திங்கள், 23 நவம்பர், 2009

அக்காளுக்கு வளைகாப்பு

காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்ட இன்பம் தரும் இல்லற வாழ்வில் இருவரும் எய்தும் பேரின்பம் குலம் தழைக்க ஒரு பிள்ளையைப் பெறுவதுவே. அதிலும் மனைவி கருவுற்று அவளுக்கு வளைகாப்பு நடைபெறுகையில் இவ்வின்பம் பெரும் எதிர்பார்ப்புடன் கலந்து ஒருவித உணர்ச்சிப் பெருக்கினை உண்டாக்க வல்லது.
தனியொரு மனிதன் எனும் சாதாரண நிலையிலிருந்து தந்தை எனும் பெரும் பதவியைப் பெறும் பெருமிதம் கணவன் முகத்தில் காணும் நன்னாளிது. இந்த வளைகாப்பு விழாவைக் கொண்டாட மனைவியின் உடன் பிறந்த சகோதரி இருந்துவிட்டால் இந்த இன்பம் பன்மடங்காகப் பெருகி அனைவரையும் உற்சாகப் படுத்தத் தவறுவதில்லை.

மலர்கள் சூட்டி, மஞ்சள் கூட்டி, வளையல் பூட்டி, திலகம் தீட்டி கர்ப்பிணிப் பெண்ணைப் போற்றி மகிழ்ந்து பாராட்டும் இந்நாளை மகிழ்வுடன் கொண்டாடாத மனிதர் யாரும் இல்லை. அன்று அவளுக்குப் பூட்டி மகிழும் வண்ண வண்ன வளையல்களின் சிறப்பையும் விழாவில் கணவன் மனைவி இருவரின் மன நிலையையும் அழகு தமிழில் விளக்கும் ஒரு அற்புதமான பாடல்:

அக்காளுக்கு வளைகாப்பு

படம்: கல்யாணப் பரிசு
ஜிக்கி குழுவினர்
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்


ம்ங்கையர் முகத்திலே கொஞ்சி விளையாடும்
மஞ்சள் நிற வளையல் இது வாழ்வு தரும் வளையல்
மங்கலப் பெண்குலம் பொட்டு வைத்தே மகிழும்
குங்கும நிறத்தோடு குலுங்கும் திரு வளையல்
வற்றாத மாநில வளந்தனை விளக்கிடும்
வற்றாத மாநில வளந்தனை விளக்கிடும்
மங்காத பச்சை நிறம் வழங்கும் எழில் வளையல் - தும்பை
மலர் போன்று இரு மனமும் மாசின்றி வாழ்கவென
வாயார வாழ்த்திடும் வெண்சங்கு வளையல்
வாயார வாழ்த்திடும் வெண்சங்கு வளையல்

அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
அக்கம் பக்கம் கலகலப்பு யாரைப் பார்த்தாலும் சுறுசுறுப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே

முத்துப் போலே பவழக் கொத்துப் போல இன்னும்
மூணு மாசம் போனா மகன் பொறப்பான்
முத்துப் போலே பவழக் கொத்துப் போல இன்னும்
மூணு மாசம் போனா மகன் பொறப்பான்
பட்டுப்போலத் தங்கத் தட்டுப் போலே கரும்புக்
கட்டுப் போலக் கிடந்து கண்னைப் பறிறப்பான்

அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே

ஒண்ணும் தெரியாத சின்னப் பிள்ளை போலே
ஒக்காந்திருக்காரு மாப்பிள்ளை அத்தான் ஆமா
ஒக்காந்திருக்காரு மாப்பிள்ளை அத்தான் - அவர்
கண்ணே முழிக்கிறாரு சும்மா கனைக்கிறாரு
என்னான்னு கேளுங்கடி சங்கதியத் தான் - அடி
என்னான்னு கேளுங்கடி சங்கதியத் தான் - அடி
எனக்குந்தெரியாது ஒனக்குந்தெரியாது
ஏதேதோ பேசுறாங்க ரெண்டு பேரும் - அதை
வெளக்க முடியாது வெவரம் புரியாது
வேணாண்டி நமக்கது ரொம்ப தூரம் - அடி
ஆமாண்டி நமக்கது ரொம்ப தூரம்

அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே

தாலாட்டுப் பாடி இவர் தாயாகி மகனுக்குப்
பாலூட்ட நெருங்குது நாளு
தாலாட்டுப் பாடி இவர் தாயாகி மகனுக்குப்
பாலூட்ட நெருங்குது நாளு - அவன்
காலாட்டிக் கையாட்டித் துள்ளுறதைப் பாத்துப்புட்டா
கீழே விட மாட்டாரு ஆளு - அவனைக்
கீழே விட மாட்டாரு ஆளு

அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு
அக்கம் பக்கம் கலகலப்பு யாரைப் பார்த்தாலும் சுறுசுறுப்பு
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே
தந்தானே தன்னத்தானே தானே தானானே தையத்தானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக