திங்கள், 23 நவம்பர், 2009

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

இயற்கையையும் மனித வாழ்வையும் இணைத்து நோக்கும் ஞானம் இயல்பாகவே அமையப் பெற்ற கவிஞர்கள் தமிழில் அனேகர் உளரென்றாலும் அவர்களுள் தலைசிறந்தவர் கவிஞர் கண்ணதாசன். தமிழை முறையாக இலக்கணத்துடன் பயிலாத பாமர மக்களும் பொருளுணர்ந்து கேட்டு மகிழும் வகையில் எண்ணிறந்த தமிழ்ப் பாடல்களைத் தந்தவர் அவர்.
காதலர் இருவர் வெண்ணிவைத் துணைக்கழைத்து இருவரும் ஒருவரோடொருவர் கொண்ட காதலை நூதனமான முறையில் வெளிப்படுத்தும் பாடலொன்று அவற்றுள் உண்டு. மனித வாழ்வில் பெரும்பங்கு வகிக்கும் பலவகையான காய்கறிகளுடன் மனித குணங்களையும் வாழ்வின் சூழ்நிலைகளையும் ஒப்பிட்டு, சிந்தனையைத் தூண்டி, சிந்தையள்ளும் தமிழ் செழுந்தேனை உண்டு விந்தையுடன் பாட விழையும் மனவண்டுகளின் பசியைத் தீர்க்கவல்ல இனிய அந்தப் பாடல் இதோ:

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே

பலே பாண்டியா
விஸ்வநாதன் ராமமூர்த்தி
கவிஞர் கண்ணதாசன்
டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி
இயக்கியவர்: பி.ஆர். பந்துலு
ஆண்டு 1962

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? என்னுயிரும் நீயல்லவோ?
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே..

ஓஓஓ..ஓஓஓ..
கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?

இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?

என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா..

ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா..

உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

ஆஹாஹா ஆஹா ஓஹோஹோ ஹோஹோ ம்ஹ்ம்ம் ம்ம்

1 கருத்து: