சனி, 4 ஜூலை, 2015

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

மனிதப் பிறவி கிடைத்தற்கரியது. ஏனெனில் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ ஒரு பாதை வகுக்கிறது மனிதப் பிறவி. அப்பாதை அகக் கண்களுக்கும் புறக்கண்களுக்கும் தெளிவாகத் தெரிந்தும் இந்தப் பாழும் மனித ஜன்மம் ஆசை, பொறாமை, கோபம், துர்ப்பேச்சு எனும் விலக்க வேண்டிய தீமைகளையே தேடிப் பிடித்துத் தேம்பி அலைகிறது. கோடிகள் குவிப்பதிலும், உடலின்பம் துய்ப்பதிலும், பிறரைத் துன்புறுத்தி அதில் அற்ப இன்பம் தேடுவதிலும், வரியார்க்கொன்றும் ஈயாமல் இருக்கும் செல்வத்தைத் தீய வழியில் செலவிட்டுத் தான் 
கெடுவதோடு பிறரையும் கெடுப்பதிலும் தன் நேரத்தையும் சிந்தனையையும் செலவு செய்வோர் நரகமெனும் படுகுழியில் வீழ்ந்து மீண்டும் மீண்டும் பிறந்தும் இறந்தும் மனிதப்பிறவி கிட்டாமல் அறிவற்ற அற்ப ஜந்துக்களாக அவதாரம் செய்து அல்லலுறுகின்றனர்.

இப்பிறவியிலேயே ஆசைகளைத் துறந்து, தன் உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்துதவி தெய்வமாகவே வாழ்வோர் மரணமில்லாத பெருவாழ்வு வாழ்வது நிச்சயம் என்பதை இவ்வுலகில் பல ஞானியர் நிரூபித்துள்ளனர். அத்தகைய நிலைக்கு முக்தி என்று பெயர். எந்த வித ஆசையோ, கோபமோ, சந்தேகமோ இல்லாத தெளிந்த ஞானமே முக்திக்கு வழி. மனிதன் தன் முற்பிறவியில் குரங்காகப் பிறந்தான் என்று முன்னோர்கள் பலர் கூறியுள்ளனர். புகழ்பெற்ற விஞ்ஞானி டார்வின் தனது "Theory of Evolution" எனும் விரிவான ஆராய்ச்சிக் கட்டுரையில் உலகில் உயிர்கள் ஏற்பட்டுப் பரிமாண வளர்ச்சியடைந்த சரித்திரத்தை விரிவாக விளக்கியுள்ளார். அவரும் குரங்குப் பிறவிக்கு அடுத்ததே மனிதப் பிறவி என்று எடுத்துரைக்கிறார். 

குரங்குகளும் சற்றேறக் குறைய மனிதர்களுக்கீடான பகுத்தறிவு கொண்டவை என்பது விஞ்ஞான பூர்வமாக இன்றும் நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்தியாவின் தொன்மையான புராணமான இராமாயண காவியத்தில் இராமன் காணாமற்போன தன் மனைவி சீதை இருக்குமிடத்தைக் கண்டறியவும், சீதையைக் களவாடிச் சென்ற இராவணன் மீது போர் தொடுத்து வெல்லவும் ஒரு குரங்குப் படையைத் துணையாகக் கொண்டதாகப் படிக்கிறோம். அந்தக் குரங்குகளில்ஒருவனே அனுமன். அவனே இலங்கைக்குக் கடல் கடந்து சென்று சீதையைக் கண்டதாகவும், பின் இராமனிடம் திரும்பி வந்து சீதையின் இருப்பிடம் குறித்த தகவலைச் சொன்னதாகவும், மேலும் போரில் இராம இலக்குவர்களுக்குப் பெரும் துணையாக நின்று இராவணனின் சேனைகளை அழித்து வெற்றி ஈட்டித் தந்ததாகவும் எழுதி வைத்துள்ளார் வால்மீகி முனிவர். 

அன்னியனின் சிறையில் அல்லலுற்று அரற்றித் தன் அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து வாடிய நிலையில் அனுமன் வந்து தனக்கு நம்பிக்கையூட்டியமையால் அவன் பிணி, மூப்பு, மரணமின்றி என்றும் சிரஞ்சீவியாய் வாழ சீதை ஆசீரவதித்தாள். 

"எனதன்பு ஹனுமான், எனக்காக நீ ஆற்றிய தொண்டுகளை ஒரு போதும் என்னால் திருப்பிச் செலுத்த இயலாது. நான் என்றும் கடன் பட்டவனாகவே இருப்பேன். உம்முடைய வாழ்க்கை இராமாயணம் உச்சரிக்கப்படும் வரை தொடரட்டும். மேலும் இராமாயணமோ பூமி இருக்கும் வரை தொடர்ந்து உச்சரிக்கப்படும்." என்று பகவான் ஸ்ரீ ராமச்சந்திரர் கூறினார்.

குரங்குகளின் சேட்டைகளும் அன்புடன் தன் இனத்தை அரவணைத்துக் கொண்டு வாழும் இனிமையும் என்றும் கண்டின்புறத் தக்கவையே. அத்தகைய அபூர்வமான குரங்குப் பிறவி எடுத்து அதன் பின்னர் மனிதனாகப் பிறந்தது குறித்து நாம் எவரும் ஆதங்கப் பட வேண்டாம். பெருமையே கொள்ளலாம்.



திரைப்படம்: தூக்கு தூக்கி
இயற்றியவர்: உடுமலை நாராயண கவி
பாடியோர்: பி. லீலா, ஏ.பி. கோமளா, டி.எம். சௌந்தரராஜன், வி.என். சுந்தரம்
ஆண்டு: 1954

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

உருண்டையான உலகின் மீது உயர்ந்தோர் சொன்ன உண்மையீது
உருண்டையான உலகின் மீது உயர்ந்தோர் சொன்ன உண்மையீது
உருண்டையான உலகின் மீது உயர்ந்தோர் சொன்ன உண்மையீது
உருண்டையான உலகின் மீது உயர்ந்தோர் சொன்ன உண்மையீது

உருவ அமைப்பைக் காணும் போது
ஓரறிவீரறிவுயிர் என மாறி மாறி வாலில்லாத குரங்கு 
உருவ அமைப்பைக் காணும் போது
ஓரறிவீரறிவுயிர் என மாறி மாறி வாலில்லாத குரங்கு
ஓரறிவீரறிவுயிர் என மாறி மாறி வாலில்லாத உர்ர்ர்ர்ர்ர் 
ஓரறிவீரறிவுயிர் என மாறி மாறி வாலில்லாத உர்ர்ர்ர்ர்ர்

பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும்
பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும்
பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும்
பிடித்த பிடி விடாமலே சிலர் பேசும் பேச்சாலும் தலையில்
பேனும் ஈறும் தேடித் தேடிப் பிடிப்பதனாலும் தலையில்
பேனும் ஈறும் தேடித் தேடிப் பிடிப்பதனாலும்
நடிப்பினாலும் நடத்தையாலும் நரர்களும் வானரமும் ஓர் குலம்
நடிப்பினாலும் நடத்தையாலும் நரர்களும் வானரமும் ஓர் குலம்

உடுக்கும் உடைகள் படிப்பினாலும் உள்ளபடி பேதமுண்டு 
உண்மையில் வித்தியாசமில்லை 
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
உடுக்கும் உடைகள் படிப்பினாலும் உள்ளபடி பேதமுண்டு 
உண்மையில் வித்தியாசமில்லை 
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

பதநிஸ்ரி குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
பதநிஸ்ரி குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

ஸ்நிஸ்கரிஸ் நிரிஸ் நிதப நிரிஸ் நிதப மபதநிஸ்ரி குரங்கு
ஸ்நிஸ்கரிஸ் நிரிஸ் நிதப நிரிஸ் நிதப மபதநிஸ்ரி குரங்கு

மாமா பாபா தபம பாபா தாதா நிதப தாதாநீநீ ஸ்நித பதநி மனித குரங்கு
மாமா பாபா தபம பாபா தாதா நிதப தாதாநீநீ ஸ்நித பதநி மனித குரங்கு

பமதபநிதபம ஸரிகம பதநிஸ்ரி கரிஸ்நிரிஸ் நிதப கரிஸ்நிதபமப
பமதபநிதபம ஸரிகம பதநிஸ்ரி கரிஸ்நிரிஸ் நிதப கரிஸ்நிதபமப

நிதமபமதநிஸ்கரி நிரிஸ்நிதம மதபம கமபதநிதமப
நிதமபமதநிஸ்கரி நிரிஸ்நிதம மதபம கமபதநிதமப

பபபபபதா தததததநி நிநிநிததாநிரீஸ்ஸ்தபா
பபபபபதா தததததநி நிநிநிததாநிரீஸ்ஸ்தபா

ரிகரிஸ்நிதப ரிகரிஸ்நிதப
ஸ்ரிஸ்நிதபம ஸ்ரிஸ்நிதபம
ரிகரிஸபமக ரிகரிஸபமக

தபம கமப தபம கமப
நிதப மபத நிதப மபத
ஸ்நிதபதநி ஸ்நிதபதநி
நிஸ் நிஸ் ஸ்நி ஸ்நி பதா பதா மபா மபா

மாமா குரங்கு மாமா குரங்கு
பாபா குரங்கு பாபா குரங்கு
தாத்தா குரங்கு தாத்தா குரங்கு
 
நீதான் குரங்கு நீதான் குரங்கு
நீ குரங்கு நீ குரங்கு நீ குரங்கு நீ குரங்கு
குரங்கு குரங்கு குரங்கு குரங்கு
குரங்கு குரங்கு குரங்கு குரங்கு
குரங்கு குரங்கு குரங்கு குரங்கு

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும் 
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் 
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் கொம்பேறித் தாவும் 
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் 

இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு

கவிஞர்களுக்கு வாக்குப் பலிதமுண்டு என்பது ஆன்றோர்கள் கண்டுணர்ந்த உண்மை. நம்புவதும் நம்பாதிருப்பதும் அவரவர் விருப்பம் ஏனெனில் பொய்க்கு ஆயிரம் சாட்சிகள் வருவர். உண்மைக்கு சாட்சி சொல்ல யாரும் இன்று வருவதில்லை. அத்துணை மதிப்பு உண்மைக்கு மஹாத்மா காந்தி பிறந்த நாட்டில்!

காளமேகப் புலவர் என்றால் தமிழறிஞர்கள் யாவரும் அறிவர். திருமலைராயன் பட்டினம் எனும் நாட்டை அவர் சரமகவி அல்லது வசைகவி பாடி மண்மாரிப் பொழிந்து அழியச் செய்தார் என்பது காளமேகப் புலவர் வரலாற்றில் காணும் குறிப்பு.

செய்யாத செய்த திருமலைராயன்வரையில் 
அய்யா வரனே அரைநொடியில் - வெய்யதழற் 
கண்மாரி யான்மதனைக் கட்டழித்தாற் போற் தீயோர் 
மண்மாரி யாலழிய வாட்டு

என்பதே அச்சரமகவி.

"வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர் சயங்கொண்டான் விருத்தமென்னும்
ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா அந்தாதிக் கொட்டக் கூத்தன் 
கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள் வசைபாடக் காள மேகம் 
பண்பாகப் பகர்சந்தம் படிக்காச லாலொருவர் பகரொ ணாதே." 

- பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

மரணத்தின் விளிம்பில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஜீவனையும் காக்கவல்ல பாடல்களைப் புலவர்கள் பாடியுள்ளமைக்கு வரலாற்றுச் சான்றுகள் உள. இத்தகைய நாவன்மை சங்ககாலப் புலவர்களை மட்டுமின்றி தற்காலப் புலவர்களிடத்தும் உண்டு என்பதை நம்மில் பலர் அல்லது சிலர் அறிந்திருக்கக் கூடும். குறிப்பிட்டுச் சொல்லுவது தற்காலத்தில் கடினம் ஏனெனில் இயந்திரகதியில் உலகம் இயங்குகையில் யாருக்கும் நிற்கவோ, நினைக்கவோ நினைத்ததை விரிவாக எடுத்துச் சொல்லவோ போதிய நேரம் கிட்டுவதில்லை. அது மட்டுமின்றி அவ்வாறு யரேனும் எழுதிவைத்தாலும் அதைப் படிப்போர் வெகுசிலரே. மனிதர்கள் பணம் சம்பாதிப்பதிலும் அடுத்த வேளைப் பசிக்கு உணவு தேடுவதிலுமே பெரும்பான்மையான நேரத்தை செலவிட வேண்டிய நிர்ப்பந்தம்.

புரட்சி நடிகராயிருந்து புரட்சித் தலைவராக உயர்ந்த மக்கள் திலகம், எம்.ஜி.ஆர். என்று தமிழக மக்களால் மட்டுமின்றி உலகிலுள்ளோரில் பெரும்பாலோரால் அறியப்பட்ட எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் 1984ஆம் ஆண்டு சிறுநீரகக் கோளாறினால் அவதியுற்று சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் திவிர சிகிச்சை பெற்றுவந்தார். செய்திகேட்டுத் தமிழக மக்கள் அனைவரும் மாளாத் துயரில் ஆழ்ந்தனர். தங்களது பிரியமான தலைவன் நலம் பெற்று எழுந்து வரவேண்டும் என்று அனைவரும் ஒருமனத்துடன் சாதி, மத பேதம் ஏதுமின்றிப் பிரார்த்தனை செய்தனர். அவர்களது ஒருமித்த குரலாக ஒரு பாட்டு தொடர்ந்து ஒலித்தது. அனைத்து 
ஆட்டோரிக்க்ஷாக்களிலும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுத் தொடர்ந்து இசைக்கப்பட்டது அப்பாட்டு. அதனை எழுதியவர் கவிஞர் வாலி. பாடல் இடம் பெற்ற திரைப்படம் 1968ஆம் ஆண்டு வெளிவந்த எம்.ஜி.ஆர். நடித்த ஒளிவிளக்கு. 

கவிஞர் வாலியின் பாடல்கள் பொதுவில் கருத்தாழம் மிக்கவை. அதிலும் இப்பாடல் கேட்போர் உள்ளத்தை உருக வைக்கும் வல்லமை கொண்ட வரிகளும் பொருளும் நிறைநததாகும். தமிழக மக்களின் குரல் அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களுக்குக் கேட்டது. அவர் தாமதமின்றி உடனடியாக ஏற்பாடு செய்த சகல வசதிகளும் பொருந்திய மருத்துவமனையாகவே மாற்றியமைக்கப்பட்ட ஆகாய விமானமொன்றில் எம்.ஜி.ஆர். அமெரிக்காவின் ப்ரூக்லின் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். எம்.ஜி.ஆர். அவர்களது அண்ணன் எம்.ஜி. சக்கரபாணியின் மகள் லீலாவதி தனது ஒரு சிறுநீரகத்தை தானமாகக் கொடுக்க சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டு நாடு திரும்பினார் எம்.ஜி.ஆர். மருத்துவமனையிலிருந்து கொண்டே தேர்தலையும் சந்தித்து மாபெரும் வெற்றி பெற்றார்.


MGR Vallalin Varalaru- Promo 4min

MGR Hospital video

இந்தப் பாடல் திரைப்படத்தில் எந்தச் சூழ்நிலைக்காக எழுதப் பட்டுப் படமாக்கப் பட்டதோ அதே சூழ்நிலையில் எம்.ஜி.ஆர். அவர்களின் நிஜ வாழ்விலும் பாடப்பட்டது. திரைப்படத்தில் கதாநாயகனின் உயிரை மீட்ட அதே பாட்டு எம்.ஜி.ஆர். அவர்களின் உயிரையும் மீட்டது.

தமிழக மக்களின் இதயக்கனியான எம்.ஜி.ஆர். அவர்களது உயிரை எமனிடமிருந்து மீட்டு வந்த அந்த உயிர்ப் பாடல்இன்றைய பாடலாக ஒலிக்கிறது.



திரைப்படம்: ஒளிவிளக்கு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1968

இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியின் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு
நம்பிக்கையின் ஒளிவிளக்கு

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா!

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன்

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமதில் உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை
உள்ளமதில் உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்?

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன்

மேகங்கள் கண்கலங்கும் மின்னல் வந்து துடிதுடிக்கும்
வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்?
உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்
மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு!
இறைவா நீ ஆணையிடு! ஆணையிடு!
இறைவா! இறைவா! இறைவா!

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?

உலகில் நாம் ஒவ்வொருவரும் வாழ விரும்புவதற்கு ஓரே காரணம் உறவுகள். தாய், தந்தை, சித்தப்பா, சித்தி, மாமன், அத்தை, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை முதலான உறவுகளுடன் ஒருவரின் சிறுவயதில் துவங்கும் வாழ்க்கை அவ்வுறவுகளுடனும் அவ்வுறவுகளின் குழந்தைகளுடனும் வளர்கிறது. இடையில் ஏதேனும் ஒரு சமயம் ஒருவருக்குத் திருமணம் நடக்கையில் கணவன், மனைவி உறவு ஒரு புது இன்ப உறவாக வருகிறது. 

சுகமான அந்த இல்லற இன்பம் பிள்ளைகள் பிறந்ததும் சொர்க்கலோகமாக மாறுகிறது. அதுவரை தனக்காகவும் தன் வாழ்க்கைத் துணைவருக்காகவும் வாழ்ந்த வாழ்க்கை முற்றிலும் பிள்ளைகளுக்காக என மலர்கையில் அந்த இன்பம் பன்மடங்காகப் பெருகிக் குதூகலத்தில் உள்ளமும் உயிரும் அனைத்து உணர்வுகளும் திளைக்கின்றன.

இடையில் தாய், தந்தை மற்றும் பிற மூத்த உறவினர்கள் ஒவ்வொருவராக உயிர் நீத்து இவ்வுலகை விட்டுப் போகும் படலம் தொடங்கித் தொடர்கையில் வாழ்க்கையின் நிலையாமை ஓரளவு புரிகிறது. 

பின்னர் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதும் அவர்கள் இல்லற வாழ்வை அனுபவிப்பதைக் கண்டு மகிழ்வதுமாகத் தொடரும் வாழ்க்கை பேரன், பேத்தி பாக்கியம் கிடைத்ததும் ஒரு உச்ச கட்டத்தைத் தொடுகிறது. 

உச்ச கட்டத்தின் அடுத்த பகுதி வீழ்ச்சியேயன்றோ? அவ்வியற்கை நியதிப்படி ஒருவரின் வாழ்க்கைத் துணை இந்த உலகை விட்டுப் பிரிகையில் அத்துயர் அதுவரை அனுபவித்த துயர்கள் அனைத்தையும் மிஞ்சுமளவு பெருந்துயராகத் தென்படுகிறது. வாழ்க்கைத் துணையின் மறைவுக்குப் பின்னர் ஒருவரது நினைவு முழுதும் அதன் பிறகு அத்துணையுடன் வாழ்ந்த நாட்களையும் நிகழ்ச்சிகளிலும் எண்ணிப்பார்த்து மகிழ்ந்தும் சோகத்தில் மூழ்கியும் இருக்கும் நிலையிலேயே இறப்பு வரை கழிகிறது. வாழ்வின் பெரும்பகுதியில் தன் செயல்களுக்கு ஊக்கமளித்து உடன் இருந்து இன்ப துன்பங்களில் பங்குகொண்டு வாழ்விற்கு ஒரு அர்த்தத்தைத் தந்த உன்னத 
உறவல்லவா? அவ்வுறவின் பிரிவு ஒருவரை நிலைகுலையச் செய்து விடுகிறது. இவ்வுண்மை எனது மூத்தோர் படும் அனுபவங்களைக் கேட்டுணர்ந்து சொல்கிறேன். 

அத்தகைய பிரிவுத் துயரைப் பேரன் பேத்திகள் ஓரளவு குறைக்கின்றன என்பதால் வாழ்வும் ஓடுகிறது. பிரிவுத் துயர் என்பது மூத்த வயதினரை மட்டுமின்றி இளம் காதலர்களையும் பல சந்தர்ப்பங்களில் படுத்துகின்றது. காதல் வயப்பட்டஒரு இளம்பெண்ணின் அத்தகைய பிரிவுத் துயரை வெளிப்படுத்தும் ஒரு இனிய பாடல் இதோ:


திரைப்படம்: நீங்காத நினைவு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி.மஹாதேவன்
பாடியவர்: பி.சுசீலா

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா?
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா? ஆஆஆ
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா ஆ ஆ

கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்
காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே சிரிக்கும்
கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்
காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே சிரிக்கும்
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
இன்பமே வாழ்விலே தந்திடும்

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா?
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா? ஆ ஆ

பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீ இல்லாத உலகத்திலே சிங்காரமில்லை
பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீ இல்லாத உலகத்திலே சிங்காரமில்லை
வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை
வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை
வருவதே நிம்மதி இல்லையே

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா?
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா? ஆஆஆஆ ஆ

அன்னையின் அருளே வா வா வா!

"நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் 
வானின் றமையா தொழுக்கு"

உலகில் உயிர்கள் வாழ நீர் அடிப்படைத் தேவையாகும். உயிர்கள் வாழ்வதாலேயே பூமியை உலகம் என்கிறோம். உயிர்கள் அழிந்து பட்டால் அதுவும் ஏதேனும் ஒரு வெற்றுக் கிரகமாக ஆகிவிடும். அத்தகைய அபாயத்தையே நோக்கி மனிதகுலம் அறிந்தே முன்னேறுகிறது. இங்கே கற்றவரும் கல்வியறிவில்லாத மூடர்களும் ஓரே மன நிலையில் செயல்படுகின்றனர். காரணம் சுயநலம். 

எப்பாடு பட்டாகிலும் ஒரு வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும். கேளிக்கைகள் பல வேண்டும். மாலை நேரமானால் மனம் மயங்கிக் களியாட்டம் போட மது வேண்டும். தான் மட்டும் நிறையத் தங்க நகைகள் அணிய வேண்டும். நிறைய சம்பாதிக்க வேண்டும். காரில் பயணிக்க வேண்டும். ஆகாய விமானத்தில் உலகம் முழுதும் சுற்ற வேண்டும். மூன்று வேளைக்கு நான்கு வேளை வயிறாற வகை வகையாய் உண்ண வேண்டும். விதவிதமாக உயர் ரக ஆடைகள் அணிந்து மகிழ வேண்டும். மிக உயர்ந்த பதவிகளில் அமர்ந்திருக்க வேண்டும். பிறர் தம் முன்னர் கை கட்டி வாய் பொத்தி நின்று மரியாதை செலுத்த வேண்டும். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ வேண்டும். உலகிலேயே முதல் செல்வந்தனாகத் திகழ வேண்டும் என்பன போன்ற நப்பாசையின் காரணமாக மனிதன் பித்தம் பிடித்தவனைப் போல் செயல்பட்டு இந்த பூமியின் இயற்கை வளங்களை வாரியிறைத்து விற்றுப் பணம் எனும் வெற்றுக் காகிதத்தை பதிலுக்குப் பெற்று அடுக்கும் விபரீத விளையாட்டில் இறங்கி விட்டான்.

ஆதி காலம் முதல் இந்தக் கணம் வரையிலும் நிகழ்ந்த மானிட சரித்திரத்தைக் கூர்ந்து கவனித்தோமெனில் நாம் நம் அறியாமையை நன்கு உணரலாம். எத்துணை கோடி பணமிருந்தாலும் அதில் கோடியில் ஒரு பங்கினையும் நாம் முழுமையாக அனுபவிப்பதற்கு முன்னரே உயிர் துறந்து காற்றோடு காற்றாய் மண்ணோடு மண்ணாய் இருந்த இடம் தெரியாமல் அழிந்து மறைந்து போகிறோம். மீதமிருக்கும் அற்பப் பணம் நம் மக்களையும் அவர்கள் பெறும் சந்ததியினரையும் தீய வழியில் தள்ளுகிறது. அதனால் நம் சந்ததியினர் பாவங்கள் பல செய்து, அதனால் பகை மூண்டு மாண்டு போகின்றனர். நம் சந்ததியே பூண்டோடு அழிந்து போகின்றது. இதற்குச் சான்று சரித்திர ஏடுகளில் உள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க எண்ணிறந்த மன்னர்களும், செல்வந்தர்களும் தொன்று தொட்டு இந்த உலகின் பல நாடுகளில் வாழ்ந்ததற்கான சான்றுகளை நாம் வரலாற்று நூல்களில் படிக்கிறோம். 

அத்தகையோரின் வாரிசுகள் எத்துணை பேர் இன்று நம்மிடையே உயிரோடு வாழ்கின்றனர் என்று நாம் எண்ணிப் பார்த்தோமானால் மிகவும் சொற்பமானோரின் வாரிசுகளே உளர் என்பதை நாம் அறியலாகும். அத்துடன் அந்த வாரிசுகள் மிகவும் சாதாரண மனிதர்களாகவும், பல சந்தர்ப்பங்களில் மிகவும் ஏழைகளாகவும் அடையாளமே தெரிந்து கொள்ள முடியாத நிலையில் திகழ்பவர்களாகவும் இருக்கக் காண்கிறோம். 

நான் ஒரு சுயநலவாதியாக வாழ்ந்து மடிந்தால் அதன் பிறகு என்னைப்பற்றி என் மனைவி மக்களுமே எண்ணிப் பார்க்க விரும்ப மாட்டார்கள். இவ்வுலகம் உய்யவும் உலக மக்கள் துன்பங்கள் நீங்கி இன்புற்று வாழவும் நான் எதுவுமே செய்யாது மடிந்தேனாகில் இவ்வுலகம் என்னைப் பற்றி ஒரு நாளும் எண்ணாது. ஆனால் பயனுள்ள ஏதேனும் ஒருசெயலை நான் செய்து அதனால் இவ்வுலகமும் வருங்கால சந்ததியினரும் பயனடைவார்களே ஆயின் நான் இறந்த பின்னரும் என் பெயர் பல காலம் விளங்கும். அத்தகைய பயனுள்ள வாழ்க்கை வாழப் பண பலமோ சிறப்பான சமூக அந்தஸ்தோ தேவை என்பதில்லை. சாதாரண மனிதன் ஒவ்வொருவரும் இவ்வுலக 
நலன் கருதி அதற்காக சிறிதளவேனும் சேவை செய்ய இயலும். விளை நிலங்களையும் மலைவளங்களையும் பல பன்னாட்டு நிறுவனங்களும் பண முதலைகளும் தங்கள் சுயநலத்துக்காக அழித்து அவற்றில் விளையும் மரங்களையும் பயிர்களையும் அழித்து அவ்விடங்களில் தொழிற்சாலைகளுக்காகவும் இருப்பிடங்களுக்காகவும் கல், மணல், சிமென்டு, இரும்பு என இவ்வாறான பொருட்களைக் கொண்டு கட்டிடங்கள் கட்டுவதையும், இரும்பு, அலுமினியம், நிலக்கரி, சந்தன மரங்கள் போன்ற அரிய மரங்கள் முதலியவற்றுக்காக வன வளங்களை அழிப்பதையும் நிறுத்தப் போராடுவது. நம்மாலியன்ற அளவு மரங்களை நட்டு வளர்ப்பதுவும். காய் கறிகள் முதலானவற்றை நம் வீடுகளிலும் இதர இடங்களிலும் வளர்த்தலும் நாமெல்லோரும் பல குழுமங்களாக சேர்ந்து செய்யலாம். 

உயிர் வாழ் இன்றியமையாத தண்ணீரைத் தொடர்ந்து தருவதாலேயே நதிகளை மக்கள் தாயாக வழிபடுகின்றனர். தமிழர்களின் நதிகளுள் தலையாயது காவிரி நதி. ஆடி மாதம் மழை பெய்ய, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகையில் பல விழாக்கள் கொண்டாடப் படுகின்றன. அவற்றுள் காவிரியைப் போற்றி வணக்கும் விழாவே "ஆடிப் பெருக்கு".


திரைப்படம்: ஆடிப் பெருக்கு
இயற்றியவர்: கொத்தமங்கலம் சுப்பு
இசை: ஏ.எம். ராஜா
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1962

அன்னையின் அருளே வா வா வா! 
அன்னையின் அருளே வா வா வா! 
ஆடிப் பெருக்கே வா வா வா! 
அன்னையின் அருளே வா வா வா! 

பொன்னிப் புனலே வா வா வா! 
பொங்கும் பாலே வா வா வா! 

அன்னையின் அருளே வா வா வா! 

குடகில் ஊற்றுக் கண்ணாகி 
குலத்தைக் காக்கும் பெண்ணாகி 
குடகில் ஊற்றுக் கண்ணாகி 
குலத்தைக் காக்கும் பெண்ணாகி 
கண்ணன் பாடி அணை தாண்டி 
கார்முகில் வண்ணனை வலம் வந்து 

அன்னையின் அருளே வா வா வா! 

திருவாய் மொழியாம் நாலாயிரமும் 
தேனாய்ப் பெருகும் தமிழே வா 
திருவாய் மொழியாம் நாலாயிரமும் 
தேனாய்ப் பெருகும் தமிழே வா 
திருமால் தனக்கே மாலையாகி 
திருவரங்கம் தனை வலம் வரும் தாயே! 

அன்னையின் அருளே வா வா வா! 

கட்டிக் கரும்பின் சுவையும் நீ 
கம்பன் கவிதை நயமும் நீ 
கட்டிக் கரும்பின் சுவையும் நீ 
கம்பன் கவிதை நயமும் நீ 
முத்துத் தாண்டவர் பாடலிலே 
முழங்கும் பக்திப் பெருக்கும் நீ 

வான் பொய்த்தாலும் தான் பொய்யா 
வற்றாக் கருணை காவேரி 
வான் பொய்த்தாலும் தான் பொய்யா 
வற்றாக் கருணை காவேரி 
வளநாடாக்கும் தாயே நீ 
வாழிய வாழிய பல்லாண்டு!