சனி, 28 நவம்பர், 2009

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?

காதலைப் பற்றி எண்ணுகையில் மனக்கண்ணில் தோன்றுவது கண்ணனும் ராதையும் ஆவர். வடமொழிக் கவிஞரான ஜெயதேவர் தாம் எழுதிய கீத கோவிந்தம் எனும் காவியத்தில் கண்ணன், ராதை இருவரும் கொண்ட தெய்வீகக் காதலை அற்புதமாக விவரித்துள்ளார். இத்தகைய விவரங்களைப் பல உபன்யாசகர்களும் ஆன்மிக சிந்தனையாளர்களும் கூறக் கேட்டதுண்டு.
அத்துடன் கண்ணனைப் பற்றிய கதைகள் பலவற்றில் அவன் கோபியருடன் ஆடிய லீலைகள் பற்றியும், யமுனா நதி தீரத்திலும், பிருந்தாவனத்திலும் நடத்திய காதல் விளையாட்டுக்கள் பற்றியும் மூத்தோர் கூறக் கேட்டதுண்டு,

அந்தக் கதைகளில் மனம் லயித்த நமது இளைஞர்கள் தாமும் காதல் கொள்கையில் தம்மைக் கண்ணன் ராதை போலக் கற்பனை செய்து மகிழ்வது வாடிக்கை.

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?

படம்: உத்தரவின்றி உள்ளே வா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை. எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா

ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஹாஹ ஹா ஆஹாஹா ஆ...

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ மன்னன் வந்தானோ?
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ மன்னன் வந்தானோ?

கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாணப் பூப்பந்தல் என்தன் மனம்
ம்ம்ம் ஆஹாஹா ஆஆஆ
கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம் கல்யாணப் பூப்பந்தல் என்தன் மனம்
நீராட நீ செல்லும் யமுனா நதி நீராட நீ செல்லும் யமுனா நதி
மங்கல மங்கையின் மேனியும் தங்கிய மஞ்சள் நதியோ குங்கும நதியோ?
ஆ..ஆ.. ஆஆஆ ஆஆஆ

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ?

ஆஹாஹா ஆஹாஹா ஹா ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆஆஆஆ

காணாத உறவொன்று நேர் வந்தது கண்ணா உன் அலங்காரத் தேர் வந்தது
வாழாத பெண் ஒன்று வழி கண்டது வாழாத பெண் ஒன்று வழி கண்டது
வாடிய பூங்கொடி நீரினில் ஆடுது மன்னா வருக மாலை தருக
ஆஆ.ஆஆ. ஆஆஆ ஆஆஆ

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ?

பூமாலை நீ தந்து சீராட்டினாய் புகழ் மாலை நான் தந்து தாலாட்டுவேன்
பாமாலை பல கோடி பாராட்டுவேன் பாமாலை பல கோடி பாராட்டுவேன்
பள்ளியின் மீதொரு மெல்லிய நாடகம் சொல்லிட வருவேன் ஏதோ தருவேன்
ஆஆஆ ஆ... ஆஆஆ ஆஆஆ

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ?
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ மன்னன் வந்தானோ?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக