புதன், 16 டிசம்பர், 2009

என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே

நமது உடலில் நாம் மிகவும் இன்றியமையாததாய்க் கருதும் உறுப்பு கண்ணேயாகும். இதனாலேயே நாம் மிகவும் உயர்வாக எண்ணும் எதனையும் நம் கண்ணுக்கு நிகராகப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் எனும் கருத்து நிலவுகிறது, நாம் பெற்ற பிள்ளையைக் "கண்ணே, கண்மணியே" எனக் கொஞ்சி மகிழ்வதும், கல்வியைக் கண்ணுக்கு நிகராகக் கொண்டு,

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்று ஔவையார் தனது கொன்றை வேந்தன் கவிதைத் தொகுப்பில் கூறியதும்,

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாதவர்

என்று வள்ளுவர் உரைத்த பொன்மொழியும் இக்காரணம் கொண்டே.

நம்மிடையே கண் பார்வையின்றித் தவிப்போர் பலரும் வாழ்கின்றனர். பார்வையின்மைக்கு முக்கியக் காரணங்களுள் ஒன்று கண்ணின் பாவையை மூடியிருக்கும் கருப்பு நிறத்திலான Cornia எனும் கருவிழி சேதமுற்றிருப்பதாகும். அதிர்ஷ்டவசமாக இக்காரணத்தால் பார்வை இழந்தவர்கள் வேறொருவரது கருவிழியை தானமாகப் பெற்றுக் கண்பார்வை பெற வாய்ப்பிருப்பதால், நம்மில் பலர் தமது கண்களை இத்தகையவர்களுக்கு தானமாகத் தரும் வழக்கம் ஏற்பட்டு நாளடைவில் மேலும் அதிகப் படியானோர் கண்தானம் செய்ய முனவரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கண்தானம் செய்த ஒருவரது கண்களிலிருந்து கருவிழிகளை மட்டும், அவர் இறந்த சிறிது நேரத்திற்குள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, அவற்றை முறைப்படி கருவிழிகள் பாதிக்கப்பட்டதால் பார்வையிழந்த ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி, கண் பார்வை கிடைக்கச் செய்கின்றனர்.

நாம் உயிருடனிருக்கையில் வேறு தான தருமங்கள் செய்கிறோமோ இல்லையோ, இறந்த பிறகாவது தானம் செய்வோமே. நமது கண்கள் நாம் இறந்த பின்னரும் தொடர்ந்து உலகத்தைப் பார்க்க வைக்க ஒரே வழி கண்தானமே.


என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே


திரைப் படம்: காசி
இயற்றியவர்: மு. மேத்தா
இசை: இளையராஜா
பாடியவர்: ஹரிஹரன்
ஆண்டு: 2001

என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே - என்
கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே - என்
கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கலகலகலவெனத் துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே - என்
நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்

உங்களைப் போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டுப் போதுமோ எடுத்துக் கூறவே இதயம் தாங்குமோ? நீ கூறு

என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே - என்
கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கலகலகலவெனத் துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே - என்
நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்

இறைவனிடம் வரங்கள் கேட்டேன் வரங்களை அவனே கொடுத்தான்
மனிதரில்............ இதை யாரும் அறிவாரோ?
நான் பாடும் பாடல் எல்லாம் நான் பட்ட பாடே அன்றோ?
பூமியில் இதை யாரும் உணர்வாரோ?
மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மரநிழல் நேசம்
எதற்கும் நான் கலங்கியதில்லை இங்கே
ராகம் உண்டு தாளம் உண்டு என்னை நானே தட்டிக் கொள்வேன்
என் நெஞ்சில் உண்மை உண்டு வேறென்ன வேண்டும்?

என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே - என்
கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கலகலகலவெனத் துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே - என்
நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்

பொருளுக்காய்ப் பாட்டைச் சொன்னால் பொருளற்ற பாட்டேயாகும்
பாடினேன் அதை நாளும் நாளும்
பொருளிலாப் பாட்டானாலும் பொருளையே போட்டுச் செல்வார்
போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
மனமுள்ளோர் என்னைப் பார்ப்பார் மனதினால் அவரைப் பார்ப்பேன்
மறந்திடா ராகம் இது தானே
வாழ்க்கை எனும் மேடை தனில் நாடகங்ககள் ஓராயிரம்
பார்க்க வந்தேன் நானும் பார்வையின்றி

என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே - என்
கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கலகலகலவெனத் துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே - என்
நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்

உங்களைப் போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்
சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டுப் போதுமோ எடுத்துக் கூறவே இதயம் தாங்குமோ? நீ கூறு

என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே - என்
கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கலகலகலவெனத் துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே - என்
நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்

என்ன பார்வை உன்தன் பார்வை

வாழ்க்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம். அதனை எப்படி வாழ்வது என்பது நம் கையிலேயே உள்ளது. அளவோடு ஆசைப்பட்டு, உலகில் எங்கும் நிறைந்திருக்கும் இன்பங்களை முழுமையாக சுவைத்து, அனைவருடனும் அன்புடன் பழகி எந்நாளும் இன்புற்றிக்க வேண்டும். எப்பொழுதும் முகமும் அகமும் மலர்ந்து சிரித்து வாழ வேண்டும். பிறரையும் சிரிக்க வைத்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். வாழ்வில் துன்பங்கள் நம்மை மீறி வந்தெய்துகையில் அவற்றைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்டும் முயற்சியில் பெரும்பான்மையான நேரம் செலவாகிய பொழுதும், மீதமிருக்கு சொற்ப நேரத்தை மகிழ்ச்சியுடன் கழிக்க ஏற்றவாறு, தரமான பொழுது போக்கு அம்சங்களைக் கொண்டு தயாரிக்கப் படும் திரைப்படங்களைக் கண்டு களிக்க வேண்டும்.

தற்காலக் கல்வி முறை குழந்தைகளை இயந்திர கதியில் இயங்க வைப்பதால் அவர்களுக்கும் தக்க பொழுது போக்காக இத்தகைய திரைப்படங்களைப் பார்த்து மகிழும் வாய்ப்பை அளிக்க வேண்டும். திரைப்படங்களில் நகைச்சுவை மிகுந்து இருத்தல் சிறப்பு. திரைப்படங்களுள் பல முழு நீள நகைச்சுவைச் சித்திரங்களாக வெளிவந்துள்ளன. அவற்றுள் மிகவும் சிறந்த திரைப்படங்களுள் ஒன்று காதலிக்க நேரமில்லை. அக்காலத்தில் பெரும்பாலும் கருப்பு வெள்ளைப் படங்களே மிகுதியாகத் தயாரிக்கப் பட்ட நிலையில் இது ஒரு மூழு நீள ஈஸ்ட்மென் கலரில் வெளியானது. எத்துணை முறை பார்த்தாலும் திரும்பவும் பார்க்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்ட வல்ல திரைப்ப்டம் இது. படம் முக்காலே மூணு வீசம் பொள்ளாச்சியிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைத்திருக்கும் ஆளியார் அணைக்கட்டுப் பகுதியிலேயே தாயாரிக்கப் பட்டது. சிறந்த கதையம்சத்துடன், தரமான காதல் காட்சிகளும் நகைச்சுவைக் காட்சிகளும் கொண்டு இனிமையான பாடல்களுடன் அமைந்தது இப்படம்.


என்ன பார்வை உன்தன் பார்வை


திரைப்படம்: காதலிக்க நேரமில்லை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: எல்.ஆர். ஈஸ்வரி, கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1964

என்ன பார்வை உன்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை
மெல்ல மெல்லப் பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா ஆ ஆ
என்ன பார்வை உன்தன் பார்வை
என்னை மறந்தேன் இந்த வேளை
வண்ண வண்ண சேலை தொட்டுக்
கண்ட சுகம் அம்மம்மா ஆ ஆ

தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு
பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா?
தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு
பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா?
சின்னச் சின்ன நெஞ்சில் உன்னை
எண்ண எண்ண அம்மம்மா ஹோய்

கன்னங்கள் என்னும் தங்கத் தட்டு
கை பட்டு சின்னங்கள் கொண்டதோ?
சொல்லச் சொல்ல உள்ளம் துள்ளும்
இன்பம் என்ன சொல்லம்மா ஹோய்

என்ன பார்வை உன்தன் பார்வை
என்னை மறந்தேன் இந்த வேளை
வண்ண வண்ண சேலை தொட்டுக்
கண்ட சுகம் அம்மம்மா ஆ ஆ

மை கொண்ட கண்கள் மெல்ல மூடும்
பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ?
மை கொண்ட கண்கள் மெல்ல மூடும்
பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ?
பிஞ்சுத் தென்றல் நெஞ்சைத் தொட்டுக்
கொஞ்சக் கொஞ்ச அம்மம்மா ஹோய்

ஆகட்டும் என்ற பின்னும் அச்சம்
ஏன் மிச்சம் கண்ணல்ல ஓடி வா
ஆகட்டும் என்ற பின்னும் அச்சம்
ஏன் மிச்சம் கண்ணல்ல ஓடி வா
அக்கம் பக்கம் யாரும் இல்லை
வெட்கம் என்ன சொல்லம்மா ஹோய்

என்ன பார்வை உன்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை
மெல்ல மெல்லப் பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா ஆ ஆ