சனி, 28 நவம்பர், 2009

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

திருமணமாகும் வரை ஒரு பெண் தன் பெற்றோரின் கட்டுப்பாட்டில் வளர்வதால், தன் மனம் விரும்பும் இடங்களுக்குச் செல்வது, நண்பர்களுடன் கலந்து பழகுவது போன்ற செயல்களுக்கான முழு சுதந்திரம் அவளுக்குக் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் நமது நாட்டின் சமுதாய அமைப்பு பெண்ணைப் போற்றிப் பாதுகாக்கும் விதமாக அமைந்ததுவே ஆகும். அப்பெண் திருமணமாகித் தன் கணவனுடன் குடும்பம் நடத்துகையில் தன் பெற்றோர்களுடன் வாழ்ந்த காலத்தை விடவும் அதிக சுதந்திரத்தை எதிர்பார்ப்பதும், கணவன் காலையில் பணிக்குச் சென்றால் மாலையில் சற்று நேரம் முன்னதாகவே வீட்டுக்குத் திரும்பி வர வேண்டும், அவனுடன் வெளி உலகைச் சுற்றிப் பார்க்கப் பல இடங்களுக்குச் செல்ல வேண்டும் என விரும்புவதும் இயல்பு.
இத்தகைய எதிர்பார்ப்புகளை ஓரளவேனும் பூர்த்தி செய்வது அவளது கணவனின் கடமையாகும். மாலை கணவன் நேரத்தோடு வீடு திரும்புவான், அவனுடன் அளவளாவி மகிழலாம், இல்லற சுகம் காணலாம் என எதிர்பார்த்து வீட்டு வாசலில் மாலை நேரங்களில் வந்து காத்திருப்பது நமது நாட்டில் மணமான பெண்கள் மேற்கொள்ளும் வழக்கமாக உள்ளது. வாழ்க்கையே ஓர் எதிர்பார்ப்பல்லவா?

அவ்வாறு வாசலில் வெகுநேரம் நின்று பார்த்துத் தன் கணவன் திரும்பிவரக் காணாது துயருற்ற ஒரு பெண் தன் மன ஆதங்கத்தை ஒரு சிட்டுக்குருவியிடம் வெளியிடுகிறாள்.

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

படம்: டவுன் பஸ்
இயற்றியவர்: கா.மு. ஷெரிஃப்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி
ஆண்டு: 1955

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே

பட்டு மெத்த விரிச்சு வச்சேன் சுமமாக் கிடக்குது - பசும்
பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கிடக்குது
பட்டு மெத்த விரிச்சு வச்சேன் சுமமாக் கிடக்குது - பசும்
பாலைக் காய்ச்சி எடுத்து வச்சேன் ஆறிக் கிடக்குது

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

தலைய வாரிப் பூ முடிச்சேன் வாடி வதங்குது
தலைய வாரிப் பூ முடிச்சேன் வாடி வதங்குது - சதா
தெருவில் வந்து நின்று நின்று காலும் கடுக்குது - சதா
தெருவில் வந்து நின்று நின்று காலும் கடுக்குது
வாழிய வழியப் பாத்துப் பாத்துக் கண்ணும் நோகுது
வாழிய வழியப் பாத்துப் பாத்துக் கண்ணும் நோகுது - அவர்
வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது - அவர்
வந்தால் பேச நிறைய சேதி நெஞ்சில் இருக்குது

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக