திங்கள், 23 நவம்பர், 2009

காணா இன்பம் கனிந்ததேனோ

மீனா ஒரு அழகிய இளம்பெண். ஏழையாக இருந்தபோதிலும் தன்மானத்துடன் வாழ வேண்டும் எனும் கொள்கைப் பிடிப்புடையவள் அவள்.
மோகன் செல்வந்தரின் மகனாகப் பிறந்து வளர்ந்தவன். அவன் ஒரு நாடகப் பிரியன். தந்தை நிர்வகிக்கும் பொருளீட்டும் தொழிலில் அக்கரையின்றி நாடகங்கள் நடத்துவதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்தான். அவன் இவ்வாறு பொறுப்பின்றி இருப்பதை மாற்ற விரும்பிய அவனது தந்தை வேற்றூரில் இருக்கும் தனது நண்பரிடம் அவனை அனுப்புகிறார்.

அந்த நண்பரிடம் செல்ல மனமில்லாத மோகன் தனது நண்பனை அவரிடம் தன் பெயரில் சென்று இருக்குமாறு அனுப்புகிறான். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மோகனை ஏழ்மையில் தள்ளுவதால் அவன் தனக்குக் கிடைத்த பணிகளைச் செய்ய முயல்கையில் அவனுக்குப் புதிதாய் அமைந்த சினேகிதனோ ஒரு திருடன். அதனால் சகவாசதோஷத்தால் திருட்டும் புரட்டும் செய்தாவது வாழ முனைகிறான்.

இந்நிலையில் மீனாவின் மேல் மோகன் காதல் கொள்கிறான். அக்காதல் உண்மைக் காதலாக மலர்ந்து அவனை நேர்வழியில் செல்லத் தூண்டுதலாக அமையவே யாரையும் ஏமாற்றாமல் உழைத்து வாழ விழைகிறான். அவனது நல்ல உள்ளத்தையும் நேர்மையையும் அறியும் மீனா அவன் மேல் காதல் கொள்கிறாள்.

இருமனம் ஒருமனமான அவர்கள் திருமணம் செய்துகொண்டு இல்வாழ்வு வாழக் கனவு காண்கின்றனர். அப்போது மேகங்கள் திரண்டு வானிலிருந்து மழை பொழிகிறது. அம்மழைச்சாரலை அவர்களது திருமண ஊர்வலத்துக்கு வானோர் பொழியும் பூமழை போலவும், மேகங்கள் ஒன்றோடொன்று மோதி உண்டாகும் இடியோசையை மேளம் போலவும், மின்னலை வாணவேடிக்கை போலவும் உணர்கின்றனர்.

காணா இன்பம் கனிந்ததேனோ

படம்: சபாஷ் மீனா
இயற்றியவர்: கு.ம. பாலசுப்பிரமணியம்
இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியவர்: மோதி, பி.சுசீலா

காணா இன்பம் கனிந்ததேனோ
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ
ஆஆஅ ஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ

வானம் சிந்தும் மாமழை எல்லாம்
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
வானம் சிந்தும் மாமழை எல்லாம்
வானோர் தூவும் தேன்மலரோ?
வானோர் தூவும் தேன்மலரோ?
மேகம் யாவும் பேரொலியோடு
ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
மேகம் யாவும் பேரொலியோடு
மேளம் போலே முழங்குவதாலே

காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ

கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
விண்ணில் வாண வேடிக்கையோ?
மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
மனதில் பொங்கும் ப்ரேமையினாலே

காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஆஆஆஆஆஆ
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஆ..ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஅ, ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅஅ ஆஆஆஆஆஆஆஆஅ

காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக