செவ்வாய், 17 ஜனவரி, 2012

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம்

இந்தியர்கள் என்றாலே இளிச்சவாயர்கள், ஏமாளிகள், எதைச் சொன்னாலும் நம்புபவர்கள், இவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற தவறான அபிப்பிராயம் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை அகில உலக அளவில் நிலவி வருவதை மனதார நம்மால் மறுக்க இயலாத சூழ்நிலையே நிலவிவருகிறது. இதற்கு முக்கியக் காரணம் நம் நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்துவரும் அரசியல் சட்டங்களும் பிற சட்டங்களும் அரசுக் கட்டிலில் தகுதியற்றவர்கள் வந்து அமர்ந்து கோலோச்சும் அவலமுமே ஆகும். ஐம்பத்தாறு தேசங்களாகவும் அனேக குறுநிலப் பகுதிகளாகவும் சிதறுண்டு பற்பல மன்னர் குலத்தவர்களால் பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்யப்பட்ட நம் நாட்டை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிய நாட்டவர்களான முகலாயர்களும், பின் ஆங்கிலேயர்களும் அடிமைப்படுத்தி அடக்கி ஒடுக்கி நம் செல்வங்களைக் கொள்ளையிட்டதற்கு முக்கியமான காரணம் நம் நாட்டைத் தொன்று தொட்டு ஆண்ட மன்னர்களிடையேயும் மக்களிடையேயும் ஒற்றுமையில்லா நிலை நிலவியதேயாகும்.

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியான சுதந்திரத்தை, அண்ணல் காந்தி முதலிய அரும்பெரும் தலைவர்கள் தங்கள் அனைத்து உடைமைகளையும் இழந்தும், தங்கள் இன்னுயிரை ஈந்தும் பெற்றுத்தந்த சுதந்திரத்தை இன்று உள்நாட்டுக் கொள்ளையர்கள் மீண்டும் அந்நிய நாட்டவர்க்கே தவனை முறையில் விற்று வயிறு வளர்க்கின்றனர். இந்தக் கொடுமைகளுக்கு மூல காரணம் பொருளாதார மேதையென்று பன்னாட்டு நிறுவனப் பெருமுதலாளிகளால் பாராட்டப் பெறும் மன்மோகன் சிங்க் எனும் தாடி வளர்த்துத் தலைப்பாகையினுள் தன் சொட்டைத் தலையை மூடி மறைத்து, சோடாபுட்டிக் கண்ணாடியினுன் தன் பூனைக் கண்களை மூடி ஒன்றுமறியாத சிறுபிள்ளை போல் விழித்து நல்லவர் வேஷம் போடும் நபரால் அமுல்படுத்தப்பட்டுத் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வரும் பொருளாதார தாராளமயமாக்கல் எனும் பொய்யான கொள்கையே ஆகும்.

அக்கொள்கையின் பயன்களைத் தம் சுயநலத்தைப் பூர்த்தி செய்து கொள்ள ஏற்றவகையிலேயே நம் நாட்டின் பல மாநிலங்களிலும் ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர். இன்று நாட்டின் செல்வங்களில் பெரும்பாலானவை அரசியல்வாதிகளின் குடும்பத்தவராலும், பெருமுதலாளிகளாலும், பல்வேறு அதிகாரிகளாலும் சூறையாடப் பட்டு மக்கள் தலைகள் மொட்டையடிக்கப் பட்டு அவர்கள் கஞ்சிக்கும், கல்விக்கும், மருத்துவ உதவிகளுக்கும் கையேந்திப் பிச்சை கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நம் நாட்டின் அரசியல் சட்டங்களும் மக்கள் நலச் சட்டங்களும் மிகவும் பலவீனமாக உள்ள்தால் இத்தகைய சுயநலவாதிகள் பெரும் குற்றங்களைப் புரிந்தாலும் உரிய தண்டனை பெறாமல் எளிதில் தப்பிவிடுகின்றனர். இந்நிலை மாற வேண்டுமெனில் சட்டங்கள் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் திருத்தப்பட வேண்டும். மக்களை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பிறரும் ஏமாற்றும் வழிகள் இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும். சாலைகளின் குறுக்கே வாகனப் போக்குவரத்துக்குத் தடை ஏற்படுத்தி நடுவே பெரும் செலவில் அலங்கார மேடையமைத்து மக்களின் நலத்தைப் பேணுவதற்கென்றே அவதாரம் எடுத்து வந்தவர்கள் தாங்கள் என வாய்கிழியப் பேசி, தங்கள் வாக்கு வங்கிகளைப் பெருக்கி ஆட்சியைப் பிடித்து நாட்டைக் கொள்ளையிடும் கண்கட்டு வித்தை நடவாமல் தடுக்கப்பட வேண்டும். மக்கள் யாவரும் இத்தகைய ஏமாற்றுக் காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கப் பழகிக்கொள்ள வேன்டும்.

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம்

திரைப்படம்: பதிபக்தி
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், ஜே.பி. சந்திரபாபு
ஆண்டு: 1958

ஓ ஓஓஓஓ ஓஓ ஓஓஓஓ ஓஓ ஓஓஓஓ
ஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓஓ

தர்மமென்பார் நீதி என்பார்
தரமென்பார் சரித்திரத்துச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தை சந்தியிலே எறிந்துவிட்டுத்
தன்மான வீரரென்பார் மர்மமாய்ச் சதிபுரிவார்
வாய்பேசா அபலைகளின் வாழ்வுக்கு நஞ்சு வைப்பார்
கர்ம வினையென்பார் பிரம்மன் எழுத்தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்
கர்ம வினையென்பார் பிரம்மன் எழுத்தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்

ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆ ஹேஹேஹேஹேஹே

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

ஹேய் அஜக் அஜக் அஜக் அஜக் அஜக் அஜக் அம்மா

திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும் ‍
எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும் ‍

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி ஹஹா

தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகினக்கடி தஜுகினக்கடி
தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகுனக்கடி தா
தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகினக்கடி தஜுகினக்கடி
தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகுனக்கடி தா

பொதுநலம் பேசும் புண்யவான்களின்
போக்கினில் அனேக வித்தியாசம்
புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம் - அந்தப்
பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாடணும்

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி

கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்
கவைக்கு உதவாத வெறும் பேச்சு
ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ
ஓஓஓஓஓ ஓஓஓஓஓ ஓஓஓஓஓ ஓ

கடவுள் இருப்பதும், இல்லை என்பதும்
கவைக்குதவாத வெறும் பேச்சு
கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
கருத வேண்டியதை மறந்தாச்சு - பழங்
கதைகளைப் பேசி காலம் வீணாச்சு
கையாலே முன்னேற்றம் கண்டாகணும்

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி ஹேஹே

தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகினக்கடி திஜுகினக்கடி
தாங்குனக்கடி தஜுகினக்கடி தஜகுனக்கடி தா

அஜக் அம்மா ஐயோ கொல்லுறயே அப்பா

நாடி தளந்தவங்க ஆடி நடப்பவங்க
நல்லவங்க கெட்டவங்க நம்ப முடியாதவங்க ஆமா
நல்லவங்க கெட்டவங்க நம்ப முடியாதவங்க
பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க ஹாங்
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க ஹா
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க - இன்னும்
பொம்பளைங்க ஆம்பளைங்க அத்தனை பேரையும் வச்சு
மாடா இழுக்கிறோம் வேகமா - நம்ம
வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா

வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒண்ணாகணும் - நாம
வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒண்ணாகணும்

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும்

இந்தத் திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி ஹேய்

தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகினக்கடி திஜுகினக்கடி
தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜகுனக்கடி தா
தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகினக்கடி தஜுகினக்கடி
தாங்குனக்கடி தஜுகினக்கடி திஜுகுனக்கடி தா

ஓஹோஹோ ஓஹோஹோ ஹோஹோ ஹோஹோ ஹே
தாங்குனக்கடி தஜுகினக்கடி தஜகுனக்கடி தா

கமலம் பாத கமலம்

இவ்வுலகம் இசையில் எந்நேரமும் மூழ்கியிருக்கிறது. இரவு நேரங்களில் ஊரின் சந்தடி அடங்கிய பிறகு நாம் நம் வீட்டுக்கு வெளியில் குறிப்பாக மொட்டை மாடிக்குச் சென்று மனதில் எழும் இதர சிந்தனைகளை விடுத்து நம் செவிகளால் கூர்ந்து கவனித்துக் கேட்போமாகில் இவ்வுண்மை நமக்கு விளங்கும். நாம் கண்ணால் காண இயலாத உயிரினங்கள் ஒவ்வொரு இரவிலும் எழுப்பும் சில்லென்ற ரீங்கார ஒலியை நம் காதுகள் உணரத் தவறுவதில்லை. மனதை உலக சிந்தனைகளிலிருந்து திருப்பி ஒருமுகப்படுத்தும் வல்லமை வாய்ந்தது இசை ஒன்றேயாகும். இதன் காரணமாகவே இறைவனைத் தொழுவதற்கு ஏற்ற சாதனமாக இசை விளங்குகின்றது. எம்மதத்தைச் சார்ந்தவராயினும் அவர்கள் பிரார்த்தனை செய்ய இசையின் துணையையே நாடுகின்றனர்.

இசையை ரசிக்க்காத உயிரினங்கள் ஏதும் உலகில் இல்லை. எனினும் இசை பல வடிவங்களில் திகழ்கையில் ஒவ்வொரு வடிவமும் ஒரு குறிப்பிட்ட வகையான உயிரினங்களுக்குப் பிரியமானதாக விளங்கக்கூடும். பாம்புகளுக்குப் பிரியமான இசை புன்னாகவராளி ராகம் என்பது பிரசித்தி. குழந்தைகளுக்குப் பிரியமான ராகம் நீலாம்பரி. அம்ருதவர்ஷிணி எனும் ராகத்தை முறையாகப் பாடினால் நிச்சயம் மழை பெய்யும் என்பதும் மிகப் பிரசித்தி. ஒரு சமயம் இலங்கேஸ்வரனாகிய இராவணன் சிவபெருமானும், பார்வதி தேவியும் எழுந்தருளிய திருக்கயிலாயத்தைப் பெயர்த்தெடுக்க முயல்கையில் பார்வதி தேவி பதற்றமுறவே சிவபெருமான் தனது கட்டை விரலால் அழுத்த இராவணன் மலைக்கடியில் அகப்பட்டுக்கொண்டு திக்குமுக்காடிப் போனானாம். தன் பிழையை உணர்ந்து தன்னைக் காத்தருளுமறு வேண்டி சிவபக்தனாகிய இராவணன் தன் தலைகளில் ஒன்றையும் தன் கைகளில் ஒன்றையும் பிய்த்து அவற்றுடன் தன் நரம்புகளையே தந்திகளாகக் கொண்ட ஒரு வீணையை உருவாக்கி, அவ்வீணையை மீட்டியவாறு சாமகானம் பாட, அவனது இசையைக் கேட்டு மகிழ்ந்து சிவபெருமான் கருணை கொண்டு அவனை விடுவித்ததாகப் புராணம் சொல்கிறது. இராவணன் வீணையை மீட்டி அப்பொழுது பாடிய ராகம் காம்போதி. வீணை மீட்டிப் பாடுவதில் இராவணனுக்கு நிகர் எவருமில்லை என்பது பிரசித்தம். இராவணனை வீணை மீட்டிப் பாடுவதில் வெற்றி கண்டவர் அகத்திய முனிவர் ஒருவரே ஆவார்.

இசை நம் அனைவரின் துயர் தீர்க்கும் மருந்தாக வல்லது. தீராத நோய்வாய்ப்பட்டவரையும் அந்நோயிலிருந்து பரிபூரணமாய்க் குணப்படுத்தும் சக்திவாய்ந்தது என்பதும் பிரசித்தி. இதை மெய்ப்பிக்கும் வகையில் சரித்திரக் கதைகளில் பல சம்பவங்கள் கூறப்படுகின்றன. இந்தியாவை மொஹலாயர்கள் காலத்தில் ஆண்ட மாமன்னர் அக்பரின் அவைக்களப் பாடகராக விளங்கிய தான்சேன் இசைபாடி நோயாளிகளைக் குணப்படுத்திய்ள்ளதற்கும் தீப் எனும் ராகத்தில் பாடி அகல் விளக்கை எரிய வைத்ததற்கும் சான்றுகள் உள்ளன.

இசையை வெறுத்தவர் மொஹலாய மன்னர்களுள் ஒருவரான ஔரங்கசீப் என்பதும் பிரசித்தம். உண்மையில் அவர் இசையை வெறுக்கவில்லை, மனிதர்களையே வெறுத்தார் என்பதை அவரது வரலாற்றை அறிந்தவர் பலரும் ஒத்துக்கொள்வர். ஒரு முறை சிலர் வாத்தியங்களுடன் இசைமீட்டிப் பாடியவண்ணம் செல்கையில் அவர்களை எதேச்சையாக அவ்வழியே வந்த ஔரங்கசீப் மன்னர் கண்டு, என்ன செய்கிறீர்கள் என அதட்டிக் கேட்கையில் அவர்கள், அவரது கோபத்திலிருந்து தப்பிக்க வேண்டி "இசையைக் குழி தோண்டிப் புதைக்கப் போகிறோம்" என்று சமயோசிதமாக பதில் சொன்னார்களாம். அதற்கு ஔரங்கசீப், "நன்கு மிகவும் ஆழமாகத் தோண்டிப் புதையுங்கள், வெளியே வந்துவிடப் போகிறது" என்றாராம். இக்கதையை எனக்குக் கூறியவர் எனது தந்தை ஆவார்.

இயல்பாகவே சிறுவயது முதலே நான் இசையில் மிக்க ஈடுபாட்டுடன் இருப்பவன். என் தந்தையிடன் நான் முறையாக இசைபயில விரும்புவதாகவும், அதற்கு உதவுமாறும் நான் கேட்கையில் இக்கதையைக் கூறி என் வேண்டுகோளை அவர் நிராகரித்தார். இசையை நான் மறக்கவில்லை, தொடர்ந்து இசையைக் கேட்டும், பாடியும் புல்லாங்குழல், புல்புல் தாரா, மவுத் ஆர்கன் முதலிய வாத்தியங்களில் வாசித்தும் வருகிறேன். அதே சமயம் ஔரங்கசீப் கதையையும் நான் மறவாது அவ்வப்பொழுது நினைவில் கொள்வதுண்டு. இவ்வாறு இசை என் வாழ்வில் இசைந்து விளங்குவதால் இவ்வுலகில் நேரும் சிறுசிறு துன்பங்களைக் கண்டு துவளாமல் என்றும் இன்பமாய் வாழ என்னால் முடிகிறது.

அத்தகைய மகத்துவம் வாய்ந்த இசையை நாம் நாள்தோறும் கேட்டு மகிழ்ந்து நமது அன்றாட வாழ்வில் நாம் உறும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று மனதை எப்பொழுதும் மகிழ்ச்சிகரமாக வைத்துக் கொள்வது நலம் பயப்பதாகும். ஏதேனும் சோகமான சம்பவங்கள் நிகழ்ந்தாலும் சோகரசம் ததும்பும் இசையைக் கேட்டு நம் சோகத்தால் விளையும் துன்பத்தையும் நம்மால் கடக்க இயலும். அனைத்திற்கும் மேலாக மனிதகுலம் இறைவனடியைப் பணிந்துய்ய இசை மிகவும் ஏதுவானதொரு சாதனமாகும்.

கமலம் பாத கமலம்

திரைப்படம்: மோகமுள்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1995

ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

கமலம் பாத கமலம் கமலம் பாத கமலம்
கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம் இசையான வடிவான
இறைவன் நீ தானென்று நான் தொழும் ம்ம்ம்ம்ம்ம்ம்
தலைவன் நீ தானென்று போற்றிடும் ம்ம்ம்ம்ம்ம்ம்
கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும்
கமலம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

ஆகாயம் வெளுக்கும் அதிகாலை அழகில்
காகங்கள் விழித்துக் கரைகின்ற பொழுதில்
நெல்மூட்டை நிரப்பி நெடுஞ்சாலை நடத்தும்
வில்வண்டி இழுக்கும் மாட்டின் மணியோசை மயக்கும்
இதமான இளங்காற்று எனைத் தீண்டித் திரும்பும்
மெதுவாக இசை ஞானம் மனதோடு அரும்பும்
ஸ்வரங்கள் எனக்குள் பிறக்க
அருளெனும் பேரமுதினைப் பொழிந்திடும்

கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம் இசையான வடிவான
இறைவன் நீ தானென்று நான் தொழும் ம்ம்ம்ம்ம்ம்ம்
தலைவன் நீ தானென்று போற்றிடும் ம்ம்ம்ம்ம்ம்ம்
கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும்
கமலம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நாவாறப் பெரியோர் நிதமிங்கு இசைக்கும்
தேவாரப் பதிகம் திசைதோறும் ஒலிக்கும்
மும்மூர்த்தி பிறந்து சாகித்யம் புனைந்து
செம்மூர்த்தி நினைவில் தெய்வ சங்கீதம் வளர்த்து
திருவீதி வலம் வந்த தலம் இந்தத் தலம் தான்
இசைமாரி நிதம் பெய்த இடமிந்த இடம் தான்
நினைத்தால் மனத்தால் துதித்தால்
தலமொரு இசைநயங்களை வழங்கிய

கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம் இசையான வடிவான
இறைவன் நீ தானென்று நான் தொழும் ம்ம்ம்ம்ம்ம்ம்
தலைவன் நீ தானென்று போற்றிடும் ம்ம்ம்ம்ம்ம்ம்
கமலம் பாத கமலம் உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

நாம் இவ்வுலகில் பிறந்த போது நம்முடன் எதனையும் கொண்டு வரவில்லை. இவ்வுலகை விட்டு நிச்சயமாக் ஒரு நாள் செல்கையில் எதனையும் கொண்டு போகப் போவதுமில்லை. இங்கு பிறக்கு முன் நாம் இருந்தோமா இல்லையா என்பதும் தெரியாது. இறந்த பின்னர் இருப்போமா, மாட்டோமா என்பதும் தெரியாது. காலத்தின் கொத்தடிமைகளாக ஏதோ சொற்பகாலம் ஒரு மாயத் தோற்றம் கொண்ட உலகில் வாழ்ந்து மறையும் நாம் நம் அற்பமான நிலையை மறந்து மமதையால் பிறரை விடவும் உயர்வானவராக நம்மை நாமே எண்ணிக்கொண்டு பிறரை மதியாது, பிறர் மேல் அன்பு செலுத்தாது நம் சுகம் ஒன்றே பெரிதென எண்ணி வாழ்கிறோம்.

அவ்வாறான சுயநல வாழ்வு வாழ்வோமெனில் நாம் இவ்வுலகில் இருக்கும் போதும் நம்மை உலகத்தார் யாரும் மதிக்க மாட்டார்கள். நம் உற்றார், உறவினரும் உடன்பிறந்தோருமே நம்மை இழிவாக எண்ணி இகழ்வார்கள். நாம் இறந்த பிறகும் பழியே மிஞ்சும். நம்மை அனைவரும் மறந்து போவார்கள். ஏதோ ஒரு சிலர் நம்மை ஏதோ ஒரு சமயம் நினைவுகூர்ந்தாலும் நம்மை ஏளனமே செய்வர்.

சுயநலத்தை ஒதுக்கிவிட்டு உலக நன்மையையே பெரிதெனக் கொண்டு சேவை செய்தோமெனில் நம்மை யாவரும் நாம் வாழ்கின்ற காலத்திலும் மறைந்த பின்னரும் என்றும் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் நினைவு கொள்வர். நாம் செய்கின்ற ஒவ்வொரு செய்கையும் நம் வருங்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்கு வழிகோலுவதாக அமைய வேண்டும். பெரும்பொருள் சேர்த்து அதைக்கொண்டு வானளாவிய கட்டடத்தைக் கட்டிக் குடியிருந்து வாழ்வை சுகமாக அனுபவிக்க விழைகையில் சுற்றுப்புறத்தில் தேங்கிய சாக்கடைகளும், குப்பை மேடுகளும் சூழ்ந்திருந்தால் நாமும் ஆரோக்யமாக வாழ இயலாது நம்மைச் சுற்றியுள்ள மக்களும் நல வாழ்வு பெற இயலாது. வீடுகளிலிருந்தும், வணிக நிறுவனங்கள் மற்றும் ஆலைகளிலிருந்தும் தினந்தோறும் வெளியேறும் குப்பைகளும், கழிவு நீரும், புகையும் பூமியையும் காற்று மண்டலத்தையும் தொடர்ந்து மாசு படுத்துகின்றன.

சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் அரசுத் துறையினர் முறையாகத் தம் கடமையை நிறைவேற்றுகின்றனரா என்பதைத் தொடர்ந்து கண்காணித்து முறையாக நிறைவேற்றாவிடில் நினைவுறுத்தி அனைவரும் நன்மை பெற உதவுவது நம் ஒவ்வொருவரது கடமையாகும். இதற்கு நாம் முதலில் சமுதாய ரீதியில் ஒன்றுபட வேண்டும். நிச்சயம் ஒவ்வொரு ஊரிலும் சமுதாயப் பணியைத் தலையாய கடமையாகக் கொண்டு வாழ்வோர் இருக்கின்றனர். அவர்களுடன் நாமும் இணைந்து சேவை செய்தல் உலக நலன் பெருக வழிவகுக்கும்.

பெறற்கரிய மானுடப் பிறவியைப் பெற்ற நாம் வாழ்நாளில் கருணையுள்ளவராக விளங்கி பொதுநலத்தைப் பேணி வாழ்வோமெனில் மனிதருள் தெய்வமெனப் போற்றப்பெற்று இறைநிலையை எய்தலாம். என்றோ ஒரு நாள் நாம் சொல்லாமல் இறைவனடியையே சேர்வது நிச்சயமாதலால் வாழ்நாளில் உள்ளத் தூய்மையுடன் விளங்குதல் நலம்.

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
அவர் அன்றாடம் தேடும் செல்வங்காளாலே
பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்
அவர் அன்றாடம் தேடும் செல்வங்காளாலே
பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்

தாயாரின் கையிருந்து சம்சாரம் கைக்கு வந்து
நோயாகும் முதுமை கொண்டு கண் மூடுவார்

ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ

தாயாரின் கையிருந்து சம்சாரம் கைக்கு வந்து
நோயாகும் முதுமை கொண்டு கண் மூடுவார்
அதை ஓர் நாளும் எண்ணாமல் ஆடுவார்
ஒன்றோடு மற்றொன்றை நாடுவார்
அதை ஓர் நாளும் எண்ணாமல் ஆடுவார்
ஒன்றோடு மற்றொன்றை நாடுவார்

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்

குலை ஈன்ற வாழை மாண்டு போகும் விரைவிலே
அதன் இளையன் கன்று வளர்ந்து பொங்கும் உலகிலே
குலை ஈன்ற வாழை மாண்டு போகும் விரைவிலே
அதன் இளையன் கன்று வளர்ந்து பொங்கும் உலகிலே

தினம் தோன்றும் வாழ்வில் மனிதரெல்லாம் ஒரு முறை
இந்தத் துணையை எண்ணிப் பார்க்க வேணும் மனதிலே

உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்
அவர் அன்றாடம் தேடும் செல்வங்காளாலே
பின்னோர்கள் சந்தோஷம் கொண்டாடுவார்
உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்
சொல்லாமல் போவார் அல்லாவிடம்

சலசல ராகத்திலே

1962-63 ஆண்டுகளில் நான் நான்காம்-ஐந்தாம் வகுப்புகள் படிக்கையில் என் தந்தை தாயுடனும் சகோதர சகோதரிகளுடன் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கிணத்துக்கடவு எனும் ஊரின் அருகில் 2 கி.மீ. தூரத்தில் அமைந்திருந்த பகவதி பாளையம் எனும் ஒரு சிறு கிராமத்தில் வசித்தேன். அப்போது நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு மாத வாடகை ரூ 10/- இப்பொழுது 10 ரூபாய்க்கு ஒருவர் ஒரு வேளை உணவும் வாங்க முடியாது. எங்கள் வீடு அக்கிராமத்தில் இருந்த முக்கியப் பிரமுகரது வயலின் அருகாமையில் இருந்தமையால் பள்ளி சென்று வந்தபின் நான் பொழுதைக் கழிப்பது அவ்வயலிலும் அருகிலுள்ள மரங்கள் நிறைந்த பகுதியிலுமே என வாழ்க்கை இயற்கையோடு இயைந்து இன்பகரமாக இருந்தது. வயலில் பெரும்பாலும் கரும்பு பயிரிடுவர். ஒரு பயிர் அறுவடை முடிந்ததும் வேறு ஏதேனும் தானியப் பயிரை விதைத்து அப்பயிற் முழு வளர்ச்சி அடையுமுன்பே மண்ணுடன் சேர்த்து உழுதுவிடுவர். சிறிது காலம் கழித்து மீண்டும் கரும்பு பயிரிடுகையில் மண்ணுடன் சேர்த்து உழப்பட்ட பயிர்கள் மண்ணோடு மண்ணாக மக்கி, கரும்புப் பயிருக்கு உரமாக ஆகிவிடும். கரும்பு அறுவடை முடிந்த பின்னர் வயலின் அருகிலே இருந்த ஒரு கொட்டகையில் அக்கரும்பைச் சாறாகப் பிழிந்து பெரிய வாயகண்ட பாத்திரங்களில் காய்ச்சி, சில இரசாயனப் பொடிகளைக் காய்ச்சிய பாகின் மேல் தூவ அப்பாகிலுள்ள அழுக்குகள் யாவும் பொங்கி மேலெழுந்து ஓரமாக ஒதுங்கியவுடன் அவற்றை நீக்கி விட்டுப் பின் தூய பாகினை வெல்லம் செய்யும் அச்சுக்களில் ஊற்றி ஆற விடுவர்.

அச்சமயங்களில் அங்கே இருந்து வேடிக்கை பார்க்கும் எனக்கு சூடான வெல்லம் கிடைக்கும். அதன் சுவையே அலாதி. அவ்வயலில் ஒரு கிணறுண்டு. அக்கிணற்றிலிருந்து நீரை இறைக்க கபிலை என அழைக்கப்படும் ஒரு பாத்திரத்தை ஏற்றத்தில் கயிறு கொண்டு கட்டு, இரு மாடுகளைக் கொண்டு இறைத்து வயலுக்குப் பாய்ச்சுவர். கிணற்றின் அருகாமையில் இருக்கும் ஒரு பெரிய தொட்டியில் நீர் முதலில் நிரம்பிப் பின் அத்தொட்டியின் அடி பாகத்தில் பொருத்திய ஒரு சிறு குழாய் வழியே நீர் வயலுக்குப் பாயும். எனது குளியல் தினம் தோறும் அந்தத் தண்ணீர்த் தொட்டியிலேயே நிறைவேறும். நான் நீச்சல் கற்றுக்கொண்டது அத்தொட்டியிலேயே ஆகும்.

வயலின் நண்டுகள் நிறைந்திருக்கும் எனக்கு அமைந்த ஓரிரு நண்பர்களுடன் சேர்ந்து அந்த நண்டுகளை வேடிக்கை பார்ப்பதும் உண்டு. அக்கிராமத்தின் நுழைவாயிலில் ஒரு பெரிய அரசமரமும் அதனைச் சுற்றி ஒரு பெரிய திண்ணையும் இருந்தது. அத்திண்ணையில் கிராமத்தைச் சேர்ந்த பலர் அமர்ந்து உரையாடுவர். அந்த இடத்தில் அவ்வப்பொழுது திடகாத்திரமாக விளங்கிய ஒரு காளை மாட்டைக் கொண்டு பசுக்களுக்கு உடல் உறவின் வழியே கருத்தரிக்க வைப்பர். பல வீடுகளில் பசுக்களும் எருமைகளும் வளர்த்துப் பராமரித்ததால் சாணிக்குப் பஞ்சமிருக்காது. ஆங்காங்கே தெருவில் விழுந்து கிடக்கும் சாணியை அள்ளியெடுத்து வந்து வரட்டியாகத் தட்டி அடுப்பெரிக்கவும், பசுஞ்சாணியை வீட்டு வாசலை மெழுகவும். உபயோகிப்போம். தற்போது மாடுகள் எதுவும் இத்தகைய முறையில் கருத்தரிக்க வைக்கப்படுவதில்லை. மாறாக நாம் குளிர்பதனம் அருந்தப் பயன்படுத்தும் ஸ்ட்ரா போன்ற குழாய்களில் காளையின் விந்தினை குளிர் பதன நிலையில் பராமரித்து அதனைக் கொண்டே கருத்தரிக்க வைக்கப் படுகின்றன. தான் மட்டும் தாராளமாகத் தன் மனைவியுடன் வேண்டிய பொழுதெல்லாம் காதலின்பத்தைத் தவறாமல் அனுபவிக்கும் மனிதன் தனக்குத் தன் ரத்தத்தையே பாலாக்கித் தரும் பசுவுக்கு இயற்கையில் கிடைக்க வேண்டிய சுகத்தைத் தடுக்கிறான்.

பசுவின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கருத்தரிக்கச் செய்து அதன் இரத்தத்தைப் பாலாகக் கறந்து தானும் குடித்துப் பிறருக்கும் விற்று வயிறு வளர்க்கும் மனிதன் கறவை வற்றியவுடன் அப்பசுவை அடிமாடாகக் கேரளாவுக்கும் பிற இடங்களுக்கும் விற்றுவிடுகிறான். அவ்வாறு அடிமாடாக விற்கப்படும் பசுக்கள் பல லாரி முதலிய வண்டிகளில் ஏற்றப்பட்டும் கால்நடையாகவும் வெகுதூரம் கொண்டு செல்லப்பட்டு இறுதியில் கொலை செய்யப் படுகின்றன. இடையில் அவற்றுக்கு தாகம் தீர்க்கத் தண்ணீர் கூடத் தருவதில்லை.

இவை அனைத்திற்கும் மேலாக மனிதன் விளைநிலங்களை வீட்டு மனைகளாக வெகு வேகமாக மாற்றி வருவது மிகவும் அபாயகரமான போக்கு. இயற்கையை அழித்தால் மனிதன் வாழ இடமிருக்காது. இயற்கை அழிவைத் தடுத்து மனிதர் குலம் பன்னெடுங்காலம் வாழ வழி வகுப்பது நம் அனைவரது கடமை. ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் தற்போது தாங்கியிருக்கும் உடலைப் பிரிந்து மீண்டும் இதே மண்ணில் பிறந்தால் நாம் உண்ண உணவும் உயிர் வாழ உறைவிடமும் தரவல்லது இயற்கையே ஆகும். அத்துடன் பசு எர்மை முதலிய மிருகங்கள் கறவை வற்றிய பின்னரும் அவற்றை உரிய மருத்துவ வசதிகளும் தீனியும் கொடுத்து நல்ல முறையில் பராமரித்தல் வேண்டும். அதற்குரிய பலனை அவற்றின் சாணத்திலிருந்தே பெற இயலும். மாட்டு எருமைச் சாணத்திலிருந்து பயோ காஸ் எனும் எரிவாயு உற்பத்தி செய்யலாம். சாணத்தை இயற்கை உரமாக வயல்களுக்குப் பயன்படுத்தினால் நல்ல மகசூல் கிடைப்பதுறுதி. இரசாயன உரங்களையும் பலவகையான பூச்சி மருந்துகளையும் உபயோகித்து இயற்கையில் விளையும் உணவையும் விஷமாக்கிவிட்டோம் நாம்.

இயற்கையன்னையின் மடியில் ஓடிவரும் கங்கை நதியின் ஓரத்தில் ஒரு கன்னிப்பெண் அந்நதியின் அழகை ரசித்தவாறு இயற்கையில் தன் மனதை இசைத்துப் பாடும் ஒரு இன்பமான பாடல் இன்றைய பாடலாக இதோ:

சலசல ராகத்திலே

திரைப்படம்: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: பி. சுசீலா
ஆண்டு: 1960

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா?

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா?

ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓஓ

ஆத்துக்குள்ளே நானிருக்க அக்கரையிலே மனமிருக்க
ஆத்துக்குள்ளே நானிருக்க அக்கரையிலே மனமிருக்க
அலைமேலே அலை எழுந்து ஆளை வந்து தள்ளிடுதே
நேரத்திலே போகணும் நீண்ட கதை பேசணும்
ஆழத்தையும் தாண்டியே அன்பு முகத்தைப் பாக்கணும்
அன்பு முகத்தைப் பாக்கணும்

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா

பச்சை மலை சாரலிலே பனியுறங்கும் பாறையிலே
பச்சை மலை சாரலிலே பனியுறங்கும் பாறையிலே
படைபோலே பறவையெல்லாம் பறந்து வந்து கூடுதே

மீனும் மீனும் மேயுதே வேடிக்கையாய்ப் பாயுதே
ஆனந்தமாய்க் கண்களும் அவரை நாடிப் போகுதே
அவரை நாடிப் போகுதே ஓஓஓஓ

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா?

சலசல ராகத்திலே
டம்மு டும்மூ தாளத்திலே
சத்தங்கள் போடுவதேன் கங்கையக்கா நீ
சங்கீதம் கத்துக்கொண்டதும் எங்கேயக்கா?

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும்

எல்லாம் வல்ல தெய்வமது எங்கும் உள்ளது நீக்கமற
சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்
வல்லாய் உடலில் இயக்கமவன் வாழ்வில் உயிரில் அறிவும் அவன்
கல்லார் கற்றார் செயல் விளைவாய்க் காணும் இன்ப துன்பமவன்.
அவனின் இயக்கம் அணுவாற்றல் அணுவின் கூட்டுப் பக்குவம் நீ
அவனில் தான் நீ உன்னில் அவன் அவன் யார்? நீயார்? பிரிவேது?
அவனை மறந்தால் நீ சிறியோன் அவனை அறிந்தால் நீ பெரியோன்
அவன் நீ ஒன்றாய் அறிந் த இடம் அறிவு முழுமை அ து முக்தி.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

எத்தனை ஞானிகள் தோன்றி எத்தனை அறிவுரைகளை எப்படி, எங்கு, என்று வழங்கினாலும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் எனும் நான்கையும் தவிர நன்னெறிகள் எவற்றையும் ஏறெடுத்தும் பாராத இந்தப் பாழும் மனிதர் கூட்டம் சுய சிந்தனையை இழந்து செம்மரியாட்டுக் கூட்டம் ஒன்றன் பின் ஒன்றாய் சாய்வது போலக் கண்மூடித்தனமாக நெறிகெட்டு வாழ்ந்து அல்லலுறுகின்றனர்.

ஏசுபிரான் எல்லோரும் பிற உயிர்களைக் கருணையுடன் பேணி இரக்க சிந்தனையுடன் வாழச் சொன்னார், ஆனால் மனிதன் ஏசுநாதர் கையிலிருக்கும் ஆட்டையே உண்டு ஏசுவையே அவமதிப்பதுடன், ஏசுவின் வழியே தான் நடப்பதாகவும் பொய்யுரைத்து, தன்னையும் ஏமாற்றிக் கொண்டு பிறரையும் ஏமாற்றிப் பெரும் பாபத்தில் விழுகிறான். அண்ணல் காந்தியடிகளின் புகழை அனுதினமும் பாடுவான், அவரது சிலைகளைப் பல்வேறு நாடு நகரங்களிலும் நிறுவுவான், அவரது பிறந்த நாளன்று அவரது சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்வான், அவரது சிலைக்கு ஆளுயர மாலை அணிவிப்பான், ஆனால் அவரது கொள்கைகளையும் அவர் கடைபிடித்த வாழ்க்கை நெறிகளையும் சற்றும் பின்பற்றாது எந்நாளும் பொய்யுரைத்துப் பிறரை என்றும் ஏமாற்றியே வாழ்வான்.

நாட்டில் நல்லவர்கள் பலர் தன் கண்முன்னே இருக்கக்கண்டும் அவர்களைத் தன் தலைவராகக் கொள்ளாமல் கருப்புப் பணத்தின் உதவியுடன் கூலி கொடுத்து ஆளை அமர்த்தி, ஆடம்பரமாக மேடையமைத்து, அலங்கார வளைவுகள் வைத்து, பேருந்துகளின் மூலம் பெருங்கூட்டத்தைச் சேர்த்து ஆர்ப்பாட்டம் செய்து தன் பலத்தைக் காட்டுபவனையே தன்னிகரில்லாத் தலைவன் என்று கொண்டாடுகிறான் பேதை மனிதன். திருட்டும் புரட்டும் நிறைந்தவர்களுக்கே திரும்பத் திரும்ப வாக்களித்து மீண்டும் மீண்டும் ஏமாந்து யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல் கெட்டு சீரழிகிறான்.

நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும் நன்றியெனும் குணம் நிறைந்திருக்கும்
நரியாய் அவனே உருவெடுத்தாலும் தந்திரமாவது தெரிந்திருக்கும்
காக்கைக் குலமாய் அவதரித்தாலும் ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும்
காற்றாய் நெருப்பாய் நீராய் இருந்தால் கடுகளவாவது பயனிருக்கும்
ஆறறிவுடனே பேச்சும் பாட்டும் அறிந்தே மனிதன் பிறந்து விட்டான் அந்த
ஆறாம் அறிவைத் தேறா அறிவாய் அவனே வெளியில் விட்டு விட்டான்

- கவிஞர் கண்ணதாசன்

செம்மரி ஆட்டுக்கூட்டம் போல் திக்குத் தெரியாமல் செல்லுமிடமறியாது செல்லும் இப்பாழும் மனிதர்கள் திருந்துவதென்றோ அன்றே உலகம் உய்யலாகும்.

http://www.thamizhisai.com/tamil-cinema/paasavalai/intha-aattukkum.php

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும்

இந்த ஆட்டுக்கும் த த ட்ர்ர்ர்ர்ர்ர்ர்
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரும்
கூட்டிருக்குது கோனாரே - இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே

த அஆ த த த ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ரி

இந்த ஆட்டுக்கும்
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரும்
கூட்டிருக்குது கோனாரே - இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே

தில்லாலங்கடி தில்லாலங்கடி எல்லாம் இப்படிப் போகுது
நல்லாருக்குள் பொல்லாரைப் போல் நரிகள் கூட்டம் வாழுது
தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலே

இந்த ஆட்டுக்கும்
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரும்
கூட்டிருக்குது கோனாரே - இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே

த த ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரி த

கணக்கு மீறித் தின்றதாலே கனத்த ஆடு சாயுது
ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆ
கணக்கு மீறித் தின்றதாலே கனத்த ஆடு சாயுது அதைக்
கண்ட பின்னும் மந்தையெல்லாம் அதுக்கு மேலே மேயுது
பணக்கிறுக்கு தலையிலேறிப் பகுத்தறிவுந்தேயுது ஹஹாங்
பணக்கிறுக்கு தலையிலேறிப் பகுத்தறிவுந்தேயுது - இந்தப்
பாழாய்ப் போற மனிதக் கூட்டம் தானாய் விழுந்து மாயுது

இந்த ஆட்டுக்கும்
இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரும்
கூட்டிருக்குது கோனாரே இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவும் காணாரே

தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலே
தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலே

ஹஹ த ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ரி த த த ஹஹ த

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

இயற்கையில் இறைவன் படைப்பில் எவ்வித பேதங்களும் இன்றி எல்லா உயிரினங்களும் சமமே. இன, நிற, மொழி, மத பேதங்கள் மந்த புத்தி படைத்த மனிதரிடையே மட்டும் வழக்கத்திலுள்ளன. அறியாமையால் தன் இயற்கை அறிவை இழக்கும் மனிதர்கள் தம்மிடையே ஏற்றத் தாழ்வு பாராட்டுவதோடு பிற உயிர்களையும் நேசிக்கத் தவறுகின்றனர். இயற்கையையும் மதிக்காது இயற்கை வளங்களைத் தம் சுயநலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் நோக்குடன் அழிக்கவும் தலைப்படுகின்றனர். ஆங்கிலேயரின் ஆதிக்கம் வலுவுற்று விளங்கிய காலத்தில், இந்தியா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா முதலிய நாடுகளில் ஆங்கிலேயர்களைத் தவிர மற்ற இனத்தைச் சேர்ந்த மக்கள் யாவரும் தாழ்ந்தவர்களாகரும் தீண்டத் தகாதவர்களாகவும் நடத்தப்பட்டு வந்தனர். அது மட்டுமின்றி ஆப்ரஹாம் லிங்கன் காலம் வரையிலும் அமெரிக்காவில் கறுப்பின மக்கள் மற்ற ஆங்கிலேயர்களிடம் அடிமைகளாக வாழ்ந்ததும் வரலாறு கண்ட உண்மையாகும்.

நாளடைவில் மஹாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா முதலிய தலைவர்கள் வழிநடத்திய அஹிம்சை வழிப் போராட்டங்களின் பலனாக உலகெங்கிலுமுள்ள மக்கள் தம்முள் இனப்பாகுபாடு பாராட்டும் மடமையினின்று மீண்டு அனைவரையும் சமபாவத்தோடு நடத்தும் மனப்பக்குவத்தை அடைந்ததனால் இன்று ஆங்கிலேயர்கள் பெரும்பான்மையாக விளங்கும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக கருப்பினத்தைச் சேர்ந்தவரான ஓபாமா தேர்ந்தெடுக்கப் பட்டு ஆட்சி புரிகிறார்.

நமது நாட்டிலும் முற்காலத்தில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் சம உரிமை பெற்றுப் பல துறைகளிலும் முன்னணியில் விளங்குகின்றனர். இவ்வாறான முன்னேற்றங்கள் பல நம் கண்முன்னே நிகழ்ந்தபோதிலும் அவ்வப்போது ஒரு சில சுயநல அரசியல்வாதிகளின் போக்கால் சாதி, மத, இன மொழி பேதங்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றதும் நாம் அறிவோம். இத்தகைய பேதங்கள் யாவும் மறைந்து நம் நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் யாவரும் ஒனறே குலம், ஒருவனே தேவன் எனும் சமரச சன்மார்க்க நெறியைப் பேணிப் பெருமையுறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தம் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கையில் நிறம் பார்த்து சிவப்பு நிறமானால் விரும்புவதும் கருப்பானால் வெறுப்பதும் என்ற மடமையும் நீங்கி உள்ளத்து உயர்வையும் பிற தகுதிகளையும் கணக்கில் கொண்டு வாழ்க்கைத் துணையைத் தேடும் மனப்பக்குவத்தையும் பெரும்பாலான மக்கள் அடைந்துள்ளனர். அத்தகைய முற்போக்கான மனோபாவம் மக்களிடையே நிலவுவதை விளக்கும் பாடலொன்று இன்றைய பாடலாக மலர்கிறது.

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

திரைப்படம்: வெற்றிக்கொடி கட்டு
இயற்றியவர்: கவிஞர் வைரமுத்து
இசை: தேனிசைத் தென்றல் தேவா
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டண்
டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா டண்

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

சாமி கருப்புத் தான் சாமி செலையும் கருப்புத் தான்
யானை கருப்புத் தான் கூவும் குயிலும் கருப்புத்தான் என்னை
ஆசைப்பட்டுக் கொஞ்சும் போது குத்துற மீசை கருப்புத் தான்
அசத்துங் கருப்புத் தான்

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே ஐயே

வெண்ணிலவை உலகம் பாக்க வச்ச இரவு கருப்புத் தான்
வேர்வை சிந்தி உழைக்கும் எங்க விவசாயி கருப்புத் தான்
மண்ணூக்குள்ளே இருக்குறப்போ வைரம் கூடக் கருப்புத் தான்
மதுரை வீரன் கையில் இருக்கும் வீச்சருவாள் கருப்புத் தான்
பூமியிலே முத முதலா பொறந்த மனுஷன் கருப்புத் தான்
மக்கள் பஞ்சம் தீக்கும் அந்த மழை மேகம் கருப்புத் தான்
ஒன்ன என்ன ரசிக்க வச்ச ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்
ஒன்னை என்ன ரசிக்க வைத்த கண்ணு முழி கருப்புத் தான்
கற்பு சொல்லி வந்தா என்ன கண்ணகியும் கருப்புத் தான்
தாய் வயிற்றில் நாமிருந்த
தாய் வயிற்றில் நாமிருந்த கருவறையும் கருப்புத் தான்
பணமும் கருப்புத் தான்

கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

உன்னைக் கண்ட நாள் முதலா வச்ச பொட்டும் கருப்புத் தான்
ரெட்டை ஜடை பின்னலிலே கட்டும் ரிப்பன் கருப்புத் தான்
பூக்கடையில் தேடினேன் பூவில்லை கருப்புத் தான்
அன்று முதல் எனக்குத் தான் பூக்கள் மீது வெறுப்புத் தான்
பாவாடை கட்டிக் கட்டி பதிஞ்ச இடம் கருப்புத் தான்
முத்தங்கேட்டுக் காத்திருக்கும் அந்த இடம் ஒனக்குத் தான்
உன்னைப் பொத்தி வச்சிருக்கும் ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்ஆங்
உன்னைப் பொத்தி வச்சிருக்கும் நெஞ்சுக்குழி கருப்புத் தான்
ஊரறிய பெத்துகணும் புள்ளை பத்து கருப்பு தான்
நம்மூரு சூப்பர் ஸ்டாரு ஆங்
நம்மூரு சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்தும் கருப்புத் தான்
அழகு கருப்புத் தான்

கருப்புத் தான் எனக்கும் புடிச்ச கலரு அவன்
கண்ணு ரெண்டும் என்னை மயக்கும்
தவுசன் வாட்சு பவரு
கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலரு

சாமி கருப்புத் தான் சாமி செலையும் கருப்புத் தான்
யானை கருப்புத் தான் கூவும் குயிலும் கருப்புத்தான் என்னை
ஆசைப்பட்டுக் கொஞ்சும் போது குத்துற மீசை கருப்புத் தான்
அசத்துங்கருப்புத் தான்