திங்கள், 23 நவம்பர், 2009

எங்களுக்கும் காலம் வரும்

எந்த ஒரு லக்ஷியத்தையும் அடைய முதற்கண் நம்பிக்கை அவசியம். "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு" என்று இவ்வுண்மையை எடுத்துரைத்த மஹாகவி பாரதி பாரத நாடு வெள்ளையர்களிடம் அடிமைப் பட்டிருந்த காலத்திலேயே
"ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோம்"

என்று பாடியது பாரதத்தாயை அடிமைத் தளையினின்றும் விடுவித்து சுதந்திரம் பெறுவோம் எனும் அவரது ஆழ்ந்த நம்பிக்கையைக் காட்டுகிறது.

"ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?"

என்று அவர் பாடியது, வெள்ளையரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் கோரப் பிடியிலிருந்து கோடானு கோடி தேசபக்தர்கள் மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது கண் துஞ்சாது ஆங்கிலேயர்களிடம் அடி வாங்கி, அவர்களின் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து பெற்றுத்தந்த சுதந்திரத்தை இழக்கும் வகையில், அரசுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குமளவுக்கு சுரண்டல் பெருகிய பின்னர் இன்று பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ள இன்றைய காலத்தின் அவலத்தை எண்ணித்தானோ?

எது எவ்வாறாயினும் நாமெல்லோரும் ஒருங்கிணைந்து பாடுபட்டு உழைப்பதுடன் நாடு சீர்கேடான பாதையிலிருந்து விலகி முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டிய அவசியத்தைப் பிறருக்கும் உணர்த்தி "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே" எனும் தத்துவத்தை மனதில் கொண்டு செயல்புரிந்தால் நாடு சுபிட்சமடைவதுடன் நீதியும் நேர்மையும் நெறியோடு செல்வமும் நிலவி, நம் மனத்துயர் மாறுவது உறுதி.

நாடு சுபிட்சமடைந்து எல்லோரும் நல்வாழ்வு வாழும் அந்தப் பொன்னாளை மனக்கண்ணால் கண்டு நாமெல்லோரும் பாடி மகிழவென்றே நமக்கென்று கருத்துச் செறிவுள்ள இந்தப் பாடலைத் தந்துள்ளளாரோ கவியரசர்?

எங்களுக்கும் காலம் வரும்

படம்: பாசமலர்
இயக்கம்: ஏ. பீம்சிங்
பாடலாசிரியர்: க்விஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1961

தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனேனா
தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனேனா ஓ....ஓ..ஓ..ஓ..
தந்தான தானதந்தானே தானேதந்தானேனே தானே தானேதந்தானேனே தானே தானேதந்தானே தந்தா

எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனன்னா

தந்தத் தானே தந்தன்னா தந்தத் தானே தந்தன்னா ஆ..ஆ..ஆ..ஆ ஆ..ஆ..ஆ

வளரும் வளரும் என்றே காத்திருந்தோம்
மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம்
மலர் முடிந்து பிஞ்சு வரும் வளர்ந்தவுடன் காய் கிடைக்கும்
காய்களெல்லாம் கனிந்தவுடன் பழம் பறிப்போமே

எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

தந்தத் தானே தந்தன்னா தந்தத் தானே தந்தன்னா ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ

உழவும் தொழிலும் இங்கே நாம் படைத்தோம்
உறவும் சுவையும் என்றும் நாம் வளர்த்தோம்
பணம் படைத்த மனிதரைப் போல் பஞ்சு மெத்தை நாம் பெறுவோம்
மாடி மனை வீடு கட்டி வாழ்ந்திருப்போமே

எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை ஆ...ஆ..ஆ..ஆ..
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ..ஆ..ஆ..ஆ..
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ.ஆ.ஆ.அ
தோல்வியுமில்லை ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ

எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக