சனி, 28 நவம்பர், 2009

தேரோடும் எங்க சீரான மதுரையிலே

நமது பாரத நாட்டில் உலகப் புகழ் பெற்ற பல விதமான நாட்டியக் கலைகள் தொன்று தொட்டு வளர்ந்து வருகின்றன. இவற்றுடன் பல விதமான கிராமியக் கலைகளும் சிறப்பாகப் போற்றி வளர்க்கப் படுகின்றன. இருப்பினும் சமீபத்திய தொலைகாட்சி முதலிய ஊடகங்களின் கட்டுப்பாடற்ற ஆக்கிரமிப்பினால் மேலை நாட்டு நாகரீகம் பலதரப்பட்ட மக்களை, குறிப்பாக இளைஞர் சமுதாயத்தைக் கவரும் விதத்தில் பரப்பப்படுவதால் நம் நாட்டின் பாரம்பரியம் மிக்க கலைகள் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையை மாற்றி, கிராமியக் கலைகளுக்கும் உரிய முக்கியத்துவமளித்து அவற்றையும் இளைய தலைமுறையினர் பயின்று பாராட்டும் விதத்தில் நிகழ்ச்சிகளை அமைத்து நடத்த இத்தகைய ஊடகங்களுள் சில முயற்சிகள் மேற்கொள்வது பாராட்டத்தக்கதாகும். இத்தகைய முயற்சியை அனைத்து ஊடகங்களும் மேற்கொள்ளுமாகில் நம் நாட்டின் தொன்மையான கலைகள் என்றென்றும் சிறந்து வாழ வழிபிறக்கும்.

கிராமியக் கலைகளுல் ஒயிலாட்டமும் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்:

ஒயிலாட்டம்

அத்தகைய ஒயிலாட்டத்தை கவி நயம் மிக்க அற்புதமான பாடலுடன், அதற்கேற்ற தனித்தன்மை வாய்ந்த, மனதைக் கவர்ந்து லயிக்க வைக்கத்தக்க இசையுடனும் படமாக்கியுள்ளனர் நம் தமிழ்த் திரையுலக மேதைகள்:

தேரோடும் எங்க சீரான மதுரையிலே

படம்: பாகப் பிரிவினை
இயற்றியவர்: மருதகாசி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியோர்: எய்.எம். சௌந்தரராஜன், பி. லீலா
ஆண்டு: 1959

ஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ
பாலூற்றி உழவு செய்வார் உழவு செய்வார்
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஓஓஓஓ
பனிபோல் விதை நடுவார் விதை நடுவார் ஓ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஓஓஓஓ
மாம்பழத்துச் சாறெடுத்து வயலுக்கு உரமிடுவார் உரமிடுவார்
தேன் பாய நெல்விளையும் தென்பாண்டி நாட்டினிலே
ஓஓஓஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓ

தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம் ஓய்
தேரோடும் எங்க சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம்

நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய் ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்

தங்கச் சிலம்புகள் தையத் தந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
கொண்டையிலே மலர்ச் செண்டு குலுங்கிட
வண்டு விழியெனும் கெண்டைகள் துள்ளிட
தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம்

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய் ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய்

சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
அன்னம் பிறப்பதின் முன்னம் பிறந்தவர்
ஆடுவதைக் கண்டு மாமழை பெய்திட

நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

சித்திரை மாதம் முத்துகள் வித்து
திரும்பி இங்கே வருவதென்றே
சென்றவர் இன்னமும் வந்திலர் சேதி
தெரிந்து சொல்லடி ராமாயம்மா ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ
ஓ ராமாயம்மா

வித்த இடத்தில பத்தினிப் பொண்ணும்
விரிச்ச வலையில் விழுந்து விட்டார்
உன்னையும் என்னையும் மறந்து விட்டார்
உண்மையைச் சொல்லடி ராமாயம்மா
ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ ஓ ராமாயம்மா

சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட
அன்னம் பிறப்பதின் முன்னம் பிறந்தவர்
ஆடுவதைக் கண்டு மாமழை பெய்திட

நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

மஞ்சு விரட்டில் மாடு பிடித்தால்
மாலை சூடி மணப்பதென்று
சொன்னவள் இன்னமும் வந்திலள் நீயும்
தூது சொல்லடி ராமாயம்மா ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ
ஓ ராமாயம்மா

கொஞ்சும் கிளிபோல் வஞ்சித்த உன்மேல்
கொள்ளை ஆசை பிறந்திருக்கு
வாசல் கதவு சாத்தியிருக்கு வழியுமில்லை ராமாயம்மா
ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ ஓ ராமாயம்மா

தங்கச் சிலம்புகள் தையத் தந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
தங்க வளையல்கள் ஐய வந்தோமென
கொண்டையிலே மலர்ச் செண்டு குலுங்கிட
வண்டுவிழியெனும் கெண்டைகள் துள்ளிட

தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம்
நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே
ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம்

ஏ அக்கு ஏ அக்கு ஏ அக்கு ஏ அக்கு

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ

ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோ
ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே
ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக