சனி, 28 நவம்பர், 2009

நெஞ்சினிலே நினைவு முகம்

ஒருவர் மேல் ஒருவர் புனிதமான அன்பு கொண்டு இருவர் மனமும் ஒன்றிணைந்த காதலர்கள் ஒருவரையொருவர் சந்திக்கையி்ல் பேரின்பம் அடைவது போலவே ஒருவரையொருவர் பிரிந்தால் துன்பப் படுவதும் இயல்பு. அவ்வாறு தன்னை விட்டுப் பிரிந்த காதலியின் முகம் காதலனுக்கும் காதலனின் முகம் காதலி்க்கும் அவர்கள் காணும் பொருடகள் யாவிலும் காட்சி கொடுக்குமெனக் கவிஞர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமல்ல அப்பிரிவுத் துயரம் அவர்களது உயிரையும் வாட்டுமாம்.

நெஞ்சினிலே நினைவு முகம்

திரைப்படம்: சித்ராங்கி
இயற்றியவர்: கு.மா. பாலசுப்பிரமணியம்
இசை: வேதா
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1964

நெஞ்சினிலே
நெஞ்சினிலே நினைவு முகம் நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்

ஆருயிர் என்றுஅழைத்தவளே புது ஆசையை நெஞ்சில் விதைத்தவளே
ஆருயிர் என்றுஅழைத்தவளே புது ஆசையை நெஞ்சில் விதைத்தவளே நான்
ஓருயிர் நின்று தவிக்கையிலே நீ ஓடி மறைந்தது நீதியில்லை

நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்

வானத்தின் தாரகைப் பூவெடுத்தேன் என்றும்
வாடாத மாலையாய் நான் தொடுத்தேன்
வானத்தின் தாரகைப் பூவெடுத்தேன் என்றும்
வாடாத மாலையாய் நான் தொடுத்தேன் அதில்
தேன் இல்லையே என்று சொல்லிவிட்டார்
தீண்டாமலலே மண்ணில் தள்ளி விட்டார் தள்ளி விட்டார்

நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்

ஆயிரம் கோட்டைகள் கட்டி வைத்தேன் என்
அன்பையே தீபமாய் ஏற்றி வைத்தேன் ஆஆஆ
ஆயிரம் கோட்டைகள் கட்டி வைத்தேன் என்
அன்பையே தீபமாய் ஏற்றி வைத்தேன் அந்த
கோயிலிலே என்தன் தெய்வமில்லை நான்
கோரிய வரமும் கிடைக்கவில்லை

நெஞ்சினிலே நினைவு முகம்
நிலவிலும் தெரிவதும் அழகு முகம் ஆசைமுகம்
நெஞ்சினிலே நினைவு முகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக