திங்கள், 23 நவம்பர், 2009

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

அனைத்து உயிரினங்களிலும் மனிதனுக்கு அதிகப்படியான அறிவைக் கொடுத்த இறைவன் அறியாமையையும் அவனுக்குச் சற்று அதிகமாகவே கொடுத்துவிட்டான். இதனாலேயே ஜாதி மதங்களாலும், பொருளாதார நிலையாலும், கல்வியாலும், இனத்தாலும், தேசியத்தாலும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனும் பேதத்தை மனிதன் வளர்த்ததால் ஒற்றுமை குலைந்து, ஒருவரோடொருவர் சண்டையிடும் நிலைமை உலகெங்கிலும் உருவாகி, அப்பாவி மக்கள் பலர் காரணமின்றி உயிரிழக்கும் சூழ்நிலை ஏற்பட்டு அமைதி குலைகிறது.
இந்த பேதம் என்று மாறுமோ அன்றுதான் உலகில் அமைதி நிலவும், அனைவரும் சுகமாய் வாழ முடியும். சாதிமத பேதமற்ற, ஏழை பணக்காரனற்ற சமத்துவம் நிலவ வேண்டும். உலகில் எல்லோரும் சுகவாழ்வு வாழ வேண்டும்.

எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம் எல்லோரும் இந்திய மக்கள் நாம் எல்லோரும் இந்திய மக்கள் எல்லோரும் ஓர் விலை எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் இந்நாட்டு மன்னர் நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்

என்று பாரதி பாடிய சமதர்ம சமுதாயம் மலர வேண்டும் உண்மையான சுதந்திரம் அனைவர்க்கும் கிடைக்க வேண்டும்.

எது எவ்வாறாயினும் அனைவரும் என்றும் சம மதிப்பைப் பெறும் ஒரே இடம் ஒன்றுண்டு. அதுவே சமரரசம் உலாவும் இடம்:

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா

படம்: ரம்பையின் காதல்
இயற்றியவர்: மருதகாசி
இசை: டி.ஆர். பாப்பா
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு 1956

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
தொல்லையின்றினே தூங்கிடும் வீடு
உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி ஆ..ஆ..ஆ...ஆ.
சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலே இது தான் நம் வாழ்வில் காணா

சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக