வெள்ளி, 16 ஏப்ரல், 2010

ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்

இந்தியா ஒரு விவசாய நாடு. நம் நாட்டில் விவசாயம் பல்கிப் பெருகப் பெருந்துணை புரிவன நம் நாட்டில் ஓடும் வற்றா ஜீவ நதிகள் ஆகும். விவசாயத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தின் காரணமாக,

"இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணறும் பெரு நாடு
கனியும் கிழ்ங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் நாடு"

எனும் பாரதியின் கூற்றை மெய்ப்பித்துள்ளனர் நம் நாட்டு விவசாயிகள்.

காவிரி தென்பெண்ணை பாலாறு பொருள்
கண்டதோர் வையை பொருனை நதி என
மேவிய ஆறு பல ஓடத் திரு
மேனி செழித்த தமிழ்நாடு

என்று மஹாகவியால் பாடப்பெற்ற தமிழ் நாடும் இந்தியாவில் விவசாயத்தில் சிறந்து விளங்கும் முக்கியப் பகுதியாகும். இவ்வாறிருக்க சில காலமாக விவசாய நிலங்கள் முறைகேடான விதத்தில் ஆக்கிரமிக்கப் பட்டு சட்ட விரோதமாகப் பல கட்டுமானப் பணிகளுக்கும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கும் என மாற்றப்பட்டு வருவது மிகவும் வருந்தத் தக்கது. இதனால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உண்டாவதுடன் நிலத்தடி நீர் குறைந்து தண்ணீர்ப் பஞ்சமும் தலை விரித்தாடும் அபாயமும் உருவாகி வருகிறது.

மேலும் ஆற்று நீர் குறித்த காலத்தில் விவசய நிலங்களுக்குக் கிடைக்காமை, வெள்ளம் முதலிய இயற்கைச் சீற்றங்கள், வியாபாரிகளின் சந்தை ஆக்கிரமிப்பு மற்றும் அரசியல் சூழ்நிலை உட்பட்ட பல காரணங்களால் விவசாயிகள் பலர் தமது கைப்பொருளெல்லாம் இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலையும் நமது நாட்டில் சமீப காலத்தில் உருவானது மிகவும் வேதனை தருகிறது.

இத்தகைய விபரீதங்கள் மேலும் தொடராமல் தடுக்கப் பாடுபடுவது இந்திய மக்கள் ஒவ்வொருவரது கடமையாகும். முறைகேடுகள் நிகழாவண்ணம் தடுக்க ஏற்ற வழிமுறைகளைக் கண்டு செயல்படுத்துதல் அவசியம். இல்லையெனில் இந்த உலகில் மனித இனம் வாழ முடியாத நிலை விரைவில் உருவாகக் கூடும்.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/pazhani/aarodum-mannil.php

திரைப்படம்: பழனி

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி. ஸ்ரீநிவாஸ்
ஆண்டு: 1965

ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

மண்ணிலே தங்கம் உண்டு மணியும் வைரம் உண்டு
கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் உண்டு பாசம் உண்டு பசுமை உண்டு
பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு
சேராத செல்வம் இன்று சேராதோ?
தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ?

ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா
பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா
பருவம் வந்த பெண்ணைப் போலே நாணம் என்ன சொல்லம்மா
நாணம் என்ன சொல்லம்மா
அண்ணன் தம்பி நால்வருண்டு என்ன வேணும் கேளம்மா
அறுவடைக் காலம் உன்தன் திருமண நாளம்மா
திருமண நாளம்மா

போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

கைகட்டிச் சேவை செய்து கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய் சொல்லிப் பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள்
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
ஏர் கொண்ட உழவன் இன்றிப் போர் செய்யும் வீரன் ஏது?
போர் செய்யும் வீரன் ஏது?

போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்

பச்சைக் கிளிகள் தோளோடு

இவ்வுலகே ஒரு அதிசயம். நாம் வாழ்வதும், நம் கண் முன்னர் பல விதமான எண்ணிலடங்கா உயிரினங்கள் வேறுபட்ட தோற்றத்துடனும் குண நலன்களுடனும் வாழ்வதும் அதிசயம். சூரியனும் சந்திரனும் அந்தரத்தில் நமது கண்களுக்கும் கருத்துக்கும் புலப்பாடாத பாதைகளில் தினந்தோறும் பவனி வருவதும், வானமெங்கும் தோரணங்கள் கட்டியது போலப் பல கோடி நட்சத்திரங்கள் விதவிதமான அமைப்பிலான குழுக்களாய் விளங்கி ஒளிர்வதும், பல விதமான பயிர்களும் செடி கொடிகளும் பழங்களுடனும் காய்களுடனும் திகழ்வதும் இவை யாவும் நாம் என்றென்றும் கண்டுணர்ந்து களிக்கத்தக்க அதிசயங்களன்றோ?

இவ்வாறு இருக்கையில் நமது புலன்களின் உணர்ச்சிக் குறைபாடுகளை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கும் மாயாவிகள் செய்யும் கண்கட்டு வித்தைகளை அதிசயமென நம்பி ஏமாறுவது மனிதனின் அறியாமையைக் காட்டுகிறது. உலகெங்கும் இயற்கையாகவே இலவசமாகக் கிடைக்கும் இன்பம் தரும் பலவிதமான வளங்களையும், அன்பைப் பொழியும் உயிர்க் குலத்தையும் உணராமல் பகட்டான வாழ்வுக்காக ஏங்கிப் பணம் தேடுவதொன்றே குறிக்கோளாக வாழ்வது மடமையே.

கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்
ஆற்று நீரோசை அருவி ஒலியினிலும்
நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்
நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன்

- பாரதியார்

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/indian/pacha--kiligal.php

படம்: இந்தியன்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்

பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்

பாடல். : வைரமுத்து

தந்தானானே நானே நானே தந்தானானானே
தந்தானானே நானே நானே தந்தானானானே

பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம் பூச்சிக் கூட்டத்துக்குப் பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் என்னத்துக்கு?

பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் - அடி
பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் - அட
மழையில் கூடச் சாயம் போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம் - பெண்ணே
நரை எழுதும் சுயசரிதம் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்!

பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

தந்தானானே நானே நானே தந்தானானானே
தந்தானானே நானே நானே தந்தானானானே
தந்தானானே நானே நானே தந்தானானானே
தந்தானானே நானே நானே தந்தானானானே

உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னை பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓர் ஆனந்தம் பந்தம் பேரானந்தம் கண்ணே
உன் விழியால் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்

பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை