ஞாயிறு, 24 ஜனவரி, 2016

ஆனந்த நடமிடும் பாதன்

"நாம் ஒன்று நினக்க்க தெய்வம் ஒன்று நினைக்கிறது" என நாம் பல சந்தர்ப்பங்களில் நாம் எண்ணிய காரியம் நிறைவேறாது போனால் அலுத்துக் கொள்கிறோம். தெய்வம் இல்லை என மேடைகளில் உரத்த குரலில் முழக்கமிடுவோரும் தனிமையில் இத்தகைய சிந்தனையில் ஆழ்வதுண்டு. இத்தகைய சலிப்பு ஏற்படுவது அனவருக்கும் இயல்பான ஒன்றே. இதற்காக நாம் பெரிதாக வருத்தப்பட்டுப் பயனில்லை. பிறந்தவர் எவரும் இறவாமல் வாழ்வது இயலாது எனும் பொது விதி இருந்த போதிலும் மார்க்கண்டேயன் போல் இறவாமல் என்றும் சிரஞ்சீவியாய் நிலைபெற்று வாழும் யோகிகளும் உளர் என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் சமீபத்தில் சில நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. 

திருவண்ணாமலையில் கிரிவலம் வந்துகொண்டிருந்த பக்தர் ஒருவர் வழியில் தொலைவிலுள்ள ஒரு மரத்தடியில் சித்தர் ஒருவர் அமர்ந்திருக்கக் கண்டு தன் கைப்பேசியில் அவரைப் படம் பிடிக்கையில் திடீரென அச்சித்தர் ராக்கெட் வேகத்தில் ஆகாயத்தில் பறந்து சென்றது ஒரு வியக்கத்தக்க சம்பவம். 


ராம் பஹதூர் பம்ஜன் எனும் 15 வயது சிறுவன் ஒருவன் மூன்று ஆண்டுகளாக உணவோ நீரோ உட்கொள்ளாமல் நேபாளத்தில் ஒரு போதி மரத்தடியில் தவம் செய்யும் செய்தி அடுத்த அதிசயம் ஆகும். இச்சிறுவனை மக்கள் புத்தரின் மறு அவதாரம் என நம்புகின்றனர்.


ப்ரஹலாத் ஜானி எனும் 80 வயதுக்கு மேல் ஆன தாத்தா ஒருவர் தன் 12 வயதுக்குப் பின் உணவோ நீரோ அருந்தியதில்லை ஆனால் மருத்துவர் 10 நாட்களாக அவரை பரிசோதித்து அவரது உடல்நிலை மிகவும் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்கின்றனர். 


ராம்பாவ் ஸ்வாமி என்ற பெயர் கொண்ட 63 வயதான மற்றொரு யோகி உணவும் நீரும் இன்றியே உயிர்வாழும் சக்தி பெற்றவர் நெருப்பில் படுத்துப் புரள்கிறார். தினமும் உலக நலன் வேண்டி அக்னி ஹோமம் செய்கையில் நெருப்புக்குள்ளேயே கையை விட்டு நெய்யில் உருட்டிய அன்னத்தை ஆகுதியாக இடுகிறார்.


அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

எனும் திருவள்ளுவர் மொழி அறிவுறுத்துவதாவது தன்னுயிர் போல் மன்னுயிர் கருதி மற்ற அனைத்து உயிர்களுக்கும் நன்மையே செய்பவரே அந்தணர். ராமாயண காவியத்தில் ராமனுக்கு குருவாக அமைந்து திருமணம் நடத்தி வைத்த விஸ்வாமித்திரர் பிறப்பால் ஷத்திரியர். பின் மன்னராயிருக்கையில் வசிஷ்ட முனிவரின் சக்தியைக் கண்டு அவர் போல் தானும் பிரம்மரிஷியாக வேண்டும் எனத் தவம் செய்து உயர்வு பெற்று பிராம்மணரானார் என்பது பிரசித்தம். மேலும் தமிழைப் படைத்த அகத்தியர் அந்தணர். தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் ஒரு அந்தணர். பதினெட்டு சித்தர்களும் அந்தணர்களே. பெரியாரின் உற்ற தோழர் ராஜாஜி ஒரு அந்தணரே. அவர் மஹாத்மா காந்தியைத் தன் சம்பந்தியாக ஏற்றுக் கொண்டார். மஹாகவி பாரதியார் ஒரு அந்தணரே.

இவ்வாறு உலகுக்கும் தமிழுக்கும் உற்ற தொண்டு செய்வோர் பலர் அந்தணராயிருக்கையில் ஒரு சிலர் அரசியல் காரணங்களுக்காக அந்தணர்களை எதிர்த்து துர்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.  தீண்டாமை என்பது தீமையே அது எந்த சாதியினருக்கெதிராக இருப்பினும் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டு சாதி மத வேற்றுமை களைந்து பாரதத் தாயின் புதல்வர்கள் எனும் ஓரே கொள்கையில் நிற்பதே அனைவர்க்கும் நலம் தரும்.

நாம் பொருளாசை, பெண்ணாசை, பதவி ஆசை போன்ற அற்ப ஆசைகளைத் துறந்து தவம் மேற்கொண்டோமாயின் நாமும் மேற்கண்ட யோகியர் போல சக்திபெற்று இறவா வாழ்வு வாழ்தல் சாத்தியமே. 

அத்தகைய ஞான மார்க்கத்தில் செல்ல நம் எல்லோருக்கும் தில்லையில் நடனமாடும் சிதம்பர நாதன் அருள் புரிவானாக.


திரைப்படம்: நந்தனார்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேஸ்வரராவ்
ஆண்டு: 1942
ராகம்: கேதார கௌளளை, தாளம்: ஆதி

ஆனந்த நடமிடும் பாதன்
 ஆனந்த நடமிடும் பாதன் - பொன்
 அம்பலவாணன் சிதம்பர நாதன்
 ஆனந்த நடமிடும் பாதன் - பொன்
 அம்பலவாணன் சிதம்பர நாதன்
 ஆனந்த நடமிடும் பாதன் 
கானம் தனைத் தொடர்ந்து ஞானம் தரும் பேரின்ப
 கானம் தன்னைத் தொடர்ந்து ஞானம் தரும் பேரின்ப
 கானம் தன்னைத் தொடர்ந்து ஞானம் தரும் பேரின்ப
 மோனம் தழைக்கும் யோக வானம் தனில் மகிழ்ந்து
 மோனம் தழைக்கும் யோக வானம் தனில் மகிழ்ந்து 

ஆனந்த நடமிடும் பாதன் - பொன்
 அம்பலவாணன் சிதம்பர நாதன்
 ஆனந்த நடமிடும் பாதன் 

தத்தை மொழி சிவகாமி மணாளன்
 சத்வ குணன் பதினான்குல காளன்
 தத்தை மொழி சிவகாமி மணாளன்
 சத்வ குணன் பதினான்குல காளன்
 தத்வ மதுப் பொருளான தயாளன்
 சதா நிஜ அன்பர் வணங்கு தாளன்
 தத்வ மதுப் பொருளான தயாளன்
 சதா நிஜ அன்பர் வணங்கு தாளன் 

தத்திரிகிடதிமி ஜணுதஜணுததிம்
 தகதரிகிணதோம் கணகணகணவென
 தத்திரிகிடதிமி ஜணுதஜணுததிம்
 தகதரிகிணதோம் கணகணகணவென
 பக்தர்கள் முனிவர்கள் இமையோர்களும் புகழ் 
 பாடவும் குணசேர் சடைமதியாடவும் 

ஆனந்த நடமிடும் பாதன் - பொன்
 அம்பலவாணன் சிதம்பர நாதன்
 ஆனந்த நடமிடும் பாதன்