வியாழன், 7 ஜனவரி, 2016

தென்னங்கீற்று ஊஞ்சலிலே

நமது பாரத தேசத்தில் பண்டைக் காலத்திலிருந்தே கடவுளர் பலர் இருப்பதாக நம்பி வழிபட்டு வருகிறார்கள் நம் மக்கள். அக்கடவுளர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட பணி இருப்பதாகவும் நம்புகிறோம். அதே போல் கிரேக்க நாட்டிலும் பல கடவுளர் உளர் எனும் நம்பிக்கையுடன் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட பணி இருப்பதாகவும் நம்பி வந்துள்ளனர். உலகத்தையும், பல்வித உயிர்களையும் படைக்கும் கடவுள் நம் நாட்டில் பிரம்மா என்று அழைக்கப்படுகிறார். பிரம்மன் படைத்த யாவற்றையும் தீய சக்திகளிடமிருந்து அதிலும் குறிப்பாக அசுரர்களிடமிருந்து காக்கும் கடவுள் விஷ்ணு என்று அழைக்கப் படுகிறார். அசுரர்களும் மானிடர்கள் போன்றொரே ஆவர். அரக்கர் என்று தமிழில் சொல்லபடுவோர், ஆனால் தீய செயல்களைத் தயங்காமல் செய்யும் குணமுடைய 
பாதகர்கள். நீதி, நேர்மையற்றவர்கள். கவிச்சக்கரவர்த்தி கம்பர் அரக்கர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில்

இரக்கமென்றொரு பொருள் இலாத நெஞ்சினர்
அரக்கரென்றுளர் பலர் அறத்தின் நீங்கினார்

என்று குறிப்பிடுகின்றார் தன் இராமாயண காவியத்தில்.

உரிய காலத்தில் யாவற்றையும் அழிக்கும் பணியை செய்யும் கடவுள் சிவன் என்று அழைக்கப் படுகிறார். 

சமீப காலமாக உலகில் நடைபெறும் வன்முறை, சாதிக் கலவரங்கள், பெண்களின் மேல் அடக்குமுறை மற்றும் பச்சிளம் குழந்தைகளையும் விட்டு வைக்காமல் கற்பழிக்கும் தீமைகள், காடுகளையும், விளை நிலங்களையும் திட்டமிட்டு அழிக்கும் அரசியல் சதிகள், நீதிமன்றங்கள் போதிய அளவில் இல்லாமை, நீதிபதிகள் பற்றாக்குறை, நீதித் துறை செயல்படும் காலம் மிகவும் குறுகியுள்ளமை, இலவசமாக இருந்த கல்வி விலைக்கு விற்கப்படும் கொடுமை, சாராயம் விற்றவர்கள் கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் வியாபார ரீதியில் நடத்தி மக்கள் உழைத்து ஈட்டும் பணம் அனைத்தையும் வழிப்பறி செய்வதற்கொப்பாகப் பறித்துக் கொள்ளும் பகல் கொள்ளை எனும் வகையில் நம் நாட்டில் மாத்திரமன்றி உலகம் முழுவதும் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் தொடர்ந்து நடைபெறுவதைக் காண்கையில் நமது பூமி இன்னும் எவ்வளவு காலம் இருக்கும் என்பதே ஐயமாக உள்ளது. 

வெறும் காகிதத்தில் அச்சிடப்பட்ட பணம் எனும் மாயப் பிசாசு மனிதர்களை மதியற்றவர்களாக ஆக்கி ஊழிக் காற்றைப் போல் அலைக்கழிக்கிறது. மனிதர்களை இவ்வாறு அழிவுப் பாதையில் இட்டுச் செல்வது யார்? 

அழிக்கும் கடவுளா அல்லது மனித வடிவில் திரியும் சாத்தான்களா?

61 ஆண்டுகள் நிறையப்பெற்ற நான் சிறுவனாயிருக்கையில் கிராமங்களில் என் தந்தை குடியிருந்திருக்கிறார். அங்கே அன்று கண்ட இயற்கை வளங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு பூமியின் பெரும் பகுதி கட்டடங்களாக மாறி விவசாயம் குறைந்து, நீர் வளம் கெட்டு, காற்றும் விஷமாகிப் போன நிலையைத் தற்காலம் காணுகையில் மனம் சொல்லொணாத் துயருறுகிறது. வருங்கால சந்ததிகள் வாழத் தேவையான வளங்களை நம் தலைமுறையினர் மனம் போன போக்கில் அழித்துத் தாங்களும் இன்புறாமல் பிறரையும் இன்புற விடாமல் தீய வழியில் செல்வது கவலைக்கிடமளிப்பதாக உள்ளது. இயற்கையை இன்பமயமாக்கும் பல உயிரினங்களும் பறவைகளும் இன்று இருக்கும் இடமே தேரியவில்லை. அத்தகைய ஒரு அரியதாகிக் கொண்டிருக்கும் உயிரினம் (endangered species) சிட்டுக்குருவி. 

சில ஆண்டுகளுக்கு முன்னர் (1987 அளவில்) நாம் அம்பத்தூரில் என் மனைவியுடன் குடியிருக்கையில் எங்கள் வீட்டுப் பலகணியில் அழகிய ஒரு சிட்டுக்குருவி கூடுகட்டி வாழ்ந்திருந்தது. அது என் கையில் வைத்து நான் தரும் தானியங்களைக் கொத்தித் தின்னும் காட்சியை நான் புகைப்படமெடுத்து வைத்திருக்கிறேன்.

உலகம் அழிவிலிருந்து மீள வேண்டுமெனில் இயற்கை வளங்கள் பாதுகாக்கப் பட வேண்டும். இரும்புத் தாது, நிலக்கரி, அலுமினியத் தாது, கருங்கல், மணல் முதலான பொருட்களுக்காக வனங்களும், மலைகளும் ஆற்றங் கரைகளும் தொடர்ந்து அழிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். நம் நாட்டில் சட்டவிரோதமான சட்டங்கள் பல நம் நாட்டை ஆள்வோரால் அடக்குமுறையில் ஆட்சி செய்ய வேண்டுமென்றே இயற்றப்படுகின்றன. இவற்றை மாற்றி மக்களுக்கு நன்மை தரும் சட்டங்கள் மட்டுமே நடைமுறையில் இருக்குமாறு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் மனித இனமும் மற்ற உயிரினங்களுடன் சேர்ந்து விரைவிலேயே அழிவதை யாரும் தடுக்க இயலாது.

இங்கே ஒரு சிட்டுக்குருவி தென்னங்கீற்றில் ஊஞ்சலாடிக்கொண்டு இயற்கை வளங்களின் இனிய சுகத்தை அனுபவித்துக் கொண்டு உடன் கலந்து மகிழத் தன் பெட்டைத் துணையைத் தேடுகின்றது. இனிமையான அந்த கானத்தைக் கேட்டு மகிழ்வோமா?



திரைப்படம்: பாதை தெரியுது பார்
இயற்றியவர்: ஜெயகாந்தன்
இசை: எம்.பி. ஸ்ரீனிவாசன்
பாடியோர்: பி.பி. ஸ்ரீநிவாஸ், எஸ். ஜானகி

album/paathai-theriyuthu-paar 

தென்னங்கீற்று ஊஞ்சலிலே 
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது ம்ஹ்ம்
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது

ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஅஆஆஆ

நீலமேகம் ஏழு வண்ண
ஆடையோடுலாவுது
வானை பூமி அழைக்குது
தொடு வானில் இரண்டும் கலக்குது

தென்னங்கீற்று ஊஞ்சலிலே 
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது ம்ஹ்ம்
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது

ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஅஆஆஆ

தென்னங்கீற்று ஊஞ்சலிலே 
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது ம்ஹ்ம்
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது

ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஅஆஆஆ

நீலக்கடல் ஓலமிட்டு
இங்கிருந்தும் கூவுது
அதுவே பாடி நடக்குது
கடலில் கலக்கத் துடிக்குது

தென்னங்கீற்று ஊஞ்சலிலே 
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது ம்ஹ்ம்
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டைத் துணையைத் தேடுது

ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஅஆஆஆ