வெள்ளி, 30 ஏப்ரல், 2010

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

சொல்லுவது எல்லோர்க்கும் எளிது அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

என்ற வள்ளுவன் வாக்கு முக்காலத்துக்கு பொருந்தும் முற்றிலும் உண்மையான கூற்று என்பதற்கு முதல் ஆதாரம், தினம் ஒரு பாடல் என்ற பெயரில் நான் தினந்தோறும் ஒரு பாடலும், அதற்குப் பொருத்தமாக என் உள்ளத்தில் உள்ள கருத்துக்களும் ஒன்று சேர இணைய நண்பர்களுக்கு அளிக்கும் இச் சிறு முயற்சியிலேயே இடையிடையே பல முறை தவறுவதாகும். இவ்வாறிருக்க, கருப்புப் பணத்தையும், அடியாள் பலத்தையும், மேடைப் பேச்சையும், சுவரொட்டிகளையும், சாலை மறியல் முதலான போராட்டங்களையும் கையாண்டு மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சிக்கு வருபவர்கள் ஏழைகளை வாழ வைக்கிறோம் என்று சொல்வதும், வாழ வைத்து விட்டோம், மலிவு விலையில் அரிசி தருகிறோம், இலவசமாகப் பல பொருட்களைத் தருகிறோம் என மார்தட்டிக் கொள்வதும் எவ்வாறு உண்மையாக முடியும்.

இலவமாக எல்லோருக்கும் கிடைத்து வந்த கல்வியையும், மருத்துவ வசதிகளையும் ஏலம் போட்டுத் தனியாருக்கு விற்று அதன் மூலம் சாதாரணக் கல்விக்கும் இலட்சக்கணக்காக செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தையும், ஒரு சராசரி மனிதன் தன் ஆயுள் முழுவதும் உழைத்து ஈட்டிய பணம் அனைத்தும் சேர்ந்தாலும் அவன் வயதான காலத்திலோ இடையிலோ ஏதேனும் நோய்க்கு ஆளானால் அதற்குத் தகுந்த மருத்து சிகிச்சை பெறவும் போதாத நிலையையும் இன்று ஆள்வோர் உண்டாக்கியுள்ளனர். அத்துடன் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்ளிட்ட பலர் ஏதேனும் நோய்வாய்ப்பட்டு அதற்கேற்ற சிகிச்சை பெறப் பெருந்தோகை தேவை என்பதால் இணையக் குழுமங்கள் வாயிலாகவும் நண்பர்கள் வாயிலாகவும் உதவி பெற்றேயாக வேண்டுமெனும் இக்கட்டான சூழ்நிலை நாட்டில் நிலவுகிறது. இதில் வெட்கக்கேடு என்னவெனில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வாயிலாக எங்கோ ஏதோ ஒருவருக்குக் கல்வியும் மருத்துவ உதவி முதலானவையும் யாரோ சிலரால் அளிக்கப்படுவதை மிகைப்படுத்திக் காட்டி நாட்டில் எங்கும் தருமம் தலைகாப்பது போன்றதொரு பிரமையை இத்தகைய அவல நிலையை உண்டாக்கியவர்களே ஏற்படுத்துவதும், கோடானு கோடி கொள்ளையடித்து விட்டு அவற்றில் சில கோடிகளை சிலருக்கு உதவியாக அளித்து அதன் மூலம் விளம்பரம் தேடுவதுமேயாகும்.

சாக்கடைகள் சுத்தம் செய்வதற்கும், குடி நீர் பெறுவதற்கும் மக்கள் போராடியும் நிறைவேறாமல் அல்லலுறுவது நாட்டு நடப்பாக இருக்கையில் இவ்வாறு ஏழைக்கு உதவுகிறோம் என்று பொய்யான வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருந்து அவர்களது நிழலில் தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திக்கொண்ட போலித் தலைவர்களுக்கு மாபெரும் பாராட்டு விழாக்கள் நடத்தப்பெற்று, அவ்விழாவில் பல பிரமுகர்களும் வந்து அத்தலைவர்கள் செய்யாத சாதனைகளைச் செய்ததாகவும், அவர்களுக்கு இல்லாத தயாள குணங்கள் இருப்பதாகவும் ஊரறியப் பொய்யுரைத்து மக்களை முட்டாளாக்கும் நாடகங்களும் அரங்கேறுவது கண்டு சொல்லொணா வேதனை ஏற்படுகிறது.

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

படம்: எங்க வீட்டுப் பிள்ளை
இயற்றியவர்: ஆலங்குடி சோமு
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1965

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் - அவன்
தேவன் என்றாலும் விட மாட்டேன்
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் - அவன்
தேவன் என்றாலும் விட மாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன் - அவர்
உரிமைப் பொருள்களைத் தொட மாட்டேன்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை - அவர்
எப்போதும் வால் பிடிப்பார்
எதிர் காலம் வரும் என் கடமை வரும் - இந்தக்
கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே - வரும்
நல்லோர் முகத்திலே விழிப்பேன் - வரும்
நல்லோர் முகத்திலே விழிப்பேன்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகல் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவன் கொள்கை உண்டு - அதை
எப்போதும் காத்திருப்பேன்
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் - இந்த
மானிடர் திருந்தப் பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை - அந்த
மேலோர் சொன்னதை மறந்தார் - அந்த
மேலோர் சொன்னதை மறந்தார்

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் - இங்கு
ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் - அவர்
கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்

ஆஹாஹா ஆஹாஹா ஆஆஆஆஆஆஆ
ஆஹாஹா ஆஹாஹா ஆஆஆஆஆஆஆ

மதுரையில் பறந்த மீன் கொடியை

காதலிலே இரண்டு வகை உண்டு, சைவம் அசைவமல்ல, இது வேறு. அறிவுபூர்வமாகக் கொள்ளும் காதல் ஒன்று. அறிவு நிலையை மீறி உணர்வு பூர்வமாகக் கொள்ளும் காதல் மற்றது. இதில் அறிவுபூர்வமாக ஏற்படும் காதல் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் விருப்பத்தை நேசத்தினாலும் தூய அன்பாலும் மரியாதை குறையாவண்ணம் வெளிப்படுத்துவது. மற்றது உணர்ச்சி மேலீட்டால் தன் நிலை தடுமாறி மயங்குவது. முதலாவது வாழ்வை வளமாக்கும், இரண்டாவது வாழ்வை நரகமாக்கக் கூடும்.

அறிவுபூர்வமாக ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்ளும் காதலர் இருவர் ஒன்றாகப் பாடியாடி மகிழும் காட்சி ஒன்றில் அக்காதலனுக்குத் தனது காதலியின் முகத்திலுள்ள அங்கங்களும் அவளது பெண்மையும் தமிழ்நாட்டின் பெருமை மிக்க பல முக்கியத் தலங்களாகவும், அவள் இத்தலங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய மொத்தத் தமிழ் நாடுமாகவே தென்படுவதாக ஒரு அழகிய கற்பனை வளம் மிக்க இன்னிசையுடன் கூடிய பாடல் இது.

மதுரையில் பறந்த மீன் கொடியை

திரைப்படம்: பூவா தலையா?
இயற்றியவர்: வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

மதுரையில் பறந்த மீன் கொடியை உன்
கண்களில் கண்டேனே போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே
மதுரையில் பறந்த மீன் கொடியை உன்
கண்களில் கண்டேனே போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன்
பெண்மையில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன்
பெண்மையில் கண்டேனே - இவை
மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே உன்னை
தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த மீன் கொடியை உன்
கண்களில் கண்டேனே போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே

காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான்
கண்மணியே உன் பொன்னுடலோ
குடந்தையில் பாயும் காவிரி அலை தான்
காதலியே உன் பூங்குழலோ
சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான்
சேயிழையே உன் செவ்விதழோ?
தூத்துக் குடியின் முத்துக் குவியல்
திருமகளே உன் புன்னகையோ?

மதுரையில் பறந்த மீன் கொடியை உன்
கண்களில் கண்டேனே போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே

பொதிகை மலையில் புறப்படும் தென்றல்
இளையவளே உன் நடையழகோ?
பொதிகை மலையில் புறப்படும் தென்றல்
இளையவளே உன் நடையழகோ?
புதுவை நகரில் புரட்சிக் கவிஞன்
குயிலோசை உன் வாய் மொழியோ?
கோவையில் விளையும் பருத்தியில் வளரும்
நூலிழைதான் உன் இடையழகோ?
குமரியில் காணும் கதிரவன் உதயம்
குலமகளே உன் வடிவழகோ?
இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே உன்னை
தமிழகம் என்றேனே

மதுரையில் பறந்த மீன் கொடியை உன்
கண்களில் கண்டேனே போரில்
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு

இவ்வுலகில் நாமனைவரும் நம் வாழ்நாளில் பெரும்பகுதியைப் பொருளீட்டுவதிலும் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வதிலுமே கழித்து வருகிறோம். நம் கன் முன்னரே நம்முடன் நெருங்கிப் பழகியவர்கள் உட்பட ஏனையோர் யாவரும் ஒருவர் பின் ஒருவராக யமலோகத்துக்குப் போய்க் கொண்டிருப்பதைக் கண்ணாரக் கண்டும், நமக்கும் ஒரு நாளுண்டு எனும் உண்மையை உணர மறு்த்து, சுயநலவாதிகளாகவே வாழ்நாளைக் கழிக்கிறோம். நமது சுயநலத்தினால் பொதுநலம் பாதிக்கப்படுவதையும் பொருட்படுத்தாமல் பிறரை அலட்சியப் படுத்தி, நமது தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டு சமுதாயத்துக்குப் பல வகைகளிலும் தீங்கிழைக்கிறோம்.

எத்துணை பணமிருந்தாலும் ஒருவருக்கு ஒரு ஜாண் வயிறு கொள்ளுமளவுக்கே உணவுண்ண முடியும். அதுவும் வயதாக ஆக உணவு உண்ணும் அளவும் குறைந்து, உடல் தளர்ந்து, பல வியாதிகளுக்கு இடமளிக்கையில் சுவையான உணவு உண்ணுவதும் இயலாமல் போய், கஞ்சி குடித்துக் காலம் கழிக்கும் சூழ்நிலையும் நம்மில் பலருக்கு ஏற்படுகிறது. என்ன நிலை வந்துற்றாலும் நம் பணத்தாசை மட்டும் குறைவதே இல்லை.

சுயநலமென்னும் இத்தகைய மனோ வியாதியிலிருந்து மீண்டு, நம் வாழ்நாளில் மீதமிருக்கும் காலத்தையாகிலும் பிறர் நலம் பேணுவதிலும், இயற்கை வளங்கள் அழிவதால் இவ்வுலகம் எதி்ர்கொண்டிருக்கும் பேரழிவிலிருந்து உலகினையும் நமது வருங்கால சந்ததியினரையும் காப்பதிலும் செலவிடுதல் நலம்.

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு

திரைப்படம்: முகராசி
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
அஅண்டு: 1968

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும் போது ஒரு நூறு பேரு - உயிர்
கூடு விட்டுப் போன பின்னே கூட யாரு?
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு

தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான் - இவன்
தேராத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான்
படித்தான் முடித்தான் ஹோய்
தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான் - இவன்
தேராத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான் - பிறர்
நோய் தீர்க்கும் வைத்தியன் தன் நோய் தீர்ர்க்க மாட்டாமல்
பாய் போட்டுத் தூங்குதப்பா - உயிரும்
பேயோடு சேர்ந்ததப்பா ஹோய்

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு

கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார் - எந்தக்
காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார்
கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார் - எந்தக்
காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார் - நல்ல
சேதி சொல்லும் ஜோசியர்க்கும் நீதி சொல்லும் சாவு வந்து
தேதி வைத்து விட்டதடியோ - கணக்கில்
மீதி வைக்கவில்லையடியோ ஹோய்

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு

பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் - அந்தப்
பட்டயத்தில் கண்டது போல் வேலியெடுத்தான்
எடுத்தான் முடித்தான் ஹோய்
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் - அந்தப்
பட்டயத்தில் கண்டது போல் வேலியெடுத்தான் - அதில்
எட்டடக்கு மாடி வைத்துக் கட்டிடத்தைக் கட்டி விட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தான் - மண்ணைக்
கொட்டியவன் வேலியெடுத்தான் ஹோய்

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும் போது ஒரு நூறு பேரு - உயிர்
கூடு விட்டுப் போன பின்னே கூட யாரு?

கண்படுமே பிறர் கண்படுமே

"வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே."

தான் விரும்புவனவற்றைத் தன் உடைமையாக்கிள் கொள்ள விழைவது மனிதனின் சுபாவம். அவ்வாறு உடைமை கொண்ட பொருள் யாதாயினும் அதனைப் பிறர் வசம் செல்ல அனுமதியாத மனப்பான்மை எல்லா மனிதருக்கும் உண்டு. இது மமகாரம் எனும் குணமாகும். தான் விரும்பும் பொருள் ஒரு பெண்ணாக இருக்கையில் ஒரு ஆணுக்கு இத்தகைய தனது எனும் உணர்ச்சி அனைத்திலும் மேலோங்கியிருப்பது இயல்பு.

தான் விரும்பும் பெண்ணை வேறொருவன் கண்களால் ஏறெடுத்துப் பார்க்கவும் பொறுக்காத குணம் ஆணுக்குண்டு. இது போன்ற மமகார உணர்வு மேலோங்குவதால் பல ஆண்கள் மன இறுக்கம் கொண்டு வருந்துவதும் உண்டு. இத்தகைய பலஹீனத்தைத் தவிர்த்து இயல்பான உணர்வு கொள்ளப் பழகுவோருக்குக் காதல் இனிமையானதாகும். தன் காதலியின் மேல் தான் கொண்ட அளவிடற்கரிய ஈடுபாட்டை அவளிடம் வெளிப்படுத்த இத்தகைய இயல்பு நிலை கொண்ட காதலன் கையாளும் யுக்தி கவிஞரின் கற்பனையில் அழகுற வெளிப்படுகிறது, காத்திருந்த கண்கள் படத்தில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் இடம்பெறும் காதல் காட்சியில்.

கண்படுமே பிறர் கண்படுமே

திரைப்படம்: காத்திருந்த கண்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
ஆண்டு: 1962

கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா? - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா? - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?

புண்படுமே புண்படுமே புன்னகை செய்யலாமா?
பூமியிலே தேவியைப் போல் ஊர்வலம் வரலாமா?

கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா? - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?

ஆடவர் எதிரே செல்லாதே
அம்பெனும் விழியால் கொல்லாதே
ஆடவர் எதிரே செல்லாதே
அம்பெனும் விழியால் கொல்லாதே
காரிருள் போலுன் கூந்தலைக் கொண்டு
கன்னி உன் முகத்தை மூடு - தமிழ்க்
காவியம் காட்டும் ஓவியப் பெண்ணே
மேகத்துக்குள்ளே ஓடு

கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?

கண்ணாடி முன்னால் நில்லாதே - உன்
கண்ணாலும் உன்னைக் காணாதே
கண்ணாடி முன்னால் நில்லாதே - உன்
கண்ணாலும் உன்னைக் காணாதே
மங்கை உன் அழகை மாதர் கண்டாலும்
மயங்கிடுவார் கொஞ்ச நேரம் - இந்த
மானிடர் உலகில் வாழ்கிற வரைக்கும்
தனியே வருவது பாவம்

கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளீயே வரலாமா - உன்
கட்டழகான மேனிகை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

சிந்து நதியின் மிசை நிலவினிலே

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியான நமது நாட்டின் சுதந்திரம் வந்த பொழுது அது முழுமையான சுதந்திரமாக இருக்கவில்லை. நாடு மதக் கலவரத்தால் துண்டாடப் பட்டு பாகிஸ்தான் தனி நாடாக உருவானதன் விளைவாக இந்தியா எனும் பெயர் நாட்டுக்கு ஏற்படக் காரணமாயிருக்கும் சிந்து நதியும் அதனைச் சார்ந்த பகுதிகளும் பாகிஸ்தான் வசம் போய் விட்டன. அது போகட்டும், எஞ்சிய பகுதிகளாவது இந்தியாவிடம் முழுமையாகத் தங்கினவா எனில் இல்லை. இந்திய சீன யுத்தத்தின் விளைவாக திபெத் பகுதியும் அதனையொட்டிய கைலாஷ் மலைப் பகுதியும் சீனாவின் வசம் சென்றுவிட்டன. அதன் பின்னர் வெகு விரைவிலேயே காஷ்மீர் மாநிலத்தின் பெரும் பகுதி பாகிஸ்தான் வசம் போய் விட்டது.

இது போததென்று மொழிவாரியாக மாகாணங்கள் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாகாணங்களுக்கிடையே தலைநகரைப் பகிர்ந்து கொள்வதிலும் ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்வதிலும் எனத் தொடர்ந்து ஜீவ மரணம் போராட்டங்கள் ஏற்பட்டு நாடு அமைதியை இழந்து இன்று இருக்கும் மாநிலங்களில் பல மேலு்ம் சிறு துண்டுகளாக உடையும் நிலை உருவாகி உள்ளது. இந்திய ஒருமைப் பாட்டுக்காகத் தன்னலம் கருதாது பாடுபடுவதாகப் பொய் சொல்லி ஆட்சிக்கு வரும் யாவரும் தாம் தந்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டுத் தங்கள் சுயநலத்தையே பெரிதும் பேணி வருகின்றனர். நாடு எங்கே போகிறதென்று நாமும் உணராமல் அடுத்த வேளை உணவைப் பற்றியும் தொலைக்காட்சித் தொடர்கள் பற்றியுமே எண்ணி மயங்கிக் கிடக்கிறோம்.

தேசிய ஒருமைப்பாடு குறித்து பாரதி கண்ட கனவு பகற்கனவாகாவே ஆகிவிட்டது. அக்கனவை நனவாக்க இனியாகிலும் நாம் பாடு படுவோமாகில் நாம் பிறந்த பொன்னாடு வளம் பெரும்.

சிந்து நதியின் மிசை நிலவினிலே

திரைப்படம்: கைகொடுத்த தெய்வம்
இயற்றியவர்: மஹாகவி பாரதியார்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆ

கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்
மமதாவேசம் மாயனி மது பாசம்
மமதாவேசம் மாயனி மது பாசம்
மனசுகி நீ கோபம் மனுதட நீ கோபம்

நீ கங்கண ராகம் ஆஆஆஆஆஆ நீமதி அனுராகம் ஆஆஆஆஆஆ
மனயீ வைபோகம் ஆஆஆஆஆஆ பகுஜன் மனயோகம் ஆஆஆஆஆஆ
வலபுல உல்லாசம் ஆஆஆஆஆஆ நரபுல தரஹாசம் ஆஆஆஆஆஆ
வதரின அவகாசம் ஆஆஆஆ தனிகுரு ஆதேசம்
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா ம்ஹ்ம்ம்ஹ்ம்

சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

அன்பு நண்பர்களே,

ஒரு மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தினம் ஒரு பாடல் தொடர்கிறது. இடைவெளி ஏற்படக் காரணம் சமீபத்தில் விளைந்த ஒரு நண்பனின் எதிர்பாராத மரணமும் அதனால் பிற நண்பர்களிடையே உண்டான ஆழ்ந்த வருத்தமு்மே. "இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா?"

மனிதர் யாவர்க்கும் பொதுவில் உள்ள ஓர் பழக்கம் பிறருக்கு அறிவுரை வழங்குவதாகும். வழங்கும் அறிவுரை எதைப்பற்றியதாக இருப்பினும் அவ்வறிவுரையை நாம் முதலில் கடைபிடித்தல் அவசியம். அவ்வாறன்றிப் "பிறர்க்குபதேசம் தனக்கில்லை" எனும் போக்கில் நடந்துகொண்டோமேயானால் நாம் கூறும் அறிவுரையும் பயனற்றுப் போவதுடன் நம் மீது பிறர்க்குள்ள மதிப்பும் மரியாதையும் வெகுவாகக் குறைந்து விடும்.

குறிப்பாகக் குழந்தைகளுக்கு நாம் அறிவுரைகளை வழங்குகையில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். இல்லாவிடில் அவர்களது மனம் கெட்டு அவர்கள் கட்டுப்பாடின்றித் தவறான பாதையில் செல்ல ஏதுவாகக்கூடும்.

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

திரைப்படம்: நம் நாடு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம்
நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம்
நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழி காட்டும் தலைவன்
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழி காட்டும் தலைவன்
துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று
துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - நம்
நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

கிளி போலப் பேசு இளங்குயில் போலப் பாடு
மலர் போலச் சிரித்து நீ குறள் போல வாழு
லாலாலலாலா லலலலாலலாலா
லாலாலலாலா லலலலாலலாலா
மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

விழி போல் எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
விழி போல் எண்ணி நம் மொழி காக்க வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்
ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்
ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்
தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார்

நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம்
நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

லாலலால லாலாலால லாலலா லா
லாலலால லாலலால லாலலாலலாலலா
லாலலால லாலாலால லாலலா

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே

இறை பக்தி மார்க்கம் மானிடருக்கு வாழ்வின் இன்ப துன்பங்களால் ஏற்படும் மனக்கிளர்ச்சிகளால் பாதிப்பு ஏற்படாமல் காத்து அவர்களது மனங்களைப் பண்படுத்தவென்று அமைக்கப் பட்டதாகும். இம்மார்க்கத்தில் பல விதமான புராணங்களும் கதைகளும் சொல்லி அவற்றின் மூலம் நீதி நெறிகளை வலியுறுத்துவதும் துன்பங்களிருந்து விடுதலை பெறும் வழியைக் காட்டுவதும் நம் முன்னோர்கள் கண்ட வழிமுறைகள். இறைவன் என்றதும் ஆலயங்களில் காண்பவை போல் பலவிதமான வடிவங்களுடனும் பெயர்களுடனும் வெவ்வேறு தெய்வங்கள் நம் நினைவுக்கு வருவதுண்டு. இவற்றுள் எது உயர்ந்தது, எது தாழ்ந்தது எனும் ரீதியிலும் இறைத் தத்துவத்தை உணராத மாந்தர் பலர் விவாதித்து, தங்களுக்குள் மனக்கசப்பு உருவாக வழி வகுத்து அதனால் மகிழ்ச்சியை இழந்து உற்சாகம் குறைந்து வருந்துதல் அறியாமையே ஆகும்.

இதனையே "அரியும் சிவமும் ஒன்று அறியாதவர் வாயில் மண்ணு" என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடவுள் என்பது ஒவ்வொருவர் மனப்பாங்ககுக்கேற்ப மாறுபடுதல் இயல்பு. இக்காரணத்தினாலேயே உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மனிதர்களுள் தோன்றிய ஞானியர் தம் உணர்வினாலும் அனுபவத்தாலும் கண்டவிதமாக இறைத் தத்துவத்தை உலக மக்களுக்கு உபதேசித்தவற்றில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

"தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலையென்றால் வெறும் சிலை தான்", "பிடித்து வைத்தால் பிள்ளையார்" எனு்ம் பொன் மொழிகள் உணர்த்துவது இதனையே. ஒரு மதத்தினர் வழிபடும் இறைவன் அம்மதத்தவர்களை மட்டும் காப்பதாகக் கூறுவது மடமை. இறையருள் எல்லோர்க்கும் உரியதாகும். இறை என்று ஏதும் இல்லையென வாதிக்கும் மனிதர்களுக்கும் இயற்கையுடன் இயைந்து நமது புலன்களால் உணர முடியாத நிலையில் அண்ட சராசரம் எங்கும் வியாபித்திருக்கும் இறையருள் உரித்தாகும். ஆத்திகம் நாத்திகம் என்பது இறைவன் உண்டா இல்லையா எனும் ரீதியில் நியமிப்பதல்ல. எது செய்யத் தக்கது, செய்யத் தகாதது எது என்பதன் அடிப்படையிலேயே ஒருவர் ஆத்திகரோ நாத்திகரோ ஆவார்.

இறைவனின் பெயரைச் சொல்லி, புராணக் கதைகளை உண்மை நிகழ்ச்சிகளாக நம்பவைத்து அவற்றின் மூலதம் தமது சுயநல நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்பவனும் நாத்திகனே. இறைவன் இல்லை, இல்லவே இல்லை என்று முழங்கிய போதும், உண்மையைச் சொல்லி உலகினருக்கு நன்மையைச் செய்பவன் ஆத்திகனே ஆவான்.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/swami-ayyappan/thiruparkadalil.php

திரைப்படம்: ஸ்வாமி ஐயப்பன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: தேவராஜன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1975

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா

உலகினைப் பாய் போல் உண்டவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா - அன்று
உரலுடன் நடந்த கண்ணனும் நீயே
ஸ்ரீமந் நாராயணா
இரணியன் அகந்தை அழித்தவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா - அன்று
இந்திர வில்லை முறித்தவன் நீயே
ஸ்ரீமந் நாராயணா

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா

கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே
அறியாயோ நீயே? - அவள்
கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ?
ஸ்ரீமந் நாராயணா
தேவர்கள் உன்தன் குழந்தைகளன்றோ
மறந்தாயோ நீயே? - உன்
தெய்வ முனிவரைக் காப்பத்தற்கென்றே
வருவாயோ நீயே?

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா - அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா

தோளிலந்த சாரங்கம் எடுத்து வரவேண்டும் நீயே - கணை
தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை
அழித்திடுவாய் நீயே
அநந்த சயனத்தில் பள்ளியெழுந்து வாராய் திருமாலே உன்
அன்பரை யெல்லாம் துன்பத்திலிருந்து
காப்பாய் பெருமாளே

திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா அன்பு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே
ஸ்ரீமந் நாராயணா

சதங்கு படைகளென
எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள்
நாரயாணன் என் தலைவனின் துணையால்
போர்க்களம் வாருங்கள்
வானம் இடிபடவும் பூமி பொடி படவும்
வேல் கொண்டு வாருங்கள் - இனி
வருவது வரட்டும் முடிவினைப் பாரிப்போம்
தேவர்கள் வாருங்கள்
ஸ்ரீமந் நாராயணா ஸ்ரீபதி ஜெகந்நாதா
வருவாய் திருமாலே துணை தருவாய் பெருமாளே

ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா

ஏறத்தாழ கி.பி. 1000 முதல் கி.பி. 1947 வரையிலான காலங்களில் நமது இந்தியா முகலாயர்கள் மற்றும் வெள்ளையரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்ததாலேயே மஹாகவி பாரதியார் தமது "சுதந்திரப் பயிர்" எனும் பாடலில்

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

என்று எழுதினார் போலும்.

முதலில் இந்தியாவின் மீது படையெடுத்த கஜினி முகம்மது பெரும்பாலும் சோமநாதர் ஆலயம் போன்ற இடங்களில் உள்ள செல்வங்களைக் கொள்ளையிட்டுச் சென்றதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார். இவருக்குப் பின்னர் இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்த மொகலாய மன்னர் முகம்மது கோரி இந்தியாவில் தனது ஆட்சியை நிலைநிறுத்தும் எண்ணத்துடன் பலவிதமான அரசியல் சூழ்ச்சிகளைச் செய்து தமது எண்ணத்தை நிறைவேற்றினார். அவர் செய்த மிகப் பெரிய சூழ்ச்சிகளுள் ஒன்று ஆஜ்மீர் அரசனான பிரித்விராஜ் சௌஹான் கன்னோஜ் மன்னன் ஜெயச்சந்திரனின் புதல்வி சம்யுக்தாவைக் கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட பகையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ப்ரித்விராஜனின் மேல் படையெடுத்து முதலில் தோற்றாலும் பின்னர் பெரும்படையுடன் வந்து அவரை வென்று அவரது ராஜ்ஜியத்தினைக் கைப்பற்றியதாகும்.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சியைக் கதையாக உருவாக்கி தமிழ்த் திரையுலக ரசிகர்களுக்கு மாபெரும் ஒரு விருந்தாக எம்.ஜி.ஆர். பிருத்விராஜனாகவும் எம்.என். நம்பியார் முகம்மது கோரியாகவும் பத்மினி சம்யுத்தையாகவும் நடிக்கப் படைத்தது சரஸ்வதி பிக்சர்ஸ் நிறுவனம்.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/rani-samyukta/o-vennila.php

திரைப்படம்: ராணி சம்யுக்தா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1962

ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா

ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா

நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா

ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா

பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை
பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை
மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா

ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்

இந்தியா ஒரு விவசாய நாடு. நம் நாட்டில் விவசாயம் பல்கிப் பெருகப் பெருந்துணை புரிவன நம் நாட்டில் ஓடும் வற்றா ஜீவ நதிகள் ஆகும். விவசாயத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தின் காரணமாக,

"இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணறும் பெரு நாடு
கனியும் கிழ்ங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் நாடு"

எனும் பாரதியின் கூற்றை மெய்ப்பித்துள்ளனர் நம் நாட்டு விவசாயிகள்.

காவிரி தென்பெண்ணை பாலாறு பொருள்
கண்டதோர் வையை பொருனை நதி என
மேவிய ஆறு பல ஓடத் திரு
மேனி செழித்த தமிழ்நாடு

என்று மஹாகவியால் பாடப்பெற்ற தமிழ் நாடும் இந்தியாவில் விவசாயத்தில் சிறந்து விளங்கும் முக்கியப் பகுதியாகும். இவ்வாறிருக்க சில காலமாக விவசாய நிலங்கள் முறைகேடான விதத்தில் ஆக்கிரமிக்கப் பட்டு சட்ட விரோதமாகப் பல கட்டுமானப் பணிகளுக்கும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கும் என மாற்றப்பட்டு வருவது மிகவும் வருந்தத் தக்கது. இதனால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உண்டாவதுடன் நிலத்தடி நீர் குறைந்து தண்ணீர்ப் பஞ்சமும் தலை விரித்தாடும் அபாயமும் உருவாகி வருகிறது.

மேலும் ஆற்று நீர் குறித்த காலத்தில் விவசய நிலங்களுக்குக் கிடைக்காமை, வெள்ளம் முதலிய இயற்கைச் சீற்றங்கள், வியாபாரிகளின் சந்தை ஆக்கிரமிப்பு மற்றும் அரசியல் சூழ்நிலை உட்பட்ட பல காரணங்களால் விவசாயிகள் பலர் தமது கைப்பொருளெல்லாம் இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலையும் நமது நாட்டில் சமீப காலத்தில் உருவானது மிகவும் வேதனை தருகிறது.

இத்தகைய விபரீதங்கள் மேலும் தொடராமல் தடுக்கப் பாடுபடுவது இந்திய மக்கள் ஒவ்வொருவரது கடமையாகும். முறைகேடுகள் நிகழாவண்ணம் தடுக்க ஏற்ற வழிமுறைகளைக் கண்டு செயல்படுத்துதல் அவசியம். இல்லையெனில் இந்த உலகில் மனித இனம் வாழ முடியாத நிலை விரைவில் உருவாகக் கூடும்.

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/pazhani/aarodum-mannil.php

திரைப்படம்: பழனி

இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி. ஸ்ரீநிவாஸ்
ஆண்டு: 1965

ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

மண்ணிலே தங்கம் உண்டு மணியும் வைரம் உண்டு
கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் உண்டு பாசம் உண்டு பசுமை உண்டு
பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு
சேராத செல்வம் இன்று சேராதோ?
தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ?

ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா
பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா
பருவம் வந்த பெண்ணைப் போலே நாணம் என்ன சொல்லம்மா
நாணம் என்ன சொல்லம்மா
அண்ணன் தம்பி நால்வருண்டு என்ன வேணும் கேளம்மா
அறுவடைக் காலம் உன்தன் திருமண நாளம்மா
திருமண நாளம்மா

போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

கைகட்டிச் சேவை செய்து கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய் சொல்லிப் பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள்
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
ஏர் கொண்ட உழவன் இன்றிப் போர் செய்யும் வீரன் ஏது?
போர் செய்யும் வீரன் ஏது?

போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்

பச்சைக் கிளிகள் தோளோடு

இவ்வுலகே ஒரு அதிசயம். நாம் வாழ்வதும், நம் கண் முன்னர் பல விதமான எண்ணிலடங்கா உயிரினங்கள் வேறுபட்ட தோற்றத்துடனும் குண நலன்களுடனும் வாழ்வதும் அதிசயம். சூரியனும் சந்திரனும் அந்தரத்தில் நமது கண்களுக்கும் கருத்துக்கும் புலப்பாடாத பாதைகளில் தினந்தோறும் பவனி வருவதும், வானமெங்கும் தோரணங்கள் கட்டியது போலப் பல கோடி நட்சத்திரங்கள் விதவிதமான அமைப்பிலான குழுக்களாய் விளங்கி ஒளிர்வதும், பல விதமான பயிர்களும் செடி கொடிகளும் பழங்களுடனும் காய்களுடனும் திகழ்வதும் இவை யாவும் நாம் என்றென்றும் கண்டுணர்ந்து களிக்கத்தக்க அதிசயங்களன்றோ?

இவ்வாறு இருக்கையில் நமது புலன்களின் உணர்ச்சிக் குறைபாடுகளை தமக்கு சாதகமாக்கிக் கொண்டு மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கும் மாயாவிகள் செய்யும் கண்கட்டு வித்தைகளை அதிசயமென நம்பி ஏமாறுவது மனிதனின் அறியாமையைக் காட்டுகிறது. உலகெங்கும் இயற்கையாகவே இலவசமாகக் கிடைக்கும் இன்பம் தரும் பலவிதமான வளங்களையும், அன்பைப் பொழியும் உயிர்க் குலத்தையும் உணராமல் பகட்டான வாழ்வுக்காக ஏங்கிப் பணம் தேடுவதொன்றே குறிக்கோளாக வாழ்வது மடமையே.

கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்
ஆற்று நீரோசை அருவி ஒலியினிலும்
நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்
நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன்

- பாரதியார்

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/indian/pacha--kiligal.php

படம்: இந்தியன்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்

பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்

பாடல். : வைரமுத்து

தந்தானானே நானே நானே தந்தானானானே
தந்தானானே நானே நானே தந்தானானானே

பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம் பூச்சிக் கூட்டத்துக்குப் பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் என்னத்துக்கு?

பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் - அடி
பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் - அட
மழையில் கூடச் சாயம் போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம் - பெண்ணே
நரை எழுதும் சுயசரிதம் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்!

பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

தந்தானானே நானே நானே தந்தானானானே
தந்தானானே நானே நானே தந்தானானானே
தந்தானானே நானே நானே தந்தானானானே
தந்தானானே நானே நானே தந்தானானானே

உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னை பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓர் ஆனந்தம் பந்தம் பேரானந்தம் கண்ணே
உன் விழியால் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்

பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த
பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை