சனி, 28 நவம்பர், 2009

எல்லாம் இன்பமயம் புவியினிலே எல்லாம் இன்பமயம்

ஒரு காலத்தில் (இந்தியா வெள்ளையரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, சுதந்திரமடைந்து சுமார் இருபது வருடங்கள் வரை) நம் நாட்டில் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி எல்லோருக்கும் கல்வி இலவசமாகக் கிடைத்தது. மருத்துவ உதவி உட்பட அடிப்படைத் தேவைகள் அனைத்தும் அனைவருக்கும் கிட்டின. எல்லோரும் எல்லாமும் பெற்று வாழும் நிலை நிலவியது. குடிமக்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகாது அரசுகள் மதுவிலக்கை அமுல்படுத்திக் காத்தன.
விலைவாசி குறைவாக இருந்தது. உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைத்தன. நாட்டில் உழைத்து வாழ்வோர் பெருகி வளம் கொழித்தது. ஏழை பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வு குறைவாகவே இருந்தது. ஆறு, குளம், ஓடை, ஏரிகள் போன்ற நீர் நிலைகளில் நீர் தூய்மையாக இருந்தது, நாட்டில் இருக்கும் ஊர்கள் அனைத்திலும் வீடுகள் தோறும் வழிப்போக்கர்கள் அமர்ந்து இளைப்பாற ஏதுவாகத் திண்ணைகள் அமைக்கப் பட்டு அனைவரின் நன்மையையும் கருதி அனைவரும் வாழும் மனப்பாங்கு நிலவியது.

பிற்காலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களாலும் வெளிநாட்டு நாகரீகத்தின் ஆக்கிரமிப்பாலும் மனிதத் தன்மை நாளுக்கு நாள் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல் குறைந்து, இன்று கல்வி கற்பதற்கும் சாதாரணமானதொரு மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் ஒரு சாமான்யன் தனது உழைப்பினால் ஈட்டும் வருவாய் போதாத நிலையடைந்து பிறரிடம் கையேந்தும் சூழ்நிலை உருவாகியு்ள்ளது. குடிநீர் விஷமாகி, இயற்கைச் சீரழிவால் உலகம் உஷ்ணமடைந்து துன்பப் படுகிறோம்.

இத்தகைய சீர்கேடுகள் மறைந்து உலகம் இன்பமயமானதாக வழி உள்ளதா? உள்ளது என்கிறது இப்பாடல்:

எல்லாம் இன்பமயம் புவியினிலே எல்லாம் இன்பமயம்

படம்: எல்லாம் இன்பமயம்
இசை: கண்டசாலா
பாடியவர்: கண்டசாலா
ஆண்டு: 1955

எல்லாம் இன்பமயம் இன்பமயம் எல்லாம் இன்பமயம் இன்பமயம்
எல்லாம் இன்பமயம் இன்பமயம்
எல்லாம் இன்பமயம் புவியினிலே எல்லாம் இன்பமயம்

நல்ல குணம் செழித்து நாடு வளம் கொழித்து
நல்ல குணம் செழித்து நாடு வளம் கொழித்து
பல்கும் தொழில் வளர்த்துப் பாடுபட்டாலே
பல்கும் தொழில் வளர்த்துப் பாடுபட்டாலே

எல்லாம் இன்பமயம் புவியினிலே எல்லாம் இன்பமயம்

அன்பினில் உலகாளலாம் எந்நாளும்
அமைதியில் நலங்காணலாம் எல்லோரும்
அன்பினில் உலகாளலாம் எந்நாளும்
அமைதியில் நலங்காணலாம் எல்லோரும்
இல்லார் இருப்பவர் என்றிடும் பேதம்
இல்லார் இருப்பவர் என்றிடும் பேதம்
இலை எனச்செய்தால் சமமுயர்ந்தோங்கும்
இலை எனச்செய்தால் சமமுயர்ந்தோங்கும்

எல்லாம் இன்பமயம் புவியினிலே எல்லாம் இன்பமயம்
எல்லாம் இன்பமயம் எல்லாம் இன்பமயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக