ஞாயிறு, 17 ஜனவரி, 2016

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்

தினம் ஒரு பாடல் - 10 செப்டம்பர் 2014
ஓணம் பண்டிகை கேரள மாநிலத்தின் மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடும் பண்டிகை ஆகும். அதுவே கேரள மாநிலத்தின் பண்டிகையாக விளங்குகிறது. கேரள அரசு இப்பண்டிகைக்காக 4 நாட்கள் விடுமுறை அளிக்கிறது. இந்த ஓணம் பண்டிகை மஹாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து வந்து மாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் யாசகம் கேட்டு அவர் அவ்வாறே ஒப்புக்கொள்ள, இரண்டு அடிகளால் பூமியையும் பிற உலகங்கள் அனைத்தையும் அளந்து பின் மூன்றாம் அடிக்கு இடம் கேட்கவே, மாபலி தன் தலை மீது வைக்கச் சொல்ல அதன் படியே மாபலியின் தலைமேல் தன் பாதத்தை வைத்து அவனைப் பாதாளலோகத்துக்கு அனுப்பிய விசேஷமான 
நாளைக் குறிக்கிறது.

மாபலி மன்னன் மக்களுக்கு என்றும் நன்மையே செய்து புகழ் பெற்றவன், மூவுலகையும் வென்றவன். அவனது பலம் பெருகுவதைக் கண்டஞ்சிய தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே மஹாவிஷ்ணு வாமன அவதாரமெடுத்து அவனை அடக்கியதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. ஓணம் பண்டிகையின் போது மாபலி பாதாள லோகத்திலிருந்து பூமிக்கு வந்து தன் நாட்டு மக்கள் நலமாக உள்ளனரா என்று பார்ப்பது வழக்கம் என்றும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

ஆண்டு தோறும் ஓணம் வந்து விட்டால் கேரள மாநிலமே திருமணக் கோலம் பூண்டது போல் விளங்கும். கேரள மக்கள் வீடுகளில் பலவிதமான பக்ஷணங்கள் செய்து விமரிசையாக விருந்தினர்களுடன் சேர்ந்து கலந்து அருந்தி மகிழ்வது வழக்கம்.

நேந்திரங்காய் சிப்ஸ், பப்படம் ஆகியவற்றுடன் தோரன், மெழுக்குப்புரட்டி, காலன், ஓலன், அவியல், சாம்பார், நெய்யிட்ட பருப்பு, எரிச்சேரி, ரசம், இனிப்பும் புளிப்பும் மிகுந்த ஊறுகாய்கள், இருவகையான மோர், துருவிய தேங்காயிலிருந்து செய்யப் பட்ட சட்னிப் பொடி, வாழைப்பழப் பாயசம் என வகை வகையாகத் தயாரித்து எல்லோரும் இஷ்டம் போல வெட்டுவார்கள். அது மட்டுமா? பல விதமான கேளிக்கைகளும், படகுப் போட்டிகளும், அலங்கரிக்கப் பட்ட யானைகளுடன் நடைபெறும் விசேஷமான பூஜைகளும் சேர்ந்து மாநிலமே அமர்க்களப் படும். திருவந்திரா, கும்மட்டிக் களி, புலிக்களி, தும்பி துள்ளம் முதலான பாரம்பரிய நடனங்களும் கேளிக்கைகளின் ஒரு 
பகுதியாக மாநிலம் முழுதும் இடம் பெறும்.

ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப் படுகிறது. பண்டிகை திருவோண நட்சத்திரம் நிலவும் பத்தாம் நாளன்று நிறைவடைகிறது. எனக்கு ஒரு இளைய சகோதரி இருந்தாள், உமா என்று பெயர். அவள் திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவள். நான் சிறு வயது முதல் தினமும் ஏதேனும் பாடல்களைப் பாடிக்கொண்டும் எனது புல்லாங்குழலில் இசைத்துக் கொண்டும் இருக்கையில் அவள் என்னுடன் சேர்ந்து பாடுவாள். அவள் பல ஆண்டுகளுக்கு முன்னரே இறைவனடி சேர்ந்து விட்டாள். அன்று முதல் என் பாடலுக்கு எதிரொலியாயிருந்த 
அவளின் துணையை இழந்து வாடுகிறேன்! உறவின் உயர்வு இத்தகைய பிரிவுத்துயரினால் நன்கு விளங்குகிறது.

இங்கே நம் நாயகனும் நாயகியும் ஒருவரோடொருவர் அன்பு கொண்டு இருவரும் இதயம் மாறிப்புக்கு எய்திக் காதல் வயப்பட்டுப் பாடுகின்றனர் தாங்களிருவரும் ஒன்று சேர்ந்திருந்தால் அது திருவோணம் பண்டிகையாகும் என்று. இப்பாடலை எழுதி, இசையமைத்துப் படமாக்கிய விதமும் அற்புதமாகவே அமைந்துள்ளது. எத்துணை முறை கேட்டாலும் அலுக்காத அந்த இனிய பாடலைக் கேட்போமா?




திரைப்படம்: மைக்கேல் மதன காமராஜன்
இயற்றியவர்: பஞ்சு அருணாசலம்
இசை: இசை ஞானி இளையராஜா
பாடியோர்: கமலஹாசன், எஸ். ஜானகி
ஆண்டு: 1990

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ 
ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் ஓஹோ ஓஹோ
சுந்நரன் நீயும் சுந்நரி ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் 
கையில் கையும் வச்சுக் கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சின் மன்றம் கொண்டு சேரும் நன்னேரம்

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் ஓஹோ ஓஹோ
சுந்நரன் நீயும் சுந்நரி ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் 

ஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ 
ஆ ஆ ஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ 
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ

ஒன்னுட சுந்தர ரூபம் வர்ணிக்க ஓர் கவி வேணம்
மோகன ராகம் நின் தேகம், கீர்த்தனமாக்கி ஞான் பாடும்
உஞ் சிரிப்பால் என் உள்ளம் கவர்ந்நு
கண்ணான கண்ணே என் சொந்தம் அல்லோ?
நீ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ

சுந்நரன் நீயும் சுந்நரி ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் ஓஹோ ஓஹோ
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் 
கையில் கையும் வச்சுக் கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சின் மன்றம் வந்து சேரும் நன்னேரம்

சுந்நரன் நீயும் சுந்நரி ஞானும்
சேர்ந்நிருந்தால் திருவோணம் ஓஹோ ஒஹோ
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்நால் திருவோணம் 

சப்பர மஞ்சத்தில் ஆட சொப்பன லோகத்தில் கூட
ப்ரேமத்தின் கீதங்ஙள் பாட, சொர்க்கத்தில் ஆனந்தம் தேட
சயன நேரம் மன்மத யாரம்,
உலரி வரையில் நம்முட யோகம்  

ஆ ஆ ஆஆஆ  ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் ஓஹோ ஓஹோ
சுந்நரன் நீயும் சுந்நரி ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் 
கையில் கையும் வச்சுக் கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சின் மன்றம் கொண்டு சேரும் நன்னேரம்

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம் ஓஹோ ஓஹோ
சுந்நரன் நீயும் சுந்நரி ஞானும்
சேர்ந்நிருந்நால் திருவோணம்