சனி, 28 நவம்பர், 2009

சங்கே முழங்கு சங்கே முழங்கு

"தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நி்ல்லடா" என்று வெறும் முழக்கமிட்டால் போதாது, உண்மையாகவே தமிழன் என்று சொல்லித் தலை நிமிர்ந்து செல்லும் தகுதியை ஒவ்வொரு தமிழனும் அடைய வேண்டும். பண்டைக்காலத்தில் தமிழ் நாடு சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு, கொங்கு நாடு என்றிவ்வாறாகப் பல கூறுகளாகப் பிரிந்திருந்தது. அவை தவிர சிறு சிறு நாடுகள் குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டன.
பல்வேறு காரணங்களுக்காக அவ்வப்போது இந்நாடுகள் ஒன்றன் மேல் ஒன்று படையெடுத்ததன் விளைவு தமிழர்கள் ஒருவருக்கொருவர் விரோதம் பாராட்டி, ஒருவ்ரை மற்றவர் வெட்டிக் கொன்ற கொடுமை தொடர்ந்து நிறைவேறியது. இக்கொடுமையை சிந்தித்துப் பாராமல் பொருளுக்காகத் தம் தமிழறிவை விற்று இத்தகைய கொலைபாதகங்களுக்குக் காரணமான அரசர்களின் மேல் கவிஞர்கள் பலர் பரணி என்ற பெயரில் பாடி வைத்த பிதற்றல்களைப் பெரிதென எண்ணி நாம் அறியாமையால் பெருமை கொள்கிறோம்.

இன்று உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் பெரும்பாலோர் சொல்லொணாத் துயரில் மூழ்கி வருந்துகின்றனர். இவர்களின் துயரை யாராலும் விரைவில் நீக்க இயலாத சூழ்நிலை நிலவுவது மிகவும் வேதனை தருகிறது. இந்நிலைமைக்கு யார் காரணம்? அரசியல்வாதிகள் ஒருவரை மற்றவர் குற்றஞ்சாட்டி அவர்கள் தமிழரின் இன்னல்களைத் தீர்க்க வழி காணது தாங்கள் பதவிகளைப் பெறுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அவ்வாறு குற்றஞ்சாட்டுபவர்கள் உண்மையிலே தமிழர்களின் துயர் துடைக்கப் பாடுபடுபவர்களா எனில் இல்லை எனும் பதிலே கிடைக்கிறது.

தமிழர்கள் செய்த மிகப் பெரிய தவறு என்னவெனில், தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாகவும் அறிவுபூர்வமாகவும் செயல்படாது, உணர்ச்சிபூர்வமாக முடிவெடுத்ததே ஆகும். அத்துடன் தம்முள் ஒற்றுமை குறைய விடுவதும் இத்தகைய இன்னல்களுக்கு முக்கியக் காரணமாகும்.

தமிழர்கள் ஒருவரோடொருவர் நட்புக்கொண்டு, தன்னலம் கருதாது உண்மையாய்ச் சேவை செய்யும் மனப் பக்குவமும், அறிவும் திறமையும் கொண்ட தலைவர்களைத் தேர்வு செய்வார்களேயானால் தமிழரை யாரும் இன்னல்களுக்குள்ளாக்க இயலாதென்ற சூழ்நிலை விரைவிலேயே உருவாகும்.

உலகத் தமிழர்களே ஒன்று கூடுங்கள், உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்.

சங்கே முழங்கு சங்கே முழங்கு

திரைப்படம்: கலங்கரை விளக்கம்
இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1965

சங்கே முழங்கு சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு

சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே

சங்கே முழங்கு ஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள்
வெற்றித் தோள்கள் ஆஆஆஆஆஆஆஆஆஆ
கங்கையைப் போல் காவிரி போல்
கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனில்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக