வியாழன், 27 மே, 2010

அன்றொரு நாள் இதே நிலவில்

மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தேறுவதெப்போ நம்ம கவலே

என்று பட்டுக் கோட்டையார் பாடிய பாடலுக்கொப்ப நம் நாட்டின் பல இடங்களில் பாமர மக்களை ஏமாற்றி அவர்களது செல்வங்களைக் கொள்ளையிடுவதும் மேலும் பல வகைகளில் அவர்களை அடக்கியாண்டு தங்களது சுயநல நோக்கத்தை தந்திரமாக நிறைவேற்றிக் கொள்வதுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் குண்டர்கள் கூட்டம் மலிந்திருக்கிறது. தீர ஆராய்ந்து பார்க்கையில் நாடே அத்தகைய கொள்ளையர் வசம் இருப்பது புலப்படும்.

அவர்கள் கொள்ளையடிக்கிறார்கள், நாங்கள் சத்திய சந்தர்கள் என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வரும் இவர்களும் அதே கொள்ளையை அவர்கள் செய்ததிலும் பன்மடங்கு அதிகமாகவே நிறைவேற்றி வருகின்றனர். இன்னும் எத்தனை காலம் தான் நாமெல்லோரும் தொடர்ந்து ஏமாறப் போகிறோம் என்பதை எண்ணிப் பார்த்து முடிவு செய்யும் தருணம் வந்து விட்டது. நாமும் உயிர் பிழைத்து நமது சந்ததியினரையும் இத்தகைய எத்தர்களின் பிடியிலிருந்து காப்பாற்ற நமக்கு எள்ளளவேனும் சிந்தனை உள்ளதா என்பதே கேள்கிக்குறியாக உள்ளது.

விதிவசத்தால் தன் காதலியை விட்டுப் பிரிந்த கதாநாயகன், அப்பாவி மக்கள் பலரை ஏமாற்றி அவர்களது கண்களைக் குருடாக்கி, பிச்சையெடுக்க வைத்து அதன் மூலம் வயிறு வளர்க்கும் சமூக விரோதிகளின் செயலால் கண் பார்வையை இழந்த வேறொரு பெண்ணைக் காப்பாற்ற முனைகையில் அவனும் அந்த சமூகவிரோதிகளின் வலையில் விழுந்து விடுகிறான். இந்நிலையில் இருவரும் ஒன்று சேர்ந்து பிச்சையெடுக்கும் அவல நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். இதற்கிடையில் ஒரு நாள் அவ்விருவரும் தனியாக ஓய்வெடுக்கும் சமயம் அவள் தன் மனதில் அழமாய்ப் பதிந்திருந்த ஒரு இனிய பாடலைப் பாடுகிறாள்.

அப்பாடலைக் கேட்கும் கதாநாயகன் அது தனது காதலி தனக்காகப் பாடிய பாடலாக இருக்கக் கண்டு மிகவும் அதிசயித்து அப்பாடலுக்கு தனது ஆர்மோனியப் பெட்டியில் பின்னணி இசைக்கிறான். பின்னர் தன் காதலி இவ்வுலகை விட்டு மறைந்த செய்தியையும், தன்னுடன் பிச்சையெடுக்கும் பெண் தன் காதலியின் சகோதரி எனவும் அறிந்து கொள்கிறா. அதன் பின்னர் அவ்விருவரும் ஒன்று சேர்ந்து அவர்களை ஆட்டிப் படைக்கும் சமூக விரோதிகளை தந்திரமாக ஏமாற்றி தப்பிப்பதுடன் அவர்களை சட்ட்த்தின் பிடியிலும் சிக்க வைக்கின்றனர்.

நாம் எப்பொழுது நம்மையெல்லாம் ஏய்த்துப்பிழைப்பவரை சட்டத்தின் பிடியில் நிறுத்தப் போகிறோம்?

அன்றொரு நாள் இதே நிலவில்

திரைப்படம்: நாடோடி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் அவர் இருந்தார்
என் அருகே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயே வெண்ணிலவே

அந்த ஒரு நாள் ஆனந்தத் திருனாள்
இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ?
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாவை மேனியிலே
நீ பார்த்தாயே வென்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவள் இருந்தாள் என் அருகே நான்
அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே

வானும் நதியும் மாறாமல் இருந்தால்
நானும் அவளும் நீங்க்காமல் இருப்போம்
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
காதல் மேடையிலே நீ
சாட்சியடி வென்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே நான்
அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே

ஆடும் கனியை ஆடாமல் ஏடுத்தான்
வாடும் மலரை வாடாமல் தொடுத்தான்
ஆடும் கனியை ஆடாமல் ஏடுத்தான்
வாடும் மலரை வாடாமல் தொடுத்தான்
சூடிக் கொடுத்தான் பாடி முடித்தான்
பாவை மேனியிலே நீ
பார்த்தாயே வென்ணிலவே
ஆஆஆஆஆஆ

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் கொண்டேன் அவள் அழகை
நீ அறிவாயே வென்ணிலவே

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

மனிதர்கள் இளமைக் காலத்தில் எப்பொழுதும் இவ்வுலகில் தாம் அடையக்கூடிய இன்பங்களைப் பற்றியே பெரும்பாலும் எண்ணி ஒரு மயக்க நிலையில் வாழ்கின்றனர். அதிலும் குறிப்பாக பருவமெய்திய பின்னர் ஆண்கள் பெண்களிடம் தாம் அடையக் கூடிய இன்பங்களையும் பெண்கள் ஆண்களிடம் பெறக்கூடிய இன்பங்களையுமே அதிகம் எண்ணுகின்றனர். தம் தாய் தந்தையரைப் பற்றியும் வயது முதிர்ந்த நிலையில் அவர்கள் உலகில் சந்திக்கின்ற துன்பங்களைப் பற்றியும் யாரும் அதிகம் கவலைப்படுவதில்லை. இத்தகைய பொறுப்பற்ற போக்கினால் பொதுவில் பெற்றோர்கள் அடையும் துன்பங்கள் மேலும் பெருகி அவர்கள் அல்லலுறும் நிலை ஏற்படுவதை நாம் பல சமயங்களில் கண்கூடாகக் காண்கிறோம்.

குறிப்பாக இளைஞர்களுள் சிலர் தம் மனைவியரிடம் கொண்ட மயக்கத்தாலும் வேறு சிலர் பிற பெண்களிடம் கொண்ட மோகத்தினாலும் மதிகெட்டுப் பெற்றோரை அலட்சியம் செய்து தமது இன்பம் ஒன்றையே பெரிதென எண்ணி வாழ்வதும் உலகில் நடைமுறையாக உள்ளது. இவ்வாறு பெண்ணாசையால் மனம் தடுமாறிய நிலையிலுள்ளோரில் ஒரு சாரார் தம் அறிவை முற்றிலும் இழக்குமுன்னரே தம் சுயநினைவைப் பெற்று தமது பெற்றோரைப் பேணிக்காக்க வேண்டிய க்டமையை உணர்ந்து செயல்படுகின்றனர். வேறு சிலர் அவ்வாறன்றி தொடர்ந்து அலட்சிய மனோபாவத்துடனேயே வாழ்ந்து அதன் காரணமாகப் பெற்றோரை இழக்கும் நிலையை அடைந்து வருந்துவதும் உண்டு.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையைத் தவிர்க்கும் நோக்கத்துடனேயே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவ மாணவியருக்குப் பலவிதமான கதைகள், கவிதைகள் கட்டுரைகள் வாயிலாகவும் இன்னும் பிற வகையிலும் பெற்றோரைக் காக்கும் கடமையை அவர்கள் உணரும் விதமாகக் கல்வி போதிக்கப் படுகிறது. அத்தகைய கல்வியைப் பயின்ற போதும் சிலர் அதனை உள்ளத்தில் கொள்ளாமல் கடமை மறந்து காலனிடம் பெற்றோரைப் பறிகொடுத்த பின் வருந்துவதும் உண்டு.

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

திரைப்படம்: குமாரராஜா
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: டி.ஆர். பாப்பா
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
என்னான்னு தெரியல்லே சொன்னாலும் விளங்கல்லே
என்னான்னு தெரியல்லே சொன்னாலும் விளங்கல்லே
என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லே

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

கண்ணான தந்தையைக் கண்ணீரில் தள்ளினேன்
கண்ணான தந்தையைக் கண்ணீரில் தள்ளினேன்
கண்ணாடி வளையலைப் பொன்னாக எண்ணினேன்
பெண்ணாசை வெறியிலே தன் மானம் தெரியல்லே
பெண்ணாசை வெறியிலே தன் மானம் தெரியல்லே
என்னைப் போலே ஏமாளி எவனும் இல்லே

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

செவ்வாய், 25 மே, 2010

தாயின் மடியில் தலை வைத்திருந்தால்

நண்பர் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்ட அன்னையர் தினத்தன்று தாயின் பெருமையை நினைவு படுத்தும் வகையில் அமைந்த ஒரு பாடலைத் தினம் ஒரு பாடலில் தருமாறு வேண்டினார். எனது தற்போதைய பணிச் சுமையாலும் தினமும் வெயில் படுத்தும் பாடு மிகவும் அதிகமானதாலும் தினம் ஒரு பாடல் தினமும் தர இயலுவதில்லை. கூடிய விரைவில் தினமும் வழங்குவேன். தாயின் பெருமையை எண்ணிப்பார்க்க அன்னையர் தினம் ஒன்று போதாது. தாயின் நினைவு சதா சர்வ காலமும் தொடர்ந்து நம் உயிரில் ஒன்றி விளங்குவது அவசியம். இல்லாவிடில் உலகில் நாம் அடையும் துன்பங்களிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம்.

உலகில் அனைத்து உயிர்களுக்கும் கண்கண்ட முதல் தெய்வம் தாய். தாயின் அணைப்பில் வளர்ந்த நாம் ஒவ்வொருவரும் இன்றும் என்றும் நாம் படும் துன்பங்களிலிருந்து விடுபடவும் ஆறுதல் பெறவும் நாடுவது பெரும்பாலும் தாயையே ஆகும். ஏதோ காரணத்தால் வலி உண்டாகையில் நம்மையறியாமல் நம் வாய் உதிர்க்கும் சொல் பெரும்பாலும் "அம்மா" என்பதேயாகும். சிலர் "அப்பா" என்றோ "ஆ, ஐயய்யோ" என்றோ சொல்வது சாத்தியமானாலும் அம்மா எனும் சொல்லே அனேகமாக அருமருந்தாக விளங்குகின்றது. நம் ஒவ்வொருவருடைய வளர்ச்சியிலும் பிற யாரைக் காட்டிலும் அதிகம் பெருமையடைபவள் தாயாவாள்.

இதனாலேயே திருவள்ளுவர்,

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக் கேட்ட தாய்

என்று திருவாய் மலர்ந்தருளினார். அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தாய் இவ்வுலகை விட்டு மறைந்து பூத உடலை விட்டுப் புகழுடம்பு எய்துகையில் ஒவ்வொருவரும் படும் துயரத்துக்கு அளவே இல்லை. அநாதை எனும் சொல்லுக்கு அர்த்தம் என்ன என்று தாயின் அரவணைப்பில் வளர்ந்த ஒவ்வொருவருக்கும் அத்தாய் இவ்வுலகை விட்டு விண்ணுலகம் செல்லும் நாளன்று தான் புரியும். அதன் பின்னர் அம்மா எனும் சொல் வாயில் தன்னையறியாமல் பல தருணங்களில் வெளிவருகையில் அந்த அம்மா என்பவள் இவ்வுலகில் தற்போது இல்லையெனும் உண்மையும் மனதில் தைத்து அவள் நினைவில் வாடும் மனம்.

தாயின் மடியில் தலை வைத்திருந்தால்

திரைப்படம்: தாயின் மடியில்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

எத்தனை இன்பங்கள் வந்தாலுமே
எத்தனை இன்பங்கள் தந்தாலுமே
அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா அம்மா அம்மா
எனக்கது நீயாகுமா?

தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை துயரம் தெரிவதில்லை
தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால்
வேறொரு தெய்வமில்லை
வேறொரு தெய்வமில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை

பத்து மாதம் பொறுமை வளர்த்தே
பூமியை மிஞ்சிடுவாள்
பூமியை மிஞ்சிடுவாள்
வெள்ளை மனதைத் தொட்டிலாக்கி
வெள்ளை மனதைத் தொட்டிலாக்கி
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்

தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை

அன்பில் மலரும் அற்புதமெல்லாம்
அன்னையின் விளையாட்டு
அலையும் மனதை அமைதியில் வைப்பது
அன்னையின் தாலாட்டு
என்னைப் பார்த்த அன்னை முகத்தை
ஏழை பார்த்ததில்லை
என்னைப் பார்த்த அன்னை முகத்தை
ஏழை பார்த்ததில்லை
கண்ணே கண்ணே கண்ணே என்று
கொஞ்சிய வார்த்தை காதில் கேட்டதில்லை
காதில் கேட்டதில்லை காதில் கேட்டதில்லை

மண்ணில் இந்தக் காதலின்றி

நமஸ்தே வாயோ: த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரம்மாஸி;
த்வமேவ பிரத்யக்ஷம் வதிஷ்யாமி

என்று காற்றுத்தேவனைத் துதி செய்கிறார் மஹாகவி பாரதியார். நாம் புலன்களால் உணரக்கூடிய கடவுள் காற்றேயாகும். காற்றிலுள்ள ஆக்சிஜன் என அறியப்படும் பிராணவாயு இல்லையேல் உலகில் உயிர்கள் வாழ முடியாது. நாம் சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும் பிராணவாயு நாம் உண்ணும் உணவை உடலெங்கிலுமுள்ள பல கோடி செல்களில் எரியவைத்து சக்தியை உண்டாக்கி நம்மை இயங்க வைக்கிறது. காற்று இன்றி மழையில்லை, நீரில்லை, நெருப்பில்லை. காற்றிலுள்ள பிராணவாயுவும் ஹைட்ரஜன் வாயுவும் ஒன்றாய் இணைவதாலேயே நீர் உண்டாகின்றது. நீரில் மின்சாரத்தைப் பாய்ச்சினால் அது பிராணவாயுவாகவும், ஹைட்ரஜனாகவும் பிரிகிறது. இரண்டையும் சேர்த்து எரித்தால் மீண்டும் நீர் உண்டாகின்றது.

உலகைச் சுற்றி ஒரு போர்வையாக விளங்கும் ஓசோன் எனும் அடர் பிராணவாயு சூரியனின் புற ஊதாக் கதிர்களினின்றும் அளவிடற்கரிய வெப்பத் தாக்குதலினின்றும் பூமியைக் காக்கிறது. வீடுகள், உணவு விடுதிகள், ஆலைகள் முதலிய இடங்களிலிருந்து வெளியாகும் கழிவுப் பொருள்களைச் சுத்தம் செய்து அவற்றால் விளையும் சேதத்தைத் தடுக்க பிராணவாயு உதவுகிறது. இதனாலேயே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவு நீருடன் காற்றைக் கலந்து சுத்திகரிப்பு செய்கின்றனர்.

தவ முனிவர்கள் அளவிடற்கரிய ஆற்றலைப் பெற்று விளங்கியதன் காரணம் அவர்கள் தவத்துடன் பிராணாயாமம் செய்து பிராண வாயுவையும் அபான வாயுவையும் கட்டுப்படுத்தி அதிகப்படியான பிராணவாயுவை சுவாசித்து வாழ்ந்ததே ஆகும். பிராணாயாமம் செய்யத் தெரியாதவர்களும் பெரும்பாலும் சுவாசிக்கையில் ஆழ்ந்து சுவாசித்துப் பழகினால் உடலிலும் உள்ளத்திலும் சக்தி பெருகி நோயற்ற வாழ்வு வாழ ஏதுவாகும்.

பாடகர்களுக்கு இத்தகைய ஆழ்ந்த சுவாசப் பயிற்சி அவர்கள் பாடுகையிலேயே கிடைத்து விடுவதால் அவர்கள் இயற்கையாகவே நீண்ட ஆயுளைப் பெற்று விளங்குகின்றனர். இத்தகைய பாடகர்களுள் மூச்சினை அதிக நேரம் அடக்கிப் பாடி அதில் சாதனை புரிந்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆவார். அவர் பாடிய இப்பாடலை வேறு யாராலும் அதே லயத்துடன் பாட இயலாதென்பது பிரசித்தம்.

மண்ணில் இந்தக் காதலின்றி

திரைப்படம்: கேளடி கண்மணி
இயற்றியவர்: மு. மேத்தா
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
ஆண்டு: 1990

மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி?
சந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தங்கிடும் குமுதமும்
கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகந்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்

மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி?
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகந்தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா?

மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா?
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா
மண்ணில் இந்தக் காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ?
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான் பாடுமோ?

திங்கள், 24 மே, 2010

ஒரே பாடல் உன்னை அழைக்கும்

ஆண்டவன் நம் ஒவ்வொருவருக்கும் அளித்த செல்வங்களையும் வாழ்வின் பிற இன்பங்களையும் முறையாக அனுபவிக்க ஏற்றவாறு நம் நமது மனப்பான்மையை அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறன்றி நம்மிடம் இருப்பதை விட மற்றவரிடம் அதிகமாக இருப்பதைக் கண்டு மனம் வெதும்பி, பொறாமையினால் இயற்கையாகவே நமக்குக் கிடைக்கும் இன்பங்களை விட்டு, செயற்கையானதொரு துன்பப் பாதையிலே நம்மை நாமே இட்டுச் சென்று துயருறுவதைப் போல் மடமை வேறில்லை. இருப்பினும் மனிதர்களுள் பலர் இத்தகைய குணக்கேடர்களாக இருப்பது கண்கூடு. பிறரது
துன்பத்திலே இன்பம் காணும் இத்தகையோரை ஆங்கில மொழியில் sadists என்று குறிப்பிடுவது வழக்கம்.

நமது கதாநாயகன் ஒரு பெண்ணின் மேல் காதல் கொள்கிறான். அப்பெண்ணும் அவன் மேல் காதல் கொள்கிறாள். ஆனால் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இன்பமாய் வாழப் பொறாத பொறாமை குணமுள்ள செல்வந்தனான ஒருவன் தன் செல்வத்தின் பலம் கொண்டு இவர்களது காதலை நிறைவேறாமல் செய்து, அப்பெண்ணை அவளது விருப்பத்துக்கு மாறாகத் தானே மணந்து கொள்ளும் விதமான சூழ்நிலையை ஏற்படுத்தி, அதன் பின் தங்கள் தலை தீபாவளியைக் கொண்டாடும் நாளில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து அதற்கு நமது கதாநாயகனையும் வரவழைக்கிறான். அத்துடன் நில்லாமல் கதாநாயகனை விழாவில் பாடவும் சொல்கிறான்.

தன் காதலியை மனைவியாக அடைய முடியாத வருத்தத்துடன் அவள் தன் விருப்பத்துக்கு மாறாக வேறொருவனுக்கு மாலையிட்டு அதை விடவும் அதிகத் துயரில் ஆழ்ந்ததை எண்ணி, தன் உள்ளக் குமுறலைப் பாடலாக வெளிப்படுத்துகிறான்.

இப்பாடலைக் கேட்டுக்கொண்டே கதாநாயகி யாரும் எதிர்பாராத விதத்தில் வெடிக்கும் பட்டாசுகளிடையே சென்று தன்னைத் தீக்கிரையாக்கிக் கொண்டு அதே நிலையில் விருந்து நடக்கும் மேல்மாடியிலிருந்து கீழே பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். இதனால் மனம் மிகவும் பாதிக்கப்பட்ட கதாநாயகன் பைத்தியம் பிடித்துப் பல காலம் துன்புறுகிறான்.

இத்தகையதொரு வித்தியாசமான காட்சி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஜெயலலிதா ஆகியோர் முதன்முதலில் இணைந்து நடித்த திரைப்படமான எங்கிருந்தோ வந்தாள் எனும் காவியத்தில் இடம்பெற்றுள்ளது.

ஒரே பாடல் உன்னை அழைக்கும்

திரைப்படம்: எங்கிருந்தோ வந்தாள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1970

ஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ

ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்

காதல் கிளிகள் பறந்த காலம்
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
காதல் கிளிகள் பறந்த காலம்
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்

ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்

உன்னையறிந்தேன் என்னைக் கொடுத்தேன்
உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்
உன்னையறிந்தேன் என்னைக் கொடுத்தேன்
உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்
உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்
உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்

ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்

மனிதர்கள் வாழ்க்கை நடத்த இன்றியமையாத அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுடன் போக்குவரத்து வசதியும் இடம் பெறுவது மிகவும் அவசியம். ஒரு ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குச் செல்லப் பேருந்துகளும் ரயில் வண்டிகளும் உதவுவது போல ஒவ்வொரு ஊரிலும் உள்ள பல இடங்களுக்குச் சென்று வர ஆட்டோரிக்ஷாக்கள் பெரிதும் உதவுகின்றன. ஆனால் ஆட்டோரிக்ஷாக்களில் செல்வதற்கான கட்டணம் தற்போது மிக அதிகமாக உள்ளது. இக்கட்டண உயர்வுக்கு மக்கள் பெரும்பாலும் ஆட்டோக்காரர்களையே பொறுப்பாளியாக்குகின்றனர். வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களின் விலைவாசியும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைவாசியும் உயர்கையில் ஆட்டோ கட்டணமும் உயர்வது இயற்கையே என்பதையும், ஆட்டோக்காரர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் குடும்பம் உண்டு அக்குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பும் உண்டு என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைமை பிற விலைவாசி உயர்வினால் ஏற்படுகையில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஆட்டோக்கார்கள் தங்களுக்குள் கலந்து பேசி தங்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையிலும் பொதுமக்களையும் பெரிதும் பாத்க்காத வகையிலும் தகுந்த கட்டணத்தை முடிவு செய்கின்றனர். இவ்வாறு எடுக்கப் படும் முடிவுகளுக்குக் கட்டுப்படாமல் அடாவடியாகக் கட்டணத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்தி பயணிகளை வாட்டி வதைப்போரும் ஆட்டோக்காரர்களுள் உள்ளனர்.

சமுதாயத்தின் அனைத்துத் துறைகளிலும் நல்லவர்களும் உளர், தீயோரும் உளர். அது போலவே ஆட்டோக்காரர்களிலும் இருப்பது இயல்பே. இதனை மனதில் கொண்டு ஒட்டுமொத்த ஆட்டோக்காரர்களையும் பழி சொல்வது முறையல்ல என்பதை நாம் அறிவோமாக. நாம் பிறரை நண்பராகக் கருதிப் பழகினால் அத்தகைய நட்பு உணர்வுக்கு உரிய மரியாதையைப் பிறர் தருவது நிச்சயம். அவ்வாறே ஆட்டோக்காரர்களையும் நண்பர்களாக பாவித்தோமெனில் அவர்களும் நமக்கு நட்புறவுடன் சேவை செய்வர் என்பது உறுதி.

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்

திரைப்படம்: பாட்ஷா
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: தேனிசைத் தென்றல் தேவா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
ஆண்டு: 1995

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக் காரன்
பெரியவங்க உறவுக்காரன்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

அட அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்

ஓய்..ஓய் ஓய்..ஓய் ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருசாச்சு
ஜும்குஜுக்கும் ஜும்கா ஓ ஜும்குஜுக்கும் ஜும்கா ஆ
ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருசாச்சு
பஸ்ஸே எதிர்பார்த்து பாதி வயசாச்சு
வாழ்க்கை பரபார்க்கும் நேரத்திலே
இருப்போம் சாலைகளின் ஓரத்திலே

அட கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க - நீங்க
கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க - ஹாங் அட
கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க - நீங்க
கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க
முந்தி வரும் பாரு இது மூணு சக்கரத் தேரு
நன்மை வந்து சேரும் நீ நம்பி வந்து ஏறு

எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்

யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா
யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா
யயயய யயயய யயயயயய யயயய
யயயய யயயய யயயயயய யயயய
யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா
யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா

ஆஆ அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்
ஜும்குஜுக்கும் ஜும்கா ஓ ஜும்குஜுக்கும் ஜும்கா
அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்
வெயிலோ புயல் மழையோ மாட்டேன்னு சொல்ல மாட்டேன்
அங்கங்கே பசியெடுத்தாப் பலகாரம்
அளவு சாப்பாடு ஒரு நேரம்
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா - உன்
பிள்ளைக் கொரு பேரு வச்சுந்தாரேம்மா
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா - உன்
பிள்ளைக் கொரு பேரு வச்சுந்தாரேம்மா
எழுத்தில்லாத ஆளும் அட எங்கள நம்பி வருவான்
அட்ரஸ் இல்லாத் தெருவும் - இந்த
ஆட்டோக்காரன் அறிவான்

எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக் காரன்
பெரியவங்க உறவுக்காரன்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா

அசக்கு இன்னா அசக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அட அசக்கு ஆ குமுக்கு
அசக்கு இன்னா அசக்கு தான்
அசக்கு குமுக்கு அசக்கு குமுக்கு ஹாங்
குமுக்கு இன்னா குமுக்கு தான்

வெள்ளி, 21 மே, 2010

நிலவே நீ சாட்சி

நம்மைப் படைத்து நாம் இன்புற்று வாழ இவ்வுஉலகினைப் படைத்த இறைவன் இவ்வுலகுக்கு ஒளியூட்டவென்றே செங்கதிரையும் தண்மதியையும் படைத்தானோ? உலகில் உயிர்கள் வாழ இன்றியமையாத அனைத்தையும் அளிக்கும் சூரியனைக் காட்டிலும் இரவில் மென்மையான ஒளியை வழங்கி மனங்குளிரச் செய்யும் நிலவையே மனிதன் பெரும்பாலும் போற்றித் துதித்து வருகிறான். அத்துடன் காதல் முதலாகத் தான் இவ்வுலக வாழ்வில் புரியும் அனைத்துச் செயல்களுக்கும் நிலவையே சாட்சியாக வைக்கிறான்.

மனித வாழ்வில் உண்டாகும் இன்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும் துன்பங்களை மறந்து ஆறுதல் பெறவும் பெரும்பாலும் நிலவையே துணைக்கு அழைக்கிறான் மனிதன். நிலவுக்கு நிஜமாக அத்துணை சக்தியுண்டா? அல்லது இத்தகைய உணர்வுகள் யாவும் நிலவின் அழகைப் பார்த்து, அதன் மங்கிய ஒளியால் மயங்கி அதன்பால் ஈர்க்கப் பட்ட மனம் உணரும் மாயையா?

நிலவே நீ சாட்சி

திரைப்படம்: நிலவே நீ சாட்சி
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1970

நிலவே நீ சாட்சி - மன
நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி
நிலவே நீ சாட்சி......
உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

அலையும் முயல்வதென்ன - மன
ஆசைகள் உறங்க மறுப்பதென்ன?
அலையும் முயல்வதென்ன - மன
ஆசைகள் உறங்க மறுப்பதென்ன?

வலையில் விழுந்த மீன்களென - சில
வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன - சில
வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன?

நிலவே நீ சாட்சி - மன
நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு - சில
உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
ஒரு சில இல்லத்தில் சுவை பேச்சு - சில
உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
இருவரை இணைத்து திரை போட்டு - இது
இறைவன் நடத்தும் விளையாட்டு
இறைவன் நடத்தும் விளையாட்டு

நிலவே நீ சாட்சி

கண்கள் இரண்டும் குருடானால் - இந்தக்
காதல் கதைகள் பிறப்பதில்லை
கண்கள் இரண்டும் குருடானால் - இந்தக்
காதல் கதைகள் பிறப்பதில்லை
உறவும் பிரிவும் நடப்பதில்லை - இந்த
உலகில் இனிப்பும் கசப்புமில்லை

நிலவே நீ சாட்சி - மன
நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்

வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் எனத் திடடவட்டமாகப் பார்க்க வேண்டும். அதற்கு வாழ்க்கைத் தத்துவம், அல்லது நியதி என்ன என்று ஆராய வேண்டும். அதை ஞானிகள் சான்றிதழுடன் தந்தால்தான் அது நமக்கு ஏற்கக்கூடியதாக அமையும்.

அப்படிப் பார்க்கும்போது சிறு வயதிலேயே ப்ரஹ்மசர்ய ஆச்ரமத்திலேயே ஸன்யாஸியாகி, தனது 32 வருட வாழ்வுக்குள் மஹா ஞானியாகி அத்வைத சித்தாந்தத்தை நிலை நாட்டி, ஸர்வக்ஞ பீடத்தில் அமர்ந்து, ஸனாதன தர்மத்தை (HINDUISM) உலகிற்குத் தந்து, நான்கு காஞ்சி மடங்களை ஸ்தாபித்து, ஸனாதன தர்மத்தைக் காக்கும் பொறுப்பை அவர்களிடம் தந்து 32-வது வயதில் நிர்வாணமாகிய ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அவர்கள் நமக்குத் தொகுத்தளித்த இந்த “பஜ கோவிந்தம்” என்ற திவ்ய காவ்யத்தைப்போல ரொம்பவும் சுலபமாகப் பின்பற்றக்கூடிய சான்றிதழ் வெறுண்டோ? ஆத்மபோதம், பகவத்கீதை போன்ற நூல்களில் தந்துள்ள வாழ்க்கையின் நியதியை, வாழ்க்கை முறையை, வாழ்வின் தத்துவத்தை மிகத் தெளிவாகவும், நளினமாகவும் இதில் தந்துள்ளார்.

நம் வாழ்வின் தவறான நோக்கம் நம்மை எங்கு கொண்டு செல்லும், சரியான நோக்கம் எப்படி அமைய வேண்டும், வாழ்க்கை என்பது என்ன, வாழும் முறை யாது, அதனால் நமக்கு நிகழும் பலன் ஏது, சரியான வாழ்க்கை முறை எங்ஙனம் அமைய வேண்டும் எனக்கூடிய தத்துவங்களைத் தெள்ளத் தெளிய ஸ்ரீ ஆதி சங்கரர் இந்த திவ்ய காவ்யத்தில் தந்துள்ளார். அதில் தந்துள்ள தத்துவங்களைச் சரிவர கிரஹித்து, அவைகளை அயராது சரிவர நாம் பின்பற்றினோமானால் நம் வாழ்க்கை முறை மிகச் சீரும் சிறப்பும் பெற்று, வளமுடனும், ஆற்றலுடனும், தார்மிகமாகவும், அமைதியுடனும் அமைந்து நம்மை ஜீவன்முக்தன் நிலைக்கு உயர்த்த ஹேதுவாகும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. அதில் தந்துள்ள ததுவங்கள் எவை எனப் பார்ப்போமா?

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்

வாழ்க்கைத் தத்துவம்

பாடியவர்: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி

ஆபகாய ஸ்வதர்மஸ்ய ஸர்வதர்ம ஸ்வரூபிணே
அவதார வருஷ்டாய ராமக்ருஷ்ணாய தே நம:

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

மூட ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம்
மூட ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

யாவத் வித்தோபார்ஜன ஸக்த:
தாவன்னிஜ பரிவாரோ ரக்த:
யாவத் வித்தோபார்ஜன ஸக்த:
தாவன்னிஜ பரிவாரோ ரக்த:
பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே
வார்த்தாம் கோSபின ப்ருச்சதி கேஹே
வார்த்தாம் கோSபின ப்ருச்சதி கேஹே

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

மாகுருதன ஜன யௌவ்வன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால:ஸ்ர்வம்
மாகுருதன ஜன யௌவ்வன கர்வம்
ஹரதி நிமேஷாத் கால:ஸ்ர்வம்
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா
ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா
ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

ஸுரமந்திர தருமூல நிவாஸ:
சய்யா பூதலம் அசினம் வாஸ:
ஸுரமந்திர தருமூல நிவாஸ:
சய்யா பூதலம் அசினம் வாஸ:
ஸர்வ பரிக்ரஹ போகத்யாக:
ஸர்வ பரிக்ரஹ போகத்யாக:
கஸ்ய ஸுகம் நகரோதி விராக:
கஸ்ய ஸுகம் நகரோதி விராக:

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

பகவத் கீதா கிஞ்சிததீதா
பகவத் கீதா கிஞ்சிததீதா
கங்காஜல லவ கணிகா பீதா
பகவத் கீதா கிஞ்சிததீதா
கங்காஜல லவ கணிகா பீதா
ஸக்ருதபியேன முராரி
ஸக்ருதபியேன முராரி ஸமர்ச்சா
ஸக்ருதபியேன முராரி ஸமர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா
க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

புனரபி ஜனனம்
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே
க்ருபயா பாரே பாஹி முராரே

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம்
கேயம் கீதா நாம ஸஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம்
நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்
நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம்

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம்
அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம்
புத்ராதபி தனபாஜாம் பீதி:
புத்ராதபி தனபாஜாம் பீதி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி:
ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி:

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

குரு சரணாம்புஜ நிர்பர பக்த:
ஸம்ஸாராதSசிராத்பவ முக்த:
குரு சரணாம்புஜ நிர்பர பக்த:
ஸம்ஸாராதSசிராத்பவ முக்த:
ஸேந்த்ரியமானஸ நியமாதேவம்
ஸேந்த்ரியமானஸ நியமாதேவம்
த்ருக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்
த்ருக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

ஞாயிறு, 9 மே, 2010

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்

பொதுவில் ஒரு மதத்தைச் சார்ந்தவர் அம்மதத்தினருள் சிறந்து விளங்கும் ஞானியரைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அதிசயங்களப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசுதல் வழக்கம். ஒரு ஞானியாகவோ மஹானாகவோ ஒருவர் திகழ வேண்டுமெனில் அவர் குறிப்பிடத்தக்க அற்புதங்களை நிகழ்த்தியிருக்க வேண்டுமென்னும் கருத்து உலகெங்கிலுமுள்ள மாந்தரிடையே நிலவி வருகிறது. அதிசயமெனவும் அற்புதமெனவும் இவர்கள் கருதுவது பெரும்பாலும் இயற்கைக்கு மாறாக இயற்கை நியதியை மீறிச் செயல்படும் திறமையையே. நம் கண் முன்னே பரந்து விரிந்த இந்த உலகெங்கிலும் காணுமிடம் யாவும் நிரம்பிக் கிடக்கும் எண்ணற்ற அதிசயங்களை நாம் கண்டாலும் இவற்றை அதிசயங்கள் என ஒப்புக்கொள்ள நம் மனம் முன்வருவதில்லை. இதன் காரணம் அறியாமையயே ஆகும்.

நீ கண்ட அதிசயங்கள் யாவை என்று எவரேனும் என்னைக் கேட்டால் நான் கூறுவதாவது, தினம் தோறும் இணய வாழியே முன் பின் அறிமுகமில்லாத எண்ணற்ற அன்பர்கள் என்னிடம் மிகுந்த அன்பு கொண்டு நான் எழுதும் பிதற்றல்களையும் படித்து, அவைகுறித்த தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, எனது சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் நிலையே என்பேன்.

உலகின் எங்கோ ஒரு மூலையில் சக மனிதர் ஒருவர் துன்புறுவதை அறிகையில் நாமெல்லோரும் ஒருமித்த மனதோடு அவர் துன்பம் நீங்கி இன்புற வேண்டுமென மனமுருகப் பிரார்த்தனை செய்கின்றோம். நம்மில் அனேகர் அவ்வாறு துன்பப் படுவோர் துயர் துடைக்கத் தேவையான பொருளாதார உதவிகளையும் திரட்டித் தருகின்றனர். நாட்டு நிலை குறித்தும் இந்த உலகை எதிர்நோக்கியுள்ள அபாயங்கள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டு உலகம் உய்யப் பாடுபடும் பாதையிலும் நாம் பயணம் மேற்கொண்டுள்ளோம். இவையாவும் குறிப்பிடத் தக்க அதிசயங்கேளேயன்றோ?

இது இவ்வாறிருக்க இளம் காதல் ஜோடி ஒன்று அதிசயம் பற்றி என்ன கூறுகிறது எனக் கேட்போமா?

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்

திரைப்படம்: ஜீன்ஸ்
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: ஏ.ஆர். ரெஹ்மான்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சுஜாதா மோஹன்
ஆண்டு: 1998

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்று நல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ என்தன் அதிசயம்
கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஓஓ
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம் ஓஓ

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்று நல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ என்தன் அதிசயம்

ராரார ராரார ராரார ராரார ராரார ராரார ரா ஓஓ
ராரார ராரார ராரார ராரார ராரார ராரார ரா ஓஓ

ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் ஒரு
வாசமுள்ள பூவைப் பார் பூவாசம் அதிசயமே
அலை கடல் தந்த மேகத்தில் சிறு
துளி கூட உப்பில்லை
மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம் போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே

கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஓஓ
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம் ஓஓ

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்று நல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ என்தன் அதிசயம்

அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா
அஜூபா அஜூபா அஜூபா அஜூபா

பெண்பாற் கொண்ட சிறு விரல்கள்
இரு கால் கொண்டு நடமாடும்
நீ தானென் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள் ஒரு
வாய் பேசும் பூவே நீ எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெரிக்கும் கன்னங்கள்
வாய் துடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கை கொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற க்ரீடம் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே

கல் தோன்றி மண் தோன்றி கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஓஓ
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துணை செல்லும் காற்று நல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்து போகும் நீ என்தன் அதிசயம்

ராரார ராரார ராரார ராரார ராரார ராரார ரா ஓஓ
ராரார ராரார ராரார ராரார ராரார ராரார ரா ஓஓ

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான்

இவ்வுலகில் நிலையாமை ஒன்றே நிலையானதென்னும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும் உண்மையை உணராமல் மனிதர்களாகிய நாம் என்றென்றும் பணம் சம்பாதிப்பதிலும், நம் உடலுக்கும், உடலின் உணர்வையே பெரும்பாலும் கொண்டு விளங்கும் மனதுக்கும் இன்பம் தரும் பொருட்களையும் வசதிகளையும் அடைவதிலும் நம் காலத்தைக் கழிக்கிறோம். இத்தகைய செயல்பாட்டினால் முன்னோர் அறிவுறுத்திய நல்ல கொள்கைகளைக் காற்றில் பறக்க விட்டுப் பாப காரியங்களையும் செய்யத் துணிகிறோம். பலருடன் கருத்து வேறுபாடுகளை வளர்த்து நல்லுறவை இழக்கிறோம். இதன் விளைவாக மனம் கெட்டு அதனால் உடல் தளர்ந்து தீராத நோய்களுக்காளாகி, பல விதத்தில் ஈட்டிய பணமும் வசதிகளும் தரவல்ல சுகங்களை அனுபவிக்க இயலாத நிலையையும் அடைகிறோம். இன்பம் தரும் என எண்ணி ஈட்டிய பொருள் பயனற்றதாகிவிட்ட நிலையிலும் எவ்வாறாகிலும் நம்மை வாட்டுகின்ற நோய்களிலிருந்து குணமடைந்து நாம் விரும்பிய சுகங்களை அடைய வேண்டும் எனும் எண்ணத்திலேயே மீதமுள்ள வாழ்நாளையும் இது நாள் வரையில் ஈட்டிய பொருளையும் வீணாக்கி என்றோ ஒரு நாள் எவ்விதப் பயனுமின்றி வருந்தி மடிகிறோம்.

உலக வாழ்வு நிலையற்றதெனும் உண்மையை உணர்ந்த ஞானிகள் இத்தகைய துன்மார்க்கத்தினின்றும் விலகி, பொருளின் மேல் பற்றை நீக்கி உலக நன்மைக்காகப் பாடுபடுவதையே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்கின்றனர். இத்தகைய ஞானிகள் தாங்கள் என்றும் நிலையான ஆத்மார்த்தமான இன்பத்தைப் பெறுவதுடன் தன்னை நாடி வருவோர்க்கும் தாம் பெற்ற இன்பத்தைப் பெற வழி காட்டுகின்றனர். இதனிடைய பலர் காவியுடையும் தெய்வீக சின்னங்களையும் தரித்து, எப்பொழுதும் ஞான மார்க்கம் தொடர்பானவற்றையே பிறருக்கு உபதேசம் செய்து, முற்றும் துறந்த முனிவர்களைப் போல் வேஷமிட்டு ஊரையும் உலகத்தையும் ஏமாற்றும் பல ஆஷாடபூதிகளையும் நாம் அவ்வப்போது அறிகிறோம். அத்தகைய வேடதாரிகளளைப் பற்றிய அறிவு நமக்கு உண்டாவதற்கு முன்னரே நம்மையும் அறியாமல் நம்மில் பலர் இத்தகைய வேடதாரிகளை மெய் ஞானிகள் என்று நம்பி ஏமாறுவதும் உண்டு.

ஞான மார்க்கத்துக்கான வழியைத் திருவள்ளுவர் முதலான ஞானியர் தெளிவாக வகுத்துத் தந்துள்ள நிலையில் நாம் வேறு யாரையும் இதற்காக நாட வேண்டுவதில்லை.

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான்

இரவும் பகலும்
இயற்றியவர்: ஆலங்குடி சோமு
இசை: டி.ஆர். பாப்பா
பாடியவர்: எஸ்.ஏ. அசோகன்

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்
எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி
பறந்து பறந்து பணம் தேடி பாபக் குளத்தில் நீராடி
பிறந்து வந்த நாள் முதலாய்ப் பேராசையுடன் உறவாடி
இறந்தவனே - அப்படி

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

தாயாரின் வேதனையில் பிறக்குறான் - மனுஷன்
தன்னாலே துடிதுடிச்சு எறக்குறான்
தாயாரின் வேதனையில் பிறக்குறான் - மனுஷன்
தன்னாலே துடிதுடிச்சு எறக்குறான் - இடையில்
ஓயாத கவலையிலே மிதக்கிறான் - இடையில்
ஓயாத கவலையிலே மிதக்கிறான் - ஒரு நாள்
உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான் - ஒரு நாள்
உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான் - அப்படி

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

இளமையிலே சில நாள் முதுமையிலே சில நாள்
இளமையிலே சில நாள் முதுமையிலே சில நாள்
இன்பத்திலே சில நாள் துன்பத்திலே சில நாள்
அன்னையும் மனைவியும் அருமைப் பிள்ளையும்
அன்னையும் மனைவியும் அருமைப் பிள்ளையும்
கண்ணீர் சிந்திடவே கடைசி வழி ஒரு நாள்
கடைசி வழி ஒரு நாள் அப்படி

எறந்தவனே சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

சனி, 8 மே, 2010

கொஞ்சு மொழி சொல்லும் கிளியே

ஒரு பெண் தாயாகியதும் அவள் இவ்வுலகில் அனைத்திலும் அரிய உறவாகக் காண்பது தான் பெற்ற சேயையே. அப்பெண் ஏழையாக இருந்தாலும் தன் பிள்ளைக்கு வாழ்வின் வசதிகள் அனைத்தும் மிகவும் உயர்ந்தவையாகவே இருத்தல் வேண்டுமென விரும்புவாள். தன் வயிறு பசி பட்டினியால் வாடிக் கிடந்தாலும் தன் குழந்தைக்கு வயிறு வாடாமல் தக்க நேரத்தில் எவ்வாறாகிலும் உணவிடுவாள். தன் ரத்தத்தையே பாலாக்கிக் கொடுப்பதன்றோ தாய்மை. தன் சகோதரர்களிடம் ஒரு பெண் மிகவும் எதிர்பார்ப்பது தன் பிள்ளைக்குத் தன் சகோதர்கள் பொருளுதவி செய்தும் பரிசுகளை வழங்கியும் அவர்களை மகிழ்ச்சியிலாழ்த்த வேண்டும் என்பதுவே.

கல்யாணி எனும் பெண் விதிவசத்தால் இளம் வயதிலேயே கணவனை சாலை விபத்தில் பரிகொடுத்த நிலையில் கைக்குழந்தையுடன் மிகவும் துன்புற்று ஏழ்மை நிலையில் வாடுகையில், பொருளீட்ட வேண்டி வெளிநாட்டுக்குச் சென்றிருக்கும் தன் அண்ணன்மார்கள் திரும்பி வருவர், தன் பிள்ளைக்குத் தக்க உதவிகள் செய்து அப்பிள்ளைக்குக் கல்வி பயிற்றுவிக்க ஆவன செய்வர் எனும் நம்பிக்கையுடன் தான் ஏழ்மையில் வாடிய போதும் தன் பிள்ளையாகிலும் நல்வாழ்வு வாழவேண்டும் எனும் ஆசை மனம் முழுதும் நிரம்பியவளாய் தன் மனதில் தோன்றும் எண்ணங்களைத் தாலாட்டாகப் பாடிப் பிள்ளையைத் தொட்டிலிலிட்டுத் தூங்க வைக்கும் மனமுருக்கும் காட்சி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் திரைப்படமான பராசக்தி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

கொஞ்சு மொழி சொல்லும் கிளியே

திரைப்படம்: பராசக்தி
இயற்றியவர்: கலைஞர் மு. கருணாநிதி
இசை: R. சுதர்சன்
பாடியவர்: T.S. பகவதி
ஆஅண்டு: 1952

கொஞ்சு மொழி சொல்லும் கிளியே - செழும்
கோமளத் தாமரைப் பூவே
கொஞ்சு மொழி சொல்லும் கிளியே - செழும்
கோமளத் தாமரைப் பூவே - ஒரு
வஞ்சமில்லா முழு மதியே - இன்ப
வானில் உதித்த நல்லமுதே

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

மாமன்மார் மூவர் தம்பி - நல்ல
வாழ்வளிக்க வருவார் - உனக்கு
மாமன்மார் மூவர் தம்பி - நல்ல
வாழ்வளிக்க வருவார் - உன்
மாம்பழக் கன்னத்திலே - முத்த
மாரி பொழிந்திட வருவார் - உன்
மாம்பழக் கன்னத்திலே - முத்த
மாரி பொழிந்திட வருவார்

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

மாணிக்கப் பாலாடை - பச்சை
மாமணித் தொட்டிலுடன்
மாணிக்கப் பாலாடை - பச்சை
மாமணித் தொட்டிலுடன் - வெள்ளை
யானையும் வாகனமாய் - மாமன்
தருவார் சீதனமாய் - உன்தன் மாமன்
தருவார் சீதனமாய்

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

வெள்ளியினால் செய்த ஏட்டில் - நல்ல
வைர எழுத்தாணி கொண்டு
வெள்ளியினால் செய்த ஏட்டில் - நல்ல
வைர எழுத்தாணி கொண்டு
தெள்ளு தமிழ்ப் பாடம் எழுத - உன்னைப்
பள்ளியில் சேர்த்திட வருவார் - மாமன்
அள்ளி அணைத்திட வருவார்

கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்

உலகில் எத்தனையோ அழகிய பெண்கள் இருப்பினும் அவர்கள் அனவருள்ளும் தான் காதலிக்கும் பெண்ணே ஒரு காதலனுக்குச் சிறந்த அழகியாகத் தெரிவாள். அதே போல் அப்பெண்ணுக்கும் பிற ஆடவர் அனவருள்ளும் தன் காதலனே மிகவும் அதிக அழகுள்ளவனாகத் தெரிவான். இது இயற்கையின் நியதி. தன் காதலியை விடவும் வேறு ஒரு பெண் அதிக அழகாக இருப்பதாக ஒருவன் எண்ணுவானாகில் அவனது காதல் உண்மைக் காதலல்ல என்பது திண்ணம்.

காதல் தெய்வீகமானது. கண்கள் வழியே கருத்தினிற் கலந்து உயிருடன் ஒருமிப்பது உண்மைக் காதல். இத்தகைய காதல் கொண்ட ஆண்மகனது உள்ளம் தனது காதலியின் அழகை வர்ணிக்கையிலும் அதிலொரு தெய்வீகத் தன்மையை உணர்வது சிறப்பு.

ஒரு பெண் நாணம் காரணமாகத் தன் காதலைத் தன் காதலனிடமும் வாய்விட்டுத் தெரிவிக்க மாட்டாள். அதற்கு மாறாகத் தன் உள்ளத்திலுள்ள காதல் உணர்வுகள் அனைத்தையும் தனது கண்களாலேயே அவனுக்கு உணர்த்தி விடுவாள். அந்தக் கண்ஜாடை கண்ட ஆண் அதற்கு மேல் உறங்குவதேது.

உண்மைக் காதலின்றி ஆண்களை அலைக்கழிப்பதையே பொழுதுபோக்காகக் கொண்ட சில மாதர்களும் இருக்கிறார்கள். அவர்களது கண் ஜாடை உண்மைக் காதல் கொண்ட பெண்ணின் கண் ஜாடையை விட ஆயிரம் மடங்கு மேலான மயக்கத்தை ஆண்களுக்கு அளிக்கவல்லது. அத்தகைய ஒரு பெண்ணின் கண் பேசும் மொழியைக் காதல் என்று நம்பித் தூக்கமில்லாமல் அவள் பின்னே அலைந்து அவமானப் படும் ஆண்களும் நிறைய உளர்.

ஆதலால் இளைஞர்களே, ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் உள்ளங்களை உங்கள் உண்மைக் காதலிக்காக அல்லது மனைவிக்காகவென்று இருக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள். எச்சரிக்கை!

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்

திரைப்படம்: அன்பே வா
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்
நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்

இடையோ இல்லை இருந்தால் முல்லைக்
கொடி போல் மெல்ல வளையும் சின்னக்
குடை போல் விரியும் இமையும் விழியும்
பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள் திருமுகம் மேலே குளிர்ப்
புன்னகை வருவதினாலே நிலவோ மலரோ எதுவோ

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல
அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
அவள் தான் சொல்லத் துடித்தாள்
ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து
அவள் தான் சொல்லத் துடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று
கண்ணால் சொல்லி முடித்தாள்
உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று
கண்ணால் சொல்லி முடித்தாள்
அந்தக் காதலன் முகம் தொடுவானோ?
இந்தக் காதலி சுகம் பெறுவாளோ
கனவோ நனவோ எதுவோ?

நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத் தான் ஒரு
கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்

நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல
அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்

சனி, 1 மே, 2010

ஒரு நாளும் உனை மறவாத

வாழ்க்கைப் போராட்டத்திலே வலிமையுள்ளவன் செல்வச்சீமானாகவும் வலிமையற்றவன் அச்சீமானிடம் கைகட்டி சேவகம் புரிபவனாகவும் இருப்பது உலகெங்கிலும் தொன்றுதொட்டு நிலவி வரும் வாக்கை முறையாகும். இத்தகைய சீமான்களை முதலாளி என்றும், ஐயா என்றும் எஜமான் என்றும் பல விதமாக மற்றவர் மரியாதையுடன் அழைப்பதும் வழக்கில் இருந்து வருகிறது. இத்தகைய எஜமானர்கள் பொதுவில் ஒவ்வொரு கிராமத்திலும் பிறரை விடவும் மிகவும் அதிகப்படியான விளை நிலங்களுக்குச் சொந்தக்காரராகவும் ஊரிலேயே அனைவரிலும் செல்வம் நிறைந்தவராகவும் இருப்பார். சில எஜமானர்கள் சுயநலாவாதிகளாகவும் தன்னை அண்டிப் பிழைப்பவர்களையே சுரண்டுவதுடன் அவர்களுக்குப் பெரும்பாலும் இன்னல்களையே பரிசாகத் தருபவராகவும் இருப்பதுண்டு. இதற்கு மாறாகப் பலர் பரோபகாரிகளாகவும் தன்னை அண்டியிருப்பவரைக் காக்கும் தயாள சிந்தையுள்ளவர்களாவும் இருப்பதும் உண்டு.

சாமான்யர்களுள் ஒருவனாக விளங்கும் ஆண்மகனைக் காதலிக்கும் பெண்ணைவிட இத்தகைய எஜமானர்களைக் காதலிக்கும் பெண்கள் தனது காதலனின் மேல் மிக்க மரியாதையும் அன்பும் கொண்டவளாக இருத்தல் இயல்பு.

இத்தகையதொரு கிராமச் சூழலை மிகவும் சுவாரஸ்யமான விதத்தில் படமாக்கி நம்க்கு எஜமான் திரைப்படத்தின் வடிவில் வழங்கியுள்ளனர் தமிழ்த் திரியுலக சிற்பிகள்.

ஒரு நாளும் உனை மறவாத

திரைப்படம்: எஜமான்
இயற்றியவர்:
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
ஆண்டு: 1993

கங்கணகணவென கிண்கிணி ம்ணிகளும் ஒலிக்க ஒலிக்க
எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் மொழி முழங்க முழங்க
ஒரு சுயம்வரம் நடக்கிறதே இது சுகம் தரும் சுயம்வரமே

ஆஆஆ ஆஆஆ.

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே

ஆஆஆ ஆஆஆஆஆ அஅஆஆஆ ஆஆஆஆஆ

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

தனனனனனா தனனனனனா தனனனனனா தனனனன னானானானானா

சுட்டுவிரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன்
உன்னடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன்
உன்னுதிரம் போல் நானே பொன்னுடலில் ஓடுவேன்
உன்னுடலில் நான் ஓடி உள்ளழகைத் தேடுவேன்
போதை கொண்டு நின்றாடும் செங்கரும்பு தேகம்
முந்தி வரும் தேன் வாங்கிப் பந்தி வைக்கும் நேரம்
அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு வம்புகள் என்ன வரம்புகள் விட்டு?

ஆஆஆ ஆஆஆஆஆ அஅஆஆஆ ஆஆஆஆஆ

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே
இணையான இளமானே துணையான இளமானே

ஆஆஆ ஆஆஆஆஆ அஅஆஆஆ ஆஆஆஆஆ

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்

கட்டில் இடும் சூட்டோடு தொட்டில் கட்டு அன்னமே
முல்லைக் கொடி தரும் அந்தப் பிள்ளைக்கனி வேண்டுமே
உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா?
என்னுடைய தாலாட்டில் கண்மயங்கித் தூங்கவா

ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே
ஆறு ஏழு கேட்டாலும் பெற்றெடுப்பேன் நானே
முத்தினம் வரும் முத்துதினம் என்று
சித்திரம் வரும் விசித்திரம் என்று

ஆஆஆ ஆஆஆஆஆ அஅஆஆஆ ஆஆஆஆஆ

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே
எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு

அத்தை மகனும் மாமன் மகளும், அல்லது அத்தை மகளும் மாமன் மகனும் ஒருவரை ஒருவர் காதலித்து அல்லது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டுத் திருமணம் புரிந்து கொண்டு வாழும் வழக்கம் நமது நாட்டில் தொன்று தொட்டு நிலவி வருகிறது. நெருங்கிய உறவினர்கள் இருவர் இவ்வாறு ஒன்று சேர்ந்து குடும்பம் நடத்துகையில் பிறக்கும் பிள்ளைகள் குறைபாட்டுடன் பிறக்கக்கூடும் எனும் ஒரு கருத்து மருத்துவர்களிடையே நிலவி வந்தாலும் இத்திருமண முறையைப் பெரும்பாலும் நமது சமூகத்திலுள்ள அனைவரும் தொடர்ந்து ஏற்றுக் கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு ஒருவரையொருவர் தம் மனதிற்குள்ளேயே காதலிக்கும் அத்தை மகனும் மாமன் மகளும் அவர்களின் திருமண நாள் குறிக்கும் நாளில் அத்தை மகன் விளையாட்டாகத் தான் வேறொரு பெண்ணை மணக்கக்கூடும் எனும் பொருள்பட மாமன் மகளிடம் புதிராகப் பேசிவிட்டு, இறுதியில் தான் அவளையே மணக்கப்போவதாக அவள் உணரவைத்து அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தரவேண்டுமென விரும்பி, அதன்படியே அவள் குழம்பிய மன நிலையில் தவிக்கையில் தங்கள் திருமணத்திற்கென மாலைகள் மற்றும் திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வந்து காணும் காட்சி அவனை நிலைகுலையச் செய்கிறது. அவன் விளையாட்டாகப் பேசிய பேச்சு அப்பெண் மனதில் பெரும் சோகத்தையும் அதனால் ஏமாற்றத்தையும் ஏற்படுத்த, தன் மனம் உடைந்து போன அப்பெண் விஷமருந்தி உயிர்நீக்கிறாள்.

தன்னுடைய தவறினால் தன் காதலி மாண்டதாலும் அவளை விரும்பிய மனதில் வேறு ஏதும் விரும்பாத கொள்கையாலும் ஆட்கொள்ளப்பட்ட அவன் அவள் நினைவாகவே தனது வாழ்நாளைக் கழிக்கையில், மனம் போனபடி தன் ஊரை விட்டு எங்கோ சென்றவன் வேறொரு ஊரில் உள்ள ஆலயம் ஒன்றில் தண்ணீர் சுமந்து தருவது போன்ற பணிகளைச் செய்து கொண்டு அங்கேயே தனியாக வாழத் தலைபடுகையில் அவ்வூரில் வசிக்கும் வேறொரு இளம் விதவைப் பெண்ணின் பெயர் இவனது காதலியின் பெயராக அமைந்து விடுவதால், இவன் தனது காதலியின் பெயரை அவ்வூரிலுள்ள சில சுவர்களில் எழுதியதால் சிறு குழப்பம் ஏற்படுகிறது. பின்னர் அக்குழப்பம் தெளிந்து அவ்விதவைப் பெண்ணை அவன் திருமணம் செய்து கொள்வானோ எனும் ஒரு எதிர்பார்ப்பைப் பிறர் மனதில் ஏற்படுத்துவது போன்றதொரு நிலையில் அவனும் அவ்விதவைப் பெண்ணும் ஒன்று சேர்ந்து அவ்வூரிலிருக்கு வேறொரு இளம் காதல் ஜோடியை ஒன்று சேர்க்கப் பாடுபட்டு வெற்றியும் காண்கின்றனர். இம்முயற்சியில் நம் கதாநாயகன் தன் உயிரையே விட்ட பின்னரும் அவனது பிணத்தின் கையில் ஒரு அரிவாளைக் கொடுத்து அவன் உயிருடன் நிற்பது போன்றதொரு தோற்றத்தினை ஏற்படுத்தி அவ்விதவைப் பெண், அவ்விளம் ஜோடியின் திருமணத்திற்குத் தடையாக நிற்கும் ஒருவரை ஏமாற்றி, தங்களது முயற்சியான காதலர்களை ஒன்று சேர்ப்பதில் வெற்றி காண்கிறாள்.

இக்கதை வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் கதையாகும். தன் தவறுதலால் மாண்ட தன் காதலியை மனதில் எண்ணீயபடி கதாநாயகன் பாடுவதாக அமைந்தது இவ்வினிய பாடல்.

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு

திரைப் படம்: வைதேகி காத்திருந்தாள்
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன்

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு வெளக்கேத்தியாச்சு
பொன் மானே ஒன்னே தேடுது

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது

கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக் கொடி நீதானம்மா
கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக் கொடி நீதானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு?
நீ தானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு வெளக்கேத்தியாச்சு
பொன் மானே ஒன்னே தேடுது

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது

மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன?
மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன?
அத்தை மகளோ மாமன் மகனோ?
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ?
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீ தான் இல்லாத நாளும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு வெளக்கேத்தியாச்சு
பொன் மானே ஒன்னே தேடுது

ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
காத்தாடி போலாடுது