செவ்வாய், 30 நவம்பர், 2010

தாமரைப் பூக் கொளத்திலே

நமது சமுதாயத்தில் பொதுவில் ஒரு ஆண் இளம் பருவத்தில் தன் புஜ பலத்திலும் அறிவுத் திறமையிலும் மிகவும் பெருமை கொண்டு தனக்கு நிகர் எவருமில்லையெனும் விதமானதொரு இருமாப்புடனே திரிவான். இந்நிலையில் அவன் ஒரு பெண்ணைக் கண்டு அவள் மேல் காதல் கொண்டு தன் மனதைப் பறிகொடுக்கையில் அந்த இருமாப்பு நிலை சற்றே தளர்ந்து அவளது பெண்மைக்கு அடிமையாகிறான். அவள் இல்லாமல் தனக்கு வாழ்வே இல்லை எனும் எண்ணம் மேலிட ஒரு மயக்க நிலையை எய்துகிறான். இயல்பாகவே தன் உள்ளத்தில் எழும் ஆசைகளை மறைக்காமல் வெளிக்காட்டும் போக்கினால் அந்த ஆணின் நிலையை அவன் காதல் கொண்ட அப்பெண் அறிந்து கொண்டு அவனைத் தன் எண்ணத்திற்கு ஏற்ப நடக்க வைக்கத் தொடங்குகிறாள். இவ்வாறு காதலில் கட்டுண்ட ஆண்மகன் தன் சுதந்திரத்தில் பாதியை இழக்கிறான்.

பின்னர் திருமணம் முடிந்து கணவன் மனைவி எனும் பந்தத்தினால் பிணைக்கப் படுகையில் மீதமுள்ள சுதந்திரத்தையும் சிறிது சிறிதாக இழக்கிறான். ஆரம்பத்திலே அவன் தன் பலத்திலும் அறிவுத் திறனிலும் கொண்ட கர்வம் அவனை விட்டு எங்கோ பறக்க அவன் தன் மனையாள் ஆட்டுவித்த படி பம்பரம் போல ஆடுகிறான். பிறகு பிள்ளைகள் பிறந்து வளர்த்து விட்டால் அவன் ஒரு சிறைக்கைதியைப் போல் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதொன்றே தன் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டு தன்னைப்பற்றிய எண்ணங்களைப் பெரிதும் குறைத்துக் கொண்டு தன் பிள்ளைகளுக்காகவும் அவர்களது எதிர்கால வாழ்வுக்காகவும் தன்னையே தியாகம் செய்கிறான்.

இங்கே அவன் தனது சுதந்திரத்தைத் தானே முன்வந்து இழப்பதில் மகிழ்ச்சி கொள்கிறான். அவனது தியாகத்திற்கு பதிலாக அவன் குடும்பம் எனும் பெரும் செல்வத்தைப் பெற்று அன்பெனும் கடலில் மூழ்கித் திளைக்கும் பேறு பெருகிறான்.

தாமரைப் பூக் கொளத்திலே

திரைப்படம்: முரடன் முத்து
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: டி. ஜி. லிங்கப்பா
டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

ஓஹோஹோஹோ ஒஹோஹோஹோ
ஒஹோஹோ ஓஹோஹோஹோஹோ
ஓஹோஹோஹோ ஒஹோஹோஹோ
ஒஹோஹோ ஓஹோஹோஹோஹோ
ம் ஹ்ம் ம் ஹ்ம் ம் ஹ்ம் ம் ஹ்ம்
ம் ஹ்ம் ஹ்ம் ம் ஹ்ம் ஹ்ம்

தாமரைப் பூக் கொளத்திலே சாயங்காலப் பொழுதிலே
தாமரைப் பூக் கொளத்திலே சாயங்காலப் பொழுதிலே
குளிக்க வந்தேன் தன்னாலே கூட வந்தான் பின்னாலே
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா?
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா?

மல்லிகைப் பூ முகத்திலே மாம்பழத்து உதட்டிலே
மல்லிகைப் பூ முகத்திலே மாம்பழத்து உதட்டிலே
பள்ளம் போட வந்தானே பரிசு ஒண்ணு தந்தானே
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா?
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா?

தூங்கும் போது சிரிக்கிறான் தூக்கத்தையே கெடுக்கிறான்
ஓஹோஹோ ஓஹோ ஓஹோஹோ
தூங்கும் போது சிரிக்கிறான் தூக்கத்தையே கெடுக்கிறான்
ஏங்க விட்டு இளைக்க விட்டான் தன்னாலே இப்போ
இடையைப் பாத்து மறந்து விட்டான் முன்னாலே

யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா?
யாரது மாமா அவன் பேர் சொல்லலாமா?

பருவம் காக்கும் முந்தானே பறக்கும் போது வந்தானே
ஆஹாஹா ஆஹா ஆஹாஹா
பருவம் காக்கும் முந்தானே பறக்கும் போது வந்தானே
கர்வமெல்லாம் விட்டு விட்டு நின்றானே உன்
கைகளுக்குள் பிள்ளையாகிக் கொண்டானே

அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா?
அந்த மச்சானா அவன் ஆசை வச்சானா?

மேடையிட்டுக் கோலமிட்டு மேளதாள விருந்து வைச்சு
மாலையிட்டு தாலி கட்டிக் கொள்வோமா அந்த
மயக்கத்திலே முழுக் கதையும் சொல்வோமா?
பறந்திடலாமா ஒன்றாய்க் கலந்திடலாமா?
பறந்திடலாமா ஒன்றாய்க் கலந்திடலாமா?

தானே தன்னே தந்தானே தானே தன்னே தந்தானே
தானே தன்னே தந்தானே தானே தன்னே தந்தானே
_________________________

பூமாலையில் ஓர் மல்லிகை

மலர் என்றதும் மனமெல்லாம் மணக்க வைப்பது மல்லிகை. அதனாலேயே கவிஞர் கண்ணதாசன் மாதங்களில் அவள் மார்கழி என்று சொல்லிப் பின்னர் மலர்களிலே அவள் மல்லிகை என்றாரோ? மங்கையரின் மனம் கவர்ந்ததும் அதனைச் சூடிய அம்மங்கையரின் மணாளரை மயக்க வல்லதும் மல்லிகை மலரேயன்றோ? மாலையில் மலரும் மல்லிகை மலரைப்பற்றி நளவெண்பா இயற்றிய பண்டைத்தமிழ்ப் புலவர் எழுதிய பாடலொன்று மிகவும் பிரசித்தமானது.

மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லி கணையெறிந்து மெய்கரப்ப முல்லைமலர்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை அந்திப் பொழுது

மல்லிகை மலரில் வண்டு தேனுண்ண, மன்மதனின் கரும்பு வில்லிலிருந்து பாய்ந்த மலர்க்கணைகள் பட்டு மாந்தர் யாவரும் மெய்மறந்திருக்க முல்லை மலராலான மென்மையான மாலையை அணித்து மாலைப்பொழுது ஒரு மங்கையைப் போல் நடந்ததாக மாலைக்காலத்தை வர்ணித்துப் பாடுகையில் மல்லிகை மலரில் வண்டு வந்தமர்ந்து தேனுண்ணும் காட்சி ஒரு வெண்சங்கினை வாயில் வைத்து ஊதுவது போலிருப்பதாக இப்பாடலில் அவர் கற்பனை செய்து பாடுகிறார். இப்பாடலை நளவெண்பா அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சியில் அவையில் வீற்றிருந்த ஒட்டக்கூத்தர் கேட்டுவிட்டு, "சங்கினை ஊதுபவர் அதன் சூத்தைத் தான் தன் வாயில் வைத்து ஊதுவாரேயன்றி அதன் வாய்ப்பகுதியில் வாய் வைத்து ஊதுவதில்லை, ஆனால் வண்டு மல்லிகையில் தேனுண்கையில் மலரின் வாய்ப் பகுதியின் வழியாகவே தேனை சுவைக்கிறது, ஆகவே இப்பாடலில் பொருட்குற்றமுள்ளது, ஏற்றுக்கொள்ள முடியாது" என்று குறை கூறினார்.

இதற்கு மறுமொழியுரைத்த புகழேந்திப் புலவர், "கட்குடியனுக்கு வாயென்றும் சூத்தென்றும் தெரியுமோ? நீர் தான் சொல்லும்" என்று கேட்க ஒட்டக்கூத்தர் வாயடைத்துப் போய் விட்டார். மல்லிகையின் மலரிலுள்ள தேனை அருந்தும் மயக்கத்தில் உள்ள வண்டுக்கு வாயென்றும் சூத்தென்றும் எவ்வாறு தெரியும்? நியாயம் தானே?

மங்கையரின் கூந்தலை அலங்கரிப்பதுடன் ஆலயங்களில் ஆண்டவனை அலங்கரிக்கவும் மல்லிகை மலர் பெரிதும் பயன்
படுகிறது. மல்லிகை மலரின் மணத்தை அது மொட்டு நிலையிலிருக்கையிலேயே சேகரித்து அதனை திரவமாக்கி மல்லிகை சென்ட் தயாரிக்கப் படுகிறது. இதனை ஜாஸ்மின் சென்ட் என்று அறிகிறோம்.

இங்கேயொரு மல்லிகை தன் மனங்கவர்ந்த காதலனை எதிர்கொள்கையில் என்ன சொல்கிறதெனக் கேட்போமா?

பூமாலையில் ஓர் மல்லிகை

திரைப்படம்: ஊட்டி வரை உறவு
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1967

ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ

பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு
நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும்
வேண்டுமா என்றது
பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு
நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும்
வேண்டுமா என்றது

சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்

பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு
நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும்
வேண்டுமா என்றது

மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்
ஆஆ ஆஆ ஆஆஆஆஆ
இளமை அழகின் இயற்கை வடிவம்
இளமை அழகின் இயற்கை வடிவம்
இரவைப் பகலாய் அறியும் பருவம்
இரவைப் பகலாய் அறியும் பருவம்

பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு
நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும்
வேண்டுமா என்றது இன்னும்
வேண்டுமா என்றது
_________________________

ஓடி ஓடி உழைக்கணும்

தெளிவில்லா சிந்தையும், தேரா அறிவும், கொள்கைப் பிடிப்பற்ற குழப்பமான செயல்பாடுகளும் நிறைந்து விளங்குபவர்கள் நம் இந்திய மக்களில் பெரும்பாலோர். இவர்கள் தங்கள் குடும்பதாரில் எவரேனும் நேர்மையாகவும் தனி மனித ஒழுக்க நெறிமுறை தவறாமலும் வாழாவிடில் அவரைக் குடும்பத்திலிருந்தே ஒதுக்கி வைக்கும் பழக்கத்தை முறையாகக் கடைபிடித்த போதிலும் நம் நாட்டினை ஆட்சி செய்யும் பொறுப்பை ஏற்கும் மனிதர்களிடம் அத்தகைய நேர்மையும் தனிமனித ஒழுக்கமும் நிறைந்துள்ளனவா என்பதை ஆராய்ந்தறிவதில் போதிய அக்கரை செலுத்துவதில்லை. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுள் நேர்மையும் கடமையுணர்ச்சியும், தனிமனித ஒழுக்கமும் கொண்டு விளங்குபவர் எவரும் இல்லாவிடில் அவர்களில் எவரையும் தேர்ந்தெடுக்கலாகாது. இதுவே அறிவுள்ள மனிதன் செய்யத்தக்கது. நம் நாட்டில் மக்களை வழிநடத்தும் பொறுப்பிலுள்ள பல பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்ககள் மக்களை இத்தகைய அறிவுபூர்வமான வழியில் செலுத்த முயற்சிப்பதில்லை. அதற்கு மாறாக இவர்கள் இருப்பவரில் யார் குறைவான தீமை செய்யக்கூடியவர் எனத்தேடிப் பிடித்து அவருக்கு வாக்களிக்குமாறு பொது மக்களை வேண்டுகின்றனர். இது சாவதற்கு தூக்குக்கயிறு, கத்தியால் குத்திக்கொள்தல், விஷம் அருந்துதல், உயரத்திலிருந்து விழுதல், தீக்குளித்தல் முதலான வழிகளுள் எது அதிகத் துன்பம் தராததென்று தேடித் தேர்வதற்கொப்பாகும்.

உண்மையே பேசி, ஊருக்கும் நாட்டுக்கும் நன்மையே செய்து, உழைத்து வாழ்பவனே உயர்ந்த மனிதன். அவ்வாறு உழைத்து வாழத் தலைப்படும் உழைப்பாளிகளுக்கு உரிய ஊதியமும் நல்வாழ்வும் கிடைக்க உரிய வழிமுறைகளை மேற்கொள்வோரே தகுந்த ஆட்சியாளர் ஆவர். அவ்வாறன்றி, மருத்துவக் கல்வியையும் மருத்துவமனைகளையும் கையூட்டுப் பெற்றுக்கொண்டு தனியாருக்கு தாரைவார்த்து விட்டு நாளுக்கு நாள் மருத்துவச் சிகிச்சைக்கு செலவு செய்யவேண்டிய தொகை ஆயிரங்கள், லட்சங்கள் என உயரும் நிலையை உருவாக்கி விட்டு, ஏழைகளுக்கு இன்சூரன்ஸ் வசதிகளை அரசு இலவசமாகச் செய்து தருகிறது என்று சப்பைக் கட்டு கட்டுவதென்பது. சமையலறையிலிருக்கும் சர்க்கரை அனைத்தையும் திருடி விற்று விட்டு, சர்க்கரை என்று காகிதத்தில் எழுதி நக்கச் சொல்வதற்கொப்பாகும்.

நம் நாட்டு மக்கள் என்று தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் அறிவுபூர்வமாக செயல்படப் போகின்றனரோ அன்று தான் நம் நாடும் உலகமும் தற்போது சென்று கொண்டிருக்கும் பேரழிவுப் பாதையிலிருந்து விலகி முன்னேற்றம் காணலாகும்.

ஓடி ஓடி உழைக்கணும்

திரைப்படம்: நல்ல நேரம்
இயற்றியவர்: வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1972

1234 அப் அப்

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் ஓஹோஓஓ

வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு
வயத்துக்காக மனுசன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு நான்
அன்போடு சொல்லுறதைக் கேட்டு நீ அத்தனை திறமையும் காட்டு
இந்த அம்மாவைப் பாரு ஐயாவைக் கேளு
ஆளுக்கொண்ணு கொடுப்பாங்க

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் …ஓ..ஓ..ஓ…

சோம்பேறியாக இருந்து விட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி
சுருசுருப்பில்லாம தூங்கிட்டுருந்தா துணியும் இருக்காது தம்பி
சோம்பேறியாக இருந்து விட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி
சுருசுருப்பில்லாம தூங்கிட்டுருந்தா துணியும் இருக்காது தம்பி
இதை அடுத்தவன் சொன்னா கசக்கும்
கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்
இதுக்கு ஆதாரம் கேட்டா ஆயிரம் இருக்கு
அத்தனையும் சொல்லிப் போடு.

ஓடி ஓடி உழைக்கணும்.. ஓ..ஓ..ஓ..

வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் வந்தாகணும் அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும் - நாட்டுக்கு
படிப்பினை தந்தாகணும்.

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் …ஓ..ஓ..ஓ…

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

எல்லா இயற்கை வளங்களும் நிரம்பப் பெற்றது நம் பாரத நாடு. வடக்கே இமய மலையும் மற்ற மூன்று திசைகளிலும் முப்பெரும் கடல்களும் சூழ்ந்து விளங்கும் ஒரு தீபகற்பம் இந்தியா. நமது நாட்டின் இயற்கை வளங்களில் நாடெங்கும் நீண்டு பரவியிருக்கும் மலைப்பகுதிகளும், அவற்றுடன் இணைந்து பரவியிருக்கும் காடுகளும், கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான வற்றாத பல ஜீவ நதிகளுமாகும். இத்தகைய இயற்கை வளங்களின் சிறப்பாலேயே விவசாயத்தில் நமது இந்திய தேசம் முன்னிலை வகிக்கிறது. நம் அனைவரது வாழ்வின் ஜீவாதாரமான உணவுப்பொருட்களை விவசாயத்தின் மூலம் பெறப் பெரிதும் உதவும் நம் நாட்டின் இயற்கை வளங்களை மத்திய மாநில அரசுகளும் மக்களும் இணைந்து செயல்பட்டுப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். நாம் அவ்வாறு இயற்கை வளங்களைப் பாதுகாக்கிறோமா எனக் கேட்டால் கிடைக்கும் பதில் இல்லை என்பதேயாகும்.

மலைப்பகுதியிலுள்ள காடுகளையும் மரங்களையும் அழித்து தேயிலை பயிரிடுவதும், மரங்களை வெட்டியெடுத்துச் சென்று பல விதமான கட்டுமானப் பணிகளுக்கும் மற்றும் எரிபொருளாகவும் பயன்படுத்துவதும், இவற்றுள் பல மலைப்பகுதிகளை அவற்றிலிருக்கும் பாறைகளைக் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்த வெடிவைத்துத் ததகர்த்து அழிப்பதும் விரைவில் காடுகளும் மலைகளும் அழிந்து நம் ஜீவாதாரமே குலைந்து போக வழிவகுக்கும் என்பதை நாம் உணராமல் செயல்படுகிறோம். இத்தகைய அபாயகரமான போக்கினை விடுத்து இயற்கை வளங்களைக் காக்கும் ஆரோக்யமான பாதைக்குத் திரும்புவது நல்லது.

மலைச் சரிவுகள் வலுவிழப்பதால் மலைப் பாதைகளில் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப் படுவதுடன் விபத்துகள் நேர்ந்து உயிர்ச் சேதம் விளையும் ஆபத்தும் உள்ளது. கோடை காலங்களில் நம்மில் பலர் இத்தகைய மலை வாசஸ்தலங்களுக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அத்துடன் மலைகளின் மேல் உள்ள ஊர்கள் பலவற்றில் நம் நாட்டின் மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய வாழ்வு நிலை சிறக்க வேண்டுமெனில் மலைகளும் மலைகளைச் சேர்ந்த வனப்பகுதிகளும் பாதுகாக்கப் பட வேண்டும்.

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

திரைப்படம்: முள்ளும் மலரும்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1978

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோகக் கூந்தலோ?
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ?
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

செந்தாழம்பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்?
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

செந்தாழம்பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வான் உலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி

செந்தாழம்பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்
_________________________

உனது விழியில் எனது பார்வை

தொழில்முறையாகப் பல்வேறு பணிகளின் நிமித்தமாகப் பல ஊர்களுக்குக்குப் பயணம் மேற்கொண்டாலும், நாடு விட்டு நாடு சென்று திரைகடலோடி திரவியம் தேடும் பணியில் ஈடுபட்டாலும் நாம் மேற்கொண்ட பணி நிறைவேறியதும் நம் ஒவ்வொருவரின் மனமும் அடுத்துச் சேர விரும்புவது வீடு எனும் தன் இல்லத்தையே என்பது எல்லோரும் அறிவோம். அது போலவே பாடல்கள் எனும் பண்ணுலகில் பல்வேறு திசைகளில் பயணம் மேற்கொண்டு தத்துவ மழையிலும் இசை வெள்ளத்திலும் நனைந்த போதிலும் மீண்டும் மீண்டும் வந்து சேர்வது காதல் எனும் கான மழை பொழியும் பகுதிக்கே.. காதல் நம் அனைவரின் உயிரிலும் ஒன்றிக் கலந்து விளங்குவதாலேயே வாழ்க்கை எனும் ஓடம் தொடர்ந்து ஓடுகிறது.

கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடிய பின் கருத்தொருமித்து உடல் இரண்டு உள்ளம் ஒன்று எனும் உயரிய நிலையை அடைவது உண்மைக் காதல். அந்நிலையை அடைந்த காதலனுக்குத் தன் காதலி கண்டு ரசிப்பதெல்லாம் தானும் ரசிக்க விருப்பம் ஏற்படுவதும் காதலிக்குத் தன் காதலன் கண்டு ரசிப்பதெல்லாம் தானும் ரசிக்க வேண்டுமெனும் ஆவல் உண்டாவதும் இயல்பு.

உனது விழியில் எனது பார்வை

உனது விழியில் எனது பார்வை
உலகைக் காண்பது உன்
இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது
உனது விழியில் எனது பார்வை
உலகைக் காண்பது உன்
இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது என் கவிதை வாழ்வது

உயிர் கொண்ட‌ ஓவிய‌ம் ஒன்று
துணை வ‌ந்து சேர்ந்த‌தென்று
ம‌ன‌ம் கொண்ட‌ இன்பம் எல்லாம்
க‌ட‌ல் கொண்ட‌ வெள்ள‌மோ?

க‌ண் இமையாது பெண் இவ‌ள் நின்றாள்
கார‌ண‌ம் கூறுவ‌தோ? - உனைக்
காண்ப‌தென்ன‌ சுக‌மோ - உனைக்
காண்ப‌தென்ன‌ சுக‌மோ?

உனது விழியில் எனது பார்வை
உலகைக் காண்பது - உன்
இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது - என் கவிதை வாழ்வது

எனக்கென்று வாழ்வ‌து கொஞ்ச‌ம்
உனக்கென்று வாழும் நெஞ்ச‌ம்
ப‌னிகொண்ட‌ பார்வை எங்கும்
ப‌டிக்காத‌ காவிய‌ம்
எனக்கென்று வாழ்வ‌து கொஞ்ச‌ம்
உனக்கென்று வாழும் நெஞ்ச‌ம்
ப‌னிகொண்ட‌ பார்வை எங்கும்
ப‌டிக்காத‌ காவிய‌ம்

பொன்ம‌ன‌ம் கொண்ட‌ ம‌ன்ன‌வ‌ன் அன்பில்
என்னுயிர் வாழ்கிற‌து - அது
என்றும் வாழும் உற‌வு - அது
என்றும் வாழும் உற‌வு

உனது விழியில் எனது பார்வை
உலகைக் காண்பது - உன்
இதயம் எழுதும் உணர்வில் எந்தன்
கவிதை வாழ்வது ஆஆஆ கவிதை வாழ்வது
_________________________