செவ்வாய், 26 ஜூலை, 2011

அப்பன் வீட்டு சொத்தைப் போல

6 ஏப்ரல் 2011

சொல்லுவது யார்க்கும் எளிது அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

எனும் குறள் வழியே தன் வாழ்நாள் உள்ளளவும் உண்மை ஒன்றையே பேசி என்றும் தான் பிறருக்கும் கூறும் அறிவுரைகள் யாவற்றையும் முதற்கண் தான் கடைபிடித்து தன் வாழ்க்கையே பிறரது வாழ்க்கைக்கு நல்லதொரு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டியவர் அண்ணல் காந்தியடிகள். சுமார் எண்ணூறு ஆண்டுகள் முகலாயர்கள் முகலாயர்களது ஆட்சியின் கீழும் அதன் பின்னர் சுமார் இருநூறு ஆண்டுகள் ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலும் இருந்த நம் நாட்டை அரும்பாடு பட்டுத் தம் இன்னுயிரையும் தியாகம் செய்து பல தன்னலமற்ற தேசபக்தர்கள் அண்ணல் காந்தியின் தலைமையில் மெய்வருத்தம் பாராது பசி நோக்காது கண் துஞ்சாது பாடுபட்டு விடுதலை பெறச் செய்த பின்னர் ஆட்சியை ஏற்று நடத்திவரும் இந்திய அரசியல்வாதிகள் ஆரும்பாடு பட்டு ஆங்கிலேய ஆதிக்கத்தினின்றும் விடுதலை பெற்ற நமது நாட்டை வெறும் அறுபது ஆண்டுகளுக்குள்ளாகவே அமெரிக்கர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு விற்று மீண்டும் இந்தியாவை அடிமை நாடாக ஆக்கியுள்ளனர் என்றால் அது மிகையாகாது.

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

என்று கேள்வி எழுப்பிய மஹாகவி பாரதியார் அக்கேள்விக்கும் ஆம் எனும் பதில் கிடைத்ததினாலேயே இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறும் நாள் வரை உயிருடன் இல்லாமல் உயிர்நீத்தாரோ?

இத்தகைய இழிநிலைக்குக் காரணம் தேர்தல்கள் வருகையில் வாக்குறுதிகளை வாரி வழங்கி வெற்றி பெற்ற உடன் வழங்கிய வாக்குறுதிகளைக் குப்பையில் போட்டுத் தம் சுயநலம் பேணும் அரசியல்வாதிகளே ஆவர்.

"படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்" என்று ஒரு எடக்கான பழமொழி உண்டு. தான் பிறருக்குக் கூறும் அறிவுரைகளைத் தானே கடைபிடியாத போலி வாழ்க்கை வாழும் புல்லர்கள் குறித்தே இப்பழமொழி அன்று முதல் இன்று வரையிலும் வழங்கி வருகிறது.

இதற்கு அடையாளமாவது தான் ஒரு தன்மானத் தமிழர் என்றும், நெஞ்சுக்கு நீதியை நிலைநிறுத்தியவர் என்றும் தமிழ்மொழியை உலக அளவில் தூக்கி நிறுத்தியவர் எனவும் பெருமை பீற்றிக் கொள்ளும் ஒருவர் திருக்குறளுக்கு எழுதி வைத்த விளக்கமும், அவர் வாழ்ந்த வாழ்க்கையும், நாட்டை ஆண்ட முறையுமே ஆகும்.

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி

திரு மு.வரதராசனார் உரை

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

திரு மு.கருணாநிதி உரை

உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.

திரு.பரிமேலழகர் உரை

உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகா நிற்குமே எனினும், குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும். (நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய உணவை 'வான்' என்றும், கோலின் ஆய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை என்பதாம்.)

தமிழ்நாட்டிலும் இந்தியாவின் மத்திய அரசிலும் நடைபெறும் ஆட்சியின் அழகு அனைவரும் அறிவர். இந்த நாடு ஜனநாயக நாடு என்று சொல்லப்படுவது உலகின் முதல் பொய்யாகும். ஏனெனில் இங்கே மக்களால் மக்களுக்காக மக்கள் நடத்தும் ஆட்சி நடக்கவில்லை. மக்களைப் பலவழிகளிலும் ஏமாற்றியும் மிரட்டியும் ஆசை காட்டித் தவறான வழிகளில் திசைதிருப்பியும் ஆட்சி பீடங்களில் அமரும் பிரதிநிதிகள் தங்களது குடும்பத்தாருக்காகவும் கூட்டாளிகளுக்காகவும் நடத்தும் கொள்ளை ஒன்றே இன்று நடைபெறுகிறது.

இந்நிலை நீடிக்க இன்னமும் அனுமதித்தால் நாடு ஒட்டுமொத்தமாக அந்நியருக்கு அடிமைப்பட்டு மக்கள் யாவரும் பட்டினிச் சாவை சந்திக்க நேரலாம் எனும் அபாயகரமான நிலை எய்திய இந்நாளில் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வரும் பல் தேசபக்தர்கள் ஒன்று கூடி நம் நாட்டின் சுதந்திரத்தையும் நாட்டு மக்களையும் எவ்வாறாகிலும் காக்க வேண்டும் எனும் நோக்கில் ஒரு புதிய சுதந்திர யுத்தத்தை அண்ணல் காந்தி காட்டிய அஹிம்சை வழியில் துவந்தியுள்ளனர்.

இது குறித்த செய்தியாவது:

நேற்று வரை:

ஊழலுக்கு எதிராக பிரதமர் மன்மோகன் சிங் இம்மாத இறுதிக்குள் நடவடிக்கை டுக்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக 90 வயதான காந்தியவாதிகள் எச்சரித்துள்ளனர்.

மகாத்மா காந்தியுடன் வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்ற 93 வயதான ஷாம்பு தத்தா, முராரிலால் குப்தா (90), குமாரி தேவி (84), கோவிந்த் நாராயண் சேத் (78), கே.பி.சாஹூ (79) ஆகியோர் கடந்த இரண்டு வாரங்களாக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று இவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இது குறித்து ஷாம்பு தத்தா குறிப்பிடுகையில், "முன்பு வெள்ளையனை எதிர்த்து போராடினோம்; இப்போது ஊழல்வாதிகளை எதிர்த்து போராட்டம் நடத்துகிறோம். எம்.பி., மற்றும் எல்.எல்.ஏ.,க்கள் உட்பட யார் தவறு செய்தாலும் தண்டிக்க வழி செய்யும் லோக்பால் கமிஷனை அமைக்க வேண்டும்.

முறைகேடாக சொத்து சேர்த்தவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்த உரிமை உண்டு. இந்த நாட்டுக்காக நாம் எதையும் செய்யவில்லை என்ற எண்ணத்தோடு நாங்கள் தூங்க விரும்பவில்லை. எனவே தான், சாலையில் இறங்கி போராட முடிவு செய்துள்ளோம். இம்மாத இறுதிக்குள் பிரதமர் மன்மோகன் சிங், ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்' என்றார்.

குமாரி தேவி என்ற சுதந்திர போராட்ட வீராங்கனை குறிப்பிடுகையில், "நம் நாட்டில் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் போதிய உணவில்லாமல் வாழும் நிலை உள்ளது. ஆனால், ஒரு தரப்பு மக்கள், ஊழல் மூலம் வளம் கொழித்து வருகின்றனர். சிரமப்பட்டு பெற்ற குழந்தை வளர்ந்த பின், தவறான பாதைக்கு செல்லும் போது பார்த்துக் கொண்டு தாய் சும்மா இருப்பாளா? அதேபோல தான், தற்போது நெறி தவறும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறோம்' என்றார்.

புதுடெல்லியில் இன்று

சமூக ஆர்வலரான அனா ஹசாரே டெல்லியில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கிறார். ஊழலுக்கு எதிராகப் போராடி வருகிற ஹசாரே ஊழலை ஒடுக்கும் லோக்பால் சட்ட மசோதாவை நிறைவேற்றக் கோரி இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பொய்யான வாக்குறிதிகளை அள்ளிவீசி இலவசங்களை அளித்து ஆட்சியைப் பிடிக்கும் யாரும் இனிமேல் சொன்ன வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறி சுயநலம் பேண இயலாத நிலையை நாட்டில் உருவாக்குவது நம் அனைவரது இன்றைய இன்றியமையாத கடமையாகும்.

இன்றைய அரசியல்வாதியின் நடத்தையை விளக்கும் பாடலொன்று இன்றைய பாடலாக மலர்கிறது.

அப்பன் வீட்டு சொத்தைப் போல

திரைப்பட்ம்: தேசிய கீதம்
இயற்றியவர்: பழனி பாரதி
இசை: இளையராஜா
பாடியவர்: புஷ்பவனம் குப்புசாமி

அப்பன் வீட்டு சொத்தைப் போல அனுபவிக்கப் பாக்குறியே
அத்தனைக்கும் பொய்க் கணக்கு எழுதி எழுதிக் காட்டுறியே

அப்பன் வீட்டு சொத்தைப் போல அனுபவிக்கப் பாக்குறியே
அத்தனைக்கும் பொய்க் கணக்கு எழுதி எழுதிக் காட்டுறியே
துப்புக்கெட்ட பொழப்பு இது தப்பு செஞ்சே வாழுறியே
எக்குத் தப்பா கேள்வி கேட்க ஆளில்லேன்னு நெனைக்கிறியே
ரோடு போட ஒதுக்கி வச்சத வீட்டுக்குன்னு பதுக்குறியே
நாட்டு நெலை மறந்து ஒங்க பாட்டுக்குத்தான் அலையுறியே

நாய் படுற பாடு நம்ம நாடு படுது பாரு
ஓட்டுப் போட்டது ஊரு உங்களைத் தூக்கிப் போடுவதாரு?

ஐதர் அலி காலத்துலே போட்ட ரோடு மாறல்லையே
எத்தனையோ கட்டி வந்தும் எங்க கொறை தீரல்லையே
குண்டு குழி ஒண்ணா ரெண்டா கணக்கெடுக்க முடியல்லையே
டெண்டருக்கு விட்டுப்புட்டா கேள்வி கேக்க வழியில்லையே

குத்தங்குறை சொல்ல வந்தா ஏழையத்தான் தான் ஏசுறியே
மத்தபடி மந்திரி வந்தா தாரெடுத்து ஊத்திறியே
தூக்கிப் போடுது ரோடு அதை மாத்திப் போடுவதாரு
கர்ர்ப்பிணி பொண்ணுக பட்ட துன்பக் கணக்கெத் தீக்குது ரோடு

யாரு போட்ட ரோடு நம்ம சர்க்கார் போட்ட ரோடு
யாரு போட்ட ரோடு நம்ம சர்க்கார் போட்ட ரோடு

நகாவலி நாட்டிலே

வசதி படைத்தவர்களெல்லோரும் வரி ஏய்ப்பு செய்து வளமாக வாழ்ந்து வருகையில் அல்லும் பகலும் அயராது உழைத்து அரை வயிற்றுக் கஞ்சிக்கென சிறிதளவு வருவாய் ஈட்டும் அப்பாவி மக்களின் மேல் வரிச்சுமை மேலும் மேலும் அதிகமாகி அல்லலுறும் நிலை இன்று நம் நாட்டில் நிலவுகிறது. பல ஆண்டுகளாக சட்டரீதியான எந்த ஒரு தொழிலையும் செய்யாது, சர்வதேச ஆயுதக் கடத்தல் கும்பலுடனும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பல சந்தர்ப்பங்களில் வெடிகுண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்த தீவிரவாதிகளுடனும் கூட்டுச் சேர்ந்து கோடானு கோடிக் கணக்கில் நம் நாட்டில் பணத்தைச் சேர்த்து அந்நிய நாட்டில் பதுக்கி வைத்திருக்கும் சமூக விரோதி ஒருவன் நேற்றுவரை சுதந்திரமாக யாருடைய கட்டுப்பாட்டிலும் வராமல் திரிந்து வந்தான். இன்று நம் நாட்டில் சொற்ப அளவில் நீதியும் அவ்வப்போது செயல்படும் எனும் சிறு அடையாளமாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் அந்த சமூகவிரோதி மத்திய புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்படுகிறான்.

சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளுக்காக நாட்டு மக்களது வரிப்பணத்தைக் கோடிக்கணக்கில் செலவு செய்து நாட்டின் பல்வேறு நகரங்களில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானங்களில் தற்போது நடைபெறும் உலகக் கோப்பை ஒரு நாள் போட்டித் தொடருக்கென ஏற்பாடு செய்யப்பட்ட இருக்கைகளில் முக்காலே மூணு வீசம் பெரும் பணக்காரர்களுக்குக் கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட நிலையில் இருக்கும் சொற்ப இடங்களுக்கான நுழைவுச் சீட்டுகளைப் பெற வேண்டி கால் கடுக்க வரிசையில் நின்றிருக்கும் பொதுமக்களுக்குப் போலீசாரைக் கொண்டு தடியடிகளே வழங்கப்படுகின்றன. அது மட்டுமின்றி இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டிக்குரிய நுழைவுச் சீட்டுக்கள் ஒவ்வொன்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப் படுகின்றன. இவ்வாறு கள்ளச் சந்தையில் நுழைவுச் சீட்டுகளைப் பெற்று விளையாட்டை வேடிக்கை பார்க்க வரும் பெரிய மனிதர்களுடன் ஒன்று சேர்ந்து இந்திய பாகிஸ்தானியப் பிரதமர்களும் விளையாட்டை வேடிக்கை பார்க்கப் போகின்றனர். என்னே ஜனநாயகம்?

இத்தகைய அநீதி கண்முன்னர் தங்களுக்கு இழைக்கப்பட்டும் நம் நாட்டு மக்களுக்கு அதீதமான தேசப்பற்று. அதன் அடையாளமாக நாட்டின் பல பகுதிகளிலும் இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா வெற்றி பெற வேண்டி ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் படுகின்றன. மஹாத்மாவும் காணாத ஒரு உயர்ந்த தேசபக்தி அல்லவா இது! தாங்கள் அன்றாடம் பாடுபட்டு சம்பாதிக்கும் பணத்தைப் பல விதங்களில் வரிகளை விதித்தும் விலைவாசிகளை உயர்த்தியும் கள்ளப் பண கும்பலுடன் கைகோர்த்து செயல்படும் அரசியல்வாதிகள் தொடர்ந்து கொள்ளையடிப்பதைப் பற்றி அக்கரை கொள்ளாமல் கிரிக்கெட் மோகத்தில் உழல்கின்றனர் இந்தியத் திருநாட்டின் உத்தம புத்திரர்கள்,

இந்தியாவின் நிலப்பரப்பில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டு அதனை முறைகேடாக சீனாவுக்கு விற்றதுடன் தொடர்ந்து இந்தியாவுக்கெதிராகப் பல வழிகளிலும் ஆயுதமேந்திய தீவிரவாதிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானின் பிடியிலிருந்து இந்தியாவை விடுவிப்பதை விட இவர்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெறுவது பெரிதாகப் போய் விட்டது.

இரண்டாண்டுகளுக்கும் மேலாக நாள் தவறாமல் மக்கள் மேல் மின்வெட்டு தொட்ரந்து திணிக்கப்படுகையில், நோய்வாய்ப்பட்ட சமயம் தங்கள் வாழ்நாளில் சேமித்த தொகையனைத்தையும் செலவிட்டுப் பற்றாமையால் அக்கம் பக்கத்திலும் பல்வேறு நண்பர்கள் மூலமாகவும் கடனாகவும் பிச்சையாகவும் சேர்த்த பணத்தைக் கொண்டு சிகிச்சை பெற அரசு மருத்துவ மனைகள் எதுவும் முறையாகப் பராமரிக்கப்படாத நிலையில் தனியார் மருத்துவ மனைகளை நாடி, பெரும் பொருட் செலவில் நோய் தீர வழிதேடிச் செல்லும் மக்களின் மேல் புதிதாக ஒரு வரியை இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்ததாகப் பீற்றிக்கொள்ளும் இந்திய தேசியக் காங்கிரஸ் நடத்தும் மத்திய அரசு நூதனமான முறையில் கண்டறிந்து விதித்தது.

அதாவது காற்றைக் குளிர்விக்கும் சாதனங்கள் (ஏர் கண்டிஷனர்கள்) உபயோகப் படும் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுவோர், சிகிச்சைக்காக செலுத்தும் கட்டணத்தில் 5 சதவீதம் வரியாக அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டுமென்று சொல்லும் இந்தச் சட்டம் சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் வாயிலாக விதிக்கப் பட்டது. காற்றைக் குளிர்விக்கும் சாதனங்கள் இன்றி எந்த ஒரு மருத்துவ மனையிலும் அறுவை சிகிச்சைகள் ஏதும் செய்ய இயலாது எனும் அனைவரும் அறிந்த உண்மையைப் பல அனுபவம் மிக்க மருத்துவர்களும் பொது நல அமைப்புகளும் செய்தி நிறுவனங்களும் தொடர்ந்து எடுத்துச் சொன்ன பின்னரே நம் நாட்டின் நிதியமைச்சருக்கு இந்த சிறு உண்மை விளங்கி அந்த அக்கிரம வரி பின்னர் விலக்கிக் கொள்ளப் பட்டது. இவரெல்லாம் நிதியமைச்சராக இருப்பதை விட எங்காவது வட்டிக்குக் கடன் கொடுத்து வாங்கும் ஒரு சேட்டு கடையில் கணக்கெழுதப் போகலாம்.

தற்சமயம் மத்தியிலும் நம் மாநிலத்திலும் நடைபெறுவது ஆட்சி என்று சொல்வதை விட கருப்புப் பணத்தின் பலத்தாலும் சமுதாய விரோதிகளின் செயல்பாடுகளாலும் மக்களின் கண்களில் மண்ணைத் தூவி அரியணையை அபகரித்துக் கொண்ட கொள்ளைக் கும்பலின் கோரத் தாண்டவம் என்று சொல்வது சாலப் பொருந்தும். இந்த நாடு அடையும் சீர்கேடுகளைக் காண்கையில் ஒரு வரலாற்றுக் கதையில் சொல்லப்பட்ட அரசாங்கத்தில் பெண்கள் அதிகாரம் செலுத்தும் நகாவலி நாட்டை விடவும் மோசமாக இருப்பது போல் தோன்றுகிறது.

நகாவலி நாட்டிலே

திரைப்படம்: குலேபகாவலி
இயற்றியவர்: தஞ்சை ஏ. ராமையா தாஸ்
இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

நகாவலி நாட்டிலே ஏ..ஏ..ஏ..ஏ..ஏ.ஏ.ஏ
பகாவலி ஆட்சியிலே ஏ...ஏ..ஏ..ஏ..ஏ.ஏ.
நியாயமாய் வாழவும் வழியுமில்லே
இது அநியாயம் அநியாயம் அநியாயம்

அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்
அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம் இங்கே
ஆண்களைப் பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

கனிவாகப் பேசும் பெண்கள் கையிலே
கத்தியும் ஈட்டியும் இருக்குது
கணவனைக் கண்டால் மனைவியரெல்லாம்
காளை போலவே மொறைக்குது
கணவனைக் கண்டால் மனைவியரெல்லாம்
காளை போலவே மொறைக்குது இங்கே
ஆண்களைப் பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

தனிமையாக ஒரு வாலிபன் இருந்தால்
தர வேணும் பிரம்மச்சாரி வரி
தாலி கட்டியே குடும்பம் நடத்தினால்
அவனும் தரணும் சம்சார வரி
தனிமையாக ஒரு வாலிபன் இருந்தால்
தர வேணும் பிரம்மச்சாரி வரி
தாலி கட்டியே குடும்பம் நடத்தினால்
அவனும் தரணும் சம்சார வரி இங்கு
தடுக்கி விழுந்த வரி குனிந்து நிமிர்ந்தவரி
இட்டிவரி சட்னி வரி பட்னி வரி இதுபோல்
ஆண்களைப் பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

அர்த்தமே இல்லாத வரியை சுமத்தும்
பகவலி ராணி ஆட்சியிலே
அர்த்தமே இல்லாத வரியை சுமத்தும்
பகவலி ராணி ஆட்சியிலே
ஆதரவில்லாத இல்லாத ஏழை மக்களும்
அடிமையாகினார் சூழ்ச்சியிலே
பொருத்தமே இல்லாத புதுப்புது வரிகளை
போடுவதெல்லாம் ஏதும் நியாயமில்லே
எதுத்துக் கேட்கவும் நாதியில்லே அவங்க
என்ன செய்தாலும் கேள்வியில்லே இங்கே
ஆண்களைப் பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம் இங்கு
ஆண்களைப் பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

வாழப் பிறந்தவரை வாட்டி வதைக்கும் வரி
ஏழை முதுகிலே கொடுக்கும் சாட்டை வரி
ஏழை முதுகிலே கொடுக்கும் சாட்டை வரி
இந்த நாட்டு வரி

சீர்மேவு குருபதம்

ஆதிகாலந்தொட்டே மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வந்த நிலையில் ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒருவர் தலைமை வகித்து அக்கூட்டத்தினர் அனைவரையும் வழிநடத்திச் செல்வது மரபாக இருந்தது. நாகரீகமடையாத நிலையில் தலைவனாயிருக்க ஒருவரது வலிமை ஒன்றே அடிப்படையாக இருந்த நிலை நாகரீகம் வளர வளர மாறி ஒரு தலைவன் வல்லவனாக இருந்தால் மட்டும் போதாது நல்லவனாகவும் அறிவுள்ளவனாகவும் இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆதியில் காடுகளில் மிருகங்களோடு மிருகங்களாக வாழ்ந்த மனிதர்கள் அதன் பின்னர் ஏற்பட்ட அறிவு வளர்ச்சியால் காடுகளில் ஒரு பகுதியை அழித்து நாடுகளை உருவாக்கி சமுதாயங்களாக மிருகங்களிடமிருந்து விலகி வாழத் தலைப்பட்டனர். ஒரு சமுதாயத்தின் தலைவன் அரசனாக அமைக்கப்பெற்று அவனுக்குப் பின்னர் அவனது தலைமுறையினர் பாரம்பரிய முறையில் அரசர்களாக விளங்கும் வகையில் மனித சமுதாயம் வளர்ந்த நிலையில் பல சந்தர்ப்பங்களிலும் வீரத்தில் சிறந்தவரைத் தேர்ந்தெடுக்க வீர விளையாட்டுப் போட்டிகளும் அறிவாளிகளைத் தேர்வு செய்யத் தர்க்கம் முதலிய பல்வித அறிவுப் போட்டிகளும் நடைபெறுவது நடைமுறை ஆனது.

அறிவுப் போட்டிகளில் பங்குபெறுவோரது சமுதாய நோக்கும் தனிமனிதக் கடமைகளும் குறித்த விழிப்புணர்வும் முக்கிய அம்சங்களாகக் கருதப்பட்டன. இத்தகைய அறிவுப் போட்டிகளில் அரச குடும்பத்தினர் மட்டுமின்றி மத, சமூகநல அமைப்புகளில் முனைந்து ஈடுபட்டவர்களும், புலவர்களும் பங்கு பெற்றனர் என்பது பல புராண, இதிகாச சரித்திரக் கதைகள் மற்றும் குறிப்புகளிலிருந்து தெளிவாகிறது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி ஒற்றுமை உணர்வுடன் வாழ்வதும், உண்மையே பேசி, மூத்தோரை மதித்து, சக மனிதர் அனைவரிடமும் விலங்குகள் உட்பட ஏனைய பிற உயிரினங்களிடத்தும் அன்பு செலுத்தி எல்லோருக்கும் நன்மை பயக்கும் விதமான வாழ்வை மேற்கொள்வது ஒவ்வொரு மனிதருக்கும் தலையாய கடமையாக அன்று முதல் இன்று வரையிலும் கருதப்பட்டு வருகிறது.

வரலாற்றில் சொல்லப்பட்ட இத்தகைய அறிவுப்போட்டிகளும் அவற்றின் மூலம் விளங்கும் பலவித செய்திகளும் மக்களால் என்றும் நினைவில் கொள்ளப்பட வேண்டும் எனும் நோக்கத்தில் இத்தகைய அறிவுப் போட்டிகள் பல நாடகங்களிலும் திரைப்படங்களிலும் அமைக்கப்பெற்று அதன் மூலம் அவற்றைக் காணும் ரசிகர்களது அறிவையும் பண்பையும் வளர்க்கப் பயன்பட்டு வருகின்றன.

அத்தகைய அறிவுப் போட்டி ஒன்று புரட்சித் தலைகர் எம்ஜிஆர் அவர்களும் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களும் பங்குபெற்று நடித்த காட்சி ஒன்றில் அவ்விருவரும் தம் கேள்விகளையும் பதில்களையும் இனிய இசையுடன் பாடுவது போன்ற ஒரு பாடல் காட்சியாக சக்கரவர்த்தித் திருமகள் எனும் திரைப்படத்தில் படமாக்கப் பட்டது. என்.எஸ். கிருஷ்ணன் தன் சொந்தக் குரலில் பாட, எம்ஜிஆர் அவர்களுக்கு சீர்காழி கோவிந்த ராஜன் குரல் கொடுக்க மிகவும் கருத்தாழம் மிக்கதாகவும் எத்துணை முறைகள் கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கும் ஆவலைத் தூண்டும் விதத்திலும் இப்பாடல் அமைந்துள்ளது.

சீர்மேவு குருபதம்

திரைப்படம்: சக்கரவர்த்தித் திருமகள்
இயற்றியவர்: கிளௌன் சுந்தரம்
இடை: ஜி. ராமநாதன்
பாடியோர்: என்.எஸ். கிருஷ்ணன், சீர்காழி கோவிந்தராஜன்

சீர்மேவு குருபதம் சிந்தையொடு வாய்க்கினும்
சிரமீது வைத்துப் போற்றி
ஜெகமெலாம் மெச்சச் ஜெயக்கொடி பறக்கவிடும்
தீரப் பிரதாபன் நானே

சங்கத்துப் புலவர் பல தங்கத்தோழா பொற்பதக்கம்
வங்கத்துப் பொன்னாடை பரிசளித்தார்
எனக்கிங்கில்லை இதெனச் சொல்லிக் களித்தார் இந்த
சிங்கத்துக்கு முன்னே ஓடி பங்கப்பட்டு தாரார் நேரர்

ஈரெழுத்துப் பாடி வாரேன் பேரே அதற்கு
ஓரெழுத்துப் பதில் சொல்லிப் பாரேன்

யானையைப் பிடித்து
யானையைப் பிடித்து ஓரு பானைக்குள் அடைத்து வைக்க
ஆத்திரப்படுபவர் போல் அல்லவா உம
தாரம்பக் கவி சொல்லுதே புலவா வீட்டுப்
பூனைக்குட்டி காட்டிலோடி புலியைப் பிடித்துத் தின்னப்
புறப்பட்ட கதை போலே அல்லவா தற்
புகழ்ச்சிப் பாடுகிறாயே புலவா

ஆங்.. அப்புறம் ஓஹோ.. சர்தான்
பூதானம் கன்னிகாதானம் சொர்ணதானம் அன்னதானம்
கோதானம் உண்டு பற்பல தானங்கள் இதற்கு
மேலான தானம் இருந்தால் சொல்லுங்கள்

ஹாய் கேள்விக்குப் பதிலக் கொண்டா டேப்பே
ஒடைச்செறிவேன் ரெண்டா ஒன்னே
ஜெயிச்சுக் காட்டுவேன் முண்டா அப்புறம்
பறக்க விடுவேன் செண்டா
ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி

பதில்.. சொல்றேன்

எத்தனை தானந்தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும்
தானத்தில் சிறந்தது நிதானந்தான்
நிதானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான்

சொல்லிட்டான்! இரு

கோவிலைக் கட்டி வைப்பதெதனாலே? இப்போ
வேலைக்குப் பெருமை உண்டு அதனாலே

ஹஹங் ஹங் சர்தான் ம்

அன்ன சத்திரம் இருப்பதெதனாலே பல
திண்ணை தூங்கிப் பசங்கள் இருப்பதாலே எப்படி? ஹங் ஹங்

பரதேசியாய்த் திரிவதெதனாலெ?
ஹங் அவன் பத்து வீட்டு ஆங் ஆஆங் சரி வேணாம்
அவன் பத்து வீட்டு சோறு ருசி கண்டதாலே

தம்பி இங்கே கவனி

காரிருள் சூழுவது எவ்விடத்திலே? தம்பி
காரிருள் சூழுவது எவ்விடத்திலே?
கற்றறிவில்லாத மூடர் நெஞ்சத்திலே

சொல்லிப் புட்டியே!

புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?
புகையும் நெருப்பும் இல்லாம அது எப்படி எரியும்?
நாஞ்சொல்லட்டுமா? சொல்லு
புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது?
பசித்து வாடும் மக்கள் வயிறு அது

சர்தான் சர்தான் சர்தான்

உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
கத்தி இல்லே கோடாலி இல்லே
ஈட்டி ம்ஹ்ம் ஆங் கடப்பாரை இல்லே
அதுவும் இல்லையா? அப்புறம்.. பயங்கரமான ஆயுதம்
அக்கினி திராவகமோ? அது ஆயுதம் இல்லையே
சரி தெரியமாட்டேங்குதே அட நீயே சொல்லப்பா

உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
நிலைகெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குத் தான் அது ஆஹாஹா!
நிலைகெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்குத் தான் அது

நீங்க நல்லாயிருக்கோணும்

தமிழ்த் திரை வரலாற்றிலும் தமிழக அரசியல் வரலாற்றிலும் என்றும் அழியா இடம்பெற்ற மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் எனும் இயற்பெயர் கொண்ட ஒரு உன்னதமான மனிதர் எம்.ஜி.ஆர். இவர் நடித்த திரைப்படங்கள் யாவும் சமுதாய நோக்குடன் தயாரிக்கப்பட்டு தமிழ்த் திரை ரசிகர்களுக்கு என்றும் இனிய விருந்தாக அமைந்தன என்பதை யாரும் மறுக்க இயலாது. தனது இளம் வயதிலேயே நாடகத்துறையில் புகுந்து அதன் வழியாகத் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர் நாளடைவில் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் வளர்ந்து தமிழ்த் திரையுலக நாயகர்களுள் முதலிடத்தைப் பெற்று, அதன் பின்னர் தன் வாழ்நாள் உள்ளளவும் அந்த முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்ட பெருமைக்குரியவர். தான் ஈட்டிய பொருளில் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியை ஏழை எளிய மக்களின் சமுதாய நலனுக்காகத் தொடர்ந்து செலவிட்டு வந்தவர் எம்.ஜி.ஆர். இவ்வாறு மக்களின் மேல் மிகுந்த அக்கரை கொண்டு விளங்கியமையால் அவருக்கு "மக்கள் திலகம்" எனும் பட்டத்தை வழங்கினார் புகழ்பெற்ற எழுத்தாளர் தமிழ்வாணன்.

வறியார்க்கொன்றீவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரதுடைத்து

எனும் குறளின் வழி நின்று தன் வாழ்நாள் உள்ளளவும் வறுமையில் வாடும் மக்களுக்கு வாரி வழங்கிய கலியுக வள்ளல் எம்.ஜி.ஆர். இவரது கருணை உள்ளம் கண்டு வியந்து திருமுருக கிருபானந்த வாரியார் இவருக்கு இட்ட பெயர் "பொன்மனச் செம்மல்" என்பதாகும்.

1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் 1967ஆம் ஆண்டுவரை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியே ஆட்சியைப் பிடித்து வந்தது. தமிழகத்தில் காங்கிரஸ் தவிரப் பிற கட்சிகள் 1967 வரையிலும் மிகவும் பலவீனமான நிலையிலேயே தொடர்ந்து இருந்து வந்தன. வெற்றி எளிதில் கிடைத்து வந்த மமதையால் காங்கிரசார் மக்கள் நலனில் போதிய அக்கரை செலுத்தத் தவறியதால் விலைவாசி உயர்வு மற்றும் சாலை வசதிகள் போன்ற பொதுப் பணிகள் நடைபெறாமை முதலிய குறைபாடுகள் மலிந்து வந்தன.

அந்த நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்து பின்னர் சுதந்திரா கட்சியைத் தொடங்கி அதன் தலைவராக இருந்த மூதறிஞர் ராஜாஜியின் ஆலோசனையில் இந்திய அரசியலில் முதன்முதலாக திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், ஃபார்வார்டு பிளாக், சுதந்திரா கட்சி ஆகிய எதிர்க் கட்சிகள் ஒன்று திரண்டு கூட்டணியமைத்து 1967ஆம் ஆண்டு தமிழகத்தின் சட்டசபைத் தேர்தலில் பேரறிஞர் அண்ணா அவர்களது தலைமையில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியடைந்தனர். அறிஞர் அண்ணா தமிழக முதலமைச்சராக மிகக்குறுகிய காலமே பதவிவகித்த பின்னர் தொண்டைப் புற்று நோயால் மரணமடைந்தார். அதன் பின்னர் முதலமைச்சர் பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதி கட்சியிலும் ஆட்சியிலும் முறையான கணக்கு வழக்கு வைக்கத் தவறியதால் அவரிடம் கணக்குக் கேட்டார் எம்.ஜி.ஆர். இதனால் எம்ஜியார் உடனடியாக திராவிட முன்னேற்றக் கழகத்தினின்றும் வெளியேற்றப்பட்ட பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கி திமுகவைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்தார். எம்ஜிஆர் இருந்தவரையிலும் அவரை எவராலும் அசைக்க முடியவில்லை.

அறிஞர் அண்ணாவின் இதயக்கனி என்று அனைவராலும் புகழப்பெற்ற எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம், இலவச வேட்டி சேலை திட்டம், வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்.முதலிய திட்டங்களின் மூலம் தமிழகத்தில் பொருளாதார நிலையில் நலிந்த மக்களுக்குப் பேருதவி புரிந்து வந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் பிற அமைச்சர்கள் அனைவரும் அவரது கட்டளைக்குக் கீழ்ப்படிந்தே என்றும் நடக்கும்படியான ஒரு கட்டுப்பாடு இருந்ததால் குறிப்பிடத்தக்க பெரும் ஊழல்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கப்பட்டது.

இன்று தமிழகம் உள்ள நிலைமை நான் சொல்லாமலே அனைவரும் அறிவர். வேலியே பயிரை மேய்வது போல் மக்களைக் காப்பதாக மார்தட்டிப் பேசியே மக்களைச் சுரண்டி வாழும் மந்திரிகளும். காமராஜர் ஆட்சியிலும் அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளும் இலவசமாக இருந்த கல்வித்துறையைத் தனியாருக்கு விற்று அதன் பின்னர் கல்விக் கட்டணம் லட்சக்கணக்கில் உயர்ந்த நிலையில் தங்கள் பெயரிலும் தங்கள் பினாமி பெயரிலும் பொறியியற் கல்லூரிகளும் மருத்துவக்கல்லூரிகளும் ஏற்படுத்தி மக்களை மொட்டையடித்துப் பெரும் பொருள் சேர்க்கும் அரசியல்வாதிகளும் தமிழகத்தையும் நம் பாரத நாட்டையும் ஆளும் இழிநிலை நிலவுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் எம்ஜிஆர் அன்று நடத்திய நல்லாட்சியை மீண்டும் தருவதாக அவரது வழித் தோன்றல்கள் வாக்குறிதி தருகின்றனர். எம்ஜிஆர் அவர்களின் மறைவுக்குப் பின் இதன் முன்னர் பலமுறை இந்த வழித் தோன்றல்கள் ஆட்சியில் இருந்தபோதிலும் மக்கள் நலனில் போதிய அக்கரை செலுத்தியதாகத் தெரியவில்லை. ஆயினும் இவர்கள் செய்ததாகக் கருதப்படும் தவறுகள் இன்று ஆட்சியிலுள்ளோர் அடிக்கும் பகல் கொள்ளைக்கு முன்னர் ஒரு தூசளவேயாகும். நம் துரதிருஷ்டவசமாக இந்தியத் திருநாட்டின் சட்டதிட்டங்கள் முறையாக வகுக்கப்படாமல் நேர்மையானவர் யாரும் அரசியலுக்கு வந்து தேர்தல்களில் வெற்றிபெறுதல் சாத்தியமில்லாத நிலையே தொடர்ந்து நிலவுவதால் தற்பொழுது உள்ள அரசியல்வாதிகளில் யாரும் மிகவும் நேர்மையாளர் என்று சொல்ல இயலாது.

இருப்பினும் இருப்பவர்களில் குறைவான தீமையைத் தருபவர்களையே மக்கள் தேர்ந்தெடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் வேறு வழியில்லை. எம்ஜிஆர் அவர்களை மனதில் நிறுத்தி அவரது வழித்தோன்றல்கள் இனியாகிலும் எம்ஜிஆர் அவர்களது வழியில் உண்மையாக நின்று மக்களுக்காக உழைக்க வேண்டுமென வேண்டி நம் ஜனநாயகக் கடமையைத் தவறாமல் நிறைவேற்றுவோம். தேர்தலில் தவறாது வாக்களிப்போம். தீயவர்களை அகற்றி நல்லவர்களை நாற்காலிகலில் அமர்த்துவோம். அவ்வாறு நல்லவர்கள் எனக் கருதி நாம் தேர்ந்தெடுத்துப் பதவியில் அமர்த்துபவர்கள் தவறு செய்தால் அவர்களுக்குத் தக்க தண்டனை தருவோம்.

நீங்க நல்லாயிருக்கோணும்

திரைப்படம்: இதயக்கனி
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். ஜானகி
ஆண்டு: 1975

தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர
நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்

வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து
கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரிபோல்
செல்லும் இடமெல்லாம் சீர் பெருக்கித் தேர் நிறுத்தி
கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
பிள்ளையென நாளும் பேசவந்த கண்மணியே
வள்ளலே எங்கள் வாழ்வே இதயக் கனி
எங்கள் இதயக் கனி இதயக் கனி

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே
என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாடெங்கும் இல்லாமை இல்லையென்றாக

பாடுபட்டுச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம் நாம்
பாடுபட்டு்ச் சேர்த்த பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை
பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை
அமைதி என்றும் இல்லை

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
காற்றும் நீரும் வானும் நெருப்பும் பொதுவில் இருக்குது மனிதன்
காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே உலகில்
பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே
அமைதி நிலவுமே

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

நதியைப் போல நாமும் நடந்து பயன் தர வேண்டும்
கடலைப் போலே விரிந்த இதயம் இருந்திட வேண்டும்
வானம் போலப் பிறருக்காக அழுதிட வேண்டும்
வாழும் வாழ்க்கை உலகில் என்றும் விளங்கிட வேண்டும்
விளங்கிட வேண்டும்

நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

வெள்ளி, 22 ஜூலை, 2011

இறைவனிடம் கையேந்துங்கள்

பிற அனைத்து உயிரினங்களினும் மேலான அறிவுள்ளவனாகக் கருதப்படும் மனிதன் உண்மையில் அத்தகைய கருத்துக்கு அருகதையுள்ளவனா என்பது சிந்திக்கத் தக்கதே. இயற்கையின் ரகசியங்களை ஆராய்ந்தறிந்த மனிதன் அதனால் ஏற்பட்ட விஞ்ஞான முன்னேற்றத்தின் துணையுடன் செயற்கைக் கோள்கள் முதல் பல அற்புதமான சாதனங்களையும் படைத்ததனால் செருக்கடைந்து தன்னை இறைவனுக்கு நிகராக எண்ணிக்கொண்டு மனிதத் தன்மையை மறந்தான். பிறரிடம் அன்பு செலுத்துவதன் அவசியத்தை உணரத் தவறிவிட்டான். தன் வாழ்நாள் வெகு சில காலமே எனும் உண்மையை அறிந்தும் அறியாத மயக்க நிலையிலேயே ஆயுள் முழுமையும் கழித்து தான் சேர்த்த செல்வங்களைத் தானும் முழுமையாக அனுபவியாமல் பிறரது துயர் துடைக்கவும் உதவாமல் மடிந்த பின்னரும் பிறர் துன்பப்படக் காரணமாகிறான்.

இததகைய சிற்றறிவாளரான மனிதர்களுள் பிறரை விட ஏதேனும் ஓர் வகையில் அனுகூலமான நிலைமையில் உள்ளவன் அவ்வனுகூலத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தித் தான் மட்டும் வாழ்வில் உயர முயல்கிறான். அத்தகைய அனுகூலத்தைப் பெறாதவன் பலவீன்மடைந்து வாழ்வின் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய வகையின்றி வருந்துகிறான். அவ்வருத்தத்தில் தன்னை விட மேலான நிலைமையிலுள்ளவனைக் கண்டு பொறாமை கொண்டு மன நிம்மதியையும் இழக்கிறான்.

இத்தகைய ஏற்றத் தாழ்வு கருதும் மனப்பான்மையுள்ள மாந்தர்கள் துன்பங்களிலிருந்து என்றும் விடுதலை பெற மாட்டார்கள். உலக வாழ்வில் இரவும் பகலும் மாறி மாறி வருவதைப் போலவே பிறப்பும் இறப்பும் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருபவையே. இந்த ரகசியத்தை உணர்ந்தவனே அறிவாளி. அத்தகைய அறிவாளிகளும் இதே சமுதாயத்தில் நம் கண்முன்னரே வாழ்ந்து வருகிறார்கள் என்பதை நாம் அறிந்து நாமும் அவர்கள் போல அறிவாளிகளாகி வாழ்வில் விதிவசமாக நேரும் துன்பங்களைத் தாங்கப் பழகிக் கொள்வோமெனில் வாழ்வில் என்றும் இன்பம் நிலவ வழி ஏற்படும்.

நமக்கொரு துன்பம் நேருகையில் அதிலிருந்து விடுபட நாம் சாதாரணமாக சக மனிதர்களின் உதவியை நாடுகிறோம். சக மனிதர்கள் உதவாவிடில் மனமொடிந்து நம்மை நாமே கடிந்து கொண்டு துன்பத்திலேயே உழல்கிறோம். வாழ்வில் நேரக்கூடிய அனைத்துத் துன்பங்களிலிருந்து விடுபடும் சக்தி நமக்குள்ளேயும் உண்டு என்பதும் மேலும் இயற்கையின் துணையும் நமக்கு என்றும் உள்ளதென்பதும் சற்றே சிந்தித்தோமெனில் நமக்கு விளங்கும். அத்தகைய அறிவுத் தெளிவு பெற மிகவும் இன்றியமையாதது இறையுணர்வாகும். இறையுணர்வு கொண்டவர் ஆணவமகன்று என்றும் எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை உணர்வால் உணர்ந்து அறிவால் அறிந்து அவனருளை நாளும் வேண்டிப் பெற்று இன்ப வாழ்வு வாழ்வது திண்ணம்.

வையகத்துக்கில்லை மனமேயுனக்கு நலஞ்
செய்யக் கருதியிது செப்புவேன் பொய்யில்லை
எல்லாமளிக்கும் இறை நமையுங் காக்குமெனும்
சொல்லா லழியுந் துய்ர்

இறைவனிடம் கையேந்துங்கள்

இயற்றியவர்: ஆர். அப்துல் சலாம்
பாடியவர்: நாகூர் ஈ.எம். ஹனீபா

இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை

இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்
ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்
இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்

இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை

ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருபவன்
அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளியெறிபவன்
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
பாவங்களைப் பார்வையினால் மாய்க்கின்றவன்
அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள்
அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்

இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை

தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்
வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்
அலைமுழங்கும் கடல்படைத்து அழகுபார்ப்பவன்
அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்
தலைவணங்கிக் கேட்பவர்க்குத் தந்து மகிழ்பவன்
தரணியெங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்

இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை

ராஜா என்பார் மந்திரி என்பார்

உலகில் ஒவ்வொரு ஜீவராசியும் வாழ உறவுகள் மிகவும் இன்றியமையாதவையாகும். தனக்கென உறவுகள் யாரும் இல்லாத ஒரு மனிதரோ மற்ற உயிரினங்களோ வாழ்வில் விருப்பமின்றி விரக்தியுற்று வாழ்வதை விட சாவதே மேல் என எண்ணும் மனோநிலைக்குத் தள்ளப்படுதல் இயற்கை. ஒருவர் தனக்கு மிகவும் பிர்ய்மான ஒரு உறவினரை விதிவசத்தால் இழக்கையிலும் இத்தகைய விரக்தி மனப்பான்மை உருவாகக்கூடும், ஆனால் அந்த சமயத்தில் தன்னை விட்டுப் பிரிந்த உறவினரைத் தவிர ஏனைய உறவுகளில் பற்று வைத்திருப்பின் இத்தகைய விரக்தி நிலை மாறி வாழ்வில் மீண்டும் ஈடுபாடு ஏற்படலாகும்.

இவ்வுண்மையை விளக்கும் ஒரு ஆங்கிலக் கவிதை உள்ளது. அது ஆல்ஃப்ரட் லார்ட் டென்னிசன் எனும் ஆங்கிலக் கவிஞர் எழுதியது. அக்கவிதை போர்க்களத்தில் உயிரிழந்த ஒரு வீரனின் உடல் அவனது வீட்டில் கொண்டு வைக்கப்படுகையில் அவனது மனைவி உறும் துயரையும் துயரிலிருந்து அவள் மீள்வது குறித்த சம்பவத்தையும் விவரிப்பதாக அமைந்துள்ளது.

கணவனின் உயிரற்ற உடலை அவர்கள் வீட்டுக்குக் கொண்டு வந்தனர். அவள் அதனைக் கண்டு மயங்கவில்லை புலம்பவுமில்லை, மாறாக துக்கத்தால் செயலிழந்த நிலையில் ஸ்தம்பித்துப் போயிருந்தாள். அத்தருணத்தில் அங்கே அவளது உதவிக்காக உடனிருந்த பெண்கள் அவள் அழ வேண்டும், இல்லாவிடில் அவள் அதிர்ச்சியிலே இறந்து விடுவாள் எனக்கூறி அவளுக்கு அழுகையை வரவழைக்கும் முயற்சியாக அவளது கணவனைப் புகழ்ந்து பேசினர். அவனது அருமை பெருமைகளை நினைவுகூர்ந்தனர். அவன் அனைவராலும் விரும்பப்பட்டவன் என்றும் நம்பிக்கைக்குரியவன் என்றும் போற்றினர். இருப்பினும் அவள் பேசவில்லை அசையவுமில்லை. அப்போது வேறொரு பெண் தன் இடத்திலிருந்து எழுந்து வந்து அவனது முகத்தை மறைத்திருந்த துணியை அகற்றினாள். ஆனாலும் அவள் அசையவில்லை அழவுமில்லை. அப்போது தொண்ணூறு வயதான மூதாட்டி ஒருத்தி எழுந்து வந்து அப்பெண்ணின் குழந்தையை எடுத்து அவளது முழங்காலின் மீது வைக்கவும் கோடைக் காலத்தில் வரும் புய்லுக்கொப்பாக அவளது கண்களில் கண்ணீர் பெருகியது, "ஓ என் செல்வமே உனக்காகவே நான் வாழ்கிறேனடா!" என்று அக்குழந்தையை அணைத்தபடி கதறியழுது தன் துயரத்தை வெளிக்கொணர்ந்தாள்.

அந்த ஆங்கிலக் கவிதை வரிகளாவன:

Home they brought her warrior dead:
She nor swooned, nor uttered cry:
All her maidens, watching, said,
'She must weep or she will die.'
Then they praised him, soft and low,
Called him worthy to be loved,
Truest friend and noblest foe;
Yet she neither spoke nor moved.

Stole a maiden from her place,
Lightly to the warrior stepped,
Took the face-cloth from the face;
Yet she neither moved nor wept.

Rose a nurse of ninety years,
Set his child upon her knee--
Like summer tempest came her tears--
'Sweet my child, I live for thee.'

Alfred Lord Tennyson

உறவுகளின் மீது பற்றுள்ள வரையிலேயே ஒருவனுக்கு உலக வாழ்க்கை பிடிக்கும். உறவுகளை அவன் வெறுக்கும் நிலை ஏற்படுகையில் உலக வாழ்வினை அவன் வெறுப்பான். இதுவே இயற்கை நியதி. உலகில் வாழ்வதற்கு நம் அனைவருக்கும் முதற்கண் உறவுகள் அவசியம். உறவுகளே நம் வாழ்நாள் உள்ளவரையிலும் நமக்குத் துணை. செல்வமும் செருக்கும் உறவுகள் தரும் சுகத்தைத் தர மாட்டா. உலகில் ஒருவருக்கு அவரது குடும்பத்தார் மட்டுமே உறவாவதில்லை உலகிலுள்ள மனிதர்கள் மட்டுமன்றிப் பிற உயிர்கள் யாவுமே உறவுகளாகக் கொண்டு வாழ்வோர் பிற யாரையு்ம்விட அதிக மன மகிழ்ச்சியுடன் பேரானந்த வாழ்வு பெறுவதுறுதி. பல சமயங்களில் உடன் பிறந்தோரே ஒருவருக்கு ஜன்மப் பகையாக விளங்குவதும் உண்டு.

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தையிரங்காரடி கிளியே செம்மை மறந்தாரடி

என்று இத்தகைய அன்பில்லாத மனிதர்களைப் பற்றி மஹாகவி பாரதியார் குறிப்பிடுகிறார்.

ஆகவே அனைவரும் நமக்கு உறவு எனக் கொண்டு நாம் வாழ்வோமாகில் அனைவரும் நம்மை உறவென எண்ணி நம்மிடம் மிக்க அன்பைப் பொழிந்து நமக்கு என்றும் துணையாக விளங்குவர். அப்பொழுது வாழ்வில் எத்தகைய துன்பங்கள் நமக்கு வரினும் அவற்றையெல்லாம் தீர்த்து வைக்க நாம் தேடிக்கொண்ட உறவுகள் கை கொடுக்கும்.

ராஜா என்பார் மந்திரி என்பார்

திரைப்படம்: புவனா ஒரு கேள்விக்குறி
இயற்றியவர்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
பாடியோர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி

ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள ஒரு
ராணியும் இல்லை வாழ ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள ஒரு
ராணியும் இல்லை வாழ

கல்லுக்குள் ஈரம் இல்லை நெஞ்சுக்கும் இரக்கம் இல்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை அனுபவிக்க யோகம் இல்லை
பைத்தியம் தீர வைத்தியம் இல்லை உலகில் எனக்கு ஒரு வழி இல்லை

ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள ஒரு
ராணியும் இல்லை வாழ

நிலவுக்கு வானம் உண்டு மலருக்கு வாசம் உண்டு
கொடிக்கொரு கிளையும் உண்டு எனக்கென்று என்ன உண்டு?
ஏன் படைத்தானோ இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை

ராஜா என்பேன் மந்திரி என்பேன் ராஜ்ஜியம் உனக்கு உண்டு ஒரு
ராஜகுமாரன் உண்டு நல் உறவுமுண்டு அதில் பரிவுமுண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்?

தெய்வத்தில் உன்னைக் கண்டேன் தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்குக் களங்கமென்று இடம் விட்டு விலகி நின்றேன்
மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ? கலக்கமும் ஏனோ?
உலகில் உனக்கும் சரித்திரம் உண்டு

ராஜா என்பேன் மந்திரி என்பேன் ராஜ்ஜியம் உனக்கு உண்டு ஒரு
ராஜகுமாரன் உண்டு நல் உறவுமுண்டு அதில் பரிவுமுண்டு

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் விட மேலாகக் கருதப்படுபவன் மனிதன். இதற்குக் காரணம் மனிதனின் பகுத்தறிவும் பிற உயிர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ளும் பண்புமேயாகும். இதனாலேயே இறைவனை எல்லோரும் மனித வடிவில் மனதில் வடித்துப் பல்வேறு பெயர்களாலும் வணங்குகிறோம். இயற்கையின் அரிய சக்திகளை ஆராய்ந்தறிந்து அவற்றைக் கொண்டு பல வியக்கத்தக்க சாதனங்களை மனிதன் உருவாக்கியுள்ளதை நாம் நன்கறிவோம். முற்காலத்தில் புராண இதிகாசக் கதைகளில் விண்ணில் பறக்கும் புஷ்பக விமானங்களையும் மாயக் கண்ணாடியையும் பிரம்மாஸ்திரம் போன்ற அதீத சக்தியுள்ள ஆயுதங்களையும் பற்றி குறிப்பிட்டிருக்கக் காண்கிறோம். அத்தகைய சாதனங்கள் கற்பனையாகவே இருந்திருக்கக்க்கூடும் எனினும் அக்கற்பனைகளுக்கு உண்மை வடிவமளித்து இன்று விஞ்ஞான ரீதியில் அவற்றுக்கொப்பான சாதனங்கள் பலவற்றை மனிதன் தொடர்ந்து படைத்து வருவதைக் காண்கிறோம்.

மனிதனின் அறிவு வளர வளர அவனது மனிதத் தன்மை பெருமளவில் குறைந்து வருவதையும் காண்கையில் மனம் பெரிதும் வேதனை கொள்கிறது. தனது பகுத்தறிவைப் பொருளீட்டுவதற்கும் பிறரை விடத் தான் உயர்ந்த நிலையில் வாழ்வதற்கும் உதவும் ஒரு கருவியாகவே பயன்படுத்தப் பழகிய மனிதன் தனது பேராசையால் பிறர் பெரும் அல்லலுறுவதைக் கண்டும் காணாதவன் போல் உண்மையில் ஒரு கொடிய வனவிலங்கினும் கேவலமான மனப்பான்மையுடன் வாழ்வதைக் காண்கையில் மனிதர்கள் யாருமே இல்லாத ஒரு இடத்துக்கு நாம் சென்றால் என்ன எனுமளவுக்கு நல்லோர் பலர் இதயம் துன்புற்று வருந்துகின்றனர்.

நல்லவர்களெல்லோரும் சமுதாயத்தை விட்டகன்று விட்டால் துன்பங்கள் மேலும் பெருகி ஜீவன்கள் வருந்தி மடிவரன்றோ? எனவே அறியாமையால் தீமைகள் செய்வோரைத் திருத்த உரிய முயற்சிகள் மேற்கொண்டு நல்ல எண்ணம் கொண்டவர்களாக அவர்களை மாற்றி சமுதாயத்தை மேம்படுத்த அறிவுள்ளவர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து பாடுபட்டாலே உலகில் துன்பப்படுவோரது எண்ணிக்கை குறைந்து அமைதி நிலவும். எல்லா மனிதர்களும் நம் உறவு என்று உணர்ந்து வேற்றுமை நீங்கி ஒற்றுமையுணர்வுடன் இருப்பவர் இல்லாதோருக்குக் கொடுத்துதவி இன்னல் தீர்த்து எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் எனும் உயர்ந்த எண்ணததை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக உடல் ஊனமுற்றவர்களுக்கு நம்மாலான உதவிகளைத் தவறாது செய்தல் வேண்டும்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று ஏட்டில் எழுதிவைத்து விட்டு ஏழ்மை அகலப் பாடுபடாமல் ஏழை மேலும் ஏழையாக, செல்வந்தர்கள் மேலும் பெரும் செல்வந்தர்களாக இடையே நல்லவர் போல் நாடகமாடி சமுதாயத்தை சுரண்டுவோருடன் சேராது உண்மையாய் ஊருக்குழைப்பவர் யாரென்று இனங்கண்டு அத்தகைய நல்லோரைத் துணைக்கொண்டு நன்மையே அனைவருக்கும் விளையப் பாடுபடுவோம். கடவுள் இல்லை என்று சொல்லிக்கொண்டு, பகுத்தறிவாளர்கள் என்று தம்மைப் பறைசாற்றிக்கொண்டு ஆலயங்களின் சொத்துக்களைக் கொள்ளையிட்டு, சாதி வெறியைத் தூண்டிவிட்டு ஊரிரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல் நம்முள் சண்டையை மூட்டிவிட்டு நம் அனைவர் கண்களிலும் மண்ணைத் தூவித் தான் மட்டும் லாபமடைபவன் யார் என்றறிந்து அவனை விலக்கி மெய்யன்பர்கள் காட்டிய பாதையில் பயணம் மேற்கொள்வோம் இறையருளை வேண்டிப் பெறுவோம். இப்பிறவிப் பயன் துன்புறும் பிற ஜீவன்களுக்கு உதவுவதே எனும் உண்மையை உணர்ந்து அதன்படி உத்தமர்களாக வாழ்ந்து உன்னத நிலையை எய்துவோம்.

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

திரைப்படம்: அன்புள்ள ரஜினிகாந்த்
இயற்றியவர்: குருவிக்கரம்பை ஷண்முகம்
இசை: இளையராஜா
பாடியோர்: லதா ரஜினிகாந்த்

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளைப் பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை
தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

சின்னச் சின்னப் பூக்கள் சிந்திய வேளை
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை
பாதம் செல்லும் பாதை காட்டிடும்
தலைவா எம் தலைவா
ஊனம் உள்ள பேரைக் காத்திடும்
இறைவா என் இறைவா
ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
இதுதான் இயற்கை தந்த பாச பந்தமே

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

கண்ணிழந்த பிள்ளை காணும் உன்னை
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை
ஊருக்கொரு வானம் இல்லையே
இறைவா உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதியில்லையே
அது போல் உயிர் பிறப்பில்
உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளைப் பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

பொறுமை என்னும் நகையணிந்து

நமது பாரத நாட்டில் குடும்ப வாழ்வின் சிறப்பை மக்கள் அனைவரும் உணர்ந்து அதற்குரிய நெறிமுறைகளைக் கடைபிடித்து வாழ்வதாலேயே பல்வேறு அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் எழுந்தபோதும் அனைத்தையும் மீறி நாட்டில் என்றும் அமைதி நிலவி வருகின்றது. குடும்ப வாழ்வின் சிறப்பினை நமக்கெல்லாம் எடுத்துரைத்து அன்றும் இன்றும் என்றும் தொடர்ந்து நம்மை நல்வழிப்படுத்தி வரும் ஆன்றோர் பெருமக்களுள் தலையாயவர் ஔவைப் பிராட்டியாவார். ஔவையார், கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர், திருவள்ளுவர் முதலானோர் ஓரே காலத்தில் வாழ்ந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. அதற்கேற்றாற்போலவே அவர்களுக்குள் இடையிடையே நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்களும் கவிதைப் போர்களும் விரிவாக எழுதி வைக்கப்பட்டுள்ளன. இவ்வரலாறுகள் எவ்வளவு தூரம் உண்மை என்பது குறித்த ஆராய்ச்சியைத் தவிர்த்து இவற்றில் காணப்படும் கருத்துக்களூம் அவை வாழ்க்கைக்கு எவ்வாறு பயன்படும் என ஆராய்ந்தோமெனில் மிகவும் பயனுண்டு என்பதில் ஐயமில்லை.

ஔவையார் கதையை மிகவும் விரிவாகவும் விஸ்தாரமாகவும் பெரும்பொருட் செலவில் 1953ஆம் வருடம் அந்நாளைய தமிழ்த்திரையுலகின் ஜாம்பவானாகப் போற்றப்படும் ஜெமினி திரு எஸ்.எஸ். வாசன் அவர்கள் தயாரித்து வெளீயிட்டார். இத்திரைப்படம் தற்பொழுதும் பல தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனங்கள் வழியே அவ்வப்பொழுது திரையிடப்படுகிறது. தமிழ் மக்கள் அனைவரும் பார்த்து மகிழ்ந்து பின்பற்ற வேண்டிய அரிய பல விஷயங்கள் இத்திரைப்படத்தில் உள்ளன.

ஔவையார் கதையில் வரும் ஒரு சம்பவமாவது: ஒரு சோலையில் ஒரு நாள் பெண்டாட்டிக்கு பயந்து நடக்கும் தன்மையுள்ள ஒரு ஆடவன் தனிமையில் அமர்ந்து தன் எதிரே இருந்த கல் ஒன்றைத் தன் மனைவியாக பாவித்து அதனுடன் அதிகார தோரணையில் உரையாடும் காட்சியை அவ்வழியே வந்த ஔவையார் கண்டார். அவனது இல்லத்துக்குச் சென்று அவன் வாழ்க்கை எவ்வாறு அமைந்துள்ளதென அறியும் ஆவலில் அவர் அவ்வாடவனை நோக்கி இன்று உன் வீட்டில் எனக்கு உணவு அளிக்க வேண்டுமெனக் கூறி அவனுடன் அவனது இல்லத்துக்குச் சென்றார். ஔவையை வீட்டுக்கு வெளியே இருந்த திண்ணையில் சற்றே அமருப்படிக் கூறி உள்ளே சென்ற அந்த ஆடவன் அங்கே தனது கூந்தலை வாரிப் பின்னிக்கொண்டிருந்த தன் மனைவியிடம் மிகவும் குழைந்து பேசி அவளுக்குத் தன் கையாலேயே தலைவாரிப் பின்னி விட்டுப் பின் மெல்லத் தன்னை நம்பி தங்களது இல்லத்தில் உணவு அருந்த வந்திருந்த ஔவையாரைப் பற்றிக் கூற, பதிலுக்கு அவள் சீற, அவன் மீண்டும் மன்றாட அவள் அரைமனதுடன் சம்மதித்து ஔவையாருக்கு வேண்டா வெறுப்பாக உணவு பரிமாறினாள்.

அவளது அக்கரையின்மை கண்டு மனம் வருந்திய ஔவையார் அவள் பரிமாரிய உணவை அருந்த மனமின்றி எழுந்து நின்று அந்த ஆடவனைப் பார்த்து, "கணவனுக்கேற்ற சேவை மனப்பான்மையுடன் கணவனை தெய்வமாக எண்ணிப் போற்றி வாழும் மனைவி ஒருவனுக்குக் கிடைப்பாளேயாயின் எத்துணைத் துன்பங்கள் வரினும் அவளுடன் கூடி வாழலாம். ஆனால் அத்தகைய மனைவியானவள் கணவனை மதியாது அவன் சொல்லை மீறி அவனுக்கு அவமரியாதை ஏற்படும் விதமாக நடப்பளேயாயின் அக்கணவன் இல்லறத்தைத் துறந்து துறவறம் மேற்கொள்வதே தகும் எனும் பொருளில்,

பர்த்தாவுக்கேற்ற பதிவ்ரதை உண்டானால்
எக்காலும் கூடியிருக்கலாம் சற்றேனும்
ஏறுமாறாக இருப்பளேயாமாகில் சற்றேனும்
ஏறுமாறாக இருப்பளேயாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள்

என்ற பாடலைக் கூறி அங்கிருந்து சென்றுவிட்டார். உடனே ஔவையின் அறிவுரையை செவிமடுத்த அந்த ஆடவன் தன் சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு காஷாயம் தரித்துத் துறவியாகி வீட்டை விட்டுச் சென்று விடுகிறான். இதனால் மனம் பதைபதைக்க அவனது மனைவி ஓடோடிச் சென்று ஔவையாரிக் கால்களில் விழுந்து தன்னைக் காப்பாற்றுமாறு வேண்ட ஔவையார் அவள் கணவனை சமாதானப் படுத்து இருவரையும் சேர்ந்து வைத்து அதன் பின்னர் பாடுவதாக அமைந்துள்ள பாடல் இன்றைய பாடலாக மலர்கிறது.

பொறுமை என்னும் நகையணிந்து

பர்த்தாவுக்கேற்ற பதிவ்ரதை உண்டானால்
எக்காலும் கூடியிருக்கலாம் சற்றேனும்
ஏறுமாறாக இருப்பளேயாமாகில் சற்றேனும்
ஏறுமாறாக இருப்பளேயாமாகில்
கூறாமல் சந்நியாசம் கொள்

இருந்து முகம் திருத்தி ஈருடன் பேன் பார்த்து
விருந்து வந்ததென விளம்ப
இருந்து முகம் திருத்தி ஈருடன் பேன் பார்த்து
விருந்து வந்ததென விளம்ப
வருந்தி மிக ஆடினாள் ஆடினால் ஆடிப்
பழமுறத்தால் சாடினாள் ஓடோடத் தான்

பொறுமை என்னும் நகையணிந்து
பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்
பொறுமை என்னும் நகையணிந்து

அருமை பெருமை தெரிந்து
அருமை பெருமை தெரிந்து
அருமை பெருமை தெரிந்து
அருமை பெருமை தெரிந்து நாதன்
அன்புடன் இல்லற இன்பமடைந்திட

பொறுமை என்னும் நகையணிந்து
பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்
பொறுமை என்னும்

கூடி நடந்து கொள்ள வேண்டும்
கோப தாபம் தள்ள வேண்டும்
கூடி நடந்து கொள்ள வேண்டும்
கோப தாபம் தள்ள வேண்டும்
கோடி செம்பொன் குவிந்தாலும்
குளிர்ந்த வார்த்தை சொல்ல வேண்டும்
கோடி செம்பொன் குவிந்தாலும்
குளிர்ந்த வார்த்தை சொல்ல வேண்டும்
நாடி மணந்த நாதனோடு ஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ
நாடி மணந்த நாதனோடு
நாறும் மலரும் போலக் கூடி
நாடி மணந்த நாதனோடு
நாறும் மலரும் போலக் கூடி
நல்லறமாகிய இல்லற வாழ்வினில்
எல்லையில்லாத பேரின்பமடைந்திட

பொறுமை என்னும் நகையணிந்து
பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்
பொறுமை என்னும்

வியாழன், 21 ஜூலை, 2011

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே

இவ்வுலக வாழ்வு அநித்தியம் என்பது அனைவருக்கும் பொதுவான விதி. இதில் நல்லவ்ர்க்கொரு முடிவு தீயவர்க்கு வேறு என்பதில்லை. உடலுடன் உலகில் பிறந்த அனைவரும் ஒரு நாள் மண்ணுக்கிரையாவது உறுதி. நல்லவர்க்கும் தீயவர்க்கும் கிடைக்கும் முக்கிய பலனாவது நல்லவர் இம்மண்ணுலகை விட்டு மறைந்த பின்னரும் பிறரால் அன்புடன் நினைத்துப் போற்றப்படுவர், தீயவர் தூற்றப்படுவர். முந்தைய தலைமுறையைச் சேர்ந்த மக்களில் பெரும்பாலோர் போதிய கல்வியறிவும் உலகைப் பற்றிய பொது அறிவும் பெறாதவராக விளங்கியதால் அநேகர் குறுகிய மனப்பான்மையுடன் செயல்பட்டனர். இதனால் உலகில் உள்ள நாடுகள் பலவற்றில் மக்களை அடிமைகளாக்கி ஆள்வோர் தம் சுயநலத்தையே பேணும் வகையில் ஏற்பட்ட முடியாட்சியும் வேறுவிதமான அடக்குமுறை ஆட்சியும் நிலவி இன்றளவும் தொடர்கிறது.

இந்நிலையில் இதுபோன்ற அடக்குமுறை என்றும் தொடர்ந்து நீடிக்க இயலாதெனும் உண்மையை எகிப்து நாட்டு மக்கள் உலகனைத்தும் அறியும் விதமாக நடத்திய அமைதிப் புரட்சியின் மூலம் உறுதியுடன் நிலை நாட்டியுள்ளனர். இக்கலகத்தின் ஆரம்ப நாட்களில் காவல்துறையினரின் அடக்குமுறைத் தாக்குதலில் பலர் தம் இன்னுயிரை இழந்த போதிலும் எஞ்சிய மக்கள் அனைவரும் உயிருக்கு பயந்து எங்கும் ஓடிவிடாமல் ஓரே இடத்தில் லட்சக்கணக்கில் ஒன்று கூடி எவ்வித வன்முறையிலும் ஈடுபடாது மிகவும் கட்டுப்பாட்டுடன் கொடுங்கோலன் முபாரக்கிற்கெதிராகக் குரல் கொடுத்தனர்.

உலகனைத்தும் தொலைக்காட்சிகள் வழியாகவும் இணையதளங்கள் வழியாகவும் தொடர்ந்து இப்புரட்சி குறித்த செய்திகள் அவ்வப்போது சென்றடைந்ததால் உலகில் பிற நாடுகள் யாவும் ஒரு மனதாக எகிப்து நாட்டு மக்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வந்த நிலையில் எகிப்து நாட்டின் காவல் துறையினர் பணியில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்ததால் நாட்டில் உள்ள தீயவர்கள் பலரும் பொதுமக்களின் சொத்துக்களையும் பிற பொதுச் சொத்துக்களையும் கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபடவே நாட்டின் இராணுவம் செயலில் இறங்கியது. இராணுவம் புரட்சியாளர்களைத் தாக்காமல் அவர்களுக்குப் பாதுகாப்பாக விளங்கி அவர்களை இடையில் தாக்கும் செயலில் ஈடுபட்ட முபாரக் ஆதரவுக் கும்பலின் அடாவடிச் செயல்களைக் கட்டுப்படுத்தியது மிகவும் பாராட்டுக்குரியது.

அன்று மஹாபாரத யுத்தம் 18 நாட்கள் நடந்தது. அந்த யுத்தத்தில் ஒரு அரச குடும்பத்தினரும் நாட்டு மக்களும் இரு கட்சிகளாகப் பிரிந்து ஒருவரையொருவர் ஆயுதங்களால் தாக்கிக் கொன்றது மட்டுமல்லாது இவர்களுடன் நட்பாக இருந்த பல நேச நாடுகளின் படைகளும் கலந்து கொண்டு பேரழிவிற்கு வித்திட்டன. இறுதியில் தருமம் வென்றதாகக் கூறப்பட்டாலும் அங்கே மகிழ்ச்சி நிலவவில்லை.

இன்று எகிப்து மக்கள் புரட்சியும் 18 நாட்கள் நடந்தது. கத்தியின்றி ரத்தமின்றி அஹிம்சை வழியில் போராடிய மக்கள் இறுதியில் இராணுவத்தின் உதவியுடன் உறுதியான வெற்றிபெற்று கொடுங்கோலன் முபாரக் நாட்டை விட்டு ஓட்டம் பிடிக்க வ்ழிவகுக்கவே, நாட்டில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிய சோகங்கள் யாவும் மறைந்து முதல் முறையாக மகிழ்ச்சி நிலவுகிறது.

எகிப்து நாட்டில் நடந்த புரட்சியின் வெற்றியால் உற்சாகம்டைந்த பல அரேபிய நாடுகளின் மக்களும் ஒன்றன் பின் ஒன்றாக முடியாட்சி ஒழிந்து தங்களது நாடுகளிலும் ஜனநாயகம் மலர வேண்டுமென்று குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

நம் நாட்டில் பெயரளவில் ஜனநாயக ஆட்சி நடந்தாலும் இங்கே நீதி நிலைபெற வழியில்லாமல் ஆட்சி அமைப்புகளும் சட்டதிட்டங்களும் மிகவும் பாரபட்சமாக இருப்பதால் மக்களுக்கு நீதி எனும் பெயரில் வெறும் வாக்குறுதிகளும் எதிர்த்துக் குரல் கொடுத்தால் தேசதுரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்படும் கொடுமையும் மட்டுமே கிடைக்கிறது. இந்நிலை விரைவில் மாறும். எகிப்து நாட்டின் இளைஞர் கூட்டம் இன்று செயல்படுத்திய அமைதிப் புரட்சியினை நம் நாட்டு இளைய தலைமுறையினர் நாளை நிச்சயமாக செயல்படுத்துவர். அவர்களை வழி நடத்திச் செல்ல ஏற்ற தலைவர்களும் இப்புரட்சியில் பங்கு கொண்டு தீயவர்களை நீதியின் முன் நிறுத்தி நன்மைகளை மக்கள் அடைய வழிவகுக்க நிச்சயம் வருவார்கள்.

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே

திரைப்படம்: பணத்தோட்டம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே - ஹா
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே

பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு
நல்லதை நினைத்தே போராடு - ஹா

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே

உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
உலகத்தில் திருடர்கள் சரிபாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பது தான் நீதி - மனம்
கலங்காதே மதி மயங்காதே
கலங்காதே மதி மயங்காதே

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே

மனதுக்கு மட்டும் பயந்து விடு
மானத்தை உடலில் கலந்து விடு
மனதுக்கு மட்டும் பயந்து விடு
மானத்தை உடலில் கலந்து விடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்து விடு
இரண்டினில் ஒன்று பார்த்து விடு
இரண்டினில் ஒன்று பார்த்து விடு

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே

ஆஹஹா ஆஹஹா ஓஹோஹோ ஓஹோஹோ
ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்

யாரை எங்கே வைப்பது என்று

ஆதி கால்ம் தொட்டே உலகத்தவர் அனைவரும் கண்டு வியக்கும்படியாக எல்லா வளங்களும் நிறைந்து விளங்கிவரும் நாடு நம் பாரத நாடு. உலக நாடுகளுக்கிடையே போக்குவரத்து முதலில் கடல் வழியே துவங்கி வளர்ந்த காலத்தில் பலர் இந்தியாவுக்குக் கடல் வழியே பயணம் செய்து இந்தியாவைக் கண்டுபிடிக்க முயன்றனர். இந்தியாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியவர்களுள் ஒருவரான அமெரிக்கோ வெஸ்புகி அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். அமெரிக்காவை இந்தியா என அவர் எண்ணினார். அக்காலத்தில் அமெரிக்காவில் வாழ்ந்திருந்த பழங்குடி மக்கள் இதன் காரணமாகவே இன்றும் அமெரிக்க இந்தியர்கள் அல்லது செவ்விந்தியர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

அவ்வாறாக உலகிலுள்ளோரெல்லாம் கண்டு வியக்கும்படியான இயற்கை வளங்களும், மனித வளமும் கொண்ட நமது நாடு இன்று நியாயமாக உலக நாடுகள் அனைத்திலும் மேலான நிலையில் முன்னணியில் இருக்க வேண்டும். ஆனால் உண்மையில் இன்னமும் நம் நாடு சாலை வசதிகள் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கும் உலக வங்கியிலிருந்து கடன் பெற வேண்டிய நிலையில் உள்ளது. இதன் காரணம். நமது நாட்டில் நீதி என்பது உண்மையாய் உழைப்பவருக்கு எட்டாக் கனியாக விளங்குவதேயாகும். தீவிரவாதிகளுடன் அரசியல் கட்சிகள் வெளிப்படையாகக் கூட்டணி அமைத்து நாட்டின் சில பகுதிகளில் தேர்தலை சந்திக்க முயல்கையில் வேறு சில இடங்களில் ஏழைகளுக்கு சேவை செய்யும் நோக்குடன் செயல்புரிபவர்கள் தீவிரவாதிகளென முத்திரை குத்தப்பட்டு சிறையிலடைக்கப் படும் கொடுமை நிறைவேறி வருகிறது.

மக்களின் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் பலர் சுதந்திரமாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் செய்து வருகையில் உண்மையாய் உழைக்கும் மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இந்த நிலைமை நீடிக்குமானால் நம் நாட்டில் வெகுவிரைவில் இன்று எகிப்து நாட்டில் நடைபெறுவது போன்ற புரட்சி வெடிக்கும். இதன் அறிகுறியாக காந்தி மஹாத்மா மறைந்த நாளான, தியாகிகள் தினமாகக் கொண்டாடப் பட்ட நேற்றைய தினம் நம் நாட்டின் பல பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நேர்மைக்குப் பெயர் பெற்ற முன்னாள் உயர் காவல்துறை அதிகாரி திருமதி கிரண் பேடி தலைமையில் டெல்லியிலும் அத்தகைய பிற தலைவர்களின் தலைமையில் நாட்டில் பல்வேறு ஊர்களிலும் ஊழல் ஒழியப் பெருங்குரல் கொடுத்து மாபெரும் ஊர்வலத்தை நடத்தியுள்ளனர்.

பெரும்பொருள் செலவழித்து ஊர்கள் தோறும் அலங்கார மேடை போட்டு நல்லவர்கள் போல் நடித்துப் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி அரசு பதவிகளில் நீடிக்கலாம் என மனப்பால் குடிக்கும் பேதைகளின் உண்மை சுயரூபம் வெளிப்பட்டு வருகிறது.

யாரை எங்கே வைப்பது என்று

திரைப்படம்: பலே பாண்டியா
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்டு: 1962
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே - இப்போ
பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே
பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே - இப்போ
பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே
பேதம் தெரியல்லே

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

நானிருக்கும் இடத்தினிலே அவன் இருக்கின்றான்
அவனிருக்கும் இடத்தினிலே நான் இருக்கின்றேன்
நாளை எங்கே யாரிருப்பார் அதுவும் தெரியல்லே - இப்போ
நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் தெரியல்லை
அட என்னத்தச் சொல்வேண்டா தம்பி என்னத்தச் சொல்வேண்டா

தம்பி ஒருவன் வெளியில் நின்று காசை எண்ணுகிறான்
நம்பி ஒருவன் சிறையில் வந்து கம்பி எண்ணுகிறான்
உண்மை இங்கே கூட்டுக்குள்ளே கலங்கி நிக்ககுதடா - அட
உருட்டும் புரட்டும் சுருட்டிக் கொண்டு வெளீயில் நிற்குதடா
அட என்னத்தச் சொல்வேண்டா தம்பி என்னத்தச் சொல்வேண்டா

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

மூடருக்கும் மனிதர் போல முகம் இருக்குதடா
மோசம் நாசம் வேஷமெல்லாம் நிறைந்திருக்குதடா
காலம் மாறும் வேஷம் கலையும் உண்மை வெல்லுமடா
கதவு திறந்து பறவை பறந்து பாடிச் செல்லுமடா - அட
என்னத்தச் சொல்வேண்டா தம்பியோ என்னத்தச் சொல்வேண்டா

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

பம்பரக் கண்ணாலே

இயற்கையன்னையின் கருணையினால் இணைந்த இரு உள்ளங்களில் தோன்றும் காதல் எண்ணங்கள் கண்களின் வழியே பரிமாறப்பட்டு இதயங்களில் இசைந்து இருமனம் ஒருமனமாவது தெய்வீகக் காதல். தமிழில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் உள்ள இலக்கியங்களில் மிகவும் அதிகமாக விவரிக்கப் பட்டிருப்பது காதலே எனில் அது மிகையாகாது.

"எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண்ணிணை கவ்வி, ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்.

பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்
வரி சிலை அண்ணலும் வாள்கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு, இதயம் எய்தினார்"

என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் இராமனும் சீதையும் இவ்வாறு காதல் கொண்டதை வர்ணிக்கிறார்.

கம்ப ராமாயணத்தில் கம்பர் வர்ணித்த இக்காதல் காட்சி பிற்காலத் தமிழ்க் கவிஞர்களின் மனதைப் பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும் என்பது தமிழ்த் திரைப்படங்கள் பலவற்றில் இடம் பெற்ற காதல் காட்சிகளிலிருந்து தெளிவாகிறது. அத்தகைய காதல் காட்சிகளில் மிகவும் இனிமையான பாடல்கள் பலவும் திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளன. அப்பாடல்களில் கம்பரின் கற்பனையில் உதித்த கருத்துக்களுடன் காதலினால் இணைந்த இருவர் தம் இதயத்தில் எழும் ஏக்கத்தையும் அந்த ஏக்கத்தினால் அவர்களது உள்ளங்கள் படும் பாட்டையும் விவரிக்கும் விதமாக அமையப்பெற்ற பாடல்கள் பலவுண்டு.

அத்தகைய பாடல்கள் பெரும்பாலும் திரைப்படங்களில் தோன்றும் கதாநாயகன் நாயகியரிடையே உண்டாகும் காதல் காட்சிகளிலேயே இடம் பெற்றாலும் இடையிடையே நகைச்சுவைப் பாத்திரங்களுக்கிடையே தோன்றும் காதல் குறித்தும் இவை போன்ற சிறப்பான பாடல்களை அமைத்துப் பல படங்களை உருவாக்கியிருக்கிறார்கள் நம் தமிழ்த் திரையுலக சிற்பிகள்.

பம்பரக் கண்ணாலே

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
திரைப்படம்: மணமகன் தேவை
இயற்றியவர்: கே.டி. சந்தானம்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே
பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே

கட்டாணி முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கைமணக்கும் சிங்காரி
கட்டாணி முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கைமணக்கும் சிங்காரி
தொட்டாலும் கைமணக்கும் சிங்காரி
கட்டுப்படியாகல்லே காதல் தரும் வேதனே
கட்டுப்படியாகல்லே காதல் தரும் வேதனே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே

கண்டவுடன் காதலே கொண்டாள் என் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது
கண்டவுடன் காதலே கொண்டாள் என் மீதிலே
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது என்
பெண்டாட்டி ஆகிடும் நாள் எப்போது?
திண்டாடித் தவிக்கிறேன் தினம் தினமும் துடிக்கிறேன்
திண்டாடித் தவிக்கிறேன் தினம் தினமும் துடிக்கிறேன்
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே

பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே
தங்கச் சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே

டரரடியா டாங் டரரடியா டாங் டரரடியா டாங் டரரடியா டாங்

புதன், 20 ஜூலை, 2011

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

இப்பரந்த உலகில் மனிதன் தன் ஐம்புலன்களால் உணரக்கூடியவை மிகவும் சொற்பமே. பகுத்தறிவால் அறியக் கூடியவையும் மிகவும் சொற்பமே. இத்தகைய சொற்ப உணர்வு சக்தியையும் சொற்ப அறிவையும் கொண்டு அவன் எல்லையே இல்லாத உலகின் தன்மையையும் அவ்வுலகினைப் படைத்து, தீய சக்திகளை அழித்து நல்லன யாவையும் காத்து ரக்ஷிப்பதாகக் கருதும் கடவுளின் தன்மையையும் வரையறுக்க முயல்வது வேடிக்கையே. இத்தகைய அறிவுக் குறைபாட்டுடன் பல தேசங்களில் உள்ள பலரும் தம் சிற்றறிவுக்கேற்ப இறைவனைப் பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு தத்துவங்களால்மும் வரையறுத்து இறை குறித்த தமது கோட்பாடே பிறரது கோட்பாடுகளை விடச் சிறந்ததெனவும். தான் இறைவன் என்று கருதும் சக்தியே இறைவன் எனவும் பிறரது கருத்தில் விளங்கும் இறைசக்திகளெல்லாம் தீய சக்திகள் எனவும் பிரச்சாரம் செய்வது அறியாமை.

ஒருவருக்கு நல்லன செய்யும் சக்திகள் யாவும் இறை சக்திகளெனவும் தீமை செய்பவை யாவும் தீய சக்திகள் எனவும் கருதுகையில் இக்கருத்து இடத்தைப் பொறுத்தும் இனத்தைப் பொறுத்தும் மாறுபடுகிறது. உதாரணமாக வனத்தில் வாழும் புலிகளுள் ஒன்று மான் ஒன்றை வேட்டையாடிக் கொல்கையில் அம்மானினத்துக்கு அப்புலி தீய சக்தியாகத் தென்படுகிறது. ஆனால் அதே புலி தான் வேட்டையாடிய மானின் இறைச்சியைத் தன் இனத்தைச் சேர்ந்த பிற புலிகளுடன் பகிர்ந்து உண்கையில் பிற புலிகளின் பார்வையில் அது தெய்வமாக விளங்குகிறது. இது போலவே ஒரு நாட்டை ஆளும் மன்னவன் அந்நாட்டு மக்களுக்கு இறைவனுகொப்பாக விளங்குகையில் அவன் பிற நாடுகளின் மேல் படையெடுத்துத் தன் ஆட்சியை விரிவுபடுத்தும் செயலால் உயிரிழந்தவர்களின் கண்களுக்கு யமனாகத் தோற்றமளிக்கிறார். பொதுமக்களைக் கொள்ளையடிக்கும் கும்பலின் தலைவன் அக்கும்பலில் உள்ள யாவருக்கு இறைவனாகவும் கொள்ளையிடப்பட்ட மக்களுக்குக் கொடுமைக்காரனாகவும் தோன்றுகிறான்.

இறைத் தத்துவத்தை அருணகிரிநாதர்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

எனும் பாடலின் வாயிலாக இறைவன் எங்கும் நிறைந்த பரம்பொருளென உரைக்கிறார்.

அன்பும் சிவமும் இரெண்டேன்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே

என்ற பாடலில் வாயிலாகத் திருமூலர் அன்பே இறைவன் என விளக்குகிறார்.

அன்பு தான் இன்ப ஊற்று,
அன்பு தான் உலக ஜோதி,
அன்பு தான் உலக மகாசக்தி

என புத்தபகவான் கூறுகிறார்.

இறைபக்திக்குச் சமமாக நாட்டுப் பற்றையும் கருதிப் போற்ற வேண்டியதன் அவசியத்தை பக்தி மார்க்கத்திலேயே தம் வாழ்நாள் முழுவதையும் கழித்த சுவாமி விவேகானந்தர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியக் குடியரசு தினமான இன்று நம் நாட்டில் நிகழும் பல சம்பவங்களையும் அறிகையில் தேசபக்தி என்பது வெறும் ஏட்டில் எழுதி மறந்து விட்ட வாசகம் தானோ எனும் ஐயம் எழுகிறது. தேசியக் கொடிகளை நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்றும் அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களின் நன்மையை சிறிதும் நாடாதவர்களாக விளங்கும் அவலம் வெட்ட வெளிச்சமாகியிருக்கும் இந்நாளில் நாம் கருத்திற்கொள்ள வேண்டுவதாவது, இனியாகிலும் நாட்டுக்கு நன்மை செய்து உண்மையாய் உழைக்கக்கூடிய தலைவர்களை அறிவால் அறிந்து தேர்வதேயாகும்.

இத்தகைய கருத்துக்களை மேலும் விரிவாக்கி இறை தத்துவத்தை சமுதாயத்தின் பல தரப்பினரும் சாதி, மத, இனப் பாகுபாடின்றி அனைவரும் உணர்ந்தேற்றுக் கொள்ளும் விதமாய் நம் கவிஞர் தருவதாவது:

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: டி.ஆர். பாப்பா
திரைப்படம்: நல்லவன் வாழ்வான்

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய்
வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய்
விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய்
விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய்

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

நல்லவர் போல் வெளி வேஷங்கள் அணிந்து
நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
நாணயத்தோடு நல்லறம் காத்து
நடப்பவர் தம்மை மறப்பதில்லை

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

தன்மானம் காப்பதிலே அன்னை
தந்தையைப் பணிவதிலே பிறந்த
பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம் காணப்
பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

சத்தியத்தின் எல்லையிலே - உயர்
சமரச நெறிகளிலே - ஆ....
சத்தியத்தின் எல்லையிலே - உயர்
சமரச நெறிகளிலே - அன்பின்
சக்தியிலே தேச பக்தியிலே - உண்மை
சமத்துவம் காட்டும் சன்மார்க்கத்திலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - அவன்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும்

இன்றைய உலக வாழ்வில் பணம், பதவி, அந்தஸ்து, அதிகாரம் முதலான பகட்டுகளை அடைவதற்கெனவே மனிதரில் பெரும்பாலோர் அதிக நேரத்தையும் உழைப்பையும் செலுத்துகின்றனர். அதற்கேற்றாற் போலவே ஆரம்பப் பாடசாலை முதல் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அமுலிலிருக்கும் பாடத்திட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கல்வி என்பது மாணவர்களை வெறும் பொருளீட்டும் இயந்திரங்களாக உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தும் விதமாகவே அமைந்து பொது அறிவிலும் வாழ்வுக்கு இன்றியமையாத பிற கலைகள், சமூக நலன், தனிமனித ஒழுக்கம், தேசப்பற்று ஆகியவற்றில் போதிய கவனம் செலுத்த வலியுறுத்தாத நிலையில் செயல்படுத்தப்படுகிறது.

இத்தகைய குறைபாடுள்ள கல்வியால் போட்டி மனப்பான்மை அதிகரித்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் தன்மை குறைந்து சுயநல நோக்கம் வளர்கிறது. இந்நிலையில் வாழ்வில் ஏற்படும் பல்வேறு துன்பங்களைத் தாங்கும் சக்தியற்று நம்மில் பலர் அமைதியிழந்து வாழ்வை சிறப்புடன் இன்பமாக வாழ இய்லாமல் போகிறது. பண்டைக் காலத்தில் கல்விக்கூடங்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருளீட்டும் தகுதிகளை வளர்ப்பதுடன் ஒவ்வொரு மாணவரும் பல்வேறு கலைகளிலும் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளவும் சமுதாய நலனில் அக்கரை செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து மனிதன் மனிதனாக வாழ வழி வகுக்கும் விதமாக அமைந்திருந்தன. அத்துடன் இறையுணர்வை வளர்க்கும் விதமாகவும் கல்வி அமைந்திருந்தது. அதனால் உலக வாழ்வில் நம்மை மீறி ஏற்படும் துன்பங்களைத் தாங்கி வாழ்வை வெற்றிகரமாக வாழ பக்தி எனும் சாதனத்தை மக்கள் உபயோகிக்கும் விதமாகவே ஆலயங்கள் பல உருவாக்கப்பட்டன.

பக்தி ஒன்றே முக்தி பெறும் வழியாகும். முக்தி என்பதாவது நம் மனதைக் கெடுத்துத் துன்பம் விளைவிக்கும் பாப சிந்தனைகளான காமம், குரோதாம், லோபம், மதம், மாத்சர்யம், ஐயம், அச்சம் ஆகியவை நீங்கி எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை அடையும் நிலையே ஆகும்.

பக்தியினாலே – இந்தப்
பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!
சிந்தந் தெளியும், - இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும் - நல்ல
வீர ருறவு கிடைக்கும், மனத்திடைத்
தத்துவ முண்டாம், நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும்;

காமப் பிசாசைக் – குதி
கால்கொண் டடித்து விழுத்திடலாகும்; இத்
தாமசப் பேயைக் – கண்டு
தாக்கி மடித்திடலாகும்: எந்நேரமும்
தீமையை எண்ணி – அஞ்சுந்
தேம்பற் பிசாசைத் திருகியெ றிந்துபொய்ந்
நாம மில்லாதே - உண்மை
நாமத்தி னாலிங்கு நன்மை விளைந்திடும்.

ஆசையைக் கொல்வோம், - புலை
அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம், கெட்ட
பாச மறுப்போம், - இங்குப்
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல் – உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர்
ஈசனைப் போற்றி – இன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம்

என்று மஹாகவி பாரதியார் போற்றிய பக்தியின் மகிமையை உணர்ந்து

வையகத்துக்கில்லை மனமே யுனக்கு நலஞ்
செய்யக் கருதியிது செப்புவேன் பொய்யில்லை
எல்லாமளிக்கும் இறை நமையுங் காக்குமெனும்
சொல்லாலழியுந்துயர்

எனும் பொன்மொழிகளை மனதிற் பதித்து வாழ்க்கையில் எத்தகைய பணிகளில் நாம் மூழ்கியிருந்தாலும், எத்தனை துன்பங்கள் எதிர்வந்த போதிலும், துன்பங்களே இல்லாமல் பெரும்பாலும் இன்பத்திலேயே திளைத்து வாழ்ந்திருந்தாலும் எல்லா நிலையிலும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது நம் மனதுக்கிசைந்த இறைவன் நாமத்தை உச்சரித்து மனதை வளப்படுத்திக் கொள்வது நம் அனைவருக்கும் நலம் பயப்பதாகும்.

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும்

திரைப்படம்: திருநீலகண்டர்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
ஆண்டு: 1939

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற
ஒரு நாள் ஆஆஆஆஆ ஆஆஆஆஆ

வெறுநாளாக்கி வெறுநாளாக்கி நம் வாழ்நாளை
வெறுநாளாக்கிப் பின் ஜனநாதித் துயர்
வெறுநாளாக்கிப் பின் ஜனநாதித் துயர்
வேலைக்குள் மூழ்கி வீண் காலம் கழிக்காமல்
வேலைக்குள் மூழ்கி வீண் காலம் கழிக்காமல்

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற
ஒரு நாள் ஆஆஆஆஆஆ

பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெருமையான பெரும் வெள்ளம்
பெண்டு பிள்ளை வீடு கன்று மாடு தனம்
பெருமையான பெரும் வெள்ளம் இதைக்
கண்டு நெஞ்சில் - இதைக்
கண்டு நெஞ்சில் மோகம் கொண்டு சென்று சாடிக்
கடல் மூழ்காதே பெரும் பள்ளம் - தனில்
கொண்டமிழ்த்தி விடுமே
கொண்டமிழ்த்தி விடுமே - பின் கரை
கொள்ள வெகு வருத்தமே - பள்ளம் தனில்
கொண்டமிழ்த்தி விடுமே - பின் கரை
கொள்ள வெகு வருத்தமே - முனிவர்
தொண்டு செய் சிவபதமே நினைந்தால்
தொண்டு செய் சிவபதமே நினைந்தால்
தோணியாகி வருமே
தோணியாகி வருமே அதனால்

ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம் கடைத்தேற ஒரு நாள்

நடந்து வந்த பாதையிலே

ஆதியில் மிருகங்களோடு மிருகங்களாக வாழ்ந்து வந்த மனிதர்கள் நாளடைவில் ஒன்று சேர்ந்து சமூகங்களாக வாழத் துவங்கிய காலம்தொட்டு நாடுகளும் அரசுகளும் உருவாயின. அரசாட்சியில் மனித உரிமை குறித்த பல சட்டதிட்டங்களும் ஏற்படுத்தப் பட்டன. இத்தகைய சட்டத்தை இயற்றுவோரின் மனப்பான்மையைப் பொறுத்து அவை சமூகத்தின் பல மட்டங்களில் வாழும் மனிதர்களைப் பாதித்து வருகின்றன. சமுதாயத்தின் ஒரு பகுதியினர் தமக்கு ஒரு குறிப்பிட்ட சட்டத்தினால் நன்மை விளையுமெனக் கருதுகையில் அதே சட்டத்தினால் தமக்கு ஏதும் நன்மை விளையாது தீமையே விளையுமென வேறொரு பகுதியினர் கருதுவது இயற்கையே. இவ்வேறுபாட்டைக் களைந்து அனைத்து சட்டதிட்டங்களும் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் ஒரு மனதாக மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் வகையில் இயற்றப்பட வேண்டும் அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டும்.

சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகளை வளர்க்கும் சட்டங்கள் பொதுநலத்தைப் பேணுவதில்லை. செல்வந்தர்கள் மேலும் பெரும் செல்வந்தர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவுமே இத்தகைய பாரபட்சமான சட்டங்கள் வழிவகுக்கின்றன.இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் மலிந்த சமுதாய நிலைமையை மாற்றியமைக்கப் பாடுபடுவோர் பலரிருக்கையில் அத்தகைய மாற்றத்தை எதிர்ப்போர் பலரும் இருக்கின்றனர். இதுவே உலக இயல்பு. இருப்பினும் இத்தகைய மாறுபட்ட கருத்துள்ள மக்களைத் தக்க விதத்தில் அறிவுறுத்தி அனைவருக்கும் சமநீதி கிடைக்கும் வகையில் நாட்டின் சட்டங்களை அமைத்து நல்லாட்சி நடைபெறும் நாடுகள் ஏனைய நாடுகளைக் காட்டிலும் எல்லாத் துறைகளிலும் முன்னணியில் திகழ்வதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

நம் நாடு உலகிலுள்ள ஏனைய நாடுகள் அனைத்தையும் விடப் பல விதங்களில் மேம்பட்ட இயற்கை வளமும், மனித வளமும் கொண்டதாக விளங்குவதுடன் பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்களும் சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளை மறந்து ஒன்றாக வாழும் பண்பாட்டைக் கொண்டதாக விளங்குவதாலேயே உலகிலுள்ளோர் அனைவரும் பாராட்டும் வகையில் தொன்றுதொட்டுத் திகழ்கிறது. நமது நாட்டுக்கு அயல்நாடுகளில் அவப்பெயர் உண்டாவதற்குப் பெரும்பாலும் நம் நாட்டில் நடைபெறும் முறைகேடான ஆட்சி அமைப்புகளும் முடக்கப்பட்ட பாரபட்சமான சட்டதிட்டங்களுமே ஆகும்.

மக்கள் யாவரும் இந்த உண்மையை உணரும் காலம் வந்துவிட்டது. தீமை செய்வோர் நல்லவர்களாக நாடகமாடி நாட்டை ஏமாற்றித் தம் சுயநலத்தையே பேணிப் பெருவாழ்வு வாழும் இருண்ட காலம் மலையேறி விட்டது. பல ஆண்டுகளாக மக்கள் அறியாமல் மறைக்கப்பட்ட உண்மைகளெல்லாம் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. எனவே நாட்டு மக்கள் யாவரும் மனதில் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு தீமைகளை அழித்து நன்மைகளை நிலைநாட்டப் பாடுபடுதல் நலம்.

நடந்து வந்த பாதையிலே

திரைப்படம்: ஆசை அலைகள்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1963

நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை
நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை

வந்தது வரட்டும் போடாவென்று வாடும் மனிதர் ஒரு வழியில் அவர்
வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து வழியை மறந்தவர் நடு வழியில்

நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை

வழியில் துணையாய் வருபவரெல்லாம் வாழ்க்கைத் துணையாய் ஆவாரா?
பாசத்தோடு அருகில் இருந்து பணிகள் யாவும் செய்வாரா?

நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை

கடமையினாலே சுகத்தை மறந்தவர் வாழ்வில் காண்பது அன்பு வழி
மடமையினாலே தன்னை மறந்தவர் வருந்தி நிற்பது துன்ப வழி

நடந்து வந்த பாதையிலே நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை நல்லவரெல்லாம் வாழ்வதில்லை

செவ்வாய், 19 ஜூலை, 2011

நாளை உலகை ஆள வேண்டும்

1947ஆம் ஆண்டு நம் பாரத நாடு ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திரமடைந்ததிலிருந்து 1967ஆம் ஆண்டு வரை நம் நாட்டில் சட்டசபைகளுக்கும் பாராளுமன்றத்திற்கும் தேர்தல்கள் மிகவும் அமைதியாகவே நடந்து தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்று ஆட்சி செய்து வந்தது. இத்தகைய வெற்றி மிதப்பில் மாநிலங்களிலும் மத்தியிலும் ஆளும் காங்கிரசார் சற்றே அலட்சியமாக இருந்த தருணத்தில் 1967ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளான, சுதந்திரா கட்சி, கம்யூனிஸ்டு, ஃபார்வார்டு ப்ளாக், தி.மு.க. முதலிய கட்சிகள் முதன்முதலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. நம் நாட்டில் அரசியல் வியாபாரமான தருணம் அதுவே. அதுவரை தேர்தல் பிரச்சாரங்களுக்காக குறிப்பிடத்தக்க செலவுகள் ஏதுமின்றி வெறும் சுவற்றில் எழுதிய வாசகங்களைக் கொண்டே தேர்தல் பிரச்சாரம் எவ்வித ஆரவாரமுமின்றி நடந்து வந்தது. 1967ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்கென பிரத்யேகமாகப் பெரும் செலவில் பல ஆட்கள் அமர்த்தப்பட்டு சைக்கிள்களில் பலரும் கூட்டம் கூட்டமாகக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட விலைவாசியை எதிர்த்தும், சாலையமைத்தல் போன்ற பொதுப் பணிகள் ஏதும் நடைபெறாததையும் கண்டித்துப் பெரும் கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

இவ்வாறு தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவோர்க்கு அரசியல் கட்சிகள் ஊதியம் வழங்கின. பிரச்சாரத்தில் ஈடுபட்ட அனைவரும் பெரும்பாலும் வேறு பணிகள் ஏதுமின்றி இருந்தவர்களாக அமையவே இத்தகைய அரசியல் பணியே வேலையில்லாத பல ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஊதியம் ஈட்டும் வேலையாக நாளடைவில் அமைந்தது. இவர்களுக்கு ஊதியம் தரவும் கட்சி தொடர்பான விழாக்கள் முதலிய நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்யவும் நாளடைவில் பெரும் தொகை தேவைப்பட்டது. அரசியல் கட்சிகள் இத்தகைய செலவினங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படாமலும் செலவு செய்யும் தொகைக்கு எவ்விதமான கணக்கும் வைத்துக் கொள்ளும் அவசியம் ஏற்படாத நிலையே தொடர்வதாலும் இத்தகைய செலவுகளை எல்லா அரசியல் கட்சிகளும் அந்த நாள் முதல் இந்த நாள் வரை கருப்புப் பணத்தைக் கொண்டே செய்கின்றன.

இத்தகைய கருப்புப் பணப்புழக்கத்தினால் ஊழல் அதிகரித்து மக்களுக்கு சேவை செய்வதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்தே பெரும்பாலான தலைவர்கள் தொடர்ந்து பதவிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். நம் நாட்டு மக்களும் தொடர்ந்து இத்தகைய பொய்யர்களின் வாக்குறுதிகளை மெய்யென நம்பி தொடர்ந்து ஆட்சியை அவர்கள் கையில் ஒப்படைத்து வருகின்றனர். சில காலம் முன்னர் வரை அதிலும் குறிப்பாக சென்ற ஆண்டு வரை இந்த அரசியல்வாதிகள் தொடர்ந்து புரிந்து வந்த ஊழலகள் அவ்வப்போது வெளிவந்த போதிலும் அவற்றைக் குறித்து செய்தித் தாள்கள் மற்றும் தொலைக்காட்சி வழி செய்திகள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு நடைபெறாத நிலை இருக்கவே அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்த அரசியல்வாதிகள் மக்களின் கவனத்தை திசை திருப்பி ஒவ்வொரு கட்சியும் தாம் உத்தமர்கள் எனவும் எதிர்க் கட்சிகள் ஊழல் கட்சிகள் எனவும் பிரச்சாரம் செய்து வேறு வழியின்றி ,மக்கள் அவர்களை மாறி மாறித் தேர்ந்தெடுக்கும் நிலையில் ஊழல்களைத் தொடர்கின்றனர்.

தற்போது நிலைமை மாறி விட்டது. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இவர்களுடன் இணைந்து மக்களுக்கு எதிராக சதி செய்யும் வ்அர்த்தக நிறுவனங்களும் செய்யும் ஊழல்கள் யாவும் ஒன்றன் பின் ஒன்றாய் தொடர்ந்து அம்பலமாவதுடன் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களால் கண்காணிக்கப்பட்டு வருவதால் தற்போது இந்த ஊழல் அரசியல்வாதிகள் பயந்து நடுங்குகின்றனர். என்னென்னவோ நாடகங்களெல்லாம் அரங்கேற்றுகின்றனர். ஆனால் அத்தனை வேஷங்களும் தொடர்ந்து கலைந்து கொண்டே வருகின்றன.

1986ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய ஊழல் போஃபோர்ஸ் பீரங்கி ஊழல். இந்திய ராணுவத்திற்காக ஸ்வீடன் நாட்டினைச் சேர்ந்த போஃபோர்ஸ் நிறுவனத்திடமிருந்து அப்போது ராஜீவ் காந்தியின் தலைமையில் மத்தியில் பதவியிலிருந்த காங்கிரஸ் அரசு பீரங்கிகள் வாங்கியதில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒட்டாவியோ குவாட்ரோச்சி மற்றும் இந்தியாவின் ஒரு பெரும் செல்வந்தரும் நேரு குடும்பத்துக்கு நெருக்கமானவருமான இந்துஜா ஆகியோர் பல கோடிகள் கமிஷனாகப் பெற்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் தகுந்த ஆதாரங்களைத் தேடிப் பிடிக்கத் தவறிய மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.) குவட்ரோச்சியின் மேல் எவ்வித ஆதாரங்களும் கிடைக்காததால் அவர் மேல் இருக்கும் வழக்கை வாபஸ் பெறுவதாகக் கோரி ஒரு விண்ணப்பத்தை சென்ற ஆண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில் அவ்வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை வழங்கப்பட்டு குற்றவாளி குற்றமற்றவர் எனும் நற்சான்றிதழ் பெற்று அனைவருக்கும் டாடா காட்டிச் செல்லலாம் என இருந்த நிலை மாறி இன்று வருமான வரி ட்ரிபூனல் ஒரு புதிய ஆதாரத்தை சமர்ப்பித்துள்ளது. அதில் குவாட்ரோச்சியும் இந்துஜாவும் 40 கோடி ரூபாய்களுக்கு மேல் போஃபோர்ஸ் நிறுவனத்திடமிருந்து கமிஷனாகப் பெற்ற விவரத்தை விளக்கமாக எடுத்துக் காட்டியுள்ளதால் குற்றவாளிகள் குற்றத்துக்கு பதில் சொல்லும் நிலைமை உருவாகியுள்ளது.

இத்தகைய மாற்றங்களெல்லாம் இது நாள் வரை உற்சாகமிழந்து நடைபிணங்கள் போல் வாழ்ந்து வரும் நமது நாட்டு மக்களுக்கொரு புத்துணர்வை ஏற்படுத்தி நாட்டில் நல்லாட்சி மலருமெனும் நம்பிக்கையை விதைக்கும் வண்ணம் அமைந்துள்ளன. இனி வருங்காலம் இத்தகைய வீணர்கள் கையில் போகாமல் உண்மையாய் உழைப்பவரே நாட்டை ஆளும் சூழ்நிலை வருமெனும் ஆவலில் இன்றைய பாடல் ஒலிக்கிறது.

நாளை உலகை ஆள வேண்டும்

திரைப்படம்: உழைக்கும் கரங்கள்
இயற்றியவர்: புலமைப் பித்தன்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே - இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே

கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
கடமை செய்வோம் கலங்காமலே உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் வாருங்கள் தோழர்களே

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே

தன்னானே தானேனானான நானானானா
தானேனானே னனானே

ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
ஏர் பூட்டித் தோளில் வைத்து இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலம் எல்லாம் போனதம்மா
எல்லோர்க்கும் யாவும் உண்டு என்றாகும் காலம் இன்று
நேராகக் கண்ணில் வந்து தோன்றுதம்மா
விடியும் வேளை வரப்போகுது தருமம் தீர்ப்பைத் தரப்போகுது
ஞாயங்கள் சாவதில்லை என்றும் ஞாயங்கள் சாவதில்லை

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
உழைக்கும் கரங்களே

ஆஹா ஆஹா ஆஹா நானானானனே ஆஹாஹா

கல்விக்குச் சாலை உண்டு நூலுக்கு ஆலை உண்டு
நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தேடலாம்
தோளுக்கு வீரம் உண்டு தோற்காத ஞானம் உண்டு
நீதிக்கு நெஞ்சம் உண்டு நாம் வாழலாம்
சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்
சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்
வாருங்கள் தோழர்களே ஒன்றாய் சேருங்கள் தோழர்களே

நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே இந்த
நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
புரட்சி மலர்களே உழைக்கும் கரங்களே

இயேசுநாதர் பேசினால்

அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய கிரித்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

http://www.mazhalaigal.com/entertainment/greetings/greetings-001/20101225vs_christmas.php

இந்தப் பாழும் உலகில் உண்மைக்கு உண்மையிலேயே ஏதேனும் மரியாதை உள்ளதா என்பதே மிகப் பெரியதொரு கேள்விக்குறியாகி விட்டது. இதற்குக் காரணம் மாயையில் உழன்று சிற்றின்ப நினைப்பிலே ஊறி, பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கையையே வாழ்ந்து வரும் பெரும்பான்மையினரே. இந்தக் கேடுகெட்ட இந்திய சமுதாயத்திலே சாமான்யனுக்கொரு நீதி, அதிகார வர்க்கத்தினரான சக்திவாய்ந்த அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் செல்வத்திலே மிதக்கும் பல வர்த்தகர்களுக்கும் வேறொரு நீதி எனும் நடைமுறை இருந்து வருகிறது.

சாமான்யன் ஒருவன் குற்றமிழைத்தாலோ அல்லது குற்றமிழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டாலோ முதற்கண் அவன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவான். அதன் பின்னர் மிகவும் கொடுமையான முறையில் அடி உதைகளுடன் விசாரிக்கப்பட்டு குற்றம் செய்தாலும் செய்யாவிடினும் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டு தண்டிக்கப்படுவான், அல்லது விசாரணையின் போதே கொலை செய்யப்பட்டு தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டு வீதியில் விட்டெறியப் படுவான்.

ஆனால் அதிகார வர்க்கத்திலுள்ள ஒருவன் குற்றமிழைத்தாலும் அவன் மேல் யார் எத்துணை முறை குற்றம் கூறி வந்தாலும் அவன் சாதாரணமாக விசாரிக்கப் படுவதில்லை. மக்களுக்கு நாட்டு நடப்பை செய்திகளாகத் தரும் பல ஊடகங்களின் வழியே அவன் செய்த குற்றம் ஆதாரத்துடன் வெளியிடப்படுகையில் அரை மனதுடன் விசாரணை என்ற பெயரில் ஒரு மிகப்பெரிய நாடகம் அரங்கேறும். மிகவும் பரபரப்புடன் சில காலம் அவ்விசாரணை குறித்து, விரைவில் குற்றவாளி தண்டனை பெறுவான் என அனைவரும் எதிர்பார்க்கும் விதத்தில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகும். பின்னர் சில காலம் இது குறித்து யாரும் எதுவும் கூற மாட்டார்கள். அதன் பின்னர் ஒரு நாள் போதிய ஆதாரங்கள் இல்லாததால் குற்றவாளி நிரபராதியாக அறிவிக்கப்பட்டு முன்னர் வகித்ததைக் காட்டிலும் அதிக அதிகாரம் கொண்ட பதவியில் இருத்தப் படுவான். இது தான் இன்றைய இந்திய அரசியல்.

இங்கே காவல் துறைகளும் லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறைகளும் அரசியல்வாதிகளின் அதிகாரத்தின் கீழேயே செயல் படமுடியும் தனித்து இயங்க இயலாது. இந்த அரசியல்வாதிகள் இன்றும் என்றும் மக்களுக்கு மனமுவந்து நீதி வழங்குவர் என எதிர்பார்ப்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதற்கொப்பாகும். என்றும் அநீதி புரியும் அரசியல்வாதிகள் தாங்கள் மிகவும் நேர்மையாக மக்கள் நலனில் அக்கரை கொண்டு ஆட்சி செய்வதாகவும், பல நல்ல திட்டங்களை மக்கள் நலனுக்காக செயல்படுத்துவதாகவும் பறைசாற்றிக்கொண்டு அத்தகைய திட்டங்கள் யாவிலும் பெரும் தொகையைத் திருடி அதையும் தங்கள் சொந்தக் கணக்கில் சேர்த்துக்கொள்வது ஒன்றே இன்றைய உண்மை அரசியல் நிலை.

இன்று நாட்டையே உலுக்கிய உலகிலேயே மிகப்பெரிய தொலைத் தொடர்புத் துறை ஊழல் புரிந்த முன்னாள் அமைச்சர் மத்திய புலனாய்வுத் துறையினரால் விசரணை செய்யப்படும் நிலையில் தமிழக அரசின் பிரதான பிரதிநிதிகள் பல ஊர்களிலும் பெரும் தொகை செலவிட்டு கூட்டங்கள் நடத்தி ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்றதொரு வாதத்தை மக்கள் முன் வைத்து அவர்களை நம்ப வைக்கும் முயற்சியில் பெரிதும் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகைய அட்டூழியங்கள் அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போன்றதொரு அறிவிப்பை இயேசு கிரிஸ்துவின் பிறந்த தினத்தின் முதல் தினத்தன்று தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார். அதாவது இயேசுநாதர் எவ்வாறு ஏழை மக்களின் மேல் கருணை கொண்டு அவர்களது துயர் துடைக்கவென்றே செயல்புரிந்தாரோ அவ்வாறே தாம் ஏழை மக்களுக்காகவே தொடர்ந்து தொண்டாட்டுவதாகக் கூறியுள்ளார்.

இயேசுநாதருக்கு இதைவிடவும் பெரியதொரு அவமதிப்பை யாராலும் செய்ய முடியாது.

இயேசுநாதரே! தாம் செய்த பாபத்தை மூடி மறைத்துக்கொண்டு இத்தகைய அவமறியாதையை உங்களுக்கு இழைக்கும் இப்பாவிகளையும் மன்னிப்பீரா?

இயேசுநாதர் பேசினால்

திரைப்படம்: தாயே உனக்காக
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: B வசந்தா

இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்?
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்?
இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்?
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்?

பாவிகளே பாவிகளே உங்கள் பாதையைப் பாருங்கள்
பாதையிலே ப்ழுது வந்தால் தேவனைக் கேளுங்கள்
பாவிகளே பாவிகளே உங்கள் பாதையைப் பாருங்கள்
பாதையிலே ப்ழுது வந்தால் தேவனைக் கேளுங்கள்
திருமணங்கள் யாவையுமே சொர்க்கத்தில் உருவாகும்
சேர்ப்பதுவும் பிரிப்பதுவும் தேவனின் விதியாகும்
சேர்ப்பதுவும் பிரிப்பதுவும் தேவனின் விதியாகும்

இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்?
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்?

ஒரு வழியை மறு வழியால் மறைப்பது விதியாகும் அதை
உணர்த்துவதே நானிருக்கும் சிலுவையின் அடையாளம்
ஒரு வழியை மறு வழியால் மறைப்பது விதியாகும் அதை
உணர்த்துவதே நானிருக்கும் சிலுவையின் அடையாளம்
சிலுவையிலே மனது வைத்தால் சிந்தனை தெளிவாகும்
சிந்தையிலே அமைதி வந்தால் வந்தது சுகமாகும்
சிந்தையிலே அமைதி வந்தால் வந்தது சுகமாகும்

இயேசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்?
ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள என்ன கூறுவார்?

வியாழன், 14 ஜூலை, 2011

அன்பென்ற மழையிலே

நான் யார்? இவ்வுலகில் நான் ஏன் வந்து பிறந்தேன்? என்ற கேள்விகளுக்கு விடை தெரியாதிருந்தும் மாயையினால் பொய்யான இவ்வுடலை மெய்யென்றும் இவ்வுடலைச் சுமந்து அலையும் இந்த ஜடமே நான் என்றும் இவ்வுலகமே எனக்கு நிலையான இருப்பிடமென்றும் எண்ணி, எந்நாளும் தேவைக்கு மேல் பணத்தையும், பொன்னையும், பொருளையும் சேர்ப்பதிலேயே காலத்தைக் கழித்து, தன்னைப் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்து பிறர்க்கன்பு செய்யாது, தாம் தேடிய செல்வத்தைத் தானும் அனுபவியாது பிறரையும் அனுபவிக்க விடாது வீணடித்து, என்றோ ஒரு நாள் இவ்வுடல் மண்ணோடு மண்ணாக, இவ்வுடலைச் சுமந்த உயிர் சென்ற இடம் தெரியாது காற்றோடு காற்றாய்க் கரைந்து போக மறைந்திடும் மானுடனே!

நீ இவ்வாறான பொருள் தேடியலையும் வாழ்வு வாழ்ந்து மடிந்தாயெனில் நீ மறைந்த பின்னர் நீ இருந்த சுவடே தெரியாது அழிந்து போகும். அவ்வாறன்றி நீ இவ்வுலகில் வாழும் காலத்தில் உனது இன்றியமையாத தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான செல்வத்தை மட்டும் உண்மையான உழைப்பினால் சம்பாதித்து, அதிகப்படியான காலத்தைப் பிறர் துயர் துடைக்கும் பணியிலும் தேச சேவையிலும் செலவழித்தாயெனில் உன் பூத உடல் மறைந்து போன பின்னரும் நீ புகழுடம்பெய்தி மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்ந்து மக்கள் மனங்களில் இவ்வுலகம் உள்ளளவும் இறையெனக் கருதிப் போற்றப் படுவாய்.

இவ்வுண்மையை உனக்கும் எனக்கும் உணர்த்தவென்றே இவ்வுலகில் மனிதனாய் அவதரித்து அன்பெனும் மழை பொழிந்து மனிதகுலம் பண்பட வாழ்ந்து காட்டி உலகம் உய்யச் செய்த கருணைக் கடல் இயேசுபிரான். அவர் காட்டிய அன்பு நெறியைக் கடைபிடித்து எவரோடும் பேதமின்றி எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம் என்ற கொள்கையுடன் வாழ்வோமாக! அமர வாழ்வு பெறுவோமாக!

அன்பென்ற மழையிலே

படம்: மின்சாரக் கனவு
இயற்றியவர்: வைரமுத்து
இசை: A.R. ரஹ்மான்
குரல்: அனுராதா ஸ்ரீராம்

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ்மைந்தன் தோன்றினானே புகழ்மைந்தன் தோன்றினானே

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும்
கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே

கத்தாழங் காட்டு வழி

உலகிலேயே மிகவும் அதிகப்படியான மக்கள் ஏழ்மை நிலையில் வாழும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்த போதிலும் இங்குள்ள சமுதாய அமைப்பினாலும் குடும்ப வாழ்க்கை முறையின் வலிமையாலும் அனைவரும் ஒருவருகொருவர் தம்மாலியன்ற உதவிகளைச் செய்வதை ஒரு முக்கியக் கடமையாகக் கருதி வாழ்வதால் நம் நாடு பேரழிவிலிருந்து காக்கப்பட்டு வருகிறது.

நமது பாரம்பரியமான குடும்ப வாழ்க்கை முறை நம் ஒவ்வொருவருக்கும் வாழ்வது எப்படி என்பதைக் கற்றுத் தருவதால் எதிர்பாராத காரணங்களால் ஒரு குடும்பத் தலைவன், அதாவது தந்தை இறைவனடி சேர்கையில் அக்குடும்பத்தின் மூத்த பிள்ளைகள் தியாக மனப்பான்மையுடன் குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு தனக்கு இளையவர்களையும் தாயையும் காப்பது ஒரு உயர்ந்த நெறியாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் குடும்பத்தின் மூத்த பிள்ளை அண்ணனாகவும் இளையவர் தங்கையாகவும் அமைகையில் அந்த அண்ணன் தன் தங்கைக்காகத் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தர சித்தமாக இருப்பதுடன் அவளது நல்வாழ்வுக்கு ஆவன செய்வதும் நம் நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு அடிப்படைக் காரணம் நமது நாட்டின் உயர்ந்த இலக்கியங்கள் காட்டும் வாழ்க்கை நெறி.

எத்துணை நன்மை இருப்பினும் நம் சமுதாயத்தில் நகரங்களாயினும் கிராமமாயினும் அங்கும் பிறருக்குத் தீமை செய்து அதன் மூலம் தன் சுயநல நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் புல்லுருவிகளும் இருப்பதுண்டு. அத்துடன் நம் சமுதாயத்தில் சூதாட்டம் ஒரு பெரிய சாபக்கேடாக அன்று முதல் இன்றுவரை நிலவியிருக்கிறது. சில கிராமப்புறங்களில் கோழிச்சண்டை இன்றும் பெரும் சூதாட்டமாக விளங்குகிறது.

நமது நாட்டின் கிராமங்களில் மக்கள் வாழ்க்கை மிகவும் இனிமையானது. இங்கே ஆரவாரம் குறைவு அமைதி நிறைவு. இயற்கைச் சூழலில் மனித உறவுகள் மேம்பட்டு விளங்கும் வாழ்க்கை கிராம வாழ்க்கை. அத்தகைய ஒரு கிராமத்தில் ஒரு குடும்பத்தில் தாய் தந்தையரை இழந்த நிலையில் அண்ணன் ஒருவன் தன் தங்கையை சீராட்டிப் பாராட்டி வளர்த்து அவளை மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த உறவினர்களுள் ஒருவருக்கு மணமுடித்து வைத்து, புகுந்த இடத்தில் தன் தங்கை சீரோடும் சிறப்போடும் வாழத் தன் உதவியாகப் பல பொருள்களைச் சேர்த்து வைத்து சீதனமாக அவற்றைத் தன் தங்கையும் அவள் கணவனும் திருமணம் முடிந்த பின்னர் அவர்களது கிராமத்துக்குச் செல்கையில் சில மாட்டு வண்டிகளில் ஏற்றி அனுப்புகிறான்.

அவ்வாறு ஊர் மெச்சும் வகையில் திருமணம் செய்து கொடுத்த தங்கை நல்வாழ்வு வாழ்ந்தாளா? அல்லது அவள் சூதாட்டமே வாழ்க்கையாகக் கொண்ட சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியானாளா? என்னும் கேள்விக்கான பதிலை கிராமத்துக்கே உரிய பாணியில் எடுத்துரைக்கும் கதையே கிழக்குச் சீமையிலே.

கத்தாழங் காட்டு வழி

திரைப்படம்: கிழக்குச் சீமையிலே
இயற்றியவர்: வைரமுத்து
இசை: ஏ.ஆர். ரெஹ்மான்
பாடியவர்: ஜெயசந்திரன், எஸ். ஜானகி

கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப் பட்டுப் போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப் பட்டுப் போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

தாயி விருமாயி மனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும் உன் முகமே தெரியுதம்மா
தங்கம் போல் நான் வளர்த்த தங்கச்சி பிரியக்கண்டு
கத்தாழங் காட்டுக்குள்ளே காளைகளுங் கதறுதம்மா
வாசப்படி கடக்கையிலே வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிபுட்டா பாதி உயிர் போச்சு

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

கத்தாழங்காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே வாக்கப் பட்டுப் போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

அண்ணே போய் வரவா அழகே போய்வரவா
மண்ணே போய்வரவா மாமரமே போய்வரவா
அணில்வால் மீசை கொண்ட அண்ணே ஒன்ன விட்டு
புலிவால் மீசை கொண்ட புருஷனோட போய்வரவா
சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த இடம் தானே
தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடம் தானே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கைப் பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா

மக்கள் ஒரு புறம் தெய்வம் ஒருபுறம்

அன்பு நண்பர்களே,

பொதுவாக அரசியல் குறித்த கருத்துக்களை இலைமறைவு காய்மறைவாகவே தெரிவித்து வருபவன் நான். மிகவும் தீவிரமாக அரசியல் தொடர்பாக விவாதிப்பது என் வழக்கமல்ல. தினசரி நாட்டு நடப்புகளைக் கண்காணித்து வரும் பொழுது என்னையும் மீறி என் உடலும் மனமும் நடுங்குகிறது. நாடு நல்லவர் கையில் இல்லை என்பது தெள்ளத் தெளிய உலகறிய நிரூபணமாகிவிட்டது. மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, மக்களுக்கு எவ்விதத்திலும் நன்மை புரியும் எண்ணம் சிறிதுமின்றி அவர்களை எப்படியாகிலும் ஏமாற்றி நாட்டைக் கொள்ளையடிப்பதிலே பெரும்பாலும் கவனம் செலுத்துகின்றனர் தற்பொழுது ஆட்சி புரிபவர்.

ஆங்கிலேயன் நம் நாட்டை அடிமைப்படுத்திய காலத்தில் மக்களிடையே ஒற்றுமை நிலவினால் தன் ஆட்சிக்கு ஆபத்து விளையும் என அறிந்து அதனைத் தடுக்க மக்களிடையே சாதிமத பேதத்தைத் தூண்டி விட்டு ஆங்காங்கே கலவரங்கள் உருவாக இடமளித்து இடையில் தன் ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டு ஏறத்தாழ 900 ஆண்டுகள் நம் நாட்டை அடிமைத்தளையில் வைத்திருந்தான் ஆங்கிலேயன். நம் முன்னோர் கோடானு கோடி பேர் நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க 1857ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டுவரை பல விதங்களிலும் போரிட்டு தம் இன்னுயிரையும் ஈந்து பெற்றுத்தந்த சுதந்திரத்தை தற்போது ஆளும் அரசுகள் ஏற்கெனவே இழக்கச் செய்து விட்டதுடன் இதுவரை கொள்ளையிட்டதைக் காட்டிலும் பன்மடங்கு கொள்ளையிட்டு விவசாயம் செய்ய நிலங்கள் இல்லாதவாறு செய்து வனப்பகுதிகளையும் அழித்து வருகின்றனர். இதனால் பல ஊர்களில் யானைகளும் புலிகளும் காடுகள் குறைந்து உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டதால் மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து பெரும் கேட்டை விளைத்து வருகின்றன.

இத்தனை கேடுகள் விளைந்த பின்னரும், நாட்டைக் கொள்ளையடித்தவர்களது முகத்திரை முழுதும் கிழிந்த பின்னரும் அவர்கள் யார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்காது வழக்குகளை பலவீனப்படுத்திக் குற்றவாளிகள் எளிதில் தப்பிக்க ஏதுவான விதத்திலேயே மத்திய மாநில அரசுகள் செயல்புரிகின்றன.

தெய்வ கிருபையால் இத்தனை பெரும் கேடுகள் விளைகின்ற இக்காலத்திலும் நமக்கெல்லாம் வழிகாட்டும் விதமாக இது நாள் வரை பல ஆண்டுகள் சாதிச் சண்டைகளாலும் தீவிரவாதத்தாலும் சீர்குலைந்து கொண்டிருந்த மாநிலமான பீஹாரில் இன்று மக்கள் அனைவரும் சாதிமத உணர்வின்றி அனைவரும் ஓரினம் அது பீகாரி இனம் எனும் உயர்ந்த மனோநிலையைக் கைக்கொண்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக அமைதியாக முன்னேற்றப் பாதையில் பயணம் செய்கின்றனர்.

ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அந்நியர் வந்தது புகல் என்ன நீதி? என்று வெள்ளையனை வெளியேற்றப் பாடிய பாரதியின் பாடல் வரிகளை மனதில் கொள்வோம். நாம் அனைவரும் ஒரே சாதி அது தமிழ் சாதி ஓரே மதம், அது இந்திய மதம் எனும் மனப்பான்மையைக் கைக்கொண்டு அனைவரும் ஒருமுகமாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தீயவர்கள் அனைவரையும் விலக்கி உண்மையாக மக்களுக்காகப் பாடுபட்டு, சாதிமத பேதத்தை ஒழித்து, மக்களை இலவசங்களைக் கொடுத்துப் பிச்சைக்காரர்களாக்காமல் அவர்கள் உழைத்து வாழத்தக்க சூழலை ஏற்படுதக் கூடிய தலைவர்களைத் தேர்ந்தெடுப்போமானால் நாம் இந்த சன்மத்தில் அமைதியாக வாழ்வதுடன் நம் சந்ததியினரும் நல்வாழ்வு வாழ வழிவகுக்கலாம். நாம் இவ்வுலகில் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. இருக்கும் சில காலத்தில் வருங்காலம் சிறப்பாக இருக்க நம்மாலான நற்பணிகளைச் செய்து நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்துவது ஒன்றே நாம் செய்யத்தக்கது.

மக்கள் ஒரு புறம் தெய்வம் ஒருபுறம்

டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டோரா
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டம்
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டோரா
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டம்

மக்கள் ஒரு புறம் தெய்வம் ஒருபுறம்
பக்கம் துணையென நிற்கும் இருபுறம்
எட்டுத் திசைகளும் தொட்டுத் தகர்த்திடக் கேட்கும் நம் முரசு

கோடிக்கரங்களும் நீரை விட்டன
கொள்கை விதைகளும் வேரை விட்டன
நாளை தாய்க்குலம் நம்மை வாழ்த்திட பூக்கும் நல்லரசு

குற்றம் செய்தவன் கொற்றவனாயினும்
கோட்டை கொத்தளம் கொண்டவனாயினும்
தர்மம் கெட்டது தட்டிக் கேட்பது என்தன் வாழ்க்கை நெறி

நோட்டைக் கொடுத்திங்கு ஓட்டைக் கேட்பவர்
கேட்டை விளைத்திங்கு நாட்டைக் கெடுப்பவர்
மூட்டை முடிச்சுடன் ஓட்டம் எடுத்திட செய்வான் விருதகிரி

டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டோரா
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டம்

டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டோரா
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டம்

வாக்குகள் கேட்டு வாங்கும் போது நாக்கில் நூறு பொய் வைப்பார்
மக்கள் வாக்கை வாங்கிக்கொண்டு மக்கள் காதில் பூ வைப்பார்
காலம் மாறும் காட்சிகள் மாறும் கேள்வி கேட்டால் தான்
கரைகள் போகும் துணி வெளுப்பாகும் துவைத்துப் போட்டால் தான்

எது நடந்தாலும் நமக்கெனவென்று ஒதுங்கிடலாமா தோழா தோழா
வறியவர் துன்பம் வலியவர் பார்த்து இருப்பது கூடாது
பிறர்க்கெனக் கொஞ்சம் இளகிடும் நெஞ்சம்
படைத்திட வேண்டும் தோழா தோழா
பொதுநலத் தொண்டு புரிந்தவர்க்குண்டு புகழ்மிகு வரலாறு

டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டோரா
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டம்

எல்லார்க்கும் எல்லாம் வாய்க்கும் நாளில் என்தன் எண்ணம் ஈடேறும்
இல்லாமல் போனால் மேலும் மேலும் என்தன் கண்கள் சூடேறும்
என்னைத் தொடர்ந்து வருகின்ற பேரை என்றும் விட மாட்டேன்
தோழர் தமக்குத் துன்பங்கள் வந்தால் சோற்றைக் கூட தொடமாட்டேன்

இடி மழை மின்னல் இடைவரும் போதும்
நடுங்கிட மாட்டேன் நான் தான் நான் தான்
முன்வைத்த காலைப் பின் வைக்கும் வேலை என்னிடம் கிடையாது
தடந்தோள் உண்டு தடக்கை உண்டு
தடைகளை செய்வேன் தூள்தான் தூள்தான்
லட்சிய தாகம் இருக்கின்ற பேர்க்கு இதயங்கள் உடையாது

மக்கள் ஒரு புறம் தெய்வம் ஒருபுறம்
பக்கம் துணையென நிற்கும் இருபுறம்
எட்டுத் திசைகளும் தொட்டுத் தகர்த்திடக் கேட்கும் நம் முரசு

கோடிக்கரங்களும் நீரை விட்டன
கொள்கை விதைகளும் வேரை விட்டன
நாளை தாய்க்குலம் நம்மை வாழ்த்திட பூக்கும் நல்லரசு

குற்றம் செய்தவன் கொற்றவனாயினும்
கோட்டை கொத்தளம் கொண்டவனாயினும்
தர்மம் கெட்டது தட்டிக் கேட்பது என்தன் வாழ்க்கை நெறி

நோட்டைக் கொடுத்திங்கு ஓட்டைக் கேட்பவர்
கேட்டை விளைத்திங்கு நாட்டைக் கெடுப்பவர்
மூட்டை முடிச்சுடன் ஓட்டம் எடுத்திட செய்வான் விருதகிரி

டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டோரா
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டம்

டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டோரா
டமக்கு டமக்கு டம டம்டம்டோரா டமக்கு டமக்கு டம டம்டம்டம்

அவனியெல்லாம் புகழ் மணக்கும்

காஞ்சி மாநகர் வரலாறு

ஏகாம்பரநாதர் கோயில் வேகவதி ஆற்றின் கரையில், வடநாடும் தென்னாடும் வணங்கிப் போற்றும் தொண்டைமான் இளந்திரையன் என்ற குறுநில மன்னனால் ஆளப்பட்ட பழைய நகரம் காஞ்சி மாநகரமாகும். இக்காஞ்சி மாநகரத்தை மேலும் செப்பம் செய்து கடிநகராக்கினான், கரிகால் பெருவளத்தான் எனும் சோழப் பேரரசன்.
சைவம், வைணவம், சமணம், சாக்கியம் போன்ற சமயங்கள் காஞ்சி மாநகரைக் கண்டிருக்கின்றன. தெய்வநலம் மணக்கும் திருநகரம் காஞ்சி மாநகரமாகும். திரும்பிய பக்கமெல்லாம் கோவில்களும் கோட்டங்களும் நிறைந்துள்ள இந்நகரில் கச்சி ஏகம்பனே! என்றும், காஞ்சி வரதப்பா! என்றும் வணங்கி நிற்போர் பலர்.

புத்த சமயத்தைச் சார்ந்த அறவண அடிகள் காஞ்சியில் வாழ்ந்தார். இந்நகரில்தான் மாதவியின் மகளான மணிமேகலை துறவு பூண்டு புத்த சமயக் கொள்கைகளைக் கற்றறிந்தாள். அறவண அடிகள் தங்கியிருந்த அவ்விடம் இன்று அறவணஞ்சேரி என்றும், அறப்பணஞ்சேரி என்றும் வழங்கப்படுகிறது.

நாலந்தா பல்கலைக் கழகத்தின் தலைவராக விளங்கியவர் காஞ்சியில் பிறந்த தருமபாலர் என்னும் தத்துவ ஞானி ஆவார். திருப்பருத்திக்குன்றம் என்னும் இடத்தில் சமணர்கள் நிறைந்து வாழ்ந்த காரணத்தால் அவ்வூர் சமணக்காஞ்சி (ஜைனக்காஞ்சி) என்று வழங்கப்படுகிறது.

ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்த பல்லவர்களின் காலத்தில் கலைமகளும், திருமகளும் கலந்து உறைந்திருந்த காரணத்தால் கல்விக் கரையிலாக் காஞ்சி மாநகர் என்று அப்பர் சுவாமிகளால் அருளப்பெற்றது.

முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முக்கியமானதும், புராண வரலாற்றுப் பெருமைகள் நிறைந்ததுமான காஞ்சிபுரம் ஒரு கோவில் நரகமாகும்.

சிற்பக் கலையில் சிறந்து, கலை நுணுக்கத்தில் உயர்ந்து, வான்முட்டி நிற்கும் கோபுரங்கள் ஏராளம்! சிற்பங்களைச் செதுக்கி, அழகு படுத்தப்பட்ட உயர்ந்த தூண்கள் எழில் கூட்டுகின்றன. எங்கு நோக்கினும் எண்ணத்தைக் கொள்ளை கொள்ளும் எழில் கொஞ்சும் இறைவன் திருமேனிகள் கண்கொள்ளாக் காட்சியாகும்.

இவற்றுடன் இன்னும் பலப்பல சிறப்புகளைப் பெற்றதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரேஷு காஞ்சி என்று புகழப்பெற்ற காஞ்சிபுரத்தைப் பற்றி மேலும் அறிய:

http://www.ekambaranathartemple.org/

இன்றைய பாடல் காஞ்சி நகரைப் பற்றியதாக அமைகிறது.

அவனியெல்லாம் புகழ் மணக்கும்

திரைப்படம்: காஞ்சித் தலைவன்
இயற்றியவர்: ஆலங்குடி சோமு
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: எல்.ஆர். ஈஸ்வரி குழுவினர்
ஆண்டு: 1963

அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி நகரம் அது அழகுக்கெல்லாம் சிகரம்
அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி நகரம் அது அழகுக்கெல்லாம் சிகரம்

தோரணம் கட்டிய வீதியிலே - தங்கத்
தேரோடி வரும் வேளையிலே ஹே
தோரணம் கட்டிய வீதியிலே - தங்கத்
தேரோடி வரும் வேளையிலே ஹே
தோகை விரித்தே ஆடிடுவோம்
தோகை விரித்தே ஆடிடுவோம் காஞ்சித்
தரணியை வாழ்த்தியே பாடிடுவோம் காஞ்சித்
தரணியை வாழ்த்தியே பாடிடுவோம்

அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி நகரம் அது அழகுக்கெல்லாம் சிகரம்

கன்னம் சிவந்திட கூந்தல் கலைந்திட
என்ன நடந்தது கூறடி - உன்தன்
எண்ணம் கவர்ந்தவன் யாரடி?
கன்னம் சிவந்திட கூந்தல் கலைந்திட
என்ன நடந்தது கூறடி - உன்தன்
எண்ணம் கவர்ந்தவன் யாரடி?
தீர நடையாளனோ யானைப்படையாளனோ
தீர நடையாளனோ யானைப்படையாளனோ - மக்கள்
இடர் வெல்லும் கொடைவள்ளல்
நரசிம்மன் போன்றவனோ? - மக்கள்
இடர் வெல்லும் கொடைவள்ளல்
நரசிம்மன் போன்றவனோ?

அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி நகரம் அது அழகுக்கெல்லாம் சிகரம்

வலை வீசி மீன் பிடிக்க கடலிருக்கு நீ
விளையாடப் பல்லவத்தின் மடியிருக்கு
வலை வீசி மீன் பிடிக்க கடலிருக்கு நீ
விளையாடப் பல்லவத்தின் மடியிருக்கு
கலை காக்க நரசிம்மன் துணையிருக்கு
கலை காக்க நரசிம்மன் துணையிருக்கு கண்ணே
கனியமுதே உன்னால் என்தன் உயிரிருக்கு

அவனியெல்லாம் புகழ் மணக்கும் அருமைக் காஞ்சி நகரம் நம்ம
அருமைக் காஞ்சி நகரம் அது அழகுக்கெல்லாம் சிகரம்