சனி, 28 நவம்பர், 2009

ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே

Charity begins at home என்ற ஆங்கிலப் பழமொழியும்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

எனும் திருக்குறளும் உணர்த்தும் பொருள் ஒன்றே. ஒவ்வொருவரும் தமது குடும்பத்தை அன்புடனும் அறநெறி வழுவாமலும் நடத்திச் சென்றால் பண்புடனும் பயனுடனும் அவரது வாழ்க்கை அமையும். இவ்வாறு ஒவ்வொரு குடும்பத் தலைவனும், அக்குடும்பத்தின் பிற உறுப்பினர்களும் பொறுப்புடன் செயல்பட்டால் அந்நாடும் சிறந்து விளங்குவது உறுதி.

தொன்றுதொட்டு நமது நாட்டில் நடைமுறையில் இருந்து வரும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் உடன் பிறந்த சகோதரர்கள் அவர்களுக்குத் திருமணம் முடிந்து பிள்ளைகள் பிறந்து வளர்ந்த காலத்திலும் ஒன்றாக இருந்து அனைவரது குடும்பங்களும் ஓரே குடும்பமாக வாழும் வாழ்க்கை முறையைக் கண்டு பிற நாட்டவர் அனைவரும் மிகவும் வியந்து பாராட்டுகின்றனர்.

இத்தகைய சிறந்த பாரம்பரியத்தை மதியாது சிலர் சுயநல மிகுதியால் தனிக்குடுத்தனம் எனும் பெயரால் சொந்த பந்தங்களைப் பிரிந்து அவதிப்படுவதுடன் செலவினங்களையும் அதிகப் படுத்துக் கொண்டு துன்புறுகின்றனர். இவ்வாறு குடு்ம்பத்திலிருந்து பிரிந்து செல்லும் போக்கு மாறிப் பெரும்பாலான குடும்பங்கள் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை அனுசரித்து நடக்கும் பாதைக்குத் திரும்புவார்களேயானால் வீட்டுக்கும் நாட்டுக்கும் நலம் விளையும்.

ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே

படம்: பாமா விஜயம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: பி.சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
ஆண்டு: 1967

ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும் நேரமில்லையடியோ
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும் நேரமில்லையடியோ அடியோ
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே

எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஏறிட்டு நானதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நானள்ளிச் சூடவில்லை
எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஏறிட்டு நானதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நானள்ளிச் சூடவில்லை
அந்தக் கன்னத்தில் என்னடி முத்து்ம் வண்ணம் இந்தக்
கள்ளத் தனத்தினில் வந்ததடி
வாங்கிக் கொடுத்ததும் தாங்கிப் பிடித்ததும்
முத்துக்கள் போல் வந்து மின்னுதடி
ஒரு முத்து இரு முத்து மும்முத்து நால் முத்து அம்மம்மா
பெண்ணுக்கு எத்தனை முத்தமடி

ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே

ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

மாமன் மக்கள் தேடிய செல்வங்கள் யாருக்கடி?
ஆடிடும் பிள்ளைகள் பேருக்கடி
மிஞ்சிய செல்வங்கள் ஊருக்கடி கையில்
உள்ளதைக் கொண்டிங்கு வாழ்வதிலே
இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி
வீட்டு நலத்துக்கும் நாட்டு நலத்துக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி
வீட்டுக்கு பிள்ளைக்கு ஊருக்கு நாட்டுக்கு
பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக