செவ்வாய், 8 ஜூன், 2010

நான் மலரோடு தனியாக

தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி, பல வெற்றிப்படங்களைத் தந்து, பிற்காலத்தில் வில்லன் வேடத்திலும் புகழ்பெற்று தமிழ்த் திரை ரசிகர்களை மிகவும் கவர்ந்த நடிகர் "மக்கள் கலைஞர்" ஜெய்சங்கர். துப்பறியும் ஜேம்ஸ்பாண்ட் பாணியிலமைந்த திரைப்படங்கள் இவரது தனித் திறமையைப் பறைசாற்றின. அதனால் தமிழகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என இவர் அறியப்பட்டார். சண்டைக்காட்சிகளில் மட்டுமின்றி, காதல் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள், சோகக் காட்சிகள் முதலான அனைத்து வகையிலும் முதலிடத்தைப் பிடித்து ரசிகர்களின் மனங்களை மிகவும் கவர்ந்தவர் ஜெய்சங்கர்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களது மாபெரும் வரலாறு காணாத வெற்றிப்படமான "எங்க வீட்டுப் பிள்ளை' திரைப் படத்தில் நடனமாதாக அறிமுகமாகிப் பிற்காலத்தில் எம்.ஜி.ஆர். அவர்களுடன் இணைந்து "குடியருந்த கோவில்" திரைப் படத்தில் ஆடலுடன் பாடலைக் கேட்டு எனும் புகழ்பெற்ற பாடலில் நடனமாடிய எல். விஜயலட்சுமியுடன் ஜெய்சங்கர் இணைந்து நடித்த படம் இரு வல்லவர்கள், இப்படத்தில் இவரும் புகழ்பெற்ற வில்லன் நடிகர் ஆர்.எஸ். மனோகர் அவர்களும் உடன் பிறந்த அண்ணன் தம்பிகளாக இருந்தும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிந்து, இருவரும் திருடர்களாக வாழ்க்கை நடத்துவதாக அமைந்த கதையில் இவரும் எல். விஜயலட்சுமியும் இணைந்து நடித்த காதல் காட்சிகள் மென்மையான காதல் உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்தன.

நான் மலரோடு தனியாக

திரைப்படம்: இரு வல்லவர்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: வேதா
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1966

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

திங்கள், 7 ஜூன், 2010

நானொரு முட்டாளுங்க

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்றை யவை

என்று வள்ளுவர் வகுத்த கல்வியின் சிறப்பைத் தற்காலத்தில் யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. கல்வி என்பது முதற்கண் மாணவ மாணவிகளுக்குத் தாய் மொழியையும் தாய் மொழி வாயிலாகப் புகட்டப்படத்தக்க பாடங்களையும் புகட்ட வேண்டும். அதன் பின்னரே ஆங்கிலமும் பிற மொழிகளும், அவற்றின் வாயிலாகப் புகட்டப்படத்தக்க பாடங்களும் அமைதல் வேண்டும்.

கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு

என பாரதி புகழ்ந்த தமிழ்நாட்டிலே இன்று பள்ளி இறுதிப் படிப்பு முடிந்து பள்ளியிலிருந்து வெளிவரும் மாணவர்களும், பல்வேறு துறைகளிலே பட்டங்கள் வாங்கிக் கல்லூரிகளிலிருந்து வெளிவரும் மாணவர்களும் பெரும்பாலும் தமிழறிவு பெறாதவர்களாகவே இருத்தல் கண்டு மிகவும் வருத்தம் உண்டாகின்றது.

அது மட்டுமின்றி நமது நாடு உலகமெங்கும் போற்றி வணங்கத்தக்கதாக விளங்குவதற்குக் காரணமான தொன்மையான கலாச்சாரமும், திரைப்படங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வழியாகவும் இறக்குமதியாகி வருகின்ற மேல்நாட்டுப் பழக்க வழக்கங்களால் சீரழிவது நமது நாட்டுக்கே பெரும் கேடாக விளையக்கூடும்.

நானொரு முட்டாளுங்க

திரைப்படம்: சகோதரி:
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: ஆர். சுதர்சனம்
பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு
ஆண்டு: 1959


நானொரு முட்டாளுங்க
நானொரு முட்டாளுங்க ரொம்ப
நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
நானொரு முட்டாளுங்க

ஏற்கெனவே சொன்னவங்க ஏமாளியானாங்க
எல்லாந்தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க

நானொரு முட்டாளுங்க

கண்ணிறஞ்ச பெண்டாட்டிய கைதேன்னு சொன்னாங்க
ஏ...ஏஏஏ ஏ ஏ ஏ கைதே டேய்
கண்ணிறஞ்ச பெண்டாட்டிய கைதேன்னு சொன்னாங்க
முன்னாலே நின்னாக்கா மூஞ்சி மேல அடிச்சாங்க
பேசாத இன்னாங்க பொரட்டிப் பொரட்டி எடுத்தாங்க
பீஸ் பீஸா கீச்சாங்க பேஜாரா பூட்டுதுங்க

நானொரு முட்டாளுங்க

கால் பார்த்து நடந்தது கண் ஜாடை காட்டுது
பால் கொண்டு போறதெல்லாம் ஆல்ரவுண்டா ஓடுது
மேல் நாட்டு பாணியிலே வேலையெல்லாம் நடக்குது
ஏன்னு கேட்டாக்கா எட்டி எட்டி ஒதைக்குது

நானொரு முட்டாளுங்க

நாணமுன்னும் வெக்கமுன்னும் நாலு வகை சொன்னாங்க
நாலும் கெட்ட கூட்டமொண்ணு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க
ஆன வரை சொன்னேங்க அடிக்கத் தானே வந்தாங்க
அத்தனையும் சொன்ன என்னை இளிச்சவாயன் இன்னாங்க

நானொரு முட்டாளுங்க ரொம்ப
நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
நானொரு முட்டாளுங்க
நானொரு முட்டாளுங்க ரொம்ப
நல்லாப் படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
நானொரு முட்டாளுங்க
முட்டாளுங்க முட்டாளுங்க முட்டாளுங்க