புதன், 25 ஜனவரி, 2012

சும்மாக் கெடந்த நெலத்தைக் கொத்தி


இந்தியா ஒரு விவசாய நாடு. இங்கே விளையும் தானியங்களுக்குப் பஞ்சமில்லை. இது கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் நாடு என்று அமரகவி பாரதியால் புகழப்பெற்றது. இருப்பினும் இந்நாட்டில் ஊருக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயிகள் அநேகமாக அனைத்து மாநிலங்களிலும் கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். விவசாயிகள் தற்கொலை வெகு காலமாகவே ஒரு தொடர்கதையாக நிகழ்ந்து வந்த போதிலும் அது பற்றி ஆட்சியாளர்கள் எவரும் எவ்வித அக்கரையும் கொள்வதில்லை. விவசாயிகள் பெரும்பாலும் கடன் வாங்குவது செயற்கை இரசாயன உரத்துக்கும் பல்வேறு காரணங்களால் தங்களது நிலத்தில் விளையும் விளைபொருட்கள் பாழவதாலும் சரியான விலைக்கு விற்கப் படாமல் நஷ்டமடைவதாலும் உண்டாகும் இக்கட்டான சூழ்நிலையை சமாளிப்பதற்குமே ஆகும்.

இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்து வந்த இந்திய மக்கள் அந்நியர் ஆதிக்கத்தால் மதிமயங்கி செயற்கை வழிமுறைகளைப் பின்பற்றியதன் விளைவால் இன்று பல விளைநிலங்கள் செயற்கை உரங்களாலும், விஷத் தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளாலும் பாழ்பட்டு மலட்டுத் தன்மையை எய்தியுள்ளன. அவற்றில் பயிர்கள் செழித்து வளர ஏற்ற சூழ்நிலையில்லாமல் போவதால் பலர் தம் விளைநிலங்களை வந்த விலைக்கு விற்றுவிட்டு, கிராமங்களை விட்டு நகரங்களை நாடிச் சென்று அங்கே அரை வயிற்றுக் கஞ்சிக்காகக் கூலி வேலை செய்து நடைபாதையோரங்களில் படுத்துறங்கிப் பரிதாப வாழ்வை மேற்கொள்ளும் சூழ்நிலை நம் நாட்டில் உருவாகியுள்ளது. அது மட்டுமின்றி நாம் உண்ணும் உணவு மட்டுமின்றி நிலத்தடி நீரும் பாழ்பட்டு விஷமாகின்றது, சுற்றுச் சூழல் மாசுபடுகின்றது, உலகம் வெப்பமயமாகி உலகமே அழிவுப்பாதையில் இட்டுச்செல்லப்படுகின்றது.

விவசாயிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் காணவும் உலகைக் காக்கவும், இயற்கை வழி விவசாயத்தைக் கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதுடன் விவசாயிகளை முறையாக வழிநடத்கிறார் இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார்.

http://www.mazhalaigal.com/entertainment/video/agriculture/agriculturist/2009102402_mega-tv-meeting.php

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியைச் சேர்ந்த நம்மாழ்வார் தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பைக் கற்றவர். கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராகப் பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக்க குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். பசுமைப் புரட்சி, நிலச்சீர்திருத்தம், தொழில்மயமாக்கம், சூழல் பாதுகாப்பு தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுக்களையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்து வருபவர். குடும்பம் அமைப்பு உட்பட 250க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளரும் ஆவார்.
"தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்" என்ற அமைப்பினைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றையும் கால்நடையாக எட்டி, அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருபவர். "பேரிகை' என்றொரு இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழை வெளியிடுகிறார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இவருக்குச் "சுற்றுச் சூழல் சுடரொளி' விருதினை வழங்கியது.

இவர் காட்டிய வழியில் இன்று லட்சக்கணக்கான விவசாயிகள் நடந்து மிக்க பயனடைந்து வருவதால் இன்று செயற்கை உரங்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் தவிர்க்கப்பட்டு இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்

என்ற குறளுக்கிணங்க உலக மக்கள் யாவரும் தொழுது வணங்கும் நிலையில் விவசாயிகளை என்று வைக்கிறோமோ அன்றே உலகம் உய்யும்.

சும்மாக் கெடந்த நெலத்தைக் கொத்தி

திரைப்படம்: நாடோடி மன்னன்
பாடியவர்:  டி.எம். சௌந்தரராஜன், பி. பானுமதி
இயற்றியவர்: சுரதா
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
ஆண்டு: 1958

ஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ ஓஓஓஓஓஓஓ

சும்மாக் கெடந்த நெலத்தைக் கொத்தி
சோம்பலில்லாமே ஏர் நடத்தி
சும்மாக் கெடந்த நெலத்தைக் கொத்தி
சோம்பலில்லாமே ஏர் நடத்தி
கம்மாக் கரைய ஒசத்திக் கட்டிக்
கரும்புக் கொல்லையில் வாய்க்கா வெட்டி
சம்பாப் பயிரைப் பறிச்சு நட்டு
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு
நெல்லு வெளெஞ்சிருக்கு வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு
நெல்லு வெளெஞ்சிருக்கு வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு அட

காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்குக்
கையுங்காலுந்தானே மிச்சம் கையுங்காலுந்தானே மிச்சம்
காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்குக்
கையுங்காலுந்தானே மிச்சம் கையுங்காலுந்தானே மிச்சம் இப்போ
காடு வெளையட்டும் பொண்ணே நமக்குக்
காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே
காடு வெளையட்டும் பொண்ணே நமக்குக்
காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே

மண்ணைப் பிளந்து சுரங்கம் வெச்சு
பொன்னை எடுக்கக் கனிகள் வெட்டி
மண்ணைப் பிளந்து சுரங்கம் வெச்சு
பொன்னை எடுக்கக் கனிகள் வெட்டி
மதிலு வச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
மதிலு வச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கையிலே
பட்ட துயரினி மாறும் ரொம்பக்
கிட்ட நெருங்குது நேரம் கிட்ட நெருங்குது நேரம் அவர்
பட்ட துயரினி மாறும் ரொம்பக்
கிட்ட நெருங்குது நேரம் கிட்ட நெருங்குது நேரம் அட

காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்குக்
கையுங்காலுந்தானே மிச்சம் கையுங்காலுந்தானே மிச்சம்
காடு வெளையட்டும் பொண்ணே நமக்குக்
காலமிருக்குது பின்னே காலமிருக்குது பின்னே

மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே பசி
வந்திடக் காரணம் என்ன மச்சான்? அவன்
தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே
சேர்வதினால் வரும் தொல்லையடி
பஞ்சப் பரம்பரை வாழ்வதற்கே இனிப்
பண்ண வேண்டியது என்ன மச்சான்? தினம்
கஞ்சி கஞ்சி என்றால் பானை நெறையாது
சிந்திச்சு முன்னேற வேண்டுமடி
வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும்
நீடிக்கச் செய்வது மோசமன்றோ? - இருள்
மூடிக்கிடந்த மனமும் வெளுத்தது
சேரிக்கும் இன்பம் திரும்புமடி இனி
சேரிக்கும் இன்பம் திரும்புமடி
நல்லவர் ஒன்றாய் நைந்து விட்டால் மீதம்
உள்ளவரின்ர்கள் நிலை என்ன மச்சான்?
நாளை வருவதை எண்ணி எண்ணி அவர்
நாழிக்கு நாழி தெளிவாரடி அட

காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்குக்
கையுங்காலுந்தானே மிச்சம் கையுங்காலுந்தானே மிச்சம்
நானே போடப் போறேன் சட்டம் பொதுவில்
நன்மை புரிந்திடும் திட்டம் நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம் நாடு நலம் பெறும் திட்டம்
நன்மை புரிந்திடும் திட்டம் நாடு நலம் பெறும் திட்டம்

செவ்வாய், 24 ஜனவரி, 2012

மதுரை அரசாளும் மீனாட்சி


மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நம் ஒவ்வொருவரையும் காக்கும் சக்திகளை வரிசைப் படுத்தியுள்ளனர் நம் முன்னோர்கள். தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, குருவே துணை என்று இவற்றுள் முதல் மூவரைப் பற்றியும் சிறப்பித்த பின்னரே தெய்வத்தைக் குறித்துப் பல துதிகள் வழங்கப் பட்டன. இவற்றில் அன்னையின் அன்பிற்கு ஈடாக ஏதும் இல்லை என்பதனாலேயே பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து இறைவன் அருள்வதாக இறைவனின் அடியார்கள் இறைவனைத் தாய்க்கு நிகராகக் கொண்டு வழிபட்டனர். அவ்வாறு தாயின் வடிவில் அருள் புரிபவள் அன்னை பராசக்தி. அவள் காஞ்சிமாநகரில் காமாட்சியாகவும், மதுரையம்பதியில் மீனாட்சியாகவும், காசியில் விசாலாட்சியாகவும் அருள் பாலிக்கிறாள்.

காஞ்சி காமாட்சி ஆலயம் காஞ்சி ஸ்ரீ மடாதிபதிகளால் நிர்வகிக்கப் படுகிறது. இவ்வாலயத்தில் அன்னை மீனாட்சியின் அருள் அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும் வகையில் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. காஞ்சி காமகோடி பீடாதிபதி காமாட்சியின் ஆலயத்துக்குப் பொன்கூரை வேய்ந்து சிறப்பித்துள்ளார். ஸ்ரீ மடத்தின் மூலம் எண்ணற்ற தரும கைங்கர்யங்கள் நிறைவேற்றப் படுகின்றன.

ஆண்டவன் சன்னதியில் அனைவரும் சமம் என்பது உண்மையின் தத்துவம். முற்காலத்தில் நம் நாட்டை ஆண்ட மன்னர்கள் மக்கள் யாவரையும் சமமாக மதித்துப் போற்றினர் எனும் உண்மையை உலகத்தார்க்கு உணர்த்துபவை அம்மன்னர்கள் அரும்பாடுபட்டுக் கட்டிய அற்புதமான ஆலயங்கள். ஆனால் இன்றோ கருப்புப் பண பலத்தாலும் ஆள் பலத்தாலும் ஆட்சிக்கு வந்து நாட்டை ஆட்டிப் படைக்கும் சுயநலவாதிகள் மக்களைப் பல்வேறு வழிகளிலும் கசக்கிப் பிழிந்து அவர்கள் தங்கள் உயிர் வாழ்வுக்காகப் பாடுபட்டு ஈட்டும் பணத்தைப் பகல் கொள்ளையடிக்கவென்று வகுத்த திட்டங்களுள் ஒன்றே ஆலய தரிசன டிக்கட்.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தை நான் முதலில் தரிசித்தது என் தாய், தந்தை, சகோதரன், சகோதரி ஆகியோருடன் 1964ஆம் ஆண்டாகும். அதன் பின்னர் 1980ஆம் ஆண்டு ஒரு முறை என் தந்தையுடன் சென்று தரிசித்தேன். அப்பொழுது அங்கு திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவு நிகழ்ந்தது. சொற்பொழிவை என் தந்தையுடன் அமர்ந்து கேட்டேன். சொற்பொழிவு முடிந்ததும் திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள் தன்னிடம் வரிசையில் வந்து நின்ற அன்பர்கள் அனைவருக்கும் தனது திருக்கரத்தால் திருநீறு அணிவித்து ஆசி வழங்கினார். வரிசையில் நானும் நின்று அவர் கையால் திருநீறு அணியப் பெற்றேன். அதன் பின்னர் என் மனைவியுடன் 1984ஆம் ஆண்டு மீனாட்சியம்மனை தரிசித்தேன். அப்பொழுதெல்லாம் பொதுமக்கள் அனைவரும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி ஆலயத்தினுள் சென்று பார்வையிடவும் வழிபடவும் முடிந்தது. ஆனால் தற்போது 2012 ஜனவரி முதல் தேதியன்று என் கல்லூரித் தொழர்களுடன் அமைந்த மதுரை சந்திப்பின் போது நண்பர்கள் அனைவருடனும் சேர்ந்து தரிசிக்கச் செல்கையில் முன்பிருந்த உற்சாகம் இல்லை, காரணம் தர்ம தரிசனம், சிறப்பு தரிசனம் என பக்தர்களைப் பிரித்து தரிசன டிக்கட் மூலம் வசூல் வேட்டை நடத்த ஆலயமெங்கும் அமைக்கப் பட்ட தடைகள். 1995ஆம் வருடம் முதலே இந்த அவலம் நிறைவேறி வருகிறது என அவ்வமயம் அங்கே வந்திருந்த மூத்த அன்பர் ஒருவர் மூலம் அறிந்தேன்.

கடவுளைக் காட்சிப் பொருளாக்கிக் காசு பண்ணும் சிறுமை கண்டு மனம் கொதிக்கிறதேயன்றி ஆலயத்தில் இறைவழிபாட்டில் ஈடுபாடு வரவில்லை. ஆலயம் தொல்பொருட்காட்சியகமாக மாறியுள்ளதை உணர்ந்து அதிர்ச்சியுற்றேன். ஆலய்த்தின் உள்ளே பல கடைகள் அலங்காரப் பொருட்களும் கடவுளர் படங்களும் பிற பொருட்கள் பலவும் விற்பனை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அன்னை மீனாட்சியின் கைகள், கால்கள் மட்டுமன்றிக் கண்களையும் கட்டிப் போட்டது போன்றதோர் உணர்வே மேலோங்கியது.

நாட்டு மக்களைக் காப்பது அரசின் கடமை. அக்கடமையை அரசு முறையாக ஆற்றாமல் பல்வேறு வகையிலும் மக்கள் துன்புறுவதை அனுமதித்துள்ள நிலையில் மன நிம்மதி நாடி ஆலயங்களுக்குச் சென்று ஆண்டவனிடம் தங்கள் மனக்குறையை முறையிடச் செல்ல வேண்டுமாயின் அதற்கும் காசு கொடுத்தாலே இயலும் எனும் இக்கட்டான சூழ்நிலை நாட்டுக்குக் கேடு விளைவிப்பதாகும். இந்நிலைமை மாற வேண்டும். இறைவன் அருள் அனைவர்க்கும் எளிதில் கிட்ட வேண்டும். இறையருள் வியாபாரப் பொருளாக்கப் பட்டது மனித வர்க்கத்தின் சுயநல வெறியாட்டத்தின் உச்சகட்டமாகும். இத்தகைய வெறியாட்டம் அழிவுக்கே வழி வகுக்கும்.

இதனால் எழும் பெரிய சந்தேகம்: மதுரை மீனாட்சி ஆள்கிறாளா அல்லது அடிமையாக ஆளப்படுகிறாளா?

மதுரை அரசாளும் மீனாட்சி

திரைப்படம்: திருமலை தென்குமரி
இயற்றியவர்: உளுந்தூர்ப் பேட்டை சண்முகம்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

ஓம்
சஹனா பவது;சகனௌ புனக்து
சக வீர்யம் கரவாவகை
தேஜஸ் விநாவதி தமஸ்து
மா வித் விஷாவகை
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி
மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி
மதுரை அரசாளும் மீனாட்சி

தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி
தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி
நெல்லையில் அருள்தருவாள் காந்திமதி
நெல்லையில் அருள்தருவாள் காந்திமதி
அன்னை அவளல்லால் ஏது கதி?

மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி
மதுரை அரசாளும் மீனாட்சி

திரிபுர சுந்தரி சீர்காழியிலே சீர்காழியிலே
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ....
திரிபுர சுந்தரி சீர்காழியிலே
சிவசக்தி பார்வதி கயிலையிலே
திரிபுர சுந்தரி சீர்காழியிலே
சிவசக்தி பார்வதி கயிலையிலே
வரம் தரும் கற்பகமாம் மயிலையிலே
வரம் தரும் கற்பகமாம் மயிலையிலே
வஞ்சமில்லா நெஞ்சில் வாழ்பவளே

மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி
மதுரை அரசாளும் மீனாட்சி

திருவேற்காட்டினிலே கருமாரி
தென்புதுவை நகரினிலே முத்துமாரி
திருவேற்காட்டினிலே கருமாரி
தென்புதுவை நகரினிலே முத்துமாரி
சமயபுரம் தன்னில் மகமாயி
சமயபுரம் தன்னில் மகமாயி
சௌபாக்யம் தந்திடுவாள் மாகாளி சகல
சௌபாக்யம் தந்திடுவாள் மாகாளி

வியாழன், 19 ஜனவரி, 2012

சின்னச் சின்ன வெத்தலையாம்


வாழ்க்கை வாழ்வதற்கே எனும் எளிய உண்மையை அறியாத மாந்தர் தேடத் தகாததைத் தேடி தேடத்தக்கதை மறந்து எந்நாளும் கவலையில் உழன்று வாழ்க்கையில் திருப்த்தியின்றி வருந்தி மடிகின்றனர். இதை விடவும் மடமை வேறில்லை. இந்த உலகம் யாவும் நம் ஒவ்வொருவருக்கும் சொந்தம் எனும் பரந்த மனப்பான்மை கொண்டு வாழ்வோருக்கு உலக வாழ்க்கை ஒவ்வொரு நொடியும் இன்பமயமானதாகவே இருக்கும். அல்லாது இயற்கை வளங்களைக் கூறு போட்டு, எனது உனது என்று பிரித்து ஒருவரும் முழுமையான பயனடையாமல் செய்து எந்நாளும் பிறருடன் கருத்து வேறுபாடு வளர்த்துத் துன்புறுவோர்க்கு இவ்வாழ்வு முற்றிலும் நரகமே ஆகும்.

 "குரங்கு தானும் கெட்டு வனத்தையும் அழித்தது போல்" என்று ஆக்கபூர்வமான செயல்பாடுகளை விட்டு அழிவுப் பாதையில் செல்வோரைக் குறிப்பிடுவதுண்டு. இதற்குக் காரணம் குரங்குகளின் செயல்பாட்டை ஆராய்ந்து பார்க்கத் தெளிவாக விளங்கும். சில குரங்குகள் பழங்களும் காய்களும் நிறைந்த ஒரு மரத்தின் மீது ஏறுகையில் அம்மரத்திலிருக்கும் பழங்களைத் தின்ற பின்னர் உடனே வேறு இடத்துக்குச் செல்லாமல் அந்த மரத்தில் இருக்கும் காய்களையும் பூக்களையுமே பறித்து வீணாக்கி விடுவதைக் காணலாம். அதன் பின்னர் அம்மரம் மீண்டும் பூத்துக் காய்த்துக் கனிகள் தர விடாமல் அவ்வப்பொழுது மீண்டும் வந்து அம்மரத்தில் இருக்கும் காய்களையும் பூக்களையும் அக்குரங்குகள் அழித்து விடும். இதனாலேயே உணவு கிடக்காமல் அவை ஊரெல்லாம் அலையும், மக்கள் வாழும் வீடுகளுக்குள் சென்று கிடைத்ததைத் திருடித் தின்னும்.

குரங்குகளைப் போலவே மனிதர்களில் பலரது செயல்பாடுகளும் விளங்குகின்றன. அத்தகைய மனிதர்கள் துன்பமே அடைகின்றனர். மனிதத் தன்மையுடன் தன்னைப் போலவே பிறரையும் சமமாக பாவித்து அனைவரும் ஒன்றுபட்டு, இருப்பதைப் பகிர்ந்து வாழும் வாழ்க்கையே இன்பமளிக்க வல்லது. 

உணவு உண்கையில் அரை வயிறளவே உண்ண வேண்டும், அத்துடன் தாகம் தணியுமளவு தண்ணீர் குடித்த பின் இன்னும் சிறிதளவு உண்ணலாம் போலிருக்கையிலேயே உணவை முடித்துக் கொள்ள வேண்டும். நாம் உண்ட உணவு அப்பொழுது தான் நன்கு செறித்து நம் உடலுக்கு வலுவூட்டி உள்ளத்துக்கு உற்சாகமூட்டும். நம் உணவில் அளவிற்கு அதிகமான உப்பு, புளி, காரம், இனிப்பு முதலிய சுவைகளைச் சேர்க்காமல் உணவு நல்ல சுவையுடையதாக சமைத்து உண்ணுதல் நலம் பயக்கும். மாமிசம் மற்றும் நெய் முதலிய கொழுப்புச் சத்து மிகுந்த உணவு மனிதர்களுக்கேற்றதல்ல. இவற்றிலிருக்கும் கொழுப்பு நேரடியாக ரத்தத்தில் கலந்து நம் ரத்த நாளங்களில் மெல்லியதாய்ப் படிந்து ரத்தநாளங்களின் குறுக்களவைக் குறைத்து விடுவதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. நாளடைவில் இது இருதயத்தை பலவீனமாக்கி இருதய நோயை உண்டாக்கி விடும். 

ஒவ்வொரு வேளையும் நாம் உண்ணும் உணவு முழுமையாக செரிக்க வேண்டியது மிகவும் அவசியம். உணவு ஜீரணமாகாமல் இருப்பின் அது வாயுத் தொல்லை, மலச்சிக்கல் முதலிய உபாதைகளை ஏற்படுத்தி அத்தகைய உபாதைகள் ஆயுள் முழுதும் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும். இதனால் உண்ணும் உணவு எளிதில் செரிக்கக்கூடியதாக, நார்ப்பொருள் மிகுந்ததாகவும் இருத்தல் அவசியம். அப்பொழுது தான் இத்தகைய உபாதைகள் உண்டாகாமல் தவிர்க்கலாகும். காய்கறிகளிலும் கீரை வகைகளிலும் நார்ப்பொருள் மிகுதியாக உள்ளதால் அவற்றை அன்றாடம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உண்ட உணவு செரிமானமாக உதவும் ஒரு இனிய பொருள் தாம்பூலம். வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு இவை மூன்றையும் தக்க அளவில் ஒன்று சேர்க்கக் கிடைக்கும் தாம்பூலம் ஆரோக்கியத்தின் அடையாளமாகும். எனவே தான் இது திருமணம் மற்றும் ஆலய வழிபாடுகளிலும் பல்வேறு விருந்துகளிலும் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. வெற்றிலை ஜீரண சக்தியைத் தருகிறது. பாக்கு ஓய்வைத் தந்து உடல் உபாதைகளிலிருந்து நிவாரணமளிக்கிறது. சுண்ணாம்பு நம் உடலுக்குத் தேவையான கால்ஷியம் சத்தினைத் தருகிறது. இவற்றுள் வெற்றிலை முதன்மையானது. வெற்றிலை வாழ்க்கையில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இன்றைய பாடல் எடுத்துரைக்கிறது.


பாடியவர்: அனிதா குப்புசாமி
இயற்றியவர்: கவிஞர் செந்தமிழ் மாறன்
இசை: கண்மணி ராஜா

சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்

முக்கடலும் சூழ்ந்திருக்கும் முத்து முத்து பாரதம் போல்
முக்கோண வடிவம் கொண்ட மூக்கு செவந்த வெத்தலையாம்
மேற்புறத்தில் தென்னந்தோப்பு கீழ்ப்புறத்தில் வாழத்தோப்பு
வாழத் தோப்பு மத்தியிலே வளர்ந்து வந்த வெத்தலையாம்
கொழுந்தி தந்தா மச்சானுக்குக் கொழுந்து வெத்தலையாம்
கொழுந்தி தந்த கொழுந்து வெத்தலை வாய்க்குப் பத்தலையாம்
கொழுந்தி தந்தா மச்சானுக்குக் கொழுந்து வெத்தலையாம்
கொழுந்தி தந்த கொழுந்து வெத்தலை வாய்க்குப் பத்தலையாம்

சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்

போத்தனூருப் பொண்ணுங்கல்லாம் போட்டு வரும் வெத்தலையாம்
அத்தனூருப் பொண்ணுங்கல்லாம் அடக்கி வைக்கும் வெத்தலையாம்
பச்சப் பந்தல் துடிக்குமே பரிசம் போடும் வெத்தலையாம்
எச்சிலுக்கும் வாசம் தரும் பச்சப் பச்ச வெத்தலையாம்
பல்லுப் போன பாட்டன் வாயைப் படுத்தும் வெத்தலையாம் இது
பட்டி தொட்டியிலும் பட்டணத்திலுமே பழகும் வெத்தலையாம்
பல்லுப் போன பாட்டன் வாயைப் படுத்தும் வெத்தலையாம் இது
பட்டி தொட்டியிலும் பட்டணத்திலுமே பழகும் வெத்தலையாம்

சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்

எங்களூரு சந்தையிலே ஏலம் போற வெத்தலையாம்
பெங்களூரு சந்தையிலே பேரம் பேசும் வெத்தலையாம்
வாய்க்கார மனுஷங்களை வாயடக்கும் வெத்தலையாம்
நோய் நொடிகள் தீர்க்க வல்ல நோக்கமுள்ள வெத்தலையாம்
சம்மந்திமாருங்க மாத்திக்கொள்ளும் தாம்பூல வெத்தலையாம் இது
கம்மாளப் பட்டி காட்டிலே வெட்டின கல்யாண வெத்தலையாம்
சம்மந்திமாருங்க மாத்திக்கொள்ளும் தாம்பூல வெத்தலையாம் இது
கம்மாளப் பட்டி காட்டிலே வெட்டின கல்யாண வெத்தலையாம்

சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்

சேலத்து மானுக்கு தான் சீரு வந்த வெத்தலையாம்
சீரு வந்த வெத்தலையும் சீமைக்கெல்லாம் பத்தலையாம்
தொட்டாலும் கைமணக்கும் துட்டுக்கொரு வெத்தலையாம்
தின்னாலும் வாய் மணக்கும் சீரங்கத்து வெத்தலையாம்
கமகமங்குது கண்ணை மயக்குது காவேரி வெத்தலையாம் அட
குமுகுமுங்குது என்னை மயக்குது குமரி வெத்தலையாம்
கமகமங்குது கண்ணை மயக்குது காவேரி வெத்தலையாம் அட
குமுகுமுங்குது என்னை மயக்குது குமரி வெத்தலையாம்

சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்

வண்ண வண்ண சேலைக்காரி வந்து இலை வெட்டையிலே
மண்ணு பட்டா தோசமுன்னு மடியில் வெச்ச வெத்தலையாம்
ஊரோரம் சின்னக்குளம் ஊத்துலேயும் தண்ணி வரும்
மோதி வரும் தண்ணியிலே ஒசந்து வந்த வெத்தலையாம்
கணவனுக்கு மனைவி தரும் மடிச்ச வெத்தலையாம் இது
மணவிழாவிலும் மத்த விழாவிலும் மணக்கும் வெத்தலையாம்
கணவனுக்கு மனைவி தரும் மடிச்ச வெத்தலையாம் இது
மணவிழாவிலும் மத்த விழாவிலும் மணக்கும் வெத்தலையாம்

சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்

ஆத்தோரம் கொடிக்காலு அந்தப்புறம் நந்தவனம்
நந்தவனக் கிளி போடும் நான் கொடுத்த வெத்தலையே
வெறும் வாயை மெல்லாதே வெத்தலையத் தள்ளாதே
கருவாய செவக்க வைக்கும் காசுக்கார வெத்தலையாம்
கண்ணுலே பட்டாக் கருகுமின்னு காஞ்சிப் பட்டெடுத்து இது
பூவாட்டமாப் போத்தி வைக்குற பொன்னான வெத்தலையாம்
கண்ணுலே பட்டாக் கருகுமின்னு காஞ்சிப் பட்டெடுத்து இது
பூவாட்டமாப் போத்தி வைக்குற பொன்னான வெத்தலையாம்

சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
சின்னச் சின்ன வெத்தலையாம் சிங்கார வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்
செவ்வாழைத் தோட்டத்திலே செழித்து வந்த வெத்தலையாம்

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை


நம் நாட்டுல் மட்டுமின்றி உலகெங்கிலும் தொழில் துறையிலும், பொருளாதாரத்திலும், சமுதாய நல்லுறவு மற்றும் ஒருமைப்பாட்டிலும் இதுவரையில் இல்லாததொரு மந்தமான சூழ்நிலை உருவாகியுள்ளது. லண்டன் மாநகரில் சமீபத்தில் பொதுமக்களில் ஒரு சாரார் பல வர்த்தக நிறுவனங்களிலும் கொள்ளையடிப்பதும் பல கட்டடங்களுக்கும் வாகனங்களுக்கும் தீ வைப்பதும் பொது சொத்துக்களை சூறையாடுவதும் என உலகமே பெரும் அதிர்ச்சியுறும் விதமான வன்முறை சம்பவங்கள் தலைவிரித்தாடின. எகிப்து நாட்டு மக்கள் யாவரும் தெருக்களில் கூடி அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கைப் பதவியிலிருந்து கீழே இறக்கிய நாடு கடத்திய பின்னர் ஏற்பட்ட ராணுவ ஆட்சிக்கும் எதிராகத் தொடர்ந்து போராடுகின்றனர். அதே சமயம் லிபியா நாட்டில் மக்களில் ஒரு பகுதியினர் அரசுக்கு எதிராக பன்னாட்டுப் படையினரின் துணையுடன் போராடி கர்னல் கடாஃபியைக் கொன்ற பின்னரும் இன்னும் நாட்டில் ஒழுங்கு நிலை திரும்பாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அமெரிக்காவில் வாழும் மக்களில் பலர் ஒன்றுதிரண்டு அமெரிக்காவின் பங்குச் சந்தையாக விளங்கிவரும் வால் தெருவை ஆக்கிரமிக்கும் இயக்கத்தைத் தொடங்கிப் போராடுகின்றனர்.

இப்போராட்டங்களுக்கு மூல காரணம் சமுதாயத்தில் பெரும்பாலானோரின் உழைப்பின் பலனை ஒரு சிலர் சுரண்டி வாழ்வதும் உழைக்கும் வர்க்கம் வறுமையில் வாடுவதும், ஏழை பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வு அளவு கடந்து வளர்ந்து வருவதும், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகுவதும் விலைவாசி விஷம்போல் உயருவதும் ஆகும். தற்போது மக்களில் பெரும்பாலோர் முதலாளித்துவத்துக்கெதிராக உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளிலும் போராடுகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவிலும் காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தலைமையில் ஒரு மாபெரும் கிளர்ச்சி உருவாகி வளர்ந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் அரசியல்வாதிகள் பலர் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவதும் பெரும் ஊழல்கள் பல புரிந்து நாட்டைக் கொள்ளையடிப்பதும் செய்தி நிறுவனங்களின் வாயிலாக வெளிவந்ததை அடுத்து மக்கள் மத்திய அரசாங்கத்தின் மீதும் அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கை இழந்து வரும் சூழ்நிலையே ஆகும். நம் நாட்டிலுள்ள விவசாயிகள் தாம் மிகவும் பாடுபட்டு உழைத்து விளைவிக்கும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பதுக்கல், இடைத் தரகர்கள் போதிய குளிர்பதன அறைகள் இல்லாமை, போக்குவரத்து வசதிகள் இல்லாமை, அரசு வங்கிகளில் கடனுதவி கிடைக்காமை, கந்து வட்டிக் கடன் முதலியவற்றால் அவதிப்படும் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில். இப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண முயலாமல் சில்லரை வணிகத்தில் அந்நியா நாடுகள் நேரடியாக முதலீடு செய்ய வழிவகுக்கும் சட்டம் ஒன்றை திடுதிப்பென்று அறிவிக்கிறது மத்திய அரசு. ஏற்கெனவே நாட்டிலுள்ள பல தொழில் துறைகளையும் அந்நிய நிறுவனங்களுக்கு விற்று விட்டது போதாதென்று சில்லரை வணிகத்தையும் விற்றுவிடத் துடிக்கும் பொறுப்பற்ற அரசாங்கம் நம் நாட்டில் இருப்பதாலேயே மக்கள் கொதிப்படைந்துள்ளனர். 

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியான நாட்டின் சுதந்திரத்தை மிகவும் குறுகிய காலத்தில் இன்று நாட்டின் தலைவர்களாக விளங்குபவர்களே அந்நியர்களுக்கு விற்று வருகின்றனர். உழைக்கும் மக்கள் 80 சதவீதத்தினர் தாம் அல்லும் பகலும் உழைத்து ஈட்டிய பணம் அன்றாட வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும் உதவாத நிலையில் இலவச அரிசிக்காகவும் இதர பொருளாதார உதவிகளைப் பெறுவதற்காகவும் ஆலாய்ப் பறக்கும் கேவலமான சூழ்நிலையை நாட்டில் உருவாக்கியுள்ளனர் நம் நாட்டின் பெரும் தலைவர்கள்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான உணவு, உடை, இருப்பிடம் மற்றும் இதர வசதிகள் யாவையும் அளிப்பது விவசாயம் உட்பட்ட பல்வேறு துறைகளிலும் உழைக்கும் தொழிலாளர்களே ஆவர். அத்தகைய தொழிலாளர்களது நலன்களைப் பாதுகாப்பது அரசாங்கங்களின் கடமையாகும். பொது மக்கள் அனைவருக்கும் தேவையான அடிப்படை மருத்துவ உதவிகள் அனைத்தும் அரசு மருத்துவ மனைகளில் இலவசமாகக் கிடைக்கச் செய்வது்ம், அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இலவசமாக கல்வி வசதி அளிப்பதும் அரசாங்கங்கள் செய்து வந்த நிலையை மாற்றி மருத்துவமும் கல்வியும் தனியாருக்கு விற்கப் பட்டு அரசுகள் சாராயக் கடைகளை நடத்துவதும், அன்றாடம் நடக்கும் நகைக் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை, லஞ்ச ஊழல்கள் முதலிய சீர்கேடுகளைக் களைய முயலாமல் விளம்பர அரசியல் நடத்துவதும் மக்கள் யாவரும் மிகவும் வேதனையடையக் காரணிகளாகியுள்ளன. 

உழைப்பவன் வாழ்வே வீதியிலே உறங்குவதோ நடைபாதையிலே இறக்கம் காட்டத்தான் நாதியில்லே எனும் நிலை மாறி உழைப்பாளிகளுக்கு உரிய மதிப்பளித்து சமூகநீதி காக்கும் அரசுகள் அமைந்தால் மட்டுமே நம் நாடு தற்போது ஏற்பட்டுள்ள சீர்கேடுகளிலிருந்து மீண்டு வளம் பெறலாகும்.

நம் யாவருக்கும் அன்னமிட்ட கைகளான உழைப்பாளிகளின் கரங்களை வலுப்படுத்த அன்னா ஹசாரேயின் அறப்போராட்டத்துக்குத் துணை நின்று நாட்டில் முறையான சட்டங்கள் இயற்றப்பட்டு சமூக நீதி காக்கப்படத் தொடர்ந்து போராடுவது நம் அனைவரின் கடமையாகும்.


திரைப்படம்: அன்னமிட்ட கை
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை

இல்லாமை நீக்க வேண்டும் தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும் நல் எண்ணம் வேண்டும் தன்
உழைப்பாலே உண்ண வேண்டும்

இல்லாமை நீக்க வேண்டும் தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும் நல் எண்ணம் வேண்டும் தன்
உழைப்பாலே உண்ண வேண்டும்

பாடுபட்ட கை அது பாட்டாளி கை
பாடுபட்ட கை அது பாட்டாளி கை
செய்யும் தொழிலை தெய்வமாக 
நிலைநிறுத்தி உடல் வருத்தி

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை

பஞ்சுக்குள் நூலை எடுத்து பட்டாடை தொடுத்து
தன் மானத்தைக் காத்திருக்க
மண்ணுக்குள் வெட்டி முடித்து பொன் கட்டி எடுத்து
நம் தேவைக்குச் சேர்த்திருக்க

பஞ்சுக்குள் நூலை எடுத்து பட்டாடை தொடுத்து
தன் மானத்தைக் காத்திருக்க
மண்ணுக்குள் வெட்டி முடித்து பொன் கட்டி எடுத்து
நம் தேவைக்குச் சேர்த்திருக்க

வாழ வைக்கும் கை அது ஏழை மக்கள் கை
வாழ வைக்கும் கை அது ஏழை மக்கள் கை
காட்டை மேட்டைத் தோட்டமாக்கி 
நாட்டு மக்கள் வாட்டம் போக்கி

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை

புதன், 18 ஜனவரி, 2012

யாரோ இவர் யாரோ?


இயல் இசை நாடகம் உட்படப் பல கலைகளிலும் தலைசிறந்து விளங்கிய மாமேதைகள் பலர் தோன்றி வாழ்ந்த, வாழ்கின்ற பாரத நாட்டில் பிறந்து வாழும் நாம் அனைவரும் மிகவும் பாக்கியம் செய்தவர்களாவோம். அத்தகைய மாமேதைகளிடையே யார் அதிகத் திறம் வாய்ந்தவர் என்பதைப் பல சமயங்களில் மற்றவர் அறிய முற்பட்டதுண்டு. ஒரு முறை தேவலோகத்தில் இந்திரன் சபையில் நடனமணிகளான ரம்பை, ஊர்வசி இருவரிடையே இத்தகைய ஒரு போட்டி நடைபெற்றது. போட்டிக்கு யாரும் தீர்ப்புச் சொல்ல முன்வரவில்லை. தீர்ப்புச் சொல்ல வல்லவர் யார் என வினவுகையில் உஜ்ஜயினி மாநகரை ஆண்டுவந்த விக்கிரமாதித்த மகாராஜனே என்று அறிந்து அவனை சகல மரியாதையுடன் இந்திரலோகத்துக்கு அழைத்து வந்து நீதிபதி ஸ்தானத்தில் அமர்த்தினான் தேவேந்திரன்.

இரு மலர்ச்செண்டுகளைத் தயாரித்த விக்கிரமாதித்தன் ரம்பை, ஊர்வசி இருவரிடமும் அம்மலர்ச்செண்டுகள் ஒவ்வொன்றைக் கொடுத்து அதனைக் கையில் பிடித்தவாறே நடனமாடப் பணித்தான். ரம்பை தன் மலர்ச்செண்டை லகுவாகப் பிடித்துக் கொண்டு ஆடினாள். ஊர்வசியோ மலர்ச்செண்டை சற்றே இறுகப் பிடிக்கவும் அதனுள் முன்னரே விக்கிரமாதித்தன் வைத்திருந்த வண்டுகள் அவளது கையைக் கடிக்க, நடனத்தில் தாளம் தப்பியது. நடனத்தில் சிறந்தவள் ரம்பையே என்று தீர்ப்பளித்தான்.

தேவலோக நடனமணிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லுமளவுக்கு நாட்டியத்தில் அபாரமான திறமை கொண்டு விளங்கிய நாட்டியப் பேரொளி பத்மினியும், வைஜயந்திமாலாவும் போட்டியிட்டு ஆடிய காட்சி ஒன்று காதல் மன்னன் ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்த வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் இடம்பெற்றது.

தமிழிசையிலும் கர்நாடக இசையிலும் உலகப் புகழ் பெற்ற இரு மாமேதைகள் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி மற்றும் டி.கே. பட்டம்மாள் ஆகியோர் என்பது பிரசித்தி. இவர்களுக்கிடையே என்றேனும் போட்டி அரங்கேறியதா எனத் தெரியவில்லையாயினும். அருணாசலக் கவிராயரின் யாரோ இவர் யாரோ எனும் பாடலை இருவரும் தனித் தனியே பாடியுள்ளனர். அப்பாடல்களைக் கேட்டு மனம் மயங்கி இரண்டில் எது அதிக இனிமையுடையதெனத் தீர்மானிக்க முடியாமல் தவித்தவர் பலருண்டு. அத்தவிப்பை அடைந்தவர்களுள் நானும் ஒருவன் ஆவேன். அதே தவிப்பை யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எனும் பொன்மொழிக்கிணங்க நீங்களும் அடைய வேண்டும் எனும் ஆவலில் இதோ:


இயற்றியவர்: அருணாசலக் கவிராயர்
பாடியவர்: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி

ததரன்னா நா நா நா நனன்னோ தானா நானா நானனானானானா

தனனா நானன்னா நா ததரன்னானா நானா நனன்னானானானா
நா... நா... நா.. னானானானா நானானானானா
தனன்னா நோ நானானா ததரன்னோ நானானா நானானா தானானா
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ?
காருலாவும் சீருலாவும் மிதிலையில்
காருலாவும் சீருலாவும் மிதிலையில்
காருலாவும் சீருலாவும் மிதிலையில்
காருலாவும் சீருலாவும் மிதிலையில்
காருலாவும் சீருலாவும் மிதிலையில்
கன்னி மாடம் தன்னில் முன்னே நின்றவன்
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ?
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக
சந்திரபிம்ப முக மலராலே என்னை
தானே பார்க்கிறார் ஒரு காலே
அந்த நாளில் பந்தம் போலே ஏ ஏ ஏ ஏ
அந்த நாளில் பந்தம் போலே உருகிறார்
அந்த நாளில் பந்தம் போலே உருகிறார்
அந்த நாளில் பந்தம் போலே உருகிறார்
இந்த நாளில் வந்து சேவை தருகிறார்
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? அறியேனே
---------------------------------


பாடியவர்: டி.கே. பட்டம்மாள்

யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? 
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? 

காருலாவும் சீருலாவும் மிதிலையில்
காருலாவும் சீருலாவும் மிதிலையில்
காருலாவும் சீருலாவும் மிதிலையில்
கன்னி மாடம் தன்னில் முன்னே நின்றவர் யாரோ?
சீருலாவும் மிதிலையில்
கன்னி மாடம் தன்னில் முன்னே நின்றவர்

யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? 

சந்திரபிம்ப முக மலராலே 
சந்திரபிம்ப முக 

மபதநிஸ் நிரிஸ்நித பதம
சந்திரபிம்ப முக
நிநீதபதநிதபமா பதநி ஸ்க்ரிஸ் நிரிஸ்நிதபம
சந்திரபிம்ப முக
பாதபநிநிதபமகரிகமபத மபதநி ஸ்கரிஸ் நிரிஸ்ஸ்நிதபம
சந்திரபிம்ப முக
நிநீதபதநீத பநிதபாதமா பநிதபதபாதமா பதநிஸ்கரிஸ்நிரிஸ் ஸ்நிதபம

சந்திரபிம்ப முக மலராலே என்னை
தானே பார்க்கிறார் ஒரு தாயாலே
அந்த நாளும் சொந்தம் போல உருகிறார்
அந்த நாளும் சொந்தம் போல உருகிறார்
அந்த நாளும் சொந்தம் போல உருகிறார்
இந்த நாளில் வந்து சேவை தருகிறார்

யாரோ இவர் யாரோ? என்ன பேரோ அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? 

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை

மாமுனிவர்கள் பலரும், அருந்தமிழ்ப் புலவோரும், அனேக ஆன்றோர் பெருமக்களும் அறிவினால் அறிந்து அனுபவத்தால் உணர்ந்து பல்வேறு வாழ்க்கைச் சூழ்நிலைகளின் விளக்கத்தாலும், கதைகள், கவிதைகள், காவியங்கள் வாயிலாகவும் எடுத்துரைத்த வாழ்க்கைத் தத்துவத்தைப் பாமர மக்கள் படித்தறிய இயலாதெனக் கண்டு

"வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம் வரும் ஜனனம் என்பது வரவாகும் அதில்
மரணம் என்பது செலவாகும். போனால் போகட்டும் போடா."

என எளிதில் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் நான்கே வரிகளில் கவிஞர் கண்ணதாசன் எடுத்துரைத்த பின்னரும் வாழ்வின் நிலையாமையை அறிவால் அறிந்த பின்னரும் உள்ளத்தால் உணராமல் மடமையில் மூழ்கிப் பொய்யான இவ்வுடலை வளர்ப்பதும் நிலையில்லாத சிற்றின்ப சுகம் பெறுவதும் மட்டுமே வாழ்வின் பெரும் குறிக்கோள்கள் எனக் கொண்டு தமிழர்கள் பலரும் தம் சுய அறிவை இழந்து சுயநல மயக்கத்தில் மூழ்கி, பிறர் நலன் பேணாது பெரும் பாபக் குழியில் விழுந்து கிடக்கின்றனர்.

ஆங்கிலேய ஆதிக்கத்தின் விளைவாக அந்தணர்கள் சிலரும் உயர்ந்த ஜாதி என்று தங்களை சொல்லிக்கொள்வோர் சிலரும் சேர்ந்து ஆலயங்களில் பூஜை செய்வதும் நாட்டுமக்களின் நலன் வேண்டுவதுமான தம் ஸ்வதர்மத்தை மறந்து வயிற்றுப் பிழைப்புக்காக வளர்த்து விட்ட தீண்டாமை எனும் தீமையை அழிக்க வேண்டி, "க்டவுளை மற மனிதனை நினை" எனத் தமிழ் மக்களுக்கு அன்று தந்தை பெரியார் வழங்கிய சீரிய அறிவுரையில் முதல் பாதியை மட்டும் தம் சுயநலம் பேண உபயோகித்து மனித இனத்தையே அழிவுப் படுகுழியில் த்ள்ளவும் தயங்காது குறுக்கு வழியில் வாழ்வு தேடும் குருடர்கள் இறுதியில் தாங்கள் அடித்த கொள்ளை அம்பலமான பின்னர் வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ள ஆலயங்களுக்குச் சென்று அந்த ஆண்டவனுக்கே லஞ்சத்தைக் கொடுத்துத் தம் குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து தப்பிக் கொள்ளலாம் என மனப்பால் குடித்து வரும் கேவலமும் அம்பலமாகி விட்டது.

இறைவன் இருக்கின்றானா? எனும் கேள்விக்கு உண்மையான பதிலை உளமாரத் தேடினால் கிடைக்கும் விடையாவது இறை என்பது எங்கும் நிறை பரம்பொருள் என்பதுவே. ஆனால் அந்தத் தேடலுக்கு முதற்கண் ஒருவர் பொருளின் மீதுள்ள பற்றுதலையும் சிற்றினப நாட்டத்தையும் விடல் வேண்டும். தனக்கு தனக்கு என அளவிடற்கரிய பொருளை அடுத்தவரை ஏமாற்றிச் சேர்த்தவர்கள் அவ்வாறு சேர்த்த பொருளில் சிறிதளவும் அனுபவியாது மடிவதைக் கண்ணாரக் கண்டபின்னரும் ஏனையோர் தாமும் அதே போன்ற தீய மார்க்கத்தில் தொடர்ந்து செல்வது வேடிக்கை. தனது என்பது நீங்கினாலே தெய்வ சிந்தனையுண்டாகும். யாவும் தங்க்கென நினைப்போர் எந்நாளும் இறைவனை அறிய முடியாது. நிலையான பேரின்பம் பெற ஓரே வழி பற்றுதலை விடுத்துப் பரம்பொருளை நாடுதலேயாகும்.

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை

திரைப்படம்: வளர்பிறை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மகாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுகுள்ளே
தேங்காயைப் பொல் இருப்பான் ஒருவன் தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுகுள்ளே
தேங்காயைப் பொல் இருப்பான் ஒருவன் - அவனை
தெரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்
முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனை
தொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன்

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்
கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் - அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

வீச்சறுவா தூக்கிகிட்டு

ஆதி மனிதர்கள் மிருகங்களோடு மிருகங்களாக வாழ்ந்த காலத்தில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர். அவர்களுள் வலிமை மிக்கவன் அனைவருக்கும் தலைவனாக விளங்கி அடக்கி ஆண்டு வந்தான். அப்போது மனிதர்கள் இயற்கையை தெய்வமாக வழிபட்டதுடன் தங்கள் தலைவனையும் தலைவியையும் தெய்வமாகவே வழிபட்டு வந்தனர். நாளடைவில் மனிதனின் பகுத்தறிவு வளரவே அவன் இயற்கையின் சக்திகளைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் துவங்கினான். காடுகளை அழித்து வீடுகள் கட்டிக்கொண்டு வாழத் தலைப்பட்டான். அது முதற்கொண்டு ஒரு வரைமுறைக்குள் செயல்படும் மனித சமுதாயம் உருப்பெற்று வளர்ந்து வருகிறது. ஒரு சமுதாயத்தின் தலைவன் அரசனாக்கப்பட்டு அவனுக்கு விசேஷமான ஆடை அணிகலன்கள் தயாரிக்கப்பட்டு, பிறரிலும் மேம்பட்டவனாக அரசன் விளங்குவது மரபாக அமைந்தது.

அரசன் தன் நாட்டையும் குடிமக்களையும் வன விலங்குகளிடமிருந்து காப்பதும், அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் முதலான அடிப்படை வசதிகள் கிடைக்க வழி செய்வதும், நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து நாட்டில் மக்கள் என்றும் இன்பமாய் வாழ வழிவகுப்பதும் தன் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரவே அரசனை மக்கள் மிகவும் மதித்து நடந்தனர். நாளடைவில் மதங்கள் தோன்றி ஆலயங்கள் அமைக்கப் பட்டு வழிபடும் வழக்கம் பரவுகையில் ஆலயங்களில் கடவுளர்க்கு சிலைவடிவம் கொடுக்கப்பட்டு எல்லா மக்களும் விசேஷமான முறையில் பூஜைகள் செய்தும் திருவிழாக்கள் எடுத்தும் சிறப்புடன் இறை வழிபாடு நடைபெறுவது வழக்கமானது.

இத்தகைய ஆலயங்களுள் தொன்மை வாய்ந்தவை ஐயனார் எனவும் எல்லைச் சாமி எனவும் கிராமப் பகுதிகளில் வாழும் மக்கள் வணங்கும் தெய்வத்தின் திருக்க்கோவில்களாகும். ஐயனார் உருவத்தை ஒரு அரசனைப் போல அமைத்து ஆசனத்தில் வீற்றிருப்பது போலவும், குதிரை மேல் சவாரி செய்வது போலவும் உருவாக்கி மக்கள் வழிபட்டனர், இன்றும் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர். ஐயனார் தங்கள் கிராமத்து மக்கள் அனைவரையும் ஒரு அரசன் குடிமக்களைக் காப்பது போலவே காக்கின்றார் எனும் அசையாத நம்பிக்கையுடன் மக்கள் இன்றும் இறைவழிபாட்டை நடத்துகின்றனர்.

வீச்சறுவா தூக்கிகிட்டு

வீச்சறுவா தூக்கிகிட்டு Veecharuva thookikittu
பாடியவர்: சின்னப் பொண்ணு Chinna Ponnu
இசை: எல்.வி. கணேசன் L.V. Ganesan
இயற்றியவர்: முத்து விஜயன் Muthu Vijayan
ஆல்பம்: தன்னானே தன்னானே thannaanae thananana
ஆண்டு: 2009

ஏ வீச்சறுவா தூக்கிகிட்டு வேல்கம்பு ஏந்திகிட்டு
வேட்டைக்குத் தான் கெளம்பிட்டாரு ஐயனாரு
மீசையைத் தான் முறுக்கிக் கிட்டு சலங்கையைத் தான் கட்டிகிட்டு
வேகத்தோட கெளம்பிட்டாரு அங்கே பாரு

ஊரு எல்லையிலே நிக்கும் சாமி எங்க
உசிரேக் காக்கும் சாமி காத்து
கருப்பு அண்டாமத் தான்
இங்கே காவல் நீங்க சாமி

வீச்சறுவா தூக்கிகிட்டு வேல்கம்பு ஏந்திகிட்டு
வேட்டைக்குத் தான் கெளம்பிட்டாரு ஐயனாரு
மீசையைத் தான் முறுக்கிக் கிட்டு சலங்கையைத் தான் கட்டிகிட்டு
வேகத்தோட கெளம்பிட்டாரு அங்கே பாரு

உன் ஆத்திரம் அடங்கத்தான் ஆடு கட்டி வெச்சோம்
உன் கோபம் கொறையத்தான் கோழி அறுத்து வச்சோம் ஐயா
உன் ஆத்திரம் அடங்கத்தான் ஆடு கட்டி வெச்சோம்
உன் கோபம் கொறையத்தான் கோழி அறுத்து வச்சோம்
சமரசம் ஆகணுன்னு சாராய வாங்கி வந்தோம்
சகலமும் நிலைக்கணுன்னு சக்கரைப் பொங்கல் வச்சோம்
சமரசம் ஆகணுன்னு சாராய வாங்கி வந்தோம்
சகலமும் நிலைக்கணுன்னு சக்கரைப் பொங்கல் வச்சோம்

எங்க சாமி எங்க சாமி எல்லாமே நீங்க சாமி
மங்கிப் போன எங்க வாழ்வில் வெளக்கேத்தும் தங்க சாமி வீச்சறுவா தூக்கிகிட்டு வேல்கம்பை ஏந்திகிட்டு
வேட்டைக்குத் தான் கெளம்பிட்டாரு ஐயனாரு
மீசையைத் தான் முறுக்கிக் கிட்டு சலங்கையைத் தான் கட்டிகிட்டு
வேகத்தோட கெளம்பிட்டாரு அங்கே பாரு

நீ வாழுற ஊருக்குள்ளே களவு போவதில்லே
நீ இருக்குந் தைரியந்தான் கதவெ அடைப்பதில்லே ஏ ஏ ஏ ஏ ஏ
நீ வாழுற ஊருக்குள்ளே களவு போவதில்லே
நீ இருக்குந் தைரியந்தான் கதவெ அடைப்பதில்லே
நீ சொல்லும் குறியில தான் எங்க சனம் வாழுதையா
சொத்து சுகமெல்லாம் உன்னாலே வந்ததையா
நீ சொல்லும் குறியில தான் எங்க சனம் வாழுதையா
சொத்து சுகமெல்லாம் உன்னாலே வந்ததையா

எங்க சாமி எங்க சாமி எல்லாமே நீங்க சாமி
மங்கிப் போன எங்க வாழ்வில் வெளக்கேத்தும் தங்க சாமி

வீச்சறுவா தூக்கிகிட்டு வேல்கம்பை ஏந்திகிட்டு
வேட்டைக்குத் தான் கிளம்பிட்டாரு ஐயனாரு
மீசையைத் தான் முறுக்கிக் கிட்டு சலங்கையைத் தான் கட்டிகிட்டு
வேகத்தோட கிளம்பிட்டாரு அங்கே பாரு

ஊரு எல்லையிலே நிக்கும் சாமி எங்க
உசிரேக் காக்கும் சாமி காத்து
கருப்பு அண்டாமத் தான்
இங்கே காவல் நீங்க சாமி

வீச்சறுவா தூக்கிகிட்டு வேல்கம்பை ஏந்திகிட்டு
வேட்டைக்குத் தான் கிளம்பிட்டாரு ஐயனாரு
மீசையைத் தான் முறுக்கிக் கிட்டு சலங்கையைத் தான் கட்டிகிட்டு
வேகத்தோட கிளம்பிட்டாரு அங்கே பாரு

செவ்வாய், 17 ஜனவரி, 2012

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம்

இந்தியர்கள் என்றாலே இளிச்சவாயர்கள், ஏமாளிகள், எதைச் சொன்னாலும் நம்புபவர்கள், இவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற தவறான அபிப்பிராயம் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை அகில உலக அளவில் நிலவி வருவதை மனதார நம்மால் மறுக்க இயலாத சூழ்நிலையே நிலவிவருகிறது. இதற்கு முக்கியக் காரணம் நம் நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்துவரும் அரசியல் சட்டங்களும் பிற சட்டங்களும் அரசுக் கட்டிலில் தகுதியற்றவர்கள் வந்து அமர்ந்து கோலோச்சும் அவலமுமே ஆகும். ஐம்பத்தாறு தேசங்களாகவும் அனேக குறுநிலப் பகுதிகளாகவும் சிதறுண்டு பற்பல மன்னர் குலத்தவர்களால் பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்யப்பட்ட நம் நாட்டை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிய நாட்டவர்களான முகலாயர்களும், பின் ஆங்கிலேயர்களும் அடிமைப்படுத்தி அடக்கி ஒடுக்கி நம் செல்வங்களைக் கொள்ளையிட்டதற்கு முக்கியமான காரணம் நம் நாட்டைத் தொன்று தொட்டு ஆண்ட மன்னர்களிடையேயும் மக்களிடையேயும் ஒற்றுமையில்லா நிலை நிலவியதேயாகும்.

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியான சுதந்திரத்தை, அண்ணல் காந்தி முதலிய அரும்பெரும் தலைவர்கள் தங்கள் அனைத்து உடைமைகளையும் இழந்தும், தங்கள் இன்னுயிரை ஈந்தும் பெற்றுத்தந்த சுதந்திரத்தை இன்று உள்நாட்டுக் கொள்ளையர்கள் மீண்டும் அந்நிய நாட்டவர்க்கே தவனை முறையில் விற்று வயிறு வளர்க்கின்றனர். இந்தக் கொடுமைகளுக்கு மூல காரணம் பொருளாதார மேதையென்று பன்னாட்டு நிறுவனப் பெருமுதலாளிகளால் பாராட்டப் பெறும் மன்மோகன் சிங்க் எனும் தாடி வளர்த்துத் தலைப்பாகையினுள் தன் சொட்டைத் தலையை மூடி மறைத்து, சோடாபுட்டிக் கண்ணாடியினுன் தன் பூனைக் கண்களை மூடி ஒன்றுமறியாத சிறுபிள்ளை போல் விழித்து நல்லவர் வேஷம் போடும் நபரால் அமுல்படுத்தப்பட்டுத் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வரும் பொருளாதார தாராளமயமாக்கல் எனும் பொய்யான கொள்கையே ஆகும்.

அக்கொள்கையின் பயன்களைத் தம் சுயநலத்தைப் பூர்த்தி செய்து கொள்ள ஏற்றவகையிலேயே நம் நாட்டின் பல மாநிலங்களிலும் ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர். இன்று நாட்டின் செல்வங்களில் பெரும்பாலானவை அரசியல்வாதிகளின் குடும்பத்தவராலும், பெருமுதலாளிகளாலும், பல்வேறு அதிகாரிகளாலும் சூறையாடப் பட்டு மக்கள் தலைகள் மொட்டையடிக்கப் பட்டு அவர்கள் கஞ்சிக்கும், கல்விக்கும், மருத்துவ உதவிகளுக்கும் கையேந்திப் பிச்சை கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நம் நாட்டின் அரசியல் சட்டங்களும் மக்கள் நலச் சட்டங்களும் மிகவும் பலவீனமாக உள்ள்தால் இத்தகைய சுயநலவாதிகள் பெரும் குற்றங்களைப் புரிந்தாலும் உரிய தண்டனை பெறாமல் எளிதில் தப்பிவிடுகின்றனர். இந்நிலை மாற வேண்டுமெனில் சட்டங்கள் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் திருத்தப்பட வேண்டும். மக்களை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பிறரும் ஏமாற்றும் வழிகள் இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும். சாலைகளின் குறுக்கே வாகனப் போக்குவரத்துக்குத் தடை ஏற்படுத்தி நடுவே பெரும் செலவில் அலங்கார மேடையமைத்து மக்களின் நலத்தைப் பேணுவதற்கென்றே அவதாரம் எடுத்து வந்தவர்கள் தாங்கள் என வாய்கிழியப் பேசி, தங்கள் வாக்கு வங்கிகளைப் பெருக்கி ஆட்சியைப் பிடித்து நாட்டைக் கொள்ளையிடும் கண்கட்டு வித்தை நடவாமல் தடுக்கப்பட வேண்டும். மக்கள் யாவரும் இத்தகைய ஏமாற்றுக் காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கப் பழகிக்கொள்ள வேன்டும்.

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம்

திரைப்படம்: பதிபக்தி
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், ஜே.பி. சந்திரபாபு
ஆண்டு: 1958

ஓ ஓஓஓஓ ஓஓ ஓஓஓஓ ஓஓ ஓஓஓஓ
ஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓஓ

தர்மமென்பார் நீதி என்பார்
தரமென்பார் சரித்திரத்துச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தை சந்தியிலே எறிந்துவிட்டுத்
தன்மான வீரரென்பார் மர்மமாய்ச் சதிபுரிவார்
வாய்பேசா அபலைகளின் வாழ்வுக்கு நஞ்சு வைப்பார்
கர்ம வினையென்பார் பிரம்மன் எழுத்தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்
கர்ம வினையென்பார் பிரம்மன் எழுத்தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்

ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆ ஹேஹேஹேஹேஹே

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

ஹேய் அஜக் அஜக் அஜக் அஜக் அஜக் அஜக் அம்மா

திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும் ‍
எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும் ‍

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி ஹஹா

தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகினக்கடி தஜுகினக்கடி
தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகுனக்கடி தா
தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகினக்கடி தஜுகினக்கடி
தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகுனக்கடி தா

பொதுநலம் பேசும் புண்யவான்களின்
போக்கினில் அனேக வித்தியாசம்
புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம் - அந்தப்
பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாடணும்

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்
கவைக்கு உதவாத வெறும் பேச்சு
ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ
ஓஓஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ ஓ

கடவுள் இருப்பதும், இல்லை என்பதும்
கவைக்குதவாத வெறும் பேச்சு
கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு - பழங்
கதைகளைப் பேசி காலம் வீணாச்சு
கையாலே முன்னேற்றம் கண்டாகணும்

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி ஹேஹே

தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகினக்கடி திஜுகினக்கடி
தாங்குனக்கடி தஜுகினக்கடி தஜகுனக்கடி தா

அஜக் அம்மா ஐயோ கொல்லுறயே அப்பா

நாடி தளந்தவங்க ஆடி நடப்பவங்க
நல்லவங்க கெட்டவங்க நம்ப முடியாதவங்க ஆமா
நல்லவங்க கெட்டவங்க நம்ப முடியாதவங்க
பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க ஹாங்
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க ஹா
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க - இன்னும்
பொம்பளைங்க ஆம்பளைங்க அத்தனை பேரையும் வச்சு
மாடா இழுக்கிறோம் வேகமா - நம்ம
வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா

வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒண்ணாகணும் - நாம
வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒண்ணாகணும்

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும்

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி ஹேய்

தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகினக்கடி திஜுகினக்கடி
தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜகுனக்கடி தா
தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகினக்கடி தஜுகினக்கடி
தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகுனக்கடி தா

ஓஹோஹோ ஓஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹே
தாங்குனக்கடி தஜுகினக்கடி தஜகுனக்கடி தா

கமலம் பாத கமலம்

இவ்வுலகம் இசையில் எந்நேரமும் மூழ்கியிருக்கிறது. இரவு நேரங்களில் ஊரின் சந்தடி அடங்கிய பிறகு நாம் நம் வீட்டுக்கு வெளியில் குறிப்பாக மொட்டை மாடிக்குச் சென்று மனதில் எழும் இதர சிந்தனைகளை விடுத்து நம் செவிகளால் கூர்ந்து கவனித்துக் கேட்போமாகில் இவ்வுண்மை நமக்கு விளங்கும். நாம் கண்ணால் காண இயலாத உயிரினங்கள் ஒவ்வொரு இரவிலும் எழுப்பும் சில்லென்ற ரீங்கார ஒலியை நம் காதுகள் உணரத் தவறுவதில்லை. மனதை உலக சிந்தனைகளிலிருந்து திருப்பி ஒருமுகப்படுத்தும் வல்லமை வாய்ந்தது இசை ஒன்றேயாகும். இதன் காரணமாகவே இறைவனைத் தொழுவதற்கு ஏற்ற சாதனமாக இசை விளங்குகின்றது. எம்மதத்தைச் சார்ந்தவராயினும் அவர்கள் பிரார்த்தனை செய்ய இசையின் துணையையே நாடுகின்றனர்.

இசையை ரசிக்க்காத உயிரினங்கள் ஏதும் உலகில் இல்லை. எனினும் இசை பல வடிவங்களில் திகழ்கையில் ஒவ்வொரு வடிவமும் ஒரு குறிப்பிட்ட வகையான உயிரினங்களுக்குப் பிரியமானதாக விளங்கக்கூடும். பாம்புகளுக்குப் பிரியமான இசை புன்னாகவராளி ராகம் என்பது பிரசித்தி. குழந்தைகளுக்குப் பிரியமான ராகம் நீலாம்பரி. அம்ருதவர்ஷிணி எனும் ராகத்தை முறையாகப் பாடினால் நிச்சயம் மழை பெய்யும் என்பதும் மிகப் பிரசித்தி. ஒரு சமயம் இலங்கேஸ்வரனாகிய இராவணன் சிவபெருமானும், பார்வதி தேவியும் எழுந்தருளிய திருக்கயிலாயத்தைப் பெயர்த்தெடுக்க முயல்கையில் பார்வதி தேவி பதற்றமுறவே சிவபெருமான் தனது கட்டை விரலால் அழுத்த இராவணன் மலைக்கடியில் அகப்பட்டுக்கொண்டு திக்குமுக்காடிப் போனானாம். தன் பிழையை உணர்ந்து தன்னைக் காத்தருளுமறு வேண்டி சிவபக்தனாகிய இராவணன் தன் தலைகளில் ஒன்றையும் தன் கைகளில் ஒன்றையும் பிய்த்து அவற்றுடன் தன் நரம்புகளையே தந்திகளாகக் கொண்ட ஒரு வீணையை உருவாக்கி, அவ்வீணையை மீட்டியவாறு சாமகானம் பாட, அவனது இசையைக் கேட்டு மகிழ்ந்து சிவபெருமான் கருணை கொண்டு அவனை விடுவித்ததாகப் புராணம் சொல்கிறது. இராவணன் வீணையை மீட்டி அப்பொழுது பாடிய ராகம் காம்போதி. வீணை மீட்டிப் பாடுவதில் இராவணனுக்கு நிகர் எவருமில்லை என்பது பிரசித்தம். இராவணனை வீணை மீட்டிப் பாடுவதில் வெற்றி கண்டவர் அகத்திய முனிவர் ஒருவரே ஆவார்.

இசை நம் அனைவரின் துயர் தீர்க்கும் மருந்தாக வல்லது. தீராத நோய்வாய்ப்பட்டவரையும் அந்நோயிலிருந்து பரிபூரணமாய்க் குணப்படுத்தும் சக்திவாய்ந்தது என்பதும் பிரசித்தி. இதை மெய்ப்பிக்கும் வகையில் சரித்திரக் கதைகளில் பல சம்பவங்கள் கூறப்படுகின்றன. இந்தியாவை மொஹலாயர்கள் காலத்தில் ஆண்ட மாமன்னர் அக்பரின் அவைக்களப் பாடகராக விளங்கிய தான்சேன் இசைபாடி நோயாளிகளைக் குணப்படுத்திய்ள்ளதற்கும் தீப் எனும் ராகத்தில் பாடி அகல் விளக்கை எரிய வைத்ததற்கும் சான்றுகள் உள்ளன.

இசையை வெறுத்தவர் மொஹலாய மன்னர்களுள் ஒருவரான ஔரங்கசீப் என்பதும் பிரசித்தம். உண்மையில் அவர் இசையை வெறுக்கவில்லை, மனிதர்களையே வெறுத்தார் என்பதை அவரது வரலாற்றை அறிந்தவர் பலரும் ஒத்துக்கொள்வர். ஒரு முறை சிலர் வாத்தியங்களுடன் இசைமீட்டிப் பாடியவண்ணம் செல்கையில் அவர்களை எதேச்சையாக அவ்வழியே வந்த ஔரங்கசீப் மன்னர் கண்டு, என்ன செய்கிறீர்கள் என அதட்டிக் கேட்கையில் அவர்கள், அவரது கோபத்திலிருந்து தப்பிக்க வேண்டி "இசையைக் குழி தோண்டிப் புதைக்கப் போகிறோம்" என்று சமயோசிதமாக பதில் சொன்னார்களாம். அதற்கு ஔரங்கசீப், "நன்கு மிகவும் ஆழமாகத் தோண்டிப் புதையுங்கள், வெளியே வந்துவிடப் போகிறது" என்றாராம். இக்கதையை எனக்குக் கூறியவர் எனது தந்தை ஆவார்.

இயல்பாகவே சிறுவயது முதலே நான் இசையில் மிக்க ஈடுபாட்டுடன் இருப்பவன். என் தந்தையிடன் நான் முறையாக இசைபயில விரும்புவதாகவும், அதற்கு உதவுமாறும் நான் கேட்கையில் இக்கதையைக் கூறி என் வேண்டுகோளை அவர் நிராகரித்தார். இசையை நான் மறக்கவில்லை, தொடர்ந்து இசையைக் கேட்டும், பாடியும் புல்லாங்குழல், புல்புல் தாரா, மவுத் ஆர்கன் முதலிய வாத்தியங்களில் வாசித்தும் வருகிறேன். அதே சமயம் ஔரங்கசீப் கதையையும் நான் மறவாது அவ்வப்பொழுது நினைவில் கொள்வதுண்டு. இவ்வாறு இசை என் வாழ்வில் இசைந்து விளங்குவதால் இவ்வுலகில் நேரும் சிறுசிறு துன்பங்களைக் கண்டு துவளாமல் என்றும் இன்பமாய் வாழ என்னால் முடிகிறது.

அத்தகைய மகத்துவம் வாய்ந்த இசையை நாம் நாள்தோறும் கேட்டு மகிழ்ந்து நமது அன்றாட வாழ்வில் நாம் உறும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று மனதை எப்பொழுதும் மகிழ்ச்சிகரமாக வைத்துக் கொள்வது நலம் பயப்பதாகும். ஏதேனும் சோகமான சம்பவங்கள் நிகழ்ந்தாலும் சோகரசம் ததும்பும் இசையைக் கேட்டு நம் சோகத்தால் விளையும் துன்பத்தையும் நம்மால் கடக்க இயலும். அனைத்திற்கும் மேலாக மனிதகுலம் இறைவனடியைப் பணிந்துய்ய இசை மிகவும் ஏதுவானதொரு சாதனமாகும்.

கமலம் பாத கமலம்

திரைப்படம்: மோகமுள்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1995

ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

கமலம் பாத கமலம் கமலம் பாத கமலம்
கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம் இசையான வடிவான
இறைவன் நீ தானென்று நான் தொழும் ம்ம்ம்ம்ம்ம்ம்
தலைவன் நீ தானென்று போற்றிடும் ம்ம்ம்ம்ம்ம்ம்
கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும்
கமலம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஆகாயம் வெளுக்கும் அதிகாலை அழகில்
காகங்கள் விழித்துக் கரைகின்ற பொழுதில்
நெல்மூட்டை நிரப்பி நெடுஞ்சாலை நடத்தும்
வில்வண்டி இழுக்கும் மாட்டின் மணியோசை மயக்கும்
இதமான இளங்காற்று எனைத் தீண்டித் திரும்பும்
மெதுவாக இசை ஞானம் மனதோடு அரும்பும்
ஸ்வரங்கள் எனக்குள் பிறக்க
அருளெனும் பேரமுதினைப் பொழிந்திடும்

கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம் இசையான வடிவான
இறைவன் நீ தானென்று நான் தொழும் ம்ம்ம்ம்ம்ம்ம்
தலைவன் நீ தானென்று போற்றிடும் ம்ம்ம்ம்ம்ம்ம்
கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும்
கமலம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நாவாறப் பெரியோர் நிதமிங்கு இசைக்கும்
தேவாரப் பதிகம் திசைதோறும் ஒலிக்கும்
மும்மூர்த்தி பிறந்து சாகித்யம் புனைந்து
செம்மூர்த்தி நினைவில் தெய்வ சங்கீதம் வளர்த்து
திருவீதி வலம் வந்த தலம் இந்தத் தலம் தான்
இசைமாரி நிதம் பெய்த இடமிந்த இடம் தான்
நினைத்தால் மனத்தால் துதித்தால்
தலமொரு இசைநயங்களை வழங்கிய

கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம் இசையான வடிவான
இறைவன் நீ தானென்று நான் தொழும் ம்ம்ம்ம்ம்ம்ம்
தலைவன் நீ தானென்று போற்றிடும் ம்ம்ம்ம்ம்ம்ம்
கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

நாம் இவ்வுலகில் பிறந்த போது நம்முடன் எதனையும் கொண்டு வரவில்லை. இவ்வுலகை விட்டு நிச்சயமாக் ஒரு நாள் செல்கையில் எதனையும் கொண்டு போகப் போவதுமில்லை. இங்கு பிறக்கு முன் நாம் இருந்தோமா இல்லையா என்பதும் தெரியாது. இறந்த பின்னர் இருப்போமா, மாட்டோமா என்பதும் தெரியாது. காலத்தின் கொத்தடிமைகளாக ஏதோ சொற்பகாலம் ஒரு மாயத் தோற்றம் கொண்ட உலகில் வாழ்ந்து மறையும் நாம் நம் அற்பமான நிலையை மறந்து மமதையால் பிறரை விடவும் உயர்வானவராக நம்மை நாமே எண்ணிக்கொண்டு பிறரை மதியாது, பிறர் மேல் அன்பு செலுத்தாது நம் சுகம் ஒன்றே பெரிதென எண்ணி வாழ்கிறோம்.

அவ்வாறான சுயநல வாழ்வு வாழ்வோமெனில் நாம் இவ்வுலகில் இருக்கும் போதும் நம்மை உலகத்தார் யாரும் மதிக்க மாட்டார்கள். நம் உற்றார், உறவினரும் உடன்பிறந்தோருமே நம்மை இழிவாக எண்ணி இகழ்வார்கள். நாம் இறந்த பிறகும் பழியே மிஞ்சும். நம்மை அனைவரும் மறந்து போவார்கள். ஏதோ ஒரு சிலர் நம்மை ஏதோ ஒரு சமயம் நினைவுகூர்ந்தாலும் நம்மை ஏளனமே செய்வர்.

சுயநலத்தை ஒதுக்கிவிட்டு உலக நன்மையையே பெரிதெனக் கொண்டு சேவை செய்தோமெனில் நம்மை யாவரும் நாம் வாழ்கின்ற காலத்திலும் மறைந்த பின்னரும் என்றும் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் நினைவு கொள்வர். நாம் செய்கின்ற ஒவ்வொரு செய்கையும் நம் வருங்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்கு வழிகோலுவதாக அமைய வேண்டும். பெரும்பொருள் சேர்த்து அதைக்கொண்டு வானளாவிய கட்டடத்தைக் கட்டிக் குடியிருந்து வாழ்வை சுகமாக அனுபவிக்க விழைகையில் சுற்றுப்புறத்தில் தேங்கிய சாக்கடைகளும், குப்பை மேடுகளும் சூழ்ந்திருந்தால் நாமும் ஆரோக்யமாக வாழ இயலாது நம்மைச் சுற்றியுள்ள மக்களும் நல வாழ்வு பெற இயலாது. வீடுகளிலிருந்தும், வணிக நிறுவனங்கள் மற்றும் ஆலைகளிலிருந்தும் தினந்தோறும் வெளியேறும் குப்பைகளும், கழிவு நீரும், புகையும் பூமியையும் காற்று மண்டலத்தையும் தொடர்ந்து மாசு படுத்துகின்றன.

சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் அரசுத் துறையினர் முறையாகத் தம் கடமையை நிறைவேற்றுகின்றனரா என்பதைத் தொடர்ந்து கண்காணித்து முறையாக நிறைவேற்றாவிடில் நினைவுறுத்தி அனைவரும் நன்மை பெற உதவுவது நம் ஒவ்வொருவரது கடமையாகும். இதற்கு நாம் முதலில் சமுதாய ரீதியில் ஒன்றுபட வேண்டும். நிச்சயம் ஒவ்வொரு ஊரிலும் சமுதாயப் பணியைத் தலையாய கடமையாகக் கொண்டு வாழ்வோர் இருக்கின்றனர். அவர்களுடன் நாமும் இணைந்து சேவை செய்தல் உலக நலன் பெருக வழிவகுக்கும்.

பெறற்கரிய மானுடப் பிறவியைப் பெற்ற நாம் வாழ்நாளில் கருணையுள்ளவராக விளங்கி பொதுநலத்தைப் பேணி வாழ்வோமெனில் மனிதருள் தெய்வமெனப் போற்றப்பெற்று இறைநிலையை எய்தலாம். என்றோ ஒரு நாள் நாம் சொல்லாமல் இறைவனடியையே சேர்வது நிச்சயமாதலால் வாழ்நாளில் உள்ளத் தூய்மையுடன் விளங்குதல் நலம்.

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
அவர் அன்றாடம் தேடும் செல்வங்காளாலே
பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்
அவர் அன்றாடம் தேடும் செல்வங்காளாலே
பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்

தாயாரின் கையிருந்து சம்சாரம் கைக்கு வந்து
நோயாகும் முதுமை கொண்டு கண் மூடுவார்

ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ

தாயாரின் கையிருந்து சம்சாரம் கைக்கு வந்து
நோயாகும் முதுமை கொண்டு கண் மூடுவார்
அதை ஓர் நாளும் எண்ணாமல் ஆடுவார்
ஒன்றோடு மற்றொன்றை நாடுவார்
அதை ஓர் நாளும் எண்ணாமல் ஆடுவார்
ஒன்றோடு மற்றொன்றை நாடுவார்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்

குலை ஈன்ற வாழை மாண்டு போகும் விரைவிலே
அதன் இளையன் கன்று வளர்ந்து பொங்கும் உலகிலே
குலை ஈன்ற வாழை மாண்டு போகும் விரைவிலே
அதன் இளையன் கன்று வளர்ந்து பொங்கும் உலகிலே

தினம் தோன்றும் வாழ்வில் மனிதரெல்லாம் ஒரு முறை
இந்தத் துணையை எண்ணிப் பார்க்க வேணும் மனதிலே

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
அவர் அன்றாடம் தேடும் செல்வங்காளாலே
பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்

சலசல ராகத்திலே

1962-63 ஆண்டுகளில் நான் நான்காம்-ஐந்தாம் வகுப்புகள் படிக்கையில் என் தந்தை தாயுடனும் சகோதர சகோதரிகளுடன் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கிணத்துக்கடவு எனும் ஊரின் அருகில் 2 கி.மீ. தூரத்தில் அமைந்திருந்த பகவதி பாளையம் எனும் ஒரு சிறு கிராமத்தில் வசித்தேன். அப்போது நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு மாத வாடகை ரூ 10/- இப்பொழுது 10 ரூபாய்க்கு ஒருவர் ஒரு வேளை உணவும் வாங்க முடியாது. எங்கள் வீடு அக்கிராமத்தில் இருந்த முக்கியப் பிரமுகரது வயலின் அருகாமையில் இருந்தமையால் பள்ளி சென்று வந்தபின் நான் பொழுதைக் கழிப்பது அவ்வயலிலும் அருகிலுள்ள மரங்கள் நிறைந்த பகுதியிலுமே என வாழ்க்கை இயற்கையோடு இயைந்து இன்பகரமாக இருந்தது. வயலில் பெரும்பாலும் கரும்பு பயிரிடுவர். ஒரு பயிர் அறுவடை முடிந்ததும் வேறு ஏதேனும் தானியப் பயிரை விதைத்து அப்பயிற் முழு வளர்ச்சி அடையுமுன்பே மண்ணுடன் சேர்த்து உழுதுவிடுவர். சிறிது காலம் கழித்து மீண்டும் கரும்பு பயிரிடுகையில் மண்ணுடன் சேர்த்து உழப்பட்ட பயிர்கள் மண்ணோடு மண்ணாக மக்கி, கரும்புப் பயிருக்கு உரமாக ஆகிவிடும். கரும்பு அறுவடை முடிந்த பின்னர் வயலின் அருகிலே இருந்த ஒரு கொட்டகையில் அக்கரும்பைச் சாறாகப் பிழிந்து பெரிய வாயகண்ட பாத்திரங்களில் காய்ச்சி, சில இரசாயனப் பொடிகளைக் காய்ச்சிய பாகின் மேல் தூவ அப்பாகிலுள்ள அழுக்குகள் யாவும் பொங்கி மேலெழுந்து ஓரமாக ஒதுங்கியவுடன் அவற்றை நீக்கி விட்டுப் பின் தூய பாகினை வெல்லம் செய்யும் அச்சுக்களில் ஊற்றி ஆற விடுவர்.

அச்சமயங்களில் அங்கே இருந்து வேடிக்கை பார்க்கும் எனக்கு சூடான வெல்லம் கிடைக்கும். அதன் சுவையே அலாதி. அவ்வயலில் ஒரு கிணறுண்டு. அக்கிணற்றிலிருந்து நீரை இறைக்க கபிலை என அழைக்கப்படும் ஒரு பாத்திரத்தை ஏற்றத்தில் கயிறு கொண்டு கட்டு, இரு மாடுகளைக் கொண்டு இறைத்து வயலுக்குப் பாய்ச்சுவர். கிணற்றின் அருகாமையில் இருக்கும் ஒரு பெரிய தொட்டியில் நீர் முதலில் நிரம்பிப் பின் அத்தொட்டியின் அடி பாகத்தில் பொருத்திய ஒரு சிறு குழாய் வழியே நீர் வயலுக்குப் பாயும். எனது குளியல் தினம் தோறும் அந்தத் தண்ணீர்த் தொட்டியிலேயே நிறைவேறும். நான் நீச்சல் கற்றுக்கொண்டது அத்தொட்டியிலேயே ஆகும்.

வயலின் நண்டுகள் நிறைந்திருக்கும் எனக்கு அமைந்த ஓரிரு நண்பர்களுடன் சேர்ந்து அந்த நண்டுகளை வேடிக்கை பார்ப்பதும் உண்டு. அக்கிராமத்தின் நுழைவாயிலில் ஒரு பெரிய அரசமரமும் அதனைச் சுற்றி ஒரு பெரிய திண்ணையும் இருந்தது. அத்திண்ணையில் கிராமத்தைச் சேர்ந்த பலர் அமர்ந்து உரையாடுவர். அந்த இடத்தில் அவ்வப்பொழுது திடகாத்திரமாக விளங்கிய ஒரு காளை மாட்டைக் கொண்டு பசுக்களுக்கு உடல் உறவின் வழியே கருத்தரிக்க வைப்பர். பல வீடுகளில் பசுக்களும் எருமைகளும் வளர்த்துப் பராமரித்ததால் சாணிக்குப் பஞ்சமிருக்காது. ஆங்காங்கே தெருவில் விழுந்து கிடக்கும் சாணியை அள்ளியெடுத்து வந்து வரட்டியாகத் தட்டி அடுப்பெரிக்கவும், பசுஞ்சாணியை வீட்டு வாசலை மெழுகவும். உபயோகிப்போம். தற்போது மாடுகள் எதுவும் இத்தகைய முறையில் கருத்தரிக்க வைக்கப்படுவதில்லை. மாறாக நாம் குளிர்பதனம் அருந்தப் பயன்படுத்தும் ஸ்ட்ரா போன்ற குழாய்களில் காளையின் விந்தினை குளிர் பதன நிலையில் பராமரித்து அதனைக் கொண்டே கருத்தரிக்க வைக்கப் படுகின்றன. தான் மட்டும் தாராளமாகத் தன் மனைவியுடன் வேண்டிய பொழுதெல்லாம் காதலின்பத்தைத் தவறாமல் அனுபவிக்கும் மனிதன் தனக்குத் தன் ரத்தத்தையே பாலாக்கித் தரும் பசுவுக்கு இயற்கையில் கிடைக்க வேண்டிய சுகத்தைத் தடுக்கிறான்.

பசுவின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கருத்தரிக்கச் செய்து அதன் இரத்தத்தைப் பாலாகக் கறந்து தானும் குடித்துப் பிறருக்கும் விற்று வயிறு வளர்க்கும் மனிதன் கறவை வற்றியவுடன் அப்பசுவை அடிமாடாகக் கேரளாவுக்கும் பிற இடங்களுக்கும் விற்றுவிடுகிறான். அவ்வாறு அடிமாடாக விற்கப்படும் பசுக்கள் பல லாரி முதலிய வண்டிகளில் ஏற்றப்பட்டும் கால்நடையாகவும் வெகுதூரம் கொண்டு செல்லப்பட்டு இறுதியில் கொலை செய்யப் படுகின்றன. இடையில் அவற்றுக்கு தாகம் தீர்க்கத் தண்ணீர் கூடத் தருவதில்லை.

இவை அனைத்திற்கும் மேலாக மனிதன் விளைநிலங்களை வீட்டு மனைகளாக வெகு வேகமாக மாற்றி வருவது மிகவும் அபாயகரமான போக்கு. இயற்கையை அழித்தால் மனிதன் வாழ இடமிருக்காது. இயற்கை அழிவைத் தடுத்து மனிதர் குலம் பன்னெடுங்காலம் வாழ வழி வகுப்பது நம் அனைவரது கடமை. ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் தற்போது தாங்கியிருக்கும் உடலைப் பிரிந்து மீண்டும் இதே மண்ணில் பிறந்தால் நாம் உண்ண உணவும் உயிர் வாழ உறைவிடமும் தரவல்லது இயற்கையே ஆகும். அத்துடன் பசு எர்மை முதலிய மிருகங்கள் கறவை வற்றிய பின்னரும் அவற்றை உரிய மருத்துவ வசதிகளும் தீனியும் கொடுத்து நல்ல முறையில் பராமரித்தல் வேண்டும். அதற்குரிய பலனை அவற்றின் சாணத்திலிருந்தே பெற இயலும். மாட்டு எருமைச் சாணத்திலிருந்து பயோ காஸ் எனும் எரிவாயு உற்பத்தி செய்யலாம். சாணத்தை இயற்கை உரமாக வயல்களுக்குப் பயன்படுத்தினால் நல்ல மகசூல் கிடைப்பதுறுதி. இரசாயன உரங்களையும் பலவகையான பூச்சி மருந்துகளையும் உபயோகித்து இயற்கையில் விளையும் உணவையும் விஷமாக்கிவிட்டோம் நாம்.

இயற்கையன்னையின் மடியில் ஓடிவரும் கங்கை நதியின் ஓரத்தில் ஒரு கன்னிப்பெண் அந்நதியின் அழகை ரசித்தவாறு இயற்கையில் தன் மனதை இசைத்துப் பாடும் ஒரு இன்பமான பாடல் இன்றைய பாடலாக இதோ:

சலசல ராகத்திலே

திரைப்படம்: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1960

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா?

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா?

ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓஓ

ஆத்துக்குள்ளே நானிருக்க அக்கரையிலே மனமிருக்க
ஆத்துக்குள்ளே நானிருக்க அக்கரையிலே மனமிருக்க
அலைமேலே அலை எழுந்து ஆளை வந்து தள்ளிடுதே
நேரத்திலே போகணும் நீண்ட கதை பேசணும்
ஆழத்தையும் தாண்டியே அன்பு முகத்தைப் பாக்கணும்
அன்பு முகத்தைப் பாக்கணும்

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா

பச்சை மலை சாரலிலே பனியுறங்கும் பாறையிலே
பச்சை மலை சாரலிலே பனியுறங்கும் பாறையிலே
படைபோலே பறவையெல்லாம் பறந்து வந்து கூடுதே

மீனும் மீனும் மேயுதே வேடிக்கையாய்ப் பாயுதே
ஆனந்தமாய்க் கண்களும் அவரை நாடிப் போகுதே
அவரை நாடிப் போகுதே ஓஓஓஓ

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா?

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா?

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும்

எல்லாம் வல்ல தெய்வமது எங்கும் உள்ளது நீக்கமற
சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்
வல்லாய் உடலில் இயக்கமவன் வாழ்வில் உயிரில் அறிவும் அவன்
கல்லார் கற்றார் செயல் விளைவாய்க் காணும் இன்ப துன்பமவன்.
அவனின் இயக்கம் அணுவாற்றல் அணுவின் கூட்டுப் பக்குவம் நீ
அவனில் தான் நீ உன்னில் அவன் அவன் யார்? நீயார்? பிரிவேது?
அவனை மறந்தால் நீ சிறியோன் அவனை அறிந்தால் நீ பெரியோன்
அவன் நீ ஒன்றாய் அறிந் த இடம் அறிவு முழுமை அ து முக்தி.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

எத்தனை ஞானிகள் தோன்றி எத்தனை அறிவுரைகளை எப்படி, எங்கு, என்று வழங்கினாலும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் எனும் நான்கையும் தவிர நன்னெறிகள் எவற்றையும் ஏறெடுத்தும் பாராத இந்தப் பாழும் மனிதர் கூட்டம் சுய சிந்தனையை இழந்து செம்மரியாட்டுக் கூட்டம் ஒன்றன் பின் ஒன்றாய் சாய்வது போலக் கண்மூடித்தனமாக நெறிகெட்டு வாழ்ந்து அல்லலுறுகின்றனர்.

ஏசுபிரான் எல்லோரும் பிற உயிர்களைக் கருணையுடன் பேணி இரக்க சிந்தனையுடன் வாழச் சொன்னார், ஆனால் மனிதன் ஏசுநாதர் கையிலிருக்கும் ஆட்டையே உண்டு ஏசுவையே அவமதிப்பதுடன், ஏசுவின் வழியே தான் நடப்பதாகவும் பொய்யுரைத்து, தன்னையும் ஏமாற்றிக் கொண்டு பிறரையும் ஏமாற்றிப் பெரும் பாபத்தில் விழுகிறான். அண்ணல் காந்தியடிகளின் புகழை அனுதினமும் பாடுவான், அவரது சிலைகளைப் பல்வேறு நாடு நகரங்களிலும் நிறுவுவான், அவரது பிறந்த நாளன்று அவரது சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்வான், அவரது சிலைக்கு ஆளுயர மாலை அணிவிப்பான், ஆனால் அவரது கொள்கைகளையும் அவர் கடைபிடித்த வாழ்க்கை நெறிகளையும் சற்றும் பின்பற்றாது எந்நாளும் பொய்யுரைத்துப் பிறரை என்றும் ஏமாற்றியே வாழ்வான்.

நாட்டில் நல்லவர்கள் பலர் தன் கண்முன்னே இருக்கக்கண்டும் அவர்களைத் தன் தலைவராகக் கொள்ளாமல் கருப்புப் பணத்தின் உதவியுடன் கூலி கொடுத்து ஆளை அமர்த்தி, ஆடம்பரமாக மேடையமைத்து, அலங்கார வளைவுகள் வைத்து, பேருந்துகளின் மூலம் பெருங்கூட்டத்தைச் சேர்த்து ஆர்ப்பாட்டம் செய்து தன் பலத்தைக் காட்டுபவனையே தன்னிகரில்லாத் தலைவன் என்று கொண்டாடுகிறான் பேதை மனிதன். திருட்டும் புரட்டும் நிறைந்தவர்களுக்கே திரும்பத் திரும்ப வாக்களித்து மீண்டும் மீண்டும் ஏமாந்து யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல் கெட்டு சீரழிகிறான்.

நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும் நன்றியெனும் குணம் நிறைந்திருக்கும்
நரியாய் அவனே உருவெடுத்தாலும் தந்திரமாவது தெரிந்திருக்கும்
காக்கைக் குலமாய் அவதரித்தாலும் ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும்
காற்றாய் நெருப்பாய் நீராய் இருந்தால் கடுகளவாவது பயனிருக்கும்
ஆறறிவுடனே பேச்சும் பாட்டும் அறிந்தே மனிதன் பிறந்து விட்டான் அந்த
ஆறாம் அறிவைத் தேறா அறிவாய் அவனே வெளியில் விட்டு விட்டான்

- கவிஞர் கண்ணதாசன்

செம்மரி ஆட்டுக்கூட்டம் போல் திக்குத் தெரியாமல் செல்லுமிடமறியாது செல்லும் இப்பாழும் மனிதர்கள் திருந்துவதென்றோ அன்றே உலகம் உய்யலாகும்.

http://www.thamizhisai.com/tamil-cinema/paasavalai/intha-aattukkum.php

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும்

இந்த ஆட்டுக்கும் த த ட்ர்ர்ர்ர்ர்ர்ர்
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரும்
கூட்டிருக்குது கோனாரே - இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே

த அஆ த த த ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ரி

இந்த ஆட்டுக்கும்
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரும்
கூட்டிருக்குது கோனாரே - இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே

தில்லாலங்கடி தில்லாலங்கடி எல்லாம் இப்படிப் போகுது
நல்லாருக்குள் பொல்லாரைப் போல் நரிகள் கூட்டம் வாழுது
தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலே

இந்த ஆட்டுக்கும்
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரும்
கூட்டிருக்குது கோனாரே - இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே

த த ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரி த

கணக்கு மீறித் தின்றதாலே கனத்த ஆடு சாயுது
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆ
கணக்கு மீறித் தின்றதாலே கனத்த ஆடு சாயுது அதைக்
கண்ட பின்னும் மந்தையெல்லாம் அதுக்கு மேலே மேயுது
பணக்கிறுக்கு தலையிலேறிப் பகுத்தறிவுந்தேயுது ஹஹாங்
பணக்கிறுக்கு தலையிலேறிப் பகுத்தறிவுந்தேயுது - இந்தப்
பாழாய்ப் போற மனிதக் கூட்டம் தானாய் விழுந்து மாயுது

இந்த ஆட்டுக்கும்
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரும்
கூட்டிருக்குது கோனாரே இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே

தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலே
தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலே

ஹஹ த ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ரி த த த ஹஹ த

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

இயற்கையில் இறைவன் படைப்பில் எவ்வித பேதங்களும் இன்றி எல்லா உயிரினங்களும் சமமே. இன, நிற, மொழி, மத பேதங்கள் மந்த புத்தி படைத்த மனிதரிடையே மட்டும் வழக்கத்திலுள்ளன. அறியாமையால் தன் இயற்கை அறிவை இழக்கும் மனிதர்கள் தம்மிடையே ஏற்றத் தாழ்வு பாராட்டுவதோடு பிற உயிர்களையும் நேசிக்கத் தவறுகின்றனர். இயற்கையையும் மதிக்காது இயற்கை வளங்களைத் தம் சுயநலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நோக்குடன் அழிக்கவும் தலைப்படுகின்றனர். ஆங்கிலேயரின் ஆதிக்கம் வலுவுற்று விளங்கிய காலத்தில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா முதலிய நாடுகளில் ஆங்கிலேயர்களைத் தவிர மற்ற இனத்தைச் சேர்ந்த மக்கள் யாவரும் தாழ்ந்தவர்களாகரும் தீண்டத் தகாதவர்களாகவும் நடத்தப்பட்டு வந்தனர். அது மட்டுமின்றி ஆப்ரஹாம் லிங்கன் காலம் வரையிலும் அமெரிக்காவில் கறுப்பின மக்கள் மற்ற ஆங்கிலேயர்களிடம் அடிமைகளாக வாழ்ந்ததும் வரலாறு கண்ட உண்மையாகும்.

நாளடைவில் மஹாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா முதலிய தலைவர்கள் வழிநடத்திய அஹிம்சை வழிப் போராட்டங்களின் பலனாக உலகெங்கிலுமுள்ள மக்கள் தம்முள் இனப்பாகுபாடு பாராட்டும் மடமையினின்று மீண்டு அனைவரையும் சமபாவத்தோடு நடத்தும் மனப்பக்குவத்தை அடைந்ததனால் இன்று ஆங்கிலேயர்கள் பெரும்பான்மையாக விளங்கும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக கருப்பினத்தைச் சேர்ந்தவரான ஓபாமா தேர்ந்தெடுக்கப் பட்டு ஆட்சி புரிகிறார்.

நமது நாட்டிலும் முற்காலத்தில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் சம உரிமை பெற்றுப் பல துறைகளிலும் முன்னணியில் விளங்குகின்றனர். இவ்வாறான முன்னேற்றங்கள் பல நம் கண்முன்னே நிகழ்ந்தபோதிலும் அவ்வப்போது ஒரு சில சுயநல அரசியல்வாதிகளின் போக்கால் சாதி, மத, இன மொழி பேதங்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றதும் நாம் அறிவோம். இத்தகைய பேதங்கள் யாவும் மறைந்து நம் நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் யாவரும் ஒனறே குலம், ஒருவனே தேவன் எனும் சமரச சன்மார்க்க நெறியைப் பேணிப் பெருமையுறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கையில் நிறம் பார்த்து சிவப்பு நிறமானால் விரும்புவதும் கருப்பானால் வெறுப்பதும் என்ற மடமையும் நீங்கி உள்ளத்து உயர்வையும் பிற தகுதிகளையும் கணக்கில் கொண்டு வாழ்க்கைத் துணையைத் தேடும் மனப்பக்குவத்தையும் பெரும்பாலான மக்கள் அடைந்துள்ளனர். அத்தகைய முற்போக்கான மனோபாவம் மக்களிடையே நிலவுவதை விளக்கும் பாடலொன்று இன்றைய பாடலாக மலர்கிறது.

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

திரைப்படம்: வெற்றிக்கொடி கட்டு
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: தேனிசைத் தென்றல் தேவா
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டண்
டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டண்

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

சாமி கருப்புத் தான் சாமி செலையும் கருப்புத் தான்
யானை கருப்புத் தான் கூவும் குயிலும் கருப்புத்தான் என்னை
ஆசைப்பட்டுக் கொஞ்சும் போது குத்துற மீசை கருப்புத் தான்
அசத்துங் கருப்புத் தான்

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே

வெண்ணிலவை உலகம் பாக்க வச்ச இரவு கருப்புத் தான்
வேர்வை சிந்தி உழைக்கும் எங்க விவசாயி கருப்புத் தான்
மண்ணூக்குள்ளே இருக்குறப்போ வைரம் கூடக் கருப்புத் தான்
மதுரை வீரன் கையில் இருக்கும் வீச்சருவாள் கருப்புத் தான்
பூமியிலே முத முதலா பொறந்த மனுஷன் கருப்புத் தான்
மக்கள் பஞ்சம் தீக்கும் அந்த மழை மேகம் கருப்புத் தான்
ஒன்ன என்ன ரசிக்க வச்ச ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்
ஒன்னை என்ன ரசிக்க வைத்த கண்ணு முழி கருப்புத் தான்
கற்பு சொல்லி வந்தா என்ன கண்ணகியும் கருப்புத் தான்
தாய் வயிற்றில் நாமிருந்த
தாய் வயிற்றில் நாமிருந்த கருவறையும் கருப்புத் தான்
பணமும் கருப்புத் தான்

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

உன்னைக் கண்ட நாள் முதலா வச்ச பொட்டும் கருப்புத் தான்
ரெட்டை ஜடை பின்னலிலே கட்டும் ரிப்பன் கருப்புத் தான்
பூக்கடையில் தேடினேன் பூவில்லை கருப்புத் தான்
அன்று முதல் எனக்குத் தான் பூக்கள் மீது வெறுப்புத் தான்
பாவாடை கட்டிக் கட்டி பதிஞ்ச இடம் கருப்புத் தான்
முத்தங்கேட்டுக் காத்திருக்கும் அந்த இடம் ஒனக்குத் தான்
உன்னைப் பொத்தி வச்சிருக்கும் ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்
உன்னைப் பொத்தி வச்சிருக்கும் நெஞ்சுக்குழி கருப்புத் தான்
ஊரறிய பெத்துகணும் புள்ளை பத்து கருப்பு தான்
நம்மூரு சூப்பர் ஸ்டாரு ஆங்
நம்மூரு சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்தும் கருப்புத் தான்
அழகு கருப்புத் தான்

கருப்புத் தான் எனக்கும் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

சாமி கருப்புத் தான் சாமி செலையும் கருப்புத் தான்
யானை கருப்புத் தான் கூவும் குயிலும் கருப்புத்தான் என்னை
ஆசைப்பட்டுக் கொஞ்சும் போது குத்துற மீசை கருப்புத் தான்
அசத்துங்கருப்புத் தான்

திங்கள், 16 ஜனவரி, 2012

உலகம் சமநிலை பெற வேண்டும்

இறைவன் நாம் வாழ்வதற்கு எல்லா வளங்களையும் அளித்திருந்தும் தம்மிடையே அவற்றைப் பகிர்ந்து கொண்டு இன்பமாய் வாழ மனமின்றி சுயநலத்தால் மதிமயங்கிய மாந்தர்கள் சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் வளரக் காரணமாகின்றனர். இதனால் மனிதர்களுக்குள்ளே பல்வேறு வகைகளிலும் கருத்து வேறுபாடுகளும் சண்டை சச்சரவுகளும் பெருகி சமூக அமைதி குலைகிறது. மனிதர்களை மிருகங்களிடமிருந்து மேம்படுத்தி உயர்வைத் தரும் கட்டுக்கோப்பான சமுதாய அமைப்பின் சட்டதிட்டங்கள் யாவினையும் மீறி அநீதிப் பாதையில் செயல்படும் வலிமையுள்ளவர்கள் செல்வந்தர்களாக வாழ்கையில் வலிமையற்ற மனிதர்கள் குறைந்த வருவாயில் வாயைக்கட்டி வயிற்றைக் கட்டி வாழ வேண்டிய ஏழ்மையில் தள்ளப்படுகின்றனர்.

பல்வேறு காரணங்களால் சமூக நீதி நிலைபெறாமையால் ஏழைகள் மேலும் ஏழைகளாகையில் செல்வத்தர்கள் மேலும் செல்வந்தர்கலாகின்றனர். இந்நிலை தொடர்கையில் ஏழ்மையில் தள்ளப்பட்ட மனிதர்கள் மனம் நொந்து வாடும் நிலை தொடர்கிறது. இம்மன வாட்டம் நாளடைவில் பெரும் கோபமாக உருவெடுத்து அத்தகைய கோபம் முற்றுகையில் கலவரமாக வெடித்து பொது சொத்துகளுக்கு சேதாரம் ஏற்பட்டு மனிதர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு மடியக்கூடிய அளவுக்குப் பெரும் கேடாக முடிகிறது. இத்தகைய சமூக நிலை உருவாவது ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பாதித்துப் பெரும் வீழ்ச்சியை சந்திக்க நேரிடுகிறது. எகிப்து, லிபியா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் சமீப காலத்தில் ஏற்பட்ட கலவரங்களும் உள்நாட்டுப் போரும் நம் நாட்டில் ஏற்படாமல் தடுப்பது இந்திய மக்கள் அனைவரின் தலையாய கடமையாகும். இதற்கு ஒரே வழி சமூக நீதி நிலைநாட்டப்பட்டு மக்களிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகள் குறைந்து அனைவரும் சம அந்தஸ்தைப் பெற்று அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ ஏற்ற சூழ்நிலை உருவாக்கப்படுவதேயாகும்.

அத்தகைய சம நிலை உலகில் ஏற்பட வேண்டுமெனில் மனிதர்கள் அறியாமை இருளிலிருந்து மீண்டு அறிவொளி பெற வேண்டும். அதற்கு ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் நலம் பேணும் நல்லாட்சி மலர வேண்டும். உலக நாடுகளிடையே ஒற்றுமை வளர வேண்டும். போர், பகை அச்சம் நீங்கி வளர்ச்சிப்பாதையில் உலகம் செல்ல வேண்டும். போதும் என்ற மனம் கொண்டு மனிதர் யாவரும் பேராசை நீக்கி இருப்பதைக் கொண்டு தானும் சிறப்புடன் வாழ்ந்து பிறருக்கும் அளித்து உலக மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே எனும் ஒரு உன்னத நிலையில் ஒருங்கிணைந்து வாழ வேண்டும். அப்பொழுது உலகம் நிலைபெற்று இயற்கை வளங்கள் பெருகி அழிவுப்பாதையிலிருந்து மீண்டு செழிக்கும்.

உலகம் சமநிலை பெற வேண்டும்

திரைப்படம்: அகத்தியர்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: உளுந்தூர்ப் பேட்டை சண்முகம்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
ஆண்டு: 1972
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்

இமயமும் குமரியும் இணைந்திடவே
எங்கும் இன்பம் விளைந்திடவே
சமயம் யாவும் தழைத்திடவே
சத்தியம் என்றும் நிலைத்திடவே

உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்

அறிவும் அன்பும் கலந்திடவே
அழவில் வையம் மலர்ந்திடவே

நெறியில் மனிதன் வளர்ந்திடவே
நேர்மை நெஞ்சில் நிறைந்திடவே

உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்
நிறைவே காணும் மனம் வேண்டும்
இறைவா அதை நீ தர வேண்டும்
உலகம் சமநிலை பெற வேண்டும்
உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்

அன்பு நடமாடும் கலைக்கூடமே

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

எனும் குறள் வழி நின்று சுயநலம் நீக்கிப் பொதுநலம் பாராட்டும் உத்தமர்கள் பலரும் உலகில் இருப்பதாலேயே உலகில் உயிர் வாழ்க்கை நிலைபெற்று வருகிறது. சுயநலவாதிகளால் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வரும் முறைகேடுகள் பல நிகழ்ந்த போதிலும் அவற்றை அனைவரும் அறியும் வண்ணம் எடுத்துரைத்துப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இத்தகைய பொதுநலவாதிகள் தொடர்ந்து விளக்கி வருவதுடன் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாலேயே சமுதாயம் பாதுகாக்கப் படுகிறது.

நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்குமாங்கே பொசியுமாம் தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை

எனும் ஔவை மூதாட்டியின் வாக்குக்கிணங்க சமுதாய சேவையே வாழ்க்கையாகக் கொண்டு திகழும் உன்னத மாந்தர் பலர் உள்ளதாலேயே அறியாமையால் தவறு செய்யப் புகும் பலரும் மனம் திருந்தி நல்வழி செல்லும் நிலை உருவாகியுள்ளது.

மக்களைக் காக்க வேண்டிய அரசுகள் கடந்த பல ஆண்டுகளாக அரசுத்துறையில் இயங்கி வந்த தொழில்கள் பலவற்றையும் தனியாருக்கு தாரைவார்த்ததனால் நாட்டின் வளங்கள் யாவும் சிறிது சிறிதாக சுரண்டப்படுவதுடன் வரி ஏய்ப்பு அதிகரித்து செல்வந்தர்கள் மேலும் அதிக செல்வந்தர்களாவதும் ஏழை மக்கள் மேலும் ஏழ்மைப்பட்டு அன்றாடம் உண்ண உணவுக்கு உடுக்கும் உடைக்கும், உறையும் இடத்துக்கும், குழந்தைகளின் கல்விக்கும், மருத்துவ வசதிகளுக்கும், போக்கு வரத்துக்கும் போதிய பணத்த ஈட்ட வழியின்றி விலைவாசி உயர்வினால் துன்புற்று வாடுகையில், துன்பப்படும் மக்களுக்கு தைரியமூட்டி, முறையாகத் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள உரிய வசதிகளைப் பெறும் மார்க்கத்தை இப்பொதுநல சேவகர்கள் காட்டி வருகின்றனர்.

இப்பொதுநல வாதிகள் பலரும் ஒன்று திரண்டு ஒரு பேரியக்கத்தை உருவாக்கி செயல்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியதாகும். தவறு செய்யும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தண்டனையிலிருந்து தப்பிக்க இயலாத சூழ்நிலை சிறிது சிறிதாக உருவாகி வருவது ஆறுதல் தருவதாக உள்ளது.

மனிதர்களாகப் பிறந்த நாம் ஏன் பிறந்தோம்? நமக்கு முற்பிறவியும் மறுபிறவியும் உண்டா இல்லையா? அவ்வாறு இருந்தால் முற்பிறவியில் நாம் யாராக இருந்தோம்? மறுபிறவியில் யாராக இருப்போம்? எனபன போன்ற பல கேள்விகளுக்கும் விடை தெரியாமல் மாயையில் சிக்குண்டு இவ்வுலகம் சாஸ்வதமென்று எண்ணி பொருள் தேடுவதிலும் சிற்றின்பங்களை அனுபவிப்பதிலுமே நேரத்தை செலவழித்து அர்த்தமற்ற வாழ்க்கையை வாழ்கிறோம். இவ்வாறான சுயநல வாழ்வை நாம் வாழ்வதால் நமக்கும் பயனில்லை பிறர்க்கும் பயனில்லை. நாம் இருக்கையில் நம்மைப் பலரும் போற்ற வேண்டும், இறந்த பின்னரும் நம்மை நினைத்து மகிழ வேண்டும். அப்பொழுது தான் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டாகும்.

அதற்கு ஓரே வழி பொதுநலவாதிகள் உருவாக்கிய இயக்கத்தில் இணைந்து சேவை புரிவதேயாகும். அவ்வாறு நாம் பொதுநலத்தைப் பேணும் மார்க்கத்தில் செல்வோமெனில் நம்மை அனைவரும் போற்றி வணங்குவர் என்பதில் ஐயமில்லை. அனைவரிடமும் நாம் அன்பு செலுத்துகையில் அனைவரும் நம் மேல் பன்மடங்கு அன்பு செலுத்துவர்.

அன்பு தான் இன்ப ஊற்று
அன்பு தான் உலக ஜோதி
அன்பு தான் உலக மகா சக்தி!

அன்பு நடமாடும் கலைக்கூடமே

திரைப்படம்: அவன் தான் மனிதன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்

அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே
அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே

மாதவிக் கொடிப்பூவின் இதழோரமே மயக்கும் மதுச்சாரமே
மாதவிக் கொடிப்பூவின் இதழோரமே மயக்கும் மதுச்சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே மன்னர் குலத் தங்கமே
பச்சை மலைத்தோட்ட மணியாரமே பாடும் புது ராகமே

அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே

வெள்ளலை கடலாடும் பொன்னாடமே விளக்கின் ஒளிவெள்ளமே
வெள்ளலை கடலாடும் பொன்னாடமே விளக்கின் ஒளிவெள்ளமே
செல்லும் இடந்தோறும் புகழ் சேர்க்கும் தவமே சென்னல் குலமன்னனே
இன்று கவிபாடும் என் செல்வமே என்றும் என் தெய்வமே

மாநிலம் எல்லாமும் நம் இல்லமே மக்கள் நம் சொந்தமே
காணும் நிலமெங்கும் தமிழ் பாடும் மனமே உலகம் நமதாகுமே
அன்று கவிவேந்தன் சொல் வண்ணமே யாவும் உறவாகுமே

அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழைமேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லலும்

ஒரு நாடு முழுவதும் நலமாக இருந்தால் மட்டுமே அதன் குடிமக்கள் ஒவ்வொருவரும் நலமாக வாழ முடியும். நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடினால் மக்கள் அனைவரும் அவதிக்குள்ளாவர். ஒரு நாட்டில் செல்வம் பெருகி மக்கள் நலமாய் வாழ வழிவகுக்க வேண்டியது அரசாங்கத்தின் இன்றியமையாத கடமை. ஜனநாயக நாடான நமது இந்தியாவில் அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைச்சரையும் தேர்ந்தெடுப்பது நாட்டு மக்களே என்பதால் அவர்கள் தகுதியுள்ளவர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பது அவசியம். அத்துடன் அவ்வாறு தம்மால் தேர்ந்தெடுக்கப் படக் கோரி வாக்குக் கேட்டு ஒவ்வொரு வேட்பாளரும் மக்களை அணுகுகையில் மக்கள் தம் தொகுதிகளில் நிலவும் பிரச்சினைகளை அவ்வேட்பாளர் தீர்க்கப் பாடுபடுவார் எனும் உத்தரவாதத்தை அவரிடமிருந்து பெற வேண்டும்.

இதற்கு முதலில் ஒவ்வொரு தொகுதி மக்களும் தம் தொகுதியில் நிலவும் பிரச்சினைகள் அனைத்தையும் மிகத் தெளிவாக அறிந்திருத்தல் அவசியமாகிறது. அப்பிரச்சினைகள் குறித்த விவரங்களை வேட்பாளரும் தெளிவாக அறிந்திருத்தல் அவசியமே. இதுகாலம் வரை இத்தகைய தெளிவு இரு தரப்பிலும் இருந்ததில்லை என்பதால் தேர்தல் முடிந்த பின்னர் பதவிக்கு வரும் வேட்பாளர்கள் முறையாக சேவை செய்யாமல் மக்களை ஏமாற்றித் தம் சுயநலம் பேணுவதே நடைமுறையாக இருந்து வந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நமது நாட்டின் பல்வேறு துறைகளிலும் பெரும்பாலும் ஊழலே மலிந்து மக்கள் அரசாங்கத்தாலேயே கொள்ளையடிக்கப்பட்டு வந்துள்ளனர் எனும் கசப்பான உண்மை இந்திய தணிக்கைத் துறையின் அறிக்கைகள் வாயிலாக வெட்ட வெளிச்சமானதாலும் தகவல் பெரும் உரிமைச் சட்டத்தின் மூலமும் ஊடகங்களின் ஊக்கமிக்க செயல்பாட்டினாலும் ஊழல் செய்தவர் யார் யார் என்பதை மக்கள் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

அரசாங்கத்தில் முக்கியப் பதவிகள் வகிப்பவர்களின் ஊழலினால் பெரிதும் பாதிக்கப்பட்டு மக்கள் வறுமையில் வாடி உள்ளம் குமுறும் நிலை சற்றும் மாறாமல் நீடித்திருக்க, குற்றம் புரிந்த பலரும் குற்றம் வெளிவந்த பின்னர் வெகு காலமாகிய பின்னரும் அதற்குரிய தண்டனை பெறுவதோ மக்களிடமிருந்து களவாடப் பட்ட பெரும் தொகை திரும்பவும் மக்கள் நலனுக்காக செலவிடப் படுவதோ இவற்றுள் எதுவும் நிறைவேறாமல் குற்றவாளிகள் தொடர்ந்து பதவிகளில் ஒட்டிக்கொண்டிருப்பதும், குற்றவாளிகளுள் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு சிலர் மீது நடைபெறும் வழக்குகள் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதும் மக்களின் பொறுமையைப் பெரிதும் சோதிப்பதாக உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாநகராட்சிகளுக்கும், நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கும் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதுகாலம் வரை இல்லாதிருந்த ஒரு விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் எனும் உன்னத நோக்குடன் சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் பலர் ஒன்று கூடி சென்னையில் மக்களை தினம் பாதிக்கும் பல்வேறு குறைபாடுகளை முறையாகக் கணக்கிட்டு மக்கள் யாவரும் அறியும் வண்ணம் வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சாலைகளின் தரம் மற்றும் குறைபாடுகள், பொதுக்கழிப்பிடங்களின் நிலை, ஏழை மக்களின் வாழ்க்கை நிலவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தேவையான இடங்களில் வீடியோ பதிவு செய்தும், தேவையான விவரங்களைத் திரட்டியும் http://www.transparentchennai.com/ எனும் இணையதளத்தை அமைத்து அதில் பதிவு செய்து அதன் மூலம் அரசின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யவும் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களைக் கட்டுப்படுத்தவும், அவர்களது செயல்பாட்டை மதிப்பிடவும் என மக்களுக்கு உதவும் மாபெரும் தொண்டில் இறங்கியுள்ளனர்.

நாட்டிலுள்ள அனைவருக்கும் முன்னோடிகளாக உருவெடுத்துள்ள இவ்விளைஞர்களின் பணி பாராட்டத்தக்கது மட்டுமின்றி நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊர்களிலும் உள்ள யாவரும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும். காந்தியவாதி அன்னா தலைமையில் மக்கள் பெருந்திரளாக ஊழலுக்கு எதிரே போராடும் சூழலுடன் இத்தகைய குறைகள் கண்டறியப்பட்டு நிவர்த்தி பெற எடுக்கப்படும் இயக்கங்களும் நாடெங்கிலும் பல்கிப் பெருகி ஊழல் புரிய எண்ணுவோர் அஞ்சி நடுங்கித் திருந்தும் கட்டாய நிலை விரைவில் ஏற்பட வழி கிடைத்துள்ளது.

"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" எனும் பொன்மொழிக்கிணங்க இந்த ஆரோக்யமான சூழலைப் பயன்படுத்தி மக்கள் யாவரும் ஒன்று கூடிப் போராடினால் நாட்டில் அநீதிகள் குறைந்து நீதி நிலைபெற வழி பிறக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அமைந்த இப்படை வெல்வதுறுதி.

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லலும்

திரைப்படம்: உலகம் சுற்றும் வாலிபன்
இயற்றியவர்: புலவர் வேதா
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1973

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லலும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

நீதிக்கு இது ஒரு போராட்டம் - இதை
நிச்சயம் உலகம் பாராட்டும்

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை
இல்லாமல் மாறும் ஒரு தேதி

ஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை
இல்லாமல் மாறும் ஒரு தேதி - அன்று
இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ
இந்நாட்டில் மலரும் சமநீதி

நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்

ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க
இயற்கை தந்த பரிசாகும் - இதில்
நாட்டினைக் கெடுத்து நன்மையை அழிக்க
நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்

நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்
அல்லதை நினைப்பது அழிவாற்றல்

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லலும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லலும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

ஜகம் புகழும் புண்ய கதை

நாட்டு மக்கள் எல்லோரும் எல்லா நலமும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தது ராமராஜ்யம் என்ற கருத்து தொன்றுதொட்டு நிலவுகிறது. ராமாயண காவிய நாயகன் ஸ்ரீ ராமனை அக்காவியத்தை இயற்றிய வால்மீகி ஒரு உன்னத குணம் நிரம்பிய, தந்தை தாய் சொற்படி நடந்த, தன்னை நம்பியவர்களைக் காத்த, அனைவரையும் சகோதரர்களாக பாவித்த, தன் மனைவியைத் தவிர வேறொரு பெண்ணை மனதாலும் நினையாத உத்தம புருஷனாக மட்டுமே விவரித்திருக்கிறார். பிற்காலத்தில் வந்த மனிதர்கள் ராமாயணத்தைத் தொடர்ந்து படித்துப் பிறருக்குச் சொல்கையில் ஸ்ரீ ராமனின் குணங்களையும் பெருமையையும் போற்றி அவனை ஒரு அவதாரமாக உருவாக்கிவிட்டனர்.

ராமாயணத்தில் ஸ்ரீ ராமனின் நற்குணங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சிறு வயது முதலே ராமன் தனது மூன்று சகோதரர்களிடத்திலும் அளவிடற்கரிய அன்பு கொண்டவனாகவும் அவர்கள் யாவரும் போற்றி வணங்கத் தக்க அறிவும் பொறுமையும் வீரமும் கொண்ட பெருந்தகையாகவும் விளங்கினான். தன்னைப் பெற்ற தாயான கௌசல்யா மட்டுமின்றி தன் சிற்றன்னையரான கைகேயி, சுமத்திரை ஆகியோரையும் சமமான பிரியத்துடனும் மரியாதையுடனும் நடத்தினான் ஸ்ரீராமன்.

கைகேயி தசரதனிடம் வரம் பெற்று அவற்றின் படி பரதன் நாட்டை ஆளவும் ராமன் பதினான்காண்டுகள் வனவாசம் செய்யவும் பணிக்கையில் அவளது ஆணையைத் தன் தந்தையின் ஆணையாகவே ஏற்றதுடன் தனது தம்பியான பரதன் நாடாள அமைந்தது குறித்து எவ்விதப் போறாமையும் கொள்ளாது தனக்கு அரசபதவி கிடைத்தால் அடையும் மகிழ்ச்சியை விடவும் அதிகமான மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.

மன்னவன் பணியன்றாகின் நும் பணி மறப்பனோ என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ!

என உரைத்து மகிழ்ச்சியுடன் வனவாசம் மேற்கொள்கிறான். கோபாவேசம் கொண்டு கொதித்தெழுந்த இலக்குவனை அமைதிப் படுத்தி அவனையும் உடன் அழைத்துச் சென்றான். வன வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அரக்கனான விபீஷணனையும் அவர்களது குலம் இனம் முதலியவற்றைப பற்றி சற்றும் பொருட்படுத்தாது தன் சகோதரர்களாக ஏற்றான். சீதையை இராவணன் கவர்ந்து செல்கையில் அவனுடன் போராடி உயிர் துறக்கும் நிலையில் இருந்த கழுகான ஜடாயுவைப் போற்றி வணங்கி ஜடாயு இறந்ததும் அப்பறவையைத் தன் தந்தையாகவே பாவித்து ஈமச் சடங்குகளைச் செய்தான். சுக்ரீவனுக்கு அடைக்கலம் கொடுத்தவுடன் தனது வாக்குறுதியைக் காக்கத் தனக்கு அவப்பெயர் நேர்வதைப் பற்றியும் கவலை கொள்ளாது அக்கிரமமாய் நடந்த வாலியை மறைந்திருந்து கொன்றான்.

இராவணனின் சகோதரர்கள், புதல்வர்கள், படைத்தலைவர்கள் யாவரையும் வென்று அழித்த பின்னர் இராவணன் தன்னந்தனியாகத் தன்னுடன் போர் செய்து தோற்ற பொழுது அவனுக்கு மேலும் போராட ஒரு சந்தர்ப்பததைத் தர விழைந்து, "இன்று போய் நாளை வா" என்று யுத்தத்திலும் உயர்ந்த தரும நெறியைக் கடைபிடித்தான்.

இன்று நம் நாட்டில் நடக்கும் ஆட்சியை எண்ணிப் பார்க்கையில் மனம் மிக நோகிறது. மக்களைக் காக்க வேண்டிய அரசாங்கம் மக்களைச் சுரண்டுகிறது. காவல் துறை குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டித்து அவர்களிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்குப் பதில் குற்றவாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு செயல்படுகையில் தீவிரவாதிகளால் மக்கள் தாக்கப்பட்டு தங்கள் இன்னுயிரை இழக்கின்றனர். காவல் துறையினரை முறையாக மக்களைக் காக்கும் பணியில் ஈடுபடுத்தி அவர்களுக்குத் தகுந்த சாதனைகளையும் தக்க அதிகாரங்களையும் வழங்காமல் அவர்களை மந்திரிமார்கள் வீட்டைக் காவல் காக்கவும் அவர்கள் வெளிக்குப் போகையில் விளக்குப் பிடிக்கவும் உபயோகப்படுத்தி காவல் துறையினருக்குரிய மரியாதையைக் கெடுத்து நாட்டைக் கெடுக்கும் அமைச்சர்கள் அடங்கிய அரசாங்கம் மக்களைக் காக்க எவ்வித முயற்சியும் செய்யாது தவிக்க விடுகிறது.

இந்த இழிநிலை மாறி மீண்டும் ராமராஜ்யம் வரவேண்டுமெனும் பேரவாவில் ஸ்ரீராமனின் புண்யகதையை எடுத்துரைக்கும் பாடல் இன்றைய பாடலாக மலர்கிறது.

ஜகம் புகழும் புண்ய கதை

திரைப்படம்: லவகுசா
பாடலாசிரியர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: பி. சுசீலா, பி. லீலா
ஆண்டு: 1963

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

இகபர சுகமெலாம் அடைந்திடலாமே
இந்தக் கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இணையே இல்லாத காவியமாகும்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை
கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்
கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வன்

ஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ

நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே
காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே
தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
சீர்பெரும் மிதிலை நகர் நாடிச் சென்றனரே

வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்
ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தைதனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வன் வீரத்தைக் கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே

ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே
மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகர தோரணத்தால் அலங்கரித்தாரே
மந்தரை போதனையால் மனம் மாறிக் கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்கண்டுகள்
வாழவும் மன்னனிடம் வரமது கேட்டாள்

அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூர்ச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
தந்தையுனை வனம் போகச் சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார் என்றாள்
சஞ்சலமில்லாமல் அஞ்சலவண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்
விஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான்

இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு
இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆ

கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
இதயங்கள் போவதென்று தடுத்தனர் சென்றே

ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே
அண்ணலும் கானகத்தை நாடிச் சென்றானே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்

ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை
மானபங்கம் செய்து விரட்டி விட்டான்
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி
தம்பியுடன் தேவியைத் தேடிச்சென்றான்
ராமன் தேடிச் சென்றான்

வழியிலே ஜாடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்
ஆழியைத் தாண்டியே இலங்கை சென்ற அனுமான்
அன்னையை அசோகவனத்தில் கண்டான்

ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆ

ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான்
ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான் அனுமான்
லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்
கண்டேன் அன்னையை என்றே ராமனை சேவித்தே நின்றான்
கடலைக் கடந்து அண்ணல் வானர சேனையுடன் சென்றான்
வானர சேனையுடன் சென்றான்
விபீஷணனின் நட்பைக் கொண்டான் ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்

ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்
அரசுரிமை கொண்டான்
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்
சீதாபதிம் ரகுகுலான்மயரக்ஷமீயம்
ஆஜானுபாகும் அரவிந்த தளாய தாட்ச்ம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி