செவ்வாய், 8 ஜூலை, 2014

இதய வானிலே உதயமானதே

ஜுன் 06, 2014

நிறைவேறக் கடினமான, அல்லது தாமதமாகும் ஆசைகள் நம் மனதில் இருக்கையில் அந்த ஆசை நிறைவேறும் நாளை எண்ணி எண்ணி ஏங்குவதும், நிறைவேறி விட்டாதவே கற்பனை செய்து கனவு கண்டு மகிழ்வதும் மனித இயல்பு. மஹாகவி பாரதியார் நம் நாடு ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பே இவ்வுலகை விட்டு இறைவனடி சேர்ந்து விட்டாரானாலும் தன் கண் முன்னே சுதந்திரம் வந்து விட்டதாகக் கற்பனை செய்து ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று பாடினார். இது தேசபக்தியினால் வரும் கனவு. இத்தகைய உயர்ந்த கனவுகள் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளரான மிகவும் அறிவு முதிர்ந்த ஞானியருக்கே தோன்றும். 

நம்மைப் போன்ற இல்லற வாழ்வில் சுகம் தேடும் சாதாரண மனிதர்களுக்குத் தோன்றும் கனவுகள் பெரும்பாலும் இவ்வுலக வாழ்வில் எய்த விரும்பும் சுகபோகங்களைப் பற்றியதாகவே இருக்கும். அதிலும் குறிப்பாகத் திருமண வயதில் இருக்கும் வாலிபர்களுக்கும் இளம் பெண்களுக்கும் அக்கனவு அநேகமாகக் காதல் கனவாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம். அத்தகைய கனவுகளும் கற்பனைகளும் மனதில் தோன்றுகையில் ஒருவரது இதய வானில் அது வரை காணாத ஒரு புதிய உலகமே உதயமாகும். அப்புதிய உலகத்திலே அவர் தன் காதல் துணையுடன் கற்பனையில் அனுபவிக்கும் சுகமே பேரின்ப நிலையை அளிப்பதாக அமைவதுண்டு.

இங்கே ஒரு சிற்பி தன் மனதைக் கொள்ளை கொண்ட அன்புக் காதலியை எண்ணிக் கனவு கண்டு தன் இதய வானில் கோட்டை கட்டித் தன் காதல் வாழ்வில் அனுபவிக்கக் கூடிய இன்பங்களை மனதிலே கண்டு இன்புற்று இனிமையாகப் பாடுகிறான். அவனது குரலுடன் அவனது காதலியின் குரலும் சேர்ந்து ஒலிக்க அங்கே ஒரு புதிய உலகமே உருவாகிறது.



திரைப்படம்: கற்புக்கரசி
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், ஜிக்கி

இதய வானிலே உதயமானதே
இதய வானிலே உதயமானதே - நான்
இது வரையில் காணாத புதிய லோகமே
இதய வானிலே உதயமானதே - நான்
இது வரையில் காணாத புதிய லோகமே
இதய வானிலே உதயமானதே

இன்பநிலை...
இன்பநிலை என்னவென்று கண்டு கொண்டேனே - நான்
கண்டு கொண்டேனே - மெய்
அன்புவலை வீசும் தங்கச் சிலையைக் கண்டேனே - மெய்
அன்புவலை வீசும் தங்கச் சிலையைக் கண்டேனே
ஆனந்தமெனும் தேனமுதம் உண்ணுகின்றேனே
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே

இதய வானிலே உதயமானதே நான்
இது வரையில் காணாத புதிய லோகமே

நன்மையெல்லாம்........
நன்மையெல்லாம் நாடி வந்து சேரக் கண்டேனே - நான்
சேரக் கண்டேனே 
நல்லோர் உறவு தேடிவரும் பலனைக் கண்டேனே
நல்லோர் உறவு தேடிவரும் பலனைக் கண்டேனே

எந்நாளும் இதை எண்ணியெண்ணி மகிழ்ந்திடுவேனே
எந்நாளும் இதை எண்ணியெண்ணி மகிழ்ந்திடுவேனே
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே

இதய வானிலே உதயமானதே நான்
இது வரையில் காணாத புதிய லோகமே
இதய வானிலே உதயமானதே

இஷ்ட தெய்வம் நேரில் வந்து தோன்றக் கண்டேனே
இஷ்ட தெய்வம் நேரில் வந்து தோன்றக் கண்டேனே - அது
என்னையென்றும் கைவிடாது என்று கண்டேனே - அது
என்னையென்றும் கைவிடாது என்று கண்டேனே

எந்நாளும் இதை எண்ணியெண்ணி மகிழ்ந்திடுவேனே
எந்நாளும் இதை எண்ணியெண்ணி மகிழ்ந்திடுவேனே
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே
எல்லாம் இனிமேலே ஆகும் மனம் போலே

இதய வானிலே உதயமானதே நான்
இது வரையில் காணாத புதிய லோகமே
இதய வானிலே உதயமானதே