திங்கள், 23 நவம்பர், 2009

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா

காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினுங் கை கொடுத்து மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழ்வமடி
என்று தன் மனதுக்கிசைந்த மணாளனுடன் வாழ்வது ஒரு பெண்ணின் உரிமை என வலியுறுத்துகிறார் பாரதியார். ந்மது நாட்டில் பெண்ணுரிமைக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கின்றனர் என்பது இன்றளவும் ஒரு கேள்விக்குறியாகவே விளங்குகிறது. இல்வாழ்க்கை என்பது கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் உள்ளத்தால் விரும்பி வாழ்வதேயாகும். பொதுவாக நமது நாட்டில் ஒரு பெண்ணைப் பெற்றவர்கள் அவளது திருமணத்தை நடத்தி வைக்கையில் மணமகன் அவள் மனதுக்குப் பிடித்தவனா என்பதை உறுதி செய்யத் தவறுவதால் திருமணங்கள் தோல்வியடைந்து அப்பெண்ணின் வாழ்வு பாழாகிறது.

தாலி கட்டிய கணவன் தனக்கு விருப்பமில்லாத நிலையில் திருமணத்தை நடத்தித் தன்னை அடைந்தவன் எனவும் தனக்கு உண்மையுள்ளவனாக நடப்பவனில்லை எனவும் எண்ணும் ஒரு பெண் எவ்வாறு அவனுடன் இணைந்து மனமொப்பி வாழ முடியுமா? அத்தகைய மனநிலையில் அவள் இருக்கையில் அவளைப் பாடச்சொன்னால் அவளால் பாட முடியுமா?

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?

படம்: இருவர் உள்ளம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1963

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?

உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா?
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா?
உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா?
உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா?
விளக்கைக் குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா?
விளக்கைக் குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா?
வீட்டுக் குயிலைக் கூட்டில் வைத்தால் பாட்டுப்பாடுமா பாட்டுப்பாடுமா?

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?

மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே சில
மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
மனதை வைத்த இறைவன் அதில் நினைவை வைத்தானே சில
மனிதர்களை அறிந்து கொள்ளும் அறிவை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அறிவை வைத்த இறைவன் மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை அடிமை செய்தானே அடிமை செய்தானே

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?
இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?

உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது?
உடைந்து விட்ட சிலையினிலே அழகேது?
பழுதுபட்ட கொவிலியே தெய்வமேது?
பனி படர்ந்த பாதையிலே பயணமேது?
இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக