திங்கள், 7 ஜூலை, 2014

யாரடி வந்தார் என்னடி சொன்னார்?

பெண்கள் அலங்காரப் பிரியர்கள். தங்கள் உடலை ஆரோக்கியமாக வைப்பதிலும் பெண்கள் சமர்த்தர்கள். அதிலும் குறிப்பாக நம் நாட்டுப் பெண்கள் உடையலங்காரமும். சடையலங்காரமும், நகையலங்காரமும் உலகப் பிரசித்தி பெற்றவை.


கவிஞர் கண்ணதாசன் பெண்கள் அழகுறத் திகழ எவ்வாறு இருக்க வேண்டும் என்று பின் வருமாறு கூறுகிறார்:


"அழகு என்றால், முடியை ஆறு அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, பின்னால் வருவோருக்கு முக்கால் முதுகு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரிக அழகல்ல.

காஞ்சிபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, `மகாலட்சுமி போன்ற அழகு’ என்றார்கள்.

அவள் பார்க்கும்போது கூட நேருக்கு நேர் பார்க்கமாட்டாள்.

“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.”

என்றான் வள்ளுவன்."

ஆறடிக் கூந்தல் பெண்கள் யாரேனும் வளர்த்திப் பராமரித்துள்ளனரா? தற்காலத்தில் பராமரிக்கின்றனரா? என்ற கேள்வி நம்முள் பலத்த சந்தேகத்துடன் எழுகிறது.


இந்த ஆறடி கூந்தலைப் பற்றிக் கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் அமர்க்களமாய் அள்ளித் தெளித்திருக்கிறார் தமக்கே உரிய தெள்ளு தமிழில்.



திரைப்படம்: வானம்பாடி
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: எல்.ஆர். ஈஸ்வரி
ஆண்டு: 1963

யாரடி வந்தார் என்னடி சொன்னார்? 
ஏனடி இந்த உல்லாசம்?
யாரடி வந்தார் என்னடி சொன்னார்? 
ஏனடி இந்த உல்லாசம்?
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் 
மோதுவதென்னடி சந்தோஷம்?
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் 
மோதுவதென்னடி சந்தோஷம்?

யாரடி வந்தார் என்னடி சொன்னார்? 
ஏனடி இந்த உல்லாசம்?

ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து
ஓரடி ஈரடி மெல்ல எடுத்து
ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து
ஓரடி ஈரடி மெல்ல எடுத்து
பாரடி வந்து பக்கத்திலே - காதல்
காவடி தூக்கும் கண்களிரண்டை
வேலடி போலடி போடி வராமல்
காவடி தூக்கும் கண்களிரண்டை
வேலடி போலடி போடி வராமல்
ஏனடி நின்றாய் வெட்கத்திலே?

யாரடி வந்தார் என்னடி சொன்னார்? 
ஏனடி இந்த உல்லாசம்?
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் 
மோதுவதென்னடி சந்தோஷம்?
யாரடி வந்தார் என்னடி சொன்னார்? 
ஏனடி இந்த உல்லாசம்?

நில்லடி நில்லடி கண்ணடியோ ஓஓஓஓஓஓஓ
என்னடி என்னடி சொல்லடியோ ஓஓஓஓஓ
நில்லடி நில்லடி கண்ணடியோ
என்னடி என்னடி சொல்லடியோ
முன்னடி பின்னடி போடடியோ - இங்கு
அன்றொரு நாளடி வந்தவள் யாரடி
என்பதைக் கேளடி உண்மையைக் கூறடி
அன்றொரு நாளடி வந்தவள் யாரடி
என்பதைக் கேளடி உண்மையைக் கூறடி
என் பெயர் கேட்டுச் சொல்லடியோ!

யாரடி வந்தார்?
யாரடி வந்தார் என்னடி சொன்னார்? 
ஏனடி இந்த உல்லாசம்?
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் 
மோதுவதென்னடி சந்தோஷம்?
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் 
மோதுவதென்னடி சந்தோஷம்?

யாரடி வந்தார் என்னடி சொன்னார்? 

ஏனடி இந்த உல்லாசம்?