வெள்ளி, 3 டிசம்பர், 2010

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே

தமிழ்த் திரையுலகம் இசைத்துறையில் அன்று முதல் இன்றளவும் மிகவும் முனைந்து செயல்பட்டு வருவது அனைவரும் அறிவோம். இந்தியாவின் பாரம்பரிய இசை கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி மற்றும் கிராமியப் பாடல்கள் முதலிய வடிவில் தொன்றுதொட்டு வழங்கி வருகிறது. தமிழ் இசையில் மிகவும் திறமை வாய்ந்த முன்னோடிகள் எனக் கருதப்படும் பிரபல இசைக் கலைஞர்கள் உலகப் புகழ் பெறுவதற்குத் தமிழ்த் திரையுலகில் அவர்கள் பெற்ற பங்கு ஒரு முக்கியக் காரணமாகும். ஆங்கிலேயர்கள் ஆட்சியிலிருந்து மீண்டு நம் நாடு சுதந்திரமடைவதற்கு சிறிது காலம் முன்பிருந்தே தமிழ்த் திரையுலகம் பல திரைப்படங்களை உருவாக்கி வந்துள்ளது.

தொடக்க காலத்தில் பெருமளவு கர்நாடக சங்கீதத்தையே தழுவி இயற்றி இசையமைக்கப் பட்ட பாடல்கள் மிகவும் அதிக அளவில் திரைப்படங்களில் இடம்பெற்றன. இடையிடையே ஹிந்துஸ்தானி இசை வடிவில் அமைந்த பாடல்களும் அவ்வப்பொழுது சேர்ந்து ஒலித்தன. நாளடைவில் இசை பாமர மக்களைச் சென்று அடையும் நோக்குடன் மெல்லிசைப் பாடல்கள் பெரும்பாலும் திரையுலகை ஆக்கிரமித்தன. இத்தகைய மெல்லிசைப் பாடல்களிலும் கர்நாடக இசையின் சாயலே அதிகம் காணப்பட்டது. இதனூடே மேல்நாட்டு இசையின் தாக்கத்தாலும் வட இந்தியத் திரையுலகின் தாக்கத்தாலும். மெல்லிசையில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. மெல்லிசைப் பாடல்களுடன் கலந்து பல கிராமிய இசைப்பாடல்களும் வெளிவந்தன. இருப்பினும் கிராமியப் பாடல்கள் பெருமளவு இடம் பெறாத நிலை தமிழ்த் திரையுலகில் ஒரு தேக்கத்தை உருவாக்கியது.

அத்தேக்கத்தைப் போக்கி ஊக்கத்தை அளித்து கிராமிய இசைப்பாடல்கள் தமிழ்த் திரையுலகில் மிகவும் அதிகமான அளவில் இடம் பெற வைத்த பெருமை இசைஞானி இளையராஜாவைச் சேரும் எனில் அது மிகையாகாது. இளையராஜாவின் திரையுலகப் பிரவேசம் அது வரையில் அதிகமான பாடல்களைப் பாட வாய்ப்பின்றி இருந்த பாடகர்கள் பலருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. குறிப்பாக "கொஞ்சும் சலங்கை" திரைப்படத்தில் வரும் "சிங்கார வேலனே தேவா" எனும் மிகப் பிரபலமான பாடல் உட்படல் பல இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடிய ஜானகி இசை ஞானியின் இசையமைப்பில் மேலும் பல பாடல்களைப் பாடி முன்பிருந்ததை விட மிகவும் பிரபலமடைந்தார்.

இத்தகைய மாற்றம் நிகழ்ந்தது அன்னக்கிளி திரைப்படத்தின் மூலமே..

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே

திரைப்படம்: அன்னக்கிளி
இயற்றியவர்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ். ஜானகி

ஆஆஆ... ஆ ஆஆஆஆஆ..ஆ..
லாஆஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ.. ஆ..

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வரூஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வரூஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே

நதியோரம் பொறந்தேன் கொடி போல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்
நதியோரம் பொறந்தேன் கொடி போல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும் மனம் போல் நடந்தேன்
உறங்காத...
உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மையெழுதி
கலங்காதே காத்திருக்கேன் கைபிடிக்க வருவாரோ?

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வரூஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே

கனவோடு சில நாள் நெனவோடு சில நாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்
கனவோடு சில நாள் நெனவோடு சில நாள்
உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்
மழை பேஞ்சா
மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நாட்டு கருதறுத்து
போரடிக்கப் போன மாமன் பொழுதிருக்க வருவாரோ?

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வரூஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே

நதியென்றால் அங்கே கரையுண்டு காவல்
கொடியென்றால் அதைக் காக்க மரமே காவல்
புள்ளி போட்ட
புள்ளி போட்ட ரவிக்கைக் காரி புளியம்பூ சேலைக்காரி
நெல்லருக்கப் போகையில் யார் கண்ணிரண்டும் காவலடி

அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வரூஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே

இதோ என்தன் தெய்வம் முன்னாலே

மனிதன் தன் வாழ்க்கைக்குத் தேவையான பொருளையும் தன் மனதில் எழும் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள உறவுகளையும் தேடுகிறான். இத்தேடலின் விளைவாக ஏற்படும் உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் எழுகையில் அவற்றின் தாக்கத்திலிருந்து மீள வழி தேடுகையில் உதித்ததுவே தெய்வமெனும் தத்துவம். தன்னிடம் இல்லாத ஒரு சக்தியையும் ஆனந்தத்தையும் அவன் அத்தெய்வத்திடம் காண்கிறான். இதன் விளைவாக உருவானவையே மதங்களும் அவற்றினை போதிக்கும் மார்க்கங்களான் புராணங்களும் ஆகும். ஆனால் அத்தகைய தெய்வம் எங்கே உள்ளது என்று பொருளைப் பெரிதென மதித்து உயிர்களை மதிக்கத் தவறும் மாந்தர்கள் உணர்வதில்லை. தெய்வம் இல்லாத இடமேயில்லை.

அனைத்து உயிர்களும் அனைத்துப் பொருட்களும், அனைத்து ஒலிகளும் அனைத்துக் காட்சிகளும் அண்டசராசரங்களும் இறை வடிவமேயென ஞானியர் உணர்ந்து தெளிந்து நமக்கு எடுத்துரைத்த போதிலும் அறியாமையினால் நாம் அதை முழுவதும் உணர்வதில்லை. உலக இன்ப துன்பங்களிலேயே பெரும்பாலும் கிடந்து உழல்கிறோம்.

சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?
சொல்லென்று இரணியன்தான் உறுமிக் கேட்க,
நல்லதொரு மகன் சொல்வான்:'தூணி லுள்ளான்
நாரா யணன் துரும்பிலுள்ளான்' என்றான்.
வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை.
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை;
அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை;
அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ?

என்று மஹாகவி பாரதியார் பிரஹலாதன் கதையிலிருந்து வெளிப்படும் தத்துவத்தை எடுத்துரைக்கிறார்.

இதோ இன்கே ஒரு மனிதன் தன்னிடம் அன்பு செலுத்தும் ஒரு சிறு குழந்தையை தெய்வமாகக் கண்டு பாடுகிறான்.

இதோ என்தன் தெய்வம் முன்னாலே

திரைப்படம்: பாபு
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

இதோ என்தன் தெய்வம் முன்னாலே நான்
ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே
இதோ என்தன் தெய்வம் முன்னாலே நான்
ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கட்வுள் வாழ்கிறான் அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ என்தன் தெய்வம் முன்னாலே நான்
ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான் இசைப்
பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான் இசைப்
பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான் குளிர்
மேகமென தாகத்தையே தணிப்பான் தளிர்க்
கொடி விளையும் கனிகளிலே இனிப்பான் குளிர்
மேகமென தாகத்தையே தணிப்பான் தளிர்க்
கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்விறான் அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ என்தன் தெய்வம் முன்னாலே நான்
ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

பல நூல் படித்து நீ அறியும் கல்வி பொது
நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம் இவை
அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம் இவை
அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்

இதோ என்தன் தெய்வம் முன்னாலே நான்
ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்விறான் அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
இதோ என்தன் தெய்வம் முன்னாலே நான்
ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே

ஆஆஆஆஆஆஆஆ ஓஓஓஓஓஓஓஓஓ

ஆயிரம் தாமரை மொட்டுக்களே

ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள்
சண்டை செய்தாலும் சகோதரரன்றோ?

என்று பாரதி பாடக் காரணம் அன்று நம் நாட்டை அடிமைப்படுத்தி ஆண்டுவந்த வெள்ளையர்கள் நாட்டு மக்களிடையே ஜாதி மத பேத உணர்வைத் தூண்டி, அதனால் மக்களிடையே ஒற்றுமை இல்லாத நிலையை உருவாக்கி, அந்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி நாட்டைக் கொள்ளையடித்து வந்ததேயாகும். சுதந்திரப் போராட்டத்தின் நிறைவாக இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயருக்கு ஆதரவு தர வேண்டுமெனில் போர் முடிந்ததும் நம் நாட்டுக்கு விடுதலை தர வேண்டும் எனும் ஒப்பந்தத்தின் வழியாக நாம் சுதந்தரம் அடைந்த பின்னர் நம் நாட்டை ஆளத்தொடங்கி இன்று வரை ஆண்டுவரும் அரசியல்வாதிகள் ஆங்கிலேயன் கையாண்ட அதே ஜாதி மத பேதமென்னும் ஆயுதத்தை ஆங்கிலேயரை விடவும் மிகத் திறமையாகக் கையாண்டு அதி்ல் வெற்றியும் பெற்று, தொடர்ந்து நாட்டைச் சுரண்டி வருகின்றனர்.

சாதி மத பேதம் ஒழியப் பாடுபடுவதாகப் பொய்யாகப் பிரசாரம் செய்துவரும் இவர்கள் அதற்கெனக் கூறும் உபாயம் கலப்பு மணம். உண்மையில் கலப்பு மணங்களால் சாதி மத பேதம் ஒழிகிறதா எனில் இல்லை என்பதே உண்மை. மாறாக இத்தகு கலப்பு மணங்களால் ஏற்கெனவே இருக்கும் சாதி மதச் சண்டை மேலும் வலுத்து சமுதாயத்தில் இருக்கும் பிரிவினை அதிகமாவதை அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்களுக்குத் துணைபோகும் கூட்டமொன்று திரைப்பட உலகில் என்றும் உள்ளது. இவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் சாதி மத பேதத்தை ஒழிக்கக் கலப்பு மணங்கள் உதவுவதாகக் காட்டி ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி, நாட்டில் ஒற்றுமை நிலவிவிட்டது போன்ற ஓர் பொய்யான மன நிறைவை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்துவதில் மிகவும் முனைப்பாக செயல்படுகின்றனர்.

பாரதி ஆங்கிலேயர்களுக்குக் கூறிய அதே எச்சரிக்கை மொழியை இவர்களுக்கும் கூறியதாக எடுத்துக் கொண்டு சாதி மத விவகாரங்கள் மக்களின் பிரச்சினை, அதில் அரசியல்வாதிகளோ, திரைத் துறையினரோ தலையிடாதிருக்க வேண்டும் எனும் மனப்பாங்கு மக்களிடையே ஏற்பட்டாலன்றி சாதி மத சண்டைகள் ஓயா.

ஆயிரம் தாமரை மொட்டுக்களே

திரைப்படம்: அலைகள் ஓய்வதில்லை
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: இளையராஜா
பாடியோர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
ஆண்டு: 1980

ஓ.. தந்தனன தந்தனதந்தன தந்தனதந்தன தந்தனதந்தன
ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ
ஹோஹோஹோஹோ
தந்தனன ஹோஹோஹோஹோ தந்தனன
ஹோஹோஹோஹோ தந்தனன
ஹோஹோஹோஹோ தந்தனன

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே

ஓ... கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே இங்கு
தேனை ஊற்று இது தீயின் ஊற்று
ஓ... கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே இங்கு
தேனை ஊற்று இது தீயின் ஊற்று
உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
புல்லரிக்கும் மேனி எங்கும் பூப்பூக்கும்
அடிக்கடி தாகம் வந்து ஆளைக் குடிக்கும்

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

ஏ வீட்டுக்கிளியே கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்
புல்வெளியின் மீது ஒரு பூமாலை
ஒன்றை ஒன்று சூடும் இது பொன்மேடை
கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்

ஆயிரம் தாமரை நனனன
ஆயிரம் தாமரை நனனன நனன நனன

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ள காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
_________________________

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா

குரங்கு தான் கெட்டதுமன்றி வனத்தையும் அழித்தது போல மனிதன் தானும் கெட்டு அழிவதுடன் சக மனிதரையும் சமுதாயத்தையும் அழிவுப் பாதையில் தள்ளுவது சுயநலத்தினாலேயே. தான் மட்டும் நன்மையடைந்தால் போதும் என எண்ணி வீரபாண்டியக் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனும் வீரபாண்டியக் கட்டபொம்மனைப் போலவே வெள்ளையரால் தூக்கிலிடப்பட்டு மாண்டான் என்பதை சரித்திரம் கூறுகிறது.

நமது வாழ்நாளில் நாம் என்றும் பிறரது துயர் களைய முயன்று பாடுபடுவோமெனில் நம் துயர் களையப் பிறர் யாவரும் முன்வந்துதவுவர். இது இயற்கை நியதி. எக்காலமும் தன்னைப் பற்றியே எண்ணிச்செயல்படுபவன் துயருறுகையில் வேறு யாரும் அவனது உதவிக்கு வர மாட்டார். வாழ்க்கை என்பது என்றோ ஒரு நாள் தொடங்கி மற்றொரு நாள் உறுதியாக முடியக்கூடியது. வாழ்நாளைப் பயனுள்ளதாக ஆக்க ஓரே வழி தன்னை மட்டுமன்றித் தன்னைச் சுற்றியிருக்கும் சக மனிதர் மற்றும் பிற உயிர்கள் படும் துன்பத்தைக் கண்டிரங்கி உதவுவதொன்றேயாகும்.

மனிதரில் பெரும்பாலோர் சுயநலவாதிகளாக இருப்பதினாலேயே நாட்டில் சுரண்டல்காரர்களின் ஆட்சி தலைமுறை தலைமுறையாகக் கொடிகட்டிப் பறக்கின்றது. இலவசங்களில் ஆசை வைத்துத் தம் பொன்னான வாக்குகளை மக்கள் ஆளத் தகுதியற்றவர்களுக்கு அளிப்பதனால் நாட்டிலெங்கும் இயற்கை வளங்கள் குன்றி இன்று குடிநீரையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவலநிலை உருவாகியுள்ளதைக் கருத்தில் கொண்டு இந்நிலைக்குக் காரணமானவர்களை விலக்கிவிட்டு உண்மையாக நல்லாட்சி தருபவர் யார் எனப் பகுத்தறிவால் அறிந்து மக்கள் செயல்பட்டால் மட்டுமே உலகம் அழிவிலிருந்து மீளக்கூடும். அத்தகைய தகுதியுள்ளவர் யாரும் இல்லாவிடில் தகுதியற்றவர்களைப் பதவியில் இருத்தாமல் வருவது வரட்டுமெனத் துணிவுடன் செயல்பட வேண்டும்.

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
வாயில் என்ன மந்திரமா மனசு என்ன எந்திரமா?
சாமியிடம் பேசுது புள்ள தாயழுக கேக்கவுமில்ல
சாமியிடம் பேசுது புள்ள தாயழுக கேக்கவுமில்ல

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா

அம்மா பசி என்றொரு கூக்குரல்
அது தான் இனி தேசிய பாஷை
கட்சிக் கொடிகள் ஏறுது அங்கே
கஞ்சிப்பானை தெருவில் இங்கே
சுதந்திர நாடு சோத்துக்குக் கேடு சொல்லாதே சாமி
நம்ம பூமியோ எப்போதும் தருமம் செஞ்ச பூமி
சுதந்திர நாடு சோத்துக்குக் கேடு சொல்லாதே சாமி
நம்ம பூமியோ எப்போதும் தருமம் செஞ்ச பூமி

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா

தேசமிது செஞ்சது ஒனக்கு ஏராளம் இங்கே உண்டு
நீ என்ன செஞ்ச அதுக்கு? ஒன்னக் கேட்டு நீ பதில் சொல்லு
நமக்கென்ன போடா போன்னு நழுவுறே நேரம் பாத்து
நாடு முழுதும் தீயாப் போனா வீடு மட்டும் ஏது?
நமக்கென்ன போடா போன்னு நழுவுறே நேரம் பாத்து
நாடு முழுதும் தீயாப் போனா வீடு மட்டும் ஏது?

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
வாயில் என்ன மந்திரமா மனசு என்ன எந்திரமா?
சாமியிடம் பேசுது புள்ள தாயழுக கேட்கவுமில்ல
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
_________________________