சனி, 28 நவம்பர், 2009

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே

"கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்" என்று சொன்னார்கள் நமது முன்னோர்கள். இதன் பொருளை விளக்கிக் கூறவில்லை யாரும். "ஆயுட்காலப் பயிர்" என்று சொல்வது பொருத்தமானதென நான் கருதுகிறேன், காரணம் மனிதர்க்கு வாழ்க்கை திருமணத்தின் மூலமே அமைகிறது. திருமணம் செய்யாதவர் வாழ்க்கை வெறுமையாகவே காணப்படுகிறது. எனினும் திருமணம் செய்வதென்பது காலப்போக்கில் பொருளாதார ரீதியில் மிகவும் கடினமான விஷயமாகி வருகிறது, காரணம் விலைவாசி ஏற்றம். உணவுப் பொருட்கள் நாளுக்கு நாள் விலை உயர்ந்து சாமான்ய மக்கள் அவற்றை வெளிச் சந்தையில் எல்லோரையும் போல் விலை கொடுத்து வாங்க இயலாத சூழ்நிலை ஏற்கெனவே உருவானதாலேயே ரேஷன் கடைகளை நம்பி வாழ்க்கை நடத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது.
தமது குடும்பத்திலுள்ளோர் உண்பதற்கே மலிவு விலைக் கடைகளை நம்பியிருக்கும் நிலையில் உறவினர்களை எல்லாம் அழைதது அவர்களுக்கு விருந்து படைப்பதென்பது சாமான்ய மக்களுக்குப் பெரும் செலவை ஏற்படுத்துகிறது. ஒருவர் தன் ஆயுட்காலம் முழுதும் உழைத்துச் சேர்த்த பொருள் அனைத்தையும் செலவழித்தாலும் தன் ஒரு மகளுக்குக் கூட உரிய முறையில் திருமணம் செய்வதென்பது அரிதாகிவிட்டது.

இந்நிலை நீடித்தால் மாப்பிள்ளை, பெண் மற்றும் அவர்களின் பெற்றோரும் அவர்களது திருமணத்திற்குச் செல்லப் பேருந்துக் கட்டணத்துக்கும் வழியின்றி மாட்டு வண்டிகளில் செல்வது ஒன்றே வழி எனும் நிலை நேர்ந்தாலும் நேரலாம்.

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே

படம்: காவேரியின் கணவன்
இயற்றியவர்:
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி, எல்.ஆர். ஈஸ்வரி
ஆண்டு: 1959

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே

புள்ளையப் பெத்த அம்மா வந்தா மொட்ட வண்டியிலே
புள்ளையப் பெத்த அம்மா வந்தா மொட்ட வண்டியிலே
பொண்ணைப் பெத்த அப்பா வந்தான் ஓட்ட வண்டியிலே
பொண்ணைப் பெத்த அப்பா வந்தான் ஓட்ட வண்டியிலே

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே

காக்காக் கடி கடிச்சுக் கொடுத்த கம்மருகட்டு முட்டாயி
சோக்கா வாங்கித் தின்னுப்புட்டு விட்டானையா கொட்டாவி
காக்காக் கடி கடிச்சுக் கொடுத்த கம்மருகட்டு முட்டாயி
சோக்கா வாங்கித் தின்னுப்புட்டு விட்டானையா கொட்டாவி
ஓட்டாஞ்சல்லிய எடுத்துக் கிட்டு ஓடுனாங்க மாருக்கட்டு
ஓட்டாஞ்சல்லிய எடுத்துக் கிட்டு ஓடுனாங்க மாருக்கட்டு
ஓராழாக்கு அரிசி வாங்கி ஒலையில தான் போட்டுக்கிட்டு

கூட்டாஞ்சோறு ஆக்கிககிட்டு கும்மாளந்தான் போட்டுக்கிட்டு
கூட்டாஞ்சோறு ஆக்கிககிட்டு கும்மாளந்தான் போட்டுக்கிட்டு
கொழவிக் கல்லு புள்ளய ஒண்ணு குஷியாகப் பெத்துகிட்டு
கொழவிக் கல்லு புள்ளய ஒண்ணு குஷியாகப் பெத்துகிட்டு

ஆராரோ நீ ஆரோ அருமையான கொழந்தை யாரோ?
ஆராரோ நீ ஆரோ அருமையான கொழந்தை யாரோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக