சனி, 28 நவம்பர், 2009

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

மனிதன் தன் ஆசைகளைத் தன் தகுதிக்கு ஏற்ற விதத்தில் கட்டுப்படுத்திக் கொள்வது மகிழ்ச்சியாக வாழ்வதற்கு மிகவும் அவசியமாகும். தகுதிக்கு மீறி ஆசைப்படுபவன் தன்மானமிழந்து பெரும் துன்பத்துக்கு ஆளாக நேரிடும். குறிப்பாக ஒரு ஏழை செல்வச்சீமாட்டியான ஒரு பெண்ணை விரும்புவானாகில் அவன் வாழ்வில் பெரும் எதிர்ப்புககளை சந்திப்பது உறுதி. இத்தகைய ஆசை அவன் வாழ்வை நிலைகுலையச் செய்து அவன் செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்ய இயலாத சூழ்நிலை உருவாகி, அவன் வாழ்வின் அடிப்படையே ஆட்டம் காணக் கூடும்.
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுதல் தகாது.

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

படம்: ஆயிரத்தில் ஒருவன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1965

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
நாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
மாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு
வாடுவதே என் பாடு இதில்
நான் அந்த மான் நெஞ்சில் நாடுவதெங்கே கூறு

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு
பாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம்
காதலை யார் மனம் தேடும் இதில்
நான் அந்த மான் நெஞ்சில் நாடுவதெங்கே கூறு

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக