சனி, 28 நவம்பர், 2009

காற்றினிலே வரும் கீதம்

எத்தனையோ விதவிதமான இசைக் கருவிகள் இருந்தாலும் அவையனைத்திலும் மிகவும் சிறப்பானது புல்லாங்குழல். புல்லாங்குழலின் இசை மனிதர்கள் மட்டுமன்றிப் பிற உயிரினங்களையும் தன்னை மறந்து ரசிக்க வைக்கத்தக்கது. அதனாலேயே ஆநிரை மேய்க்கும் ஆயர்பாடிக் கண்ணன் புல்லாங்குழலைத் தன் வாத்தியமாகப் பாவித்தானோ?
கண்ணன் குழலூதினால் அவ்விசையில் மயங்காதவர் உலகில் உண்டோ? மனிதர்கள் மட்டுமின்றி சுனை வண்டுடம் சோலைக் குயிலும் மனம் குவிய, வானில் உலாவரும் நட்சத்திரங்களும் தயங்கி நின்றிடுமன்றோ அவன் குழலிசை கேட்டு?

காற்றினிலே வரும் கீதம்

படம்: மீரா
இயற்றியவர்: கல்கி கிருஷ்ணமூர்த்தி
இசை: எஸ். வி. வெங்கட்ராமன், கே. வி. நாயுடு
பாடியவர்: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி
ஆண்டு: 1945

காற்றினிலே... வரும் கீதம் காற்றினிலே
காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம் பண்ணொளி பொங்கும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

சுனை வண்டுடன் சோலைக் குயிலும் மனம் குவிந்திடவும்
வானவெளிதனில் தாரா கணங்கள் தயங்கி நின்றிடவும்
ஆ என் சொல்வேன் மாயப்பிள்ளை வேய்ங்குழல் பொழி கீதம்
காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில்
நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம் காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம் காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக