திங்கள், 23 நவம்பர், 2009

வந்த நாள் முதல் இந்த நாள் வரை

இறைவன் மனிதனைப் படைத்தானோ இயற்கை படைத்ததோ, எவ்வாறாயினும் இயற்கையில் மனிதர்களுக்கிடையில் வேறுபாடுகள் அடையாளத்துக்காகவே ஏற்படுகின்றனவேயல்லாது அடிப்படியில் அனைவரும் ஒன்றுபோலவே உள்ளோம்.
இவ்வுலகினில் இயற்கை வளங்கள் அனைத்தும் எல்லோருக்கும் பொதுவாகவே படைக்கப்படுகின்றன. குறுகிய மனம் கொண்ட மனிதன் பொருளின் மேல் கொண்ட பற்றின் காரணமாக அவற்றை எனது உனது என சொந்தம் கொண்டாடிப் பிரிவினையை ஏற்படுத்துகிறான்.

சாதிகளையும் மதங்களையும் ஏற்படுத்தியவன் மனிதனே, அவற்றில் உயர்வு தாழ்வு பார்க்க்கும் போக்கினை ஏற்படுத்தியவனும் மனிதனே. இதனால் ஏற்றத் தாழ்வுகள் உண்டாகிப் பிரிவினைக்கு வித்தாகித் துன்பம் விளைகிறது.

சிறிது காலமே உலகில் வாழும் பேறு பெற்ற மனிதன் அக்குறுகிய காலத்திலும் கவலைகளுடன் பிறருடன் முரண்பாட்டை வளர்த்து இன்ப வாழ்வைத் தொலைத்து, துன்பமுற்று மடிகிறான். என்னே அறியாமை!

சாதிக் கொடுமைகள் வேண்டாம் அன்பு தன்னில் செழித்திடும் வையம் ஆதரவுற்றிங்கு வாழ்வோம் தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்

என்று பாடிய பாரதி தான் எழுதிய பகவத் கீதைக்கான உரையில், "மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல்" எனக் குறிப்பிட்டு, கீதை மோக்ஷ சாஸ்திரம் என்றும், இவ்வுலகிலேயே மரணமில்லாப் பெறுவாழ்வு வாழ்தல் சாத்தியம் என்னும் ரகசியத்தைக் கூறுகிறார். இதே கருத்தை ஸ்வாமி விவேகானந்தரும் தனது "ராஜயோகம்" எனும் உரையில் குறிப்பிட்டுள்ளார். மரணமில்லாப் பெருவாழ்வு வேண்டின் வேற்றுமைகளைக் களைந்து அனைவரையும் சம நோக்குடன் கருதி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்நாள் முழுதும் பொன்னுக்கும் பொருளுக்குமே ஆசைப்பட்டுப் பிறருடன் பிணங்கி இருப்பவர்கள் மரணத்தை நோக்கியே தம் வாழ்வை அமைத்துக் கொள்கின்றனர்.

வந்த நாள் முதல் இந்த நாள் வரை

படம்: பாவ மன்னிப்பு
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1961

ம்..ம்..ம்..ம்.. ஓஹொஹோ

வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்

ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

நிலைமாறினால் குணம் மாறுவான் பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான் தினம்
ஜாதியும் பேதமும் கூறுவான் அது
வேதன் விதியென்றோதுவான்

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே

மனிதன் மாறிவிட்டான் ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

ம்..ம்..ம்..ம்.. ஓஹொஹோ

வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்

ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக