ஞாயிறு, 9 மே, 2010

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்

பொதுவில் ஒரு மதத்தைச் சார்ந்தவர் அம்மதத்தினருள் சிறந்து விளங்கும் ஞானியரைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அதிசயங்களப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசுதல் வழக்கம். ஒரு ஞானியாகவோ மஹானாகவோ ஒருவர் திகழ வேண்டுமெனில் அவர் குறிப்பிடத்தக்க அற்புதங்களை நிகழ்த்தியிருக்க வேண்டுமென்னும் கருத்து உலகெங்கிலுமுள்ள மாந்தரிடையே நிலவி வருகிறது. அதிசயமெனவும் அற்புதமெனவும் இவர்கள் கருதுவது பெரும்பாலும் இயற்கைக்கு மாறாக இயற்கை நியதியை மீறிச் செயல்படும் திறமையையே. நம் கண் முன்னே பரந்து விரிந்த இந்த உலகெங்கிலும் காணுமிடம் யாவும் நிரம்பிக் கிடக்கும் எண்ணற்ற அதிசயங்களை நாம் கண்டாலும் இவற்றை அதிசயங்கள் என ஒப்புக்கொள்ள நம் மனம் முன்வருவதில்லை. இதன் காரணம் அறியாமையயே ஆகும்.

நீ கண்ட அதிசயங்கள் யாவை என்று எவரேனும் என்னைக் கேட்டால் நான் கூறுவதாவது, தினம் தோறும் இணய வாழியே முன் பின் அறிமுகமில்லாத எண்ணற்ற அன்பர்கள் என்னிடம் மிகுந்த அன்பு கொண்டு நான் எழுதும் பிதற்றல்களையும் படித்து, அவைகுறித்த தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, எனது சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் நிலையே என்பேன்.

உலகின் எங்கோ ஒரு மூலையில் சக மனிதர் ஒருவர் துன்புறுவதை அறிகையில் நாமெல்லோரும் ஒருமித்த மனதோடு அவர் துன்பம் நீங்கி இன்புற வேண்டுமென மனமுருகப் பிரார்த்தனை செய்கின்றோம். நம்மில் அனேகர் அவ்வாறு துன்பப் படுவோர் துயர் துடைக்கத் தேவையான பொருளாதார உதவிகளையும் திரட்டித் தருகின்றனர். நாட்டு நிலை குறித்தும் இந்த உலகை எதிர்நோக்கியுள்ள அபாயங்கள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டு உலகம் உய்யப் பாடுபடும் பாதையிலும் நாம் பயணம் மேற்கொண்டுள்ளோம். இவையாவும் குறிப்பிடத் தக்க அதிசயங்கேளேயன்றோ?

இது இவ்வாறிருக்க இளம் காதல் ஜோடி ஒன்று அதிசயம் பற்றி என்ன கூறுகிறது எனக் கேட்போமா?

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்

திரைப்படம்: ஜீன்ஸ்
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: ஏ.ஆர். ரெஹ்மான்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சுஜாதா மோஹன்
ஆண்டு: 1998

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்று நல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ என்தன் அதிசயம்
கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஓஓ
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம் ஓஓ

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்று நல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ என்தன் அதிசயம்

ராரார ராரார ராரார ராரார ராரார ராரார ரா ஓஓ
ராரார ராரார ராரார ராரார ராரார ராரார ரா ஓஓ

ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் ஒரு
வாசமுள்ள பூவைப் பார் பூவாசம் அதிசயமே
அலை கடல் தந்த மேகத்தில் சிறு
துளி கூட உப்பில்லை
மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம் போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே

கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஓஓ
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம் ஓஓ

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்று நல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ என்தன் அதிசயம்

அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா

பெண்பாற் கொண்ட சிறு விரல்கள்
இரு கால் கொண்டு நடமாடும்
நீ தானென் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள் ஒரு
வாய் பேசும் பூவே நீ எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெரிக்கும் கன்னங்கள்
வாய் துடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கை கொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற க்ரீடம் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே

கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஓஓ
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்று நல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ என்தன் அதிசயம்

ராரார ராரார ராரார ராரார ராரார ராரார ரா ஓஓ
ராரார ராரார ராரார ராரார ராரார ராரார ரா ஓஓ

