சனி, 28 நவம்பர், 2009

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே

உலகில் உயிர் வாழ்க்கை உறவுகளாலும், நட்பாலும் காதலாலும் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் அன்பினாலும் பாசத்தினாலும் நிலைத்திருக்கிறது. பரஸ்பரம் அன்பு கொண்டவர்கள் சேர்ந்திருக்கும் போது சந்தோஷம் விளைவது போலவே ஒருவரையொருவர் பிரிந்திருக்கையில் துக்கமும் விளைவது இயற்கை. துன்பம் தரும் அத்தகைய பிரிவு முடிந்து அன்புக்குரிய்வரை மீண்டும் சந்திக்க மாட்டோமா என மனம் ஏங்குவதும் இயற்கை.

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே

திரைப்படம்: சதாரம்
இயற்றியவர்: மருதகாசி
இசை: ஜி. ராமனாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1956

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே உன்னை
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே

அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனததே - வாழ்க்கை
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனதே - நான்
அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அமைதியின்றியே அலைய நேர்ந்ததே

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே

எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?
இந்த நிலை என்று மாறுமோ?
இந்த நிலை என்று மாறுமோ? உனைக் காணும்
இன்ப நாளுமே வந்து சேருமோ?

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக