சனி, 28 நவம்பர், 2009

தங்கரதம் வந்தது வீதியிலே

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே
எனும் திருஞான சம்பந்தரின் தேவாரப் பாட்டில் கூறியுள்ளது போல் இறைவனை வழிபடுகையில் உள்ளம் உருகி அவன் மேல் காதலுடன் வணங்க வேண்டும். இறை வழிபாட்டில் உண்டாகும் காதல் உணர்வுக்கும் ஒரு பெண் தான் நேசிக்கும் ஒரு ஆணின் மேல் அல்லது ஒரு ஆண் தான் நேசிக்கும் ஒரு பெண்ணின் மேல் கொள்ளும் காதலுக்கும் அடிப்படை அன்பில் வேறுபாடு கிடையாது. காதல் என்றாலே தூய்மையான மரியாதைக்குரிய அன்பு என்பது பொருளாகும்.

ஆண் பெண் காதலில் இயல்பாக எழும் பாலுணர்ச்சியைப் புறந்தள்ளி இத்தகைய தெய்வீக உணர்வுடன் கொள்ளும் காதல் தெய்வ வழிபாட்டில் கிடைப்பது போன்ற பேரின்பத்தைத் தர வல்லதாகும்.

இதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரும் சாரதாதேவி அம்மையாரும் ஆவர்.

தெய்வத்தை வழிபடுவோர் அத்தெய்வத்தைத் தேரில் அமர்த்தி அத்தேரை வடம் பிடித்து இழுத்து ஊரெங்கும் உலாவருதல் விழாக்கோலமாய் அமைந்த வழிபாடாகும். ஆலயங்களில் இத்தகைய வழிபாட்டுக்கெனத் தங்கரதம் ஏற்படுத்தி அதனை விசேஷமாகத் துதிக்க விரும்பும் பக்தர்கள் இழுக்க வகை செய்வது வழக்கத்தில் உள்ளது.

அத்தகையதொரு நிலையில் தங்களது தெய்வீகக் காதலை வெளியிடுகின்றனர் கலைக்கோவில் காதலர்கள்.

தங்கரதம் வந்தது வீதியிலே

திரைப் படம்: கலைக்கோவில்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே ராமமூர்த்தி
பாடியோர்: டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா, பி. சுசீலா

ஆ ஆஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆ
ஆ ஆஆஆஆ ஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ

தங்கரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
மரகதத் தோரணம் அசைந்தாட நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
மரகதத் தோரணம் அசைந்தாட நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
தங்கரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
தங்கரதம் வந்தது வீதியிலே ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ

செவ்விளநீரின் கண் திறந்து செம்மாதுளையின் மணி வாய் பிளந்து
முளைவிடும் தண்டில் கோலமிட்டு மூவருலா வந்த காலங்கள் போலே

தங்கரதம் வந்தது வீதியிலே ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

மாங்கனிக் கன்னத்தில் தேனூற சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீன் ஆட
தேன் தரும் போதைகள் போராட தேவியின் பொன் மேனி தள்ளாட ஆட

தங்கரதம் வந்தது வீதியிலே ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக