வெள்ளி, 18 டிசம்பர், 2009

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

வேதங்கள், பகவத் கீதை, திருக்குறள் முதலான அறநெறியை உபதேசிக்கும் நூல்கள் அனைத்தும் அஹிம்சையையும், சாந்த குணத்தையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியும் நம் நாட்டில் அனேகர் அவ்வாறு நடக்காமல், மதத்தின் பெயராலும், இறை வழிபாட்டின் பெயராலும் யாகங்கள் உள்ளிட்ட விழாக்களிலும் இதர சந்தர்ப்பங்ககளிலும் பலி எனும் பெயரால் தொடர்ந்து உயிர்க் கொலை புரிந்து வந்ததால் நாளடைவில் ஹிந்து மதத்தைப் பின்பற்றுவோர் குறைந்து பெரும்பாலோர் புத்த மதத்தைத் தழுவிய காலம் இந்திய வரலாற்றில் மறக்க முடியாததாகும். இருப்பினும் புத்த மதம் புலால் உண்பதைத் தடை செய்யவில்லை என்பதால் நாளடைவில் நம் நாட்டில் அது வேரூன்றவில்லை. மாறாக சீனம், சிங்களம், பர்மா, மலேயா முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகி அங்கே வேரூன்றியது.

புத்தரின் பின்னர் அவதரித்த ஆதி சங்கரர், அஹிம்சையை வலியுறுத்தியதுடன், புலால் உண்ணாமையையும் வலியுறுத்தி, நலிவடைந்திருந்த ஹிந்து மதத்துக்குப் புத்துயிரூட்டினார்.

கொல்லான் புலால் மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

என்ற வள்ளுவர் வாக்கையே புறக்கணித்த நமது மக்கள் சமூகம் ஆதி சங்கரர் அறிவுரையை மட்டும் அவ்வளவு எளிதில் கேட்டு விடுமா என்ன? இன்று பலர், ஜாதி மதங்களின் பெயரால் நாட்டு மக்களிடையே பிளவு ஏற்படுத்தவும், உண்மை இல்லாத பலவித சாத்திரங்களையும், சடங்குகளையும் கூறி, தாம் சுயலாபம் அடையவும் முயன்று, ஊரையும் உலகையும் ஏமாற்றி, பல பாப காரியங்களைச் செய்து வருவது வருந்தற்குரியது.


ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ


படம்: தாய் மூகாம்பிகை
எழுதியவர்: கவிஞர் வாலி
இயற்றியவர்: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, சுரேந்தர், தீபன் சக்ரவர்த்தி
அஅண்டு: 1982

சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த ப்ரபவிதும்...
நசே தேவம் தேவோ ந கலு குசல ஸ்பந்தி துமபி ஆஆஆ
அத த்வாம் ஆராத்யாம் ஹரிஹர விரிஞ்சாதி பிர் அபி
பிரணந்தும் ஸ்தோதும் வா கதம் அக்ருத புண்யஹ ப்ரபவதீ
ஆ...ஆ.....

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே

ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங் கழலே மலை மாமகளே
தொழும் பூங் கழலே மலை மாமகளே

அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தேத் துவதும் மணி நேத்திரங்கள்
பணிந்தேத் துவதும் மணி நேத்திரங்கள்

சக்தி பீடமும் நீ ஆஆஆஆ ஆஆஆஆஆஆ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஆகிரா