செவ்வாய், 22 நவம்பர், 2011

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

உலகில் வாழும் உயிரினங்கள் யாவும் வாழ்வில் என்றும் இன்பத்தையே நாடுகின்றன. துன்பத்தை எதிர்கொள்ளத் தயங்குகின்றன. ஆனால் இன்பமும் துன்பமும் மாறி மாறி இயல்பாக வருவதால் மனமுடைந்து இயற்கையில் கிடைக்கும் இன்பத்தையும் எதிர் வரும் துன்பத்தை எண்ணி அஞ்சுவதாலும், நிகழ்ந்த துன்பத்தை எண்ணி வருந்துவதாலும் முழுமையாக அனுபவிக்க இயலாமல் போகின்றது. வாழ்வில் நமக்கு நேரும் துன்பத்தைத் தாங்குவதற்கு நாம் நம்மைத் தயார் நிலையில் வைத்துக் கொள்வதே இவ்வாறான குழப்பத்தைத் தவிர்க்கும் வழி ஆகும்.

தினமும் உழைத்தால் மட்டுமே தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் இவற்றைப் பெற இயலும் எனும் நிலையிலேயே பெரும்பாலான மக்கள் வாழும் நம் நாட்டில் ஒரு சிலரைத் தவிர எல்லோரும் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப வருவாயிலும் மகிழ்ச்சிகரமாக வாழ வழி காண்பதில் வெற்றி கண்டுள்ளனர். இதற்குக் காரணம் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து பிறர் துன்பத்தைத் தனதாகக் கருதி ஒற்றுமையுணர்வுடன் வாழ்வதே ஆகும். அதே சமயம் அமெரிக்கா முதலான மேலை நாடுகளில் மக்கள் தங்களது தேவைகளைக் கட்டுப்படுத்த இயலாமல் பெரும்பாலானோர் கடனாளிகளாகவே வாழ்கின்றனர்.

இத்தகைய போக்கினால் இன்று அமெரிக்கா பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது ஆனால் இந்தியாவில் இத்தகைய நெருக்கடி இல்லை. இதற்குக் காரணம் தங்களது திறமையான ஆட்சியே என்று இந்தியாவின் நிதியமைச்சர் பெருமை பீற்றிக் கொள்கிறார். இதை விடப் பெரிய மோசடி இருக்க முடியாது. நம் நாட்டில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களைச் சுரண்டி மக்களுக்கு இலவசமாகக் கிடைத்த கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை வியாபாரமாக்கியும் பல விதமான புதிய வரிகளை விதித்தும் மக்கள் ஈட்டும் வருவாயில் கணிசமான தொகையை வரியாக வசூலித்து வருவதாலேயே நம் நாட்டின் பொருளாதாரம் ஏனைய நாடுகளை விடவும் மேம்பட்டதாகத் தோற்றமளிக்கிறது. இது வெறும் தோற்றமே. உண்மை நிலையை தினமும் ஆராய்ந்து பல செய்தி நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களை கவனத்தில் கொண்டால் அறியலாகும்.

இத்தகைய மோசடிகளிலிருந்து அவதிப்படும் மக்களைக் காத்து வருபவர்கள் பெரும்பாலும் மக்களிடையே உள்ள பல நல்லவர்கள் ஆவர். இத்தகைய நல்லோர் தாம் ஈட்டும் பொருளில் தமது தேவைக்கு அதிகமாக உள்ளதைப் பொதுநலத்துக்கு செலவு செய்து எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் எனும் உயரிய நோக்கத்துடன் வாழ்ந்து வருவதாலேயே நம் நாடு எத்தகைய இக்கட்டிலும் சிக்காமல் தப்பித்துப் பிழைத்திருக்கிறது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் எனும் பழமொழிக்கொப்ப, பல ஆண்டுகளாக நல்லவர்கள் போல் நடித்து மக்களைச் சுரண்டி வாழ்ந்திருந்த பலரது முகமூடிகள் கழன்று அவர்கள் செய்த குற்றங்கள் யாவும் வெளிவந்த வண்ணம் இருக்கும் இன்றைய சூழ்நிலையால் விரைவில் நமது நாட்டில் மோசடிப்பேர்வழிகள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு என்றும் உண்மையாய் உழைக்கும் நல்ல மனம் படைத்த திறமைசாலிகள் ஆட்சிப் பொறுப்பேற்கும் காலம் விரைவில் வரும் எனும் நம்பிக்கை மனதில் எழுகிறது.

இனி என்றும் துன்பமில்லை, சோகமில்லை.நாம் பெரும் இன்ப நிலையெய்தும் காலம் வெகு தூரமில்லை.

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

திரைப் படம்: புனர் ஜென்மம்
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: டி. சலபதி ராவ்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1961

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெரும்
இன்ப நிலை வெகு தூரமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெரும்
இன்ப நிலை வெகு தூரமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

இனி வஞ்சமும் பஞ்சமும் இல்லை
இனி வஞ்சமும் பஞ்சமும் இல்லை
நெஞ்சை வாட்டிடும் கவலைகள் இல்லை
இனி வஞ்சமும் பஞ்சமும் இல்லை
நெஞ்சை வாட்டிடும் கவலைகள் இல்லை
கொடும் வாதைக்கும் போதைக்கும் வேலையில்லை எங்கள்
வாழ்வினில் துயர் வரப் பாதையில்லை

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

அன்புத் தாயெனும் கோயிலை நாடி
அன்புத் தாயெனும் கோயிலை நாடி
அலை பாயுது ஆசைகள் கோடி
அன்புத் தாயெனும் கோயிலை நாடி
அலை பாயுது ஆசைகள் கோடி
என்னை வாவென்று தாவிடும் பாசக் குரல்
வந்து வாழ்த்திடும் போற்றிடும் நேசக் குரல்

என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெரும்
இன்ப நிலை வெகு தூரமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை

சிந்தித்தால் சிரிப்பு வரும்

நீதியும் குறித்து நாம் ஒவ்வொருவரும் பேசாத நாளில்லை. நாட்டிலும் உலகின் பல்வேறு இடங்களிலும் நடக்கும் மோசடிகள் குறித்தும் பிற குற்றங்கள் குறித்தும் வாய் கிழியப் பேசும் நாம் நம்மளவில் உண்மையில் நேர்மையாக வாழ்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொண்டோமேயானால் பெரும்பாலும் இல்லை என்பதே பதிலாகக் கிடைக்கிறது. பிறரிடம் தாராள மனப்பான்மையையும் உண்மையையும் நேர்மையையும் எதிர்பாக்கையில் நாம் அதே போன்ற நற்குணங்களுடன் விளங்க எவ்வித முயற்சியும் நாம் மேற்கொள்வதில்லை. ஐம்பதினாயிரம் ரூபாய் கொடுத்து ஒரு புதிய கணிணியை விலை கொடுத்து வாங்கிவிட்டு அதுகுறித்துப் பெருமிதத்துடன் நமது நண்பர்களிடத்திலும் பிறரிடத்திலும் பேசும் நாம் மேலும் ஒர் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து அக்கணிணி இயங்கத் தேவையான மென்பொருளை வாங்கத் தயங்குகிறோம். அந்த ஐந்தாயிரம் ரூபாயை மிச்சப்படுத்த நமக்கு அந்தக் கணிணியை விற்பவர் தரும் திருட்டுத் தனமான மென்பொருளை நிறுவுகிறோம். இதன் காரணமாக கணிணியில் பல செயல்பாடுகள் முறையாக இயங்காமல் நாளடைவில் கணிணியில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டு அந்தக் கோளாறுகளை சீர்படுத்த கணிணியை நமக்கு விற்றவரது சேவையையே பெரும்பாலும் அணுகுகிறோம். அவர் நமது நிலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நம்மிடம் மேலும் அதிகத் தொகையைத் திரும்பத் திரும்பப் பெறுகிறார்.ஆரம்பத்திலேயே தரமான ஒரிஜினல் மென்பொருளை கணிணியில் நிறுவினால் கணிணி முறையாக என்றும் இயங்குவதோடு இது போன்ற கோளாறுகளால் வீண் செலவும் தவிர்க்கப் படுகிறது.

உழைப்பின் உயர்வு குறித்து மிகவும் சிறப்பாகப் பேசும் நாம் உழைத்து வாழ்கிறோமா? உழைக்காமல் வரும் இலவசங்களை நாடி ஓடுகிறோமா? இலவசங்களுக்காகக் கொள்கைகளை விட்டுக் கொடுக்கிறோமா? எனும் கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொண்டோமானால் நம்மில் பலர் நம்மைக் குறித்தே வெட்கத்துடன் எண்ணி தலைகுனிய வேண்டிவரும். உண்மையும் நேர்மையும் உள்ளன்பும் கனிவும் நிரம்பிய உத்தம மனிதர் ஒருவர் பொருளாதாரத்தில் நலிவுற்றிருப்பின் அவரை யாரும் போற்றிப் புகழ்வதில்லை. பாவம், அவன் ஒரு பரதேசி, பிச்சைக்காரன், பிழைக்கத் தெரியாதவன் என்றெல்லாம் அவரைப்பற்றி இழிவாகப் பேச நம்மில் பலர் என்றும் தயங்குவதில்லை.

நேர்மையாக உழைத்து பொதுமக்களுக்கு உண்மையான சேவைபுரியும் எண்ணத்துடன் ஒருவர் தேர்தலில் பெரும் பொருட்செலவு செய்யாமல் எளிமையாகப் போட்டியிட்டால் அவரை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக யார் அதிகக் கூட்டம் சேர்த்துத் தங்கள் வலிமையைக் காட்டுகிறார்களோ அவர்களையே தேர்ந்தெடுக்கிறோம். அவரது தகுதிகளைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. நமக்கு ஏதேனும் துன்பம் வருகையில் பிறரது உதவியைத் தவறாமல் நாடும் நாம் நம் கண் முன்னே பிறர் துன்பப்படுகையில் முன்வந்து உதவிபுரியத் தயங்குகிறோம். அவ்வாறு வேறு ஒருவருக்கு உதவுவதால் நம் பணிகள் தடைப்பட்டு நம் வாழ்வு பாதிக்கப்படுவதையே பெரிதும் எண்ணிக் கவலை கொள்கிறோம்.

உண்மையில் நாம் பிறரது நன்மையை எண்ணிப் பிறருக்காக ஏதேனும் ஒருவகையில் உழைத்தும் உதவியும் வாழ்வோமாகில் நமக்கு ஏதேனும் துன்பம் நேர்கையில் நாம் யாரையும் அணுகாமலேயே நமக்கு ஓடிவந்து உதவி புரியப் பலர் வருவர். இது இயற்கை நியதி. பிறருக்கு நாம் நன்மை செய்கையில் நமக்குப் பிறரும் நன்மையே செய்வர். பிறர்க்குத் தீங்கிழைப்பின் நமக்குப் பிறரிடமிருந்து பெரும்பாலும் தீமையே விளையும். மனிதருக்கும் விலங்குகளுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இத்தகைய நல்லறிவே ஆகும்.

நம்மையும் சேர்த்து சமுதாயத்தில் பெரும்பாலோர் இந்த எளிய உண்மையை உணராது போலியாக வாழ்வதைப் பற்றி சிந்தித்தால் சிரிப்பு வரும், மனம் நொந்தால் அழுகை வரும்.

சிந்தித்தால் சிரிப்பு வரும்

திரைப்படம்: செங்கமலத் தீவு
இயற்றியவர்: திருச்சி தியாகராஜன் Trichy Thyagarajan
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962

சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
தென்றலும் புய்லாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
தென்றலும் புய்லாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்

மோசடிப் பாதையிலே காசினை சேர்த்தாலும்
மோசடிப் பாதையிலே காசினை சேர்த்தாலும்
பாசமுடன் புகழ்பாடி பலபேரும் வரவேற்பார்
பாசமுடன் புகழ்பாடி பலபேரும் வரவேற்பார்
வாசமில்லா மென்மலராய் வாடிய ஒரு பூங்கொடியாய்
வாழ்வினில் நல்லவனே தாழ்வினை அடைவதா?

சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்

வனம் தனிலே திரியும் பறவை மிருகம் எல்லாம்
வனம் தனிலே திரியும் பறவை மிருகம் எல்லாம்
வயிற்றுப் பசியாலே வாடி மடிவதில்லை
வயிற்றுப் பசியாலே வாடி மடிவதில்லை
மனதிலே சிறந்தவனாம் மண்ணிலே உயர்ந்தவனாம்
மனிதனை நினைத்தாலே மாபெரும் வெட்கமடா

சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்
தென்றலும் புய்லாய் மாறி மாறி வரும் மானிடரின் வாழ்வே
சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம் நொந்தால் அழுகை வரும்

நாளை நமதே நாளை நமதே

மனிதரில் நான்கு வகையுண்டு. முதலாவது வகையைச் சேர்ந்தவர் தன்னையே தியாகம் செய்தாகிலும் பிறர் நலம் பேணுபவர், தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர். செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்று புகழப்பெற்ற சீதக்காதி முதலிய வள்ளல்கள் இவ்வகையில் அடங்குவர். இரண்டாம் வகை தானும் நன்கு வாழ்ந்து பிறரும் நலமாய் வாழப் பாடுபடுபவர். நம்முடன் அன்றும் இன்றும் என்றும் சமுதாயத்தில் ஒன்று கூடி வாழ்ந்து வரும் பெரும்பான்மையினர் இத்தகைய மனிதர்களாகவே விளங்குகின்றனர். மூன்றாம் வகையினர் பிறரது துன்பம் துடைக்க எவ்வித முயற்சியும் செய்யாது தன்னுடைய தேவைகளை மட்டும் பூர்த்தி செய்துகொள்ளும் நோக்கில் வாழும் சுயநலவாதிகள். அறுத்த விரலுக்கு சுண்ணாம்பு தர மாட்டாதவர். நான்காம் வகையினர் பிறரைக் கெடுத்து அதில் சுயலாபம் தேடுபவர். அடுத்தவர் அழிவிலேயே தன் வாழ்வு இருப்பதாகக் கருதும் பேதைகள். பிறரது துன்பத்திலே இன்பம் காணும் துக்ககரமான மனம் படைத்தவர்கள். ஐந்தாம் வகை தானும் அழிந்து பிறரையும் அழிப்பவர். குரங்கு தான் கெட்டதுமன்றி வனத்தையும் அழித்ததாம் என்பது போல் தன்னையும் அழித்துக் கொண்டு பிறரையும் அழிவுப் பாதையில் தள்ளுபவர். அறிவு முற்றிலும் மங்கிப் பைத்தியம் பிடித்த நிலையில் வாழ்வோர். தீவிரவாதிகளும் பயங்கரவாதிகளும் இதில் அடங்குவர். இவர்களால் இவர்களுக்காகிலும் பிறருக்காகிலும் என்றும் எவ்வித நன்மையும் விளைய வாய்ப்பில்லை.

சமுதாயத்தில் பெரும்பான்மையோர் சுயநலமின்றித் தன்னைப் போல் பிறரை எண்ணி தானும் நலமாக வாழ்ந்து பிறரையும் நல்வாழ்வு வாழவைக்க உதவுவோராக இருக்கையில் ஏன் நாட்டில் சமூகநீதி காக்கப்படாமல் ஏழைகள் ஏழைகளாகவே இருந்து பசியும் பஞ்சமும் தலைவிரித்தாடும் நிலை நாட்டில் நிலவுகிறது? என்ற ஒரு கேள்வி எழுவது இயல்பே. இதன் காரணம் நல்லவர்களான இவர்கள் ஒன்று கூடி ஒத்த கருத்துடன் பணிபுரியாமையால் தீமையைக் கண்டு ஏற்படும் அச்சத்தாலும் பல்வேறு சூழ்நிலைகளால் பிறரிடம் எழும் ஐயத்தாலும் இவர்களுள் ஒரு சாரார் செயலற்றுக் கிடக்கின்றனர். மீதமுள்ளவர்களுள் மிகவும் குறிப்பிடத்தக்க சிலரே அச்சம், ஐயம் ஏதும் இன்றி நன்மை விளையப் பாடுபடுகின்றனர். அத்துடன் முதல் வகையினரது முயற்சிக்கு ஒத்துழைத்து சமுதாய நலம் காக்கத் தொடர்ந்து உழைக்கின்றனர். அதேசமயம் சுயநலம் கொண்ட மூன்றாவது வகையினரும், பிறரைக் கெடுத்துத் தன் லாபத்தைப் பெருக்கும் நான்காம் வகையினரும் பல்வேறு வகைகளில் கூட்டுச் சேர்ந்து ஏனைய மக்களைச் சுரண்டி வாழ்வதில் எளிதில் வெற்றி காண்கின்றனர்.

இத்தகைய நிலைமை கண்டு முதல் இரண்டு வகைகளைச் சேர்ந்த சாமான்ய மக்களில் ஓரு சாரார் மனம் நொந்து சமுதாயத்திற்கு என்றும் கெடுதலே தொடர்ந்து விளையும் போலும். நீதி, நேர்மை, உண்மை, அஹிம்சை எனக் கூறப்படுவன யாவும் பொருளற்ற வெறும் வார்த்தைகள் போலும் என மதி மயங்கிச் சோர்ந்து போய் தீயவர்களின் அடக்குமுறைக்கு என்றும் அடிபணிந்தே வாழத் தலைபடுகின்றனர். இயற்கையின் ரகசியம் ஒன்றை நாம் யாரும் அறிந்துகொள்ள உண்மையில் முயலாது நம் அறிவை சரிவரப் பயன்படுத்தாமல் ஒரு இயந்திரம் போல் வாழ்வதே இத்தகைய மனமயக்கத்தை விளைவிக்கிறது. அந்த ரகசியமாவது, தீய குணம் படைத்த சுயநலவாதிகள் எவ்வளவு ஒற்றுமையுடன் செயல்பட்டுப் பிறரை ஏமாற்றிக் கொள்ளையடிப்பதில் வெற்றி கண்டபோதிலும் என்றாவது ஒரு நாள் தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுப் பலரும் பல சிறு சிறு குழுமங்களாகப் பிரிந்து ஒருவரோடு ஒருவர் பிணங்கிய நிலையில் பரஸ்பரம் நம்பிக்கையற்ற மனோநிலையில் முழுமனதான ஒத்துழைப்பின்றி செயல்புரியத் தலைபடுகின்றனர். அந்த சமயத்தில் ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து தங்களது குற்றங்கள் அனைத்தையும் தாங்களாகவே அனைவரும் அறியும் வண்ணம் பறைசாற்றி விடுகின்றனர்.

இதுவே சத்தியத்தின் மஹிமை. தன் ஆயுட்காலம் முழுவதும் உத்தமன் போல் நடித்து மக்களை ஏமாற்றி வந்த ஒரு கபட நாடக சூத்திரதாரியும் வேடம் கலைந்து தடுமாறும் நிலை காண்கிறோம். தன்னைப் பற்றிய உண்மை இவ்வாறு வெளியான பின்னர் அதற்கு மேல் இவர்கள் போன்ற தீயவர்களும் அவனது குற்றங்களில் பங்குபெற்று செயல்பட்ட மற்றவர்களும் வேஷம் கலைந்த பின்னர் மீண்டும் நல்லவர் வேஷம் போட எவ்வளவு முயன்றாலும் ம்டியாது. சாயம் வெளுத்தது வெளுத்தது தான். இவ்வாறு தீயவர்களுக்குள் ஒற்றுமை குன்றி அவர்கள் பலஹீனர்களாக இருக்கும் சமயத்தை முதல் இரண்டு வகையினரான நல்லோர் பெருமக்கள் நன்கு பயன்படுத்தி ஒரு பெரும் போராட்டத்தைத் துவக்கித் தொடர்ந்து நடத்திட வெற்றி நிச்சயம். இது சரித்திரம் கண்ட உண்மை.

பாரதத் தாயின் புதல்வர்கள் நாம் எனும் ஒரே எண்ணத்தைக் கைக்கொண்டு அத்தாயின் செல்வங்களைத் தங்கள் சுயநலம் கருதிச் சூறையிட்டு வரும் சூது வாது நிரம்பிய சுரண்டல் பேர்வழிகளிடமிருந்து நம் தாய் மண்ணைக் காக்கப் போராடுவோம். எல்லா வளங்களும் நாட்டில் இருந்த போதிலும் அபரிமிதமான தானியங்கள் குவிந்து கிடந்த போதிலும் அரை வயிற்றுக் கஞ்சிக்கும் அத்தியாவசியமான மருத்துவ சிகிச்சைக்கும் உரிய வழியின்ற அநாதைகள் போல் தவித்து அல்லலுறும் நம் சகோதர சகோதரிகளுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் யாவும் இன்றும் என்றும் தொடர்ந்து கிடைக்கவும். தீயோரை அழித்து நல்லோர் என்றென்றும் தொடர்ந்து ஆளும் நிலை நாட்டில் ஏற்பட்டு நிலைத்திருக்கவும் ஒன்று பட்டுப் போராடுவோம். வெற்றி பெறுவோம். நாளை என்றும் நமதே!

நாளை நமதே நாளை நமதே

திரைப்படம்: நாளை நமதே
இயற்றியவர்: Muthulingam கவிஞர் முத்துலிங்கம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், டி.எம். சௌந்தரராஜன்

அன்பு மலர்களே! நம்பி இருங்களே
நாளை நமதே இந்த நாளும் நமதே
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே இந்த நாளும் நமதே

தாய் வழி வந்த தங்கங்களெல்லாம்
ஒர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே
காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து
காய் கனியாகும் நமக்கென வளர்ந்து நாளை நமதே

நாளை நமதே நாளை நமதே

நாளை நமதே நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே

பாசமென்னும் நூல் வழி வந்த வாச மலர்க் கூட்டம்
ஆடும் அழகில் அமைவது தானே வாழ்க்கைப் பூந்தோட்டம்
பாசமென்னும் நூல் வழி வந்த வாச மலர்க் கூட்டம்
ஆடும் அழகில் அமைவது தானே வாழ்க்கைப் பூந்தோட்டம்
மூன்று தமிழும் ஓரிடம் நின்று பாட வேண்டும் காவியச் சிந்து
மூன்று தமிழும் ஓரிடம் நின்று பாட வேண்டும் காவியச் சிந்து
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

நாளை நமதே நாளை நமதே

வீடு என்னும் கோயிலில் வைத்த வெள்ளி தீபங்களே
நல்ல குடும்பம் ஒளிமயமாக வெளிச்சம் தாருங்களே
நாடும் வீடும் உங்களை நம்பி நீங்கள் தானே அண்ணன் தம்பி
எதையுமே தாங்கிடும் இதயம் என்றும் மாறாது

நாளை நமதே நாளை நமதே

தாய் வழி வந்த தங்கங்களெல்லாம்
ஒர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே
காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து
காய் கனியாகும் நமக்கென வளர்ந்து நாளை நமதே

நாளை நமதே நாளை நமதே

செவ்வாய், 15 நவம்பர், 2011

பாதுகையே துணையாகும் எந்நாளும்

பாரத தேசத்தின் பெருமைக்குக் காரணமாய் விளங்கும் மனித நெறிகள முறையாகக் கடைபிடித்து உத்தமனாய், சத்திய சந்தனாய், தந்தை சொல் காத்த தனயனாக, ஏகபத்தினி விரதனாக, தன்னை நம்புவோரைக் காப்பவனாக, உலகிலுள்ள அனைவரையும் சகோதர பாசத்துடன் அரவணைப்பவனாக விளங்கிய உன்னத புருஷன் ராமனின் கதையை விளக்குவது ராமாயணம். இந்தியாவின் பழம்பெரும் இதிகாச காவியமான இராமாயணத்தில் அதனை சமஸ்கிருத மொழியில் ஆதியில் எழுதிய வியாசர் இராமனைக் கடவுளுடைய அவதாரமாக விவரிக்கவில்லை. இக்காவியத்தைத் தமிழில் புனைந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் இராமனது அவதாரம் குறித்து மிகவும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

அயோத்தி நகரை ஆண்டுவந்த இஷ்வாகு குலத்தைச் சேர்ந்த தசரத மன்னன் நீண்ட காலம் புத்திரப் பேறின்றி வாட குலகுரு வசிஷ்டர் ஆலோசனைப்படி ரிஷ்யசிருங்க முனிவரைக் கொண்டு புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததன் பலனாக அவனது முன்று மனைவியர் கௌசல்யா, கையேயி, சுமத்திரை ஆகியோர் கருவுற்று ராமன், பரதன் மற்றும் லக்ஷ்மண சத்ருக்கனர்களை முறையே பெற்றெடுத்து வளர்த்து வருகையில் உரிய காலம் வந்ததும் மன்னவன் தசரதன் தன் மூத்த ம்கனான ராமனுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்து வைக்க ஏற்பாடு செய்தான். இது கேட்ட அரண்மனைப் பணிப்பெண்ணான கூனி எனப்படும் மந்தரை கைகேயியின் மனதைக் கலைத்து, ஒரு முறை சம்பராசுரன் எனும் அரக்கனுடன் தசரதன் போர் செய்கையில் தசரதன் மயங்கி விழ, அவனது தேரை வேறு இடத்திற்கு ஓட்டிச் சென்று அவனது உயிரைக் கைகேயி காத்ததனால் மகிழ்ந்த தசரதன் அவளுக்கு ஏதேனும் இரு வரங்கள் தர விரும்புவதாகக் கூற, அவற்றைப் பின்னர் தேவைப்படுகையில் பெற்றுக்கொள்வதாக அவள் கூறிய சம்பவத்தை நினைவுபடுத்தினாள்.

இரு வரங்களுள் ஒன்றால் பரதன் நாடாளவும் மற்ற வரத்தால் ராமன் 14 ஆண்டுகள் வ்னவாசம் செய்யவும் மந்தரையின் துர்ப்போதனையின் படி கைகேயி மன்னனிடம் வரம் கேட்டாள். மன்னன் எவ்வலவோ மன்றாடிக் கெஞ்சி ராமனைக் காட்டுக்கனுப்பச் சொல்லாதே எனக்கெஞ்சியும் அவள் பிடிவாதமாக இருக்கவே மன்னன் என்னவோ செய்த்கொள், இனி என் முகத்தில் முழிக்காதே என் பிணத்தையும் நீயும உன் மகன் பரதனும் தீண்டக் கூடாது என்று கடுமையாகக் கூறிவிட்டு மூர்ச்சையாகிவிட்டான். இந்நிலையில் ராமனை வரவழைத்த கைகேயி மன்னனிடம் தான் பெற்ற வரங்கள் பற்றிக் கூறி அவற்றின் படி பரதன் நாடாள ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டுமென அரசர் சொன்னார் என்றாள்.

"ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனேயாள நீ போய்த்
தாழிருஞ்சடைகள் தாங்கித் தாங்கருந்தவ மேற்கொண்டு
பூழிவெங்கான நண்ணிப் புண்ணியத் துறைகளாடி
ஏழிரண்டாண்டின் வாவென்றியம்பினன் அரசன் என்றாள்"

இதனைக் கேட்ட ராமன் மன்னன் சொல்லவில்லையானால் என்ன நீங்கள் சொன்னால் நான் கேட்க மறுப்பேனா? பரதன் என் தம்பியல்லவா? அத்துடன் என்னை விடவும் நாடாள அவனே சிறந்தவன் அவன் பெற்ற செல்வம் நான் பெற்ற செல்வமேயல்லவா? என்று பெருந்தன்மையுடன் கூறினான்.

"மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோ என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ?"

என்று சொல்லிப் பின் சீதாவுடனும் லக்ஷ்மணனுடனும் வனவாசம் சென்றுவிட, இதைக் கேள்விப்பட்ட மன்னன் மனமுடைந்து மரணமடைந்த நிலையில் சத்ருக்கனனுடன் தன் தாயின் தந்தையான தாத்தா கேகய மன்னனின் நாட்டுக்குச் சென்றிருந்த பரதன் திரும்பி வந்து தந்தை இறந்ததைக் கேட்டு சொல்லொணாத் துயருற்றுப் பின்னர் நடந்தவற்றைக் கேட்டுத் தன் தாயின் மேல் கோபம் கொண்டு அவளைத் தூற்றிய பின்னர் மந்திரி பிரதானிகளுடன் வனம் சென்று ராமனைத் திரும்ப வருமாறு அழைத்தான். ராமன் தந்தையின் சொல்லைக் காத்தல் தனயனின் க்டமையாதலால் பரதன் நாடாள்வதும் ராமன் வனவாசம் செய்வதுமான தந்தையின் கட்டளைகளை அவசியம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தவே, பரதன் நாடாண்டான் எனும் அவப்பெயர் தனக்கு உண்டாகாமல் இருக்க வேண்டுமெனில் தான் அயோத்தி நகருக்குள்ளே செல்லாமல் இராமனின் பாதுகையே நாட்டை ஆள வேண்டுமெனவும் 14 ஆண்டுகளில் இராமன் திரும்பாவிடில் தானும் தன்னுயிரை மாய்த்துக் கொள்வதாகவும் சூளுரைக்கிறான்.

இந்தக் காட்சிகள் சிவாஜி கணேசன் பரதனாகவும், என்.டி. ராமராவ் ராமனாகவும், நாட்டியப் பேரொளி பத்மினியாகவும் நடித்து 1958ஆம் ஆண்டு வெளிவந்த சம்பூர்ண இராமாயணம் திரைப்படத்தில் மிகவும் அழகுறப் படமாக்கப் பட்டுள்ளன. இராமனின் பாதுகைகளைப் பெற்று அவற்றைக் கொண்டு நாடாளும் பரதன் குறித்த ஒரு அருமையான பாடல் இன்றைய பாடலாக வருகிறது:

Video:

http://www.thamizhisai.com/video/tamil-cinema/sampoorna-ramayanam/paathugaiye-thunaiyaagum.php

Audio:

பாதுகையே துணையாகும் எந்நாளும்

திரைப்படம்: சம்பூர்ண ராமாயணம்
இயற்றியவர்: தேவொலபள்ளி க்ரிஷ்ன சாஸ்திரி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1958

பாதுகையே பாதுகையே
பாதுகையே துணையாகும் எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும் எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும்

பூவுலகெல்லாம் போற்றிடும் தேவா
பூவுலகெல்லாம் போற்றிடும் தேவா
பாதுகையே துணையாகும் எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும்

நீதிய்ம் நேர்மையும் நெறியோடு இன்பமும்
நிலவிடவே எங்கள் மனத்துயர் மாறவே
நீதிய்ம் நேர்மையும் நெறியோடு இன்பமும்
நிலவிடவே எங்கள் மனத்துயர் மாறவே

பாதுகையே துணையாகும் எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும்

உனது தாமரைப் பதமே உயிர்த்துணையாகவே
மனதினில் கொண்டே நாங்கள்
வாழுவோம் இங்கே ராமா
பதினான்கு ஆண்டும் உன்தன் பாதுகை நாட்டை ஆளும்
அறிவோடு சேவை செய்ய அருள்வாயே ராமா

தயாளனே சீதாராம சாந்த மூர்த்தியே ராமா
சர்க்குணாதிபா ராமா ஸ்ர்வரக்ஷகா ராமா
தயாளனே சீதாராம சாந்த மூர்த்தியே ராமா
தந்தை சொல்லைக் காக்கும் தனயனான ராமா
தவசி போலக் கானிலே வாசம் செய்யும் ராமா
தத்வ வேத ஞானியும் பக்தி செய்யும் ராமா
சத்ய ஜோதி நீயே நித்யனான ராமா
சத்ய ஜோதி நீயே நித்யனான ராமா

நித்யனான ராமா ராம் நித்யனான ராமா ராம்
நித்யனான ராமா ராம் நித்யனான ராமா ராம்
நித்யனான ராமா ராம் நித்யனான ராமா ராம்
நித்யனான ராமா ராம் நித்யனான ராமா ராம்

நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்

கடவுளை நம்பாமல் பகுத்தறிவுப் பாதையில் தாமும் நடந்து உலகையும் வழிநடத்துவதாகச் சொல்லிக் கொண்ட ஆஷாடபூதிகள் அனைவரது பொய்முகங்களும் உண்மையெனும் தெய்வ சக்தியால் வெளியாகி விட்டன. தன் ஆயுள் முழுவதும் மக்களைப் பொய்யான அன்பு வார்த்தைகளாலும் இனப்பற்று, மொழிப்பற்று, ஏழை பணக்காரன் என்பன போன்ற வேற்றுமைகளைக் காட்டியும் ஏமாற்றி வந்தவரின் முகத்திரை கிழிந்து விட்டது. வெளியே பயமில்லாதது போல் காட்டிக்கொண்டு இன்னமும் தான் சத்தியசந்தன் என்று சாதித்தபோதிலும் உண்மை என்ன என்பதும், குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுப்பதும் உலகில் உள்ள உண்மையான பகுத்தறிவாளர்கள் அனைவரும் அறியும் வண்ணம் தெளிவாகி விட்டது.

எத்தனை கோடிகள் பொன்னும் பொருளும் மண்ணும் மணிமுடியும் ஆடை ஆபரணங்களும் சேர்த்தாலும் அவை யாவும் ஒரு நொடியில் மண்ணோடு மண்ணாகிவிடக்கூடும் என்பதுவே விதி. அதனை மனிதன் தன் சிறுமதியால் என்றும் மாற்றிட இயலாது. மனிதராய்ப் பிறந்த நாம் உண்மையில் தேட வேண்டியது நீரால் நனையாத, காற்றால் கரையாத, நெருப்பால் எரியாத, காலத்தால் அழியாத அனைத்திற்கும் மேலாக நின்று அனைத்தையும் படைத்தும் காத்தும் அழித்தும் ரக்ஷிக்கும் அந்த ஆண்டவன் எனும் ஆதிசக்தியை மட்டுமே. ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் யாவையுமாகி விளங்கும் இறைசக்தியான அவனன்றி ஓர் அணுவும் அசையாது.

அண்ணாமலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்
பெண்ணே, இப்பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.

என்று திருவண்ணாமலையில் உறையும் இறைவனின் பெருமையை திருநாவுக்கரசர் விளக்குகிறார்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்

மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறந்து இறந்து இன்ப துன்பங்களுக்குள் சிக்கித் துயருராமல் பிறவியாகிய பெரும் கடலை நீந்திக் கடந்து என்றும் பிறவியில்லாத பெருநிலையை அடைய விரும்புவோர் செய்யத் தக்கது இறை வழிபாடு ஒன்றேயாகும். இறை வழிபாடு என்பது நாம் காணும் அனைவரிடத்திலும் அனைத்து உயிகள் மற்றும் ஜடப்பொருட்களிடத்திலும் இறைவன் உறைவதை அறிவதேயாகும். அத்தகைய மெய்ஞானம் அடையப் பெற்றவர் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்கத் துணையாக விளங்கும் இறைவனின் திருவடிகளையே சென்று அடைவதுறுதி.

பக்தி மார்க்கத்தில் மனதைச் செலுத்தி அழியும் பொருட்களின் மேல் கொண்ட பற்றுக்களைக் களைந்து அழியாப் பொருளை அடைய வேண்டித் தவம் செய்வோரே அத்தகைய உயர் நிலையை அடையக்கூடும். அவ்வாறு மனதை ஆசை, கோபம்,குரோதம், லோபம், மதம், மாத்சர்யம் ஆகிய பாபங்களிலிருந்தும் சஞ்சலங்களிலிருந்தும் மீட்டு இறைவனிடத்திலே ஐக்கியமாக்க வல்லது இசை. அதிலும் குறிப்பாக பக்திப் பாடல்கள். அவற்றுள்ளும் பஜனைப் பாடல்கள் பக்திப் பரவசத்தை எளிதில் உண்டு பண்ணக் கூடியவை. எளிய இனிய சொற்களால் புனையப் பட்டு எல்லோரும் ஒன்று கூடி இனிமையாய் மிக சுலபமாய் இசையோடு அனுபவித்துப் பாட ஏற்ற வன்னம் இத்தகைய பஜனைப் பாடல்கள் பல மொழிகளிலும் அமையப்பெற்றுள்ளன.

நம் ஊர்களில் மார்கழி மாதம் பிறந்ததும் தினந்தோறும் அதிகாலையில் பஜனைப் பாடல்களை பக்தர்கள் கூட்டம் கூட்டமாய்த் தெருவெங்கும் நடந்து சென்று இசையுடன் பாடி நகரை வலம் வருவதும் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடுவதும் மரபு. இத்தகைய பஜனைப் பாடல்களையே பெரும்பாலும் பாடிப் பெரும்புகழ் பெற்ற மூதாட்டி பெங்களூர் ரமணியம்மாள் அவர்கள் ஆவார். அவரது பஜனைப் பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பாடுவதற்கு இனிமையானவை மனதை மயங்க வைத்து இறைவனிடத்திலே நம் மனங்களை ஐக்கியமாக்க வல்ல அருள் நிரம்பிய பாடல்களை அவர் நமக்காகப் பாடி வைத்துள்ளார். அவற்றுள் ஒன்று இன்றைய பாடலாகிறது.

நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்

நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்
நீங்கள் வாருமே பெருத்த பாருளீர்
பஜனை செய்யலாம் பாடி மகிழலாம்
முருகனைப் பாடலாம் வள்ளியைப் பாடலாம்
கிருஷ்ணனைப் பாடலாம் மீராபாயைப் பாடலாம்

மயிலையும் அவன் திருக்கை
அயிலையும் அவன் கடைக்கண்
இயலையும் நினைந்திருக்க வாருமே

சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

அலைகடல் வளைந்தொடுத்து எழுபுவி புரந்திருக்கும்
அரசென நிரந்தரிக்க வாழலாம் இங்கு
அரசென நிரந்தரிக்க வாழலாம் நாமும்
அரசென நிரந்தரிக்க வாழலாம்

சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

அடைபெறுவதென்று முக்தி?
அடைபெறுவதென்று முக்தி?
அதி மதுரச் செந்தமிழ்க்கு
அருள்பெற நினைந்து சித்தி ஆகலாம்
முக்தி அடையலாம் சித்தி ஆகலாம்
முருகனைப் பாடினால் முக்தி அடையலாம்
சிவனைப் பாடினால் சித்தி அடையலாம்

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

நாளை எம படர் தொடர்ந்தழைக்க
நம்மை எம படர் தொடர்ந்தழைக்க
அவருடன் எதிர்ந்திருக்க
இடியென முழங்கி வெற்றி பேசலாம் - எமனுடன்
இடியென முழங்கி வெற்றி பேசலாம்
முருகனைப் பாடினால் எமனுடன் பேசலாம்
சிவனைப் பாடினால் எமனை எதிர்க்கலாம்

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
சொல்லுங்கோ
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

உள்ளத்திலே இன்ப வெள்ளத்திலே முருகன்
மெள்ளத் தவழ்ந்து வரும் பாலனாம் உள்ளத்திலே
மெள்ளத் தவழ்ந்து வரும் பாலனாம்
தெள்ளித் தெளித்த தினை அள்ளிக் கொடுத்த புனை
வள்ளிக்கிசைந்த மண வாளனாம்

சொல்லுங்கோ
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

வேதத்திலே திவ்ய கீதத்திலே பஜனை
நாதத்திலே முருகன் தோன்றுவான் பஜனை
நாதத்திலே முருகன் தோன்றுவான் உங்கள்
உள்ளத்திலே முருகன் தோன்றுவான் ஒவ்வொருவர்
பக்கத்திலே முருகன் தோன்றுவான் அவன்
பாதத்தையே என்றும் பற்றிக் கொண்டால் உங்கள்
பக்கத்திலே முருகன் தோன்றுவான்!

சொல்லுங்கோ
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா
வேல்வேல் முருகா வெற்றிவேல் முருகா

வேலனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா எங்கப்பனுக்கு அரோகரா
சிவ பாலனுக்கு அரோகரா வடி வேலனுக்கு அரோகரா

வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்
வேல்முருகா வேல்முருகா வேல்

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

ஒவ்வொரு உயிருக்கும் பிறப்பும் இறப்பும் மாறி மாறி வ்ருகின்றன. இவற்றுக்கு இடைப்பட்ட காலமே இவ்வுலக வாழ்வாக உள்ளது. இந்நியதி அனைத்துயிர்களுக்கும் பொதுவானது. வாழ்வில் இன்பங்களும் துன்பங்களும் மாறி மாறி வருவது இரவும் பகலும் மாறி மாறி வருவது போல் இயற்கை நியதியே. இன்பங்கள் நேர்கையில் மகிழ்ந்து கொண்டாடுவோர் துன்பங்களை எதிர்கொள்ள நேரிடுகையில் உலகமே துன்பமயமானதெனவும், உலகே மாயம், வாழ்வே மாயம் எனவும் கருதி உலக வாழ்வை வெறுப்பது அறியாமையே. பிறப்பும் இறப்பும் நிகழ்வது சிறிது காலமே. ஆனால் வாழும் காலம் பிறப்புக்கும் இறப்புக்கும் ஆகும் காலத்தைக் காட்டிலும் மிகவும் அதிகமாகவே உள்ளது. எனவே மரணத்தையும் மறுபிறப்பையும் குறித்து எண்ணி மனதைக் குழப்பிக் கொள்ளாது வாழ்நாள் உள்ளளவும் வருவது வரட்டும் என்று இன்பம் துன்பம் எது வந்தாலும் ஏற்றுக்கொண்டு இருக்கும் சூழ்நிலையில் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழப் பழகிக்கொள்வதே செய்யத் தக்கது.

உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும் இவ்வுண்மையை உணராது மதிமயங்கிய மாந்தர்கள் பலர் தமக்குத் தெரியாத விஷயங்கள் தெரிந்தவர்களைத் தேடித் தெளிவு பெற விழைகையில் தங்களைக் காட்டிலும் அறிவிற் குறைந்த வேடதாரிகளை அணுகி அவர்களை ஞானியர் எனவும் மஹா பக்திமான்கள் எனவும் எண்ணி ஏமாறுவது நம் நாட்டில் மட்டுமன்றி உலகெங்கிலும் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒரு கேலிக்கூத்தாகும். இத்தகைய ஞானியர் போல் வேடமிட்டு சாமான்ய மக்களை ஏமாற்றும் மனிதர்களுக்கு இவ்வுலகில் குறைவில்லை. பொது மக்கள் பலர் தாராளமாக வாரி வழங்கும் பொருளைக் கொண்டு இத்தகைய வேடதாரிகள் செல்வந்தர்களாக விளங்குவதுடன் பிறர்க்குபதேசம் தனக்கில்லை எனும் வகையில் உலகிலுள்ள யாவருக்கும் தருமோபதேசம் செய்துவிட்டுத் தாங்கள் அந்தரங்கத்தில் ஆடம்பரமாக சிற்றின்பத்தில் திளைத்து உலகையே ஏமாற்றுகின்றனர்.

வாழ்வில் தோன்றும் இன்ப துன்பங்களால் மனம் குழப்பமடைகியில் அக்குழப்பத்திலிருந்து தெளிவு பெற நாம் இவ்வாறு வேடமணிந்த ஞானியர் யாரையும் தேட வேண்டிய அவசியமில்லை. உண்மை ஞானியர் பலர் நாம் அன்றாடம் தொடர்பு கொள்ளும் உறவினர்களிடையேயும், நண்பர்களிடையேயும் என்றும் உள்ளனர். அத்தகைய ஞானியரை அடையாளம் காண்பதும் மிகவும் எளிது. அதற்கு ஒரே வழி அனைவரிடமும் அன்புடன் பழகுவதே ஆகும். அவ்வாறு பழகுகையில் நம்மிலும் அதிகத் துன்பத்தில் வாழ்வோர் பலர் அத்துன்பங்களைப் புன்சிரிப்புடன் எதிர்கொண்டு மகிழ்ச்சியுடனும் உள்ள நிறைவுடனும் வாழ்வதை நாம் காணலாம். குறிப்பாக வயதில் முதிர்ந்த உறவினர்களும் நண்பர்களும் வாழ்க்கையை நன்குணர்ந்தவர்களாக விளங்குவது நம் அறிவுக்குப் புலப்படும்.

உலக வாழ்வை வெறுத்து ஒதுக்க உபதேசம் செய்யும் மார்க்கம் உண்மை ஞான மார்க்கமாகாது. வாழ்க்கையை முழுமனதுடன் அனுபவித்து உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் என யாவருடனும் கலந்து பழகி இன்ப துன்பங்களை ஒருவரோடொருவர் பகிர்ந்து வாழ வழிகாட்டும் மார்க்கமே உண்மை ஞான மார்க்கமாகும். ஞானி என்பவன் தவம் செய்பவனாக இருக்க வேண்டியதில்லை. நம்மைப் போல் உலக வாழ்வில் இன்பங்களை எல்லாம் அனுபவித்து வாழ்பவனாகவும் இருக்கக்கூடும்.

மத்த மதகரி முகிற்குலமென்ன நின்றிலகு வாயிலுடன் மதியகடுதோய்
மாடகூடச் சிகரமொய்த்த சந்திரகாந்த மணிமேடை யுச்சி மீது
முத்தமிழ் முழக்கமுடன் முத்துநகையார்களொடு
முத்து முத்தாய்க் குலவி மோகத்திருந்துமென் யோகத்தினிலை நின்று
கைத்தல நகைப்பட விரித்தபுலி சிங்கமொடு கரடிநுழை நூழை கொண்ட
கானமலையுச்சியிற் குகையோடிருந்துமென் கரதலாமலகமென்ன
சத்தமற மோனநிலை பெற்றவர்களுய்வர்காண் சனகாதி துணிபிதன்றோ
சர்வபரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே

என்று தாயுமானவர் காழ்வில் உய்ய வழி சொல்கிறார்.

இதன் பொருள் யாதெனில், ‘மதமேறிய யானைகள் மேகக் கூட்டங்களைப் போல் மலிந்து நிற்கும் வயல்களையுடைய அரண்மனையில், சந்திரனை அளாவுவன போன்ற உயரமுடைய மாடங்களும் கூடங்களும் சிகரங்களும் சூழ்ந்திருப்ப, அவற்றிடையே நிலா விளையாட்டுக்காகச் சமைக்கப்பட்டிருக்கும் சந்திரகாந்த மேடைகளின் மேலே இனிய தமிழ்ப் பேச்சுக்கும் இனிய தமிழ் பாட்டுக்கும் நாட்டியங்களுக்கு மிடையே முத்தாக உரையாடி முத்தமிட்டு முத்தமிட்டுக் குலாவிக் காதல் நெறியில் இன்புற்றிருந்தாலென்ன? அஃதன்றி, யோக வாழ்விலே சென்று மூச்சை அடக்கிக்கொண்டு ஆயுதங்களைப் போல் வலிய நகங்களையுடைய புலி, சிங்கம், கரடி முதலியன பதுங்கிக் கிடக்கும் பொந்துகளுடைய காட்டுமலையுச்சியில் தாமொரு பொந்தில் இருந்தாலென்ன? உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்குவதோர் உண்மை கூறுகின்றோம். ‘சலனமின்றி மனத்திலே சாந்தநிலை பெற்றோர் உய்வார்’ இஃதன்றோ ஜனகன் முதலியோரின் முடிபாவது? எங்கும் நிறைவற்றதாய்ப் பிரிக்கப்படாத மூலப்பொருளே! அறிவும், உண்மையும், மகிழ்ச்சியும் ஆகிய கடவுளே?’

வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் நமக்கு மகிழ்ச்சியூட்ட வல்லது இசையே. நல்ல இசை எவ்விதத் துன்பங்களில் கிடந்து வாடுபவரையும் தம் துன்பங்களைச் சற்றே மறந்து அவ்விசைக்க்கேற்ப ஆடவைக்கலாகும்.

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

திரைப்படம்: கண்ணன் என் காதலன்
இயற்றியவர்: ஆலங்குடி சோமு
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1968

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

பாட்டில் சுவையிருந்தால் ஆட்டம் தானே வரும்
கேட்கும் இசைவிருந்தால் கால்கள் தாளம் இடும்
தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை
தன்னை மறந்தது பெண்மை துள்ளி எழுந்தது பதுமை
நூலளந்த இடைதான் நெளிய நூறு கோடி விந்தை புரிய
நூறு கோடி விந்தை புரிய

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

பாதம் சிவந்திருக்கும் பாவை செந்தாமரை
பார்வை குனிந்திருக்கும் புருவம் மூன்றாம் பிறை
புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு
புத்தம் புது மலர்ச்செண்டு தத்தி நடமிடக் கண்டு
மேடை வந்த தென்றல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்

பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் ம்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்

திங்கள், 14 நவம்பர், 2011

இறைவா உன் மாளிகையில்

ஒரு மன்னரும் அவரது அமைச்சரும் நகர சோதனை நிமித்தம் செல்கையில் சற்றுத் தொலைவில் இறந்தவர் ஒருவரின் சடலம் இறுதிச் சடங்குக்காக எடுத்துச் செல்லப்படுவதைக் கண்டனர். மன்னர் அமைச்சரிடம் அங்கே சென்று விவரம் அறிந்துவரக் கூறினார். அமைச்சரும் அங்கு சென்று இறந்தவர் குறித்த விவரத்துடன் திரும்பினார். அவரிடம் மன்னர் கேட்டார், "இறந்தவர் எங்கே செல்கிறார்? சொர்க்கத்துக்கா நரகத்துக்கா?" என்று. அவர் சொர்க்கத்துக்குச் செல்வதாக அமைச்சர் கூறினாராம். "ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?" என்று மன்னர் கேட்டதற்கு அமைச்சர் கூறினாராம், "இறந்தவர் தாம் வாழ்ந்த காலம் முழுவதும் தன் உற்றார், உறவினர், சுற்றத்தார் மற்றும் ஊரார் யாவருக்கும் பேருதவி புரிந்து வந்தார். அவர் இழப்பினால் யாவரும் மிகவும் கவலை கொண்டுள்ளனர். இனி யார்
தங்களைத் துன்பங்களிலிருந்து காப்பார் என மன வருத்தம் அடைந்துள்ளனர்." என்றார்.

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/panam-padaiththavan/kan-pona-

pokkile.php

நம் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தம் வாழ்நாள் உள்ளளவும் மக்கள் நலமாக வாழ உண்மையாக உழைத்தவர். தன்னிடமுள்ள செல்வங்களனைத்தையும் பிறர் நலனுக்கென ஈந்தவர். அவர் சிறுநீரகக் கோளாறினால் அவதியுற்று சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவ மனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்ற பின் அப்பொழுதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அனைத்து மருத்துவ வசதிகளுடன் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்த ஒரு விமானத்தில் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள மருத்துவமனையொன்றில் சிறுநீரக அறுவை
சிகிச்சை பெற்றுவந்தார்.

அந்த சமயத்தில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சதாசர்வகாலமும் எம்ஜிஆர் நலம் பெற்றுத் திரும்ப வேண்டுமெனத் தொடர்ந்து பிரார்த்தனை செய்தனர். தெருவெங்கும் தினம்தோறும் இதுகுறித்த பிரார்த்தனைப் பாடல் தொடர்ந்து ஒலிபரப்பப் பட்டது. உலகிலேயே இன்றுவரை வேறு யாருக்காகவும் இத்தகைய ஒருமனதான பிரார்த்தனை நடந்ததில்லை எனக் கூறலாம். மக்களின் பிரார்த்தனையின் பலனாகவும், அவரது சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியின் மகள் தனது சிறுநீரகம் ஒன்றை அவருக்கு தானமாக அளித்ததாலும் எம்ஜிஆர் உடல் நலம் பெற்று மீண்டுவந்தார்.

இதற்கிடையே நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மருத்துவமனியில் இருந்தவாறே போட்டியிற்று வெற்றியும் பெற்ற அவர் தாயகம் திரும்பியதும் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுச் சில காலம் இருந்த பின்னர் காலமானார்.

உள்ளத்தை உருகச் செய்யும் அந்தப் பாடல் இதோ:

திரைப்படம்: ஓளி விளக்கு
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1968

இறைவா உன் மாளிகையில்

இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு
நம்பிக்கையின் ஒளிவிளக்கு

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன்

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணூலகம் என்னாகும்?

ஆண்டவனே உன் பாதங்களை நான்
கண்ணீரில் நீராட்டினேன் இந்த
ஓருயிரை நீ வாழவைக்க இன்று
உன்னிடம் கையேந்தினேன் முருகையா

மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடிதுடிக்கும்
வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்
உன்னுடனே வருகின்றேன் என்னுயிரைத் தருகின்றேன்
மன்னனுயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு
இறைவா நீ ஆணையிடு ஆணையிடு

யாரும் விளையாடும் தோட்டம்

"கோபம் பாபம் சண்டாளம்" என்று கோபத்தின் கெடுதியைக் குறித்து நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். சண்டாளம் என்றால் மாபாதகம் எனப் பொருள். சினத்தினால் தீமையைக் குறித்துத் திருவள்ளுவர் சினம் எனும் கொடிய குணமானது சினங்கொள்வோரைக் கொல்வது மட்டுமன்றி அவரது இனத்தையே அதாவது பரம்பரையையே அழிக்க வல்லது என்று குறிப்பிடுகிறார்,

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமாப்புணையைச் சுடும்

எனும் குறள் வாயிலாக.

இவ்வுலக வாழ்வில் நாம் பிறருடன் இணைந்து பணியாற்றுகையிலும் பிறருடன் பல வகைகளில் தொடர்பு கொள்கையிலும், பல்வேறு விஷயங்களைக் குறித்து விவாதங்கள் புரிகையிலும் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் சில சமயங்களில் பகைமை ஏற்படக் காரணமாவதுண்டு. அப்படி ஒரு நிலைமை உருவாவதைத் தடுக்க ஓரே வழி கருத்து வேறுபாடுகளால் உண்டாகும் சினத்தைக் கட்டுப் படுத்துவதே ஆகும். இதற்குப் பொறுமை அவசியம். பொறுமைக்கு உதாரணமாய் பூமியைக் குறிப்பிடுவதுண்டு, உயிர்கள் அனைத்தையும் தாங்குதலால்.

"பூமியினும் பொறை மிக்குடையாள் பெரும்
புண்ணிய நெஞ்சினள் தாய்"

என்று பாரதமாதாவின் பொறுமை குறித்து மஹாகவி எடுத்துரைக்கிறார்.

நாமனைவரும் இவ்வுலகில் வாழ்வது சொற்ப காலமே என்பது நாமனைவரும் அறிந்த ஒன்றே. அந்தச் சொற்ப காலத்திலும் ப்ல்வேறு சூழ்நிலைகளால் கட்டுண்டு நாம் நம்மையறியாமலேயே பல்வேறு வழிகளில் இட்டுச் செல்லப்படுவதை உணர்கிறோம். நம் வாழ்வு நம் கையில் இல்லை என்பது நன்றாகத் தெரிந்தும் நாம் விரும்பிய வண்ணம் செயல்கள் நடைபெறாதது குறித்து வருந்துதலும் பிறருடன் முரண்படுதலும் துன்பத்தையே தரும்.

எத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொண்ட போதிலும், எத்துணைத் துயர் வந்துற்ற போதிலும், எவ்விதமான தர்ம சங்கடங்கள் ஏற்பட்ட போதிலும், எத்தகைய அவமானங்களைச் சந்திக்க நேர்ந்த போதிலும் அவற்றல் மனம் உடைந்து வருந்துதலும் பிறருடன் பிணங்குதலும் அறியாமை.

ஒருவர் நம்மை விடப் பொருளாதரத்திலோ, ஆரோக்யத்திலோ, அறிவிலோ, வேறு விதங்களிலோ தாழ்ந்த நிலையில் இருந்தால் அவரைத் தாழ்வாக மதிப்பிடுவதும் நம்மை விட மேம்பட்ட நிலையில் இருந்தால் அவரைக் கண்டு அசூயை கொள்வதும் நம் மன நிம்மதியைக் குலைத்து விடுவதுடன் சமுதாயத்தில் அவப் பெயரையும் உண்டாக்கிவிடும்.

மக்களில் ஒரு சாரார் நாடோடிகளாய்த் திரிவது நம் நாட்டில் தொன்று தொட்டு நிலவிடும் வழக்கமாகும். இத்தகைய மக்கள் தங்களுக்கென்று சொந்தமாய் எவ்வித சொத்துக்களையும் சேர்ப்பதில்லை. சில காலம் ஒரு ஊரில் இருந்த பின்னர் தங்கள் கூட்டத்தாருடன் வேறோர் ஊருக்குச் சென்று அங்கே சில காலம் வசிப்பது என இவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர். இத்தகைய மக்கள் ஏழைகளாக இருந்த போதிலும் அவர்கள் பெரும்பாலும்
மகிழ்ச்சுயுடனேயே வாழ்வதைக் காண்கிறோம்.

இவ்வுலகில் பிறந்த நாம் அனைவரும் நாடோடிகளே. நாமும் பிழைப்பைத் தேடிப் பல ஊர்களுக்குச் சென்று வாழ்கிறோம். நம் விதிப்பயன் முடிந்ததும் உடலை நீத்து எங்கோ செல்கிறோம். நம் கையில் இருக்கும் ஓரே அதிகாரம் இருக்கும் சூழ்நிலையில், அது இன்பமாகிலும் துன்பமாகிலும் நாம் மகிழ்வுடன் வாழ விரும்புகிறோமா இல்லையா என்பதே ஆகும். மகிழ்வுடன் வாழ ஒரே வழி பொறுமை. தம்மை மீறி வந்துற்ற துன்பங்களைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்வோர்க்கே இன்ப வாழ்வு நிலைப்பதுண்டு.

யாரும் விளையாடும் தோட்டம்

திரைப்படம்: நாடோடித் தென்றல்
இயற்றியவர்: இளையராஜா
இசை: இளையராஜா
பாடியோர்:சித்ரா, மனோ
ஆண்டு: 1992

வ்வ்லலலலலல
டம் டடட்டம் டடடடடம் டம் டடட்டம் டடடடடம்

யாரும் விளையாடும் தோட்டம்
தினந்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக் கொண்டு
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி

கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆறோடும் ஊரைப் பாத்து டேரா போடு

யாரும் விளையாடும் தோட்டம்
தினந்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக் கொண்டு
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி

கூடமும் மணி மாடமும் நல்ல வீடும் உண்டு
தேடவும் பள்ளுப் பாடவும் பள்ளிக் கூடம் உண்டு
பாசமும் நல்ல நேசமும் வந்து கூடும் இங்கு
பூசலும் சிறு ஏசலும் தினம் தோறும் உண்டு
அன்பில்லா ஊருக்குள்ளே இன்பம் இல்லே
வம்பில்லா வாழ்க்கையென்றால் துன்பம் இல்லே

கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆறோடும் ஊரைப் பாத்து டேரா போடு

ஆத்தி இது வாத்துக் கூட்டம்
ஆத்தி இது வாத்துக் கூட்டம்
பாத்தா இவ ஆளு மட்டம்
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம்
சொல்லுறதக் கேளு நீ வேற ஊரைப் பாரு நான்
சொல்லுறதக் கேளு கொஞ்சம் வேறே ஊரைப் பாரு

டேராவப் பாத்துப் போடு ஓலத்தோடு
வேறூரு போயிச் சேரு நேரத்தோடு

ஆத்தி இது வாத்துக் கூட்டம்
பாத்தா இவ ஆளு மட்டம்
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம்
சொல்லுறதக் கேளு நீ வேற ஊரைப் பாரு நான்
சொல்லுறதக் கேளு கொஞ்சம் வேறே ஊரைப் பாரு

டம் டடட்டம் டடடடடம் டம் டடட்டம் டடடடடம்

ஆவியாகிப் போன நீரும் மேகமாச்சு
மேக நீரும் கீழே வந்து ஏரியாச்சு
ஆறு என்ன ஏரி என்ன நீரும் ஒண்ணு
வீடு என்ன காடு என்ன பூமி ஒண்ணு
கடலுக்குள் சேரும் தண்ணி உப்பாகுது
சிப்பிக்குள் கூடும் தண்ணி முத்தாகுது
சேராத தாமரைப் பூ தண்ணி போல
மாறாது எங்க வாழ்வு வானம் போல

யாரும் விளையாடும் தோட்டம்
தினம் தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக் கொண்டு
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி இந்த மண்ணு நம்ம பூமி

என்றும் பதினாறு வயது பதினாறு

தேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவமெய்திக் கொடுங்கூற்றுக்கிறையெனப்பின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

என்று சக்தி உபாசகரான மஹாகவி பாரதி காளி தேவியைக் குறித்துப் பாடினார். இப்பாடலில் உரைத்தது போலவே எல்லோரையும் போல் வயிறு வளர்ப்பதற்கென்றே பணிகள் பல செய்து ஜீவிக்காமல், உபயோகமற்ற கதைகளைப் பேசாமல் தான் உரைத்தன யாவும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மொழிகளாக நிலைநிறுத்தி, பிறர் மனம் நோகும்படியான செயல்கள் எதனையும் செய்யாமல் சாதிக்கொடுமையைக் களையப் பாடுபட்டு

பறையருக்குமிங்கு தீயர் புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை

என்று தாழ்த்தப் பட்ட சமுதாயத்தினருக்கு உண்மையான விடுதலையை விரும்பிப் பாடுபட்டு, உண்டுடுத்துறங்கி விழித்து வயோதிகமடைந்து நோய்வாய்ப்பட்டு மடியாமல் இளம் வயதிலேயே தான் மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கத்தை நிறைவேற்றி விட்டுத் தன் பூதவுடலை நீத்துப் புகழுடம்பு எய்தினார் மஹாகவி.

பாரதியார் பகவத் கீதைக்குத் தான் எழுதிய உரையில் "கீதை ஒரு மோக்ஷ சாஸ்திரம், அது ஒரு அமரத்துவ சாஸ்திரம். மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல் சாத்தியமெனவும் அதற்குரிய மார்க்கத்தை கீதை காட்டுகிறது" என்று ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார்.

"துன்பங்களிலே மனங்கெடாதவனாய் இன்பங்களிலே ஆவலற்றவனாய் பகைத்தலும் விழைத்தலும் இன்றி ஒருவன் இருப்பானேயாகில் அத்தகைய தீரன் சாகாதிருக்ககத் தகுந்தவன்" என்ற பொருள்பட விளங்கும் கீதா ஸ்லோகம் ஒன்றை மேற்கண்ட தன் கருத்துக்கு மேற்கோளாகக் காட்டுகிறார் மஹாகவி.

மார்க்கண்டேயர் ஒரு மகரிஷி. இன்ப துன்பங்களைத் துறந்து இறைவனைச் சரணாகதியடைந்தவர். மேற்கண்ட கீதா ஸ்லோகத்தின் உபதேசப்படி வாழ்பவர். அன்றும், இன்றும், என்றும் 16 வயது இளைஞராகவே வாழும் நிலை அடைந்ததாகக் கருதப்படும் ஒரே மனிதர்.

மனிதப் பிறவியானது உலகவின்பத்தைத் துய்ப்பதற்கெனவே எடுக்கப்பட்டது என நம்பி மேற்கூறிய தத்துவங்கள் எவற்றையும் பற்றிக் கவலை கொள்ளாமல் இருக்கும் வரை இன்பமாய் வாழ வழி தேடுவதே வாழ்க்கையாகக் கொண்டு பெரும்பாலான மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு இன்ப வாழ்வு வாழ விரும்பி அதற்காகவே பாடுபடும் சாமான்ய மாந்தர்களும் என்றும் 16 வயதினராக இளமை நிலைக்கப் பெற்று வாழ்வதிலுள்ள சுகத்தை எண்ணிப்பார்த்து அத்தகைய இன்ப வாழ்வை அடையக் கனவு காண்பதும் இயற்கையே.

என்றும் பதினாறு வயது பதினாறு

திரைப்படம்: கன்னித் தாய்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: பி. சுசீலா, டி.எம். சௌந்தரராஜன்

என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு

கன்னம் சிவந்தது எதனாலே? கைகள் கொடுத்த கொடையாலே
கன்னம் சிவந்தது எதனாலே? உன் கைகள் கொடுத்த கொடையாலே
வண்ணம் மின்னுவதெதனாலெ? வள்ளல் தந்த நினைவாலே
உன் வண்ணம் மின்னுவதெதனாலே? இந்த வள்ளல் தந்த நினைவாலே

என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு

விழிகள் பொங்குவதெதனாலே? வீரத்திருமகன் வேலாலே
உன் விழிகள் பொங்குவதெதனாலே? இந்த வீரத்திருமகன் வேலாலே
மொழிகள் கொஞ்சுவதெதனாலே? நீ முன்னே நிற்கும் அழகாலே
உன் மொழிகள் கொஞ்சுவதெதனாலே? நீ முன்னே நிற்கும் அழகாலே

என்றும் பதினாறு வயது பதினாறு
மனதும் பதினாறு அருகில் வாவா விளையாடு
என்றும் பதினாறு

அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி

மனிதன் என்னதான் விவேகத்துடன் நடந்துகொண்டாலும் சில சமயங்களில் அவனையும் மீறிய சூழ்நிலைகள் ஏற்பட்டு அவன் மனம் உடைந்து போவதுண்டு. என்ன செய்வது என்று தொ¢யாமல் தவிப்பதுண்டு. தர்மபுத்திரர் எத்தனையோ விவேகத்துடனும் வைராக்யத்துடனும் இருந்தார். பரமாத்மாவும் அவருடன் இருந்தார். இருந்தும் அவர் எத்தனையோ சமயங்களில் மனம் தளர்ந்ததுண்டு. அச்சமயங்களில் பகவானிடம் அதிக பக்தி செய்ய வேண்டும். நமது உபாசனா மூர்த்தியை பூஜித்து அதன் மூலம் நாம் அதிக சக்தி பெற வேண்டும், கார் பேட்டா¢யை சார்ஜ் செய்வது போல் நம்மை சார்ஜ் செய்துகொண்டு அதன் மூலம் பலம் பெற்றுக் கஷ்டங்களை சமாளிக்கவோ அல்லது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளவோ முற்பட வேண்டும்.

நவவித பக்தி

1) ச்ரவணம் - காதால் கேட்டல்
2) கீர்த்தனம் - பக்திப் பாடல் பாடுதல்
3) ஸ்மரணம் - எப்போதும் நினைத்தல்
4) பாதஸேவனம் - திருவடித் தொண்டு
செய்தல்
5) அர்ச்சனம் - மலரால் பூஜித்தல்
6) வந்தனம் - நமஸ்கரித்தல்
7) தாஸ்யம் - அடிமையாதல்
8) ஸக்யம் - தோழமை கொள்ளல்
9) ஆத்ம நிவேதனம் - தன்னையே
அற்பணித்தல்

ச்ரவணம் கீர்த்தனம் யஸ்ய
ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஸக்யம் ஆத்ம நிவேதனம்

இவற்றுள் தாஸ்யம் என்பது மிகவும் விசேஷாமானது. இவ்வழியே தேவதாசியர் தம்மை இறைவனுக்கு தாசியாய் அர்ப்பணம் செய்து தம் வாழ்நாளில் இல்லற சுகங்களைத் துறந்து வாழ்ந்ததாகப் புராணங்களில் காண்கிறோம். அகில உலகையும் ரக்ஷித்துக் காப்பவளான லோகமாதாவான பராஸக்தியே ஹிமவான் மகளாகப் பிறந்து தவம் செய்து ஈசனையே மணாளனாக அடைந்ததும், அவளே பின்னர் மதுரை மீனாக்ஷியாக அவதாரம் செய்து அதே வழியில் தவம் செய்து ஈசனை அடைந்ததாகவும் சிவபுராணம் சொல்கிறது.

12 ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாளும் இதே விதமான பக்தி மார்க்கத்தை மேற்கொண்டு ஸ்ரீரங்கத்தில் துயில் கொண்ட நிலையில் காட்சி தரும் அரங்கநாதனை மணந்ததாக வரலாறு கூறுகிறது.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே

என்று திருஞான சம்பத்தப் பெருமான் இத்தகைய பக்தியின் சிறப்பை எடுத்துரைக்கிறார்.

இதே மார்க்கத்தில் இங்கே ஒரு இளமங்கை குமரக் கடவுள் மேல் காதல் கொண்டு அவன் வரவை எதிர்பார்த்து ஏங்கும் மனநிலையில் பாடி ஆடுவதாக ஒரு காட்சி பார்த்திபன் கனவு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. 1960ஆம் ஆண்டு ஜெமினி கணேசனும் வைஜயந்திமாலாவும் இணைந்து நடித்த இப்படத்தில் இப்பாடலுக்கு நாட்டியம் ஆடுபவர் நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களுக்கு இணையான நடனத் திறமை கொண்ட புகழ்பெற்ற கமலா ஆவார்.

அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி

திரைப்படம்: பார்த்திபன் கனவு
இயற்றியவர்: விந்தன்
இசை: வேத்பால் வர்மா
பாடியவர்: எம்.எல். வசந்தகுமாரி
ஆண்டு: 1960

அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணேனே மயிலே
அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணேனே
வண்ண ம்யிலே வண்ண மயிலே
வண்ண ம்யிலே வண்ண மயிலே

ஏக்கத்தால் படிந்து விட்ட தூக்கமில்லாத் துன்பத்தை
ஏக்கத்தால் படிந்து விட்ட தூக்கமில்லாத் துன்பத்தை
ஒத்தி எடுத்திடவே மயிலே
ஒத்தி எடுத்திடவே உதடவரைத் தேடுதடி

அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணேனே
வண்ண ம்யிலே வண்ண மயிலே
வண்ண ம்யிலே வண்ண மயிலே

தாகத்தால் நாவரண்டால் தண்ணீரால் தணியுமடி
தாகத்தால் நாவரண்டால் தண்ணீரால் தணியுமடி
இதயம் வரண்டு விட்டால் எதைக் கொண்டு தணிப்பதடி
இதயம் வரண்டு விட்டால் எதைக் கொண்டு தணிப்பதடி
கள்ளச் சிரிப்பால் என் கன்னத்தைக் கிள்ளிவிட்டு
கள்ளச் சிரிப்பால் என் கன்னத்தைக் கிள்ளிவிட்டு
அள்ளி அணைத்திடவே மயிலே
அள்ளி அணைத்திடவே அவர் வரக் காணேனடி

அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி
கந்தன் வரக் காணேனே
வண்ண ம்யிலே வண்ண மயிலே
வண்ண ம்யிலே வண்ண மயிலே

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

போட்டது மொளச்சுதடி கண்ணம்மா

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்

வெற்றுடம்புடன் வயலில் இறங்கி சேற்றிலும் சகதியிலும் வெயிலின் கொடுமையினையும் பாராது நாளெல்லாம் உழைத்து, நிலத்தை உழுது, நீர் பாய்ச்சி, உரமிட்டு வளப்படுத்திப் பின் விதை விதைத்து, நாற்றைப் பிடுங்கி நட்டுப் பயிர் வளர்த்து உலகுக்கெல்லாம் உணவளிக்கும் உழவர்களே மனித குலத்தோரில் தலைசிறந்தவர்கள் ஆவர். ஏனைய பிற வர்க்கத்தினரெல்லாம் உழவர்களைத் தொழுது அவர்கள் அளிக்கும் உணவைப் பெற்று உயிர் வாழும் சாமான்யர்களே என்பது இக்குறளின் பொருள். உழவர்கள் பயிர் விளையப் பாடுபடவில்லையெனில் உலகிலுள்ள அனைவரும் வெகுவிரைவில் உண்ண உணவின்றி மடியலாகும்.

தேராட்டம் காரினிலே ரொம்பத் திமிரோடு போறவரே எங்க
ஏரோட்டம் நின்னு போனா உங்க காரோட்டம் என்னவாகும்?

என்று ஒரு விவசாயி தெருவில் நடந்து செல்கையில் அவரை அலட்சியம் செய்து அவர் மேல் மோதாக்குறையாக விரைவாகத் தனது காரை ஓட்டிச் செல்லும் ஒருவரைப் பார்த்துப் பாடுவதாக அமைந்த கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளும் விவசாயியின் மேன்மையை எடுத்துச் சொல்கின்றன.

உலகிலுள்ளோர் யாவரும் கைகூப்பித் தொழுது வணங்கிப் போற்றத் தக்க இத்தகைய விவசாயிகளுக்கு நமது பாரதத் திருநாட்டில் உரிய மரியாதை கிடைக்கிறதா? அவர்களது உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கிறதா? இயற்கைச் சீற்றங்கள் மற்றும் அரசின் செயல்பாடுகள் உட்பட்ட பல்வேறு சமுதாயச் சிக்கல்களிலிருந்து மீள இவ்விவசாயிகளுக்கு ஏதேனும் வழியிருக்கிறதா? உலகிலுள்ளோர் அனைவருக்கும் உணவு வழங்கும் இந்த விவசாயிகள் குடும்பத்தார் உண்ணப் போதிய உணவாகிலும் கிடைக்கிறதா?

இன்றைய சூழ்நிலையில் இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தினமும் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பற்றி அறிகையில் இக்கேள்விகளுக்கு இல்லை என்ற பதிலே கிடைக்கிறது.

முறைகேடாக் விவசாய நிலங்களை மாநில அரசுகள் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் தட்டிப் பறித்து அரசின் சாலை முதலிய திட்டங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும் வழங்கப் படுவது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு அவலமாகும். அதன் உச்சகட்டமாக இன்று மஹாராஷ்டிர மாநிலத்தில் அணு மின் நிலையம் அமைக்க ஜெய்தாபூர் எனும் ஊரிலிருக்கும் விவசாய நிலங்கள் பெருமளவில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அரசினால் கையகலப் படுத்தப் பட்டதால் அப்பகுதி மக்கள் மேற்கொண்ட போராட்டத்தை அடக்க அரசு மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சில விவசாயிகள் பலியாகியுள்ளனர். இதே போல் உத்திரப்பிரதேச மாநிலத்தை ஆளும் மாயாவதி அரசு பல விவசாயிகளின் நிலங்களை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக்கொண்டு அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மறுத்து வருவதால் உண்டான கிளர்ச்சியை அடக்கப் போலீசார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சில விவசாயிகள் இறந்தது மட்டுமின்றி அவர்களுள் இருந்த தீவிரவாதப் போக்குள்ள சிலர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளால் திருப்பி சுட்டதில் போலீசார் சிலரும் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு விவசாயிகள் அல்லலுறுகையில் கலங்கிய குட்டையில் மீன்பிடிப்பது போல் அரசியல்வாதிகள் பலர் இவ்விவசாயிகளுக்காகக் குரல் கொடுப்பதாக நாடகமாடும் அவலமும் இடையிடையே அரங்கேறுகிறது. ஆந்திர மானிலத்திலும் பிற பல மாநிலங்களிலும் கடும் உழைப்பால் விவசாயிகள் உற்பத்தி செய்த அதிகப் படியான தானியங்களை சேமிக்கத் தகுந்த கிடங்குகளைக் கட்டாமல் அரசுகள் வாளாவிருந்ததால் இவ்வாறு உற்பத்தியான தானியங்கள் அரசு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப் படாமையால் அவ்விவசாயிகள் அவற்றைப் பாதிக்கும் குறைந்த விலையில் நஷ்டத்திற்குத் தனியார் துறை வியாபாரிகளுக்கு விற்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட தானியங்கள் ஏராளமானவை வெட்ட வெளியில் அடுக்கப்பட்டதால் கெட்டுப் போய் வீணாகியுள்ளன. அவ்வாறு வீணகும் தானியங்களைத் தீயிட்டுக் கொளுத்துவது ஒன்றே அரசுகள் செயல்பாடாக உள்ளது. மாறாக வீணாகும் தானியங்களை ஏழை மக்களூக்கு விநியொகிக்கும்படி உச்சநீதிமன்றம் பல முறை அறிவுறுத்தியும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே அவ்வறிவுறைகளை அரசு ஏற்காமல் அலட்சியப் போக்கையே தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

இவ்வாறு விவசாயின் வயிற்றில் அன்றாடம் அடித்து, தனியார் துறைப்பணமுதலைகளின் கைப்பாவையாக ஆகி நாட்டை சுடுகாடாக மாற்றிக்கொண்டிருக்கின்றனர் இன்றைய சுயந்ல அரசியல்வாதிகளும் அதிகாரிகளும். இந்த நிலை மாறி விவசாயிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு அவர்கள் இலாபகரமாக விவசாயம் செய்ய ஏதுவான சூழ்நிலையை அரசுககள் ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே அவர்களுக்கும் சேர்த்து அனைவருக்கும் உணவு கிடைக்கும்.

வரப்புயற நீருயரும் நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும் குடியுரக் கோனுயர்வான்

அந்த நல்ல நாள் விரைவில் வாராதா? தான் அல்லலுற்ற போதிலும் உலகிலுள்ள பிறர் வாழக் கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் விவசாயியின் வாழ்வில் இன்பம் மலராதா? இத்தகைய கேள்விகள் தினமும் மனதைத் துளைத்து வருத்தத்தை அளிக்கும் போதிலும் பாரதத்துக்கு ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்து சுதந்திரம் கிடைத்ததற்கு முன்பாகவே சுதந்திரம் கிடைத்து விட்டதாக உணர்ந்து

ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோம்

என்று மஹாகவி பாரதியார் பாடியது போல் விவசயிகளது வாழ்வில் இன்பம் மலர்ந்து அவர்கள் நல்வாழ்வு வாழ்வதாக உணர்ந்து அந்த உணர்விலிருந்து மலர்கிறது இன்றைய பாடல்.

போட்டது மொளச்சுதடி கண்ணம்மா

திரைப்படம்: நவராத்திரி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

போட்டது மொளச்சுதடி கண்ணம்மா கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா
போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா
போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா

நாத்து வந்து சிரிக்குதடி காலத்திலே
சோத்துப் பானை கொதிக்குதடி நேரத்திலே
நாத்து வந்து சிரிக்குதடி காலத்திலே
சோத்துப் பானை கொதிக்குதடி நேரத்திலே நேரத்திலே

போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா

மண்ண நம்பி உழுது வச்சி மழைய நம்பி வெதெ வெதெச்சி
மண்ண நம்பி உழுது வச்சி மழைய நம்பி வெதெ வெதெச்சி
வயல நம்பி வாழ்ந்திருந்தா கண்ணம்மா
வயல நம்பி வாழ்ந்திருந்தா கண்ணம்மா ஒரு
பயல நம்பத் தேவையில்லே சின்னம்மா ஒரு
பயல நம்பத் தேவையில்லே சின்னம்மா

போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா

ஆட்டம் போடும் மனிதருக்கும் ஆரவாரம் செய்பவர்க்கும்
ஆட்டம் போடும் மனிதருக்கும் ஆரவாரம் செய்பவர்க்கும்
கோட்டை கட்டி வாழ்பவர்க்கும் கண்ணம்மா
கோட்டை கட்டி வாழ்பவர்க்கும் கண்ணம்மா இந்த
மூட்டையில் தான் உயிரிருக்கு சின்னம்மா நெல்லு
மூட்டையில் தான் உயிரிருக்கு சின்னம்மா

போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா கைநிறைய
கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா

போயும் போயும் மனிதனுக்கிந்த

இன்று தேதி 13. ஆங்கிலேயர்களின் நம்பிக்கைப்படி 13 ஒரு அதிர்ஷ்டமில்லாத எண் (அன்லக்கி நம்பர்). ஆனால் இதே எண் தமிழர்களுக்கு அதிர்ஷடத்தைக் கொண்டு வந்துள்ளதென எண்ணுமளவிற்கு இன்று வெளியிடப்பட்ட மாநிலத் தேர்தல் முடிவுகள் மக்கள் விரோதமான அரசியல்வாதிகளின்ன் போக்கிற்கு பதிலடி கொடுத்துள்ளதைக் காட்டுகின்றன.

சிலர் பிறரது தவறுகளால் விளையும் பலன்களைக் கண்டு தங்களைத் திருத்திக் கொள்வர். இன்னும் சிலம் தமது தவறுகளால் விளையும் பலன்களைக் கண்டு திருந்துவர். வேறு சிலர் எதனைக் கண்டும் திருந்த மாட்டார்கள். இத்தகைய திருந்தாத மனிதர்களையே திரும்பத் திரும்பத் தங்களது தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் இன்னமும் மாறியதாகத் தெரியவில்லை.

தற்போதைய ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்ததவர்கள் சுமார் 45% வாக்காளர்களே. 40% வாக்காளர்கள் பழைய ஆட்சியே தொடர்வதற்கே வாக்களித்துள்ளனர். இந்த நிலை மிகவும் தெளிவாக உணர்த்துவது என்னவெனில் மக்களில் ஒரு சாரார் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கையில் அவரை நல்லவர் என்று கண்மூடித் தனமாக நம்புவதும், ஒரு சாரார் அனைவருமே தவறு செய்பவர்களே என்று அலட்சிய மனப் பான்மையுடன் வாக்களிக்காதிருப்பதும், ஒரு சாரார் நேர்மையைக் கடைபிடிக்காமல் கையூட்டும் இலவசப் பரிசுகளையும் பெற்றுக்கொண்டு தங்களுக்கு சாதகமாக செயல்படும் தலைவர்களை மட்டுமே தேர்ந்துடுப்பதும், ஒரு சாரார் நாட்டு நடப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளாது தெளிவில்லாத மன நிலையில் யாரோ ஒருவருக்கு வாக்களிப்பதும், பலர் வாக்களிக்காதிருப்பதுமே ஆகும்.

மக்களில் பலர் சமுதாய உணர்வின்றி வாழ்ந்து வருவது இதன் மூலம் தெளிவாகிறது. தன் வாழ்நாள் முழுவதும் பொய்மையே பேசிப் பிறரை என்றும் ஏமாற்றியே வாழ்ந்து வரும் சிலர் அவர்களது குற்றங்கள் ஆதாரபூர்வமாகப் பலரும் அறியும் வண்ணம் வெளீயான பின்னரும் தங்களைக் குற்றமற்றவர்களென்று கூறிக்கொண்டு மீண்டும் மீண்டும் மக்களின் அறியாமையைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து தன் சுயநலனை மட்டுமே பேணி வாழ இடமளிக்கும் இத்தகைய பகுத்தறிவற்ற சமுதாய நிலை மாறி உண்மையைத் தெளிவாக அறிந்து அதன் அடிப்படையில் தம்மை ஆள்வோரைத் தேர்ந்தெடுக்கும் அறிவுபூர்வமான சமுதாய நிலை என்று நம் நாட்டில் மலர்கிறதோ அன்றே மக்கள் நல்வாழ்வு வாழ வழிபிறக்கலாகும். அதுவரை தற்போது நிகழ்ந்துள்ளது போன்ற மாற்றங்கள் எவையும் நிரந்தரமான நற்பலனை ஏற்படுத்துவது நிச்சயமல்ல.

மனிதனை மனிதன் மதிப்பது மட்டுமின்றி மனித மனத்தின் தன்மையை அறிந்து அவ்வறிவின் மூலம் தெளிவான முடிவுகளை மேற்கொள்ளும் தகுதியை என்று மக்கள் அடைகின்றனரோ அன்றே சமுதாயம் வளம் பெறும். பொய் முகங்களை அணிந்து மெய்யன்பர்கள் போல் நாடகமாடும் போலிகளை அடையாளம் காண்பதே மெய்யான பகுத்தறிவாகும்.

போயும் போயும் மனிதனுக்கிந்த

திரைப்படம்: தாய் சொல்லைத் தட்டாதே
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1962

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே இறைவன்
புத்தியைக் கொடுத்தானே அதில்
பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே மனிதன்
பூமியைக் கெடுத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே

கண்களிரண்டில் அருளிருக்கும் சொல்லும்
கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்
கண்களிரண்டில் அருளிருக்கும் சொல்லும்
கருத்தினில் ஆயிரம் பொருளிருக்கும்
உள்ளத்தில் பொய்யே நிறைந்திருக்கும் அது
உடன் பிறந்தோரையும் கருவறுக்கும்

பாயும் புலியின் கொடுமையை இறைவன்
பார்வையில் வைத்தானே புலியின்
பார்வையில் வைத்தானே இந்தப்
பாழும் மனிதன் குணங்களை மட்டும்
போர்வையில் மறைத்தானே இதயப்
போர்வையில் மறைத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே

கைகளைத் தோளில் போடுகிறான் அதைக்
கருணை என்றவன் கூறுகிறான்
கைகளைத் தோளில் போடுகிறான் அதைக்
கருணை என்றவன் கூறுகிறான்
பைகளில் எதையோ தேடுகிறான் கையில்
பட்டதை எடுத்து ஓடுகிறான்

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே இறைவன்
புத்தியைக் கொடுத்தானே அதில்
பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே மனிதன்
பூமியைக் கெடுத்தானே

போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் கொடுத்தானே

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே

மானிடப் பிறவியின் மகத்துவத்தையும் மானிடராய்ப் பிறந்தோர் நல்வாழ்வு வாழக் கடைபிடிக்க வேண்டிய அறநெறிகள் முதலானவற்றையும் அனைவரும் உணரும் பொருட்டு ஞானியர் பிறருக்கு உபதேசம் செய்யக் கையாண்ட சிறந்ததோர் வழி கதைகள் வாயிலாகவும் பாடல்கள் வாயிலாகவும் அவற்றை எடுத்துக் கூறுவதே. இக்கதைகளில் கற்பனையாகப் புனையப் பட்டவையும் தருமநெறி தவறாது உண்மையில் நம்மிடையே வாழ்ந்த உத்தமர்களைப் பற்றியவையும் உள. இத்தகைய கதைகளைப் பிரசங்கங்கள் வாயிலாக உலகத்தாருக்கு எடுத்துக் கூறுவோர் இடையிடையே சங்கீதத்துடன் கூடிய பாடல் வரிகளை அமைத்து, சொல்லும் கதைக்கேற்ப அவ்வப்பொழுது அக்கதைக்குத் தக்க கேள்விகளையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்தவென்றே தன்னுடன் மேடையில் சிலரைத் தயார் செய்து வைத்துக் கொள்வது மரபு. இதற்குக் கதாகாலக்ஷேபம் என்று பெயர்.

அத்தகைய கதாகாலக்ஷேபம் ஒன்று நடிகர் திலகம் சிவாஜி க்ணேசன், நாட்டியப் பேரொளி பத்மினி இணைந்து நடித்த தெய்வப் பிறவி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. கே.ஏ. தங்கவேலு அவர்கள் செய்வதாக அமைந்த இந்தக் கதா காலக்ஷேபத்தில் தங்கவேலு அவர்களின் குரலுக்கேற்றவாறே சிறிதும் மாறுபாடின்றி அமைந்த சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடல் வரிகளைப் பாட, அதே இசை லயத்தைப் பின்பற்றி கதையை தங்கவேலு அவர்கள் விவரிக்க, கதை பாடல் அனைத்தையும் தங்கவேலுவே சொல்லிப் பாடுகிறாறோ எனக் காண்போரும் கேட்போரும் திகைக்குமளவுக்கு மிகவும் இயல்பாக அமைந்தது அக்கதா காலக்ஷேபம். அதை இங்கே காண்க:

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே

திரைப்படம்: தெய்வப் பிறவி
இயற்றியவர்: தஞ்சை ராமையாதாஸ்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
க்தை கூறுபவர்: கே. ஏ. தங்கவேலு

ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே,

எல்லோருடைய மணிபர்சும் ஜாக்கிரதை! ஜாக்கிரதை!
மனிதனை மனிதன் மதித்திட வேண்டும் மாறா அன்புடனே எந்நாளும்
சீராய் வாழ்ந்திடனும் எல்லோரும் சேர்ந்தே வாழ்ந்திடனும்

மெய்யன்பர்களே, பாற்கடலிலே பள்ளிக்கொண்டிருந்த பரந்தாமன், ஸ்ரீகிருஷ்ணனாக அவதாரம் பண்ணினார். மனிதனை மனிதன் தித்து நடக்க வேண்டுமென்ற நீதியை எடுத்துக் காட்டினார். எப்படியோ, துவாபர யுகத்திலே, குசேலர் என்ற ஒரு பக்திமான் இருந்தார். அவருக்குக் குழந்தைகள், கெடையாது. பர்த் கண்ட்ரோல் இல்லாத அந்தக் காலத்திலே, மனுஷன் வதவதன்னு 27 குழந்தைகளைப் பெத்ததெடுத்துட்டார், அதாகப்பட்டது ரெண்டே கால் டஜன். நெனச்சா தூக்கம் வருமோ?

ஒரு தலைக்கு நாலு இட்டிலின்னா கணக்கு கூட்டினாலும் இருபத்தி ஏழு குழந்தைகளுக்கு என்னாச்சுன்னு நீங்களே கணக்கு கூட்டிப் பாருங்கோ. சாம்பாரைப் பத்தி அப்புறம் யோசிப்போம்.

குழந்தைகள் பேரு?

அஸ்வினி பரணி கார்த்திகை ரோகிணி மிருகசீரிஷம் திருவாதிரை ஆறு
புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் ஹஸ்தம் பதிமூணு
சித்திரை ஸ்வாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் இருபது
உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி

ஏன் மாமா கூப்டீங்களா?

நீ என்ன, குசேலனுக்குக் கடைசிக் குழந்தையா? அடச் சே போ! பேரைச் சொல்ற எனக்கே இப்படி மே மூச்சு கீழ் மூச்சு வாங்குதுன்னா, அந்தக் கொழந்தைகளை வச்சுகிட்டு அந்த மனுஷன் என்ன பாடு பட்டிருப்பார்! ஆனாப் படல்லே. காரணம், குழந்தைகளுக்குள்ளார அவ்வளவு ஒத்துமை. ஒத்துமைக்குக் காரணம்? அந்தக் காலத்துலே அரசியல் கட்சிகள் கிடையாது. அது மட்டுமல்ல? அவருக்கு வாய்த்த மனைவி சுசீலை, உத்தமி பத்தினி. அதிகமா சொல்லுவானேன், நம்ம மாதவன் சம்சாரம் தங்கம்மா இல்லே, இவங்களைப் பாத்தா அவங்களைப் பாக்க வேண்டியதில்லே. ஆனா கொஞ்சூண்டு கெழடு தட்டியிருக்கும் அந்தம்மா முகத்திலே. அதற்குக் காரணம் அவங்க மேல தப்பில்லே, நம்பர் இருபத்தேழு.

இந்தக் குழந்தைகளெல்லாம் அந்த அம்மாளை சுத்திக்கொண்டு சதாசர்வ காலமும் பசி, பசி, இப்படி அருந்துவதற்குப் பாலில்லாதபடி

அம்மா பசிக்குதே, தாயே பசிக்குதே!

இப்படியென்று அகோரமாகக் கோரஸ் பாட ஆரம்பிச்சுட்டா. அது மட்டுமல்ல, அண்டை வீடு அடுத்த வீட்டுல இருக்கற கொழந்தகள் சாப்பிடும் பலகாரங்களைப் பார்த்துவிட்டு இப்போ போலீஸ்லே வளர்க்கறாங்களே அந்த நாயைப் போலே உர்ர்

மோப்பம் பிடித்த ஓர் பாலகன் தேங்காய்
ஆப்பம் வேண்டுமென்று கேட்டனன், கேட்டனன் பசி
ஏப்பாம் விட்ட சிறு பாலகன் மயங்கித்
தொப்பென்று பூமியில் விழுந்தனன், விழுந்தனன்
அது மட்டுமா?
ஆடையில்லாத ஓர் பாலகன் திங்க
சிகடை வேண்டுமென்று கேட்டனன், கேட்டனன்
கோடையிடி கேட்ட நாகம் போல்
தொந்தரினனனோ தொந்தரினோ தரினோ ரினோ னோ நோ ஏஓஓஓஓ ஏஏஏஏஓஓ

எடாடேய், டேய், டேய், ஒக்காருங்கோ. ஒக்காருங்கோ. நான் என்னடான்ன எல்லரையும் இருக்க வைக்கறேன், நீ எழுந்து போக வைக்கறே கிரகம், கிரகம், இன்னைக்கு கிரகப் பிரவேசண்டா அட அபிஷ்டு!

கோடையிடி கேட்ட நாகம் போல் நாகம் போல்
நெஞ்சம் குமுறித் தாயும் அழுதனள் ஏ..ஏ..ஏ ஆங்

அழுதனள். இந்த விஷயங்களை தன் கணவனிடத்திலே சொல்வதற்காக நாதான்னு அப்படி தொட்டா. பொசுக்குனு ஒரு சத்தம்.

குனிஞ்சு பாத்தார். அங்கே ஒரு பையன் விழுந்து கெடக்குறான்.

"ஆஹா! சுசீலை, இது என்ன நம்பர் இருபத்தி எட்டா?"ன்னு கேட்டார்.

அல்ல நாதா, நம்முடைய கடைசிக் குழந்தை பட்டினி பசியிலும் இப்படிக் கீழே கெடக்கறான்னு சொன்னாள். ம்ம்ம்ம் "இதையெல்லாம் பார்த்துக்கொண்டு நீங்கள் சும்மா இருக்கலாமா?" என்று கேட்டாள்.

"பெண்ணே, நான் என்ன செய்யட்டும் எங்கே போகட்டும்" என்றார்.

போய் வருவீர் போய் வருவீர் துவாரகை போய்வருவீர் ஸ்வாமீ
போய் வருவீர் போய் வருவீர் துவாரகை போய்வருவீர்
அன்பர்கள் நினைப்பதை அக்கணம் தந்திடும்
ஆஆஆஆஆஆ..ஏஏஏஏ...ஏஏஏஏ... ஏஏஏ ஏஏஏஏஏஏஏ
அன்பர்கள் நினைப்பதை அக்கணம் தந்திடும்
ஆலிலை மேல் வந்த அரியன் வாழ்ந்திடும்
துவாரகை போய் வருவீர்

இந்த வார்த்தையைக் கேட்ட உடனே மனுஷன் துடிச்சுட்டான். என்ன இருந்தாலும் மானஸ்தன், என்னைப் போல.

"சுசீலை, கிருஷ்ண பரமாத்மா என்னுடைய பால்ய நண்பனாக இருந்த போதிலும் வெட்கம் மானத்தை விட்டு

எப்படி எடுத்துரைப்பேன் நண்பனிடம் எப்படி எடுத்துரை
ஃபேன் ஃபேன் ஃபேன்
வரும்படி இல்லாத வறுமையின் கொடுமையை
எப்படி எடுத்துரைப்பேன்?
உப்புக்கும் பருப்புக்கும் காசில்லை என்று
உப்புக்கும் பருப்புக்கும் காசில்லை என்று
உப்புக்கும் பருப்புக்கும் செப்புக் காசில்லை என்று
உன்னா ஆஆஆஆஆஆ.... ஆஆஆஆ.........

ஆஹா! கிருஷ்ணா, ஆள் தெரியாமக் கூட்டிட்டு வந்துட்டேனேடா!

உன்னால் முடிந்ததை பிச்சை தர வேணுமென்று
எப்படி எடுத்துரைப்பேன்? "

என்று சொன்னார்.

ஸ்வாமி, பசி வந்திடில் பத்தும் பறந்து போம்னு சொல்லுவாங்க. அது நெஜமோ பொய்யோ, பசி வந்திடில் பிராணன் போறது நிச்சயம். இன்னும் கொஞ்ச நேரம் நீங்க வெயிட் பண்ணினா பெரிய பசங்கள்ளாம் சின்னப் பசங்களைப் போட்டு முழுங்கிடுவாங்கள் போலிருக்குது. அதனால் நீங்கள் உடனே துவாரகைக்குப் புறப்படுங்கன்னு சொன்னார். கவலையில்லாமல் தவலையிலிருந்து அவலை எடுத்து ஒரு படி போட்டு அவரிடத்திலே கொடுத்தாள்.

அதை அவர் எடுத்துக்கொண்டு

நடந்தார் பல நாடு நகரமதைக் கடந்தார்
நடந்தார் பல நாடு நகரமதைக் கடந்தார்
பல காத துரமே நடந்தார்
செல்வம் தன்னைத் தேடி துவாரகை செல்வன் தன்னை நாடி
காடு மேடு பள்ளமென்று பாராது நில்லாது
தள்ளாத வயதில் வேகமாய் நடந்தார்

இப்படியாகத் தானே துவாரகாபுரியை அடை...ந்தார்.

கண்ணன் இருக்கும் படியான அரண்மனையை அடைந்தார். கதவுகளோ திறந்து கிடந்தன. தேர்தல்லே வெற்றியடைஞ்ச எம்.எல்.ஏ. அசெம்ப்ளிக்குள்ளார நொழையற மாதிரி மனுஷன் சர்வ சாதரணமாகப் போக ஆரம்பிச்சுட்டார்.

கண்டார்கள் காவலர்கள், கொண்டார்கள் கோபம்.

"நில்லையா, சொல்லையா,
நில்லையா, நீ யாரென்ற விவரத்தை சொல்லையா
வல்லார்கள் எல்லோரும் வணங்கிடும் வாசலில்
வல்லார்கள் எல்லோரும் வணங்கிடும் வாசலில்
கல்லாத மனுஷன் போல் சொல்லாமல் செல்கின்றீர்
நில்லையா, கொஞ்சம் தள்ளையா, பெரிய தொல்லையா!"

இப்படியாக மிரட்டினார்கள். ஏ பரமாத்மா! உன்னைப் பார்ப்பதற்காகப் படாத பாடுபட்டு ஓடிவந்த என்னிடத்தில் இவர்கள் தடார் புடார் என்று பாடுகிறார்களே! இவனுகளைப் பாத்தாலும் சம்திங் வாங்கற ஆளாவும் தெரியல்லையே! நான் என்ன செய்வேன் எங்கு போவேன்? ஏ கிருஷ்ணா பரமாத்மா கோவிந்தா என்று கதறினார்.

இந்தக் கதறலைக் கேட்ட கிருஷ்ண பரமாத்மா ஓடோடி வந்தார், நெஞ்சாரத் தழுவிக் கொண்டார். ஆஹா! இத்தனை நாட்களுக்குப் பிறகு என்னை அன்போடு பார்க்க வந்திருக்கிறீர்களே, அண்ணி எனக்காக என்ன கொடுத்தடுப்பினார்கள் என்று கேட்டாஆஆஆர். பக்திப் பரவசத்திலே எண்சாண் உடம்பையும் ஒரு ஜாணாகக் ஒடுக்கிக் கொண்டு தான் கொண்டு வந்த அவல் முடிச்சை அவர் முன்பதாக வைத்தாஆஆஆஆர் கக. ஐயோ!

எடுத்தார், பிரித்தார், ஹஹஹஹ சிரித்தார்
புசித்தார் ஒரு பிடி அவலைப் புசித்தார்
அன்போடு தருதல் விஷமாகினும் அது அமுதமாகுமெனப் புசித்தார்
தன் அன்பன் படுகின்ற துன்பம் நீங்கிப் பேரின்ப வாழ்வு பெறப் புசித்தார்
மறுபடி ஒரு பிடி எடுத்தார், தடுத்தாள்,

யார்? ருக்மிணி, ஏன் தடுத்தாள்? அந்த ஏழை குடுக்கற அவலை சாப்பிட்டா கால்ரா வந்துடுமேன்னா தடுத்தாள்? அல்லள். அன்போடு ஒருத்தர் காபி கொடுத்தால் அவங்களுக்கு திருப்பி ஓவல் குடுக்கணும், குடுப்போமோ? இந்தக் காலத்திலே விஷம் கொடுக்காம இருந்தாப் போறாதா?

தன் அன்பனைப் பார்த்த ஆனந்தத்திலே வந்த வேலையை மறந்துட்டுக் குசேலர் போயிட்டார்.

இங்கே கண்ணன் சிரித்தார், அங்கே கனகலட்சுமி சிரித்தாள். உடனே மண் குடிசை எல்லாம் மாளிகையாகிவிட்டது. எல்லாம் அஸ்திவாரம் போட்ட கட்டடம், காரணம், காண்ட்ராக்ட்லே உடலை, அன்பர் மாதவன் தப்பா நெனைச்சுக்கப் பிடாது.

அந்தக் காலத்திலே இருந்த கிருஷ்ணனைப் போல இந்தக் காலத்திலே உதவி செய்றவங்க யாராவது இருந்தாங்களா? இருந்தார், தன் உழைப்பினாலே வந்த செல்வங்களை மத்தவங்களுக்கு வாரி வாரி வழங்கிய ஓரே ஒரு கிருஷ்ணனும் மறைந்தார்.

அவர் மட்டும் தானா? குசேலரைப் போல இருந்த மாதவனுக்கு சாமிநாதப் பிள்ளையோட உதவியினாலே இன்றைக்கு இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டி இங்கே கிரகப் பிரவேசம், அடியேனுக்கு அதில ஒரு சான்ஸ். ஆனா ஒரு விண்ணப்பம், குசேலனைப் போல மாதவனுக்கு இருபத்தேழு வேணாம். யோசனை செய்து, நிதானமா ஒண்ணு ரெண்டோட,

மங்களம் சுபமங்களம் நித்ய ஜெய மங்களம் சுப மங்களம்
நித்ய ஜெய மங்களம் சுப மங்களம்!

நம்ம பார்வதி எங்கே?

இதோ, இங்கே தாம்பா இருக்கேன்.

ஓ, கூட்டத்திலே எங்கேயோ காணமப் போயிடப் போறியோன்னு கேட்டேன், வா, வீட்டுக்குப் போவோம்.

ஆத்திலே தண்ணீ வர

வருடந்தோறும் மேதினம் வருவதும் அன்றொரு நாள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்து விட்டு நாட்டிலுள்ள தலைவர்கள் என அழைக்கப்படும் பலரும் தொழிலாளர்களுக்கு வாழ்த்துச் சொல்வதும் தொழிலாளர்கள் நலன் பற்றி அறிக்கை வெளியிடுவதும் வாடிக்கையாகிப் போன நிலையில் இந்த ஆண்டும் அந்த மேதினம் வந்து வந்த சுவடே தெரியாமல் போய்விட்டது. ஞாயிற்றுக்கிழமை மேதினமாகிப் போனதால் ஒரு நாள் கூடுதல் விடுமுறை கிடைக்கும் வாய்ப்பும் கைநழுவிப் போனது ஒன்றே தொழிலாளர்களுக்கு இந்த வருடம் மிச்சம்.

அதிகாலையில் தொடங்கி அந்தி சாயும் வரை அன்றாடம் ஓயாது உழைத்துப் பிறருக்கு வீடுகள் கட்டித் தரும் கட்டடத் தொழிலாளிகள் குடியிருப்பதோ குடிசையிலும் தெருவோரத்திலும். படாத பாடுபட்டுப் பட்டும் நூலுமாக நெய்து பிறர் அணிந்து மகிழ ஆடைகள் செய்யப் பாடுபடும் நெசவாளர்கள் கட்டுவதோ கந்தை. குடிப்பதோ கஞ்சி. இதுவே இந்தியா என்று சொல்லி உலகிலுள்ளோர் யாவரும் எள்ளி நகையாடுமளவுக்கு நாட்டில் அரசாங்கங்கள் ஆட்சிபுரிகின்றன.

ஏழைகள் நலனுக்காகப் பாடுபடுவோம் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வருவோர் செய்வதோ அரசுத் தொழிகள் யாவற்றையும் முடக்கிப் போட்டு கல்வி, மருத்துவம், விமானப் போக்குவரத்து, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு என அனைத்துத் துறைகளையும் தனியாருக்கு தாரை வார்த்து அவர்கள் வரி ஏய்ப்பு செய்ய வழிவகுத்து அதன் மூலம் தங்கள் குடும்பத்தாரும் கூட்டத்தாரும் மட்டுமே செல்வந்தர்களாக வகை செய்து மக்களை சுரண்டுவது ஒன்றே. நாட்டின் கனிம வளங்களை சட்டவிரோதமாகச் சுரங்கங்கள் வெட்டி எடுத்து வெளிநாட்டினருக்கு விற்று நம் நாட்டில் மலைவாழ் மக்கள் குடியிருப்புப் பகுதிகளை அழித்து இயற்கையை மாசுபடுத்தி சுடுகாடாக ஆக்குகவதும், ஆற்று மணலை அளவின்றி அள்ளிச் சென்று அநியாய விலைக்கு வீடுகளும் பிற கட்டிடங்களும் கட்ட விற்று நிலத்தடி நீர் வற்றச் செய்து ஆறுகளை வெறும் புதைகுழிகளாக ஆக்கி மக்கள் குடிக்கவும் நீர் இல்லாமல் செய்வதொன்றே ஜனநாயக ஆட்சியின் செயல்பாடு. பல நாட்களாய்ப் பாடுபட்டு நெல்லும், கனியும், கிழங்கும் தானியங்களும் விளைவித்து அவற்றை விற்பனை செய்து தாமும் பிறரும் வாழ வழிசெய்யலாம் எனக் காத்திருக்கும் விவசாயிகளது விளைபொருட்களுக்கு ஏற்ற விலை கிடைக்காமல் செய்து இடைத் தரகர்கள்கள் கொள்ளையடிக்க விட்டு விவசாயிகள் விளைநிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளி அந்நிலங்களைப் பலமடங்கு விலைக்கு கட்டுமானப் பணிக்கு விற்று தாங்கள் மட்டுமே இலாபம் அடைவதொன்றே அரசியல்வாதிகளின் தலையாய தொழிலாக உள்ளது.

காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு போவது போல் பாடுபட்டவன பலனடைய வழியின்றிச் செய்து இவ்வாறு நாட்டு மக்களைக் காக்காமல் அவர்களது அடிப்படை உரிமைகளைப் பரித்து வாழ வழியில்லாமல் செய்து தாங்கள் மட்டும் பலனடையும் வகையில் அரசியல்வாதிகளும் அரசாங்கங்களும் செயல்படுவது ஏன். இதற்கெல்லாம் காரணம் என்ன? விடை இதோ:

ஆத்திலே தண்ணீ வர

ஆஆஆஆஆஆ ஓஓஓஓஓஓஓஓ ஓஓஓ

ஆத்திலே தண்ணீ வர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக் கொண்டு போவதும் ஏன்
ஆத்திலே தண்ணீ வர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக் கொண்டு போவதும் ஏன்
கண்ணம்மா கண்ணம்மா அதைப்
பார்த்து அவன் ஏங்குவதேன் சொல்லம்மா

பாத்தி கட்டி நாத்து நட்டுப் பலனெடுக்கு்ம் நாளையிலே
பூத்ததெல்லாம் வேறொருவன் பாத்தியமாப் போவதுமேன்
பாத்தி கட்டி நாத்து நட்டுப் பலனெடுக்கு்ம் நாளையிலே
பூத்ததெல்லாம் வேறொருவன் பாத்தியமாப் போவதுமேன்
கண்ணம்மா கண்ணம்மா கலப்பை
புடிச்சவனும் தவிப்பது ஏன் சொல்லம்மா கலப்பை
புடிச்சவனும் தவிப்பது ஏன் சொல்லம்மா

நன்னானே நானேனானே நானே நன்னானே
நன்னானே நன்னானே நானே நன்னானே
நன்னானே நானேனானே நானே நன்னானே
நன்னானே நன்னானே நானே நன்னானே

பஞ்செடுத்துப் பதப்படுத்தி பக்குவமாய் நூல் நூற்று
நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா இங்கு
கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா
பஞ்செடுத்துப் பதப்படுத்தி பக்குவமாய் நூல் நூற்று
நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா இங்கு
கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா ஆஆஆஆஆ

காத்திருக்கும் அத்தை மவன் கண்கலங்கி நிற்கையிலே
நேத்து வந்த ஒருவனுக்கு மாத்து மாலை போடுவதேன்?
காத்திருக்கும் அத்தை மவன் கண்கலங்கி நிற்கையிலே
நேத்து வந்த ஒருவனுக்கு மாத்து மாலை போடுவதேன்?
கண்ணம்மா கண்ணம்மா அவள்
நேத்திரத்தைப் பறிப்பதும் ஏன் சொல்லம்மா

நன்னானே நானேனானே நானே நன்னானே
நன்னானே நன்னானே நானே நன்னானே

ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா
ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா இதை
எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா கண்ணம்மா
எல்லோருக்கும் நீ எடுத்து சொல்லம்மா

ஆத்திலே தண்ணீ வர அதிலொருவன் மீன் பிடிக்க
காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக் கொண்டு போவதும் ஏன்
கண்ணம்மா கண்ணம்மா அதைப்
பார்த்து அவன் ஏங்குவதேன் சொல்லம்மா

நன்னானே நானேனானே நானே நன்னானே
நன்னானே நன்னானே நானே நன்னானே
கண்ணம்மா சொல்லம்மா கண்ணம்மா சொல்லம்மா
நன்னானே நானேனானே நானே நன்னானே
நன்னானே நன்னானே நானே நன்னானே

ராமன் எத்தனை ராமனடி

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்

என்று மனிதப் பிறவியின் உயர்வைப் பற்றி எழுதிய கவிஞர் கண்ணதாசன் அத்தகைய உயர்ந்த மானுடப் பிறவியை அடைந்த மனிதன் மிகவும் தாழ்ந்து போய் இருக்கும் சமுதாய அவலத்தையும் சாடுகிறார்.

கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தை
சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான்
குள்ளநரி போல் தந்திரத்தால்
குடியைக் கெடுக்கப் புரிந்து கொண்டான்
வெள்ளிப் பணத்தால் மற்றவரை
விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்
மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை

http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/azhagu-nila/manidhan-ellam.php

மனிதன் மனிதனாக வாழ்வது எப்படி என்று எத்தனையோ ஞானியரும் மேதையரும் என்னென்னவோ எழுதி வைத்த் போதிலும் அவை யாவும் நமது மக்களுக்கு எளிதில் புரிவதில்லை. காரணம் அவர்கள் எழுதி வைத்த தத்துவங்களும் அறிவுரைகளும் கூர்ந்து கவனிப்பவர்க்கல்லாது மற்றவர்க்கு எளிதில் மனதில் பதிவதில்லை. இதே தத்துவங்களையும் அறிவுரைகளையும் ஒருவர் தம் வாழ்நாளில் கடைபிடித்தாரெனில் அவரது வாழ்வே பிறருக்கு வழிகாட்டுகிறது. தனியே விளக்கங்கள் ஏதும் கூறாமல் அவரைப் போல் வாழ வேண்டும் என்று ஒரே வாக்கியத்தில் யாருக்கும் வழி காட்டலாம். தம் வாழ்க்கையே பிறருக்கு வேதமாக விளங்கும் வண்ணம் உலகில் வாழும் அத்தகைய உன்னத புருஷர்களுடன் பழகும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லையாதலால். இந்த உன்னத புருஷர்களின் வாழ்க்கை வரலாறு கதைகளாகவும் காவியங்களாகவும் எழுதி வைக்கப் படுகையில் அது சாமான்யருக்கும் எளிதில் புரியும் வண்ணமாகவும் படிப்பதற்கு சுவாரஸ்யமாகவும் அமைவதால் அவர்களுக்குப் பயனளிக்கும் விதத்தில் விளங்குகின்றன.

மனிதர்களுள் உத்தமன் யாரெனில் நம் பாரத தேசத்தில் அயோத்தியை ஆண்ட மன்னன் தசரத குமாரன் ஸ்ரீராமனே என்று கற்றோர் கூறுவர். காரணம் ஸ்ரீராம சரிதத்தில் சிறு குழந்தைப் பருவமுதல் ஸ்ரீ ராமன் எவ்வாறு வாழ்ந்தான், தன் வாழ்வில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தனக்கு ஏற்பட்ட இன்னல்களையும் தாங்கி தரும நிறியில் நிலைத்து நின்று எவ்வாறு தன்னை நம்பியவர்களைக் காத்தான் எனபன போன்ற அனைத்தும் இராமாயண காவியத்தில் மிக அழகாகவும் கேட்கக் கேட்கத் தெவிட்டாத இனிமையுடனும் கூறப்படுகின்றன.

தாயை தெய்வமாக மதித்து வணங்கி அவருக்கு ஆயுள் உள்ளளவும் சேவை செய்வதும், தந்தையின் சொற்படி நடந்து அவருக்குப் பெருமை தேடித்தருவதும், சகோதரர்களுக்காகத் தன் சுகங்களை முழுமனதுடன் விட்டுக் கொடுப்பதும், தனக்கு உதவி செய்தவருக்குப் பிரதி உபகாரம் செய்து நன்றி மறவாதிருப்பதும், தன்னையே நம்பி தன் பெற்றோரையும் உற்றார் உறவினர் யாவரையும் பிரிந்து வந்து மணந்த மனைவியைப் போற்றி அவளுக்கு உண்மையுள்ளவனாய் வாழ்நாள் முழுதும் விளங்குவதும், தருமநெறியில் நில்லாது பிறருக்கு அநீதி இழைத்து அட்டூழியங்கள் புரியும் தீயவரை அழித்து நல்லவர்களைக் காப்பதும் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் முக்கியமான கடைமைகளாகும். அத்தகைய கடமைகளை முறையாக நிறைவேற்றிய உன்னத புருஷனாம் ஸ்ரீராமனின் கதையைக் கேட்டாலும், அவன் நாமத்தை உச்சரித்தாலும் அந்த ஸ்ரீராமனைப் போலவே வாழ்வில் உயர்ந்து தெய்வமாகப் போற்றப்படும் நிலையை அடையலாம் எனும் உண்மையினை ஸ்ரீராமனைப் போலவே வாழ்ந்து காட்டிய அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்டு அறிகிறோம்.

ராமன் எத்தனை ராமனடி

திரைப்படம்: லட்சுமி கல்யாணம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: பி. சுசீலா

ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி

ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
ராமன் எத்தனை ராமனடி

கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்
கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்
காதலுக்கு தெய்வம் அந்த சீதாராமன்
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன் ராமன்

ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி

தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தாயே என் தெய்வம் என்ற கோசல ராமன்
தந்தை மீது பாசம் கொண்ட தசரத ராமன்
வீரமென்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வீரமென்னும் வில்லை ஏந்தும் கோதண்ட ராமன்
வெற்றி என்று போர் முடிக்கும் ஸ்ரீஜெய ராமன் ராமன்

ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
ராமன் எத்தனை ராமனடி

வம்சத்திற்கொருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
வம்சத்திற்கொருவன் ரகுராமன்
மதங்களை இணைப்பவன் சிவராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்த ராமன்
மூர்த்திக்கு ஒருவன் ஸ்ரீராமன்
முடிவில்லாதவன் அனந்த ராமன்

ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமனின் கைகளின் நானபயம்
ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம்
ராமனின் கைகளின் நானபயம்

ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்
ராம்ராம் ராம்ராம் ராம்ராம் ராம்ராம்

ராமன் எத்தனை ராமனடி

சிந்தையறிந்து வாடி

நாமனைவரும் பிறந்தது முதலே மாயையில் உழன்று இனம் புரியாத ஒரு மயக்க நிலையிலேயே இவ்வுலகில் வாழ்கிறோம். நிலையாமை ஒன்றே நிலையானதுலகு எனும் நிதர்சனமான உண்மையை உணராமல் நம்முள் பல்வேறு காரணங்களுக்காகவும் ஏற்றத் தாழ்வு பாராட்டுகிறோம். அறிவென நாம் நினைப்பதெல்லாம் அறிவல்ல.

எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

எனும் குறள் வழி நின்று ஆழ்ந்து சிந்திப்போமாகில் நமது இந்த பூதவுடல் திட திரவப் பொருட்களாலானது என்றும், காலப்போக்கில் பௌதிக இரசாயன மாற்றங்களுக்குள்ளாகி ஒரு குறிப்பிட்ட காலத்தில் முழுதும் சிதைந்து போய் மண்ணோடு மண்ணாகக் கூடியது எனும் உண்மையை நாம் உணர்வோம். நம் உடலில் இயக்கம் நிலைபெறக் காரணமாகிய உயிர் இவ்வுடலை விட்டுப் பிரிந்த பின்னர் வேறு உடலைத் தரிக்கிறது என்று ஒரு சாராரும், உடல் அழிகையில் உயிரும் அழிகிறது என மற்றொரு சாராரும், உயிர் அமரநிலை அடைகிறது என வேறொரு சாராரும் கருதுகையில் இவ்வாறான பலவிதமான கருத்துக்களுள் எது உண்மை என்று நம் யாருக்கும் தெரியாது என்பதே கண்கூடான உண்மை.

இளமைப் பருவத்தில் இவ்வுலகம் முழுவதும் இன்பமயமானதெனவும் நாம் வாழ்வில் அனுபவிக்கப் பல சுகங்கள் உள்ளன எனவும் எண்ணி அத்தகைய சுகங்களைத் தேடி அனுபவிப்பதிலேயே இளமைக் காலம் முழுவதையும் நாம் கழித்து விடுகிறோம். இளமைப் பருவம் முடிந்து முதுமை சிறிது சிறிதாக நம்மை வந்தடைகையில் நாம் சிறிது சிறிதாக நம் இன்பக் கனவுகளிலிருந்து விடுபட்டு நாம் இவ்வுலகை விட்டுச் செல்லும் காலம் விரைவில் வருவதை எண்ணி மயங்குகிறோம், இவ்வுலகில் நாம் வாழ்நாளில் பழகிய உறவுகளிடமிருந்தும் வேறு பல விஷயங்களிலிருந்தும் பிரிந்து செல்ல மனமில்லாமையால் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறோம். இத்தகைய மரண பயம் அனைத்து உயிர்களுக்கும் உண்டாவது இயற்கையே. மரண பயமின்றி மரணத்தைத் துச்சமாக மதித்து வீரச் செயல்கள் பல புரிவோரும் நம்மிடையே உள்ளனர் என்பதையும் நாமறிவோம்.

கடவுள் இல்லையென மறுத்துத் தான் ஒரு பகுத்தறிவாளன் என்று பறைசாற்றிக் கொண்டு சாதிமத பேதத்தை வளர்த்துப் பொன்னுக்கும் பொருளுக்கும் அடிமையாகித் தம் வாழ்நாள் முழுமையும் பொய்யிலேயே வாழ்ந்த பொய்யர்களின் பொய் மூட்டையின் சுருக்கு அவிழ்ந்து விட்டது. இத்தகைய பொய்யர்களும் தம் கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டுப் பல காரணங்களால் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவதும் இரகசியமாகப் பல வ்அழிபாடுகளைச் செய்வதும் அம்பலமாகியுள்ளது. இத்தகைய செயல்களுக்கு அவர்களுக்குத் தன்னையறியாமல் ஏற்பட்ட அச்சமே காரணமாகும்.

பெரும்பாலானோர் வாழ்நாளின் பெரும்பகுதியை சுகபோகங்களில் கழித்து முதுமையடைந்த பின்னர் ஞானத்தை அடைந்து அதன் பின்னர் இவ்வுலக இன்பங்களில் பற்றை விடுத்து என்றும் நிரந்தரமான பொருளான இறைவனை நாடுகின்றனர். இத்தகையோரில் குறிப்பிடத் தக்கவர்கள் அருணகிரிநாதரும், பட்டிணத்தாரும் ஆவர். இவர்கள் தம் வாழ்நாளில் பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்து பின்னர் மெய்ஞானமெய்தினர் என்பது சரித்திரம். இதற்கு மாறாக குழந்தைப் பருவத்திலேயே வாழ்வின் அநித்திய நிலையை அறிந்து ஞானமெய்தியவர்கள் பலரும் நம்மிடையே அன்றும் இன்றும் என்றும் வாழ்ந்து வருவதும் கண்கூடான உண்மையே. இத்தகைய ஞானியரில் குறிப்பிடத் தக்க சிலர் திருஞான சம்பந்தர், ஆண்டாள், ஸ்ரீவள்ளி ஆகியோர் ஆவர். திருஞான சம்பந்தர் சிறு பிள்ளையாக இருந்த காலத்தில் தன் தாய் தன்னைத் தனியே விட்டுச் சென்ற தருணத்தில் அம்மா என்று பசிக்குரல் கொடுக்கையில் அக்குரல் கேட்டு ஓடோடி வந்து இறைவி அவருக்கு ஞானப்பாலூட்டியமையால் கவிபாடும் திறம் பெற்று இளம் வயதிலேயே பெரும் ஞானியானார். ஆண்டாள் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே ஸ்ரீமந் நாராயணுக்குத் தன் தந்தை பூஜை செய்கையில் அணிவிப்பதற்காகத் தொடுத்த மாலையைத் தான் அணிந்து அழகு பார்த்துப் பின்னர் கொடுத்ததும் அரங்கனையே தன் மணாளனாக மனதில் வரித்து அவ்வண்ணமே அடைந்ததும் புராணம். அதே போல் மலைக்குறவர் குலத்தில் உதித்த ஸ்ரீவள்ளி தமிழ்க் கடவுள் முருகனையே கணவனாக வரித்துப் பின்னர் அவனையே மணமுடிந்ததும் புராணத்தில் நாம் காண்கிறோம்.

இத்தகைய கதைகளெல்லாம் கற்பனையாகவே இருப்பினும் அவற்றில் கூறப்படும் மையக்கருத்து யாதெனில் நாம் அடையத்தக்க மெய்ப்பொருள் என்றும் இறையருள் ஒன்றே என்பதாகும்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

என்று அருணகிரிநாதர் மொழிந்துள்ளதன் தத்துவமாவது இவ்வுலகில் உள்ளவை யாவும் இறைவனின் வடிவமே என்பதே. எங்கும் இறைவன் நிறைந்திருப்பதைக் காண்பவனே மெய்ஞானி.

இறைவனை நாம் எந்த வடிவத்தில் வழிபடுகிறோமோ அந்த வடிவத்திலேயே அவன் நமக்கு அருள்புரிகிறான் என்பது பகவத் கீதை கூறும் ரகசியம். அவ்வழியே ஆராய்வோமெனில் திருஞான சம்பந்தர் ஞானப் பால் உண்ட கதையும், ஆண்டாள் அரங்கநாதனை மணாளனாய் அடைந்த கதையும் ஸ்ரீவள்ளி முருகனை மணந்ததும் உண்மையே என்பதை உணரலாகும்.

சிந்தையறிந்து வாடி

திரைப்படம்: ஸ்ரீவள்ளி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: ஆர். சுதர்சன், ராஜகோபாலஷர்மா
பாடியவர்: பி.ஏ. பெரியநயகி

சிந்தையறிந்து வாடி குமரன் சிந்தையறிந்து வாடி
செல்வக் குமரன் சிந்தையறிந்து வாடி செல்வக் குமரன்
செந்தூரிடம் தங்கும் கொந்தாள் மலர்க் கந்தன்
சிந்தையறிந்து வாடி

அந்தோ என் ஆசையெல்லாம்
அந்தோ என் ஆசையெல்லாம் கொள்ளை கொண்டானே
அந்தோ என் ஆசையெல்லாம் கொள்ளை கொண்டானே
அந்தோ என் ஆசையெல்லாம் கொள்ளை கொண்டானே
ஆறுமுக வடிவேலன் சிவபாலன் சிந்தையறிந்து வாடி

சின்னஞ்சிறு வயதில் என்னை மாலையிட்டானே
சின்னஞ்சிறு வயதில் என்னை மாலையிட்டானே
சிரிக்கச் சிரிக்கப் பேசி கைவளை தொட்டானே

அன்னம் பாலும் வெறுக்க அவனியில் கைவிட்டானே
அன்னம் பாலும் வெறுக்க அவனியில் கைவிட்டானே
அன்னம் பாலும் வெறுக்க அவனியில் கைவிட்டானே
அடிமைப்பெண்டிர் என்றே முடிய மறந்திட்டானே
சிந்தையறிந்து வாடி

கட்டித் தொட்டுமே இதழ் கனியமுதம் கொடுத்தான்
கட்டித் தொட்டுமே இதழ் கனியமுதம் கொடுத்தான்
கலவி மதனைப் போலே குலவி முத்தம் கொடுத்தான்
கலவி மதனைப் போலே குலவி முத்தம் கொடுத்தான்

கலவி மதனைப் போலே குலவி முத்தம் கொடுத்தான்
எட்டுக்குடி வேலவன் இசையமுதம் படித்தான்
எட்டுக்குடி வேலவன் இசையமுதம் படித்தான்
என்றும் பிர்யேனென்று என் கைமேல் அடித்தான்
என்றும் பிர்யேனென்று என் கைமேல் அடித்தான்

சிந்தையறிந்து வாடி செல்வக் குமரன் சிந்தையறிந்து வாடி
செந்தூரிடம் தங்கும் கொந்தாள் மலர்க் கந்தன்
சிந்தையறிந்து வாடி

ஏர் முனைக்கு நேர் இங்கே

உணவின்றி யாரும் உயிர் வாழ்தல் அரிது. உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உணவளிப்பவை மரங்களும், செடி கொடிகளும் பயிர் வகைகளும் ஆகும். இவற்றுக்கு ஆதாரமான காடுகளையும் வயல்களையும் நாள்தோறும் மனிதன் அழித்து வருவது ஆபத்துக்கறிகுறி ஆகும். அதை விடவும் அதிக ஆபத்துக்கறிகுறி யாதெனில் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டு வருவதாகும். மஹாகவி பாரதியார் வாழ்ந்த காலத்தில் அதாவது 1921ஆம் ஆண்டுக்கு முன் 30 கோடியாக இருந்த நம் நாட்டின் மக்கள் தொகை இன்று அதாவது சுமார் 100 ஆண்டுகளில் 121 கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு புறம் மக்கள் தொகை உயர மறுபுறம் அவர்களுக்கு உணவாதாரமாக விளங்கும் காடுகளும் விளைநிலங்களும் வெகுவாகக் குறைந்து வருவது மிகவும் ஆபத்தான விளைவுகளை நோக்கியல்லவா உள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் நமக்கெல்லாம் உணவு கிடைப்பதே அரிதாகிவிடக் கூடுமல்லவா?

நம்மில் பெரும்பாலோர் நம் வாழ்வில் பெரும்பான்மையான நேரத்தை நமது வருங்கால வாழ்விற்கும் நமது பிள்ளைகளும் சந்ததியினரும் சிறப்பாக வாழவும் தேவையான பொருளைத் தேடுவதிலேயே செலவிடுவதால் மனித சமுதாயத்தை எதிர்நோக்கியுள்ள இத்தகைய பேரபாயத்தைத் தவிர்ப்பது குறித்து சிந்திக்கத் தவறுகிறோம். இதற்கு அடிப்படைக் காரணம் சுயநலம். பண்டைக் காலத்தில் மக்கள் விருந்தோம்பலைத் தலையாய கடமையாக எண்ணி ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு விருந்தினருக்காவது முதலில் உணவு அளித்த பின்னரே தாங்கள் உணவருந்துவது எனும் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வந்தனர். இதற்கான ஆதாரங்கள் புராண இதிகாசக் கதைகளில் மட்டுமல்லாது நம் நாட்டின் உண்மை சரித்திரக் கதைகளிலும் உள்ளன. மனிதர்களுக்கு மட்டுமின்றி பறவைகள், விலங்குகள், செடி கொடிகள் முதலியவற்றுக்கும் பரிந்து தம் தேவைகளை அவற்றுக்காகத் தியாகம் செய்த பல மஹாத்மாக்களைக் குறித்து நாம் அறிகிறோம்.

பறவைகளுக்காக்த் தன் தொடையை வாளால் அரிந்து கொடுத்த செம்பியன் எனும் சிபிச் சக்கரவர்த்தி, தனது மகன் ஓட்டிச் சென்ற தேரில் அடிபட்டு மாட்டின் கன்று ஒன்று இறந்ததால் அம்மாட்டின் குறையைத் தீர்க்கத் தன் மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனு நீதிச் சோழன், கொழுகொம்பின்றி வாடிய முல்லைக் கொடிக்குத் தன் தேரை ஈந்த வள்ளல் பாரி, தான் நீடூழி வாழ வேண்டுமென வாழ்த்தி ஒருவர் கொடுத்த அரிய நெல்லிக்கனியை ஔவையாருக்களித்த வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி, இன்னும் இவர்கள் போன்ற எத்தனையோ உன்னத மனிதர்களைப் பற்றி நாம் இத்தகைய கதைகளில் படிக்கிறோம். இவற்றுள் பல கற்பனைக் கதைகளாக இருந்த போதிலும் இவற்றை நம் முன்னோர்கள் முதல் நம்முடன் வாழும் மக்கள் அனைவரும் சொல்லியும் கேட்டும் வருவது மனித குலத்தின் தருமசிந்தையையே காட்டுகிறது.

இத்தகு உயர்ந்த தரும சிந்தை கொண்ட தெய்வ வடிவுடன் விளங்கும் மனிதர்களாகிய நாம் சுயநலத்தைத் தள்ளி விட்டு இவ்வுலகைக் காக்கும் கடமையில் சற்றே கவனம் செலுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது. போதும், அநியாய வழிகளில் ஈட்டிய பெரும்பொருளைக் கொண்டு பேராசை கொண்ட மாந்தர் பலர் விவசாயிகள் பிழைக்க வழியில்லாத நிலையை உருவாக்கி, அவர்களின் விளைநிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி அவற்றையே பல மடங்கு அதிக விலைக்கு வீட்டு மனைகளாகவும் தொழிற்சாலைகளுக்கான இடமாகவும் விற்று விவசாயம் நடைபெறுவதைத் தடுத்து, உணவு உற்பத்தியைக் குறைத்து, மனித குலத்தை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் ஈனத்தை மாற்றுவோம். விவசாய நிலங்களைக் காப்போம்.

ஆற்று மணலைக் கட்டுப்பாடின்றி லாரிகளில் அள்ளிச் சென்று கட்டடங்கள் கட்டுவதற்குப் பயன்படுத்தி நிலத்தடி நீர் இல்லாமல் செய்யும் சமூகவிரோத செயலைத் தடுத்திடுவோம். காடுகளையும் மரங்களையும் அழிக்கும் நிலையை மாற்றி மரங்கள் பல நட்டு இயற்கையைக் காக்க முயற்சிகள் மேற்கொள்வோம். விவசாயத்தினால் விளையும் காய்கறிகள், கனிகள் முதலியவை கெட்டு அழுகி வீணாவதைக் குறைக்கக் குளிர்பதக் கிடங்குகளை அமைப்போம். குறிப்பிட்ட பருவகாலத்தில் மட்டும் விளையும் அரிய வகைக் காய்கறிகளையும் பழங்களையும் இதன் மூலம் ஆண்டுதோறும் கிடைக்க வழி செய்வோம். இடைத் தரகர்களை நீக்கி விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய நியாமமான விலை அவர்களுக்குக் கிடைக்கச் செயது விவசாயிகள் சுரண்டப்படுவதைத் தவிர்த்து விவசாயிகள் தன் விளைநிலங்களை விற்கும் அவலத்தைப் போக்க ஆவன செய்வோம். விவசாய விளைபொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு வரிவிலக்கு அளீத்து விளை பொருட்கள் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்வோம்.

ஆட்சியாளர்கள் இதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நாம் சமுதாய அமைப்புகள் வழியே வலியுறுத்துவோம். விவசாயம் செழித்தால் நம் வாழ்வில் என்றும் பஞ்சமில்லை.

ஏர் முனைக்கு நேர் இங்கே

திரைப்படம்: பிள்ளைக் கனியமுது
இயற்றியவர்: மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
ஏஏஏ ஏஏஏ ஏஏஏஏஏஏ
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே

பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே பயிர்
பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே
பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே பயிர்
பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே நாம்
ஷேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே நாம்
ஷேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே இந்த
தேசமெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே

ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே

நெற்றி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக அது
நெல்மணியாய் வெளஞ்சிருக்கு கொத்துக் கொத்தாக
நெற்றி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக அது
நெல்மணியாய் வெளஞ்சிருக்கு கொத்துக் கொத்தாக
பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக் கட்டாக
பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக் கட்டாக அடிச்சுப்
பதரை நீக்கிக் குவிச்சி வைப்போம் முத்து முத்தாக

ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே

வளர்ந்து விட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா? தலை
வளைஞ்சு சும்மாப் பாக்குறியே தரையின் பக்கமா
வளர்ந்து விட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா? தலை
வளைஞ்சு சும்மாப் பாக்குறியே தரையின் பக்கமா இது
வளர்த்து விட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா? இது
வளர்த்து விட்ட தாய்க்குத் தரும் ஆசை முத்தமா? என்
மனைக்கு வரக் காத்திருக்கும் நீயும் சொத்தம்மா?

ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே

செவ்வாய், 26 ஜூலை, 2011

அப்பன் வீட்டு சொத்தைப் போல

6 ஏப்ரல் 2011

சொல்லுவது யார்க்கும் எளிது அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

எனும் குறள் வழியே தன் வாழ்நாள் உள்ளளவும் உண்மை ஒன்றையே பேசி என்றும் தான் பிறருக்கும் கூறும் அறிவுரைகள் யாவற்றையும் முதற்கண் தான் கடைபிடித்து தன் வாழ்க்கையே பிறரது வாழ்க்கைக்கு நல்லதொரு வழிகாட்டியாக வாழ்ந்து காட்டியவர் அண்ணல் காந்தியடிகள். சுமார் எண்ணூறு ஆண்டுகள் முகலாயர்கள் முகலாயர்களது ஆட்சியின் கீழும் அதன் பின்னர் சுமார் இருநூறு ஆண்டுகள் ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலும் இருந்த நம் நாட்டை அரும்பாடு பட்டுத் தம் இன்னுயிரையும் தியாகம் செய்து பல தன்னலமற்ற தேசபக்தர்கள் அண்ணல் காந்தியின் தலைமையில் மெய்வருத்தம் பாராது பசி நோக்காது கண் துஞ்சாது பாடுபட்டு விடுதலை பெறச் செய்த பின்னர் ஆட்சியை ஏற்று நடத்திவரும் இந்திய அரசியல்வாதிகள் ஆரும்பாடு பட்டு ஆங்கிலேய ஆதிக்கத்தினின்றும் விடுதலை பெற்ற நமது நாட்டை வெறும் அறுபது ஆண்டுகளுக்குள்ளாகவே அமெரிக்கர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு விற்று மீண்டும் இந்தியாவை அடிமை நாடாக ஆக்கியுள்ளனர் என்றால் அது மிகையாகாது.

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?

என்று கேள்வி எழுப்பிய மஹாகவி பாரதியார் அக்கேள்விக்கும் ஆம் எனும் பதில் கிடைத்ததினாலேயே இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெறும் நாள் வரை உயிருடன் இல்லாமல் உயிர்நீத்தாரோ?

இத்தகைய இழிநிலைக்குக் காரணம் தேர்தல்கள் வருகையில் வாக்குறுதிகளை வாரி வழங்கி வெற்றி பெற்ற உடன் வழங்கிய வாக்குறுதிகளைக் குப்பையில் போட்டுத் தம் சுயநலம் பேணும் அரசியல்வாதிகளே ஆவர்.

"படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்" என்று ஒரு எடக்கான பழமொழி உண்டு. தான் பிறருக்குக் கூறும் அறிவுரைகளைத் தானே கடைபிடியாத போலி வாழ்க்கை வாழும் புல்லர்கள் குறித்தே இப்பழமொழி அன்று முதல் இன்று வரையிலும் வழங்கி வருகிறது.

இதற்கு அடையாளமாவது தான் ஒரு தன்மானத் தமிழர் என்றும், நெஞ்சுக்கு நீதியை நிலைநிறுத்தியவர் என்றும் தமிழ்மொழியை உலக அளவில் தூக்கி நிறுத்தியவர் எனவும் பெருமை பீற்றிக் கொள்ளும் ஒருவர் திருக்குறளுக்கு எழுதி வைத்த விளக்கமும், அவர் வாழ்ந்த வாழ்க்கையும், நாட்டை ஆண்ட முறையுமே ஆகும்.

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி

திரு மு.வரதராசனார் உரை

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

திரு மு.கருணாநிதி உரை

உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.

திரு.பரிமேலழகர் உரை

உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகா நிற்குமே எனினும், குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும். (நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய உணவை 'வான்' என்றும், கோலின் ஆய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை என்பதாம்.)

தமிழ்நாட்டிலும் இந்தியாவின் மத்திய அரசிலும் நடைபெறும் ஆட்சியின் அழகு அனைவரும் அறிவர். இந்த நாடு ஜனநாயக நாடு என்று சொல்லப்படுவது உலகின் முதல் பொய்யாகும். ஏனெனில் இங்கே மக்களால் மக்களுக்காக மக்கள் நடத்தும் ஆட்சி நடக்கவில்லை. மக்களைப் பலவழிகளிலும் ஏமாற்றியும் மிரட்டியும் ஆசை காட்டித் தவறான வழிகளில் திசைதிருப்பியும் ஆட்சி பீடங்களில் அமரும் பிரதிநிதிகள் தங்களது குடும்பத்தாருக்காகவும் கூட்டாளிகளுக்காகவும் நடத்தும் கொள்ளை ஒன்றே இன்று நடைபெறுகிறது.

இந்நிலை நீடிக்க இன்னமும் அனுமதித்தால் நாடு ஒட்டுமொத்தமாக அந்நியருக்கு அடிமைப்பட்டு மக்கள் யாவரும் பட்டினிச் சாவை சந்திக்க நேரலாம் எனும் அபாயகரமான நிலை எய்திய இந்நாளில் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வரும் பல் தேசபக்தர்கள் ஒன்று கூடி நம் நாட்டின் சுதந்திரத்தையும் நாட்டு மக்களையும் எவ்வாறாகிலும் காக்க வேண்டும் எனும் நோக்கில் ஒரு புதிய சுதந்திர யுத்தத்தை அண்ணல் காந்தி காட்டிய அஹிம்சை வழியில் துவந்தியுள்ளனர்.

இது குறித்த செய்தியாவது:

நேற்று வரை:

ஊழலுக்கு எதிராக பிரதமர் மன்மோகன் சிங் இம்மாத இறுதிக்குள் நடவடிக்கை டுக்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக 90 வயதான காந்தியவாதிகள் எச்சரித்துள்ளனர்.

மகாத்மா காந்தியுடன் வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்ற 93 வயதான ஷாம்பு தத்தா, முராரிலால் குப்தா (90), குமாரி தேவி (84), கோவிந்த் நாராயண் சேத் (78), கே.பி.சாஹூ (79) ஆகியோர் கடந்த இரண்டு வாரங்களாக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று இவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இது குறித்து ஷாம்பு தத்தா குறிப்பிடுகையில், "முன்பு வெள்ளையனை எதிர்த்து போராடினோம்; இப்போது ஊழல்வாதிகளை எதிர்த்து போராட்டம் நடத்துகிறோம். எம்.பி., மற்றும் எல்.எல்.ஏ.,க்கள் உட்பட யார் தவறு செய்தாலும் தண்டிக்க வழி செய்யும் லோக்பால் கமிஷனை அமைக்க வேண்டும்.

முறைகேடாக சொத்து சேர்த்தவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்த உரிமை உண்டு. இந்த நாட்டுக்காக நாம் எதையும் செய்யவில்லை என்ற எண்ணத்தோடு நாங்கள் தூங்க விரும்பவில்லை. எனவே தான், சாலையில் இறங்கி போராட முடிவு செய்துள்ளோம். இம்மாத இறுதிக்குள் பிரதமர் மன்மோகன் சிங், ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்' என்றார்.

குமாரி தேவி என்ற சுதந்திர போராட்ட வீராங்கனை குறிப்பிடுகையில், "நம் நாட்டில் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் போதிய உணவில்லாமல் வாழும் நிலை உள்ளது. ஆனால், ஒரு தரப்பு மக்கள், ஊழல் மூலம் வளம் கொழித்து வருகின்றனர். சிரமப்பட்டு பெற்ற குழந்தை வளர்ந்த பின், தவறான பாதைக்கு செல்லும் போது பார்த்துக் கொண்டு தாய் சும்மா இருப்பாளா? அதேபோல தான், தற்போது நெறி தவறும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறோம்' என்றார்.

புதுடெல்லியில் இன்று

சமூக ஆர்வலரான அனா ஹசாரே டெல்லியில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கிறார். ஊழலுக்கு எதிராகப் போராடி வருகிற ஹசாரே ஊழலை ஒடுக்கும் லோக்பால் சட்ட மசோதாவை நிறைவேற்றக் கோரி இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பொய்யான வாக்குறிதிகளை அள்ளிவீசி இலவசங்களை அளித்து ஆட்சியைப் பிடிக்கும் யாரும் இனிமேல் சொன்ன வாக்குறுதிகளைக் காப்பாற்றத் தவறி சுயநலம் பேண இயலாத நிலையை நாட்டில் உருவாக்குவது நம் அனைவரது இன்றைய இன்றியமையாத கடமையாகும்.

இன்றைய அரசியல்வாதியின் நடத்தையை விளக்கும் பாடலொன்று இன்றைய பாடலாக மலர்கிறது.

அப்பன் வீட்டு சொத்தைப் போல

திரைப்பட்ம்: தேசிய கீதம்
இயற்றியவர்: பழனி பாரதி
இசை: இளையராஜா
பாடியவர்: புஷ்பவனம் குப்புசாமி

அப்பன் வீட்டு சொத்தைப் போல அனுபவிக்கப் பாக்குறியே
அத்தனைக்கும் பொய்க் கணக்கு எழுதி எழுதிக் காட்டுறியே

அப்பன் வீட்டு சொத்தைப் போல அனுபவிக்கப் பாக்குறியே
அத்தனைக்கும் பொய்க் கணக்கு எழுதி எழுதிக் காட்டுறியே
துப்புக்கெட்ட பொழப்பு இது தப்பு செஞ்சே வாழுறியே
எக்குத் தப்பா கேள்வி கேட்க ஆளில்லேன்னு நெனைக்கிறியே
ரோடு போட ஒதுக்கி வச்சத வீட்டுக்குன்னு பதுக்குறியே
நாட்டு நெலை மறந்து ஒங்க பாட்டுக்குத்தான் அலையுறியே

நாய் படுற பாடு நம்ம நாடு படுது பாரு
ஓட்டுப் போட்டது ஊரு உங்களைத் தூக்கிப் போடுவதாரு?

ஐதர் அலி காலத்துலே போட்ட ரோடு மாறல்லையே
எத்தனையோ கட்டி வந்தும் எங்க கொறை தீரல்லையே
குண்டு குழி ஒண்ணா ரெண்டா கணக்கெடுக்க முடியல்லையே
டெண்டருக்கு விட்டுப்புட்டா கேள்வி கேக்க வழியில்லையே

குத்தங்குறை சொல்ல வந்தா ஏழையத்தான் தான் ஏசுறியே
மத்தபடி மந்திரி வந்தா தாரெடுத்து ஊத்திறியே
தூக்கிப் போடுது ரோடு அதை மாத்திப் போடுவதாரு
கர்ர்ப்பிணி பொண்ணுக பட்ட துன்பக் கணக்கெத் தீக்குது ரோடு

யாரு போட்ட ரோடு நம்ம சர்க்கார் போட்ட ரோடு
யாரு போட்ட ரோடு நம்ம சர்க்கார் போட்ட ரோடு

நகாவலி நாட்டிலே

வசதி படைத்தவர்களெல்லோரும் வரி ஏய்ப்பு செய்து வளமாக வாழ்ந்து வருகையில் அல்லும் பகலும் அயராது உழைத்து அரை வயிற்றுக் கஞ்சிக்கென சிறிதளவு வருவாய் ஈட்டும் அப்பாவி மக்களின் மேல் வரிச்சுமை மேலும் மேலும் அதிகமாகி அல்லலுறும் நிலை இன்று நம் நாட்டில் நிலவுகிறது. பல ஆண்டுகளாக சட்டரீதியான எந்த ஒரு தொழிலையும் செய்யாது, சர்வதேச ஆயுதக் கடத்தல் கும்பலுடனும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பல சந்தர்ப்பங்களில் வெடிகுண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்த தீவிரவாதிகளுடனும் கூட்டுச் சேர்ந்து கோடானு கோடிக் கணக்கில் நம் நாட்டில் பணத்தைச் சேர்த்து அந்நிய நாட்டில் பதுக்கி வைத்திருக்கும் சமூக விரோதி ஒருவன் நேற்றுவரை சுதந்திரமாக யாருடைய கட்டுப்பாட்டிலும் வராமல் திரிந்து வந்தான். இன்று நம் நாட்டில் சொற்ப அளவில் நீதியும் அவ்வப்போது செயல்படும் எனும் சிறு அடையாளமாக உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் அந்த சமூகவிரோதி மத்திய புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்படுகிறான்.

சர்வதேச கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளுக்காக நாட்டு மக்களது வரிப்பணத்தைக் கோடிக்கணக்கில் செலவு செய்து நாட்டின் பல்வேறு நகரங்களில் கட்டப்பட்ட விளையாட்டு மைதானங்களில் தற்போது நடைபெறும் உலகக் கோப்பை ஒரு நாள் போட்டித் தொடருக்கென ஏற்பாடு செய்யப்பட்ட இருக்கைகளில் முக்காலே மூணு வீசம் பெரும் பணக்காரர்களுக்குக் கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட நிலையில் இருக்கும் சொற்ப இடங்களுக்கான நுழைவுச் சீட்டுகளைப் பெற வேண்டி கால் கடுக்க வரிசையில் நின்றிருக்கும் பொதுமக்களுக்குப் போலீசாரைக் கொண்டு தடியடிகளே வழங்கப்படுகின்றன. அது மட்டுமின்றி இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டிக்குரிய நுழைவுச் சீட்டுக்கள் ஒவ்வொன்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப் படுகின்றன. இவ்வாறு கள்ளச் சந்தையில் நுழைவுச் சீட்டுகளைப் பெற்று விளையாட்டை வேடிக்கை பார்க்க வரும் பெரிய மனிதர்களுடன் ஒன்று சேர்ந்து இந்திய பாகிஸ்தானியப் பிரதமர்களும் விளையாட்டை வேடிக்கை பார்க்கப் போகின்றனர். என்னே ஜனநாயகம்?

இத்தகைய அநீதி கண்முன்னர் தங்களுக்கு இழைக்கப்பட்டும் நம் நாட்டு மக்களுக்கு அதீதமான தேசப்பற்று. அதன் அடையாளமாக நாட்டின் பல பகுதிகளிலும் இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா வெற்றி பெற வேண்டி ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் படுகின்றன. மஹாத்மாவும் காணாத ஒரு உயர்ந்த தேசபக்தி அல்லவா இது! தாங்கள் அன்றாடம் பாடுபட்டு சம்பாதிக்கும் பணத்தைப் பல விதங்களில் வரிகளை விதித்தும் விலைவாசிகளை உயர்த்தியும் கள்ளப் பண கும்பலுடன் கைகோர்த்து செயல்படும் அரசியல்வாதிகள் தொடர்ந்து கொள்ளையடிப்பதைப் பற்றி அக்கரை கொள்ளாமல் கிரிக்கெட் மோகத்தில் உழல்கின்றனர் இந்தியத் திருநாட்டின் உத்தம புத்திரர்கள்,

இந்தியாவின் நிலப்பரப்பில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டு அதனை முறைகேடாக சீனாவுக்கு விற்றதுடன் தொடர்ந்து இந்தியாவுக்கெதிராகப் பல வழிகளிலும் ஆயுதமேந்திய தீவிரவாதிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானின் பிடியிலிருந்து இந்தியாவை விடுவிப்பதை விட இவர்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெறுவது பெரிதாகப் போய் விட்டது.

இரண்டாண்டுகளுக்கும் மேலாக நாள் தவறாமல் மக்கள் மேல் மின்வெட்டு தொட்ரந்து திணிக்கப்படுகையில், நோய்வாய்ப்பட்ட சமயம் தங்கள் வாழ்நாளில் சேமித்த தொகையனைத்தையும் செலவிட்டுப் பற்றாமையால் அக்கம் பக்கத்திலும் பல்வேறு நண்பர்கள் மூலமாகவும் கடனாகவும் பிச்சையாகவும் சேர்த்த பணத்தைக் கொண்டு சிகிச்சை பெற அரசு மருத்துவ மனைகள் எதுவும் முறையாகப் பராமரிக்கப்படாத நிலையில் தனியார் மருத்துவ மனைகளை நாடி, பெரும் பொருட் செலவில் நோய் தீர வழிதேடிச் செல்லும் மக்களின் மேல் புதிதாக ஒரு வரியை இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்ததாகப் பீற்றிக்கொள்ளும் இந்திய தேசியக் காங்கிரஸ் நடத்தும் மத்திய அரசு நூதனமான முறையில் கண்டறிந்து விதித்தது.

அதாவது காற்றைக் குளிர்விக்கும் சாதனங்கள் (ஏர் கண்டிஷனர்கள்) உபயோகப் படும் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறுவோர், சிகிச்சைக்காக செலுத்தும் கட்டணத்தில் 5 சதவீதம் வரியாக அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டுமென்று சொல்லும் இந்தச் சட்டம் சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் வாயிலாக விதிக்கப் பட்டது. காற்றைக் குளிர்விக்கும் சாதனங்கள் இன்றி எந்த ஒரு மருத்துவ மனையிலும் அறுவை சிகிச்சைகள் ஏதும் செய்ய இயலாது எனும் அனைவரும் அறிந்த உண்மையைப் பல அனுபவம் மிக்க மருத்துவர்களும் பொது நல அமைப்புகளும் செய்தி நிறுவனங்களும் தொடர்ந்து எடுத்துச் சொன்ன பின்னரே நம் நாட்டின் நிதியமைச்சருக்கு இந்த சிறு உண்மை விளங்கி அந்த அக்கிரம வரி பின்னர் விலக்கிக் கொள்ளப் பட்டது. இவரெல்லாம் நிதியமைச்சராக இருப்பதை விட எங்காவது வட்டிக்குக் கடன் கொடுத்து வாங்கும் ஒரு சேட்டு கடையில் கணக்கெழுதப் போகலாம்.

தற்சமயம் மத்தியிலும் நம் மாநிலத்திலும் நடைபெறுவது ஆட்சி என்று சொல்வதை விட கருப்புப் பணத்தின் பலத்தாலும் சமுதாய விரோதிகளின் செயல்பாடுகளாலும் மக்களின் கண்களில் மண்ணைத் தூவி அரியணையை அபகரித்துக் கொண்ட கொள்ளைக் கும்பலின் கோரத் தாண்டவம் என்று சொல்வது சாலப் பொருந்தும். இந்த நாடு அடையும் சீர்கேடுகளைக் காண்கையில் ஒரு வரலாற்றுக் கதையில் சொல்லப்பட்ட அரசாங்கத்தில் பெண்கள் அதிகாரம் செலுத்தும் நகாவலி நாட்டை விடவும் மோசமாக இருப்பது போல் தோன்றுகிறது.

நகாவலி நாட்டிலே

திரைப்படம்: குலேபகாவலி
இயற்றியவர்: தஞ்சை ஏ. ராமையா தாஸ்
இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

நகாவலி நாட்டிலே ஏ..ஏ..ஏ..ஏ..ஏ.ஏ.ஏ
பகாவலி ஆட்சியிலே ஏ...ஏ..ஏ..ஏ..ஏ.ஏ.
நியாயமாய் வாழவும் வழியுமில்லே
இது அநியாயம் அநியாயம் அநியாயம்

அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்
அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம் இங்கே
ஆண்களைப் பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

கனிவாகப் பேசும் பெண்கள் கையிலே
கத்தியும் ஈட்டியும் இருக்குது
கணவனைக் கண்டால் மனைவியரெல்லாம்
காளை போலவே மொறைக்குது
கணவனைக் கண்டால் மனைவியரெல்லாம்
காளை போலவே மொறைக்குது இங்கே
ஆண்களைப் பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

தனிமையாக ஒரு வாலிபன் இருந்தால்
தர வேணும் பிரம்மச்சாரி வரி
தாலி கட்டியே குடும்பம் நடத்தினால்
அவனும் தரணும் சம்சார வரி
தனிமையாக ஒரு வாலிபன் இருந்தால்
தர வேணும் பிரம்மச்சாரி வரி
தாலி கட்டியே குடும்பம் நடத்தினால்
அவனும் தரணும் சம்சார வரி இங்கு
தடுக்கி விழுந்த வரி குனிந்து நிமிர்ந்தவரி
இட்டிவரி சட்னி வரி பட்னி வரி இதுபோல்
ஆண்களைப் பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

அர்த்தமே இல்லாத வரியை சுமத்தும்
பகவலி ராணி ஆட்சியிலே
அர்த்தமே இல்லாத வரியை சுமத்தும்
பகவலி ராணி ஆட்சியிலே
ஆதரவில்லாத இல்லாத ஏழை மக்களும்
அடிமையாகினார் சூழ்ச்சியிலே
பொருத்தமே இல்லாத புதுப்புது வரிகளை
போடுவதெல்லாம் ஏதும் நியாயமில்லே
எதுத்துக் கேட்கவும் நாதியில்லே அவங்க
என்ன செய்தாலும் கேள்வியில்லே இங்கே
ஆண்களைப் பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம் இங்கு
ஆண்களைப் பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

வாழப் பிறந்தவரை வாட்டி வதைக்கும் வரி
ஏழை முதுகிலே கொடுக்கும் சாட்டை வரி
ஏழை முதுகிலே கொடுக்கும் சாட்டை வரி
இந்த நாட்டு வரி