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான்

இவ்வுலகில் நிலையாமை ஒன்றே நிலையானதென்னும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும் உண்மையை உணராமல் மனிதர்களாகிய நாம் என்றென்றும் பணம் சம்பாதிப்பதிலும், நம் உடலுக்கும், உடலின் உணர்வையே பெரும்பாலும் கொண்டு விளங்கும் மனதுக்கும் இன்பம் தரும் பொருட்களையும் வசதிகளையும் அடைவதிலும் நம் காலத்தைக் கழிக்கிறோம். இத்தகைய செயல்பாட்டினால் முன்னோர் அறிவுறுத்திய நல்ல கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டுப் பாப காரியங்களையும் செய்யத் துணிகிறோம். பலருடன் கருத்து வேறுபாடுகளை வளர்த்து நல்லுறவை இழக்கிறோம். இதன் விளைவாக மனம் கெட்டு அதனால் உடல் தளர்ந்து தீராத நோய்களுக்காளாகி, பல விதத்தில் ஈட்டிய பணமும் வசதிகளும் தரவல்ல சுகங்களை அனுபவிக்க இயலாத நிலையையும் அடைகிறோம். இன்பம் தரும் என எண்ணி ஈட்டிய பொருள் பயனற்றதாகிவிட்ட நிலையிலும் எவ்வாறாகிலும் நம்மை வாட்டுகின்ற நோய்களிலிருந்து குணமடைந்து நாம் விரும்பிய சுகங்களை அடைய வேண்டும் எனும் எண்ணத்திலேயே மீதமுள்ள வாழ்நாளையும் இது நாள் வரையில் ஈட்டிய பொருளையும் வீணாக்கி என்றோ ஒரு நாள் எவ்விதப் பயனுமின்றி வருந்தி மடிகிறோம்.

உலக வாழ்வு நிலையற்றதெனும் உண்மையை உணர்ந்த ஞானிகள் இத்தகைய துன்மார்க்கத்தினின்றும் விலகி, பொருளின் மேல் பற்றை நீக்கி உலக நன்மைக்காகப் பாடுபடுவதையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்கின்றனர். இத்தகைய ஞானிகள் தாங்கள் என்றும் நிலையான ஆத்மார்த்தமான இன்பத்தைப் பெறுவதுடன் தன்னை நாடி வருவோர்க்கும் தாம் பெற்ற இன்பத்தைப் பெற வழி காட்டுகின்றனர். இதனிடைய பலர் காவியுடையும் தெய்வீக சின்னங்களையும் தரித்து, எப்பொழுதும் ஞான மார்க்கம் தொடர்பானவற்றையே பிறருக்கு உபதேசம் செய்து, முற்றும் துறந்த முனிவர்களைப் போல் வேஷமிட்டு ஊரையும் உலகத்தையும் ஏமாற்றும் பல ஆஷாடபூதிகளையும் நாம் அவ்வப்போது அறிகிறோம். அத்தகைய வேடதாரிகளளைப் பற்றிய அறிவு நமக்கு உண்டாவதற்கு முன்னரே நம்மையும் அறியாமல் நம்மில் பலர் இத்தகைய வேடதாரிகளை மெய் ஞானிகள் என்று நம்பி ஏமாறுவதும் உண்டு.

ஞான மார்க்கத்துக்கான வழியைத் திருவள்ளுவர் முதலான ஞானியர் தெளிவாக வகுத்துத் தந்துள்ள நிலையில் நாம் வேறு யாரையும் இதற்காக நாட வேண்டுவதில்லை.

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான்

இரவும் பகலும்
இயற்றியவர்: ஆலங்குடி சோமு
இசை: டி.ஆர். பாப்பா
பாடியவர்: எஸ்.ஏ. அசோகன்

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்
எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி
பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி
பிறந்து வந்த நாள் முதலாய்ப் பேராசையுடன் உறவாடி
இறந்தவனே - அப்படி

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

தாயாரின் வேதனையில் பிறக்குறான் - மனுஷன்
தன்னாலே துடிதுடிச்சு எறக்குறான்
தாயாரின் வேதனையில் பிறக்குறான் - மனுஷன்
தன்னாலே துடிதுடிச்சு எறக்குறான் - இடையில்
ஓயாத கவலையிலே மிதக்கிறான் - இடையில்
ஓயாத கவலையிலே மிதக்கிறான் - ஒரு நாள்
உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான் - ஒரு நாள்
உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான் - அப்படி

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

இளமையிலே சில நாள் முதுமையிலே சில நாள்
இளமையிலே சில நாள் முதுமையிலே சில நாள்
இன்பத்திலே சில நாள் துன்பத்திலே சில நாள்
அன்னையும் மனைவியும் அருமைப் பிள்ளையும்
அன்னையும் மனைவியும் அருமைப் பிள்ளையும்
கண்ணீர் சிந்திடவே கடைசி வழி ஒரு நாள்
கடைசி வழி ஒரு நாள் அப்படி

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்