப்பேன் - இன்று
கோடி அலைகள் என் நெஞ்சில் எழுவதை யாரிடம் போய் உரைப்பேன் - இனி

தென்றல் உறங்கிடக் கூடுமடி என்தன் சிந்தை உறங்காது

துள்ளித் திரிந்தாள் சுற்றிப் பறந்தாள் பிள்ளைப் பருவத்திலே ஏஏ..ஏஏ..ஏஏ..ஏஏ..
துள்ளித் திரிந்தாள் சுற்றிப் பறந்தாள் பிள்ளைப் பருவத்திலே - நாண
வெள்ளத்திலே இவள் உள்ளம் மிதப்பது கன்னிப் பருவத்திலே - நாண
வெள்ளத்திலே இவள் உள்ளம் மிதப்பது கன்னிப் பருவத்திலே
கன்னிப் பருவத்திலே

கண்களில் ஏறிப் பெண்மையில் ஓடிய காதலை விட்டுவிடு
கண்களில் ஏறிப் பெண்மையில் ஓடிய காதலை விட்டுவிடு
நங்கைப் பருவம் வேதனை தந்தால் - இள
நங்கைப் பருவம் வேதனை தந்தால் நாணத்தை விட்டுவிடு - நெஞ்சே
நாணத்தை விட்டுவிடு

உற்றவர் கண்ணும் பெற்றவர் கண்ணும் உண்மை அறிவதில்லை
உற்றவர் கண்ணும் பெற்றவர் கண்ணும் உண்மை அறிவதில்லை - இதைக்
கற்றவர் அல்லால் மற்றவார் யாரும் காரணம் சொன்னதில்லை - இதைக்
கற்றவர் அல்லால் மற்றவார் யாரும் காரணம் சொன்னதில்லை

தென்றல் உறங்கிடும் நேரத்திலும் நம் சிந்தை உறங்காது - புவி
எங்கும் உறங்கிடும் காலத்திலும் நம் கண்கள் உறங்காது - புவி
எங்கும் உறங்கிடும் காலத்திலும் நம் கண்கள் உறங்காது
தென்றல் உறங்கிடும் நேரத்திலும் நம் சிந்தை உறங்காது

சங்கே முழங்கு சங்கே முழங்கு

"தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நி்ல்லடா" என்று வெறும் முழக்கமிட்டால் போதாது, உண்மையாகவே தமிழன் என்று சொல்லித் தலை நிமிர்ந்து செல்லும் தகுதியை ஒவ்வொரு தமிழனும் அடைய வேண்டும். பண்டைக்காலத்தில் தமிழ் நாடு சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு, கொங்கு நாடு என்றிவ்வாறாகப் பல கூறுகளாகப் பிரிந்திருந்தது. அவை தவிர சிறு சிறு நாடுகள் குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டன.
பல்வேறு காரணங்களுக்காக அவ்வப்போது இந்நாடுகள் ஒன்றன் மேல் ஒன்று படையெடுத்ததன் விளைவு தமிழர்கள் ஒருவருக்கொருவர் விரோதம் பாராட்டி, ஒருவ்ரை மற்றவர் வெட்டிக் கொன்ற கொடுமை தொடர்ந்து நிறைவேறியது. இக்கொடுமையை சிந்தித்துப் பாராமல் பொருளுக்காகத் தம் தமிழறிவை விற்று இத்தகைய கொலைபாதகங்களுக்குக் காரணமான அரசர்களின் மேல் கவிஞர்கள் பலர் பரணி என்ற பெயரில் பாடி வைத்த பிதற்றல்களைப் பெரிதென எண்ணி நாம் அறியாமையால் பெருமை கொள்கிறோம்.

இன்று உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் பெரும்பாலோர் சொல்லொணாத் துயரில் மூழ்கி வருந்துகின்றனர். இவர்களின் துயரை யாராலும் விரைவில் நீக்க இயலாத சூழ்நிலை நிலவுவது மிகவும் வேதனை தருகிறது. இந்நிலைமைக்கு யார் காரணம்? அரசியல்வாதிகள் ஒருவரை மற்றவர் குற்றஞ்சாட்டி அவர்கள் தமிழரின் இன்னல்களைத் தீர்க்க வழி காணது தாங்கள் பதவிகளைப் பெறுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அவ்வாறு குற்றஞ்சாட்டுபவர்கள் உண்மையிலே தமிழர்களின் துயர் துடைக்கப் பாடுபடுபவர்களா எனில் இல்லை எனும் பதிலே கிடைக்கிறது.

தமிழர்கள் செய்த மிகப் பெரிய தவறு என்னவெனில், தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாகவும் அறிவுபூர்வமாகவும் செயல்படாது, உணர்ச்சிபூர்வமாக முடிவெடுத்ததே ஆகும். அத்துடன் தம்முள் ஒற்றுமை குறைய விடுவதும் இத்தகைய இன்னல்களுக்கு முக்கியக் காரணமாகும்.

தமிழர்கள் ஒருவரோடொருவர் நட்புக்கொண்டு, தன்னலம் கருதாது உண்மையாய்ச் சேவை செய்யும் மனப் பக்குவமும், அறிவும் திறமையும் கொண்ட தலைவர்களைத் தேர்வு செய்வார்களேயானால் தமிழரை யாரும் இன்னல்களுக்குள்ளாக்க இயலாதென்ற சூழ்நிலை விரைவிலேயே உருவாகும்.

உலகத் தமிழர்களே ஒன்று கூடுங்கள், உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்.

சங்கே முழங்கு சங்கே முழங்கு

திரைப்படம்: கலங்கரை விளக்கம்
இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1965

சங்கே முழங்கு சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு

சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே

சங்கே முழங்கு ஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள்
வெற்றித் தோள்கள் ஆஆஆஆஆஆஆஆஆஆ
கங்கையைப் போல் காவிரி போல்
கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனில்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே

உலகில் உயிர் வாழ்க்கை உறவுகளாலும், நட்பாலும் காதலாலும் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் அன்பினாலும் பாசத்தினாலும் நிலைத்திருக்கிறது. பரஸ்பரம் அன்பு கொண்டவர்கள் சேர்ந்திருக்கும் போது சந்தோஷம் விளைவது போலவே ஒருவரையொருவர் பிரிந்திருக்கையில் துக்கமும் விளைவது இயற்கை. துன்பம் தரும் அத்தகைய பிரிவு முடிந்து அன்புக்குரிய்வரை மீண்டும் சந்திக்க மாட்டோமா என மனம் ஏங்குவதும் இயற்கை.

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே

திரைப்படம்: சதாரம்
இயற்றியவர்: மருதகாசி
இசை: ஜி. ராமனாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1956

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே உன்னை
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே

அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனததே - வாழ்க்கை
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனதே - நான்
அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அமைதியின்றியே அலைய நேர்ந்ததே

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே

எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?
இந்த நிலை என்று மாறுமோ?
இந்த நிலை என்று மாறுமோ? உனைக் காணும்
இன்ப நாளுமே வந்து சேருமோ?

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே

புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே

ஒரு பெண் திருமணம் முடித்துப் புகுந்த வீடு செல்கையில் தன் கணவனின் பெற்றோரைத் தன் பெற்றோராக அடைகிறாள், அவர்களுக்கு ஒரு மகளாகவும் ஆகிறாள். அதனாலேயே அவள் மருமகள் என அழைக்கப்படுகிறாள். மருமகள் என்றால் மருவி வந்த மகள் என்று பொருள் கொள்ளலாம். என் வீட்டுக்கு விளக்கேற்ற மருமகள் வந்து விட்டாள் என அவளது மாமனாரும் மாமியாரும் பிற உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கூறி அகமகிழ்வது மரபு. விளக்கேற்றுவதென்றால் அதுவரை அவர்களது வீட்டில் இருந்த சிறு சிறு துன்பங்களாகிய இருளை நீக்கி ஒளிகொடுப்பதென்று பொருள் கொள்ளலாம்.
தன் கணவனும் தான் புகுந்த வீடும் செழிப்பாக விளங்குவதற்குப் பாடுபடுவதும், அவ்வீட்டிலுள்ள அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வாழ்வை வளமாக்குதலும் ஒரு பெண்ணின் இன்றியமையாத கடமைகளாகும். அக்கடமைகளை முறையாக ஒரு பெண் நிறைவாற்றுவாளேயானால் அவளது வாழ்வும் வளம் பெற்று அவள் மிகவும் பெறுமை பெறுவாள்.

புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே

திரைப்படம்: பானை பிடித்தவள் பாக்கியசாலி
இயற்றியவர்: தஞ்சை ராமையா தாஸ்.
இசை. எஸ்.வி. வெங்கட்ராமன், எஸ். ராஜேஸ்வரராவ்
பாடியவர்: திருச்சி லோகநாதன்
ஆண்டு: 1958

புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

அரசன் வீட்டுப் பொண்ணாக இருந்தாலும் - அம்மா
அகந்தை கொள்ளக் கூடாது எந்நாளும்

புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

மாமனாரை மாமியாளை மதிக்கணும் - உன்னை
மாலையிட்ட கணவனையே துதிக்கணும்
சாமக் கோழி கூவையிலே முழிக்கணும் - குளிச்சு
சாணம் தெளிச்சு கோலம் போட்டு சமையல் வேலை துவக்கணும்

புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ
காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே
கண்ணால் பேசும் பயக முன்னே நில்லாதே - நீ
காணாததைக் கண்டேனுன்னு சொல்லாதே - இந்த
அண்ணே சொல்லும் அமுதவாக்குத் தள்ளாதே - நம்ம
அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே

புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிக சொல்லுறன் கேளு முன்னே

புருஷன் உயிரை மீட்டுத் தந்தவ பொண்ணுதான் - ஓடும்
பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணுதான்
அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான் - அவுங்க
ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்
ஆஸ்திக் கணக்கு சொன்னாக் கற்பு ஒண்ணுதான்

புருஷ்ன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே தங்கச்சி கண்ணே - சில
புத்திமதிகள் சொல்லுறன் கேளு முன்னே

புருஷன் கூட நீ இருந்து பூவும் மணமும் போல் மகிழ்ந்து
கூரைச் சேலையும் தாலியும் மஞ்சளும்
குங்குமப் பொட்டும் நகையும் நட்டும்
கொறைஞ்சிடாம நெறைஞ்சு கிட்டு ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
மக்களைப் பெத்து மனையப் பெத்து மக்க வயத்திலே பேரனைப் பெத்து
பேரன் வயத்திலே புள்ளையப் பெத்து நோயில்லாம நொடியில்லாம
நூறு வயசு வாழப்போற தங்கச்சி - நமக்கு
சாமி துணை இருக்கு தங்கச்சி - நமக்கு
சாமி துணை இருக்கு சாமி துணை இருக்கு தங்கச்சி

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

"புல்லினும் அற்பமானது எது?" என்று தரும தேவதை கேட்டதற்குப் பாண்டவர்களில் மூத்தவனான யுதிஷ்டிரன் சொன்ன பதிலாவது, "கவலை" என்பதாகும். ஆனாலும் அவனும் தன் வாழ்நாளெல்லாம் கவலையிலேயே கழித்ததாக மஹாபாரதக் கதையின் வாயிலாக அறிகிறோம். நாமெல்லோரும் இவ்வுலகில் அனுதினமும் கவலைப் பட்டு வருந்தி மடிவதற்காகவே அவதரித்தோமோ?
பிறந்த குழந்தைக்குத் தன் தாயை ஒரு கணம் காணவில்லையெனில் கவலை, குறித்த நேரத்தில் பசியாறப் பாலும் உணவும் தரவில்லையெனில் கவலை. தூக்கம் வரத் தாலாட்டவில்லையெனில் கவலை. குழந்தைப் பருவம் விளையாட்டில் ஒரு வழியாகக் கழிந்ததும் தாயையும், விளையாட்டுத் தோழர்களையும் விட்டுப் பள்ளி செல்ல வேண்டுமென்ற கவலை. பள்ளியிலிருந்து வீடு திரும்பிய பின்னர் வீட்டுப் பாடங்களைப் படிக்க வேண்டுமென்ற கவலை. ஆண்டு நிறைவடைந்த நிலையில் தேர்வு எழத வேண்டுமெனும் கவலை. கல்வி முடிந்து தேராவிடில் தேரவில்லையெனும் கவலை, தேர்வுபெற்றால் உத்தியோகம் கிடைக்க வேண்டுமெனும் கவலை, காதலினால் கவலை, காதல் தோல்வியுற்றாலும் வெற்றியுற்றாலும் கல்யாணக் கவலை, கல்யாணம் செய்தபின்னர் பிள்ளைப் பேற்றைப் பற்றிய கவலை. கவலையோ கவலை.

முற்காலத்தில் (1960களில்) அப்பா அலுவலுக்குச் செல்ல அம்மா வீட்டிலிருப்பாள் வேளாவேளைக்கு சோறும் பிற பதார்த்தங்களும் வாய்க்கு ருசியாகச் சமைத்துப் போடுவாள். மாலை தந்தை பணி முடிந்து வீடு திரும்புகையில் தின்பண்டங்கள் வாங்கி வருவார். அதனை சுவைத்த பின்னர் ஏதோ சில பாடம் படித்துவிட்டுப் படுத்துறங்கி வாழ்வை எளிதாகக் கழிக்கும் நிலை இருந்தது. ஐந்து வயது வரையில் பள்ளிக்கூடம் கிடையாது. ஐந்து வயதில் நேரடியாக ஒண்ணங்கிளாஸ் சேர வேண்டும். அதன் பின்னர் 10 வருடங்கள் படித்தாலே போதும் நல்ல உத்தியோகம் பெற்று விரைவில் திருமணம் செய்து வாழ்வை சுகமாகக் கழிக்கலாம்.

காலம் செல்லச் செல்ல எல்.கே.ஜி., யு.கே.ஜி., கிரீச் என்று பிறந்து இரண்டு வயது நிறைவடையும் முன்னரே பிள்ளையை எங்காவது கொண்டு தள்ளிவிட்டுக் கணவனும் மனைவியும் இருவருமே பணி செய்து சம்பாத்திக்க வேண்டிய சூழ்நிலை (ஏழையை வாழ வைப்பதாகச் சொல்லி ஏலம் போட்டு, ஏழைகளின் எண்ணிக்கையை அதிகரித்து, விலைவாசியை ஏற்றி, தான் மட்டும் சொத்து சேர்த்த அரசியல்வாதிகளுக்கு நன்றி! "ஏழையாய் வாழ வைப்பதாக அவர்கள் சொன்னதை நாம் சரியாகக் கேட்கவில்லையோ?" என ஓட்டுப் போட்டு ஆட்சியை ஒப்படைத்தபின்னர் கவலைப்பட்டு என்ன பயன்?)

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

படம்: நிச்சய தாம்பூலம்
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1961

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

கொடுத்தானே கொடுத்தானே பழரசம் ஆண்டவன் கொடுத்தானே
பிரித்தானே பிரித்தானே மனதையும் கவலையும் பிரித்தானே

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை
குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லை
ஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியைக் காணவில்லை
அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

தன்னந்தனியே பிறந்தவன் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடா
இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா
இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா
இருபதில் தொடங்கி எழுபது வரைக்கும் என்றும் மயக்கமடா

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்.

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

கழுதை குட்டியாக இருக்கையில் பார்க்க மிகவும் அழகாக இருக்கும் அடர்ந்த ரோமத்துடன் திகழும். ஓடுகையில் ஒரு குதிரைக் குட்டி ஓடுவதைப் போல் இருக்கும். அதே கழுதை வயது ஏற ஏற அதன் பின்னங்கால்கள் இரண்டும் கோணிக்கொண்டு, ரோமம் உதிர்ந்து, உடலெங்கும் மண் படிந்து பார்க்க சகிக்காத அளவுக்கு அருவெறுப்பான தோற்றத்தை அடையும். இதனாலேயே "வர வ்ர மாமியார் கழுதைப் போலானாளாம்" என்று தனது மருமகளைக் கொடுமைப் படுத்தும் மாமியார்களைக் கழுதைக்கு உதாரணமாகக் கூறுவதுண்டு.
குழந்தைகளாக இருந்தபோது நமது உள்ளங்களில் பெரிதும் குதூகலமே குடியிருந்தது. அவ்வப்போது பிற குழந்தைகளுடனும், பெற்றோருடனும், பிற வயதில் மூத்த நண்பர்களுடன் ஏதேனும் சில காரணங்களினால் ஏற்படும் மன வருத்தங்கள் அனைத்தையும் அக்காரணங்கள் நீங்கியதும் நொடிப்பொழுதில் மறந்து விட்டு அனைவருடனும் மனம் விட்டுக் கலந்து பேசி, விளையாடி மகிழும் மனம் அப்போது நமக்கு இருந்தது.

குழந்தைப் பருவத்தைக் கடந்து வயது வந்த பின்னர் கழுதையைப் போலவே நம் மனதில் கள்ளமும் கபடமும் குடிபுகுந்து போலி கௌரவம் கொண்டு, பொறுமை இழந்து அவதிப் படுகிறோம். பிறருடன் அற்பக் காரணங்களுக்காகவும் காரணமே இல்லாமலும் கோபம் கொண்டு அவரது மகிழ்ச்சியைக் குலைப்பதோடல்லாமல் நமது உள்ளங்களையும் நாமே புண்படுத்திக் கொள்கிறோம். நாம் குழந்தைகளாகவே இருந்திருக்கக் கூடாதா?

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

படம்: குழந்தையும் தெய்வமும்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1965

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது
பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது - அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது - அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்த் குடியிருந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது - அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது - அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது
உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது - நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது - நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது - பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது - பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார்
பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார் - அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார் - அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவ்ரானார்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் - என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார் - என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

தங்கரதம் வந்தது வீதியிலே

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே
எனும் திருஞான சம்பந்தரின் தேவாரப் பாட்டில் கூறியுள்ளது போல் இறைவனை வழிபடுகையில் உள்ளம் உருகி அவன் மேல் காதலுடன் வணங்க வேண்டும். இறை வழிபாட்டில் உண்டாகும் காதல் உணர்வுக்கும் ஒரு பெண் தான் நேசிக்கும் ஒரு ஆணின் மேல் அல்லது ஒரு ஆண் தான் நேசிக்கும் ஒரு பெண்ணின் மேல் கொள்ளும் காதலுக்கும் அடிப்படை அன்பில் வேறுபாடு கிடையாது. காதல் என்றாலே தூய்மையான மரியாதைக்குரிய அன்பு என்பது பொருளாகும்.

ஆண் பெண் காதலில் இயல்பாக எழும் பாலுணர்ச்சியைப் புறந்தள்ளி இத்தகைய தெய்வீக உணர்வுடன் கொள்ளும் காதல் தெய்வ வழிபாட்டில் கிடைப்பது போன்ற பேரின்பத்தைத் தர வல்லதாகும்.

இதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் சாரதாதேவி அம்மையாரும் ஆவர்.

தெய்வத்தை வழிபடுவோர் அத்தெய்வத்தைத் தேரில் அமர்த்தி அத்தேரை வடம் பிடித்து இழுத்து ஊரெங்கும் உலாவருதல் விழாக்கோலமாய் அமைந்த வழிபாடாகும். ஆலயங்களில் இத்தகைய வழிபாட்டுக்கெனத் தங்கரதம் ஏற்படுத்தி அதனை விசேஷமாகத் துதிக்க விரும்பும் பக்தர்கள் இழுக்க வகை செய்வது வழக்கத்தில் உள்ளது.

அத்தகையதொரு நிலையில் தங்களது தெய்வீகக் காதலை வெளியிடுகின்றனர் கலைக்கோவில் காதலர்கள்.

தங்கரதம் வந்தது வீதியிலே

திரைப் படம்: கலைக்கோவில்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே ராமமூர்த்தி
பாடியோர்: டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா, பி. சுசீலா

ஆ ஆஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆ
ஆ ஆஆஆஆ ஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ

தங்கரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
மரகதத் தோரணம் அசைந்தாட நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
மரகதத் தோரணம் அசைந்தாட நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
தங்கரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
தங்கரதம் வந்தது வீதியிலே ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ

செவ்விளநீரின் கண் திறந்து செம்மாதுளையின் மணி வாய் பிளந்து
முளைவிடும் தண்டில் கோலமிட்டு மூவருலா வந்த காலங்கள் போலே

தங்கரதம் வந்தது வீதியிலே ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

மாங்கனிக் கன்னத்தில் தேனூற சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீன் ஆட
தேன் தரும் போதைகள் போராட தேவியின் பொன் மேனி தள்ளாட ஆட

தங்கரதம் வந்தது வீதியிலே ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு

தமிழன் இதயம்
தமிழன் என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடைய வழியாகும்;
அன்பே அவனுடை மொழியாகும்.

அறிவின் கடலைக் கடைந்தவனாம்;
அமிர்தத் திருக்குறள் அடைந்தவனாம்;
பொறியின் ஆசையைக் குறைத்திடவே
பொருந்திய நூல்கள் உரைத்திடுவான்.

கவிதைச் சுவைகளை வடித்தெடுத்தான்;
கம்பன் பாட்டெனப் பெயர்கொடுத்தான்;
புவியில் இன்பம் பகர்ந்தவெலாம்
புண்ணிய முறையில் நுகர்ந்திடுவான்.

'பத்தினி சாபம் பலித்துவிடும்'
பாரில் இம்மொழி ஒலித்திடவே
சித்திரச் சிலப்பதி காரமதைச்
செய்தவன் துறவுடை ஓரரசன்.

சிந்தா மணி,மணி மேகலையும்,
பத்துப் பாட்டெனும் சேகரமும்,
நந்தா விளக்கெனத் தமிழ்நாட்டின்
நாகரி கத்தினை மிகக்காட்டும்.

தேவா ரம்திரு வாசகமும்
திகழும் சேக்கி ழார்புகழும்
ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள்
உரைகளும் தமிழன் வாழ்வாகும்.

தாயும் ஆனவர் சொன்னவெலாம்
தமிழன் ஞானம் இன்னதெனும்;
பாயும் துறவுகொள் பட்டினத்தார்
பாடலும் தமிழன் பெட்பெனலாம்.

நேரெதும் நில்லா ஊக்கமுடன்
நிமிர்ந்திட அச்சம் போக்கிவிடும்
பாரதி என்னும் பெரும்புலவன்
பாடலும் தமிழன் தரும்புகழாம்.

கலைகள் யாவினும் வல்லவனாம்
கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்
நிலைகொள் பற்பல அடையாளம்
நின்றன இன்னும் உடையோனாம்.

சிற்பம் சித்திரம் சங்கீதம்
சிறந்தவர் அவனினும் எங்கேசொல்?
வெற்பின் கருங்கல் களிமண்போல்
வேலைத் திறத்தால் ஒளிபண்ணும்.

உழவும் தொழிலும் இசைபாடும்;
உண்மை ; சரித்திரம் அசைபோடும்;
இழவில் அழுதிடும் பெண்கூட
இசையோ டழுவது கண்கூடு.

யாழும் குழலும் நாதசுரம்
யாவுள் தண்ணுமை பேதமெலாம்
வாழும் கருவிகள் வகைபலவும்
வகுத்தது தமிழெனல் மிகையலவாம்.

'கொல்லா விரதம் பொய்யாமை
கூடிய அறமே மெய்யாகும்;
எல்லாப் புகழும் இவைநல்கும்;'
என்றே தமிழன் புவிசொல்லும்.

மானம் பெரிதென உயிர்விடுவான்;
மற்றவர்க் காகத் துயர்படுவான்;
தானம் வாங்கிடக் கூசிடுவான்;
'தருவது மேல்' எனப் பேசிடுவான்.

ஜாதிகள் தொழிலால் உண்டெனினும்
சமரசம் நாட்டினில் கண்டவனாம்;
நீதியும் உரிமையும் அன்னியர்க்கும்
நிறைகுறை யாமல் செய்தவனாம்.

உத்தமன் காந்தியின் அருமைகளை
உணர்ந்தவன் தமிழன்; பெருமையுடன்
சத்தியப் போரில் கடனறிந்தான்;
சாந்தம் தவறா துடனிருந்தான்.

- நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு

படம்: மரகதம்
இயற்றியவர்: ஆர். பாலு
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1959

காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு
காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு
கலைகளுக்கெல்லாம் தாய் வீடு
கலைகளுக்கெல்லாம் தாய் வீடு

காவியம் புகழும் சிறந்த பண்பாடு
காவியம் புகழும் சிறந்த பண்பாடு
காப்பதில் நமக்கு உண்டோ ஈடு
காப்பதில் நமக்கு உண்டோ ஈடு

காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு

விண்ணை மறைத்திடும் கோபுரமே - நம்
வித்தையைக் காட்டிடும் ஓவியமே
விண்ணை மறைத்திடும் கோபுரமே - நம்
வித்தையைக் காட்டிடும் ஓவியமே
எண்ணில் அடங்கா இலக்கியமே
எண்ணில் அடங்கா இலக்கியமே
இயல் இசை நாடக இலக் கணமே

காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு

கொல்லாமை பொய்யாமை நெறி கண்டே
குறளெனும் அமுதாம் தேனுண்டே
சொல்லும் செயலும் ஒன்றெனவே
வாழ்வது உலகில் தமிழினமே
வாழ்வது உலகில் தமிழினமே

காவிரி பாயும் கன்னித் தமிழ் நாடு
கலைகளுக்கெல்லாம் தாய் வீடு
கலைகளுக்கெல்லாம் தமிழ் நாடு
தமிழ் நாடு தமிழ் நாடு

ஒரு முறை பார்த்தாலே போதும்

ஒரு பெண்ணின் மேல் காதல் கொண்ட ஓர் இளைஞனுக்கு அவளது முகம் எப்பொழுதும் மனக்கண்ணில் தோன்றியவாறு இருப்பதும். அவன் காணுகின்ற பொருளிலெல்லாம் அவள் உருவம் தெரிவதும் காதல் படுத்தும் பாடு. காதல் கொண்டவன் மனதில் கவிதைகள் தோன்றும். அக்கவிதைகளிலும் அவள் கருவிழிகளும் அவ்விழிகள் அவன் மேல் தொடுத்த மலர்க் கணைகளுமே தோன்றும்

ஒரு முறை பார்த்தாலே போதும்

திரைப்படம்: பாஞ்சாலி
இயற்றியவர்:
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: ஏ.எல். ராகவன்
ஆண்டு: 1959

ஒரு முறை பார்த்தாலே போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும்

கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும்
கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும்
கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும்
கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும்
கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும்
கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும்
கலையழகே உன்னை வாழ்நாளில்

ஒரு முறை பார்த்தாலே போதும்

கன்னங்களை ரோஜா மலர் என்பதா?
கன்னங்களை ரோஜா மலர் என்பதா? இல்லை
கண்ணாடி என்றே நான் வர்ணிப்பதா?
கண்களை மீனென்று சொல்வதா? ஆஆ
கண்களை மீனென்று சொல்வதா? இல்லை
கடலுக்கு உவமையாய்க் கொள்வதா?

ஒரு முறை பார்த்தாலே போதும்

மாந்தளிரைக் காணும் போது மாந்தளிரைக் காணும் போது
மாந்தளிரைக் காணும் போது மாந்தளிரைக் காணும் போது - உன்
வண்ண மேனி அதில் காணுதே வண்ண மேனி அதில் காணுதே
பூங்குயிலே உன்னை எண்ணும் போதே
பூங்குயிலே உன்னை எண்ணும் போதே ஒரு
புதிய உலகமும் தோணுதே..

ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும்

ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே

நமது நாட்டின் பல பகுதிகளை பண்டைக் காலத்திலிருந்து ஆண்ட மன்னர்கள் அனைவரும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாதிருக்கவும், நிலத்தடி நீர் குறையாமல் இருக்கவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவுமென்றே பல்வேறு இடங்களில் ஏரிகள் வெட்டி மழை நீரைச் சேமித்தனர். அந்தக் காலததில் மக்களின் முக்கியமான தொழில்களாகப் பெரும்பாலும் விவசாயம், நெசவு, வாணிகம், கைவினைப் பொருட்கள் செய்தல், சிற்பம் வடித்தல், ஓவியம் வரைதல் போன்றவையே விளங்கின. தற்காலம் போல அடுக்கு மாடிக் கட்டடங்கள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் முதலியவை மிகவும் குறைந்த அளவிலேயே செயல் படுத்தப்பட்டன.
அவ்வாறு நம் முன்னோர்கள் ஏற்படுத்திய ஏரிகள் ஒன்றன்பின் ஒன்றாக மண்மேடாக்கப் பட்டு வீட்டுமனைகளாக மாறும் போக்கு தற்காலத்தில் பெருகியுள்ளது. இது மிகவும் ஆபத்தானதாகும். இத்தகைய போக்கை மாற்றி மத்திய மாநில அரசுகள் தரிசு நிலங்களில் ஏரிகள் வெட்டி மழை நீரைச் சேகரிக்கும் திட்டத்தைப் பரவலாக அமுல்படுத்த வேண்டும். இல்லாவிடில் இன்னும் சிறிது காலத்தில் நிலத்தடி நீர் குன்றி உயிர் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்.

ஏரிகள் நிறைய வெட்டப்பட்டால் அவற்றின் கரையில் சோலைகளும் பூங்காக்களும் ஏற்படுத்தி சுற்றுலாத் தலங்களாக அமைத்து அதன்மூலம் வருவாய் ஈட்டவும் வழி செய்யலாம். அது மட்டுமா? காதலர்கள் தங்களது வாழ்வை மிகவும் இனிமையாகவும் சுகமாகவும் அமைத்துக் கொள்ளவும் பூங்காற்று வீசும் ஏரிக் கரைகள் உதவும்.

ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே

படம்: முதலாளி
இயற்றியவர்ள: கவிஞர் கா.மு. ஷெரிஃப்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்ததரராஜன்

ஏரிக் கரையின் மேலே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே
ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே

தென்னை மரச் சோலையிலே சிட்டுப் போல போற பெண்ணே
ஏஏஏ..ஏ.. ஏஏஏஏ.. ஏஏ.. ஏஏஏஏஏஏஏ... ஏஏஏ....
தென்னை மரச் சோலையிலே சிட்டுப் போல போற பெண்ணே
சிட்டுப் போல போற பெண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசிப் போவோம் கண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசிப் போவோம் கண்ணே

அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே

மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே
மச்சான் வரும் வேளையிலே
மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே
கோவம் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண்மயிலே
கோவம் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண்மயிலே

அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ

நம் நாட்டின் பாரம்பரியக் கலைகளுள் ஒன்று புலியாட்டம். புலியாட்டக் கலைஞர்கள், பல வண்னங்களால் தம் உடலில் வரிகள் மற்றும் புலியின் இதர அம்சங்களைத் தீட்டிக் கொண்டு ஒரு புலியின் செயல்பாட்டுக்கீடாகத் தம் உடல் அசைவுகளை வெளிப்படுத்தப் பயிற்சி பெற்று இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுகின்றனர். புலியாட்டம் கேரள மாநிலத்தில் வருடந்தோறும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் போது முக்கியப் பங்கு வகிக்கிறது. தமிழகத்திலும் கிராமங்களி்ல் இந்தப் புலியாட்டம் பல பண்டிகைகளின் போது இடம் பெறுகிறது.
இத்தகைய பாரம்பரியமான கலைகளுக்கு அரசாங்கமும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களும் முக்கியத்துவமளித்து இக்கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கௌரவித்து வந்தால் இக்கலைகள் அழியாமல் பாதுகாக்கப்படும்.

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ

படம்: அபூர்வ சகோதரர்கள்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: இசை ஞானி இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
ஆண்டு: 1989

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ

காட்டோரம் மேயும் குரும்பாடு அதப் போட்டாதான் நமக்கு சாப்பாடு அட
காட்டோரம் மேயும் குரும்பாடு அதப் போட்டாதான் நமக்கு சாப்பாடு ஹோய்
சீறினா சீறுவேன் கீறினாக் கீறுவேன்

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ அட
அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ

அட தார தம்பட்டம் தட்டட்டும் கொட்டட்டும் நானாட ஹோ
வேசம் திக்கெட்டும் சொக்கட்டும் நிக்கட்டும் பூவாரம் போடத்தான்
பாரு முன்னாலும் பின்னாலும் என்னாளும் வாலாட ஹோய்
யாரும் வம்புக்கும் தும்புக்கும் எங்கிட்ட வாராம ஓடத்தான் அட
போக்கிரி ஆடுறான் மோதினாத் தூளு தான் நான் பாஞ்சாட
மூக்கு தான் மொகர தான் எகிரித்தான் போகுமே நான் பந்தாட
கில்லாடி ஊரிலே யாரடா கூறடா மல்லாடிப் பாப்போமா வாங்கடா
ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே எந்தத்
தோட்டாவும் என்னைத் தொளைக்காதே

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ போடு
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ

அட பாசம் வச்சாலே வாலாட்டி நிப்பேனே நாய் போல ஹோ
மோசம் செஞ்சாலே சொல்லாமக் கொல்வேனே பேய் போல மாறித்தான்
உள்ளம் இப்போதும் எப்போதும் கொண்டேனே பூவாக ஹோய்
நியாயம் இல்லாத பொல்லரைச் சாய்ப்பேனே புலியாக மாறித்தான்
அட ஒட்டுனா ஒட்டுவேன் வெட்டுனா வெட்டுவேன் என் வீராப்பு
ஒத்தையா நின்னு தான் வித்தையைக் காடுவேன் என் கித்தாப்பு
வில்லாதி வில்லானும் அஞ்சணும் கெஞ்சணும் வந்திங்கு வந்தனம் சொல்லணும்
ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே எந்தத் தோட்டாவும் என்னைத் தொளைக்காதே

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ

காட்டோரம் மேயும் குரும்பாடு அதப் போட்டாதான் நமக்கு சாப்பாடு
காட்டோரம் மேயும் குரும்பாடு அதப் போட்டாதான் நமக்கு சாப்பாடு
சீறினா சீறுவேன் கீறினாக் கீறுவேன்

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கை தான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
அண்ணாத்தே (ஹொய்) ஆடுறார் (ஹொய்) ஒத்திக்கோ (ஹொய்) ஒத்திக்கோ (ஹொய்)
தென்னாட்டு (ஹொய் ஹொய்) வேங்கை தான் (ஹொய் ஹொய்) ஒத்துக்கோ ஒத்துக்கோ

ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே

Charity begins at home என்ற ஆங்கிலப் பழமொழியும்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

எனும் திருக்குறளும் உணர்த்தும் பொருள் ஒன்றே. ஒவ்வொருவரும் தமது குடும்பத்தை அன்புடனும் அறநெறி வழுவாமலும் நடத்திச் சென்றால் பண்புடனும் பயனுடனும் அவரது வாழ்க்கை அமையும். இவ்வாறு ஒவ்வொரு குடும்பத் தலைவனும், அக்குடும்பத்தின் பிற உறுப்பினர்களும் பொறுப்புடன் செயல்பட்டால் அந்நாடும் சிறந்து விளங்குவது உறுதி.

தொன்றுதொட்டு நமது நாட்டில் நடைமுறையில் இருந்து வரும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் உடன் பிறந்த சகோதரர்கள் அவர்களுக்குத் திருமணம் முடிந்து பிள்ளைகள் பிறந்து வளர்ந்த காலத்திலும் ஒன்றாக இருந்து அனைவரது குடும்பங்களும் ஓரே குடும்பமாக வாழும் வாழ்க்கை முறையைக் கண்டு பிற நாட்டவர் அனைவரும் மிகவும் வியந்து பாராட்டுகின்றனர்.

இத்தகைய சிறந்த பாரம்பரியத்தை மதியாது சிலர் சுயநல மிகுதியால் தனிக்குடுத்தனம் எனும் பெயரால் சொந்த பந்தங்களைப் பிரிந்து அவதிப்படுவதுடன் செலவினங்களையும் அதிகப் படுத்துக் கொண்டு துன்புறுகின்றனர். இவ்வாறு குடு்ம்பத்திலிருந்து பிரிந்து செல்லும் போக்கு மாறிப் பெரும்பாலான குடும்பங்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை அனுசரித்து நடக்கும் பாதைக்குத் திரும்புவார்களேயானால் வீட்டுக்கும் நாட்டுக்கும் நலம் விளையும்.

ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே

படம்: பாமா விஜயம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: பி.சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
ஆண்டு: 1967

ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும் நேரமில்லையடியோ
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும் நேரமில்லையடியோ அடியோ
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே

எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஏறிட்டு நானதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நானள்ளிச் சூடவில்லை
எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஏறிட்டு நானதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நானள்ளிச் சூடவில்லை
அந்தக் கன்னத்தில் என்னடி முத்து்ம் வண்ணம் இந்தக்
கள்ளத் தனத்தினில் வந்ததடி
வாங்கிக் கொடுத்ததும் தாங்கிப் பிடித்ததும்
முத்துக்கள் போல் வந்து மின்னுதடி
ஒரு முத்து இரு முத்து மும்முத்து நால் முத்து அம்மம்மா
பெண்ணுக்கு எத்தனை முத்தமடி

ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

மாமன் மக்கள் தேடிய செல்வங்கள் யாருக்கடி?
ஆடிடும் பிள்ளைகள் பேருக்கடி
மிஞ்சிய செல்வங்கள் ஊருக்கடி கையில்
உள்ளதைக் கொண்டிங்கு வாழ்வதிலே
இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி
வீட்டு நலத்துக்கும் நாட்டு நலத்துக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி
வீட்டுக்கு பிள்ளைக்கு ஊருக்கு நாட்டுக்கு
பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே

"கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்" என்று சொன்னார்கள் நமது முன்னோர்கள். இதன் பொருளை விளக்கிக் கூறவில்லை யாரும். "ஆயுட்காலப் பயிர்" என்று சொல்வது பொருத்தமானதென நான் கருதுகிறேன், காரணம் மனிதர்க்கு வாழ்க்கை திருமணத்தின் மூலமே அமைகிறது. திருமணம் செய்யாதவர் வாழ்க்கை வெறுமையாகவே காணப்படுகிறது. எனினும் திருமணம் செய்வதென்பது காலப்போக்கில் பொருளாதார ரீதியில் மிகவும் கடினமான விஷயமாகி வருகிறது, காரணம் விலைவாசி ஏற்றம். உணவுப் பொருட்கள் நாளுக்கு நாள் விலை உயர்ந்து சாமான்ய மக்கள் அவற்றை வெளிச் சந்தையில் எல்லோரையும் போல் விலை கொடுத்து வாங்க இயலாத சூழ்நிலை ஏற்கெனவே உருவானதாலேயே ரேஷன் கடைகளை நம்பி வாழ்க்கை நடத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது.
தமது குடும்பத்திலுள்ளோர் உண்பதற்கே மலிவு விலைக் கடைகளை நம்பியிருக்கும் நிலையில் உறவினர்களை எல்லாம் அழைதது அவர்களுக்கு விருந்து படைப்பதென்பது சாமான்ய மக்களுக்குப் பெரும் செலவை ஏற்படுத்துகிறது. ஒருவர் தன் ஆயுட்காலம் முழுதும் உழைத்துச் சேர்த்த பொருள் அனைத்தையும் செலவழித்தாலும் தன் ஒரு மகளுக்குக் கூட உரிய முறையில் திருமணம் செய்வதென்பது அரிதாகிவிட்டது.

இந்நிலை நீடித்தால் மாப்பிள்ளை, பெண் மற்றும் அவர்களின் பெற்றோரும் அவர்களது திருமணத்திற்குச் செல்லப் பேருந்துக் கட்டணத்துக்கும் வழியின்றி மாட்டு வண்டிகளில் செல்வது ஒன்றே வழி எனும் நிலை நேர்ந்தாலும் நேரலாம்.

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே

படம்: காவேரியின் கணவன்
இயற்றியவர்:
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி, எல்.ஆர். ஈஸ்வரி
ஆண்டு: 1959

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே

புள்ளையப் பெத்த அம்மா வந்தா மொட்ட வண்டியிலே
புள்ளையப் பெத்த அம்மா வந்தா மொட்ட வண்டியிலே
பொண்ணைப் பெத்த அப்பா வந்தான் ஓட்ட வண்டியிலே
பொண்ணைப் பெத்த அப்பா வந்தான் ஓட்ட வண்டியிலே

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே

காக்காக் கடி கடிச்சுக் கொடுத்த கம்மருகட்டு முட்டாயி
சோக்கா வாங்கித் தின்னுப்புட்டு விட்டானையா கொட்டாவி
காக்காக் கடி கடிச்சுக் கொடுத்த கம்மருகட்டு முட்டாயி
சோக்கா வாங்கித் தின்னுப்புட்டு விட்டானையா கொட்டாவி
ஓட்டாஞ்சல்லிய எடுத்துக் கிட்டு ஓடுனாங்க மாருக்கட்டு
ஓட்டாஞ்சல்லிய எடுத்துக் கிட்டு ஓடுனாங்க மாருக்கட்டு
ஓராழாக்கு அரிசி வாங்கி ஒலையில தான் போட்டுக்கிட்டு

கூட்டாஞ்சோறு ஆக்கிககிட்டு கும்மாளந்தான் போட்டுக்கிட்டு
கூட்டாஞ்சோறு ஆக்கிககிட்டு கும்மாளந்தான் போட்டுக்கிட்டு
கொழவிக் கல்லு புள்ளய ஒண்ணு குஷியாகப் பெத்துகிட்டு
கொழவிக் கல்லு புள்ளய ஒண்ணு குஷியாகப் பெத்துகிட்டு

ஆராரோ நீ ஆரோ அருமையான கொழந்தை யாரோ?
ஆராரோ நீ ஆரோ அருமையான கொழந்தை யாரோ?

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

திருமணமாகும் வரை ஒரு பெண் தன் பெற்றோரின் கட்டுப்பாட்டில் வளர்வதால், தன் மனம் விரும்பும் இடங்களுக்குச் செல்வது, நண்பர்களுடன் கலந்து பழகுவது போன்ற செயல்களுக்கான முழு சுதந்திரம் அவளுக்குக் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் நமது நாட்டின் சமுதாய அமைப்பு பெண்ணைப் போற்றிப் பாதுகாக்கும் விதமாக அமைந்ததுவே ஆகும். அப்பெண் திருமணமாகித் தன் கணவனுடன் குடும்பம் நடத்துகையில் தன் பெற்றோர்களுடன் வாழ்ந்த காலத்தை விடவும் அதிக சுதந்திரத்தை எதிர்பார்ப்பதும், கணவன் காலையில் பணிக்குச் சென்றால் மாலையில் சற்று நேரம் முன்னதாகவே வீட்டுக்குத் திரும்பி வர வேண்டும், அவனுடன் வெளி உலகைச் சுற்றிப் பார்க்கப் பல இடங்களுக்குச் செல்ல வேண்டும் என விரும்புவதும் இயல்பு.
இத்தகைய எதிர்பார்ப்புகளை ஓரளவேனும் பூர்த்தி செய்வது அவளது கணவனின் கடமையாகும். மாலை கணவன் நேரத்தோடு வீடு திரும்புவான், அவனுடன் அளவளாவி மகிழலாம், இல்லற சுகம் காணலாம் என எதிர்பார்த்து வீட்டு வாசலில் மாலை நேரங்களில் வந்து காத்திருப்பது நமது நாட்டில் மணமான பெண்கள் மேற்கொள்ளும் வழக்கமாக உள்ளது. வாழ்க்கையே ஓர் எதிர்பார்ப்பல்லவா?

அவ்வாறு வாசலில் வெகுநேரம் நின்று பார்த்துத் தன் கணவன் திரும்பிவரக் காணாது துயருற்ற ஒரு பெண் தன் மன ஆதங்கத்தை ஒரு சிட்டுக்குருவியிடம் வெளியிடுகிறாள்.

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

படம்: டவுன் பஸ்
இயற்றியவர்: கா.மு. ஷெரிஃப்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி
ஆண்டு: 1955

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே

பட்டு மெத்த விரிச்சு வச்சேன் சுமமாக் கிடக்குது - பசும்
பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கிடக்குது
பட்டு மெத்த விரிச்சு வச்சேன் சுமமாக் கிடக்குது - பசும்
பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கிடக்குது

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

தலைய வாரிப் பூ முடிச்சேன் வாடி வதங்குது
தலைய வாரிப் பூ முடிச்சேன் வாடி வதங்குது - சதா
தெருவில் வந்து நின்று நின்று காலும் கடுக்குது - சதா
தெருவில் வந்து நின்று நின்று காலும் கடுக்குது
வாழிய வழியப் பாத்துப் பாத்துக் கண்ணும் நோகுது
வாழிய வழியப் பாத்துப் பாத்துக் கண்ணும் நோகுது - அவர்
வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது - அவர்
வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

மனிதன் தன் ஆசைகளைத் தன் தகுதிக்கு ஏற்ற விதத்தில் கட்டுப்படுத்திக் கொள்வது மகிழ்ச்சியாக வாழ்வதற்கு மிகவும் அவசியமாகும். தகுதிக்கு மீறி ஆசைப்படுபவன் தன்மானமிழந்து பெரும் துன்பத்துக்கு ஆளாக நேரிடும். குறிப்பாக ஒரு ஏழை செல்வச்சீமாட்டியான ஒரு பெண்ணை விரும்புவானாகில் அவன் வாழ்வில் பெரும் எதிர்ப்புககளை சந்திப்பது உறுதி. இத்தகைய ஆசை அவன் வாழ்வை நிலைகுலையச் செய்து அவன் செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்ய இயலாத சூழ்நிலை உருவாகி, அவன் வாழ்வின் அடிப்படையே ஆட்டம் காணக் கூடும்.
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுதல் தகாது.

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1965

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு
வாடுவதே என் பாடு இதில்
நான் அந்த மான் நெஞ்சில் நாடுவதெங்கே கூறு

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம்
காதலை யார் மனம் தேடும் இதில்
நான் அந்த மான் நெஞ்சில் நாடுவதெங்கே கூறு

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்

படித்த இளைஞர்கள் பொருளீட்டுவதற்கெனப் பன்னாட்டு நிறுவனங்களிலும் அயல்நாடுகளிலுமே பெரும்பாலும் வேலை வாய்ப்பைத் தேடுகின்றனர். சுயதொழில் செய்து பிழைக்கலாம், வாழ்க்கையில் முன்னுக்கு வரலாம் என நம்பிக் கடனை வாங்கி, அவ்வாறு கடன் வாங்கிய தொகையை மூலதனமாகக் கொண்டு தொழில் ஆரம்பிக்கும் பலர் அவ்வாறு சுயதொழில் ஆரம்பித்த பின்னர் சந்திக்கும் முதல் பிரச்சினை பணியாளர்களைத் தேடி நியமிப்பதாகும். பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தினால் சாதாரணத் தொழிலாளிக்கும் கை நிறையச் சம்பளக் கிடைக்கும் நிலைமை நிலவுவதால் சுயதொழில் செய்வோரிடம் குறைந்த ஊதியத்துக்கு வேலைக்கு வர யாரும் விரும்புவதில்லை.
அது மட்டுமின்றி சாதாரணமாக வீட்டு வேலை செய்வதற்கும் ஆள் கிடைக்காமல் பலர் அல்லலுறுகின்றனர். அவ்வாறு வேலைக்கு ஆள் கிடைத்தாலும் அவர்களால் பல தொல்லைகள் விளைவதுண்டு. வேலை செய்யும் வீட்டில் உள்ளோர் தங்களது உறவினரிடத்தும் நண்பர்கள் மற்றும் அண்டை அயலாரிடத்தும் கொண்ட கருத்து வேறுபாடுகளைப் பேச்சு வாக்கில் அறியும் பணியாளர் அதனை ஊரெங்கும் பரப்பி வம்பில் மாட்டி விடுவதும் உண்டு.

இந்நிலைமையை ஆராய்கையில் மஹாகவி பாரதியாரின் கவிதை நினைவுக்கு வருகிறது.

''கூலி மிகக் கேட்பார், கொடுத்ததெலாந் தான் மறப்பார்
வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்.
ஏனடா நீ நேற்றைக்(கு) இங்கு வரவில்லை யென்றால்,
பானையிலே தேளிருந்து பல்லாற் கடித்ததென்பார்.
வீட்டிலே பெண்டாட்டி மேற் பூதம் வந்ததென்பார்.
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்.
ஓயாமற் பொய்யுரைப்பார், ஒன்றுரைக்கவொன்று செய்வார்.
தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார்.
உள் வீட்டுச் சேதியெலாம் ஊரம்பலத்(து) உரைப்பார்.
எள் வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்.
சேவகராற் பட்ட சிரம மிகவுண்டு கண்டீர்.
சேவகரில்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை!
இங்கிதனால் நானும் இடர் மிகுந்து வாடுகையில்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்...''

என்று தொடங்கி, பிற பணியாளர்களிடம் காணப்படும் இத்தகைய குறைபாடுகளற்ற சேவகனாய் கண்ணன் தனக்கு அமைந்து தன்னையும் தன் குடும்பத்தையும் போற்றிப் பாதுகாத்ததாக மானசீகமாகக் கண்ணனைத் தன் சேவகனாகக் கொண்டு பாடிய பாடலின் முக்கியப் பகுதியை. படிக்காத மேதை திரைப்ப்டத்தில் ரங்கன் எனும் பெயருடன் தன் தாய்மாமனுக்கு சேவகனாய் அமைந்த சிவாஜி கணேசனைப் பற்றி அவரது தாய்மாமனான ரங்காராவ் எண்ணுவதாக அமைக்கப்பட்ட ஒரு அழகான காட்சியில் மிகவும் பொருத்தமான விதத்தில் படைத்துள்ளனர்.

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்

படம்: படிக்காத மேதை
இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
இசை: திரையிசைத் திலகம் கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1960

எங்கிருந்தோ வந்தான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்

சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்ன குழந்தைக்கு சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - கண்ணன்
எங்கிருந்தோ வந்தான்

பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் - ரங்கன்

எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் - ரங்கன்
எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன்
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா

நெஞ்சினிலே நினைவு முகம்

ஒருவர் மேல் ஒருவர் புனிதமான அன்பு கொண்டு இருவர் மனமும் ஒன்றிணைந்த காதலர்கள் ஒருவரையொருவர் சந்திக்கையி்ல் பேரின்பம் அடைவது போலவே ஒருவரையொருவர் பிரிந்தால் துன்பப் படுவதும் இயல்பு. அவ்வாறு தன்னை விட்டுப் பிரிந்த காதலியின் முகம் காதலனுக்கும் காதலனின் முகம் காதலி்க்கும் அவர்கள் காணும் பொருடகள் யாவிலும் காட்சி கொடுக்குமெனக் கவிஞர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமல்ல அப்பிரிவுத் துயரம் அவர்களது உயிரையும் வாட்டுமாம்.

நெஞ்சினிலே நினைவு முகம்

திரைப்படம்: சித்ராங்கி
இயற்றியவர்: கு.மா. பாலசுப்பிரமணியம்
இசை: வேதா
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1964

நெஞ்சினிலே
நெஞ்சினிலே நினைவு முகம் நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்

ஆருயிர் என்றுஅழைத்தவளே புது ஆசையை நெஞ்சில் விதைத்தவளே
ஆருயிர் என்றுஅழைத்தவளே புது ஆசையை நெஞ்சில் விதைத்தவளே நான்
ஓருயிர் நின்று தவிக்கையிலே நீ ஓடி மறைந்தது நீதியில்லை

நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்

வானத்தின் தாரகைப் பூவெடுத்தேன் என்றும்
வாடாத மாலையாய் நான் தொடுத்தேன்
வானத்தின் தாரகைப் பூவெடுத்தேன் என்றும்
வாடாத மாலையாய் நான் தொடுத்தேன் அதில்
தேன் இல்லையே என்று சொல்லிவிட்டார்
தீண்டாமலலே மண்ணில் தள்ளி விட்டார் தள்ளி விட்டார்

நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்

ஆயிரம் கோட்டைகள் கட்டி வைத்தேன் என்
அன்பையே தீபமாய் ஏற்றி வைத்தேன் ஆஆஆ
ஆயிரம் கோட்டைகள் கட்டி வைத்தேன் என்
அன்பையே தீபமாய் ஏற்றி வைத்தேன் அந்த
கோயிலிலே என்தன் தெய்வமில்லை நான்
கோரிய வரமும் கிடைக்கவில்லை

நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்

காற்றினிலே வரும் கீதம்

எத்தனையோ விதவிதமான இசைக் கருவிகள் இருந்தாலும் அவையனைத்திலும் மிகவும் சிறப்பானது புல்லாங்குழல். புல்லாங்குழலின் இசை மனிதர்கள் மட்டுமன்றிப் பிற உயிரினங்களையும் தன்னை மறந்து ரசிக்க வைக்கத்தக்கது. அதனாலேயே ஆநிரை மேய்க்கும் ஆயர்பாடிக் கண்ணன் புல்லாங்குழலைத் தன் வாத்தியமாகப் பாவித்தானோ?
கண்ணன் குழலூதினால் அவ்விசையில் மயங்காதவர் உலகில் உண்டோ? மனிதர்கள் மட்டுமின்றி சுனை வண்டுடம் சோலைக் குயிலும் மனம் குவிய, வானில் உலாவரும் நட்சத்திரங்களும் தயங்கி நின்றிடுமன்றோ அவன் குழலிசை கேட்டு?

காற்றினிலே வரும் கீதம்

படம்: மீரா
இயற்றியவர்: கல்கி கிருஷ்ணமூர்த்தி
இசை: எஸ். வி. வெங்கட்ராமன், கே. வி. நாயுடு
பாடியவர்: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி
ஆண்டு: 1945

காற்றினிலே... வரும் கீதம் காற்றினிலே
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம் பண்ணொளி பொங்கும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

சுனை வண்டுடன் சோலைக் குயிலும் மனம் குவிந்திடவும்
வானவெளிதனில் தாரா கணங்கள் தயங்கி நின்றிடவும்
ஆ என் சொல்வேன் மாயப்பிள்ளை வேய்ங்குழல் பொழி கீதம்
காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில்
நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம் காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம் காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

மஹாபாரதக் கதையில் பஞ்ச பாண்டவர்களான தருமன், பீமன், அருச்சுனன், நகுலன், சஹாதேவன் எனும் ஐந்து சகோதர்களும் அவர்களது பெரியப்பாவின் மகனான துர்யோதனின் கூட்டாளியான சகுனியுடன் சூதாடியதன் விளைவாக 12 வருடங்கள் வனவாசம் செய்ய நேரிட்டது. அவ்வனவாசம் முடியும் தருவாயில் பாண்டவர்கள் தங்கியிருந்த குடிலி்ன் அருகாமையில் வசித்து வந்த ஒரு அந்தணனுடைய அரணிக்கட்டையின் மேல் மான் ஒன்று உடலை உராய்ந்து விட்டுத் திரும்பிச் செல்கையில் அவ்வரணிக்கட்டை அதன் கொம்புகளில் சிக்கிக்கொண்டதால் மான் மிரண்டு ஓடியது. அரணிக் கட்டை என்பது நெருப்பை உண்டாக்குவதற்கு உதவும் கடைக்கோலும் கீழ்க்கட்டையும் கொண்டதொரு இயந்திரம்.
அவ்வந்தணன் தனது அரணிக்கட்டையை மீட்டுத் தருமாறு பாண்டவர்களிடம் முறையிட, அவர்கள் மானைத் துரத்திக் கொண்டே வனத்துக்குள் நீண்ட தூரம் சென்றபோதிலும் மான் அகப்படவில்லை. ஓடிய களைப்பு நீங்க ஒரு மரத்தின் அடியில் சற்றே இளைப்பாறுகையில் அவர்களுக்கு மிகவும் தாகம் எடுக்கவே தருமன் சொற்படி அருகில் இருக்கும் பொய்கையில் நீர் எடுத்து வர ஒவ்வொருவராகச் சென்ற தம்பியர் யாரும் திரும்பாமையால் தருமபுத்திரன் தானே பொய்கையை அடைந்தான். அங்கே அவனது தம்பிமார் ஐவரும் மயங்கி வீழ்ந்து கிடப்பதைக் கண்டு துணுக்குற்றாலும் தாக மிகுதியால் பொய்கையில் கை வைத்ததும் அசரீரி ஒலித்த்து, "யுதிஷ்டிரனே, நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தந்த பிறகே நீ நீரருந்தலாம் மீறினால் உன் தம்பியர் போல நீயும் மடிவாய்" என.

தருமனும் அசரீரியின் கேள்விகளுக்கு பதில் தந்தான். அவற்றுள் ஒரு கேள்வி, "உலகில் அதிசயமானது எது?" என்பதாகும். தருமன் தந்த பதிலாவது, "தினமும் தமது கண் முன்பாகவே தம்மைச் சார்ந்தவரும் பிறரும் ஒருவர் பின் ஒருவராக யமன் வாயிலுக்குச் செல்வது கண்ட பிறகும் மனிதர்கள் தாம் மட்டும் நிரந்தரமாக இவ்வுலகில் வாழ்வோம் என நினைக்கிறார்களே, அதுவே உலகில் அதிசயமானது" என்பதாகும்.

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

திரைப்படம்: அவன் தான் மனிதன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1975

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

ஒருவரது உடலைக் கொன்றால் அத்துடன் அவரது வாழ்வு முடிந்து விடும். இன்பம் துன்பம் இரண்டிலிருந்தும் அவருக்கு விடுதலை கிடைக்கும், ஆனால் ஒருவரது உணர்சசிகளைக் கொன்றால் அவர் உயிருடன் இருக்கும் காலம் வரையிலும் மரண வேதனைக்கொப்பான துன்பத்தைத் தொடர்ந்து அனுபவித்து வாழ்வே நரகமாகி விடும்.
இதற்கு உதாரணம் அறியாச் சிறு வயதில் ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்து அவள் பருவமடையு முன்னரே அவளது கணவன் இறந்துவிட்டாலோ அல்லது காணாமற் போய்விட்டாலோ அப்பெண்ணை அவளது மரணம் வரையிலும் ஒரு கைம்பெண்ணாக வைத்து அவளுக்கு வெள்ளைச் சீலையைக் கட்டிவிட்டு அல்லது தலையை மொட்டையடித்துக் காவிப்புடவையைக் கட்டவைத்து உயிருடன் கொல்லும் கொடுமையான வழக்கம் ஆகும். இவ்வழக்கம் நமது நாட்டில் நமது முந்தைய தலைமுறை வரையிலும் நடைமுறையில் இருந்தது.

இதில் ஒரு மிகப்பெரிய அநியாயம் என்னவெனில் அவ்வாறு மணமான தம்பதியினருள் பெண் மடிந்தால் அந்த ஆண் வேறொரு பெண்ணைத் தடையின்றி மணக்கலாகும் எனும் ஒருதலைப்பட்சமான பெண்ணடிமைத் தனத்தை வளர்க்கும் கேடுகெட்ட வழக்கம் ஆகும். பெண்ணடிமை ஒழிந்து ஆணுக்கு நிகரான உரிமையைப் பெண்ணுக்கும் வழங்குவதன் அவசியத்தை மஹாகவி பாரதியார், பாவேந்தர் பாரதி தாசன், தந்தை பெரியார் முதலிய பெரியோர்கள் வலியுறுத்தியதன் விளைவாக இப்பெண்ணடிமை நிலை காலப்போக்கில் மாறி வருகிறது.


மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி


மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி?
காண்பது ஏன் தோழி? ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி - அவர்
மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி

கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி?
இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்
மயங்குது எதிர்காலம் ஆஆ ஆஆஆ

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி? ஆஆ ஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி