திங்கள், 11 ஜூலை, 2011

இறைவன் படைத்த உலகை எல்லாம்

மனிதன் உலக வாழ்வில் தொடர்ந்து இன்பம் பெறுகையில் தன்னை மறந்து சக மனிதர்களையும் மறந்து, தன்னை வந்தெய்திய இன்பத்தைத் துய்ப்பதிலேயே ஈடுபடுகிறான். இடையில் ஒரு சிறு துன்பம் வரினும் அதைத் தாங்கும் வலுவின்றி அத்துனபத்தை நீக்கப் பிறர் உதவியையும் இறையருளையும் நாடுகிறான். இது சாமான்யர்களின் நிலை. இதற்கு மாறாக ஞானிகள் இன்பம் வரினும் துன்பம் வரினும் எக்காலத்தும் இறையருளையே வேண்டி இன்பத்தில் மூழ்கித் தன்னை இழக்காமல், துன்பத்தில் வருத்தமுறாமல் திட சித்தத்துடன் எல்லாம் அவன் செயல் எனும் ஏகாக்ர
சித்தத்துடன் தியான நிலையிலேயே வாழ்கின்றனர்.

உடம்பு அழியும் தன்மை வாய்ந்தது. ஆன்மா அழிவில்லாதது. நீயோ நானோ இதற்கு முன்னர் இல்லாதிருந்ததும் இல்லை இவ்வுடம்பு மண்ணோடு மண்ணாகி மறைந்த பின்னர் இல்லாது போவதும் இல்லை. இவ்வுடம்புக்குரிய அடையாளமாக வைக்கப்பட்ட பெயரால் நாம் அறியப்படுவது மாயை. இவ்வுடம்புக்குரியவராக நம்மை நாமே எண்ணிக்கொண்டு இவ்வுடம்புக்கொரு துன்பம் வருகையிலோ இவ்வுடம்பைச் சேர்ந்து அதன் வடிவாகவே இயங்கும் மனதுக்கொரு துக்கம் வருகையிலோ வருந்தி வாடுவது அறியாமையே. பிறப்பு என்றிருந்தால் இறப்பு என்று நிச்சயம உண்டு என்பது இயற்கை நியதி. அதிலிருந்து யாரும் மீள இயலாது.

மனிதன் பிற அனைத்து உயிர்களை விடவும் மேலான அறிவு படைத்தவன். மனிதராகப் பிறந்த நாம் செய்யத் தக்கது இறைவனைச் சரணடைந்து இன்பதுன்பங்களில் உழலாமல் பிறவியில்லாத நிலையடைய முயல்வதே ஆகும்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்.

"குளிர் - வெம்மை, இன்பம் - துன்பம் எனும் இவற்றை விளைக்கும் இயற்கையின் அனுபவங்கள், தெய்வ கிருமையால் சாசுவதமல்ல. அநித்தியமானவை. தோன்றி மறையும் இயல்புடையன. ஆதலால் இவற்றைக் கண்டவிடத்தே நெஞ்சமிளகுதலும் நெஞ்சுடைந்து மடிதலும் சால மிகப் பேதமையாமன்றோ? ஆதலால் இவற்றைக் கருதி எவனும் மனத்துயரப் படுதல் வேண்டா. அங்ஙனம் துயரப் படாதிருக்கக் கற்பான் சாகாமலிருக்கத் தகுவான்." என்று கீதை உரைப்பதை மஹாகவி பாரதியார் விளக்குகிறார்..

இத்தகைய மனப்பக்குவத்தை அடைய இறையருள் அவசியம். இறைவன் எங்கும் நிறைந்திருந்தாலும் நம்மைப் போன்ற சாமான்ய மனிதர்கள் அரூபமான நிலையில் இறைவனை அடைவது கடினம். இதன் காரணம் வாழ்வில் நம்மைப் பாதிக்கும் விஷயங்கள் நம் கவனத்தை திசைதிருப்பி விடுவதேயாகும். இதற்கொரு உபாயமாகவே நம் முன்னோர்கள் ஆலயங்களை ஏற்படுத்தி, அங்கு வருவோர் இறையுணர்வுடன் இயங்கும் சூழ்நிலையை உருவாக்கி உலகுக்கு வழி காட்டியுள்ளனர்.

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்று ஔவைப் பிராட்டி மொழிந்ததும் இதன் காரணமாகவே ஆகும்.

இறைவன் படைத்த உலகை எல்லாம்

திரைப்படம்: வா ராஜா வா
இயற்றியவர்: நெல்லை அருள்மணி
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல்
உண்மை பிறப்பதில்லை
உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல்
உண்மை பிறப்பதில்லை
உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்
ஒன்றும் நடப்பதில்லை
உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்
ஒன்றும் நடப்பதில்லை
ஒன்றும் நடப்பதில்லை

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

இரண்டு மனிதர் சேர்ந்த போது
எண்ணம் வேறாகும்
இரண்டு மனிதர் சேர்ந்த போது
எண்ணம் வேறாகும்
எத்தனை கோவில் இருந்த போதும்
இறைவன் ஒன்றாகும்
எத்தனை கோவில் இருந்த போதும்
இறைவன் ஒன்றாகும்
இறைவன் ஒன்றாகும்

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

இசையால் அவனை இரங்க வைப்பது
மனிதன் குணமாகும்
இசையால் அவனை இரங்க வைப்பது
மனிதன் குணமாகும்
இசையில் மயங்கி இரங்கி வருவது
இறைவன் மனமாகும்
இசையில் மயங்கி இரங்கி வருவது
இறைவன் மனமாகும்
இறைவன் மனமாகும்

இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இறைவன் வாழுகின்றான்

இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை

இருமனம் ஒன்றாகி இணைந்து விளங்கும் திருமண வாழ்வில் இன்பத்துக்கு எல்லையே இல்லை. இதனாலேயே இல்லறத்தை ஞானியர்கள் பலரும் போற்றியுள்ளனர். பண்டைய பாரத நாட்டில் துறவறம் மேற்கொண்டு நாட்டை விடுத்துக் கானகங்களில் ஆச்சிரமம் அமைத்துத் தவவாழ்க்கை மேற்கொண்ட முனிவர்களும் இல்லறவாசிகாளாக இருந்தனர் எனும் உண்மையை இராமாயணம், மஹாபாரதம் முதலிய புராண இதிகாச காவியங்கள் காட்டுகின்றன. முனிவர்களுள் அனைவருக்கும் வழிகாட்டியாகக் கருதப் படுபவர் ஜனகர். இவர் மிதிலா நகர மன்னராக இருந்த போதிலும், இல்லற வாழ்க்கை மேற்கொண்ட போதிலும் தவ வாழ்க்கையையே வாழ்ந்தார் என்பது பிரசித்தி.

இல்லற வாழ்வில் காமம் தரும் இன்பம் வெகு சில நாட்களேயாகும். அதனாலேயே ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று நம் முன்னோர்கள் மொழிந்துள்ளனர். இதன் பொருளாவது சிலர் நினைப்பது போல 60, 30 இரண்டையும் கூட்டக் கிடைக்கும் 90 நாட்களில் திருமண வாழ்வு அலுத்துப் போய்விடும் என்பதல்ல. அனேகமாக திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வில் ஈடுபடும் தம்பதியர் புத்திர பாக்கியத்தை இந்தக் குறுகிய காலத்தில் பெற இடமிருப்பதால் பிள்ளை பிறந்த பின்னர் அப்பிள்ளையில் மேல் ஏற்படும் அபரிமிதமான ஈடுபாடும் கணவன் மனைவி இருவரிடையே அப்பிள்ளையில் மேல் இருவரும் கொள்ளும் பாசத்தின் காரணமாக ஏற்படும் மனம் ஒருமித்த நிலையும் அவர்களது வாழ்வில் காமத்தினும் மேலான உயர்ந்ததொரு இன்பம் பிறக்க ஏதுவாகின்றன.

அதன் பின் அப்பிள்ளையையும் அதன் பின்னர் வேறு பிள்ளைகள் பிறந்தால் அவர்களையும் ஆளாக்குவதிலும், பிள்ளைகள் ஆளாகி வளர்ந்து உரிய வயதை எட்டியதும் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் தங்களை தாத்தா பாட்டி என அழைத்து அன்பைப் பொழிவதையும் அனுபவிக்க ஏற்படும் இன்பம் இவ்வுலகில் வேறெவ்வகையிலும் கிடைத்தற்கரியதாகும்.

எவ்வாறாகிலும் இவை அனைத்திற்கும் அடிப்படை ஆண் பெண் இருபாலாரிடையே இயல்பாகவே ஏற்படும் ஈர்ப்பும் காதலுமே ஆகும். காதல் திருமணத்தில் முடிகையில் ஆனந்தமே!

இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை

எங்கள் தங்கராஜா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: பி.சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்

இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை

இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை ம்ம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை

பாதிக்கண்களை மூடித் திறந்து பார்ப்பதில் இன்பம்
பாதித் தூக்கத்தில் கூந்தலைத் தடவி ரசிப்பதில் இன்பம் ஆ..
பாதிக்கண்களை மூடித் திறந்து பார்ப்பதில் இன்பம்
பாதித் தூக்கத்தில் கூந்தலைத் தடவி ரசிப்பதில் இன்பம்

பாதிப் பாதியாய் இருவரும் மாறி
பழகும் வித்தையே பள்ளியில் இன்பம்
காலை என்பதே துன்பம் இனிமேல்
மாலை ஒன்றுதான் இன்பம்
காலை என்பதே துன்பம் இனிமேல்
மாலை ஒன்றுதான் இன்பம்

இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை ஆ..
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை

ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம் ஆ..
ஆடை இதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது பழக்கம்
காலை நேரத்தில் காயங்கள் பார்த்து
களிப்பதென்பது கவிதையின் விளக்கம்
கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
காணப் போவது மஞ்சம்
கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல்
காணப் போவது மஞ்சம்

இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை?
இதயத்தில் விழுந்தது திருமண மாலை
உறவுக்கு உரிமைக்கும் பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்தக் கோலம்
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை
இருவர் என்பதே இல்லை இனி நாம்
ஒருவர் என்பதே உண்மை

லால லாலலா லாலா லாலா
லால லாலலா லாலா
லால லாலலா லாலா லாலா
லால லாலலா லாலா