வியாழன், 7 ஜனவரி, 2010

அஆஇஈ சொல்லித் தருதே வானம்

விஸ்தாரமான ராக ஆலாபனையுடன் ஸ்வர சஞ்சாரங்களும் விதவிதமான சங்கதிகளுடன் தனி ஆவர்த்தனமும் கலந்து படைக்கப்பட்ட சாஸ்திரிய சங்கீதத்தை சற்றே எளிதாக்கும் விதமாக, ராக ஆலாபனை, ஸ்வர சஞ்சாரங்களைச் சிறிதளவு குறைத்து சினிமாப் பாடல்களை அமைத்த காலம் மாறி, சாஸ்திரிய சங்கீதத்தை மேலும் எளிமையாக்கி பாமர மக்களும் கேட்டு இன்புறும் வண்ணம் மெல்லிசையாக வடிவமைத்துத் தந்த தமிழ்த் திரையுலக மேதைகள், காலப்போக்க்கில் மேற்கத்திய இசையின் பரவலைத் தவிர்க்க முடியாத சூழ்நிலை உருவாகவே, தாங்களும் மேற்கத்திய இசை வடிவில் தமிழ்த் திரைப் பாடல்களை வடிவமைக்கத் தொடங்கி அதில் உலக சாதனையும் படைத்துள்ளனர்.

இதே கதியில், அனேகப் பாடல்கள் பெரும்பாலும் பரதம் முதலான பாரம்பரிய நடனங்களையும் நடனங்கள் இன்றி வரு்ம் காட்சிகளின் சூழ்நிலைகளையும் மனதில் கொண்டு இயற்றி இசையமைக்கப் பட்ட வழக்கம் மாறி மேற்கத்திய நடனம் இளைய தலைமுறையினரிடையே ஏற்படுத்திய தாக்கத்துக்கு ஈடு கொடுக்கும் விதமாக அமைக்கப் படுகின்றன. இசை மாறினாலும், நடை, உடை, பாவனைகள் மாறினாலும் தமிழின் மீதுள்ள ஈடுபாடும், இயற்கையின் மேல் கொண்ட காதலும், நமது தாய் மண்ணின் மாண்பினைப் போற்றும் பண்பும் இன்னமும் நமது நாட்டு மக்களுக்கு அன்று போலவே இன்றும் இருப்பது மனதுக்கு நிறைவைத் தருகிறது.


அஆஇஈ சொல்லித் தருதே வானம்


திரைப்படம்:ஆ-ஆ-இ-ஈ
இயற்றியவர்: ப்ரியன்
இசை: விஜய் ஆன்டனி
பாடியோர்: தினேஷ், ராகுல் நம்பியார்
ஆண்டு: 2009

ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா
ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா
ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா
ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா
ஹில்லா ஹில்லா ஹில்லா ஹில்லா

சிம்சுகும்குகும் சிம் சும்சும் சிகு சிம்சுகும்குகும் சிம் சும்சும்
சிம்சுகும்குகும் சிம் சும்சும் சிகு சிம்சுகும்கும் சிம் சும்சும்

அஆஇஈ சொல்லித் தருதே வானம் - அதில்
பட்டாம் பூச்சியின் உருவம் தீட்டிச் சென்றது மேகம்
அஆஇஈ சொல்லித் தருதே வானம்
நதிகள் சொல்லும் ரகசியம் கேட்டு
மரங்கள் மெல்லத் தலையை ஆட்டும்
பச்சை சேலை கட்டிக் கொண்டு
வயல் வெளிகள் முகம் காட்டும்
ஒற்றைக் காலில் பூக்கள் கூட்டம்
ஒன்றாய் சேர்ந்து ஜாடை பேசும்
பறவை போல இதயம் மாறி தூரம் தூரம் போகும்

அஆஇஈ சொல்லித் தருதே வானம், வானம் - அதில்
பட்டாம் பூச்சியின் உருவம், உருவம் தீட்டிச் சென்றது மேகம், மேகம்
அஆஇஈ சொல்லித் தருதே வானம்

லல்லலலை லைலைலைலோ லல்லலலை லைலைலைலோ
லலலலலை லைலைலைலோ லைலைலைலைலோ
லல்லலலை லைலைலைலோ லல்லலலை லைலைலைலோ
லல்லலலை லைலைலைலோ லைலைலைலைலோ

கமபநிஸ் நிஸ் நிஸ் நி ஸரிகம காரிகாரி ஸ்நீஸ்
பாதநீஸ் கமகம ரிகரிகஸ

ஓ காற்றில் கலந்திருக்கும் மண்வாசம்
எங்கள் மனசுக்குள்ளும் குடியிருக்கும்
ஊருக்கே உண்டான தனிப்பாசம்
எங்களுடைய பேச்சிலும் மணந்திருக்கும்
பகிர்ந்து உண்ணும் கூட்டாஞ்சோறின்
ருசியை வெல்லும் உணவில்லை
தாவணிப் பெண்கள் அழகுக்கு இங்கே
உலக அழகியும் இணையில்லை
சொத்து சுகங்களால் மனசு நிறையலாம்
வயிறு நிறையாது நண்பா
நெல்மணிக்கு மாறாகத் தங்கத்தை நாமும் தான்
தின்ன முடியாது நண்பா ஆஆஆஆஆஆ

அஆஇஈ சொல்லித் தருதே வானம் - அதில்
பட்டாம் பூச்சியின் உருவம் தீட்டிச் சென்றது மேகம்
அஆஇஈ சொல்லித் தருதே வானம்

பூவாசம் உல்ல லவுலவுலே பூவாசம் உல்ல லவுலவுலே
பூவாசம் உல்ல லவுலவுலே பூவாசம் உல்ல லவுலவுலே
பூவாசம் உல்ல லவுலவுலே பூவாசம் உல்ல லவுலவுலே
பூவாசம் உல்ல லவுலவுலே பூவாசம் உல்ல லவுலவுலே
லவுலவுலவுலவுலே
ஊஹூ ஊஹூஹு ஆஹாஆஹாஹாஹாஹா

காலையில் கண் விழிக்கும் சூரியனும்
பனியில் முகம் துடைத்தே தலை சீவும்
புழுதிகள் சுற்றித் திரியும் சாலைகளில்
மழைத் துளி கை கோர்த்தே நடைபோடும்
கள்ளம் கபடம் இல்லா மனதில் சோகம் தங்க முடியாதே
சேர்ந்து வாழும் வாழ்க்கை போலே சுகமும் இங்கு கிடையாதே
ஒவ்வொரு நொடிகளும் நமக்காய்ப் பிறந்தது
முழுசா அனுபவி நண்பா - நம்
எதிரி எதிரிலே வந்து நின்றாலும்
அன்பு காட்டுவோம் நண்பா ஆஆஆஆஆஆ

அஆஇஈ சொல்லித் தருதே வானம் - அதில்
பட்டாம் பூச்சியின் உருவம் தீட்டிச் சென்றது மேகம்
அஆஇஈ சொல்லித் தருதே வானம்
நதிகள் சொல்லும் ரகசியம் கேட்டு
மரங்கள் மெல்லத் தலையை ஆட்டும்
பச்சை சேலை கட்டிக் கொண்டு
வயல் வெளிகள் முகம் காட்டும்
ஒற்றைக் காலில் பூக்கள் கூட்டம்
ஒன்றாய் சேர்ந்து ஜாடை பேசும்
பறவை போல இதயம் மாறி தூரம் தூரம் போகும்

அஆஇஈ சொல்லித் தருதே வானம் - அதில்
பட்டாம் பூச்சியின் உருவம் தீட்டிச் சென்றது மேகம்
அஆஇஈ சொல்லித் தருதே வானம்