திங்கள், 23 நவம்பர், 2009

சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே

ஒரு குழந்தையைக் கொஞ்சி மகிழும் இன்பத்தைப் போல் மெய்மறக்கச் செய்வது இவ்வுலகில் வேறில்லை.
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவுதடி
உச்சிதன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி
கன்னத்தில் முத்தமிட்டால உள்ளம் தான் கள்வெறி கொள்ளுதடி
உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி

என்று மஹாகவி க்ண்ணனையே ஒர் பெண் குழந்தையாக பாவித்துப் பாடி மகிழ்ந்தார் எனில் மழலைச் செல்வங்கள் தரும் பேரின்பம் அனைத்திலும் பெரியது என்பதில் ஐயமும் உண்டோ?

பாவம் ராகம் தாளம் சேர்ந்த பரத கலை, இந்தப் பாரிலுள்ளோர் என்றும் என்றும் போற்றும் கலை. இதனைப் பெண்கள் ஆடிப் பார்க்கப் பேரின்பம் விளையும். அதிலும் குறிப்பாக பரதக் கலை பயின்ற ஒரு சிறுமி தமிழ்ப் பாடலுக்கு அபிநயம் பிடித்து ஆடுவதைக் காணக் கண் கோடி போதாது.

சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே

வீரபாண்டிய கட்டபொம்மன்
இயற்றியவர்: கு.மா. பாலசுப்பிரமணியம்
பாடியவ்ர்: எஸ். வரலக்ஷ்மி
இசை: ஜி. ராமநாதன்

சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
மங்காத பொன்னே
மங்காத பொன்னே உன் வாய் முத்தம் ஒன்றாலே
மாறத இன்பங்கள் சேர்ப்பாயடி
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

வாடாத ரோஜா உன் மேனி
வாடாத ரோஜா உன் மேனி - துள்ளி
ஆடாதே வா சின்ன ராணி
பூவான பாதம் நோவாத போதும்
புண்ணாகி என் நெஞ்சம் வாடும்
பாராளும் மாமன்னர் மார் மீதிலே நீ
சீராட வாராய் செந்தேனே - இந்தப்
பாராளும் மாமன்னர் மார் மீதிலே நீ
சீராட வாராய் செந்தேனே

சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

செவ்வல்லிக் கை வண்ணம் காட்டி ஆ..ஆ..
செவ்வல்லிக் கை வண்ணம் காட்டி எங்கள்
சிந்தை எல்லாம் இன்பமூட்டி நீ
ஆடாதே கண்ணே யாரேனும் உன்னை
கண்டாலும் ஆகாது மானே
அன்பென்னும் ஆனந்தப் பூங்காவிலே நீ
பண் பாட வாராய் செந்தேனே

சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக