புதன், 18 ஜனவரி, 2012

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை

மாமுனிவர்கள் பலரும், அருந்தமிழ்ப் புலவோரும், அனேக ஆன்றோர் பெருமக்களும் அறிவினால் அறிந்து அனுபவத்தால் உணர்ந்து பல்வேறு வாழ்க்கைச் சூழ்நிலைகளின் விளக்கத்தாலும், கதைகள், கவிதைகள், காவியங்கள் வாயிலாகவும் எடுத்துரைத்த வாழ்க்கைத் தத்துவத்தைப் பாமர மக்கள் படித்தறிய இயலாதெனக் கண்டு

"வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம் வரும் ஜனனம் என்பது வரவாகும் அதில்
மரணம் என்பது செலவாகும். போனால் போகட்டும் போடா."

என எளிதில் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் நான்கே வரிகளில் கவிஞர் கண்ணதாசன் எடுத்துரைத்த பின்னரும் வாழ்வின் நிலையாமையை அறிவால் அறிந்த பின்னரும் உள்ளத்தால் உணராமல் மடமையில் மூழ்கிப் பொய்யான இவ்வுடலை வளர்ப்பதும் நிலையில்லாத சிற்றின்ப சுகம் பெறுவதும் மட்டுமே வாழ்வின் பெரும் குறிக்கோள்கள் எனக் கொண்டு தமிழர்கள் பலரும் தம் சுய அறிவை இழந்து சுயநல மயக்கத்தில் மூழ்கி, பிறர் நலன் பேணாது பெரும் பாபக் குழியில் விழுந்து கிடக்கின்றனர்.

ஆங்கிலேய ஆதிக்கத்தின் விளைவாக அந்தணர்கள் சிலரும் உயர்ந்த ஜாதி என்று தங்களை சொல்லிக்கொள்வோர் சிலரும் சேர்ந்து ஆலயங்களில் பூஜை செய்வதும் நாட்டுமக்களின் நலன் வேண்டுவதுமான தம் ஸ்வதர்மத்தை மறந்து வயிற்றுப் பிழைப்புக்காக வளர்த்து விட்ட தீண்டாமை எனும் தீமையை அழிக்க வேண்டி, "க்டவுளை மற மனிதனை நினை" எனத் தமிழ் மக்களுக்கு அன்று தந்தை பெரியார் வழங்கிய சீரிய அறிவுரையில் முதல் பாதியை மட்டும் தம் சுயநலம் பேண உபயோகித்து மனித இனத்தையே அழிவுப் படுகுழியில் த்ள்ளவும் தயங்காது குறுக்கு வழியில் வாழ்வு தேடும் குருடர்கள் இறுதியில் தாங்கள் அடித்த கொள்ளை அம்பலமான பின்னர் வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ள ஆலயங்களுக்குச் சென்று அந்த ஆண்டவனுக்கே லஞ்சத்தைக் கொடுத்துத் தம் குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து தப்பிக் கொள்ளலாம் என மனப்பால் குடித்து வரும் கேவலமும் அம்பலமாகி விட்டது.

இறைவன் இருக்கின்றானா? எனும் கேள்விக்கு உண்மையான பதிலை உளமாரத் தேடினால் கிடைக்கும் விடையாவது இறை என்பது எங்கும் நிறை பரம்பொருள் என்பதுவே. ஆனால் அந்தத் தேடலுக்கு முதற்கண் ஒருவர் பொருளின் மீதுள்ள பற்றுதலையும் சிற்றினப நாட்டத்தையும் விடல் வேண்டும். தனக்கு தனக்கு என அளவிடற்கரிய பொருளை அடுத்தவரை ஏமாற்றிச் சேர்த்தவர்கள் அவ்வாறு சேர்த்த பொருளில் சிறிதளவும் அனுபவியாது மடிவதைக் கண்ணாரக் கண்டபின்னரும் ஏனையோர் தாமும் அதே போன்ற தீய மார்க்கத்தில் தொடர்ந்து செல்வது வேடிக்கை. தனது என்பது நீங்கினாலே தெய்வ சிந்தனையுண்டாகும். யாவும் தங்க்கென நினைப்போர் எந்நாளும் இறைவனை அறிய முடியாது. நிலையான பேரின்பம் பெற ஓரே வழி பற்றுதலை விடுத்துப் பரம்பொருளை நாடுதலேயாகும்.

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை

திரைப்படம்: வளர்பிறை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மகாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுகுள்ளே
தேங்காயைப் பொல் இருப்பான் ஒருவன் தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுகுள்ளே
தேங்காயைப் பொல் இருப்பான் ஒருவன் - அவனை
தெரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்
முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனை
தொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன்

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்
கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் - அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக