சனி, 28 நவம்பர், 2009

ஒரு முறை பார்த்தாலே போதும்

ஒரு பெண்ணின் மேல் காதல் கொண்ட ஓர் இளைஞனுக்கு அவளது முகம் எப்பொழுதும் மனக்கண்ணில் தோன்றியவாறு இருப்பதும். அவன் காணுகின்ற பொருளிலெல்லாம் அவள் உருவம் தெரிவதும் காதல் படுத்தும் பாடு. காதல் கொண்டவன் மனதில் கவிதைகள் தோன்றும். அக்கவிதைகளிலும் அவள் கருவிழிகளும் அவ்விழிகள் அவன் மேல் தொடுத்த மலர்க் கணைகளுமே தோன்றும்

ஒரு முறை பார்த்தாலே போதும்

திரைப்படம்: பாஞ்சாலி
இயற்றியவர்:
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: ஏ.எல். ராகவன்
ஆண்டு: 1959

ஒரு முறை பார்த்தாலே போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும்

கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும்
கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும்
கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும்
கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும்
கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும்
கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும்
கலையழகே உன்னை வாழ்நாளில்

ஒரு முறை பார்த்தாலே போதும்

கன்னங்களை ரோஜா மலர் என்பதா?
கன்னங்களை ரோஜா மலர் என்பதா? இல்லை
கண்ணாடி என்றே நான் வர்ணிப்பதா?
கண்களை மீனென்று சொல்வதா? ஆஆ
கண்களை மீனென்று சொல்வதா? இல்லை
கடலுக்கு உவமையாய்க் கொள்வதா?

ஒரு முறை பார்த்தாலே போதும்

மாந்தளிரைக் காணும் போது மாந்தளிரைக் காணும் போது
மாந்தளிரைக் காணும் போது மாந்தளிரைக் காணும் போது - உன்
வண்ண மேனி அதில் காணுதே வண்ண மேனி அதில் காணுதே
பூங்குயிலே உன்னை எண்ணும் போதே
பூங்குயிலே உன்னை எண்ணும் போதே ஒரு
புதிய உலகமும் தோணுதே..

ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
ஒரு முறை பார்த்தாலே போதும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக