புதன், 18 ஜனவரி, 2012

யாரோ இவர் யாரோ?


இயல் இசை நாடகம் உட்படப் பல கலைகளிலும் தலைசிறந்து விளங்கிய மாமேதைகள் பலர் தோன்றி வாழ்ந்த, வாழ்கின்ற பாரத நாட்டில் பிறந்து வாழும் நாம் அனைவரும் மிகவும் பாக்கியம் செய்தவர்களாவோம். அத்தகைய மாமேதைகளிடையே யார் அதிகத் திறம் வாய்ந்தவர் என்பதைப் பல சமயங்களில் மற்றவர் அறிய முற்பட்டதுண்டு. ஒரு முறை தேவலோகத்தில் இந்திரன் சபையில் நடனமணிகளான ரம்பை, ஊர்வசி இருவரிடையே இத்தகைய ஒரு போட்டி நடைபெற்றது. போட்டிக்கு யாரும் தீர்ப்புச் சொல்ல முன்வரவில்லை. தீர்ப்புச் சொல்ல வல்லவர் யார் என வினவுகையில் உஜ்ஜயினி மாநகரை ஆண்டுவந்த விக்கிரமாதித்த மகாராஜனே என்று அறிந்து அவனை சகல மரியாதையுடன் இந்திரலோகத்துக்கு அழைத்து வந்து நீதிபதி ஸ்தானத்தில் அமர்த்தினான் தேவேந்திரன்.

இரு மலர்ச்செண்டுகளைத் தயாரித்த விக்கிரமாதித்தன் ரம்பை, ஊர்வசி இருவரிடமும் அம்மலர்ச்செண்டுகள் ஒவ்வொன்றைக் கொடுத்து அதனைக் கையில் பிடித்தவாறே நடனமாடப் பணித்தான். ரம்பை தன் மலர்ச்செண்டை லகுவாகப் பிடித்துக் கொண்டு ஆடினாள். ஊர்வசியோ மலர்ச்செண்டை சற்றே இறுகப் பிடிக்கவும் அதனுள் முன்னரே விக்கிரமாதித்தன் வைத்திருந்த வண்டுகள் அவளது கையைக் கடிக்க, நடனத்தில் தாளம் தப்பியது. நடனத்தில் சிறந்தவள் ரம்பையே என்று தீர்ப்பளித்தான்.

தேவலோக நடனமணிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லுமளவுக்கு நாட்டியத்தில் அபாரமான திறமை கொண்டு விளங்கிய நாட்டியப் பேரொளி பத்மினியும், வைஜயந்திமாலாவும் போட்டியிட்டு ஆடிய காட்சி ஒன்று காதல் மன்னன் ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்த வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் இடம்பெற்றது.

தமிழிசையிலும் கர்நாடக இசையிலும் உலகப் புகழ் பெற்ற இரு மாமேதைகள் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி மற்றும் டி.கே. பட்டம்மாள் ஆகியோர் என்பது பிரசித்தி. இவர்களுக்கிடையே என்றேனும் போட்டி அரங்கேறியதா எனத் தெரியவில்லையாயினும். அருணாசலக் கவிராயரின் யாரோ இவர் யாரோ எனும் பாடலை இருவரும் தனித் தனியே பாடியுள்ளனர். அப்பாடல்களைக் கேட்டு மனம் மயங்கி இரண்டில் எது அதிக இனிமையுடையதெனத் தீர்மானிக்க முடியாமல் தவித்தவர் பலருண்டு. அத்தவிப்பை அடைந்தவர்களுள் நானும் ஒருவன் ஆவேன். அதே தவிப்பை யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எனும் பொன்மொழிக்கிணங்க நீங்களும் அடைய வேண்டும் எனும் ஆவலில் இதோ:


இயற்றியவர்: அருணாசலக் கவிராயர்
பாடியவர்: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி

ததரன்னா நா நா நா நனன்னோ தானா நானா நானனானானானா

தனனா நானன்னா நா ததரன்னானா நானா நனன்னானானானா
நா... நா... நா.. னானானானா நானானானானா
தனன்னா நோ நானானா ததரன்னோ நானானா நானானா தானானா
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ?
காருலாவும் சீருலாவும் மிதிலையில்
காருலாவும் சீருலாவும் மிதிலையில்
காருலாவும் சீருலாவும் மிதிலையில்
காருலாவும் சீருலாவும் மிதிலையில்
காருலாவும் சீருலாவும் மிதிலையில்
கன்னி மாடம் தன்னில் முன்னே நின்றவன்
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ?
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக மலராலே என்னை
சந்திரபிம்ப முக
சந்திரபிம்ப முக மலராலே என்னை
தானே பார்க்கிறார் ஒரு காலே
அந்த நாளில் பந்தம் போலே ஏ ஏ ஏ ஏ
அந்த நாளில் பந்தம் போலே உருகிறார்
அந்த நாளில் பந்தம் போலே உருகிறார்
அந்த நாளில் பந்தம் போலே உருகிறார்
இந்த நாளில் வந்து சேவை தருகிறார்
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? அறியேனே
---------------------------------


பாடியவர்: டி.கே. பட்டம்மாள்

யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? 
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? 

காருலாவும் சீருலாவும் மிதிலையில்
காருலாவும் சீருலாவும் மிதிலையில்
காருலாவும் சீருலாவும் மிதிலையில்
கன்னி மாடம் தன்னில் முன்னே நின்றவர் யாரோ?
சீருலாவும் மிதிலையில்
கன்னி மாடம் தன்னில் முன்னே நின்றவர்

யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? 

சந்திரபிம்ப முக மலராலே 
சந்திரபிம்ப முக 

மபதநிஸ் நிரிஸ்நித பதம
சந்திரபிம்ப முக
நிநீதபதநிதபமா பதநி ஸ்க்ரிஸ் நிரிஸ்நிதபம
சந்திரபிம்ப முக
பாதபநிநிதபமகரிகமபத மபதநி ஸ்கரிஸ் நிரிஸ்ஸ்நிதபம
சந்திரபிம்ப முக
நிநீதபதநீத பநிதபாதமா பநிதபதபாதமா பதநிஸ்கரிஸ்நிரிஸ் ஸ்நிதபம

சந்திரபிம்ப முக மலராலே என்னை
தானே பார்க்கிறார் ஒரு தாயாலே
அந்த நாளும் சொந்தம் போல உருகிறார்
அந்த நாளும் சொந்தம் போல உருகிறார்
அந்த நாளும் சொந்தம் போல உருகிறார்
இந்த நாளில் வந்து சேவை தருகிறார்

யாரோ இவர் யாரோ? என்ன பேரோ அறியேனே
யாரோ இவர் யாரோ? என்ன பேரோ? 

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை

மாமுனிவர்கள் பலரும், அருந்தமிழ்ப் புலவோரும், அனேக ஆன்றோர் பெருமக்களும் அறிவினால் அறிந்து அனுபவத்தால் உணர்ந்து பல்வேறு வாழ்க்கைச் சூழ்நிலைகளின் விளக்கத்தாலும், கதைகள், கவிதைகள், காவியங்கள் வாயிலாகவும் எடுத்துரைத்த வாழ்க்கைத் தத்துவத்தைப் பாமர மக்கள் படித்தறிய இயலாதெனக் கண்டு

"வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம் வரும் ஜனனம் என்பது வரவாகும் அதில்
மரணம் என்பது செலவாகும். போனால் போகட்டும் போடா."

என எளிதில் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் நான்கே வரிகளில் கவிஞர் கண்ணதாசன் எடுத்துரைத்த பின்னரும் வாழ்வின் நிலையாமையை அறிவால் அறிந்த பின்னரும் உள்ளத்தால் உணராமல் மடமையில் மூழ்கிப் பொய்யான இவ்வுடலை வளர்ப்பதும் நிலையில்லாத சிற்றின்ப சுகம் பெறுவதும் மட்டுமே வாழ்வின் பெரும் குறிக்கோள்கள் எனக் கொண்டு தமிழர்கள் பலரும் தம் சுய அறிவை இழந்து சுயநல மயக்கத்தில் மூழ்கி, பிறர் நலன் பேணாது பெரும் பாபக் குழியில் விழுந்து கிடக்கின்றனர்.

ஆங்கிலேய ஆதிக்கத்தின் விளைவாக அந்தணர்கள் சிலரும் உயர்ந்த ஜாதி என்று தங்களை சொல்லிக்கொள்வோர் சிலரும் சேர்ந்து ஆலயங்களில் பூஜை செய்வதும் நாட்டுமக்களின் நலன் வேண்டுவதுமான தம் ஸ்வதர்மத்தை மறந்து வயிற்றுப் பிழைப்புக்காக வளர்த்து விட்ட தீண்டாமை எனும் தீமையை அழிக்க வேண்டி, "க்டவுளை மற மனிதனை நினை" எனத் தமிழ் மக்களுக்கு அன்று தந்தை பெரியார் வழங்கிய சீரிய அறிவுரையில் முதல் பாதியை மட்டும் தம் சுயநலம் பேண உபயோகித்து மனித இனத்தையே அழிவுப் படுகுழியில் த்ள்ளவும் தயங்காது குறுக்கு வழியில் வாழ்வு தேடும் குருடர்கள் இறுதியில் தாங்கள் அடித்த கொள்ளை அம்பலமான பின்னர் வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ள ஆலயங்களுக்குச் சென்று அந்த ஆண்டவனுக்கே லஞ்சத்தைக் கொடுத்துத் தம் குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து தப்பிக் கொள்ளலாம் என மனப்பால் குடித்து வரும் கேவலமும் அம்பலமாகி விட்டது.

இறைவன் இருக்கின்றானா? எனும் கேள்விக்கு உண்மையான பதிலை உளமாரத் தேடினால் கிடைக்கும் விடையாவது இறை என்பது எங்கும் நிறை பரம்பொருள் என்பதுவே. ஆனால் அந்தத் தேடலுக்கு முதற்கண் ஒருவர் பொருளின் மீதுள்ள பற்றுதலையும் சிற்றினப நாட்டத்தையும் விடல் வேண்டும். தனக்கு தனக்கு என அளவிடற்கரிய பொருளை அடுத்தவரை ஏமாற்றிச் சேர்த்தவர்கள் அவ்வாறு சேர்த்த பொருளில் சிறிதளவும் அனுபவியாது மடிவதைக் கண்ணாரக் கண்டபின்னரும் ஏனையோர் தாமும் அதே போன்ற தீய மார்க்கத்தில் தொடர்ந்து செல்வது வேடிக்கை. தனது என்பது நீங்கினாலே தெய்வ சிந்தனையுண்டாகும். யாவும் தங்க்கென நினைப்போர் எந்நாளும் இறைவனை அறிய முடியாது. நிலையான பேரின்பம் பெற ஓரே வழி பற்றுதலை விடுத்துப் பரம்பொருளை நாடுதலேயாகும்.

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை

திரைப்படம்: வளர்பிறை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மகாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுகுள்ளே
தேங்காயைப் பொல் இருப்பான் ஒருவன் தென்னை இளநீருக்குள்ளே தேங்கியுள்ள ஓட்டுகுள்ளே
தேங்காயைப் பொல் இருப்பான் ஒருவன் - அவனை
தெரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்
முற்றும் கசந்ததென்று பற்றறுத்து வந்தவர்க்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனை
தொடர்ந்து சென்றால் அவன் தான் இறைவன்

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்
கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் - அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்

பூஜ்ஜியத்துக்குள்ளே ஓரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன் - அவனை
புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்

வீச்சறுவா தூக்கிகிட்டு

ஆதி மனிதர்கள் மிருகங்களோடு மிருகங்களாக வாழ்ந்த காலத்தில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர். அவர்களுள் வலிமை மிக்கவன் அனைவருக்கும் தலைவனாக விளங்கி அடக்கி ஆண்டு வந்தான். அப்போது மனிதர்கள் இயற்கையை தெய்வமாக வழிபட்டதுடன் தங்கள் தலைவனையும் தலைவியையும் தெய்வமாகவே வழிபட்டு வந்தனர். நாளடைவில் மனிதனின் பகுத்தறிவு வளரவே அவன் இயற்கையின் சக்திகளைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் துவங்கினான். காடுகளை அழித்து வீடுகள் கட்டிக்கொண்டு வாழத் தலைப்பட்டான். அது முதற்கொண்டு ஒரு வரைமுறைக்குள் செயல்படும் மனித சமுதாயம் உருப்பெற்று வளர்ந்து வருகிறது. ஒரு சமுதாயத்தின் தலைவன் அரசனாக்கப்பட்டு அவனுக்கு விசேஷமான ஆடை அணிகலன்கள் தயாரிக்கப்பட்டு, பிறரிலும் மேம்பட்டவனாக அரசன் விளங்குவது மரபாக அமைந்தது.

அரசன் தன் நாட்டையும் குடிமக்களையும் வன விலங்குகளிடமிருந்து காப்பதும், அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் முதலான அடிப்படை வசதிகள் கிடைக்க வழி செய்வதும், நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாத்து நாட்டில் மக்கள் என்றும் இன்பமாய் வாழ வழிவகுப்பதும் தன் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரவே அரசனை மக்கள் மிகவும் மதித்து நடந்தனர். நாளடைவில் மதங்கள் தோன்றி ஆலயங்கள் அமைக்கப் பட்டு வழிபடும் வழக்கம் பரவுகையில் ஆலயங்களில் கடவுளர்க்கு சிலைவடிவம் கொடுக்கப்பட்டு எல்லா மக்களும் விசேஷமான முறையில் பூஜைகள் செய்தும் திருவிழாக்கள் எடுத்தும் சிறப்புடன் இறை வழிபாடு நடைபெறுவது வழக்கமானது.

இத்தகைய ஆலயங்களுள் தொன்மை வாய்ந்தவை ஐயனார் எனவும் எல்லைச் சாமி எனவும் கிராமப் பகுதிகளில் வாழும் மக்கள் வணங்கும் தெய்வத்தின் திருக்க்கோவில்களாகும். ஐயனார் உருவத்தை ஒரு அரசனைப் போல அமைத்து ஆசனத்தில் வீற்றிருப்பது போலவும், குதிரை மேல் சவாரி செய்வது போலவும் உருவாக்கி மக்கள் வழிபட்டனர், இன்றும் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர். ஐயனார் தங்கள் கிராமத்து மக்கள் அனைவரையும் ஒரு அரசன் குடிமக்களைக் காப்பது போலவே காக்கின்றார் எனும் அசையாத நம்பிக்கையுடன் மக்கள் இன்றும் இறைவழிபாட்டை நடத்துகின்றனர்.

வீச்சறுவா தூக்கிகிட்டு

வீச்சறுவா தூக்கிகிட்டு Veecharuva thookikittu
பாடியவர்: சின்னப் பொண்ணு Chinna Ponnu
இசை: எல்.வி. கணேசன் L.V. Ganesan
இயற்றியவர்: முத்து விஜயன் Muthu Vijayan
ஆல்பம்: தன்னானே தன்னானே thannaanae thananana
ஆண்டு: 2009

ஏ வீச்சறுவா தூக்கிகிட்டு வேல்கம்பு ஏந்திகிட்டு
வேட்டைக்குத் தான் கெளம்பிட்டாரு ஐயனாரு
மீசையைத் தான் முறுக்கிக் கிட்டு சலங்கையைத் தான் கட்டிகிட்டு
வேகத்தோட கெளம்பிட்டாரு அங்கே பாரு

ஊரு எல்லையிலே நிக்கும் சாமி எங்க
உசிரேக் காக்கும் சாமி காத்து
கருப்பு அண்டாமத் தான்
இங்கே காவல் நீங்க சாமி

வீச்சறுவா தூக்கிகிட்டு வேல்கம்பு ஏந்திகிட்டு
வேட்டைக்குத் தான் கெளம்பிட்டாரு ஐயனாரு
மீசையைத் தான் முறுக்கிக் கிட்டு சலங்கையைத் தான் கட்டிகிட்டு
வேகத்தோட கெளம்பிட்டாரு அங்கே பாரு

உன் ஆத்திரம் அடங்கத்தான் ஆடு கட்டி வெச்சோம்
உன் கோபம் கொறையத்தான் கோழி அறுத்து வச்சோம் ஐயா
உன் ஆத்திரம் அடங்கத்தான் ஆடு கட்டி வெச்சோம்
உன் கோபம் கொறையத்தான் கோழி அறுத்து வச்சோம்
சமரசம் ஆகணுன்னு சாராய வாங்கி வந்தோம்
சகலமும் நிலைக்கணுன்னு சக்கரைப் பொங்கல் வச்சோம்
சமரசம் ஆகணுன்னு சாராய வாங்கி வந்தோம்
சகலமும் நிலைக்கணுன்னு சக்கரைப் பொங்கல் வச்சோம்

எங்க சாமி எங்க சாமி எல்லாமே நீங்க சாமி
மங்கிப் போன எங்க வாழ்வில் வெளக்கேத்தும் தங்க சாமி வீச்சறுவா தூக்கிகிட்டு வேல்கம்பை ஏந்திகிட்டு
வேட்டைக்குத் தான் கெளம்பிட்டாரு ஐயனாரு
மீசையைத் தான் முறுக்கிக் கிட்டு சலங்கையைத் தான் கட்டிகிட்டு
வேகத்தோட கெளம்பிட்டாரு அங்கே பாரு

நீ வாழுற ஊருக்குள்ளே களவு போவதில்லே
நீ இருக்குந் தைரியந்தான் கதவெ அடைப்பதில்லே ஏ ஏ ஏ ஏ ஏ
நீ வாழுற ஊருக்குள்ளே களவு போவதில்லே
நீ இருக்குந் தைரியந்தான் கதவெ அடைப்பதில்லே
நீ சொல்லும் குறியில தான் எங்க சனம் வாழுதையா
சொத்து சுகமெல்லாம் உன்னாலே வந்ததையா
நீ சொல்லும் குறியில தான் எங்க சனம் வாழுதையா
சொத்து சுகமெல்லாம் உன்னாலே வந்ததையா

எங்க சாமி எங்க சாமி எல்லாமே நீங்க சாமி
மங்கிப் போன எங்க வாழ்வில் வெளக்கேத்தும் தங்க சாமி

வீச்சறுவா தூக்கிகிட்டு வேல்கம்பை ஏந்திகிட்டு
வேட்டைக்குத் தான் கிளம்பிட்டாரு ஐயனாரு
மீசையைத் தான் முறுக்கிக் கிட்டு சலங்கையைத் தான் கட்டிகிட்டு
வேகத்தோட கிளம்பிட்டாரு அங்கே பாரு

ஊரு எல்லையிலே நிக்கும் சாமி எங்க
உசிரேக் காக்கும் சாமி காத்து
கருப்பு அண்டாமத் தான்
இங்கே காவல் நீங்க சாமி

வீச்சறுவா தூக்கிகிட்டு வேல்கம்பை ஏந்திகிட்டு
வேட்டைக்குத் தான் கிளம்பிட்டாரு ஐயனாரு
மீசையைத் தான் முறுக்கிக் கிட்டு சலங்கையைத் தான் கட்டிகிட்டு
வேகத்தோட கிளம்பிட்டாரு அங்கே பாரு