திங்கள், 23 நவம்பர், 2009

ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி

இவ்வுலக வாழ்வு நிலையற்றதென உணர்ந்த உன்னத மனிதர்களான நம் முன்னோர்கள் உலகில் வாழும் வரை அனைவரும் ஒற்றுமையாக, அமைதி காத்து, வாழ்வை அக மகிழ்வோடு வாழ வழி காணும் வகையில் பல்வேறு மதங்களையும் மதக் கோட்பாடுகளையும், அவரவர் வாழ்ந்த இடத்தையும், காலத்தையும், சூழ்நிலைகளையும் அனுசரித்து அவற்றுக்குப் பொருத்தமான வகையில் அமைத்தனர்.
இவ்வாறு ஏற்பட்ட மதங்களும் மதக் கோட்பாடுகளும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டவருக்கு அறிமுகமாகி, அவற்றால் ஈர்க்கப்பட்ட பிற நாட்டினரில் ஒரு பகுதியினர் அம்மதத்தைத் தழுவிய சம்பவங்கள் அனேகமாக உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பல சமயங்களில் ஏற்பட்டுள்ளன, இன்னமும் ஏற்பட்டு வருகின்றன.

தழுவிய சமயங்கள் வேறாயினும் அடிபடையில் அனைவரும் ஒரே ஜாதி, அதாவது மனித ஜாதி. பல்வேறு பெயர்களில் தெய்வத்தை பல்வேறு சமயத்தினர் வழிபட்டாலும் தெய்வம் ஒன்றேயாகும். இவ்வுண்மையை உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் உணர்ந்துள்ளதாலேயே பல்வேறு மதத்தினர் ஒன்றுகூடி வாழத்தக்க சூழ்நிலை உலகெங்கிலும் நிலவுகிறது. சுயநலம் மிக்க சில விஷமிகளால் இம்மத நல்லிணக்கம் உலகின் சில பகுதிகளில் சில சமயங்களில் பாதிக்கப் பட்டாலும் வெகுவிரைவிலேயே இணக்கமான சூழ்நிலை மீண்டும் திரும்புவதை நாம் நடைமுறையில் காண்கிறோம்.

ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி

படம்: ஆளுக்கொரு வீடு
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: எல்.ஆர். ஈஸ்வரி
ஆண்டு: 1960

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ

ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி
ஓரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா
ஊத்துக்கெல்லாம் ஓரே காத்து ஓரே காத்து ஓரே தண்ணி
ஓரே வானம் ஓரே பூமி ஆமடி பொன்னாத்தா
ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி
ஓரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓஓ

தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்
தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்

எல்லோருக்கும் ஒலகம் ஒண்ணு இருளும் ஒண்ணு ஒளியும் ஒண்ணு
இன்னும் சொன்னா நீயும் ஒண்ணு நானும் ஒண்ணே தான்
எல்லோருக்கும் ஒலகம் ஒண்ணு இருளும் ஒண்ணு ஒளியும் ஒண்ணு
இன்னும் சொன்னா நீயும் ஒண்ணு நானும் ஒண்ணே தான்

யாரு என்னைக் கீறினாலும் ரத்தம் ஒண்ணுதானே
யாரு என்னைக் கீறினாலும் ரத்தம் ஒண்ணுதானே
ஆக மொத்தம் பிறந்ததெல்லாம் பத்தாம் மாதம் தானே
ஆக மொத்தம் பிறந்ததெல்லாம் பத்தாம் மாதம் தானே

உயிருக்கெல்லாம் ஒரே பாதை ஓரே பாதை ஓரே வாசல்
ஓரே கூடு ஓரே ஆவி பாரடி கண்ணாத்தா
உயிருக்கெல்லாம் ஒரே பாதை ஓரே பாதை ஓரே வாசல்
ஓரே கூடு ஓரே ஆவி பாரடி கண்ணாத்தா

ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி
ஓரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா

தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்
தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்

தானந்தா தானா தைதன்னேனா தானந்தா தானா தானே தந்தேனா
தானே தன்தேனா தானே தன்தேனா தானே தன்தேனா தானே தன்தேனா
தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்
தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம் தையத் தகதந்தம்

பாடு பட்டோம் கொஞ்சமுமில்லே பலன் வெளஞ்சசா பஞ்சமுமில்லே
ஆடும் மாடும் நாமும் வாழ அருள்புரிவாளே அம்மா அருள் புரிவாளே

அங்காளம்மன் கோயிலுக்குப் பொங்க வைக்க வேணும்
அங்காளம்மன் கோயிலுக்குப் பொங்க வைக்க வேணும்
அன்னை அவள் எங்களையும் பொங்க வைக்க வேணும்
அன்னை அவள் எங்களையும் பொங்க வைக்க வேணும்

ஆளுக்கெல்லாம் ஓரே கோயில் ஓரே கோயில் ஓரே பூஜை
ஓரே நியாயம் ஓரே தீர்ப்பு கேளடி கண்ணாத்தா
ஆளுக்கெல்லாம் ஓரே கோயில் ஓரே கோயில் ஓரே பூஜை
ஓரே நியாயம் ஓரே தீர்ப்பு கேளடி கண்ணாத்தா

ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி
ஓரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா
ஊருக்கெல்லாம் ஓரே சாமி ஓரே சாமி ஓரே நீதி
ஓரே நீதி ஒரே ஜாதி கேளடி கண்ணாத்தா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக