ஆண்டவன் நம் ஒவ்வொருவருக்கும் அளித்த செல்வங்களையும் வாழ்வின் பிற இன்பங்களையும் முறையாக அனுபவிக்க ஏற்றவாறு நம் நமது மனப்பான்மையை அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறன்றி நம்மிடம் இருப்பதை விட மற்றவரிடம் அதிகமாக இருப்பதைக் கண்டு மனம் வெதும்பி, பொறாமையினால் இயற்கையாகவே நமக்குக் கிடைக்கும் இன்பங்களை விட்டு, செயற்கையானதொரு துன்பப் பாதையிலே நம்மை நாமே இட்டுச் சென்று துயருறுவதைப் போல் மடமை வேறில்லை. இருப்பினும் மனிதர்களுள் பலர் இத்தகைய குணக்கேடர்களாக இருப்பது கண்கூடு. பிறரது
துன்பத்திலே இன்பம் காணும் இத்தகையோரை ஆங்கில மொழியில் sadists என்று குறிப்பிடுவது வழக்கம்.
நமது கதாநாயகன் ஒரு பெண்ணின் மேல் காதல் கொள்கிறான். அப்பெண்ணும் அவன் மேல் காதல் கொள்கிறாள். ஆனால் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இன்பமாய் வாழப் பொறாத பொறாமை குணமுள்ள செல்வந்தனான ஒருவன் தன் செல்வத்தின் பலம் கொண்டு இவர்களது காதலை நிறைவேறாமல் செய்து, அப்பெண்ணை அவளது விருப்பத்துக்கு மாறாகத் தானே மணந்து கொள்ளும் விதமான சூழ்நிலையை ஏற்படுத்தி, அதன் பின் தங்கள் தலை தீபாவளியைக் கொண்டாடும் நாளில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து அதற்கு நமது கதாநாயகனையும் வரவழைக்கிறான். அத்துடன் நில்லாமல் கதாநாயகனை விழாவில் பாடவும் சொல்கிறான்.
தன் காதலியை மனைவியாக அடைய முடியாத வருத்தத்துடன் அவள் தன் விருப்பத்துக்கு மாறாக வேறொருவனுக்கு மாலையிட்டு அதை விடவும் அதிகத் துயரில் ஆழ்ந்ததை எண்ணி, தன் உள்ளக் குமுறலைப் பாடலாக வெளிப்படுத்துகிறான்.
இப்பாடலைக் கேட்டுக்கொண்டே கதாநாயகி யாரும் எதிர்பாராத விதத்தில் வெடிக்கும் பட்டாசுகளிடையே சென்று தன்னைத் தீக்கிரையாக்கிக் கொண்டு அதே நிலையில் விருந்து நடக்கும் மேல்மாடியிலிருந்து கீழே பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். இதனால் மனம் மிகவும் பாதிக்கப்பட்ட கதாநாயகன் பைத்தியம் பிடித்துப் பல காலம் துன்புறுகிறான்.
இத்தகையதொரு வித்தியாசமான காட்சி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஜெயலலிதா ஆகியோர் முதன்முதலில் இணைந்து நடித்த திரைப்படமான எங்கிருந்தோ வந்தாள் எனும் காவியத்தில் இடம்பெற்றுள்ளது.
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
திரைப்படம்: எங்கிருந்தோ வந்தாள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1970
ஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்
காதல் கிளிகள் பறந்த காலம்
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
காதல் கிளிகள் பறந்த காலம்
கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்
நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்
உன்னையறிந்தேன் என்னைக் கொடுத்தேன்
உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்
உன்னையறிந்தேன் என்னைக் கொடுத்தேன்
உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்
உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்
உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்
உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்
ஒரே பாடல் உன்னை அழைக்கும்
உன்தன் உள்ளம் என்னை நினைக்கும்
ஒரே பாடல்
திங்கள், 24 மே, 2010
நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
மனிதர்கள் வாழ்க்கை நடத்த இன்றியமையாத அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுடன் போக்குவரத்து வசதியும் இடம் பெறுவது மிகவும் அவசியம். ஒரு ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குச் செல்லப் பேருந்துகளும் ரயில் வண்டிகளும் உதவுவது போல ஒவ்வொரு ஊரிலும் உள்ள பல இடங்களுக்குச் சென்று வர ஆட்டோரிக்ஷாக்கள் பெரிதும் உதவுகின்றன. ஆனால் ஆட்டோரிக்ஷாக்களில் செல்வதற்கான கட்டணம் தற்போது மிக அதிகமாக உள்ளது. இக்கட்டண உயர்வுக்கு மக்கள் பெரும்பாலும் ஆட்டோக்காரர்களையே பொறுப்பாளியாக்குகின்றனர். வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களின் விலைவாசியும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைவாசியும் உயர்கையில் ஆட்டோ கட்டணமும் உயர்வது இயற்கையே என்பதையும், ஆட்டோக்காரர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் குடும்பம் உண்டு அக்குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பும் உண்டு என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இவ்வாறு கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைமை பிற விலைவாசி உயர்வினால் ஏற்படுகையில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஆட்டோக்கார்கள் தங்களுக்குள் கலந்து பேசி தங்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையிலும் பொதுமக்களையும் பெரிதும் பாத்க்காத வகையிலும் தகுந்த கட்டணத்தை முடிவு செய்கின்றனர். இவ்வாறு எடுக்கப் படும் முடிவுகளுக்குக் கட்டுப்படாமல் அடாவடியாகக் கட்டணத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்தி பயணிகளை வாட்டி வதைப்போரும் ஆட்டோக்காரர்களுள் உள்ளனர்.
சமுதாயத்தின் அனைத்துத் துறைகளிலும் நல்லவர்களும் உளர், தீயோரும் உளர். அது போலவே ஆட்டோக்காரர்களிலும் இருப்பது இயல்பே. இதனை மனதில் கொண்டு ஒட்டுமொத்த ஆட்டோக்காரர்களையும் பழி சொல்வது முறையல்ல என்பதை நாம் அறிவோமாக. நாம் பிறரை நண்பராகக் கருதிப் பழகினால் அத்தகைய நட்பு உணர்வுக்கு உரிய மரியாதையைப் பிறர் தருவது நிச்சயம். அவ்வாறே ஆட்டோக்காரர்களையும் நண்பர்களாக பாவித்தோமெனில் அவர்களும் நமக்கு நட்புறவுடன் சேவை செய்வர் என்பது உறுதி.
நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
திரைப்படம்: பாட்ஷா
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: தேனிசைத் தென்றல் தேவா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
ஆண்டு: 1995
நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக் காரன்
பெரியவங்க உறவுக்காரன்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அட அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்
ஓய்..ஓய் ஓய்..ஓய் ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருசாச்சு
ஜும்குஜுக்கும் ஜும்கா ஓ ஜும்குஜுக்கும் ஜும்கா ஆ
ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருசாச்சு
பஸ்ஸே எதிர்பார்த்து பாதி வயசாச்சு
வாழ்க்கை பரபார்க்கும் நேரத்திலே
இருப்போம் சாலைகளின் ஓரத்திலே
அட கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க - நீங்க
கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க - ஹாங் அட
கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க - நீங்க
கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க
முந்தி வரும் பாரு இது மூணு சக்கரத் தேரு
நன்மை வந்து சேரும் நீ நம்பி வந்து ஏறு
எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்
யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா
யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா
யயயய யயயய யயயயயய யயயய
யயயய யயயய யயயயயய யயயய
யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா
யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா
ஆஆ அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்
ஜும்குஜுக்கும் ஜும்கா ஓ ஜும்குஜுக்கும் ஜும்கா
அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்
வெயிலோ புயல் மழையோ மாட்டேன்னு சொல்ல மாட்டேன்
அங்கங்கே பசியெடுத்தாப் பலகாரம்
அளவு சாப்பாடு ஒரு நேரம்
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா - உன்
பிள்ளைக் கொரு பேரு வச்சுந்தாரேம்மா
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா - உன்
பிள்ளைக் கொரு பேரு வச்சுந்தாரேம்மா
எழுத்தில்லாத ஆளும் அட எங்கள நம்பி வருவான்
அட்ரஸ் இல்லாத் தெருவும் - இந்த
ஆட்டோக்காரன் அறிவான்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக் காரன்
பெரியவங்க உறவுக்காரன்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அசக்கு இன்னா அசக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அட அசக்கு ஆ குமுக்கு
அசக்கு இன்னா அசக்கு தான்
அசக்கு குமுக்கு அசக்கு குமுக்கு ஹாங்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
இவ்வாறு கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைமை பிற விலைவாசி உயர்வினால் ஏற்படுகையில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஆட்டோக்கார்கள் தங்களுக்குள் கலந்து பேசி தங்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையிலும் பொதுமக்களையும் பெரிதும் பாத்க்காத வகையிலும் தகுந்த கட்டணத்தை முடிவு செய்கின்றனர். இவ்வாறு எடுக்கப் படும் முடிவுகளுக்குக் கட்டுப்படாமல் அடாவடியாகக் கட்டணத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்தி பயணிகளை வாட்டி வதைப்போரும் ஆட்டோக்காரர்களுள் உள்ளனர்.
சமுதாயத்தின் அனைத்துத் துறைகளிலும் நல்லவர்களும் உளர், தீயோரும் உளர். அது போலவே ஆட்டோக்காரர்களிலும் இருப்பது இயல்பே. இதனை மனதில் கொண்டு ஒட்டுமொத்த ஆட்டோக்காரர்களையும் பழி சொல்வது முறையல்ல என்பதை நாம் அறிவோமாக. நாம் பிறரை நண்பராகக் கருதிப் பழகினால் அத்தகைய நட்பு உணர்வுக்கு உரிய மரியாதையைப் பிறர் தருவது நிச்சயம். அவ்வாறே ஆட்டோக்காரர்களையும் நண்பர்களாக பாவித்தோமெனில் அவர்களும் நமக்கு நட்புறவுடன் சேவை செய்வர் என்பது உறுதி.
நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
திரைப்படம்: பாட்ஷா
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: தேனிசைத் தென்றல் தேவா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
ஆண்டு: 1995
நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக் காரன்
பெரியவங்க உறவுக்காரன்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அட அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்
ஓய்..ஓய் ஓய்..ஓய் ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருசாச்சு
ஜும்குஜுக்கும் ஜும்கா ஓ ஜும்குஜுக்கும் ஜும்கா ஆ
ஊரு பெருசாச்சு சனத்தொகை பெருசாச்சு
பஸ்ஸே எதிர்பார்த்து பாதி வயசாச்சு
வாழ்க்கை பரபார்க்கும் நேரத்திலே
இருப்போம் சாலைகளின் ஓரத்திலே
அட கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க - நீங்க
கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க - ஹாங் அட
கண்ணடிச்சா காதல் வரும் சொல்றாங்க - நீங்க
கை தட்டுனா ஆட்டோ வரும் சொல்றேங்க
முந்தி வரும் பாரு இது மூணு சக்கரத் தேரு
நன்மை வந்து சேரும் நீ நம்பி வந்து ஏறு
எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்
யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா
யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா
யயயய யயயய யயயயயய யயயய
யயயய யயயய யயயயயய யயயய
யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா
யய்யா யய யயயா ய்ய ய்யயா யயயா
ஆஆ அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்
ஜும்குஜுக்கும் ஜும்கா ஓ ஜும்குஜுக்கும் ஜும்கா
அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன்
வெயிலோ புயல் மழையோ மாட்டேன்னு சொல்ல மாட்டேன்
அங்கங்கே பசியெடுத்தாப் பலகாரம்
அளவு சாப்பாடு ஒரு நேரம்
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா - உன்
பிள்ளைக் கொரு பேரு வச்சுந்தாரேம்மா
நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா - உன்
பிள்ளைக் கொரு பேரு வச்சுந்தாரேம்மா
எழுத்தில்லாத ஆளும் அட எங்கள நம்பி வருவான்
அட்ரஸ் இல்லாத் தெருவும் - இந்த
ஆட்டோக்காரன் அறிவான்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
நான் ஆட்டோக் காரன் ஆட்டோக் காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக் காரன்
ஞாயமுள்ள ரேட்டுக் காரன்
நல்லவங்க கூட்டுக் காரன்
நல்லாப் பாடும் பாட்டுக்காரன்
காந்தி பொறந்த நாட்டுக் காரன்
கம்பெடுத்தா வேட்டைக் காரன்
பெரியவங்க உறவுக்காரன்
எரக்கமுள்ள மனசுக்காரண்டா - நான்
ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா - நான்
எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா
அசக்கு இன்னா அசக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு இன்னா அசக்கு தான் குமுக்கு இன்னா குமுக்கு தான்
அசக்கு
அசக்கு இன்னா அசக்கு தான்
குமுக்கு
குமுக்கு இன்னா குமுக்கு தான்
அட அசக்கு ஆ குமுக்கு
அசக்கு இன்னா அசக்கு தான்
அசக்கு குமுக்கு அசக்கு குமுக்கு ஹாங்
குமுக்கு இன்னா குமுக்கு தான்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)