வியாழன், 30 ஜூன், 2011

வீடு வரை உறவு வீதி வரை மனைவி

நிலையாமை ஒன்றையன்றி நிலையான தொன்றுமில்லை
நினையாதே இதனை மாந்தர் நித்தமும் புவியிதன் மேல்
பலகாலம் பாடுபட்டுப் பணமதைத் தேடி வைத்தே
சிலகாலமேனும் இங்கே சிவமதை நினைந்திடாதே
உளமார ஒருவர்க்கேனும் உதவிடா நெஞ்சத்தோடே
உழன்றுழன்று ஒர் நாள் தன்னில் உலகைவிட்டகலுவாரே

ஆதியும் அந்தமும் இல்லாத எங்கும் பரந்து விரிந்த இவ்வுலகில் மிகவும் சொற்ப காலம் மட்டுமே வாழும் நிலையில் வந்து பிறந்து பின் இறந்து போகும் நாம் அஞ்ஞானத்தில் உழன்று பணம் சம்பாதிப்பதொன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்நாளை வீணாளாக்குகிறோம். இடையில் வரும் உறவுகளான மனைவி, மக்கள் மற்றும் சுற்றத்தாரை நிரந்தரமென நினைத்துக் குறுகிய மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு நாம் தேடும் செல்வமனைத்தும் அவர்களுக்கும் நமக்கும் என்று மட்டுமே செலவழிக்கிறோம்.

இப்பரந்த உலகில் நம்மைத் தவிரப் பாமர மக்கள் பலர் வாழ்வதையும், நம்மிடம் உள்ள பொருட்செல்வம் ஏதும் இல்லாத நிலையில் அவர்கள் ஏழ்மையில் உழல்வதையும் கண்ணாரக் கண்டும் அவர்களுக்கு உதவி செய்ய நாம் முன்வருவதில்லை. இத்தகைய சுயநலப் போக்கினால் நாட்டை ஆள வருவோரின் தகுதியை அறிந்து கொள்ளாது அவர்கள் தரும் வாக்குறுதிகளை உண்மையென்று நம்பி நம்மை ஆளும் பொறுப்பை அவர்களுக்கு அளித்து அல்லலுறுகிறோம்.

ஏழைகளுக்கு உதவுகிறோம் என்று கூறிக்கொண்டு ஏழைகளை மேலும் ஏழைகளாக ஆக்க மதுவெனும் அரக்கனை உலகில் உலவவிட்டு கஞ்சிக்கும் கூழுக்கும் வழியின்றி இருப்பினும் மதுவருந்தவென்றே ஈட்டும் பொருளனைத்தையும் அவர்கள் செலவிடும் நிலைமையை உருவாக்கி நாட்டில் பஞ்சத்தைத் தலைவிரித்தாட வைத்து ஒரு சிலர் மட்டும் நாட்டில் இருக்கும் வளங்கள் யாவையும் அனுபவிக்கும் சுநலவாத அரசியலை மாற்றி நாம் வாழ்கின்ற வரைக்கும் உலக நன்மைக்காக ஏதேனும் முயற்சி செய்து வாழும் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்வோம்.

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே!

வீடு வரை உறவு வீதி வரை மனைவி

ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?

வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்
கூடி வரும் கூட்டம் கொள்ளி வரை வருமா?

வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
கடைசி வரை யாரோ?

உ..உ ஆயி ஆரிரோ உ..உ ஆயி ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ

தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி
தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி கெட்ட பின்பு ஞானி

வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
கடைசி வரை யாரோ?

சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்
சென்றவனைக் கேட்டால் வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால் சென்று விடு என்பான்
சென்று விடு என்பான்

வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
கடைசி வரை யாரோ?

விட்டு விடும் ஆவி பட்டு விடும் மேனி
சுட்டு விடும் நெருப்பு சூனியத்தில் நிலைப்பு
சூனியத்தில் நிலைப்பு

வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
கடைசி வரை யாரோ?

மாலையில் யாரோ மனதோடு பேச

14 செப்டம்பர் 2010

பிரபல பிண்ணனி பாடகி ஸ்வர்ணலதா-அகால மரணம்!

http://www.peopleofindia.net/arts/movies/20100912_swarnalatha.php

செப்டம்பர் 12, 2010

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி சுவர்ணலதா இன்று சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானர்.

இறக்கும் போது அவருக்கு வயது 37.நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்படடுவந்த அவர், இன்று காலை
சிகிச்சை பலனின்றி காலமானார். இரண்டு பாடல்கள் சுவர்ணலதாவை சட்டென ஞாபகப்படுத்தும்.இன்று வரை பழமை விரும்பிகள் உச்சரிக்கும் 'மாலையில் யாரோ மனதோடு பேச'', இளைஞர்களின் ஆல்டைம் பேவரிட் 'எவனோ ஒருவன் வாசிக்கின்றான்'. இந்தப்பாடல்களின் குரலுக்கு சொந்தக்காரர் சுவர்ணலதா தான்!
1995 ல் பாரதிராஜாவின் கருத்தம்மா திரைப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'போறாளே பொண்ணுத்தாயி' என்ற பாடலை பாடி அனைவரின் உதட்டிலும் தன் பெயரை முணுமுணுக்க வைத்தார். இப்பாடலுக்காக தேசிய விருதும் பெற்றார்.

கேரளாவில் பிறந்த இவர், தன் பெற்றோரை சிறிய வயதிலேயே இசையில் நாட்டம் பெற்றார். 1989 ம் ஆண்டு
முதல் பாடிய பாடல், 'மாலையில் யாரோ மனதோடு பேச' தொடர்ந்து பாம்பே திரைப்படத்தில் 'குச்சி குச்சி
ராக்கம்மா', ஜெண்டில் மேன் படத்தில் 'உசிலம் பட்டி பெண்குட்டி', காதலன் படத்தி 'முக்காலா', அலைபாயுதே
படத்தில் 'எவனோ ஒருவன்' என ஏ.ஆர்.ரஜ்மான் இசையில் ஆஸ்தான பாடகியானார்.

இவர் பாடிய, 'ஆட்டமா, தேரோட்டமா', சின்ன ஜமீனில் பாடிய 'வனப்புத்தட்டு புல்லாக்கு', சத்ரியனில்
"மாலையில் யாரோ", சின்னத்தம்பியில் 'போவோமா ஊர்கோலம்', சின்னத்தாயி படத்தில் பாடிய 'நான்
ஏரிக்கரை" ஆகிய பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. பட்டித் தொட்டிகளிலெல்லாம் முழங்கியது
தளபதி படத்தில் இவர் பாடிய 'அடி ராக்கம்மா கையத்தட்டு'. தேவர் மகனில் இடம்பெற்ற 'மணமகளே,
மருமகளே' என்ற அருமையான பாடலுக்கு சொந்தமானவரும் சுவர்ணலதாவே என்பது குறிப்பிடத்தக்கது.
வீராவின் இரண்டு ஹிட் பாடல்களான 'மாடத்திலே கன்னி மாடத்திலே', 'மலைகோயில் வாசலில்' ஆகிய
இரண்டையும் பாடியவர் சுவர்ணலதா.

தமிழகத்தின் இசை விரும்பிகளின் மிகப்பிரியமான பாடகியாக விளங்கிய சுவர்ணலாதாவின் மரணம்,
தென்னிந்திய இசையுலகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

V.Shrinivas (Seenu)

மாலையில் யாரோ மனதோடு பேச

திரைப்படம்: சத்திரியன்
இயற்றியவர்:
இசை: இளையராஜா
பாடியவர்: ஸ்வர்ணலதா

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே ஓ மோகம் வந்ததோ?
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ?

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச

கரைமேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க
அடடா நானும் மீனைப் போல கடலில் பாயத் தோணுமோ?
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ?

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே ஓ மோகம் வந்ததோ?
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ?

நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது

திங்கள், 27 ஜூன், 2011

காதல் என்னும் ஆற்றினிலே

காதல் என்பது மனித இனத்துக்கு மட்டுமின்றி உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. உலகில் உயிர் வாழ்க்கை தொடர்ந்து நிலவுவதற்கு ஓரே காரணம் காதல். ஏனைய உயிர்களிடத்தில் தோன்றும் காதல் உணர்வு பெரும்பாலும் எவ்விதக் கட்டுப்பாடும் அற்றதாக நிலவுகிறது ஆனால் மனித இனத்தில் தோன்றும் காதல் சமுதாய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவர் பால் மற்றவர் ஈர்க்கப்பட்டு ஒருவர் மனதை ஒருவர் அறிந்து கொள்ளும் வகையில் நிலவுகிறது. கட்டுப்பாடற்ற காதல் மனித இனத்தை அழிவுப்பாதையில் இட்டுச் செல்லக்கூடும். கல்வி பயிலும் பருவத்தினர் சிலர் மறுபாலரில் அழகால் ஈர்க்கப்பட்டுக் காதல் வயப்படுவதுண்டு. இவ்வாறு காதல் வயப்படுவோர் மனதில் சஞ்சலங்கள் உண்டாகிக் கல்வியில் முழு மனதையும் செலுத்தத் தவறி வாழ்க்கையில் முன்னேற்றமடையாமல் பின்தங்குவதும் உண்டு. இதற்குக் காரணம் காதல் குறித்த முறையான அறிவு பெறாமல் மனத்தில் தோன்றும் ஆசைகளுக்கு அடிமையாகும் உந்துதலே ஆகும்.

இத்தகைய சூழ்நிலையை உருவாக்குவதில் திரைப்படங்களுக்குப் பெரும் பங்குள்ளது. திரையில் தோன்றும் காதலனும் காதலியும் உண்மைக் காதலர்கள் அல்ல என்பதையே பெரும்பாலான ரசிகர்கள் மனதில் கொள்ளத் தவறுகின்றனர். ரசிகர்களின் மனதைக் கவர்ந்து அவர்கள் பணம் செலவழித்துத் திரைப்படத்தைப் பார்க்க வைத்து அதன் மூலம் பொருளீட்டும் எண்ணத்துடனேயே திரைப்படங்கள் தயாரிக்கப் படுகின்றன.

கல்வி பயின்று வாழ்வில் முன்னேற்றமடையாமல் காதல் வெற்றி பெறாது எனும் உண்மையைத் திரைப்பட ரசிகர்களுக்கு உணர்த்தும் வகையில் பழைய தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்கப் பட்டதால் அவை காலத்தால் அழியாத திரைக் காவியங்களாக எத்துணை முறை பார்த்தாலும் சலிப்புத் தோன்றாத உன்னத நிலையை எட்டியுள்ளன. வெறும் ஸ்பரிச உணர்வால் ஏற்படும் காதலை விட சகோதர பாசமே உயர்ந்தது என்பதை உணர்த்தும் வகையிலும் இத்தகைய திரைப்படங்களுள் சில விளங்குகின்றன.

காதல் குறித்து இணையதளத்தில் எத்தகைய கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன என்றறியும் நோக்கில் காதல் எனும் வார்த்தைக்கான இணையப் பக்கங்களை கூகிளாரின் உதவியுடன் தேடப் புகுந்தேன். கூகிளார் தந்த தேடுதல் பதிலாக முதல் நிலையில் படத்துடன் தோன்றியது நிலாரசிகனின் மயிலிறகாய் ஒரு காதல். இந்த நூல் பற்றி மழலைகள்.காம் தளத்தில் விளம்பரம் இடம்பெற்றிருப்பதை நினைவில் கொண்டு கவனித்ததில் இந்தப் படத்தின் சுட்டி மழலைகள்.காம் புத்தகப் பகுதிக்கு இட்டுச் செல்வதைக் கண்டேன்.

http://www.google.co.in/search?sourceid=chrome&ie=UTF-8&q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

பிற இணையத் தமிழ் அன்பர்களும் தாங்கள் படைத்த நூற்கள் குறித்த செய்திகளை எனக்கு அளித்தால் அவற்றைப் பற்றிய விளம்பரங்களையும் மழலைகள்.காம் தளத்தில் பதிவேற்ற விரும்புகிறேன்.

இன்றைய பாடல் காதல் எவ்வாறு அமைய வேண்டும் எனும் வழிகாட்டுதலை சற்றே வேடிக்கை கலந்த ஆண் பெண் உரையாடலை இசை வடிவில் தருகிறது.

காதல் என்னும் ஆற்றினிலே

திரைப்படம்: கைராசி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஆர். கோவர்த்தனம்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

காதல் என்னும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும் உலகம் அன்றோ அம்மோய்
காத்திருந்தால் உங்களுக்கும் புரியும் அன்றோ?
காதல் என்னும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும் உலகம் அன்றோ அம்மா
காத்திருந்தால் உங்களுக்கும் புரியும் அன்றோ?

காதலெனும் கலையினிலே கைதேர்ந்த காளையரே
கண்ணடித்துப் பாடுவதால் காதல் வராது
பண்புடனே வரும் அன்பினிலே தான் காதல் உண்டாகும்
பண்புடனே வரும் அன்பினிலே தான் காதல் உண்டாகும் அந்தப்
பாடத்தை நீங்கள் பள்ளியிலே தான் படிப்பது நன்றாகும்

தாவணியோடு பாவாடை தலையில் நிறைந்த பூவாடை
பார்த்ததும் படிப்பு வரவில்லை பள்ளிக்குச் செல்ல மனமில்லை
பட்டம் விட்டால் கைக் கட்டு வரும் வாடை பிடித்தால் வம்பு வரும்
கட்டம் போட்ட சட்டையைப் போட்டு கம்பியை எண்ணும் காலம் வரும்

காதலெனும் கலையினிலே கைதேர்ந்த காளையரே
கண்ணடித்துப் பாடுவதால் காதல் வராது
பண்புடனே வரும் அன்பினிலே தான் காதல் உண்டாகும்

பறக்குது பறக்குது முன்னாலே பச்சைப் புடவை தன்னாலே
இழுக்குது எங்களை ஓரத்திலே ஏறி வரட்டுமா ஓடத்திலே
ஓடத்தில் ஏறும் நேரத்திலே உதையும் கிடைக்கும் கன்னத்திலே
உடைந்தது பற்கள் முப்பது என்று காலையிலே வரும் பேப்பரிலே

காதல் என்னும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே
காலமெல்லாம் பயணம் போகும் உலகம் அன்றோ அம்மா
காத்திருந்தால் உங்களுக்கும் புரியும் அன்றோ?

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை

தம் இரு பையன்களுக்கும் ஒரே சமயம் திருமணம் செய்ய முடிவு செய்யும் பெற்றோர்கள் ஒரு கல்யாணத் தரகர் தரும் விவரங்களின் அடிப்படையில் இரு பெண்களைத் தேர்வு செய்கின்றனர். பெண்பார்க்கும் படலம் துவங்குகிறது. சம்பிராதயமான முறையிலிருந்து மாறுபட்டு அண்ணனுக்கென்று கருதப்படும் பெண்ணைத் தம்பியும் தம்பிக்கெனக் கருதப்படும் பெண்ணை அண்ணனும் சென்று பெண் பார்க்கின்றனர். இவர்களுள் அண்ணன் பட்டப்படிப்பு பயின்றவன். தம்பி படிக்காதவன் முரடன். இக்காரணத்தால் இரு பெண்களுக்குள் பட்டப் படிப்பு படித்தவளை அண்ணனுக்கும் படிக்காத குடும்பப் பாங்கான பெண்ணைத் தம்பிக்கும் மணம் முடிப்பதெனும் பெற்றோர் முடிவின் படியே பெண்பார்க்கும் படலம் துவங்குகிறது. தம்பிக்கெனப் பார்க்கும் பெண்ணின் அழகாலும், அடக்கதாலும் அறிவாலும் கவரப்பட்ட அண்ணன் தம்பிக்கு பதிலாக அவளைத் தானே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அண்ணனுக்காகப் பெண்பார்க்கச் சென்ற தம்பி அதன் முன்பாக அண்ணனிடமிருந்து சில ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொண்டு அண்ணனுக்காகப் பெண் பார்க்கையில் தன்னை அவர்கள் தரக்குறைவாக எண்ணிவிடக் கூடாது எனும் சுயகௌரவம் கருதித் தன்னைப் படித்தவன் போலக் காட்டிக் கொள்கிறான். இதனால் அவனை அவர்கள் படித்தவனென்றே கருத நேர்கிறது.

இதனிடையில் தம்பிக்காகப் பார்த்த பெண்ணைத் தானே மணம் முடிக்கும் தனது சுயநல எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள எண்ணும் அண்ணன், தம்பி தனக்காகப் பார்த்த பெண்ணின் வீட்டுக்கு அனாமதேயக் கடிதம் அதாவது மொட்டைக் கடிதம் ஒன்றை அனுப்புகிறான். அக்கடிதத்தில் இருவரில் அண்ணன் கல்வி அறிவில்லாதவனென்று குறிப்பிடுவதால் அப்பெண்ணின் பெற்றோர்கள் தமது பெண்ணைத் தம்பிக்கே மண முடித்துத் தர விரும்பிகின்றனர். இதனால் திருமணம் முடிந்த பின்னர் படித்தவன் என்று தான் கருதிய தன் கணவன் படிக்காதவன் என்னும் உண்மை வெளிப்படுவதால் கணவன் மனைவியரிடையே பல குழப்பங்களும் மனஸ்தாபத்தால் பல துன்பங்களும் விளைகின்றன. இவ்வாறு அமைந்தது படித்தால் மட்டும் போதுமா திரைக்கதை. இப்படத்தில் தம்பியாக சிவாஜி கணேசனும் அண்ணனாக பாலாஜியும், அண்ணன் மனைவியாக சாவித்திரியும், தம்பியின் மனைவியாக ராஜசுலோசனாவும் நடித்துள்ளனர்.

அண்ணன் தம்பி இருவரும் பெண்பார்த்து விட்டுத் திரும்பியதும் ஒன்றாக நீச்சல் குளத்தில் குளிக்கையில் தாங்கள் பார்த்த பெண்களைப் பற்றிய கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதாக அமைந்த இன்றைய பாடலில் கவிஞர் கண்ணதாசனின் ஆழ்ந்த புலமையும் கதையின் சூழ்நிலையைக் கதையின் தன்மையை ஒட்டியே மிகவும் அழகாக வர்ணிக்கும் சமயோசிதமும் விளங்குகின்றன. கேட்டவர் அனைவராலும் மிகவும் வியந்து பாராட்டப் பட்டது இப்பாடல்.

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை

திரைப்படம்: படித்தால் மட்டும் போதுமா?
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ்

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?

நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்காரச் சின்னம் அலைபோல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்காலச் சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண்ணந்தப் பெண்ணல்லவோ?

சென்றேன் ம்ம் கண்டேன் ம்ம் வந்தேன்

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா?

நான் பார்த்த பெண்ணை நீ பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை
உன் பார்வை போலே என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
நான் கண்ட காட்சி நீ காணவில்லை
என் விழியில் நீ இருந்தாய்
என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில் நானிருந்தேன்
உன் வடிவில் நானிருந்தேன்
நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லையே

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா?
என்னென்று நான் சொல்ல வேண்டுமா?
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?

செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே

மனிதனை மற்ற உயிரினங்களை விட மேன்மையான நிலையில் வைத்திருப்பது பகுத்தறிவு. அவ்வறிவை வளர்க்க இன்றியமையாதது கல்வி. கல்வி கற்க ஆசான் இன்றி இயலாது என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட கருத்தாகும். ஒவ்வொருவரும் பிறந்து வளர்கையில் ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் தாயும் தந்தையும் ஆசானாக விளங்குகின்றனர். அதன் பின்னர் கல்வி பயில அதற்கென்றே பிரத்யேகமானதொரு குருவின் துணையை நாடுவது மிகவும் அவசியமாகிறது. மனித வாழ்வில் மிகவும இன்றியமையாதது இறையுணர்வு. இறையுணர்வில்லாதவர் துன்பங்களைத் தாங்கும் வலிமையடைவதில்லை. இறைத்தத்துவத்தில் நிறைய வேறுபாடுகள் இருப்பினும் இவ்வுலகையும் நம்மையும் இயக்கும் ஒரு மஹாசக்தி இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அத்தகைய சக்தியைத் துணையாகக் கொண்டு வாழ்வில் முக்தி பெறுவதே வாழ்வின் நோக்கமாக அமைகிறது. இத்தகைய முக்திக்கு வழியமைத்துத் தருவது கல்வியே ஆகும். இதனாலேயே மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வாழ்வின் முதல் ஆசானாக அன்னையையும் அடுத்துத் தந்தையையும் அதன் பின்னர் குருவையும் இறுதியில் தெய்வத்தையும் வைத்தனர் நம் முன்னோர்.

கல்வியினால் அறிவு வளர்கிறது. அவ்வறிவு முதிர்ச்சியடைந்து ஞானமாக மலர்கிறது. அந்த ஞானம் இறுதியில் பக்தியாகப் பரிணமிக்கிறது. அவ்வாறு பக்தி நிலையை அடையாத அறிவு முழுமையான அறிவு ஆகாது. அன்னையும் தந்தையும் தமது பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்ப்பது மெய்யான அன்பையே தவிர சம்பிரதாயமான மரியாதையை அல்ல. இதற்கு மாறாக ஒரு ஆசிரியர் தன் மாணவரிடமிருந்து பெரிதும் எதிர்பார்ப்பது மரியாதையையே. ஏனெனில் மரியாதை கீழ்ப்படிதலுக்கு முதல் படி. கீழ்ப்படிதலில்லாது ஒரு மாணவர் ஆசான் போதிக்கும் கல்வியை முறையாகப் பயிலும் சக்தியை அடைவதில்லை. இறைவனுக்கு செலுத்தும் மரியாதையை விடவும் அதிகமான மரியாதையையும் பக்தியையும் குருவுக்கு அளிக்கும் ஒரு மாணவனுக்குக் கல்வி எளிதில் வசமாகிறது.

கல்வி கற்பதற்கு ஏற்ற காலம் இளமைப் பருவம். குழந்தைகளாக இருக்கையிலேயே கல்வி பயிலத் துவங்கி தொடர்ந்து கல்வி பயில்வதே சிறப்பு. இத்தகைய, வாழ்க்கைக்கு இன்றியமையாத கல்வி வியாபாரமாக்கப் பட்டதால் கல்வி ஞானமாக முதிர்ந்து பக்தியாகப் பரிணமிப்பது இயலாததாகிறது. ஆசிரியர்கள் வெறும் சம்பளத்துக்கு வேலை செய்யும் பணியாளர்களாக மதிக்கப் படும் நிலை ஏற்படுவதால் குரு பக்தி என்பதே இல்லாத நிலைமை உலகில் இன்று பெரிதும் நிலவுகிறது.

இனி வரும் காலத்திலாவது கல்வி வியாபாரமாவது தடுக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையை அனைவரும் அளித்து கல்வி அதன் உண்மையான தரத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் ஆரோக்கியமான சூழல் நம் நாட்டிலும் உலகெங்கிலும உருவாக வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டு இன்றைய பாடலை வழங்குகிறேன்.

செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே

திரைப்படம்: சாந்தி நிலையம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா

செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
ரம்பம்மம் ராரம்பம் சம்சம்சம் ராரம்பம் ஓ ஓ ஓ வெண்ணிலவே
ரம்பம்மம் ராரம்பம் சம்சம்சம் ராரம்பம் வா வா வா வெண்ணிலவே

உள்ளங்கள் பேசட்டும் பிள்ளைகள் தூங்கட்டும்
வா வா வா வெண்ணிலவே
மஞ்சத்தில் மான் குட்டி கொஞ்சட்டும் கண் பொத்தி
ஆராரோ ஆரிராரோ

செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே

காலம் என்பது உன் வரவுக்காகக் காத்திருக்கும்
கனியைப் போன்றது நல் கனியைப் போன்றது
காலம் என்பது உன் வரவுக்காகக் காத்திருக்கும்
கனியைப் போன்றது நல் கனியைப் போன்றது
நாளை என்பது உன் நன்மைக்காகப் பூத்து நிற்கும்
மலரைப் போன்றது மலரைப் போன்றது

கண்மையின் வண்ணத்தில் உண்மைகள் மின்னட்டும்
ஓ ஹோ ஹோ ஹோ உள்ளங்களே
தெய்வங்கள் கூடட்டும் தாலாட்டுப் பாடட்டும்
ஆராரோ ஆரிராரோ

செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களே
செல்வங்களே

காத்திருந்த கண்களே

உலகில் பிறந்த நாம் ஒவ்வொருவரும் வாழ்வை இன்பமாகவே வாழ விரும்புகிறோம். நம்முள் ஏதேனும் ஒரு சிலர் வாழ்வின் இன்பங்களைத் துறந்து ஞான மார்க்கத்தில் செல்ல நேர்ந்தாலும் அவர்களும் வாழ்வின் நிலையாமையை உணர்ந்ததால் ஏற்பட்ட மன மாற்றத்தால் ஆசையழிந்து இவ்வுலக வாழ்வெனும் மாயையிலிருந்து விடுபட வழி தேடியே அலைகின்றனர். அத்தகையதொரு வழியைக் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பது பிரசித்தம். அதாவது, மாயையை வென்று முக்தியடையும் வழியை உண்மையில் கண்டவர் அதனைப் பிறருக்குச் சொன்னதில்லை, அவ்வாறு முக்தியடையும் வழியைப் பிறருக்குச் சொன்னவர்கள் தாம் அவ்வழியைக் கண்டதில்லை என்பதே இக்கூற்றின் பொருள்.

வாழ்விலே ஒரு பிடிப்பு ஏற்பட்டாலொழிய வாழ்வு சுவைக்காது. அத்தகைய பிடிப்பு ஏற்பட ஆசைகள் மிகவும் அவசியம். ஆசைகளிலே முக்கியமானவை மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகியவையே. இம்மூன்றிலும் முதல் இரண்டு வித ஆசைகள் நிறைவேறுவதால் விளையும் இன்பத்தை விடவும் அதிக இன்பத்தைத் தருவது பெண்ணாசை நிறைவேறுவதால் விளையும் இன்பமே. இப்பெண்ணாசை முறையாக ஒருவனுக்கு ஒருத்தியெனும் மனித சமுதாய நியதிக்குட்பட்டிருப்பின் அதில் துன்பம் கலவாத இன்பமே விளையும். இந்நியதியை மீறிய முறை தவறிய பெண்ணாசை துன்பத்தையே தருவது நிச்சயம்.

காதலனின் வருகைக்காகக் காத்திருக்கும் காதலிக்கும் காதலியின் வருகைக்காகக் காத்திருக்கும் காதலனுக்கும் தம் உள்ளத்தில் பொங்கிப் பெருகும் ஆசை வெள்ளம் காத்திருந்த பின்னர் தம் காதலரைக் கண்டதும் அடங்குவதுண்டோ?

காத்திருந்த கண்களே

மோட்டார் சுந்தரம் பிள்ளை
இயற்றியவர்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: பி.சுசீலா, பி.பி. ஸ்ரீநிவாஸ்

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே
காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே

கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேன்நிலா?
கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா
நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேன்நிலா?

மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன - அவன்
வருகையினால் இந்த இதழ்களின் மீது புன்னகை விளைந்ததென்ன?
பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ? - ஒரு
தலைவனை அழைத்துத் தனியிடம் பார்த்து தருகின்ற மனதல்லவோ?
தருகின்ற மனதல்லவோ?

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே

கைவிரலாலே தொடுவதிலே இந்தப் பூமுகம் சிவந்ததென்ன? இரு
கைகளினால் நீ முகம் மறைத்தாலே வையகம் இருண்டதென்ன
செவ்விதழோரம் தேனெடுக்க இந்த நாடகம் நடிப்பதென்ன - என்னை
அருகினில் அழைத்து இருகரம் அணைத்து மய்க்கத்தைக் கொடுப்பதென்ன?
மயக்கத்தைக் கொடுப்பதென்ன?

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே
லாலலாலா லல்லல்லா லாலலல்லா லல்லல்லா
லாலலாலா லாலாலா லாலலாலா லாலல்லா

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

"துன்பங்களிலே மனங்கெடாதவனாய், இன்பங்களிலே ஆவலற்றவனாய், பகைத்தலும் விழைத்தலுமின்றி ஒருவன் இருப்பானாகில் அத்தகைய தீரன் சாகாதிருக்கக் கடவான்"

"இறந்து போன ஜீவன் முக்தர்கள் யாவரும் ஜீவன் முக்தியை எய்திய பின் அந்த நிலையினின்றும் வழுவியவாகளாகவே கருதப் பட ல்வேண்டும். நித்திய ஜீவிகளாய் மண்மேல் அமரரைப் போல் வாழ்வாரே நித்திய ஜீவன் முக்தராவர். அத்தகைய நிலையை இந்த உலகில் அடைதல் சாத்தியமென்று மேற்கூரிய இரண்டு சுலோகங்களிலே கடவுள் போதிததிருக்கிறார். அதற்கு உபாயமும் அவரே குறிப்பபிட்டிருக்கிறார். குளிர் - வெம்மை, இன்பம் - துன்பம் எனும் இவற்றை விளைக்கும் இயற்கையின் அனுபவங்கள், தெய்வ கிருமையால் சாசுவதமல்ல. அநித்தியமானவை. தோன்றி மறையும் இயல்புடையன. ஆதலால் இவற்றைக் கண்டவிடத்தே நெஞ்சமிளகுதலும் நெஞ்சுடைந்து மடிதலும் சால மிகப் பேதமையாமன்றோ? ஆதலால் இவற்றைக் கருதி எவனும் மனத்துயரப் படுதல் வேண்டா. அங்ஙனம் துயரப் படாதிருக்கக் கற்பான் சாகாமலிருக்கத் தகுவான். இஃது ஸ்ரீ கிருஷ்ணனுடை கொள்கை. இதுவே அவருடைய உபதேசத்தின் சாராம்சம். பகவத் கீதையின் நூற்பயன். எனவே பகவத் கீதை அமிர்த சாஸ்திரம்."

பகவத் கீதை உரை - மஹாகவி பாரதியார்.

ஒருவருக்குத் துன்பங்கள் ஏற்படப் பெரும்பாலும் காரணம் அவரது மனப்பான்மையே ஆகும். பிறர் தனக்குத் துன்பமிழைத்த போதும் தன் மேல் அவதூறு சொன்னாலும் அவற்றால் மனம் கெடாமல் தைரியத்தைக் கைக்கொண்டு வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் உலகில் வாழ முடியும். "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" என்று அறிஞர் அண்ணாதுரை அறிவுறுத்தியதும் இக்கொள்கையையே ஆகும்.

அறிஞர் அண்ணாவின் வார்த்தைகளைக் கையாண்டு கவிஞர் கண்ணதாசன், "எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலவும்" என்று மொழிந்த பாடல் மிகவும் பிரசித்தமானது. பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள் தேனினும் இனிய தன் குரலால் சுமைதாங்கி எனும் தமிழ்த் திரைப்படத்துக்காகப் பாடிய இப்பாடலைத் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் சென்ற நிலையில் தற்செயலாகக் கேட்ட ஒருவர் தன் தற்கொலை எண்ணத்தை விடுத்து வாழ்ந்து பார்த்து விடுவது எனும் திடமான முடிவுக்கு வந்தது உண்மைச் செய்தி.

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

திரைப்படம்: அருணோதயம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி உன்
மனசப் பாத்துக்க நல்லபடி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி உன்
மனசப் பாத்துக்க நல்லபடி
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு
காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால்
கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு
கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி
குணத்துக்குத் தேவை மனசாட்சி உன்
குணத்துக்குத் தேவை மனசாட்சி

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

மயிலைப் பார்த்து கரடி என்பார்
மானைப் பார்த்து வேங்கை என்பார்
குயிலைப் பார்த்து ஆந்தை என்பார்
அதையும் சிலபேர் உண்மை என்பார்
யானையைப் பார்த்த குருடனைப் போல்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்? சிலர்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்?

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே

கடலில் விழுந்த நண்பனுக்கு
கைகொடுத்தேன் அவன் கரையேற
கரைக்கு அவன் வந்து விட்டான்
கடலின் நான் தான் விழுந்து விட்டேன்
சொல்லி அழுதால் தீர்ந்து விடும்
சொல்லத் தானே வார்த்தையில்லை அதை
சொல்லத்தானே வார்த்தையில்லை

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனசப் பாத்துக்க நல்லபடி உன்
மனசப் பாத்துக்க நல்லபடி

புதன், 22 ஜூன், 2011

இந்திய நாடு என் வீடு

நமது நாட்டில் மக்களிடையே ஒற்றுமை குலைந்து கலவரங்கள் ஏற்படுவதற்குப் பெரும்பாலும் சாதி மத பேத உணர்வேயாகும். இதன் காரணம் அரசியல்வாதிகள் மக்களிடையே ஒற்றுமை நிலவாமல் பார்த்துக் கொள்ள சாதி மதக் கலவரத்தை அவ்வப்பொழுது தூண்டுவதேயாகும். இந்தியாவில் இந்து முஸ்லிம் மதங்களைச் சேர்ந்தோரிடையே கலவரம் ஏற்பட்டதாலேயே இந்தியா இரண்டாக உடைந்து பாகிஸ்தான் உருவானது. இதற்குப் பெரும்பாலும் ஆங்கிலேயன் சூழ்ச்சியால் தூண்டிவிடப்பட்ட மத பேத உணர்வே. பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்து சென்ற பின்னரும் இந்தியாவின் பல பகுதிகளில் அவ்வப்பொழுது இத்தகைய இந்து முஸ்லிம் மதக்கலவரங்கள் உருவாகிக் கொண்டிருப்பதன் காரணம் சுதந்திர இந்தியாவில் மத்திய மாநில அரசியலில் ஈடுபடும் சில அரசியல்வாதிகளேயாவர்.

சத்தியமும் அஹிம்சையும் மத நல்லிணக்கமும் நிலைபெறத் தன் வாழ்நாளில் அரும்பாடு பட்ட அண்ணல் மஹாத்மா காந்தியடிகள் பிறந்த புண்ய பூமியான குஜராத் மாநிலத்தில் இத்தகைய மதக் கலவரங்கள் உருவாக அரசியல்வாதிகளே காரணம் என்பதற்குக் கண்கூடான சான்றுகள் உள.

January 28, 2001 அன்று குஜராத்தின் பூஜ் எனும் இடத்தில் மையம் கொண்டு பெருநாசத்தை விளைவித்த மாபெரும் பூகம்பத்தில் மாட மாளிகைகள் பலவும் நொடிப்பொழுதில் மண்மேடாயின பல்லாயிரக் கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கி மடிந்தனர். அச்சமயம் இடிபாடுகளில் சிக்கித்தவித்தவரைக் காப்பதிலும் அவ்வாறு காப்பாற்றப் பட்டு வீடுகளையும் உற்றார் உறவினர்களையும் இழந்து அநாதைகளாக நின்ற பலரை எஞ்சியிருந்தவர்கள் தம் சக்தியெல்லாம் செலவழித்துக் காக்கப் பெரிதும் உதவினர். சில காலத்துக்கு முன்பு வரை அடிக்கொரு முறை இந்து முஸ்லிம் கலவரம் ஏற்படுவது வழக்கமாயிருந்த குஜராத் மாநிலத்தில் இந்த பூகம்பத்தின் பின்னர் உலகே கண்டு அதிசயிக்கும் அளவில் இந்து முஸ்லிம் ஒற்றுமை நிலவியது.

http://www.peopleofindia.net/politics/video/20100821_gujarat-earthquake.php

இது அங்குள்ள அரசியல்வாதிகளின் கண்களை உறுத்தியது போலும். இவ்வொற்றுமையைக் குலைக்கத் தக்க சமயம் பார்த்துக் காத்திருந்த புல்லுருவிகள் சிலர் ராம் ஜென்ம பூமி பூஜைக்காக அயோத்யாவிற்குச் சென்ற ஹிந்துக்கள் பலர் ஒன்று சேர்ந்து 27 February 2002 அன்று திரும்பி வந்து கொண்டிருக்கையில் அவர்கள் பயணம் செய்த சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயில் வண்டிக்கு கோத்ரா எனுமிடத்தில் வெடிகுண்டு வைத்துத் தீ வைத்தனர்.

http://www.peopleofindia.net/politics/video/20100821_gothra-train.php

இந்த சம்பவத்துக்கு முஸ்லிம்களே காரணம் என்று புரளிகளைக் கிளப்பிய அரசியல்வாதிகள் இதன் விளைவாக உ;லகமே அஞ்சி நடுங்கும் வண்ணம் அரங்கேறிய படுகொலை சம்பவங்கள் ஏற்படக் காரணமாயினர்.

http://www.peopleofindia.net/politics/video/20100821_gujarat-riots.php

அரசியல்வாதிகளும் சமூக விரோதிகளும் எவ்வளவு சதி செய்த போதிலும் இந்திய தேசத்திலே மக்கள் பெரும்பாலும் தங்களுக்குள் சாதி மத பேதங்கள் பாராட்டாமல் ஒற்றுமையுடன் வாழப் பழகியுள்ளனர். இத்தகைய சாதி மத ஒற்றுமை நாட்டில் நிலவ நம் நாட்டில் திரையுலகினர் அவ்வப்பொழுது வெளியிடும் திரைப்படங்களின் பங்கு மிகவும் பாராட்டுக்குரியது.

சாதி மதங்களைப் பாரோம் உயர்
ஜன்மமித் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே அன்றி
வேறு குலத்தவராயினும் ஒன்றே

இந்திய நாடு என் வீடு

திரைப்படம்: பாரத விலாஸ்
இயற்றியவர்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, ஏ.எல். ராகவன்

இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு
திசை தொழும் துருக்கர் என் தோழர்

திசை தொழும் துருக்கர் என் தோழர்
தேவன் இயேசுவும் என் கடவுள்

எல்லா மதமும் என் மதமே
எதுவும் எனக்கு சம்மதமே
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்

கங்கை பாயும் வங்கம் செந்நெல்
கதிர்கள் சாயும் தமிழகம்
தங்கம் விளையும் கன்னடம்
நல் தென்னை வளரும் கேரளம்

ஆந்திரம் அஸ்ஸாம் மராட்டி
ராஜஸ்தான் பாஞ்சாலமும்
சேர்ந்து அமைந்த தேசம் எங்கள்
அன்னை பூமி பாரதம்

இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
ரகுபதி ராகவ ராஜாராம்
பதீத பாவன சீதாராம்

இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ
இரிகோ இரிகோ இக்கட பாருங்கோ
சுந்தரத் தெலுங்கினில் பாடுங்கோ
குச்சுப்புடி நடனங்கள் ஆடுங்கோ

சல் மோகனரங்கா பாடுங்கோ
சல் மோகனரங்கா பாடுங்கோ

ஸ்ரீசைலம் திருப்பதி ஷேத்திரம் உண்டு
தரிசனம் பண்ண வாருங்கோ
கப்பல் கட்டுற விசாகப் பட்டினம்
கடற்கரை உண்டு பாருங்கோ

சல் மோகனரங்கா பாடுங்கோ
சல் மோகனரங்கா பாடுங்கோ

ஏனு ஸ்வாமி இல்லி நோடு
எங்க ஊரு மைசூரு
காவிரி பிரிந்த கன்னட நாட்டை
யாவரும் போற்றி சொல்வாரு
ஏனு ஸ்வாமி இல்லி நோடு
எங்க ஊரு மைசூரு

ப்ருந்தாவனமும் சாமுண்டி கோவிலும்
நோடு ஸ்வாமி நீ நோடு
நீ நோடு மைசூரு
எல்லா மொழியும் எல்லா இனமும்
ஒண்ணு கலந்தது பெங்களூரு

ஏனு ஸ்வாமி
ஏனு ஸ்வாமி இல்லி நோடு மைசூரு

படச்சோன் படைச்சோன் எங்களப் படச்சோன்
அல்லா எங்கள் அல்லா அல்லாஹூ அல்லா
ஞானும் இவளும் ஜனனமெடுத்தது
கேரளம் திருச்சூர் ஜில்லா
தேக்கு தென்னை பாக்கு மரங்கள்
இவ்விட பாக்கணும் நீங்க
தேயிலை மிளகு விளைவதைப் பார்த்து
வெள்ளையன் வந்தான் வாங்க

படைச்சோன் படைச்சோன் எங்களப் படச்சோன்
அல்லா எங்கள் அல்லா அல்லாஹூ அல்லா
அல்லாஹூ அல்லா அல்லாஹூ அல்லா

சுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே
பஞ்சாப்வாலா கீத்து சுனோ
பஞ்சாப்வாலா கீத்து சுனோ
தங்கக் கலசம் பொற்கோவில்
எங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ
ஆஹா தேக்கோ தேக்கோ
உய்யாஹு தேக்கோ தேக்கோ
உய்யாஹு தேக்கோ தேக்கோ
உய்யாஹு தேக்கோ தேக்கோ

ஜீலம் ஷட்லஜ் நதிகள் பாயும்
கோலம் காண ஆவோ ஆவோ
ஆவோ ஆவோ உம் ஆஹா அவோ ஆவோ

பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி
பகத்சிங் பிறந்த பொன்னாடு
பகத்சிங் பிறந்த பொன்னாடு
யாஹூங் யாஹூங் உய்யாஹூ யாஹூங் யாஹூங்
யாஹூங் யாஹூங் உய்யாஹூ யாஹூங் யாஹூங்
யாஹூங் யாஹூங்

எங்கு பிறந்து எங்கு வளர்ந்தும்
எல்லாம் ஒருதாய்ப் பிள்ளைகள்
எல்லாம் ஒருதாய்ப் பிள்ளைகள்
வாழை வழியாக வந்து
பேசிப் பழகும் கிள்ளைகள்

சத்தியம் எங்கள் தேசம்
சமத்துவம் எங்கள் கீதம்
வருவதைப் பகிர்ந்து உண்போம்
வந்தே மாதரம் என்போம்

வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்

திங்கள், 20 ஜூன், 2011

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

கவிஞர்கள் வாக்கு வன்மை பெற்றவர்கள். அவர்கள் வாழ்த்தினாலும் வைதாலும் அவர்களது வாக்கு பலிக்கும் என்று நம் சமுதாயத்தில் பெரும்பாலானோர் நம்புகின்றனர். இத்தகைய வாக்குப் பலிதம் கொண்ட கவிஞர்கள் பலரைப் பற்றியும் அவர்கள் வாக்கு பலித்த நிகழ்ச்சிகளையும் நாம் நூல்களில் படித்துள்ளோம் பிறர் சொல்லிக் கேள்விப்பட்டதும் உண்டு. அவ்வாறு படித்த கேள்விப்பட்ட நிகழ்ச்சிகள் உண்மையில் நிகழ்ந்தனவா அல்லது அவற்றைப் பிறருக்கு எடுத்துரைத்தவர் தம் கற்பனையைக் கலந்து மிகைப்படுத்தினரா எனபதை நாமறியோம்.

எது எவ்வாறாயினும் நமது நாட்டிலே பிறந்து வளர்ந்து நம் தேச விடுதலைக்குப் பாடுபட்டுழைத்த மஹாகவி பாரதியார் சொன்ன வாக்கு பலித்ததை நாம் கண்கூடாகக் காண்கிறோம். வெள்ளையரின் ஆதிக்கத்தில் நம் நாடு இருந்த காலத்திலேயே வாழ்ந்து மறைந்த போதிலும் சுதந்திர இந்தியாவைத் தன் மனக்கண் முன்னர் கண்டு அதில் ஒரு சுதந்திரம் பெற்ற பிரஜையாக மனதாலேயே வாழ்ந்தார் பாரதியார்.

கவிஞர்கள் மட்டுமல்ல, உண்மையான நம்பிக்கையுடன் யாரும் இத்தகைய மனநிலையை அடைவாரெனில் அவரது எண்ணம் ஈடேறுவது உறுதி. இது மனத்தின் மாபெரும் சக்தியாகும். பல மாபெரும் தலைவர்கள் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் நாட்டுக்கென அர்ப்பணித்து ஆயுள் முழுதும் தாமும் தமது குடும்பமும் வறுமையில் வாடிய போதிலும் அதனைப் பொருட்படுத்தாது நாடு விடுதலையடைவதொன்றே தமது லட்சியமாகக் கொண்டு பாடுபட்டுப் பெற்றுத்தந்த சுதந்திரத்தை நாம் இந்நாளில் பெரும்பாலும் இழந்து விட்டோம். ஏழைகள் வளம் பெறக்
கோடானு கோடிகள் கொட்டிக் கொடுப்பதாக அரசியல் மேடைகளெங்கும் பேசப்பட்டாலும் அவ்வாறு கொட்டிய கோடிகள் யாவும் இடையில் உள்ள சுயநலவாதிகளுகே பெரும்பாலும் போய்ச்சேரும் இழிநிலை நம் நாடெங்கிலும் நிலவுகிறது.

இத்தகைய நிலைமை நீங்கி நம் நாடு நல்லாட்சி பெற்று நீதி நிலைபெற வேண்டுமென்று நாமெல்லோரும் என்றும் மனதில் விரும்பிப் பிரார்த்தனை செய்வதுடன் அத்தகைய நல்ல நிலைமை ஏற்படத் தக்கவாறு நமது வாழ்வையும் நடவடிக்கைகளையும் அமைத்துக் கொண்டு, சுயநலத்தை விடுத்து, துன்பப் படுவோருக்கு நம்மாலியன்ற உதவிகளைத் தவறாமல் செய்து வாழ்வோம்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
இசை: எஸ்.வி. வெங்கரராமன்
பாடியவர்: டி.கே. பட்டம்மாள்

ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம்
எல்லோரும் சமமென்பதுறுதியாச்சு
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு நாம்
எல்லோரும் சமமென்பதுறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே

பூம்.. புபுபு பூம் புபுபு பூம் புபுபு பூம்

சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
இதை தரணிக்கெல்லாமெடுத்து ஓதுவோமே
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே
இதை தரணிக்கெல்லாமெடுத்து ஓதுவோமே
ஆடுவோமே

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்
விழலுக்கு நீர் பாய்ச்சி மாயமாட்டோம் வெறும்
வீணருக்குழைத்துடலம் ஓயமாட்டோம்
ஆடுவோமே

நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம்
நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்
நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் பரி
பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம் பரி
பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்

ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோம் ஆடுவோம் ஆடுவோம் ஆடுவோம் ஆடுவோமே